மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரசியல் கண்ணோட்டம்
கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான உண்டிவ் வுலகு. (௫௱௭௧ - 571)
'கண்ணோட்டம்' என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான் (௫௱௭௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருப்பதற்கான காரணம் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது. (௫௱௭௧)
-மு. வரதராசன்
முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது. (௫௱௭௧)
—சாலமன் பாப்பையா
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது (௫௱௭௰௧)
-மு. கருணாநிதி
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. (௫௱௭௨ - 572)
உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே; ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான் (௫௱௭௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை. (௫௱௭௨)
-மு. வரதராசன்
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே. (௫௱௭௨)
—சாலமன் பாப்பையா
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள் (௫௱௭௰௨)
-மு. கருணாநிதி
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். (௫௱௭௰௩ - 573)
பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அது போலவே, கண்ணோட்டத்தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை (௫௱௭௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்றால் பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்பது பயனுடையதாகும். (௫௱௭௰௩)
-மு. வரதராசன்
பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்? (௫௱௭௰௩)
—சாலமன் பாப்பையா
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும் (௫௱௭௰௩)
-மு. கருணாநிதி
உளபோல் முகத்தேவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். (௫௱௭௪ - 574)
தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்? (௫௱௭௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும். (௫௱௭௪)
-மு. வரதராசன்
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன்? (௫௱௭௪)
—சாலமன் பாப்பையா
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும் (௫௱௭௪)
-மு. கருணாநிதி
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். (௫௱௭௫ - 575)
கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது 'புண்' என்றே சான்றோரால் கருதப்படும் (௫௱௭௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும். (௫௱௭௫)
-மு. வரதராசன்
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும். (௫௱௭௫)
—சாலமன் பாப்பையா
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண் (௫௱௭௰௫)
-மு. கருணாநிதி
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் நோட தவர். (௫௱௭௬ - 576)
கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் அவர் (௫௱௭௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கண்ணோட்டத்திற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர். (௫௱௭௬)
-மு. வரதராசன்
கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே. (௫௱௭௬)
—சாலமன் பாப்பையா
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார் (௫௱௭௰௬)
-மு. கருணாநிதி
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (௫௭௭ - 577)
கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே; கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை (௫௱௭௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே அவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்ல திருத்தலும் இல்லை. (௫௱௭௰௭)
-மு. வரதராசன்
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை. (௫௱௭௰௭)
—சாலமன் பாப்பையா
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள் (௫௱௭௰௭)
-மு. கருணாநிதி
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. (௫௱௭௮ - 578)
தொழிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும் (௫௱௭௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது. (௫௱௭௮)
-மு. வரதராசன்
தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும். (௫௱௭௮)
—சாலமன் பாப்பையா
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும் (௫௱௭௰௮)
-மு. கருணாநிதி
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் நொடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (௫௱௭௯ - 579)
தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும் (௫௱௭௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது. (௫௱௭௰௯)
-மு. வரதராசன்
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.(௫௱௭௰௯)
—சாலமன் பாப்பையா
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும் (௫௱௭௰௯)
-மு. கருணாநிதி
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். (௫௱௮௰ - 580)
விரும்பத்தகுந்த 'கண்ணோட்டம்' என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள், பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள் (௫௱௮௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர். (௫௱௮௰)
-மு. வரதராசன்
எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர். (௫௱௮௰)
—சாலமன் பாப்பையா
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள் (௫௱௮௰)
-மு. கருணாநிதி.
பொருட்பால்
அரசியல் கண்ணோட்டம்
கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான உண்டிவ் வுலகு. (௫௱௭௧ - 571)
'கண்ணோட்டம்' என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான் (௫௱௭௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருப்பதற்கான காரணம் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது. (௫௱௭௧)
-மு. வரதராசன்
முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது. (௫௱௭௧)
—சாலமன் பாப்பையா
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது (௫௱௭௰௧)
-மு. கருணாநிதி
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. (௫௱௭௨ - 572)
உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே; ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான் (௫௱௭௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை. (௫௱௭௨)
-மு. வரதராசன்
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே. (௫௱௭௨)
—சாலமன் பாப்பையா
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள் (௫௱௭௰௨)
-மு. கருணாநிதி
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். (௫௱௭௰௩ - 573)
பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அது போலவே, கண்ணோட்டத்தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை (௫௱௭௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்றால் பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்பது பயனுடையதாகும். (௫௱௭௰௩)
-மு. வரதராசன்
பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்? (௫௱௭௰௩)
—சாலமன் பாப்பையா
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும் (௫௱௭௰௩)
-மு. கருணாநிதி
உளபோல் முகத்தேவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். (௫௱௭௪ - 574)
தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்? (௫௱௭௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும். (௫௱௭௪)
-மு. வரதராசன்
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன்? (௫௱௭௪)
—சாலமன் பாப்பையா
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும் (௫௱௭௪)
-மு. கருணாநிதி
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். (௫௱௭௫ - 575)
கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது 'புண்' என்றே சான்றோரால் கருதப்படும் (௫௱௭௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும். (௫௱௭௫)
-மு. வரதராசன்
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும். (௫௱௭௫)
—சாலமன் பாப்பையா
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண் (௫௱௭௰௫)
-மு. கருணாநிதி
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் நோட தவர். (௫௱௭௬ - 576)
கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் அவர் (௫௱௭௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கண்ணோட்டத்திற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர். (௫௱௭௬)
-மு. வரதராசன்
கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே. (௫௱௭௬)
—சாலமன் பாப்பையா
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார் (௫௱௭௰௬)
-மு. கருணாநிதி
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (௫௭௭ - 577)
கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே; கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை (௫௱௭௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே அவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்ல திருத்தலும் இல்லை. (௫௱௭௰௭)
-மு. வரதராசன்
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை. (௫௱௭௰௭)
—சாலமன் பாப்பையா
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள் (௫௱௭௰௭)
-மு. கருணாநிதி
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. (௫௱௭௮ - 578)
தொழிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும் (௫௱௭௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது. (௫௱௭௮)
-மு. வரதராசன்
தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும். (௫௱௭௮)
—சாலமன் பாப்பையா
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும் (௫௱௭௰௮)
-மு. கருணாநிதி
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் நொடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (௫௱௭௯ - 579)
தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும் (௫௱௭௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது. (௫௱௭௰௯)
-மு. வரதராசன்
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.(௫௱௭௰௯)
—சாலமன் பாப்பையா
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும் (௫௱௭௰௯)
-மு. கருணாநிதி
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். (௫௱௮௰ - 580)
விரும்பத்தகுந்த 'கண்ணோட்டம்' என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள், பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள் (௫௱௮௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர். (௫௱௮௰)
-மு. வரதராசன்
எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர். (௫௱௮௰)
—சாலமன் பாப்பையா
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள் (௫௱௮௰)
-மு. கருணாநிதி.