• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அகானா - 30

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 30

“என்ன… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.?” என்ற மகிழினியைப் பார்த்து, “உங்க அப்பா பயந்துட்டார் போல, உன் அண்ணனுக்கும், உங்க மாமாவுக்கும் சொல்லிருப்பார் போல. இப்போ அவங்களும் வந்துட்டு இருக்காங்க. அப்புறம் சீனியர் ப்ரெஸ்க்கு சொல்லி வச்சிருக்கார். அவங்களும் வராங்க..” என அமைதியாக சொல்ல,

“ஹோ… இப்போ என்ன பண்றது? நீங்கதான் செஞ்சீங்கன்னு தெரிஞ்சா என்ன செய்வாங்க..?” என்றவள் ஆரியனின் முறைப்பில் அமைதியாகி விட,

“நான் என்ன செஞ்சேன்.?” என மீண்டும் முறைக்க,

“நீங்க ஒன்னும் செய்யலதான்..” என இழுக்க,

“ம்ச் டபுள் மீனிங்கு.. ஆளையும் சைசையும் பாரு.. வாயிலயே நாலு போட்டா சரியா போகும்..” என மகியைத் திட்டியவன் “அவங்களை நீயே சமாளி.. சீனியர் என்னை பேசினா அமைதியா இருப்பேன். ஆனா அகியை இழுத்து பேசினா நான் சும்மா இருக்கமாட்டேன்..” என இறுக்கமான குரலில் கூற, அந்த குரலில் அமைதியாகிவிட்டாள் மகிழினி.

அகானா சென்ற அரை மணி நேரத்திலேயே சங்கர் அங்கு வந்துவிட்டார். கதவைத் திறந்த ஆர்யனைப் பார்த்ததும் குழப்பத்துடன் உள்ளே வர, “ப்பா..” என்ற மகியின் குரலில் அவளைப் பார்த்தார்.

“பாப்பா.. என்னடா இங்க? என்னாச்சு? இங்க எப்படி வந்த?” என வரிசையாக கேள்வி கேட்டாலும், மகளை வேகமாக பார்வையால் அளந்தார் சங்கர்.

கை கால்களில் உண்டான சிராய்ப்பு, தலையில் போட்டிருந்த கட்டைப் பார்த்து ஏதோ விபத்து என்பது வரை தெரிந்து கொண்டார்.

“ப்பா.. ப்பா..” என்றவள் சிறிது நேரம் அவர் அனைப்பிலேயே இருக்க,

“உட்காருங்க அங்கிள்..” என்ற ஆர்யனின் பேச்சில்தான் நிதானம் வந்தனர் இருவரும்.

அப்போது அந்த மெய்ட் காஃபி எடுத்து வர, “காபி எடுத்துக்கோங்க அங்கிள்..” என்றான் மீண்டும்.

‘என்ன நடந்ததுனு தெரியாம எப்படி.?’ என்ற யோசனையோடு மகளைப் பார்க்க, அவர் கேள்வி புரிந்தது போல அன்று நடந்ததை மகி கூற, கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், மகளை நல்ல முறையில் பார்த்துக் கொண்டார்களே என்று சற்று ஆசுவாசமும் வந்தது.

“மூனு நாளா கண் விழிக்கல அங்கிள்.. முதல்ல யாருன்னு தெரியல… தெரிஞ்ச பிறகாவது சொல்லிருக்கனும், பட்..” என நிறுத்த,

அது அகியின் வேலை என்பது தெரிய ‘புரியுது’ என்பது போல் தலையாட்டினார்.

“இதனால நீங்க அகியை தப்பா நினைக்கக்கூடாது..” என்றதும், ‘இல்லை’ என்பது போலும் தலையை ஆட்டினார்.

மீண்டும் மகள் மீது பார்வையை பதிக்க, “இப்போ அவங்க ஓக்கேதான். கொஞ்ச நாள் வெளிய எங்கேயும் அனுப்பாம பார்த்துக்கோங்க.. காலேஜ் கூட இப்போ அனுப்பாதீங்க..” என்று ஆரியன் பேசிக்கொண்டிருக்கும் போதே வேகமாக உள்ளே வந்தான் ஆகன்.

வந்தவன் அங்கு ஆர்யனைப் பார்த்ததும் அனைத்தும் புரிய, சற்றும் யோசிக்காமல் அவன் மீது பாய்ந்திருந்தான்.

“கண்ணா.. நிறுத்து.. நிறுத்து..” என்ற சங்கரின் சத்தம் அவன் காதிலேயே விழவில்லை.

ஆர்யன் அவனைத் திருப்பி அடிக்கும் எந்த செயலையும் செய்யாமல், ஆகன் அடித்ததை வாங்கிக்கொண்டு அமைதியாகவே நின்றான்.

அதை கவனித்த மகி “போதும் நிறுத்து ண்ணா..” என ஓங்கி கத்த, அந்த சத்தத்தில் தான் ஆகன் நிதானத்திற்கு வந்தான். அப்போதும் கூட ஆர்யனின் சட்டையைப் பிடித்து “எவ்வளவு தைரியம்டா உனக்கு, என் வீட்டு பொண்ணு மேல கைவைக்க..” என மீண்டும் அடிக்க பாய,

“இதையே நானும் திருப்பி கேட்கலாம்..” என்றபடியே உள்ளே வந்தாள் அகானா.

அவளைப் பார்த்ததும் சட்டென ஆகனிடமிருந்து வெளிவந்த ஆர்யன் “ம்ச்.. உன்னை இங்க இருந்து போகத்தான சொன்னேன். இங்க என்ன பண்ற.. கிளம்பு.. முதல்ல கிளம்பு அகி..” என அவளை அவசரப்படுத்த,

“வாயை மூடு..” என ஆத்திரமாக கத்தியவள், ஆரியனின் அடிபட்ட முகத்தைப் பார்த்து அழுகை வந்துவிட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நேராக மகிழினியிடம் வந்து “என்ன நடந்ததுன்னு உங்க வீட்டு ஆளுங்ககிட்ட சொல்லலயா நீ..” என ஆக்ரோசாமாக கேட்க, அரண்டு விழித்தாள் மகி.

அகானாவின் அந்த ஆக்ரோசத்தில் சங்கரே ஒரு நிமிடம் திகைத்து போனார் என்றால், ஆகனை சொல்லவே வேண்டாம்.

“உங்கிட்ட நான் எத்தன தடவை கேட்டிருப்பேன். சொல்லிருக்கலாம்ல.. எவ்ளோ ப்ரெஸர். ஸ்ட்ரெஸ்..” என ஆரியனிடம் கேட்ட ஆகனுக்கு முன்னிருந்த குரல் இப்போது இல்லை.

“ஏன் சொல்லனும்.?” என அகானா பட்டென கேட்க, ஆகன் அவளைத் தீர்க்கமாக பார்த்தான்.

“ஏன்னா… அவளுக்கு பெத்தவங்க இருக்காங்க. கூட பிறந்தவன் இருக்கேன். காணோம்னா நாங்க பதறுவோம். என்ன நடந்ததோன்னு கவலைப் படுவோம்..” என பற்களைக் கடித்து கூற,

“அப்போ எனக்கு யாரும் இல்லன்னு சொல்லி காட்டுறீங்களா..?” என நிதானமாக கேட்க,

“ஷிட்..” என தலையை ஆட்டியவன் “உனக்கே எல்லாம் புரியும்.. குதர்க்கமா பேசனும்னு எதையும் பேசாத அம்மு..” என எரிச்சலாக கூற,

“டோன்ட் கால் மீ அம்மு.. அகானா.. ஜஸ்ட் கால் மீ அகானா ரைட்..” என்றவளின் குரலில் இருந்த கோபத்தில், ஆரியன் அவள் கையைப் பிடித்து அழுத்தினான்.

“நத்திங்க்.. ஐம் ஆல் ரைட்.” என அண்ணனுக்கு சமாதானம் செய்தவள், மகிழினியைக் காட்டி “கூட்டிட்டு கிளம்புங்க..” என்றாள் ஆணையாக.

அப்போது வினோத்தும் அவன் அழைத்து வந்த பத்திரிக்கையாளரும் உள்ளே வர, ஆர்யனுக்கு பதட்டமாகிவிட, அகானாவை மறைத்து நின்றான்.

உள்ளே வந்த வினோதிற்கு நொடியில் அனைத்தும் புரிந்துவிட, “என்ன கண்ணா நீ.?” என ஆகனை முறைத்தவர் “உனக்கு நான் எத்தனை போன் பண்ணேன்.. எடுத்து சொல்லிருக்கலாம்ல..” என ஆயாசமாக கூற, அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் அனைவருக்கும் உண்டானது.

வந்திருந்த பத்திரிக்கையாளரிடம் என்ன சொல்லி சமாளிக்க என யோசித்துக் கொண்டிருந்த நேரம், “அப்போ என் பொண்ணை இவதான் கடத்தி வச்சிருக்கா, அப்படித்தானே? ஆனா வெளிய ரொம்ப நல்லவ மாதிரி வேசம் போட்டு ஏமாத்திருக்கா?” என ரஞ்சனி ஆவேசமாக பேசுவதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து வாசலைப் பார்த்தனர்.

‘அய்யோ’ என ஆகன் தலையில் கைவைக்க, “அக்கா நீ கொஞ்சம் சும்மா இரு..?” என வினோத் அதட்ட,

“நீ ஏன் இங்க வந்த? எப்படி வந்த?” என சங்கரும் மனைவியை அதட்ட,

“எப்படியோ வந்தேன்.. வந்ததுனாலத்தான இவளோட புத்தி தெரிஞ்சிருக்கு. ஊரெல்லாம் நல்லவ மாதிரி வேசம் போட்டுட்டு, இங்க வந்து என்ன வேலை செஞ்சிருக்கா பாருங்க. ஆம்பளைங்கள ஏமாத்தி பொழைக்கிறது இவங்களுக்கு தான் கைவைந்த கலையாச்சே. அதான் உங்க எல்லாரையும் ஏமாத்தி மயக்கி வச்சிருக்கா.?” என பேசி முடிக்கும் முன்னே,

“என்ன பேசுறீங்க.?” என ஆர்யன் ரஞ்சனியை அடிப்பது போல் வர, அதைக் கண்ட ஆகன் “டேய் என்ன பண்ற..” என அவனைத் தடுத்து கீழ தள்ள, மகிழினி வந்து அவனைப் பிடித்துக் கொண்டாள்.

“அவங்க அவ்ளோ பேசுறாங்க. அதை கேட்காம என்னை தடுக்குறீங்க.” என ஆர்யன் கேட்க,

“அவங்க என் அம்மா. அவங்களை நீ அடிக்கிற மாதிரி போவ, அதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமா? அவங்க என்ன இல்லாததையா சொன்னாங்க..” என்ற ஆகனை வெறித்துப் பார்த்தான் ஆரியன்.

“கண்ணா என்ன பேசுற நீ..?” என வினோத் அதட்ட, சங்கரோ மகனை ‘நீயா.?’ என்பது போல் பார்த்தார்.

அப்போதுதான் அவன் சொன்னது உரைக்க, “ஆரி நான்..” என ஏதோ சமாதானம் செய்ய வர,

“அவங்க உங்க அம்மா.. அப்போ இவ யாரு…?” என அகானாவைக் காட்டி நிதானமாக கேட்க,

“ஸ்டாப்பிட் ஆரி..” என கிட்டத்தட்ட கத்தவே செய்தாள் அகானா..

அவளுக்கு இந்த பேச்சுக்களில் விருப்பமில்லை. அதோடு ஆகனை அவளுக்கு எப்போதும் வேண்டாம். அப்படியிருக்க இந்த பேச்சை தடை செய்யவே விரும்பினாள்.

ஆனால் அதற்கு ஆரியன் விட வேண்டுமே.!

“நீ வாயை மூடு..” என அவளுக்கு மேல கத்திய ஆர்யன் “நீங்க சொல்லுங்க. இவ யாரு உங்களுக்கு.?” என்றவன், “அகி அப்பவே சொன்னா அவங்க குடும்பமா நானான்னு வரும்போது உங்களுக்கு உங்க குடும்பம்தான் முக்கியம்னு முடிவெடுப்பீங்கன்னு சொன்னா, ஆனா நான்தான் சீனியர் அப்படியெல்லாம் இல்லன்னு நம்பிக்கையா சொன்னேன்..” என்றவன்,

சங்கரைப் பார்த்து “உங்க பொண்ணை காப்பாத்தி பத்திரமா பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நல்ல பட்டம் கொடுத்துருக்கீங்க..” என்றவன் “உங்க பொண்ணை கூப்பிட்டு கிளம்புங்க ப்ளீச்..” என்றான் கையெடுத்து கும்பிட்டு.

“ஆரி நான் சொல்றதை கேளு.. நான் அந்த மீனிங்க்ல சொல்லலடா.. புரிஞ்சிக்கோ ப்ளீஸ்..” என ஆகன் சொல்ல வர,

“கண்ணா என்ன நடக்குது இங்க? இவன் என்ன சொல்ல வர்ரான்.? இவளை உனக்கு முன்னாடியே தெரியுமா? அவளுக்கும் உனக்கும் பழக்கமா.?” என வரிசையாக கேள்வி கேட்டு, “அப்போ நான் சொன்னது சரிதானே.. இவ என் பையனை மயக்கி வச்சிருக்கா.. அப்படித்தானே..” என ஆக்ரோசமாக கேட்க, மனைவியை அறைந்திருந்தார் சங்கரன்.

“ப்பா.. மாமா..” என ஆகனும், வினோத்தும் வர, மகனைப் பார்த்தவர் “உங்கிட்ட இருந்து நான் இப்படி ஒரு வார்த்தைகளை எதிர்பார்க்கல. என்னதான் நான் உனக்கு சொல்லி சொல்லி வளர்த்தாலும் உன் அம்மா புத்தி உனக்கு வரத்தான செய்யும். அதை மறந்துட்டேன் பாரு..” என கடுமையாக சாடியவர், அகானாவிடம் வந்தார்.

“அம்மு..” என்றதும் பட்டென முகத்தை திருப்பியவள் “ஸாரி.. நீங்க இப்படியெல்லாம் என்னை கூப்பிடாதீங்க ப்ளீஸ். அன்ட் என்னை மன்னிச்சிடுங்க. இப்போ உங்க ஃபேமிலியை கூப்பிட்டு கிளம்புங்க. வேற எதுவும் பேச வேண்டாம். அதை கேட்குற மூட்ல நான் இல்ல..” என குரல் உடைய பேசியவளைப் பார்த்து ஆகனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போல் வலித்தது.

அவளின் கசங்கிய முகம், அவளின் உடைந்த குரல் அவனையும் நிலையிழக்க செய்ய, யாரையும் யோசிக்காமல், அகானாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்த அறைக்குள் நுழைந்து விட்டான்.

“ஏய் விடு.. விடுடா..” என்ற எந்த திமிறலையும் கண்டு கொள்ளமல் உள்ளே விட்டு கதவைச் சாற்ற, சங்கரும், வினோத்தும் ஆயாசமாக தலையில் கை வைத்து அமர, ரஞ்சனிதான் தாம் தூமென்று குதித்துக் கொண்டிருந்தார்.

‘இவளுக்கும், இவ அம்மாவுக்கும் இதே வேலைதானா? என் குடும்பத்தை கெடுக்கனே வந்துருக்காளுங்க.. அய்யோ இதை நான் எங்க போய் சொல்லுவேன்..’ என கத்திக் கொண்டிருக்க, அதை கேட்கத்தான் யாரும் தயாராக இல்லை.

அதையும் புலம்பியபடியே இருந்த ரஞ்சனி அப்போதுதான் மகளைக் கவனித்தார். அவளிடம் ஏதோ ஒரு மாற்றம். என்ன? என ஆராய்ந்தவரின் பார்வை அவள் கழுத்தில் நிலைக்க, “மகி என்னடி பண்ணிருக்க?” என கத்தியபடியே அவளிடம் வேகமாக வர, அவளோ ஆரியனின் பின் நிற்க, வினோத்தும் சங்கரும் கூட அப்போதுதான் மகிழினியை கூர்மையாக கவனிக்க, அவர்களுக்கும் வித்தியாசம் புரிய அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.