அத்தியாயம் 1
நடுநாயகமாக வீற்றிருந்த அந்தப் பெரிய கட்டிடத்தை ஒட்டிய வீதியின் இருபுறமும் விதவிதமான வாகனங்கள் அணிவகுத்து நிற்க, அங்கு கேட்ட மங்கல ஒலியானது அந்த ஊரெங்கும் ஒலிப்பது போல், பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் வந்து, வந்தவர்கள் காதைப் பிளந்தது.
"வார பொட்டையளையே வாய் பாத்துக்கொண்டிருக்காம, வாசல்ல போய் வாரவைக்கு சந்தனம் குங்குமம் குடு!" யாரோ ஒரு பாெடியனை ஏவிவிட்டு, காலில் சுடு தண்ணீர் ஊற்றியது போல் விறுவிறுவென நடந்த மாப்பிள்ளையின் அன்னையைப் பார்த்த அந்த ஏச்சுக்குச் சொந்தக்காரனோ,
"மருமகளைக் கொடுமைப்படுத்த கிழவி படுற அவசரம்! கடவுளுக்குத் தான் வெளிச்சம்" என வானத்தைப் பார்த்து முணுமுணுத்த அவனுக்குத் தன்னை எப்போதும் திட்டும் அத்தை, அவளையும் விட்டு வைக்கார் என்ற எண்ணம். ஆம், அந்தப் பையன் அவளது கணவன் வழி தங்கையின் மகன். எப்போதும் அவனைக் கண்டால் அந்தம்மா எரிந்து தான் விழுவார். அதுதான், எல்லோரிடமும் இதே முசுடாகவே இருப்பார் என்று நினைத்துவிட்டான். உண்மை எதுவென்று கடவுள் தான் அறிவார்.
மண்டபத்தின் நடுநாயகமாக வீற்றிருந்தவன் உதடுகளோ, ஐயரோடு சேர்ந்து இசைப்பாட்டு பாடியதே தவிர, உடலை இறுக்கமாக வைத்திருந்தவன் முகத்தினில் எள் அளவிற்குத் தனக்குத்தான் திருமணம் என்ற சந்தோசம் கொஞ்சம்கூட இல்லை. ஆனால் அவனுக்கு எதிர்மறை பெண்.
சந்தோசத்தின் மறுபாெருள் இவள்தானோ என நினைக்கும் அளவிற்கு, அத்தனை அழகாகத் தயாராகி மணமகன் அருகில் இருந்தவள், முகத்தில்தான் அத்தனை புன்னகை.
ஐயர் கூறும் வேதங்களை அவளுமே மறுபாட்டுப் பாடிக்கொண்டுதான் இருந்தாள். அவை அனைத்துமே மலர்ந்த புன்னகை உதிராது பக்குவமாகப் பார்த்துப் பார்த்தே ஓதிக்கொண்டிருந்தவளுக்கு, இந்தச் சம்பிரதாயங்கள் எப்போது முடிந்து, தன்னவன் கையினால் அந்த மாங்கல்யத்தை வாங்குவேன் என்றே இருந்தது. இருக்காதா பின்னே!
அவளும் இந்த நாளுக்காக இன்னும் எத்தனை நாட்கள் தான் காத்துக்கிடப்பாள். இதோ இதோ என்று நாளும் வந்தால், ஐயர் வேறு... இழுத்தடித்தான் இனிப்பினைப் போல், இன்னமும் எவ்வளவு நேரம் தான் இழுத்தடிப்பாரோ?
"மாங்கல்யத்தைத் தொட்டுக் கும்பிட எல்லாரிட்டையும் குடுங்கோ. நல்ல நேரம் போகப்போகுது." ஐயர் கூறிய இசைப்பாட்டிலேயே அந்தப் பாட்டுதான் இவ்வளவு நேரம் வளைத்து வைத்திருந்த முதுகுத்தண்டினை நிமிர்த்தி அமர்ந்தவள் முகத்துக்கு நேரே, வந்திருந்தவர் விரல்களின் பரிசம் பட்டிருந்த தாலித் தட்டினை ஒரு பெண்மணி நீட்ட, அதை வாங்கிய ஐயர்.
"மாப்பிள்ளை பொம்பிளை இருக்கட்டும், நீங்கள் ஒழும்பி இப்பிடி வலப்பக்கமா வந்து, இந்தத் தாலிய பொம்பிளை கழுத்தில கட்டுங்கோ." என்று தாலியை நீட்டினார்.
அவனும் அவர் சொல்லிற்குக் கட்டுண்டு, மணப் பெண்ணின் வலப்புறம் வந்து நின்றவன், அவர் தந்த தாலியினை எடுத்து, இரு கரங்களையும் நெஞ்சின் நடுவே குவித்து மிகவும் பத்தியோடு அவன் கட்டப்போகும் தாலிக்காகக் காத்திருந்தவள் கழுத்தில் அந்த மங்கல நாணைப் பூட்டினான் மகிழவன்.
அதன் பின் சடங்குகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ, தாலியும் கட்டியாயிற்று, இதற்கு மேல் முகத்தைத் தூக்கி வைத்திருப்பது தன்னை நம்பி வந்தவள் மனதைப் பாதிக்கும் என நினைத்து சாதாரணமாகத் தன்னை மாற்றிக்காெண்டு அவளுக்காக வளைய வந்தான் மகிழவன்.
பாவம், தாய் செய்த தவற்றிற்கு அவள் என்ன செய்வாள்? தன் நிலை தெரிந்தும், தன் சம்மதத்தைக் கேளாது, வாக்களித்தவர் அவர் தானே! அவன் கோபத்தைச் சாதிப்பதென்றால் அவரிடம் தானே சாதிக்க வேண்டும். எதுவும் அறியா அவளிடம் சாதிப்பதில் என்ன பிரயோசனம்? தன்னை விரும்பியதைத் தவிர அவள் என்ன தவறு செய்தாள்? தாலி கட்டிய மறு நொடியே அவள் மேலிருந்த கோபத்தை முழுமையாகவே விட்டுவிட்டான்.
"இப்ப பெத்தவேன்ர காலில விழுந்து ஆசீர்வாதம் வாங்கோணும். முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்காறர்ட ரெண்டு பேரும் ஆசீர்வாதம் வாங்குங்கோ" என்றதும் தான், அதுவரை புன்னகை முகம் மாறாது இத்தனை நேரமும் வளைந்து கொடுத்துக்கொண்டிருந்த யாழினியின் முகம் இறுகிப்போனது. அதே இடத்தில் நகராது நின்றுவிட்டாள்.
பெற்றவர்கள் நின்ற திசை நகர்ந்த மகிழவன், கூடவே வர வேண்டியவளது அரவம் கேளாது திரும்பிப் பார்த்தவன், அவள் அதே இடத்தில் நிற்பதைக் கண்டதும்,
"அம்மாவும், அப்பாவும் அங்க நிக்கினம் யாழி" என அழைத்தவன், அதோடு விடாது, அவளது கையினைப் பற்றி அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவர்கள் காலில் விழப்போக, சட்டென ஓர் அடி பின்னோக்கி நகர்ந்தவள்,
"இவேன்ர காலில எதுக்கு விழோணும்?" என்றாள் அதே இறுக்கம் தளராது.
"என்னம்மா இப்பிடி கேக்குறாய்? இது தானே எங்கட சம்பிரதாயம்" என்ற ஐயரோ,
"மறந்தே பாேட்டன், நீ வெளிநாட்டில வளர்ந்த புள்ளை என? உனக்கு இதைப்பற்றித் தெரிய வாய்ப்பில்ல.. கலியாணம் ஒண்டு நடந்தா, சீரும் சிறப்புமா மனம் ஒத்த தம்பதியா வாழ, யாராவது ரெண்டு தம்பதீன்ர ஆசீர்வாதம் வேணும். அதுவும் அவயல் மனசார ஆசீர்வாதம் செய்யோணும். பெத்தவய தவிர, வேற ஆரும் பிள்ளைகள் நல்லா இருக்கோணும் என்டு முழு மனசோட ஆசீர்வாதம் செய்யாயினம். அதான் அவயலிட்ட ஆசீர்வாதம் வாங்க சொல்லுறது." நீண்ட விளக்கம் தந்தவரைக் குறுகுறு என்று பார்த்திருந்தவள்,
"ஆரு பெரிய மனுசர்? இவயளா?" என ஆவேசமாகக் கேட்டவாறு கழுத்திலிருந்த பூ மாலையினைக் கழட்டி அவர்கள் மேல் வீசி எறிந்தவள்,
"பெரிய மனுசர் என்ட பெயரில சுத்துற கொலைகாறர்." என்றவள், அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்பது போல், மேடையிலிருந்து இறங்கியவள், இடையில் சறுக்கென நின்று, மகிழவனை இதுவரை பார்த்திராத பார்வை பார்த்தாள்.
"இனிமேல் எரியப்போற மாமியார் வீட்டு குத்துவிளக்கு என்னால தான் எரியோணும் என்டு கடவுள் முடிவு பண்ணீட்டான், அதால மிச்சச் சம்பிரதாயம் ஏதன் இருந்தா, தனியாவே இருந்து முடிச்சிட்டு, வேளைக்கு வா! நான் கார்ல காத்திருக்கிறன்." என்றாள் உள்பொருள் ஏதோ வைத்து, வேலையாளுக்கு ஏவுவதைப் போல். அதுவரை அவள் பேசியதைக் கேட்டு
அதிர்ச்சியில் உறைந்திருந்தவனோ, அவளது இறுதி வாக்கியத்தில்,
"ஏய்...! என்ன விளையாடுறியே நீ? ஒழுங்கா வந்து மிச்சச் சம்பிரதாயத்தை முடி!" என்றான். எங்கே இவளின் விளையாட்டு, மற்றவர்களுக்குப் பேசுபொருளாகப் போய்விடுமோ என்ற காேபத்தில் சற்று வார்த்தையில் கடுமையைக் காட்டி.
"ஓ... இப்பயே அதிகாரம் தூள் பறக்குது போல?" சுழித்த உதட்டினில் நயவஞ்சகப் புன்னகை ஒன்று அரும்பி மறைய,
"வெருட்டிப்பாக்கிற வேல எல்லாம் என்னட்ட வேண்டாம். இதை வேற ஆருட்டையும் வை! நான் வேற மாதிரியான ஆள்" என்றவள், சடசடவென அங்கு அமர்ந்திருந்த யாரையுமே கருத்தில் கொள்ளாது மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.
பாேகும் அவளையே அதிர்ந்த விழிகளோடு பார்த்து நின்றவனுக்கு, ஏன் இவள் திடீரென இப்படி நடந்து கொள்கிறாள் என்று விளங்கவில்லை. அவனுக்கு மட்டுமில்லை. அவனைப் பெற்றவர்களுக்கும் தான்.
"என்ன சம்மந்தி? ஏன் உங்கட புள்ளை இப்பிடி நடக்குறா? கலியாணத்துக்கு வந்திருக்கிறவை என்ன நினைக்க போயினம். நாங்கள் தான் கட்டாயக் கலியாணம் செய்ததா நினைக்காயினமே" என்றார் மகிழவனின் தாய் சோபனா கோபமாக.
"எங்களுக்குமே தெரியேல சம்பந்தி. உங்கட பொடியனை புடிச்சிருக்கு கலியாணம் செய்து தாங்கோ என்டு கேட்டாள், இது வரைக்கும் கேட்டதை வாங்கிக் குடுத்து பழக்கப்பட்டுட்டோம், அதால இதையும் இல்லை என்டு சொல்ல எங்களால ஏலாது. இப்ப என்ன வந்திட்டுது? செல்லமா வளர்ந்ததாலதான் இப்பிடி நடக்கிறாள். வீட்ட போய் நிதானமா என்ன ஏதென்டு விசாரியுங்கோ. இனித்தான் உங்கட வீட்டுப் புள்ளை ஆச்சே! நாங்கள் இனி அவளைக் கண்டிக்க ஏலாது. நீங்களும் அவளும் பட்டபாடு!" என்றனர் இனி தமக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல் அவளைப் பெற்ற இருவரும்.
மகிழவன் குடும்பத்தார்களுக்குத்தான் என்ன குடும்பம் என்றிருந்தது. பின்னே கட்டிக் கொடுத்ததும் உரிமை முடிந்தது என்று பேசும் அவர்களை என்ன என்று நினைப்பது? அவள் வெளியேறிய மறு நொடி, மண்டபமானது சலசலப்பில் நிறைந்தது.
பின்னர் மணப்பெண்ணானவள் சம்பந்தமே அற்றுப் பேசியதும் அல்லாது, விநோதமாக நடந்தால், யார் தான் பேச மாட்டார்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியவர்கள் பேச்சை அவர்களால் காது கொடுத்தே கேட்க முடியவில்லை. அதனால் அவர்களும் பின்னே ஓடினார்கள்.
காரினுள் அமர்ந்திருந்தவளாே, மற்றவர்களும் பரபரப்போடு தான் இருக்கும் கார் இருந்த திசை நோக்கி வருவதைக் கண்டு, வஞ்சமாய் சிரித்தவள்,
"பரவாயில்லையே! இவ்வளோ வேளைக்கு மிச்சச் சம்பிரதாயம் எல்லாம் முடிச்சிட்டீங்கள் போல" என்றாள் நக்கலாய்.
அவளது சிரிப்பும், பேச்சும் எல்லோருக்கும் எரிச்சலைத்தான் வர வைத்தது. இருந்தும் கோபத்தைக் காட்டும் இடம் இது இல்லையே! எங்கே அதைக் காட்டப் போய், ஏற்கனவே பேசுபொருளாகிப் போன தாம், இன்னமும் பேசுபொருளாகிவிடக்கூடாது என்பதில் கவனமாகி இருந்தவர்கள், அவளை ஒருவாறு முறைத்து விட்டு, வேறு ஒரு காரில் ஏறிக் கொள்ள முற்படுகையில்,
"என்ன மாமியாரே! இப்பயே உங்கட புள்ளைய முந்தானையில முடிஞ்சு வைக்க பிளான் போடுறீங்கள் போல" என்றவளை முறைத்தார் அவளது புது மாமியார் சோபனா. அவள் பேசுவது பூராவும் விதண்டாவாதமாக இருந்தால், முறைக்காமல் என்ன செய்வது? கோபம் வராமல் போக, அவர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லையே.
"என்னை ஏன் மாமியாரே முறைக்கிறீங்கள்? உங்கட புள்ளைய பாருங்கோ... ஏதோ கலியாணம் எல்லாம் புதுசு மாதிரி நடக்கிறார்" என்றவள் பேச்சு வேறு எதையோ குத்திக்காட்டுவது போல் தோன்றியது.
"என்ன சொல்லுறாய்?" என்றார் அதட்டலாய்.
"பின்ன என்ன மாமியாரே... எத்தினை கலியாண வீட்டுக்கு போயிருப்பீங்கள். அப்பக் கூடவோ ஒரே கார்ல தான் பொம்பிளையும், மாப்பிள்ளையும் போகோணும் என்டுற பண்பாடு தெரியேல. அவர் அந்த கார்ல ஏறுறதால எனக்கு ஒன்டுமில்ல. நாளைக்குப் பார்க்கிற சனம் தான் வேற மாதிரி கதைக்கும்" என்றாள். இதுவரை நடந்த எதுவும் அவர்கள் கண்ணுக்குப் படவில்லை, இது ஒன்று தான் படப்போகிறது என்பது போல்.
"இனி நினைக்கிறதுக்கு என்ன இருக்குது?" தனக்குள் முணுமுணுத்தவர், "ஏனடா நீ வேற... போ அந்த காரிலயே ஏறு! வீட்ட போய் என்ன ஏதென்டு பாப்பம்" என்றவாறு காரில் ஏறியவர், அவன் மறுப்பதற்கு முன், கார் கதவினைப் பூட்டி விட்டு, "காரை எடு!" என்றார் டிரைவரிடம்.
அவர் சொன்ன மறு வினாடியே அவர் கோபத்தைப் பிரதிபலிப்பது போல், காரும் சீறிப்பாய்ந்தது.
பிடிக்கவில்லை அவனுக்கு. யார் செய்வதும் பிடிக்கவில்லை. ஆனால் பாவம் அவனால் தான் எதையுமே தட்டிக்கேட்க முடியவில்லை. தட்டிக்கேட்பதற்கான எந்தச் சூழலும் இல்லாததால், பாவம் வளைப்பவர்களுக்கு ஏற்றது போல் வளைந்துகொண்டு போனவன், கட்டாயம் இன்று வெடிக்கத்தான் போகிறான்.
மனமே இல்லாது காரில் ஏறி அமர்ந்து கதவினை அடைத்தவனைப் பார்த்து அதே சிரிப்பை அவள் உதிர்க்க,
அவளை அருவருக்கும் பார்வை பார்த்தவன், "ஏன் யாழி இப்பிடி எல்லாம் செய்யிறாய்? உனக்கு நீ செய்யிறது பிழையா தெரியேலயா?" என்றான் ஆதங்கமாய். அவன் கேள்வியில் உதட்டைச் சுழித்து அலட்சியமாய் ஒரு புன்னகையினை வீசியவள்,
"யாழி! ம்ம்... என் பெயரை இப்பிடி கூட கூப்பிடலாமா? ஆருமே இந்த மாதிரி கூப்பிடேல. கூப்பிட்ட விதம் நல்லா தான் இருக்கு, ஆனா கூப்பிடுறது நீ என்டுறது தான் புடிக்கேல" என்றாள். அவளது பெயரைத் தவிர, அவன் கூறிய மற்றைய வார்த்தைகள் காதில் விழாதது போல்,
"ஏன் புடிக்கேல... நீ தானே என்னைப் புடிச்சிருக்கு, கலியாணம் ஒன்டு செய்தா உன்னைத்தான் செய்வன் என்டு அடம் பிடிச்சு, என்னைக் கலியாணம் கட்டினாய், இப்ப புடிக்கேல என்டா என்ன அர்த்தம்?" என்றான். அவளது வெறுப்பான வார்த்தையில் தான் கேட்ட முக்கியமான கேள்வியை மறந்து.
"பெரிய ஆண் அழகன், இவர கலியாணம் செய்ய ஒற்றை கால்ல நிக்கிறம்" தனக்குள் முணுமுணுத்தவள் வார்த்தையானது அவனது காதில் தெளிவாகவே விழ,
"விளங்கேல... என்ன சொன்னாய்?" என்றான் தான் கேட்டது உண்மை தானா என்பதைத் தெளிவுபடுத்த.
"அதுக்கிடேல என்ன அவசரம்? எல்லாத்தையும் விளங்கப்படுத்ததானே வந்திருக்கிறன்" என்றாள் உள் பொருள் ஒன்று வைத்து. அதைக் கேட்டவனுக்கு எதற்கு இவளுக்கு தன் மேல் இவ்வளவு வஞ்சம் என்பது அறவே விளங்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு காரணம் இல்லாது இருக்காது என்பது அவளது ஒவ்வொரு சொல்லாடலிலும் அப்பட்டமாக விளங்கியது. இதற்கு மேல் அவனுக்குப் பேசப் பிடிக்கவில்லை. அவனுக்கு மட்டுமல்ல அவளுக்குமே பேச எதுவுமில்லை என்பதுபோல், ஏதோ ஒரு சிந்தனையில விழிகளோ கண்ணாடி வெளியே வயல்வெளியினை ரசிக்கலானது.
ஆனால் இவன் சிந்தைதான் அவளை முதல் முதல் கண்ட நாளுக்குச் சென்றது.
*****
நடுநாயகமாக வீற்றிருந்த அந்தப் பெரிய கட்டிடத்தை ஒட்டிய வீதியின் இருபுறமும் விதவிதமான வாகனங்கள் அணிவகுத்து நிற்க, அங்கு கேட்ட மங்கல ஒலியானது அந்த ஊரெங்கும் ஒலிப்பது போல், பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் வந்து, வந்தவர்கள் காதைப் பிளந்தது.
"வார பொட்டையளையே வாய் பாத்துக்கொண்டிருக்காம, வாசல்ல போய் வாரவைக்கு சந்தனம் குங்குமம் குடு!" யாரோ ஒரு பாெடியனை ஏவிவிட்டு, காலில் சுடு தண்ணீர் ஊற்றியது போல் விறுவிறுவென நடந்த மாப்பிள்ளையின் அன்னையைப் பார்த்த அந்த ஏச்சுக்குச் சொந்தக்காரனோ,
"மருமகளைக் கொடுமைப்படுத்த கிழவி படுற அவசரம்! கடவுளுக்குத் தான் வெளிச்சம்" என வானத்தைப் பார்த்து முணுமுணுத்த அவனுக்குத் தன்னை எப்போதும் திட்டும் அத்தை, அவளையும் விட்டு வைக்கார் என்ற எண்ணம். ஆம், அந்தப் பையன் அவளது கணவன் வழி தங்கையின் மகன். எப்போதும் அவனைக் கண்டால் அந்தம்மா எரிந்து தான் விழுவார். அதுதான், எல்லோரிடமும் இதே முசுடாகவே இருப்பார் என்று நினைத்துவிட்டான். உண்மை எதுவென்று கடவுள் தான் அறிவார்.
மண்டபத்தின் நடுநாயகமாக வீற்றிருந்தவன் உதடுகளோ, ஐயரோடு சேர்ந்து இசைப்பாட்டு பாடியதே தவிர, உடலை இறுக்கமாக வைத்திருந்தவன் முகத்தினில் எள் அளவிற்குத் தனக்குத்தான் திருமணம் என்ற சந்தோசம் கொஞ்சம்கூட இல்லை. ஆனால் அவனுக்கு எதிர்மறை பெண்.
சந்தோசத்தின் மறுபாெருள் இவள்தானோ என நினைக்கும் அளவிற்கு, அத்தனை அழகாகத் தயாராகி மணமகன் அருகில் இருந்தவள், முகத்தில்தான் அத்தனை புன்னகை.
ஐயர் கூறும் வேதங்களை அவளுமே மறுபாட்டுப் பாடிக்கொண்டுதான் இருந்தாள். அவை அனைத்துமே மலர்ந்த புன்னகை உதிராது பக்குவமாகப் பார்த்துப் பார்த்தே ஓதிக்கொண்டிருந்தவளுக்கு, இந்தச் சம்பிரதாயங்கள் எப்போது முடிந்து, தன்னவன் கையினால் அந்த மாங்கல்யத்தை வாங்குவேன் என்றே இருந்தது. இருக்காதா பின்னே!
அவளும் இந்த நாளுக்காக இன்னும் எத்தனை நாட்கள் தான் காத்துக்கிடப்பாள். இதோ இதோ என்று நாளும் வந்தால், ஐயர் வேறு... இழுத்தடித்தான் இனிப்பினைப் போல், இன்னமும் எவ்வளவு நேரம் தான் இழுத்தடிப்பாரோ?
"மாங்கல்யத்தைத் தொட்டுக் கும்பிட எல்லாரிட்டையும் குடுங்கோ. நல்ல நேரம் போகப்போகுது." ஐயர் கூறிய இசைப்பாட்டிலேயே அந்தப் பாட்டுதான் இவ்வளவு நேரம் வளைத்து வைத்திருந்த முதுகுத்தண்டினை நிமிர்த்தி அமர்ந்தவள் முகத்துக்கு நேரே, வந்திருந்தவர் விரல்களின் பரிசம் பட்டிருந்த தாலித் தட்டினை ஒரு பெண்மணி நீட்ட, அதை வாங்கிய ஐயர்.
"மாப்பிள்ளை பொம்பிளை இருக்கட்டும், நீங்கள் ஒழும்பி இப்பிடி வலப்பக்கமா வந்து, இந்தத் தாலிய பொம்பிளை கழுத்தில கட்டுங்கோ." என்று தாலியை நீட்டினார்.
அவனும் அவர் சொல்லிற்குக் கட்டுண்டு, மணப் பெண்ணின் வலப்புறம் வந்து நின்றவன், அவர் தந்த தாலியினை எடுத்து, இரு கரங்களையும் நெஞ்சின் நடுவே குவித்து மிகவும் பத்தியோடு அவன் கட்டப்போகும் தாலிக்காகக் காத்திருந்தவள் கழுத்தில் அந்த மங்கல நாணைப் பூட்டினான் மகிழவன்.
அதன் பின் சடங்குகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ, தாலியும் கட்டியாயிற்று, இதற்கு மேல் முகத்தைத் தூக்கி வைத்திருப்பது தன்னை நம்பி வந்தவள் மனதைப் பாதிக்கும் என நினைத்து சாதாரணமாகத் தன்னை மாற்றிக்காெண்டு அவளுக்காக வளைய வந்தான் மகிழவன்.
பாவம், தாய் செய்த தவற்றிற்கு அவள் என்ன செய்வாள்? தன் நிலை தெரிந்தும், தன் சம்மதத்தைக் கேளாது, வாக்களித்தவர் அவர் தானே! அவன் கோபத்தைச் சாதிப்பதென்றால் அவரிடம் தானே சாதிக்க வேண்டும். எதுவும் அறியா அவளிடம் சாதிப்பதில் என்ன பிரயோசனம்? தன்னை விரும்பியதைத் தவிர அவள் என்ன தவறு செய்தாள்? தாலி கட்டிய மறு நொடியே அவள் மேலிருந்த கோபத்தை முழுமையாகவே விட்டுவிட்டான்.
"இப்ப பெத்தவேன்ர காலில விழுந்து ஆசீர்வாதம் வாங்கோணும். முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்காறர்ட ரெண்டு பேரும் ஆசீர்வாதம் வாங்குங்கோ" என்றதும் தான், அதுவரை புன்னகை முகம் மாறாது இத்தனை நேரமும் வளைந்து கொடுத்துக்கொண்டிருந்த யாழினியின் முகம் இறுகிப்போனது. அதே இடத்தில் நகராது நின்றுவிட்டாள்.
பெற்றவர்கள் நின்ற திசை நகர்ந்த மகிழவன், கூடவே வர வேண்டியவளது அரவம் கேளாது திரும்பிப் பார்த்தவன், அவள் அதே இடத்தில் நிற்பதைக் கண்டதும்,
"அம்மாவும், அப்பாவும் அங்க நிக்கினம் யாழி" என அழைத்தவன், அதோடு விடாது, அவளது கையினைப் பற்றி அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவர்கள் காலில் விழப்போக, சட்டென ஓர் அடி பின்னோக்கி நகர்ந்தவள்,
"இவேன்ர காலில எதுக்கு விழோணும்?" என்றாள் அதே இறுக்கம் தளராது.
"என்னம்மா இப்பிடி கேக்குறாய்? இது தானே எங்கட சம்பிரதாயம்" என்ற ஐயரோ,
"மறந்தே பாேட்டன், நீ வெளிநாட்டில வளர்ந்த புள்ளை என? உனக்கு இதைப்பற்றித் தெரிய வாய்ப்பில்ல.. கலியாணம் ஒண்டு நடந்தா, சீரும் சிறப்புமா மனம் ஒத்த தம்பதியா வாழ, யாராவது ரெண்டு தம்பதீன்ர ஆசீர்வாதம் வேணும். அதுவும் அவயல் மனசார ஆசீர்வாதம் செய்யோணும். பெத்தவய தவிர, வேற ஆரும் பிள்ளைகள் நல்லா இருக்கோணும் என்டு முழு மனசோட ஆசீர்வாதம் செய்யாயினம். அதான் அவயலிட்ட ஆசீர்வாதம் வாங்க சொல்லுறது." நீண்ட விளக்கம் தந்தவரைக் குறுகுறு என்று பார்த்திருந்தவள்,
"ஆரு பெரிய மனுசர்? இவயளா?" என ஆவேசமாகக் கேட்டவாறு கழுத்திலிருந்த பூ மாலையினைக் கழட்டி அவர்கள் மேல் வீசி எறிந்தவள்,
"பெரிய மனுசர் என்ட பெயரில சுத்துற கொலைகாறர்." என்றவள், அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்பது போல், மேடையிலிருந்து இறங்கியவள், இடையில் சறுக்கென நின்று, மகிழவனை இதுவரை பார்த்திராத பார்வை பார்த்தாள்.
"இனிமேல் எரியப்போற மாமியார் வீட்டு குத்துவிளக்கு என்னால தான் எரியோணும் என்டு கடவுள் முடிவு பண்ணீட்டான், அதால மிச்சச் சம்பிரதாயம் ஏதன் இருந்தா, தனியாவே இருந்து முடிச்சிட்டு, வேளைக்கு வா! நான் கார்ல காத்திருக்கிறன்." என்றாள் உள்பொருள் ஏதோ வைத்து, வேலையாளுக்கு ஏவுவதைப் போல். அதுவரை அவள் பேசியதைக் கேட்டு
அதிர்ச்சியில் உறைந்திருந்தவனோ, அவளது இறுதி வாக்கியத்தில்,
"ஏய்...! என்ன விளையாடுறியே நீ? ஒழுங்கா வந்து மிச்சச் சம்பிரதாயத்தை முடி!" என்றான். எங்கே இவளின் விளையாட்டு, மற்றவர்களுக்குப் பேசுபொருளாகப் போய்விடுமோ என்ற காேபத்தில் சற்று வார்த்தையில் கடுமையைக் காட்டி.
"ஓ... இப்பயே அதிகாரம் தூள் பறக்குது போல?" சுழித்த உதட்டினில் நயவஞ்சகப் புன்னகை ஒன்று அரும்பி மறைய,
"வெருட்டிப்பாக்கிற வேல எல்லாம் என்னட்ட வேண்டாம். இதை வேற ஆருட்டையும் வை! நான் வேற மாதிரியான ஆள்" என்றவள், சடசடவென அங்கு அமர்ந்திருந்த யாரையுமே கருத்தில் கொள்ளாது மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.
பாேகும் அவளையே அதிர்ந்த விழிகளோடு பார்த்து நின்றவனுக்கு, ஏன் இவள் திடீரென இப்படி நடந்து கொள்கிறாள் என்று விளங்கவில்லை. அவனுக்கு மட்டுமில்லை. அவனைப் பெற்றவர்களுக்கும் தான்.
"என்ன சம்மந்தி? ஏன் உங்கட புள்ளை இப்பிடி நடக்குறா? கலியாணத்துக்கு வந்திருக்கிறவை என்ன நினைக்க போயினம். நாங்கள் தான் கட்டாயக் கலியாணம் செய்ததா நினைக்காயினமே" என்றார் மகிழவனின் தாய் சோபனா கோபமாக.
"எங்களுக்குமே தெரியேல சம்பந்தி. உங்கட பொடியனை புடிச்சிருக்கு கலியாணம் செய்து தாங்கோ என்டு கேட்டாள், இது வரைக்கும் கேட்டதை வாங்கிக் குடுத்து பழக்கப்பட்டுட்டோம், அதால இதையும் இல்லை என்டு சொல்ல எங்களால ஏலாது. இப்ப என்ன வந்திட்டுது? செல்லமா வளர்ந்ததாலதான் இப்பிடி நடக்கிறாள். வீட்ட போய் நிதானமா என்ன ஏதென்டு விசாரியுங்கோ. இனித்தான் உங்கட வீட்டுப் புள்ளை ஆச்சே! நாங்கள் இனி அவளைக் கண்டிக்க ஏலாது. நீங்களும் அவளும் பட்டபாடு!" என்றனர் இனி தமக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல் அவளைப் பெற்ற இருவரும்.
மகிழவன் குடும்பத்தார்களுக்குத்தான் என்ன குடும்பம் என்றிருந்தது. பின்னே கட்டிக் கொடுத்ததும் உரிமை முடிந்தது என்று பேசும் அவர்களை என்ன என்று நினைப்பது? அவள் வெளியேறிய மறு நொடி, மண்டபமானது சலசலப்பில் நிறைந்தது.
பின்னர் மணப்பெண்ணானவள் சம்பந்தமே அற்றுப் பேசியதும் அல்லாது, விநோதமாக நடந்தால், யார் தான் பேச மாட்டார்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியவர்கள் பேச்சை அவர்களால் காது கொடுத்தே கேட்க முடியவில்லை. அதனால் அவர்களும் பின்னே ஓடினார்கள்.
காரினுள் அமர்ந்திருந்தவளாே, மற்றவர்களும் பரபரப்போடு தான் இருக்கும் கார் இருந்த திசை நோக்கி வருவதைக் கண்டு, வஞ்சமாய் சிரித்தவள்,
"பரவாயில்லையே! இவ்வளோ வேளைக்கு மிச்சச் சம்பிரதாயம் எல்லாம் முடிச்சிட்டீங்கள் போல" என்றாள் நக்கலாய்.
அவளது சிரிப்பும், பேச்சும் எல்லோருக்கும் எரிச்சலைத்தான் வர வைத்தது. இருந்தும் கோபத்தைக் காட்டும் இடம் இது இல்லையே! எங்கே அதைக் காட்டப் போய், ஏற்கனவே பேசுபொருளாகிப் போன தாம், இன்னமும் பேசுபொருளாகிவிடக்கூடாது என்பதில் கவனமாகி இருந்தவர்கள், அவளை ஒருவாறு முறைத்து விட்டு, வேறு ஒரு காரில் ஏறிக் கொள்ள முற்படுகையில்,
"என்ன மாமியாரே! இப்பயே உங்கட புள்ளைய முந்தானையில முடிஞ்சு வைக்க பிளான் போடுறீங்கள் போல" என்றவளை முறைத்தார் அவளது புது மாமியார் சோபனா. அவள் பேசுவது பூராவும் விதண்டாவாதமாக இருந்தால், முறைக்காமல் என்ன செய்வது? கோபம் வராமல் போக, அவர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லையே.
"என்னை ஏன் மாமியாரே முறைக்கிறீங்கள்? உங்கட புள்ளைய பாருங்கோ... ஏதோ கலியாணம் எல்லாம் புதுசு மாதிரி நடக்கிறார்" என்றவள் பேச்சு வேறு எதையோ குத்திக்காட்டுவது போல் தோன்றியது.
"என்ன சொல்லுறாய்?" என்றார் அதட்டலாய்.
"பின்ன என்ன மாமியாரே... எத்தினை கலியாண வீட்டுக்கு போயிருப்பீங்கள். அப்பக் கூடவோ ஒரே கார்ல தான் பொம்பிளையும், மாப்பிள்ளையும் போகோணும் என்டுற பண்பாடு தெரியேல. அவர் அந்த கார்ல ஏறுறதால எனக்கு ஒன்டுமில்ல. நாளைக்குப் பார்க்கிற சனம் தான் வேற மாதிரி கதைக்கும்" என்றாள். இதுவரை நடந்த எதுவும் அவர்கள் கண்ணுக்குப் படவில்லை, இது ஒன்று தான் படப்போகிறது என்பது போல்.
"இனி நினைக்கிறதுக்கு என்ன இருக்குது?" தனக்குள் முணுமுணுத்தவர், "ஏனடா நீ வேற... போ அந்த காரிலயே ஏறு! வீட்ட போய் என்ன ஏதென்டு பாப்பம்" என்றவாறு காரில் ஏறியவர், அவன் மறுப்பதற்கு முன், கார் கதவினைப் பூட்டி விட்டு, "காரை எடு!" என்றார் டிரைவரிடம்.
அவர் சொன்ன மறு வினாடியே அவர் கோபத்தைப் பிரதிபலிப்பது போல், காரும் சீறிப்பாய்ந்தது.
பிடிக்கவில்லை அவனுக்கு. யார் செய்வதும் பிடிக்கவில்லை. ஆனால் பாவம் அவனால் தான் எதையுமே தட்டிக்கேட்க முடியவில்லை. தட்டிக்கேட்பதற்கான எந்தச் சூழலும் இல்லாததால், பாவம் வளைப்பவர்களுக்கு ஏற்றது போல் வளைந்துகொண்டு போனவன், கட்டாயம் இன்று வெடிக்கத்தான் போகிறான்.
மனமே இல்லாது காரில் ஏறி அமர்ந்து கதவினை அடைத்தவனைப் பார்த்து அதே சிரிப்பை அவள் உதிர்க்க,
அவளை அருவருக்கும் பார்வை பார்த்தவன், "ஏன் யாழி இப்பிடி எல்லாம் செய்யிறாய்? உனக்கு நீ செய்யிறது பிழையா தெரியேலயா?" என்றான் ஆதங்கமாய். அவன் கேள்வியில் உதட்டைச் சுழித்து அலட்சியமாய் ஒரு புன்னகையினை வீசியவள்,
"யாழி! ம்ம்... என் பெயரை இப்பிடி கூட கூப்பிடலாமா? ஆருமே இந்த மாதிரி கூப்பிடேல. கூப்பிட்ட விதம் நல்லா தான் இருக்கு, ஆனா கூப்பிடுறது நீ என்டுறது தான் புடிக்கேல" என்றாள். அவளது பெயரைத் தவிர, அவன் கூறிய மற்றைய வார்த்தைகள் காதில் விழாதது போல்,
"ஏன் புடிக்கேல... நீ தானே என்னைப் புடிச்சிருக்கு, கலியாணம் ஒன்டு செய்தா உன்னைத்தான் செய்வன் என்டு அடம் பிடிச்சு, என்னைக் கலியாணம் கட்டினாய், இப்ப புடிக்கேல என்டா என்ன அர்த்தம்?" என்றான். அவளது வெறுப்பான வார்த்தையில் தான் கேட்ட முக்கியமான கேள்வியை மறந்து.
"பெரிய ஆண் அழகன், இவர கலியாணம் செய்ய ஒற்றை கால்ல நிக்கிறம்" தனக்குள் முணுமுணுத்தவள் வார்த்தையானது அவனது காதில் தெளிவாகவே விழ,
"விளங்கேல... என்ன சொன்னாய்?" என்றான் தான் கேட்டது உண்மை தானா என்பதைத் தெளிவுபடுத்த.
"அதுக்கிடேல என்ன அவசரம்? எல்லாத்தையும் விளங்கப்படுத்ததானே வந்திருக்கிறன்" என்றாள் உள் பொருள் ஒன்று வைத்து. அதைக் கேட்டவனுக்கு எதற்கு இவளுக்கு தன் மேல் இவ்வளவு வஞ்சம் என்பது அறவே விளங்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு காரணம் இல்லாது இருக்காது என்பது அவளது ஒவ்வொரு சொல்லாடலிலும் அப்பட்டமாக விளங்கியது. இதற்கு மேல் அவனுக்குப் பேசப் பிடிக்கவில்லை. அவனுக்கு மட்டுமல்ல அவளுக்குமே பேச எதுவுமில்லை என்பதுபோல், ஏதோ ஒரு சிந்தனையில விழிகளோ கண்ணாடி வெளியே வயல்வெளியினை ரசிக்கலானது.
ஆனால் இவன் சிந்தைதான் அவளை முதல் முதல் கண்ட நாளுக்குச் சென்றது.
*****