மஞ்சள் கலந்த அரிசியை தூவ,ரோஜா மலர்களும் அவள் மேல் விழும் போது, மீரா கண்களை மூடி கொள்ள,அந்த கண்களில் ஒரு தேக்கம், ஒரு பயம்... ஒருபுறம் முழுமையற்ற ஏக்கம்.
இரு மனம் இணையும் திருமண நிகழ்வில் சொந்த பந்தங்கள் எல்லாம் கூடியிருக்க, இவன் தான் இனிமேல் தனக்கு மணவாளன் என்று பெண் அவள் தன் புத்தியில் ஏற்றிக்கொண்டாலும் அவளின் மனமோ அதை ஏற்க மறுக்கிறது..
“மூஞ்சியை கொஞ்சம் சிரிச்சா மாதிரி பாரு மீரா... கையெடுத்து கும்பிட்ட மாதிரி போஸ் கொடு..” என காதில் மெல்ல சொன்னாள் அவள் அக்கா, யாழினி..
“அண்ணி எதுக்கு அவள இப்படி கஷ்டப்படுத்துறீங்க ,அவள் எப்படி இருக்கணும் நினைக்கிறாளோ அப்படியே இருக்கட்டும்” என அர்ஜுன் சொல்ல
“உங்க தம்பி இப்பவே பொண்டாட்டி முந்தானை தான் புடிச்சிட்டு இருக்கான். பாருங்க நான் சொன்னதை கேட்காமல் இப்பவே பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்றான்.. இந்த அண்ணியை அதுக்குள்ள மறந்துட்டான், இதெல்லாம் நீங்க கேக்க மாட்டீங்களா?” என்று பக்கத்தில் இருக்கும் தன் கணவன் இனியவனை இடித்தாள் யாழினி
இனியவன் ,அர்ஜுன் அண்ணன் தம்பிகள்..
அதைப் பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜுன் அப்பா திரவியம், அம்மா தமயந்தி” உன் தங்கச்சி தானடி, யாரோ மூன்றாவது ஆளு இந்த வீட்டுக்கு மருமகளா வர்ற மாதிரி என் பையன இப்பவே பாடா படுத்துற” என செல்லமாகச் சொன்னாள் யாழினியின் அத்தை தமயந்தி..
“கொஞ்சமாவது சிரிச்ச மாதிரி இரு” என மீராவை யாழினி கொஞ்சம் கடிந்து கொண்டு சொல்ல
இதை பார்த்த மீரா “அப்பா அக்காவை வாய மூடிட்டு இருக்க சொல்லுங்க“என திரும்பிப் பார்த்து சொல்ல
(மீரா, யாழினியின் பெற்றோர் இளங்கோ, அமுதா)
“சித்தி கொஞ்சம் சிரிங்க, சித்தப்பா எப்படி சிரிக்காங்க பாருங்க “என (யாழினி ,இனியவன் குழந்தை) ரித்விக் மழலை மொழியில் சொல்ல..
ஆனாலும் மீரா சிரிக்கவில்லை. சிரிக்க முடியவில்லை. அது ஒரு கல்யாண நாள் தான். ஆனால் இதே மாதிரி ஒரு நாள் மூன்று வருடங்களுக்கு முன்னால் கூட இருந்தது. வெகு வேறுபாடில்லை, அதே சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் தான்... ஆனால் அந்த சந்தோசம் மட்டும் அவள் வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது.
இந்த இரண்டாவது திருமணம், அவள் விருப்பமல்ல. ஆனால் வீட்டு சூழ்நிலை, சமூகப் பார்வை, தனிமை என்ற பெயரில் அவளை இந்த இடத்தில் நிறுத்தி விட்டது. பெற்றோர் வார்த்தைகளும், உறவினர்கள் மன அழுத்தமும், மீராவை எதையோ தவறாக செய்தவளாக மாற்றியிருந்தது.
இதையெல்லாம் நினைத்து முடிப்பதற்குள் மூன்று முடிச்சு போட்டான் அர்ஜுன்..
அவள் உச்சியில் குங்குமம் வைத்துவிட,
“மாப்பிள பொண்ணு கால்ல மெட்டிய போட்டு அக்னிய மூணு தடவ சுத்தி வாங்க “என ஐயர் சொல்ல
"மீரா, கையைக் கொடு," என்று அர்ஜுன் சொன்னபோது, அவள் நிமிர
அவனுடைய கண்கள் அமைதியாக அவளைப் பார்க்க,ஒரு அழுத்தமோ, எதிர்பார்ப்போ இல்லாமல் அவள் இருந்தாள்.
மனம் பாரமாக இருந்தாலும், இதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லும் நிலையில் அவள் இல்லையே..அவன் கையைக் கொடுக்க தள்ளிக்கொண்டாள். அந்த சிறு தொடுதல், அவளுக்குள் ஒரு வினாவாகவே சத்தமில்லாமல் எழுந்தது.
“இவனை நம்பி கையை கொடுத்தாள் இவனும் பாதியில் விட்டு விடுவானோ?” என்ற பயம் தான் அவளிடம் தோன்றியது
அந்த சந்தேகத்தோடும், பழைய நிழல்களோடும், மீராவின் இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கம் இன்று தான் துவங்கியது.
தொலைவில் நாதஸ்வரம் மெதுவாக எழ, கல்யாண மண்டபத்தின் நடுவே நின்று அவனிடம் கை கொடுத்திருந்தாலும், மீராவின் மனம் அந்த இடத்தில் இல்லை. இடைவெளிகள் நிறைந்த நிழல்களின் நடுவே தான் நடந்து கொண்டிருந்தாள்.
திருமண சடங்குகள் ஒருவரையொருவர் இணைக்கும் இனிய நிகழ்வுகள் என்று சொல்லப்படுகிறதே… ஆனால் மீராவுக்கு அது ஒரு “படிக்கட்டின் மேலே தள்ளப்படும்” உணர்வைத் தான் தந்தது.
ஆனால் அர்ஜுன்…
அவனுடைய முகத்தில் ஒரு அமைதி இருந்தது. எதையுமே எதிர்பார்க்காத அமைதி.
அவன் அவளைப் பார்த்து சிரித்தபோது, அந்த சிரிப்பில் “ நீ எதற்கும் கவலைப்படாதே” என சொல்வது போல் இருந்தது.
அவன் கண்களில், "நீ ரெடியா இல்லையா? அது முக்கியமில்லை. நான் உனக்காக இருக்கேன்." என உறுதியாக இருந்தான்..
மீராவால் அர்ஜுனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை.. அவள் மனம் முழுவதும் திருமணம் என்ற சந்தோசத்தை தாண்டி ஏதாவது நிலைத்திருக்குமா என்ற பயமே தான் நிறைந்திருந்தது..
திருமணம் முடிந்ததும் எல்லா புகைப்படங்களிலும், மீரா சிரிக்கவில்லை. ஆனால் அர்ஜுன் சிரித்தான்.
“பொண்ணு மாப்பிள்ளை தோல் மேல கை போட்டு போஸ் கொடுங்க” என்று போட்டோகிராபர் சொன்னதை கேட்டு மீரா எரிச்சலாக அர்ஜுனை பார்க்க
“சார் நாங்கல்லாம் டூ கே கிட்ஸ் இல்ல பிரி வெட்டிங் போட்டோ சூட் எல்லாம் பண்றதுக்கு ,நாங்கல்லாம் 90ஸ் கிட்ஸ் நீங்க நார்மலாவே எடுங்க” என அவளுக்கு ஏற்றவாறு அவன் பதில் சொல்ல
“நான் சித்தி, சித்தப்பா கூட தான் நின்னு போட்டோ எடுப்பேன்” என ரித்விக் சொல்ல
“நீ வா ரித்து” என்று மீரா அவனை தூக்குவதற்குள் அர்ஜுன் தூக்கிவிட
அவர்கள் இரண்டு பேரும் பயணத்தில் ஒன்றாக இருந்தது என்னவோ ரித்விக் மட்டும் தான்..
அப்போது கூட அவள் அக்கா யாழினி “எதுக்கு நீ இப்ப இப்படி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க, ஒரு போட்டோ கூட உன்னால போஸ் கொடுக்க முடியாதா ரொம்ப தான் பண்ற நீ,
உன்னை என்ன தெரியாத இடத்துலயா கல்யாணம் முடிச்சு கொடுக்கிறோம்.. ஏதோ பாலம் கிணத்துல கல்லகட்டி தள்ற மாதிரி இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருக்க, என் கூட தானடி வந்து இருக்க போற அந்த வீட்டில” என அவள் அக்கா கடுகாய் பொரிந்து தள்ள
“இங்க பாரு உன் மேல தான் நான் கொலைவெறியில் இருக்கேன் ஒழுங்கா போயிரு ,இல்லன்னா இங்க நடக்கிறதே வேற.. மாமா முதல இவள தள்ளி கூட்டிட்டு போங்க” என மீரா கோபமாக கொந்தளிக்க
“அர்ஜுன் மாதிரி ஒருத்தன் கிடைக்க
நீ கொடுத்து வச்சிருக்கணும் டி ,ஆனால் நானும் பாத்துட்டே இருக்கேன் அந்த பையன் கைய புடிக்க வந்தா நீ தள்ளி தள்ளி போற “என்று யாழினி சொல்லவும்
“அம்மா தாயே நீ தயவு செஞ்சு கொஞ்சம் தள்ளி நிக்கிறியா, இல்லனா இங்க நின்னு நான் போட்டோ கூட எடுக்க மாட்டேன் பாத்துக்கோ “என்று மீரா சொல்ல
“அண்ணி விடுங்க “என அர்ஜுன் அமைதியாக சொல்ல
“வந்துட்டான் நல்லவன் மாதிரி” என மனதிற்குள் மீரா முணுமுணுக்க
“என்னை ஏதாவது சொன்னீங்களா” என்று அர்ஜுன் அவளை பார்த்து நேரடியாக கேட்க
“சொன்னா மட்டும் சொன்னது அப்படியே பண்ணிருவீங்க பாருங்க “என அவள் அவனைப் பார்த்து சொல்ல
“நீங்க சொன்னா நான் என்ன வேணாலும் பண்ணுவேன்” என அர்ஜுன் சொல்லவும்
‘நடிக்காத’ என மனதில் திட்டிக்கொண்டு
“அதான் பாக்குறேனே நான் சொல்லி நீங்க பண்ணினது” என அவள் பட்டும் படாமல் சொல்ல
(“இந்தக் கல்யாணத்துல உனக்கு இஷ்டம் இல்லன்னு சொல்லிடு அர்ஜுன், என்னால என் முதல் வாழ்க்கையில் இருந்து மீண்டு வர முடியல .இப்போ உன்ன கல்யாணம் முடிச்சாலும் நாம சந்தோசமா இருப்பமான்னு தெரியல, எங்க அக்கா என் மேல இருக்கிற பாசத்தால உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிற
நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா எங்க அப்பா ரொம்ப கஷ்டப்படுவாங்க.அதனால நீயே சொல்லு ப்ளீஸ் அர்ஜுன்” என்று அவள் அவனிடம் சொல்லிக் கெஞ்சிய வார்த்தைகளை நினைத்து பார்த்தாள்)
எப்படியோ திருமணம் முடிந்தது..
அதன் பிறகு அந்த இரவு… அவள் பயந்திருந்த இரவு வர,
அவளுக்கு அவள் அக்காவே தலைவாரி பூச்சூடி “உன்ன கஷ்டப்படுத்தணும்னு யாரும் நினைக்கல மீரா, உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்” என்று கண்கலங்க சொன்னவளை பார்த்து
“எனக்கு உங்க எல்லார் மனசும் புரியுது, ஆனா என் மனசு தான் யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க” என சொல்லிக் கொண்டே இருக்கும் போது ஒரு பால் சொம்பை அவள் கையில் கொடுக்க
“ஆல் தி பெஸ்ட் மீரா” என அவள் அக்கா சிரித்துக் கொண்டே சொல்ல
“இப்ப இது ஒன்னு தான் குறை” என மனதில் நினைத்தபடி அந்த பால் சொம்பை வாங்கிக் கொண்டு அர்ஜுன் இருக்கும் அறையை நோக்கி வந்தாள்
அவன் அறையின் கதவு மெல்ல திறக்க, உள்ளே வந்த மீரா மெதுவாக அவனை பார்க்கவும்
“ஓ பால் கொண்டு வந்து இருக்கியா, அதுல பாதாம்,பிஸ்தா எல்லாம் தூக்கலா போட்டு இருக்கியா “என அவளை பார்த்து கேட்க
அவளோ பால் சொம்பை டொக் என்று பக்கத்தில் இருக்கும் மீசையின் மீது வைக்க
படாரென்று கீழே அவள் குனியவும்
“ஏய் கால்ல எல்லாம் விழாத, என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும்” என அர்ஜுன் சொல்ல
“ரொம்பத்தான் ஆசை, மெட்டி புடவைய புடிச்சு இழுக்குதுன்னு அட்ஜஸ்ட் பண்ண” என அவனை முறைத்தவாறு அவள் சொல்லவும்
தன் தலையை சொரிந்து கொண்டு “சரி அப்புறம் என்ன” என்று அவன் கேட்கவும்
புடவை முந்தானையை தூக்கி இடுப்பில் சொருகியவள், அவனுக்கு முன்னாடி கட்டிலில் வந்து அமர
அவளைப் பார்த்த அர்ஜுன் “நீ ஓய்வெடு. நான் இருக்கேன். உனக்கு தேவையானது எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு. கட்டாயம் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை. நாளை காலையிலிருந்து உன் விருப்பப்படி நீ வாழலாம்” என்று அவன் சொல்லவும்
மீரா அவனைப் பார்த்தவாறு மெதுவாக தலையசைத்தாள். அவன் வெளியே சென்றதும், அவள் கண்கள் தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்து நனையத் தொடங்கின.
அந்த சோகத்தில் அழுதவள் அலுப்பில் இப்போது தூங்கினாள் என்று தெரியாதவளாக தூங்க
அடுத்த நாள் காலையில், அர்ஜுன் அவளுக்காக ஓரமாக காபி போட்டு வைத்திருந்தான்.
அவளுக்கு எழுந்தவுடன் பெட் காஃபி குடிக்கும் பழக்கம் உண்டு என்பதை இவன் வீட்டில் அனைவரும் அறிந்ததே..
அக்காவின் வீடாக உரிமையில் வந்து போய்க்கொண்டு இருந்தவள், இப்போது தன் வீடாக இருக்கும் நிலையில் அதை உரிமை கொண்டாடும் நிலையில் அவள் இல்லையே..
அர்ஜுனை அவள் மாமாவின் தம்பியாக அவளுக்கு தெரியும். ஆனால் தன் கணவனாக இன்னும் அவனை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தில் அவள் இல்லை..
இது எல்லாம் தெரிந்தும் தன் கழுத்தில் தாலி கட்டியவன் மீது அவளுக்கு கோவம் தான் வந்தது..
கையில் காபியை எடுத்தவாரே பக்கத்தில் ஒரு பேப்பர் பறக்க, அதை அவள் பிரித்துப் பார்த்ததும் ஒரு மெசேஜ் எழுதி வைத்திருந்தான்
" நீ வேண்டாம் என்று சொல்லியும் உன்னை இந்த உறவுக்குள் வற்புறுத்தி இழுத்து விட்டேன், ஆனால் உன்னை என் மனைவியாக நினைக்காமல் தோழியாக உன்னிடம் என் உறவை தொடங்கலாமா?"என்று இருக்க
மீரா அந்த மெசேஜை வாசித்தபோது, இதயம் கசிய ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா என்ற எண்ணம், மனதுக்குள் ஒரு விதை போல நுழைந்தது.
ஆனால் அவளுக்கு அர்ஜுன் பற்றி நல்லாவே தெரியும் ..
அவன் பின்னாடி சுற்றாத பொண்ணுங்களே இல்லை, யாரையும் பேசியே மயக்கி விடுவான் என்று..
“இவன் கிட்ட தோழியாக கூட பேச கூடாது” என்று மனதில் நினைத்தவள் அந்த காகிதத்தை கிழித்து எறிய
காபியை குடித்துக்கொண்டு உட்கார்ந்திருத்தவள்
“என்ன மீரா எழுந்துட்டியா” என்று எதுவும் தெரியாதது போல் அவன் வந்து கேட்க
“இங்க பாரு ஏதாவது பேசுனா..” என அவள் பேச வருவதற்குள்
“நான் ஆபீஸ் கிளம்பி போறேன். நான் ஒன்னும் சும்மா வீட்ல உக்காந்து உன் கூட பேசறதுக்காக இந்த ரூமுக்கு வரல” என்று அவளை பார்த்து சொல்லவும்
“அப்போ பேசாம அப்படியே போயிரு, ரொம்ப புண்ணியமா போகும்” என்று தன் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் எடுத்து கும்மிட
தன் மார்புக்கு நடுவில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு அவள் சொல்வதை ரசித்தவன் வேகமாக அவள் உட்கார்ந்து இருக்கும் பெட்டை நெருங்கி வந்து, அவள் கண் இமைக்கும் நேரத்தில் அவள் அருகே அவன் உட்கார
“ஏய் ஆபீஸ் தானே கிளம்ப போறேன்னு சொன்ன,ஒழுங்கா எந்திருச்சு போயிரு” என்று அவள் கோபமாக சொல்லவும்
“ஏய் ஒரு நிமிஷம் உஷ்ஷ்”.. என சொல்லி அவளின் இதழ்கள் மீது விரலை வைக்க
“இங்க பார் அர்ஜூன் என்னை தொட்டன அப்புறம்” என்று அவள் சொல்வதற்குள்
“லூசு தொடுறதா இருந்தா, நைட்டே தொட்டு இருக்க மாட்ட..எதுக்கு மார்னிங் வரைக்கும் வெயிட் பண்ணனும் “என்று அவன் சொல்ல
எதையும் ஈசியாக விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் குணம் அர்ஜுனுக்கு..
ஆனால் சிறு தவறை கூட பெரிதாக நினைக்கும் மனது மீராவுக்கு..
“இப்ப நீ கைய எடுக்க போறியா இல்லையா?” என்று தன் இதழ் மீது வைத்திருந்த விரலை அவள் எடுக்கவும்
வேகமாக அவள் தலைமுடி எல்லாம் கலைத்து அவள் பூவை எல்லாம் அவன் பிரித்து போடவும்
அவள் புடவையில் கை வைக்க
“இங்க பாரு உனக்கு அவ்வளவு தான் மரியாதை” என அவள் அவன் முன்னாடி ஒரு விரலை நீட்டி தன் முட்டை கண்களை உருட்டி சொல்ல
“இப்போ வாய மூடிட்டு அமைதியா இருக்க போறியா இல்லையா” என்று சொல்லி அவள் புடவையை பிடித்து இழுக்கவும்
தன் கையால் முந்தானையை சரிந்து விழுவதற்குள் பிடிக்க
“நேத்து நைட்டு நடக்காம விட்டதா இப்ப நடத்தலாம் என்று பார்க்கிறே அப்படித்தானே” என்று மீரா கேட்க
அவளின் அருகே வந்தவன் அவன் மூச்சுக்காற்று அவள் காதோரம் உரசும் அளவுக்கு அவன் முன்னாடி உட்கார
அது வந்து..
அது வந்து என்று அவன் ஏதோ சொல்ல வர
அவன் மூச்சுக்காற்று பட்ட சூட்டினால் பெண்ணவளின் தேகம் கூச
தன் காதோரம் தன் கையை வைத்து அவன் முகத்தை நகர்த்த முயற்சித்தவள்
“அர்ஜுன் வெளியே போ இல்லேன்னா அக்கா,மாமாவா கூப்பிடுவேன்“என அவள் சொல்ல
அவன் விரல்களால் அவள் நெற்றி பொட்டில் கோலமிட,
“ என்ன பண்ற” என்று அவள் வேகமாக அவன் விரலை தள்ளி விடவும்
கீழே உதிர்ந்த பூவை தூக்கி அவள் தலையில் போட்டு ,”இப்ப வெளியே போ சரியா இருக்கும் இல்லனா உங்க அக்கா வந்து அதான் எங்க அண்ணி அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவாங்க “என்று அர்ஜுன் சொல்லி சிரித்து விட்டு செல்லவும்
அவன் அவளை விட்டு விலகியதும் பெருமூச்சு விட்டவள்
“சரியான லூசு” என்று அவனை மனதிற்குள் திட்டிக் கொள்ள
அர்ஜுன் சென்ற அடுத்த நிமிடமே யாழினி வரவும்
“ஏய் என்னடி எல்லாம் எப்படி போச்சு” என்று மீரா இருக்கும் நிலைமையை பார்த்தவள் தன் மனதில் ஏதேதோ கற்பனையை பண்ணிக்கொண்டு சிரித்துக் கொண்டே கேட்க
“அதை உன் கொழுந்தன் கிட்ட போய் கேளு”என சொல்லி முடியை தூக்கி கொண்டை போட்டுக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள் மீரா…
யாழினிக்கு தெரியும் தன் தங்கை அவ்வளவு எளிதில் மனம் மாறுபவள் அல்ல என்று..
அவளின் முதல் திருமணம்... அதுவும் காதல் தான்.
இரு மனம் இணையும் திருமண நிகழ்வில் சொந்த பந்தங்கள் எல்லாம் கூடியிருக்க, இவன் தான் இனிமேல் தனக்கு மணவாளன் என்று பெண் அவள் தன் புத்தியில் ஏற்றிக்கொண்டாலும் அவளின் மனமோ அதை ஏற்க மறுக்கிறது..
“மூஞ்சியை கொஞ்சம் சிரிச்சா மாதிரி பாரு மீரா... கையெடுத்து கும்பிட்ட மாதிரி போஸ் கொடு..” என காதில் மெல்ல சொன்னாள் அவள் அக்கா, யாழினி..
“அண்ணி எதுக்கு அவள இப்படி கஷ்டப்படுத்துறீங்க ,அவள் எப்படி இருக்கணும் நினைக்கிறாளோ அப்படியே இருக்கட்டும்” என அர்ஜுன் சொல்ல
“உங்க தம்பி இப்பவே பொண்டாட்டி முந்தானை தான் புடிச்சிட்டு இருக்கான். பாருங்க நான் சொன்னதை கேட்காமல் இப்பவே பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்றான்.. இந்த அண்ணியை அதுக்குள்ள மறந்துட்டான், இதெல்லாம் நீங்க கேக்க மாட்டீங்களா?” என்று பக்கத்தில் இருக்கும் தன் கணவன் இனியவனை இடித்தாள் யாழினி
இனியவன் ,அர்ஜுன் அண்ணன் தம்பிகள்..
அதைப் பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜுன் அப்பா திரவியம், அம்மா தமயந்தி” உன் தங்கச்சி தானடி, யாரோ மூன்றாவது ஆளு இந்த வீட்டுக்கு மருமகளா வர்ற மாதிரி என் பையன இப்பவே பாடா படுத்துற” என செல்லமாகச் சொன்னாள் யாழினியின் அத்தை தமயந்தி..
“கொஞ்சமாவது சிரிச்ச மாதிரி இரு” என மீராவை யாழினி கொஞ்சம் கடிந்து கொண்டு சொல்ல
இதை பார்த்த மீரா “அப்பா அக்காவை வாய மூடிட்டு இருக்க சொல்லுங்க“என திரும்பிப் பார்த்து சொல்ல
(மீரா, யாழினியின் பெற்றோர் இளங்கோ, அமுதா)
“சித்தி கொஞ்சம் சிரிங்க, சித்தப்பா எப்படி சிரிக்காங்க பாருங்க “என (யாழினி ,இனியவன் குழந்தை) ரித்விக் மழலை மொழியில் சொல்ல..
ஆனாலும் மீரா சிரிக்கவில்லை. சிரிக்க முடியவில்லை. அது ஒரு கல்யாண நாள் தான். ஆனால் இதே மாதிரி ஒரு நாள் மூன்று வருடங்களுக்கு முன்னால் கூட இருந்தது. வெகு வேறுபாடில்லை, அதே சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் தான்... ஆனால் அந்த சந்தோசம் மட்டும் அவள் வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது.
இந்த இரண்டாவது திருமணம், அவள் விருப்பமல்ல. ஆனால் வீட்டு சூழ்நிலை, சமூகப் பார்வை, தனிமை என்ற பெயரில் அவளை இந்த இடத்தில் நிறுத்தி விட்டது. பெற்றோர் வார்த்தைகளும், உறவினர்கள் மன அழுத்தமும், மீராவை எதையோ தவறாக செய்தவளாக மாற்றியிருந்தது.
இதையெல்லாம் நினைத்து முடிப்பதற்குள் மூன்று முடிச்சு போட்டான் அர்ஜுன்..
அவள் உச்சியில் குங்குமம் வைத்துவிட,
“மாப்பிள பொண்ணு கால்ல மெட்டிய போட்டு அக்னிய மூணு தடவ சுத்தி வாங்க “என ஐயர் சொல்ல
"மீரா, கையைக் கொடு," என்று அர்ஜுன் சொன்னபோது, அவள் நிமிர
அவனுடைய கண்கள் அமைதியாக அவளைப் பார்க்க,ஒரு அழுத்தமோ, எதிர்பார்ப்போ இல்லாமல் அவள் இருந்தாள்.
மனம் பாரமாக இருந்தாலும், இதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லும் நிலையில் அவள் இல்லையே..அவன் கையைக் கொடுக்க தள்ளிக்கொண்டாள். அந்த சிறு தொடுதல், அவளுக்குள் ஒரு வினாவாகவே சத்தமில்லாமல் எழுந்தது.
“இவனை நம்பி கையை கொடுத்தாள் இவனும் பாதியில் விட்டு விடுவானோ?” என்ற பயம் தான் அவளிடம் தோன்றியது
அந்த சந்தேகத்தோடும், பழைய நிழல்களோடும், மீராவின் இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கம் இன்று தான் துவங்கியது.
தொலைவில் நாதஸ்வரம் மெதுவாக எழ, கல்யாண மண்டபத்தின் நடுவே நின்று அவனிடம் கை கொடுத்திருந்தாலும், மீராவின் மனம் அந்த இடத்தில் இல்லை. இடைவெளிகள் நிறைந்த நிழல்களின் நடுவே தான் நடந்து கொண்டிருந்தாள்.
திருமண சடங்குகள் ஒருவரையொருவர் இணைக்கும் இனிய நிகழ்வுகள் என்று சொல்லப்படுகிறதே… ஆனால் மீராவுக்கு அது ஒரு “படிக்கட்டின் மேலே தள்ளப்படும்” உணர்வைத் தான் தந்தது.
ஆனால் அர்ஜுன்…
அவனுடைய முகத்தில் ஒரு அமைதி இருந்தது. எதையுமே எதிர்பார்க்காத அமைதி.
அவன் அவளைப் பார்த்து சிரித்தபோது, அந்த சிரிப்பில் “ நீ எதற்கும் கவலைப்படாதே” என சொல்வது போல் இருந்தது.
அவன் கண்களில், "நீ ரெடியா இல்லையா? அது முக்கியமில்லை. நான் உனக்காக இருக்கேன்." என உறுதியாக இருந்தான்..
மீராவால் அர்ஜுனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை.. அவள் மனம் முழுவதும் திருமணம் என்ற சந்தோசத்தை தாண்டி ஏதாவது நிலைத்திருக்குமா என்ற பயமே தான் நிறைந்திருந்தது..
திருமணம் முடிந்ததும் எல்லா புகைப்படங்களிலும், மீரா சிரிக்கவில்லை. ஆனால் அர்ஜுன் சிரித்தான்.
“பொண்ணு மாப்பிள்ளை தோல் மேல கை போட்டு போஸ் கொடுங்க” என்று போட்டோகிராபர் சொன்னதை கேட்டு மீரா எரிச்சலாக அர்ஜுனை பார்க்க
“சார் நாங்கல்லாம் டூ கே கிட்ஸ் இல்ல பிரி வெட்டிங் போட்டோ சூட் எல்லாம் பண்றதுக்கு ,நாங்கல்லாம் 90ஸ் கிட்ஸ் நீங்க நார்மலாவே எடுங்க” என அவளுக்கு ஏற்றவாறு அவன் பதில் சொல்ல
“நான் சித்தி, சித்தப்பா கூட தான் நின்னு போட்டோ எடுப்பேன்” என ரித்விக் சொல்ல
“நீ வா ரித்து” என்று மீரா அவனை தூக்குவதற்குள் அர்ஜுன் தூக்கிவிட
அவர்கள் இரண்டு பேரும் பயணத்தில் ஒன்றாக இருந்தது என்னவோ ரித்விக் மட்டும் தான்..
அப்போது கூட அவள் அக்கா யாழினி “எதுக்கு நீ இப்ப இப்படி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க, ஒரு போட்டோ கூட உன்னால போஸ் கொடுக்க முடியாதா ரொம்ப தான் பண்ற நீ,
உன்னை என்ன தெரியாத இடத்துலயா கல்யாணம் முடிச்சு கொடுக்கிறோம்.. ஏதோ பாலம் கிணத்துல கல்லகட்டி தள்ற மாதிரி இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருக்க, என் கூட தானடி வந்து இருக்க போற அந்த வீட்டில” என அவள் அக்கா கடுகாய் பொரிந்து தள்ள
“இங்க பாரு உன் மேல தான் நான் கொலைவெறியில் இருக்கேன் ஒழுங்கா போயிரு ,இல்லன்னா இங்க நடக்கிறதே வேற.. மாமா முதல இவள தள்ளி கூட்டிட்டு போங்க” என மீரா கோபமாக கொந்தளிக்க
“அர்ஜுன் மாதிரி ஒருத்தன் கிடைக்க
நீ கொடுத்து வச்சிருக்கணும் டி ,ஆனால் நானும் பாத்துட்டே இருக்கேன் அந்த பையன் கைய புடிக்க வந்தா நீ தள்ளி தள்ளி போற “என்று யாழினி சொல்லவும்
“அம்மா தாயே நீ தயவு செஞ்சு கொஞ்சம் தள்ளி நிக்கிறியா, இல்லனா இங்க நின்னு நான் போட்டோ கூட எடுக்க மாட்டேன் பாத்துக்கோ “என்று மீரா சொல்ல
“அண்ணி விடுங்க “என அர்ஜுன் அமைதியாக சொல்ல
“வந்துட்டான் நல்லவன் மாதிரி” என மனதிற்குள் மீரா முணுமுணுக்க
“என்னை ஏதாவது சொன்னீங்களா” என்று அர்ஜுன் அவளை பார்த்து நேரடியாக கேட்க
“சொன்னா மட்டும் சொன்னது அப்படியே பண்ணிருவீங்க பாருங்க “என அவள் அவனைப் பார்த்து சொல்ல
“நீங்க சொன்னா நான் என்ன வேணாலும் பண்ணுவேன்” என அர்ஜுன் சொல்லவும்
‘நடிக்காத’ என மனதில் திட்டிக்கொண்டு
“அதான் பாக்குறேனே நான் சொல்லி நீங்க பண்ணினது” என அவள் பட்டும் படாமல் சொல்ல
(“இந்தக் கல்யாணத்துல உனக்கு இஷ்டம் இல்லன்னு சொல்லிடு அர்ஜுன், என்னால என் முதல் வாழ்க்கையில் இருந்து மீண்டு வர முடியல .இப்போ உன்ன கல்யாணம் முடிச்சாலும் நாம சந்தோசமா இருப்பமான்னு தெரியல, எங்க அக்கா என் மேல இருக்கிற பாசத்தால உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிற
நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா எங்க அப்பா ரொம்ப கஷ்டப்படுவாங்க.அதனால நீயே சொல்லு ப்ளீஸ் அர்ஜுன்” என்று அவள் அவனிடம் சொல்லிக் கெஞ்சிய வார்த்தைகளை நினைத்து பார்த்தாள்)
எப்படியோ திருமணம் முடிந்தது..
அதன் பிறகு அந்த இரவு… அவள் பயந்திருந்த இரவு வர,
அவளுக்கு அவள் அக்காவே தலைவாரி பூச்சூடி “உன்ன கஷ்டப்படுத்தணும்னு யாரும் நினைக்கல மீரா, உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்” என்று கண்கலங்க சொன்னவளை பார்த்து
“எனக்கு உங்க எல்லார் மனசும் புரியுது, ஆனா என் மனசு தான் யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க” என சொல்லிக் கொண்டே இருக்கும் போது ஒரு பால் சொம்பை அவள் கையில் கொடுக்க
“ஆல் தி பெஸ்ட் மீரா” என அவள் அக்கா சிரித்துக் கொண்டே சொல்ல
“இப்ப இது ஒன்னு தான் குறை” என மனதில் நினைத்தபடி அந்த பால் சொம்பை வாங்கிக் கொண்டு அர்ஜுன் இருக்கும் அறையை நோக்கி வந்தாள்
அவன் அறையின் கதவு மெல்ல திறக்க, உள்ளே வந்த மீரா மெதுவாக அவனை பார்க்கவும்
“ஓ பால் கொண்டு வந்து இருக்கியா, அதுல பாதாம்,பிஸ்தா எல்லாம் தூக்கலா போட்டு இருக்கியா “என அவளை பார்த்து கேட்க
அவளோ பால் சொம்பை டொக் என்று பக்கத்தில் இருக்கும் மீசையின் மீது வைக்க
படாரென்று கீழே அவள் குனியவும்
“ஏய் கால்ல எல்லாம் விழாத, என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும்” என அர்ஜுன் சொல்ல
“ரொம்பத்தான் ஆசை, மெட்டி புடவைய புடிச்சு இழுக்குதுன்னு அட்ஜஸ்ட் பண்ண” என அவனை முறைத்தவாறு அவள் சொல்லவும்
தன் தலையை சொரிந்து கொண்டு “சரி அப்புறம் என்ன” என்று அவன் கேட்கவும்
புடவை முந்தானையை தூக்கி இடுப்பில் சொருகியவள், அவனுக்கு முன்னாடி கட்டிலில் வந்து அமர
அவளைப் பார்த்த அர்ஜுன் “நீ ஓய்வெடு. நான் இருக்கேன். உனக்கு தேவையானது எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு. கட்டாயம் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை. நாளை காலையிலிருந்து உன் விருப்பப்படி நீ வாழலாம்” என்று அவன் சொல்லவும்
மீரா அவனைப் பார்த்தவாறு மெதுவாக தலையசைத்தாள். அவன் வெளியே சென்றதும், அவள் கண்கள் தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்து நனையத் தொடங்கின.
அந்த சோகத்தில் அழுதவள் அலுப்பில் இப்போது தூங்கினாள் என்று தெரியாதவளாக தூங்க
அடுத்த நாள் காலையில், அர்ஜுன் அவளுக்காக ஓரமாக காபி போட்டு வைத்திருந்தான்.
அவளுக்கு எழுந்தவுடன் பெட் காஃபி குடிக்கும் பழக்கம் உண்டு என்பதை இவன் வீட்டில் அனைவரும் அறிந்ததே..
அக்காவின் வீடாக உரிமையில் வந்து போய்க்கொண்டு இருந்தவள், இப்போது தன் வீடாக இருக்கும் நிலையில் அதை உரிமை கொண்டாடும் நிலையில் அவள் இல்லையே..
அர்ஜுனை அவள் மாமாவின் தம்பியாக அவளுக்கு தெரியும். ஆனால் தன் கணவனாக இன்னும் அவனை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தில் அவள் இல்லை..
இது எல்லாம் தெரிந்தும் தன் கழுத்தில் தாலி கட்டியவன் மீது அவளுக்கு கோவம் தான் வந்தது..
கையில் காபியை எடுத்தவாரே பக்கத்தில் ஒரு பேப்பர் பறக்க, அதை அவள் பிரித்துப் பார்த்ததும் ஒரு மெசேஜ் எழுதி வைத்திருந்தான்
" நீ வேண்டாம் என்று சொல்லியும் உன்னை இந்த உறவுக்குள் வற்புறுத்தி இழுத்து விட்டேன், ஆனால் உன்னை என் மனைவியாக நினைக்காமல் தோழியாக உன்னிடம் என் உறவை தொடங்கலாமா?"என்று இருக்க
மீரா அந்த மெசேஜை வாசித்தபோது, இதயம் கசிய ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா என்ற எண்ணம், மனதுக்குள் ஒரு விதை போல நுழைந்தது.
ஆனால் அவளுக்கு அர்ஜுன் பற்றி நல்லாவே தெரியும் ..
அவன் பின்னாடி சுற்றாத பொண்ணுங்களே இல்லை, யாரையும் பேசியே மயக்கி விடுவான் என்று..
“இவன் கிட்ட தோழியாக கூட பேச கூடாது” என்று மனதில் நினைத்தவள் அந்த காகிதத்தை கிழித்து எறிய
காபியை குடித்துக்கொண்டு உட்கார்ந்திருத்தவள்
“என்ன மீரா எழுந்துட்டியா” என்று எதுவும் தெரியாதது போல் அவன் வந்து கேட்க
“இங்க பாரு ஏதாவது பேசுனா..” என அவள் பேச வருவதற்குள்
“நான் ஆபீஸ் கிளம்பி போறேன். நான் ஒன்னும் சும்மா வீட்ல உக்காந்து உன் கூட பேசறதுக்காக இந்த ரூமுக்கு வரல” என்று அவளை பார்த்து சொல்லவும்
“அப்போ பேசாம அப்படியே போயிரு, ரொம்ப புண்ணியமா போகும்” என்று தன் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் எடுத்து கும்மிட
தன் மார்புக்கு நடுவில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு அவள் சொல்வதை ரசித்தவன் வேகமாக அவள் உட்கார்ந்து இருக்கும் பெட்டை நெருங்கி வந்து, அவள் கண் இமைக்கும் நேரத்தில் அவள் அருகே அவன் உட்கார
“ஏய் ஆபீஸ் தானே கிளம்ப போறேன்னு சொன்ன,ஒழுங்கா எந்திருச்சு போயிரு” என்று அவள் கோபமாக சொல்லவும்
“ஏய் ஒரு நிமிஷம் உஷ்ஷ்”.. என சொல்லி அவளின் இதழ்கள் மீது விரலை வைக்க
“இங்க பார் அர்ஜூன் என்னை தொட்டன அப்புறம்” என்று அவள் சொல்வதற்குள்
“லூசு தொடுறதா இருந்தா, நைட்டே தொட்டு இருக்க மாட்ட..எதுக்கு மார்னிங் வரைக்கும் வெயிட் பண்ணனும் “என்று அவன் சொல்ல
எதையும் ஈசியாக விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் குணம் அர்ஜுனுக்கு..
ஆனால் சிறு தவறை கூட பெரிதாக நினைக்கும் மனது மீராவுக்கு..
“இப்ப நீ கைய எடுக்க போறியா இல்லையா?” என்று தன் இதழ் மீது வைத்திருந்த விரலை அவள் எடுக்கவும்
வேகமாக அவள் தலைமுடி எல்லாம் கலைத்து அவள் பூவை எல்லாம் அவன் பிரித்து போடவும்
அவள் புடவையில் கை வைக்க
“இங்க பாரு உனக்கு அவ்வளவு தான் மரியாதை” என அவள் அவன் முன்னாடி ஒரு விரலை நீட்டி தன் முட்டை கண்களை உருட்டி சொல்ல
“இப்போ வாய மூடிட்டு அமைதியா இருக்க போறியா இல்லையா” என்று சொல்லி அவள் புடவையை பிடித்து இழுக்கவும்
தன் கையால் முந்தானையை சரிந்து விழுவதற்குள் பிடிக்க
“நேத்து நைட்டு நடக்காம விட்டதா இப்ப நடத்தலாம் என்று பார்க்கிறே அப்படித்தானே” என்று மீரா கேட்க
அவளின் அருகே வந்தவன் அவன் மூச்சுக்காற்று அவள் காதோரம் உரசும் அளவுக்கு அவன் முன்னாடி உட்கார
அது வந்து..
அது வந்து என்று அவன் ஏதோ சொல்ல வர
அவன் மூச்சுக்காற்று பட்ட சூட்டினால் பெண்ணவளின் தேகம் கூச
தன் காதோரம் தன் கையை வைத்து அவன் முகத்தை நகர்த்த முயற்சித்தவள்
“அர்ஜுன் வெளியே போ இல்லேன்னா அக்கா,மாமாவா கூப்பிடுவேன்“என அவள் சொல்ல
அவன் விரல்களால் அவள் நெற்றி பொட்டில் கோலமிட,
“ என்ன பண்ற” என்று அவள் வேகமாக அவன் விரலை தள்ளி விடவும்
கீழே உதிர்ந்த பூவை தூக்கி அவள் தலையில் போட்டு ,”இப்ப வெளியே போ சரியா இருக்கும் இல்லனா உங்க அக்கா வந்து அதான் எங்க அண்ணி அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவாங்க “என்று அர்ஜுன் சொல்லி சிரித்து விட்டு செல்லவும்
அவன் அவளை விட்டு விலகியதும் பெருமூச்சு விட்டவள்
“சரியான லூசு” என்று அவனை மனதிற்குள் திட்டிக் கொள்ள
அர்ஜுன் சென்ற அடுத்த நிமிடமே யாழினி வரவும்
“ஏய் என்னடி எல்லாம் எப்படி போச்சு” என்று மீரா இருக்கும் நிலைமையை பார்த்தவள் தன் மனதில் ஏதேதோ கற்பனையை பண்ணிக்கொண்டு சிரித்துக் கொண்டே கேட்க
“அதை உன் கொழுந்தன் கிட்ட போய் கேளு”என சொல்லி முடியை தூக்கி கொண்டை போட்டுக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள் மீரா…
யாழினிக்கு தெரியும் தன் தங்கை அவ்வளவு எளிதில் மனம் மாறுபவள் அல்ல என்று..
அவளின் முதல் திருமணம்... அதுவும் காதல் தான்.
Attachments
Last edited: