பாகம்-1
ஊருக்கு வெளியே சில மைல்கள் தள்ளியிருந்த அந்த காட்டின் நடுவில் அமைந்திருந்தது வெள்ளை நிற அழகிய மாளிகை ஒன்று… அந்த மாளிகை முழுவதையுமே வெள்ளை நிற மார்பிலை வைத்து மட்டுமே கட்டி இருப்பர் போலும்… காட்டிற்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு மாளிகை இருக்கிறதென்று சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்… அப்படிப்பட்ட மாளிகை இப்போது ஒரே ஒருவரால் அதுவும் அவரின் தீய செயல்களுக்காக மட்டுமே உதவிக் கொண்டிருக்கிறது… மாளிகையின் உள்ளே இரண்டு மூன்று குடும்பம் தங்கும் படி வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் ஒருவர் மட்டுமே இப்போதும் வசித்துக் கொண்டிருன்கிறார்… அதுவும் தன் வேலை ஆட்களுடன்… அந்த மாளிகைக்கு கீழே பேஸ்ட்மென்ட் போல் அமைதிருக்க அதில் உள்ள சில அறைகளில் ஒரு அறையின் நடுவில் ஒருவன் தலை கீழாக தொங்கவிடப்பட்டிருக்க இவ்வளவு நேரம் அவனை அடித்து துவைத்த அடியாட்கள் இப்போது தான் நிறுத்தி விட்டு, அவனை சுற்றி தாங்கள் உபயோகப் படுத்திய கட்டையுடன் தன் தலைவரிடம் இருந்து கட்டளை வருவதற்காக காத்திருந்தனர்.
அவர்களுக்கு எதிரே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு தன் முன்னே தொங்கிக் கொண்டிருந்தவனையே கனல் பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். தலையில் கேப் முகத்தில் மாஸ்க் அணிந்து கண்களில் கூலர்ஸ் அணிந்து இருந்தவரின் முகத்தை யாராலும் பார்க்க முடியா வண்ணம் இருந்தது.... தன் அருகில் நின்றிருந்த தன் பி.எ வான குகனை, கூலர்சை கழட்டிய வண்ணம் ‘அடுத்து என்ன செய்ய வேண்டும்’ என்பது போல் தன் கனல் விழிகளால் காண, அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் தன் கை சட்டையை முழங்கை வரை ஏற்றிய வண்ணம் தொங்கிக் கொண்டிருந்தவனின் வயிற்றிலேயே ஒரு குத்து விட, அவனோ வலியில் கதறி விட்டான் பாவம்...
அதை எல்லாம் கண்டு கொள்ளாதவனோ “உண்மையை சொல்லு… யாரு டா.. உன்னை இங்க அனுப்புனா…” என்று மிரட்ட, அவனோ கண்களில் பயம் அப்பட்டமாக தெரிய நாற்காலியில் அமர்ந்திருந்த நபரை தான் கண்டான்.
நாற்காலியில் அரிமாக்கே ஈடு அளிக்கும் வண்ணம் அமர்ந்திருந்த அந்த உருவமோ தன் கனல் பார்வையுடனே அவனை எரித்துக் கொண்டிருக்க, அவனின் பயமோ இன்னும் எகிறியது… இப்போது பி.எவோ மீண்டும் ஒரு அறை விட, “எ…என்…என்னை…யாரும்…அனுப்பல…”என்று பயத்தில் திக்கி திணறி வார்த்தைகளை வெளியிட, இவ்வளவு நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவமோ கொஞ்சமும் யோசிக்காமல் இத்தனை நேரம் தன் கையில் சுழன்று கொண்டிருந்த துப்பாக்கியை நிமிர்த்தி அவன் நெற்றி பொட்டிலேயே சுட்டது.
அங்கிருந்த அனைவருமே இப்போது நடந்த காட்சியையும் சுட்டவரையும் அதிர்ச்சியுடன் காண, அதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த உருவமோ “கிளியர் திஸ்…” என்ற சொல்லோடு தன் காரை நோக்கி செல்ல எத்தனிக்க,
அவ்வளவு நேரம் அடியாட்களுடன் சேர்ந்து அவனை அடித்துக் கொண்டிருந்த ஒருவன் திடீர் என்று அந்த உருவத்தை கொன்று விடும் நோக்கொடு பின்னால் இருந்து அறிவாளுடன் வேகமாக அருகில் செல்ல, அந்நேரம் கேப் சரிந்து விட்ட படியால் அதை சரி செய்து கொண்டே திரும்பி பார்க்கும் நேரத்தில் அவன் கையில் இருந்த அறிவாள் அந்த உருவாத்தின் கழுத்து வரை சென்றிருக்க, கன நேரத்தில் தன் உடலை பின்னோக்கி சரித்த அந்த உருவம், தன் கையில் இருந்த துப்பாக்கியை மற்றொரு முறை உபயோகிக்க இன்னொரு உயிரும் மிகச் சாதாரணமாக அவர் கையால் பிரிந்தது… இது அனைத்தும் கன நேரத்தில் நிகழ்ந்து விட்ட படியால் மற்றவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை… வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்…
மீண்டும் தன் கூலர்சை கழட்டி தன் பி. எ வை தன்னால் முடிந்த மட்டும் அந்த உருவம் முறைக்க, அந்த பி. எ வோ பம்மிக் கொண்டு நின்றான்… அவனின் பம்மளில் எரிச்சல் அடைந்த அந்த உருவாமோ எதுவும் சொல்லாமல் இப்போது அந்த மாளிகையை விட்டு வெளியே சென்று விட்டது.
“அய்யோஓஒ… நாசமா போறவங்க… இவங்க கிட்ட என்ன மாட்டி விட்டுட்டு விளையாட்டு காட்டுறதையே ஒரு வேலையா வெச்சிருக்காங்க… இவங்கள பத்தி தெரிஞ்சா பொத்திக்கிட்டு இருக்க வேண்டியது தான… அத விட்டுட்டு எதையாவது செஞ்சி வெச்சி தொலஞ்சிறாங்க… அப்பறம் இவங்க எனக்கு தான் ஆப்பு வைக்காங்க….அய்யோ… இன்னைக்கு சாயங்காலம் ஆபீஸ்ல என்ன என்ன ஆட்டம் ஆட போடாறாங்களோ தெரியலையே… “ என்று மனதுக்குள் தங்கள் எதிரிகளை நினைத்து திட்டிக் கொண்டவனுக்கு தன் மேல் அதிகாரியை நினைத்து பயமாகவும் இருந்தது… அதை புறம் தள்ளியவன் மற்றவர்களுக்கு அடுத்து செய்ய வேண்டிய வேலையை ஏவி விட்டு தன் காரை எடுத்துக் கொண்டு தான் வேலை செய்யும் அலுவலகத்தை நோக்கி பறந்தான்….
தன் பி. எ வை முறைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையில் சிக்னல் விழுந்து விட எரிச்சலுடன் காரை நிறுத்திய அந்த உருவமோ வானொலியை இயக்கி விட்டு சாலையையே வெறிக்க அந்நேரம் அந்த சாலையை கடந்த ஒரு காட்சியோ அந்த உருவத்தின் கவனத்தை ஈர்த்தது…
வெள்ளை நிற சட்டையும் ப்ளூ வண்ண ஜீன்ஸ்ஸும் அணிந்து, கையில் ஒரு வெள்ளை நிற பிராக் அணிந்த ஐந்து வயது பெண் குழந்தையை ஏந்திய வண்ணம் அதனுடன் பேசிக் கொண்டும் அக்குழந்தையை காற்றில் ஆட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டும் முகம் கொள்ளா புன்னகையுடன் சாலையை கடக்கும் அந்த நபர் தான் அந்த உருவத்தின் கவனத்தை ஈர்த்ததற்கான காரணம்…
அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் சாலையில் பச்சை வண்ண சிக்னல் விழுந்து விடவும் அவர்களை இறுதியாக ஒரு முறை பார்த்த அந்த உருவம் தன் காரை இயக்கிக் கொண்டு நேராக தன் இல்லத்தை நோக்கி பறந்தது…
தன் வீட்டின் முன்னே சென்று காரை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, அங்கு சோபாவில் அமர்ந்திருந்த தன் தாய் ரேவதியைக் கண்டு எரிச்சல் வந்தாலும் அதை வெளிக் காண்பித்து கொள்ளாமல் அமைதியாக தன் அறையை நோக்கி செல்வதற்காக மாடி ஏற எத்தனிக்க,
“அங்கேயே நில்லு…” என்ற அவரின் கனீர் குரலில் கால்கள் தன்னாலேயே நின்று விட்டது… ஆனால் குரல் வந்த திசையை நோக்கி திரும்பவில்லை… அமைதியாகவே நின்றிருந்தது அந்த உருவம்…
அந்த உருவம் நின்றதையே பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டவரோ “உன் மனசுல என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க பாலா…” என்று ரேவதி கேட்க, இவ்வளவு நேரம் திரும்பியே நின்றிருந்த பாலா என்ற பாலசக்தி என்ற பெயர் கொண்ட அந்த உருவமோ தன் தாய் கேட்டதில் அவர் பக்கம் திரும்பி தான் இவ்வளவு நேரம் அணிந்திருந்த கேப் மற்றும் மாஸ்க்கை கழட்டி விட்டு இவ்வளவு நேரம் கேப்பிற்குள் அடக்கி வைத்திருந்த கூந்தல் முகத்தை வந்து மறைக்க அதை விளக்கிய வண்ணம் “என்னை என்ன நினைக்க சொல்றீங்க…” என்று எகத்தாலமாக கேட்டாள்..
அதில் எரிச்சல் வந்தாலும் இப்போது அதை காட்டினால் தன் காரியம் கெட்டு விடும் என்பதை நன்றாக புரிந்திருந்தவர் தனக்குள் பொறுமையை வரவழைத்துக் கொண்டு “எப்போ தான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்க டி…” என்று கேட்க,
அவர் அப்படிக் கேட்டதுமே கண்களுக்குள் ஒரு முறை இன்று சிக்னலில் பார்த்த குழந்தையை கையில் ஏந்திய அந்த நபர் வந்து செல்ல, “எனக்கு எப்போ தோணுதோ அப்போ பண்ணிக்குவேன்…” என்று அமைதியாகவே பதில் வந்தது…
எப்போதுமே திருமணத்தை பற்றி பேசினால் அதை தவிர்த்து விடும் இல்லையென்றால் “உங்களுக்கு வேறு வேலை இருந்தால் அதை பாருங்கள்..” என்று முகத்தில் அடித்தார் போல் பேசி விடும் பாலா இன்று மாற்றி பேசியதை எண்ணி வியந்த ரேவதியோ “யாரையாவது மனசுல நெனச்சிட்டியா… பாலா…” என்று வியப்பு மாறாமல் சரியாக கேட்க, அதில் எரிச்சல் அடைந்த பாலாவோ, தன்னால் முடிந்த மட்டும் தன் தாயை முறைத்து விட்டு தன் அறையை நோக்கி செல்ல திரும்பினாள்..
“அங்கேயே நில்லு பாலா…” என்று மீண்டும் ரேவதி கத்த, இப்போது வெளிப்படையாகவே தன் எரிச்சலை வெளிக்காட்டிய வண்ணம் “உங்களுக்கு என்ன தான் மா… பிரச்சனை…” என்று பதிலுக்கு பாலாவும் கத்த,
“ நீ உன் வாழ்க்கைல என்னதான் பண்ணனும் நினைச்சுகிட்டு இருக்க… உன் வயசுல உள்ள பொண்ணுங்க எல்லாத்துக்குமே கல்யாணம் ஆகி பிள்ளைங்க இருக்காங்க… ஆனால் நீ மட்டும் இப்ப வர கல்யாணம் பண்ணாமலயே சுத்துற… என்ன தான் டி உன் மனசுல நினைச்சுகிட்டு இருக்க…”என்று ரேவதி மனது ஆற்றாமல் கேட்டு விட,
“ மா நான் இருக்கும் தொழில்ல நீங்க நினைக்கிற மாதிரி கல்யாணம் எல்லாம் பண்ணா என்ன சுத்தி உள்ளவங்க எல்லாருமே பாதிப்பாங்க மா… அதனாலதான் நான் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறேன்…” என்று தன் தாய்க்கு தன் நிலையை புரிய வைக்க முயல,
அவரோ “ லூசு மாதிரி பேசாத பாலா உங்க அப்பாவும் உன்னை மாதிரி தான் இருந்தாங்க… அவங்க என்னை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இல்லையா…” என்று ரேவதி கூற,
பாலாவோ “ அதனால தான் அப்பா நம்மளை விட்டு வேகமாக போயிட்டாங்க.. “ என்று நக்கல் அடித்த பாலாவை கண்டு தன்னால் முடிந்த மட்டும் முறைத்தார் ரேவதி…
“இப்போ கடைசியா நீ என்ன தான் டி சொல்ல வர…” என்று மீண்டும் அவள் திருமணத்திலேயே வந்து நிற்க, “பாப்போம்…” என்று எப்போதும் போல் பிடி கொடுக்காமல் மாடி ஏறினாள்..
செல்லும் அவள் முதுகின் பின்னேயோ “உனக்கு ஒரு மாசம் டைம் தாரேன்…. அதுக்குள்ளே கல்யாணம் பண்ணு… இல்லாட்டி நானும் உங்க அப்பா போன இடத்துக்கே போயிருவேன்…நான் விளையாட்டிற்கு சொல்றேன்னு நினைக்காத டி…” என்று தன் கடைசி ஆயுதத்தை கனகச்சிதமாக எறிய, தன் அறையை நோக்கி மாடி ஏறிய கால்களோ ஒரு நிமிடம் நின்று பின் மீண்டும் தொடர்ந்தது… செல்லும் அவளையே ‘எப்படி இருந்த பெண் இப்படி ஆகி விட்டாலே..’ என்று கண்களில் சொல்ல முடியா வேதனையுடன் பார்த்திருந்தார் ரேவதி…
-தொடரும்


ஊருக்கு வெளியே சில மைல்கள் தள்ளியிருந்த அந்த காட்டின் நடுவில் அமைந்திருந்தது வெள்ளை நிற அழகிய மாளிகை ஒன்று… அந்த மாளிகை முழுவதையுமே வெள்ளை நிற மார்பிலை வைத்து மட்டுமே கட்டி இருப்பர் போலும்… காட்டிற்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு மாளிகை இருக்கிறதென்று சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்… அப்படிப்பட்ட மாளிகை இப்போது ஒரே ஒருவரால் அதுவும் அவரின் தீய செயல்களுக்காக மட்டுமே உதவிக் கொண்டிருக்கிறது… மாளிகையின் உள்ளே இரண்டு மூன்று குடும்பம் தங்கும் படி வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் ஒருவர் மட்டுமே இப்போதும் வசித்துக் கொண்டிருன்கிறார்… அதுவும் தன் வேலை ஆட்களுடன்… அந்த மாளிகைக்கு கீழே பேஸ்ட்மென்ட் போல் அமைதிருக்க அதில் உள்ள சில அறைகளில் ஒரு அறையின் நடுவில் ஒருவன் தலை கீழாக தொங்கவிடப்பட்டிருக்க இவ்வளவு நேரம் அவனை அடித்து துவைத்த அடியாட்கள் இப்போது தான் நிறுத்தி விட்டு, அவனை சுற்றி தாங்கள் உபயோகப் படுத்திய கட்டையுடன் தன் தலைவரிடம் இருந்து கட்டளை வருவதற்காக காத்திருந்தனர்.
அவர்களுக்கு எதிரே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு தன் முன்னே தொங்கிக் கொண்டிருந்தவனையே கனல் பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். தலையில் கேப் முகத்தில் மாஸ்க் அணிந்து கண்களில் கூலர்ஸ் அணிந்து இருந்தவரின் முகத்தை யாராலும் பார்க்க முடியா வண்ணம் இருந்தது.... தன் அருகில் நின்றிருந்த தன் பி.எ வான குகனை, கூலர்சை கழட்டிய வண்ணம் ‘அடுத்து என்ன செய்ய வேண்டும்’ என்பது போல் தன் கனல் விழிகளால் காண, அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் தன் கை சட்டையை முழங்கை வரை ஏற்றிய வண்ணம் தொங்கிக் கொண்டிருந்தவனின் வயிற்றிலேயே ஒரு குத்து விட, அவனோ வலியில் கதறி விட்டான் பாவம்...
அதை எல்லாம் கண்டு கொள்ளாதவனோ “உண்மையை சொல்லு… யாரு டா.. உன்னை இங்க அனுப்புனா…” என்று மிரட்ட, அவனோ கண்களில் பயம் அப்பட்டமாக தெரிய நாற்காலியில் அமர்ந்திருந்த நபரை தான் கண்டான்.
நாற்காலியில் அரிமாக்கே ஈடு அளிக்கும் வண்ணம் அமர்ந்திருந்த அந்த உருவமோ தன் கனல் பார்வையுடனே அவனை எரித்துக் கொண்டிருக்க, அவனின் பயமோ இன்னும் எகிறியது… இப்போது பி.எவோ மீண்டும் ஒரு அறை விட, “எ…என்…என்னை…யாரும்…அனுப்பல…”என்று பயத்தில் திக்கி திணறி வார்த்தைகளை வெளியிட, இவ்வளவு நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவமோ கொஞ்சமும் யோசிக்காமல் இத்தனை நேரம் தன் கையில் சுழன்று கொண்டிருந்த துப்பாக்கியை நிமிர்த்தி அவன் நெற்றி பொட்டிலேயே சுட்டது.
அங்கிருந்த அனைவருமே இப்போது நடந்த காட்சியையும் சுட்டவரையும் அதிர்ச்சியுடன் காண, அதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த உருவமோ “கிளியர் திஸ்…” என்ற சொல்லோடு தன் காரை நோக்கி செல்ல எத்தனிக்க,
அவ்வளவு நேரம் அடியாட்களுடன் சேர்ந்து அவனை அடித்துக் கொண்டிருந்த ஒருவன் திடீர் என்று அந்த உருவத்தை கொன்று விடும் நோக்கொடு பின்னால் இருந்து அறிவாளுடன் வேகமாக அருகில் செல்ல, அந்நேரம் கேப் சரிந்து விட்ட படியால் அதை சரி செய்து கொண்டே திரும்பி பார்க்கும் நேரத்தில் அவன் கையில் இருந்த அறிவாள் அந்த உருவாத்தின் கழுத்து வரை சென்றிருக்க, கன நேரத்தில் தன் உடலை பின்னோக்கி சரித்த அந்த உருவம், தன் கையில் இருந்த துப்பாக்கியை மற்றொரு முறை உபயோகிக்க இன்னொரு உயிரும் மிகச் சாதாரணமாக அவர் கையால் பிரிந்தது… இது அனைத்தும் கன நேரத்தில் நிகழ்ந்து விட்ட படியால் மற்றவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை… வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்…
மீண்டும் தன் கூலர்சை கழட்டி தன் பி. எ வை தன்னால் முடிந்த மட்டும் அந்த உருவம் முறைக்க, அந்த பி. எ வோ பம்மிக் கொண்டு நின்றான்… அவனின் பம்மளில் எரிச்சல் அடைந்த அந்த உருவாமோ எதுவும் சொல்லாமல் இப்போது அந்த மாளிகையை விட்டு வெளியே சென்று விட்டது.
“அய்யோஓஒ… நாசமா போறவங்க… இவங்க கிட்ட என்ன மாட்டி விட்டுட்டு விளையாட்டு காட்டுறதையே ஒரு வேலையா வெச்சிருக்காங்க… இவங்கள பத்தி தெரிஞ்சா பொத்திக்கிட்டு இருக்க வேண்டியது தான… அத விட்டுட்டு எதையாவது செஞ்சி வெச்சி தொலஞ்சிறாங்க… அப்பறம் இவங்க எனக்கு தான் ஆப்பு வைக்காங்க….அய்யோ… இன்னைக்கு சாயங்காலம் ஆபீஸ்ல என்ன என்ன ஆட்டம் ஆட போடாறாங்களோ தெரியலையே… “ என்று மனதுக்குள் தங்கள் எதிரிகளை நினைத்து திட்டிக் கொண்டவனுக்கு தன் மேல் அதிகாரியை நினைத்து பயமாகவும் இருந்தது… அதை புறம் தள்ளியவன் மற்றவர்களுக்கு அடுத்து செய்ய வேண்டிய வேலையை ஏவி விட்டு தன் காரை எடுத்துக் கொண்டு தான் வேலை செய்யும் அலுவலகத்தை நோக்கி பறந்தான்….
தன் பி. எ வை முறைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையில் சிக்னல் விழுந்து விட எரிச்சலுடன் காரை நிறுத்திய அந்த உருவமோ வானொலியை இயக்கி விட்டு சாலையையே வெறிக்க அந்நேரம் அந்த சாலையை கடந்த ஒரு காட்சியோ அந்த உருவத்தின் கவனத்தை ஈர்த்தது…
வெள்ளை நிற சட்டையும் ப்ளூ வண்ண ஜீன்ஸ்ஸும் அணிந்து, கையில் ஒரு வெள்ளை நிற பிராக் அணிந்த ஐந்து வயது பெண் குழந்தையை ஏந்திய வண்ணம் அதனுடன் பேசிக் கொண்டும் அக்குழந்தையை காற்றில் ஆட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டும் முகம் கொள்ளா புன்னகையுடன் சாலையை கடக்கும் அந்த நபர் தான் அந்த உருவத்தின் கவனத்தை ஈர்த்ததற்கான காரணம்…
அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் சாலையில் பச்சை வண்ண சிக்னல் விழுந்து விடவும் அவர்களை இறுதியாக ஒரு முறை பார்த்த அந்த உருவம் தன் காரை இயக்கிக் கொண்டு நேராக தன் இல்லத்தை நோக்கி பறந்தது…
தன் வீட்டின் முன்னே சென்று காரை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, அங்கு சோபாவில் அமர்ந்திருந்த தன் தாய் ரேவதியைக் கண்டு எரிச்சல் வந்தாலும் அதை வெளிக் காண்பித்து கொள்ளாமல் அமைதியாக தன் அறையை நோக்கி செல்வதற்காக மாடி ஏற எத்தனிக்க,
“அங்கேயே நில்லு…” என்ற அவரின் கனீர் குரலில் கால்கள் தன்னாலேயே நின்று விட்டது… ஆனால் குரல் வந்த திசையை நோக்கி திரும்பவில்லை… அமைதியாகவே நின்றிருந்தது அந்த உருவம்…
அந்த உருவம் நின்றதையே பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டவரோ “உன் மனசுல என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க பாலா…” என்று ரேவதி கேட்க, இவ்வளவு நேரம் திரும்பியே நின்றிருந்த பாலா என்ற பாலசக்தி என்ற பெயர் கொண்ட அந்த உருவமோ தன் தாய் கேட்டதில் அவர் பக்கம் திரும்பி தான் இவ்வளவு நேரம் அணிந்திருந்த கேப் மற்றும் மாஸ்க்கை கழட்டி விட்டு இவ்வளவு நேரம் கேப்பிற்குள் அடக்கி வைத்திருந்த கூந்தல் முகத்தை வந்து மறைக்க அதை விளக்கிய வண்ணம் “என்னை என்ன நினைக்க சொல்றீங்க…” என்று எகத்தாலமாக கேட்டாள்..
அதில் எரிச்சல் வந்தாலும் இப்போது அதை காட்டினால் தன் காரியம் கெட்டு விடும் என்பதை நன்றாக புரிந்திருந்தவர் தனக்குள் பொறுமையை வரவழைத்துக் கொண்டு “எப்போ தான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்க டி…” என்று கேட்க,
அவர் அப்படிக் கேட்டதுமே கண்களுக்குள் ஒரு முறை இன்று சிக்னலில் பார்த்த குழந்தையை கையில் ஏந்திய அந்த நபர் வந்து செல்ல, “எனக்கு எப்போ தோணுதோ அப்போ பண்ணிக்குவேன்…” என்று அமைதியாகவே பதில் வந்தது…
எப்போதுமே திருமணத்தை பற்றி பேசினால் அதை தவிர்த்து விடும் இல்லையென்றால் “உங்களுக்கு வேறு வேலை இருந்தால் அதை பாருங்கள்..” என்று முகத்தில் அடித்தார் போல் பேசி விடும் பாலா இன்று மாற்றி பேசியதை எண்ணி வியந்த ரேவதியோ “யாரையாவது மனசுல நெனச்சிட்டியா… பாலா…” என்று வியப்பு மாறாமல் சரியாக கேட்க, அதில் எரிச்சல் அடைந்த பாலாவோ, தன்னால் முடிந்த மட்டும் தன் தாயை முறைத்து விட்டு தன் அறையை நோக்கி செல்ல திரும்பினாள்..
“அங்கேயே நில்லு பாலா…” என்று மீண்டும் ரேவதி கத்த, இப்போது வெளிப்படையாகவே தன் எரிச்சலை வெளிக்காட்டிய வண்ணம் “உங்களுக்கு என்ன தான் மா… பிரச்சனை…” என்று பதிலுக்கு பாலாவும் கத்த,
“ நீ உன் வாழ்க்கைல என்னதான் பண்ணனும் நினைச்சுகிட்டு இருக்க… உன் வயசுல உள்ள பொண்ணுங்க எல்லாத்துக்குமே கல்யாணம் ஆகி பிள்ளைங்க இருக்காங்க… ஆனால் நீ மட்டும் இப்ப வர கல்யாணம் பண்ணாமலயே சுத்துற… என்ன தான் டி உன் மனசுல நினைச்சுகிட்டு இருக்க…”என்று ரேவதி மனது ஆற்றாமல் கேட்டு விட,
“ மா நான் இருக்கும் தொழில்ல நீங்க நினைக்கிற மாதிரி கல்யாணம் எல்லாம் பண்ணா என்ன சுத்தி உள்ளவங்க எல்லாருமே பாதிப்பாங்க மா… அதனாலதான் நான் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறேன்…” என்று தன் தாய்க்கு தன் நிலையை புரிய வைக்க முயல,
அவரோ “ லூசு மாதிரி பேசாத பாலா உங்க அப்பாவும் உன்னை மாதிரி தான் இருந்தாங்க… அவங்க என்னை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இல்லையா…” என்று ரேவதி கூற,
பாலாவோ “ அதனால தான் அப்பா நம்மளை விட்டு வேகமாக போயிட்டாங்க.. “ என்று நக்கல் அடித்த பாலாவை கண்டு தன்னால் முடிந்த மட்டும் முறைத்தார் ரேவதி…
“இப்போ கடைசியா நீ என்ன தான் டி சொல்ல வர…” என்று மீண்டும் அவள் திருமணத்திலேயே வந்து நிற்க, “பாப்போம்…” என்று எப்போதும் போல் பிடி கொடுக்காமல் மாடி ஏறினாள்..
செல்லும் அவள் முதுகின் பின்னேயோ “உனக்கு ஒரு மாசம் டைம் தாரேன்…. அதுக்குள்ளே கல்யாணம் பண்ணு… இல்லாட்டி நானும் உங்க அப்பா போன இடத்துக்கே போயிருவேன்…நான் விளையாட்டிற்கு சொல்றேன்னு நினைக்காத டி…” என்று தன் கடைசி ஆயுதத்தை கனகச்சிதமாக எறிய, தன் அறையை நோக்கி மாடி ஏறிய கால்களோ ஒரு நிமிடம் நின்று பின் மீண்டும் தொடர்ந்தது… செல்லும் அவளையே ‘எப்படி இருந்த பெண் இப்படி ஆகி விட்டாலே..’ என்று கண்களில் சொல்ல முடியா வேதனையுடன் பார்த்திருந்தார் ரேவதி…
-தொடரும்


