மொழி: இருள் பாணி
முகப்பு பொருட்பால்
அமைச்சியல்
வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (௬௱௬௧ - 661)
மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே; பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆக (௬௱௬௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. (௬௱௬௧)
-மு. வரதராசன்
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்ட. (௬௱௬௧)
—சாலமன் பாப்பையா
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது (௬௱௬௰௧)
-மு. கருணாநிதி
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (௬௬௬௨ - 662)
ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும் (௬௱௬௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கை. (௬௱௬௨)
-மு. வரதராசன்
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர். (௬௱௬௨)
—சாலமன் பாப்பையா
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கை (௬௱௬௨)
-மு. கருணாநிதி
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
ஏற்றா விழுமந் தரும். (௬௱௬௰௩ - 663)
செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும் (௬௱௬௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (௬௱௬௰௩)
-மு. வரதராசன்
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அந்த செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும். (௬௱௬௰௩)
—சாலமன் பாப்பையா
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும் (௬௱௬௰௩)
-மு. கருணாநிதி
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (௬௬௬௪ - 664)
'இதனை இப்படி யிப்படிச் செய்வோம்' என்று சொல்வது எல்லாருக்கும் எளிதாகும்; சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும் (௬௱௬௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். (௬௱௬௰௪)
-மு. வரதராசன்
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்வது எல்லாருக்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம். (௬௱௬௰௪)
—சாலமன் பாப்பையா
சொல்வது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம் (௬௱௬௰௪)
-மு. கருணாநிதி
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். (௬௬௬௫ - 665)
எண்ணத்தாலே சிறந்த மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறமையானது, மன்னன் மனத்திலும் சென்று பதிவதனால், பலராலும் நன்கு மதிக்கப்படும் (௬௱௬௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும். (௬௱௬௫)
-மு. வரதராசன்
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும். (௬௱௬௫)
—சாலமன் பாப்பையா
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும் (௬௱௬௰௫)
-மு. கருணாநிதி
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (௬௱௬௬ - 666)
ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள் (௬௱௬௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். (௬௱௬௰௬)
-மு. வரதராசன்
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார். (௬௱௬௰௬)
—சாலமன் பாப்பையா
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் (௬௱௬௰௬)
-மு. கருணாநிதி
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (௬௱௬௰௭ - 667)
உருளுகின்ற பெரிய தெரு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால் ஒருவரது சிறிதான உருவத்தைப் பார்த்து இகழக் கூடாது (௬௱௬௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய அணிப் போன்றவர்கள் உலகில் உள்ளனர், அவர்களுடைய உருவத்தின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது. (௬௱௬௰௭)
-மு. வரதராசன்
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியார் என்பதால் அவரை இகழக்கூடாது. (௬௱௬௰௭)
—சாலமன் பாப்பையா
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் (௬௱௬௰௭)
-மு. கருணாநிதி
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். (௬௱௬௰௮ - 668)
மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வில்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு விரைவாகச் செய்ய வேண்டும் (௬௱௬௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும். (௬௱௬௰௮)
-மு. வரதராசன்
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க. (௬௱௬௰௮)
—சாலமன் பாப்பையா
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் (௬௱௬௰௮)
-மு. கருணாநிதி
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (௬௱௬௯ - 669)
முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முடிவிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத்துணிவுடனே செய்து முடிக்க வேண்டும் (௬௱௬௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு செய்து முடிக்க வேண்டும். (௬௱௬௰௯)
-மு. வரதராசன்
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க. (௬௱௬௰௯)
—சாலமன் பாப்பையா
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும் (௬௱௬௰௯)
-மு. கருணாநிதி
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. (௬௱௭௰ - 670)
எந்த வகையிலே உறுதி உடையவரானாலும், செய்யும் செயலிலே மனவுறுதி இல்லாதவர்களை உலகம் மதியாது; சிறந்தோராகவும் ஏற்றுக் கொள்ளாது (௬௱௭௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது. (௬௱௭௰)
-மு. வரதராசன்
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார். (௬௱௭௰)
—சாலமன் பாப்பையா
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது (௬௱௭௰)
-மு. கருணாநிதி
முகப்பு பொருட்பால்
அமைச்சியல்
வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (௬௱௬௧ - 661)
மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே; பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆக (௬௱௬௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. (௬௱௬௧)
-மு. வரதராசன்
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்ட. (௬௱௬௧)
—சாலமன் பாப்பையா
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது (௬௱௬௰௧)
-மு. கருணாநிதி
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (௬௬௬௨ - 662)
ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும் (௬௱௬௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கை. (௬௱௬௨)
-மு. வரதராசன்
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர். (௬௱௬௨)
—சாலமன் பாப்பையா
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கை (௬௱௬௨)
-மு. கருணாநிதி
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
ஏற்றா விழுமந் தரும். (௬௱௬௰௩ - 663)
செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும் (௬௱௬௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (௬௱௬௰௩)
-மு. வரதராசன்
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அந்த செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும். (௬௱௬௰௩)
—சாலமன் பாப்பையா
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும் (௬௱௬௰௩)
-மு. கருணாநிதி
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (௬௬௬௪ - 664)
'இதனை இப்படி யிப்படிச் செய்வோம்' என்று சொல்வது எல்லாருக்கும் எளிதாகும்; சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும் (௬௱௬௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். (௬௱௬௰௪)
-மு. வரதராசன்
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்வது எல்லாருக்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம். (௬௱௬௰௪)
—சாலமன் பாப்பையா
சொல்வது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம் (௬௱௬௰௪)
-மு. கருணாநிதி
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். (௬௬௬௫ - 665)
எண்ணத்தாலே சிறந்த மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறமையானது, மன்னன் மனத்திலும் சென்று பதிவதனால், பலராலும் நன்கு மதிக்கப்படும் (௬௱௬௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும். (௬௱௬௫)
-மு. வரதராசன்
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும். (௬௱௬௫)
—சாலமன் பாப்பையா
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும் (௬௱௬௰௫)
-மு. கருணாநிதி
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (௬௱௬௬ - 666)
ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள் (௬௱௬௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். (௬௱௬௰௬)
-மு. வரதராசன்
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார். (௬௱௬௰௬)
—சாலமன் பாப்பையா
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் (௬௱௬௰௬)
-மு. கருணாநிதி
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (௬௱௬௰௭ - 667)
உருளுகின்ற பெரிய தெரு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால் ஒருவரது சிறிதான உருவத்தைப் பார்த்து இகழக் கூடாது (௬௱௬௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய அணிப் போன்றவர்கள் உலகில் உள்ளனர், அவர்களுடைய உருவத்தின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது. (௬௱௬௰௭)
-மு. வரதராசன்
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியார் என்பதால் அவரை இகழக்கூடாது. (௬௱௬௰௭)
—சாலமன் பாப்பையா
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் (௬௱௬௰௭)
-மு. கருணாநிதி
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். (௬௱௬௰௮ - 668)
மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வில்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு விரைவாகச் செய்ய வேண்டும் (௬௱௬௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும். (௬௱௬௰௮)
-மு. வரதராசன்
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க. (௬௱௬௰௮)
—சாலமன் பாப்பையா
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் (௬௱௬௰௮)
-மு. கருணாநிதி
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (௬௱௬௯ - 669)
முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முடிவிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத்துணிவுடனே செய்து முடிக்க வேண்டும் (௬௱௬௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு செய்து முடிக்க வேண்டும். (௬௱௬௰௯)
-மு. வரதராசன்
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க. (௬௱௬௰௯)
—சாலமன் பாப்பையா
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும் (௬௱௬௰௯)
-மு. கருணாநிதி
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. (௬௱௭௰ - 670)
எந்த வகையிலே உறுதி உடையவரானாலும், செய்யும் செயலிலே மனவுறுதி இல்லாதவர்களை உலகம் மதியாது; சிறந்தோராகவும் ஏற்றுக் கொள்ளாது (௬௱௭௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது. (௬௱௭௰)
-மு. வரதராசன்
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார். (௬௱௭௰)
—சாலமன் பாப்பையா
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது (௬௱௭௰)
-மு. கருணாநிதி