மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரசியல்
ஆள்வினையுடைமை
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (௬௱௰௧ - 611)
இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்கவேண்டும்; இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் (௬௱௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும், (௬௱௰௧)
-மு. வரதராசன்
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும். (௬௱௰௧)
—சாலமன் பாப்பையா
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும் (௬௱௰௧)
-மு. கருணாநிதி
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (௬௦௰௨ - 612)
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும்; ஆதலால், செய்யும் செயலிடத்திலே முயற்சியற்றிருப்பதை விட்டுவிட வேண்டும் (௬௱௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், அதனால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும். (௬௱௰௨)
-மு. வரதராசன்
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும். (௬௱௰௨)
—சாலமன் பாப்பையா
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும் (௬௱௰௨)
-மு. கருணாநிதி
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. (௬௱௰௩ - 613)
'எல்லாருக்கும் உதவி செய்தல்' என்னும் செருக்கானது, விடாத முயற்சி உடையவர்கள் என்னும் பண்பிலேதான் நிலைத்திருப்பது ஆகும் (௬௱௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது. (௬௱௰௩)
-மு. வரதராசன்
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது. (௬௱௰௩)
—சாலமன் பாப்பையா
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும் (௬௱௰௩)
-மு. கருணாநிதி
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். (௬௦௰௪ - 614)
போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும் (௬௱௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாழை எடுக்கும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும். (௬௱௰௪)
-மு. வரதராசன்
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாழைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும். (௬௱௰௪)
—சாலமன் பாப்பையா
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை (௬௱௰௪)
-மு. கருணாநிதி
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். (௬௱௰௫ - 615)
தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான் (௬௱௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான். (௬௱௰௫)
-மு. வரதராசன்
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரதத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான். (௬௱௰௫)
—சாலமன் பாப்பையா
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணவான் (௬௱௰௫)
-மு. கருணாநிதி
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (௬௱௬ - 616)
இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமயோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும் (௬௱௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும். (௬௱௰௬)
-மு. வரதராசன்
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும். (௬௱௰௬)
—சாலமன் பாப்பையா
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் (௬௱௰௬)
-மு. கருணாநிதி
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி நாள். (௬௱௰௭ - 617)
சோம்பல் இல்லாதவனின் முயற்சியிலே தாமரையாளான திருமகள் சென்று வாழ்வாள்; சோம்பலிலே கருநிறம் உடைய மூதேவிதான் சென்று வாழ்வாள் (௬௱௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். (௬௱௰௭)
-மு. வரதராசன்
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர். (௬௱௰௭)
—சாலமன் பாப்பையா
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும் (௬௱௰௭)
-மு. கருணாநிதி
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (௬௱௰௮ - 618)
நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது; அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும் (௬௱௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி. (௬௱௰௮)
-மு. வரதராசன்
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை. (௬௱௰௮)
—சாலமன் பாப்பையா
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும் (௬௱௰௮)
-மு. கருணாநிதி
தெய்வத்தான் ஆக தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (௬௱௰௯ - 619)
தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும் (௬௱௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். (௬௱௰௯)
-மு. வரதராசன்
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும். (௬௱௰௯)
—சாலமன் பாப்பையா
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும் (௬௱௰௯)
-மு. கருணாநிதி
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (௬௨௨ - 620)
சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர் ஆவார்கள் (௬௱௨௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும். (௬௱௨௰)
-மு. வரதராசன்
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர். (௬௱௨௰)
—சாலமன் பாப்பையா
``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள் (௬௱௨௰)
-மு. கருணாநிதி.
பொருட்பால்
அரசியல்
ஆள்வினையுடைமை
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (௬௱௰௧ - 611)
இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்கவேண்டும்; இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் (௬௱௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும், (௬௱௰௧)
-மு. வரதராசன்
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும். (௬௱௰௧)
—சாலமன் பாப்பையா
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும் (௬௱௰௧)
-மு. கருணாநிதி
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (௬௦௰௨ - 612)
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும்; ஆதலால், செய்யும் செயலிடத்திலே முயற்சியற்றிருப்பதை விட்டுவிட வேண்டும் (௬௱௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், அதனால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும். (௬௱௰௨)
-மு. வரதராசன்
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும். (௬௱௰௨)
—சாலமன் பாப்பையா
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும் (௬௱௰௨)
-மு. கருணாநிதி
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. (௬௱௰௩ - 613)
'எல்லாருக்கும் உதவி செய்தல்' என்னும் செருக்கானது, விடாத முயற்சி உடையவர்கள் என்னும் பண்பிலேதான் நிலைத்திருப்பது ஆகும் (௬௱௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது. (௬௱௰௩)
-மு. வரதராசன்
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது. (௬௱௰௩)
—சாலமன் பாப்பையா
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும் (௬௱௰௩)
-மு. கருணாநிதி
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். (௬௦௰௪ - 614)
போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும் (௬௱௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாழை எடுக்கும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும். (௬௱௰௪)
-மு. வரதராசன்
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாழைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும். (௬௱௰௪)
—சாலமன் பாப்பையா
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை (௬௱௰௪)
-மு. கருணாநிதி
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். (௬௱௰௫ - 615)
தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான் (௬௱௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான். (௬௱௰௫)
-மு. வரதராசன்
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரதத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான். (௬௱௰௫)
—சாலமன் பாப்பையா
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணவான் (௬௱௰௫)
-மு. கருணாநிதி
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (௬௱௬ - 616)
இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமயோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும் (௬௱௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும். (௬௱௰௬)
-மு. வரதராசன்
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும். (௬௱௰௬)
—சாலமன் பாப்பையா
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் (௬௱௰௬)
-மு. கருணாநிதி
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி நாள். (௬௱௰௭ - 617)
சோம்பல் இல்லாதவனின் முயற்சியிலே தாமரையாளான திருமகள் சென்று வாழ்வாள்; சோம்பலிலே கருநிறம் உடைய மூதேவிதான் சென்று வாழ்வாள் (௬௱௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். (௬௱௰௭)
-மு. வரதராசன்
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர். (௬௱௰௭)
—சாலமன் பாப்பையா
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும் (௬௱௰௭)
-மு. கருணாநிதி
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (௬௱௰௮ - 618)
நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது; அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும் (௬௱௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி. (௬௱௰௮)
-மு. வரதராசன்
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை. (௬௱௰௮)
—சாலமன் பாப்பையா
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும் (௬௱௰௮)
-மு. கருணாநிதி
தெய்வத்தான் ஆக தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (௬௱௰௯ - 619)
தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும் (௬௱௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். (௬௱௰௯)
-மு. வரதராசன்
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும். (௬௱௰௯)
—சாலமன் பாப்பையா
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும் (௬௱௰௯)
-மு. கருணாநிதி
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (௬௨௨ - 620)
சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர் ஆவார்கள் (௬௱௨௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும். (௬௱௨௰)
-மு. வரதராசன்
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர். (௬௱௨௰)
—சாலமன் பாப்பையா
``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள் (௬௱௨௰)
-மு. கருணாநிதி.