மொழி: இருள் பாணி
பொருட்பால்
அமைச்சியல்
மன்னரைச் சேர்ந்தொழுதல்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (௬௱௧ - 691)
மாறுபடும் வேந்தரைச் சேர்ந்து வாழ்கின்றவர்கள், அவரை விட்டு மிகவும் நீங்காமலும், மிகவும் நெருங்காமலும், தீயில் குளிர்காய்பவரைப் போலப் பழகிவர வேண்டும் (௬௱௯௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும். (௬௱௧)
-மு. வரதராசன்
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக. (௬௱௧)
—சாலமன் பாப்பையா
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள் (௬௱௯௰௧)
-மு. கருணாநிதி
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். (௬௦௨ - 692)
மன்னர் விரும்புகின்ற பொருள்களைத் தானும் விரும்பாத தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும் (௬௱௯௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும். (௬௦௯)
-மு. வரதராசன்
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவரது ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும். (௬௦௯)
—சாலமன் பாப்பையா
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமென்றே தாமும் விரும்பாமலிருத்தால் அவருக்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும் (௬௱௯௰௨)
-மு. கருணாநிதி
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. (௬௱௯ - 693)
அரசன் சினம் கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும் (௬௱௯௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
.( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தால் எவர்க்கும் முடியாது. (௬௱௯௰௩)
-மு. வரதராசன்
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவுபடுத்துவது எவர்க்கும் கடினம். (௬௱௯௰௩)
—சாலமன் பாப்பையா
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படிச் செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல (௬௱௯௰௩)
-மு. கருணாநிதி
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. (௬௯௪ - 694)
அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும் போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும் (௬௱௯௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும். (௬௦௯௪)
-மு. வரதராசன்
மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க. (௬௦௯௪)
—சாலமன் பாப்பையா
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும் (௬௱௯௪)
-மு. கருணாநிதி
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. (௬௱௫ - 695)
அரசனின் மறைவான பேச்சுக்களைக் கேளாமலும், அது தொடர்பாக எதுவும் சொல்லாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்க வேண்டும் (௬௱௯௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும். (௬௱௫)
-மு. வரதராசன்
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசும்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க. (௬௱௫)
—சாலமன் பாப்பையா
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும் (௬௱௯௰௫)
-மு. கருணாநிதி
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொல். (௬௱௯௬ - 696)
அரசனது உள்ளக்குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும் (௬௱௯௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும். (௬௱௯௰௬)
-மு. வரதராசன்
ஆட்சியாளருக்கு எதையுமே சொல்ல வேண்டும், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராதது, வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்பச் சொல்லுங்கள். (௬௱௯௰௬)
—சாலமன் பாப்பையா
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும் (௬௱௯௬)
-மு. கருணாநிதி
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். (௬௱௭ - 697)
அரசன் விரும்புகிற செய்திகளை மட்டும் அவனிடம் சொல்லியும், அவனுக்குரியவை அல்லாதன பற்றி அரசனிடம் சொல்லாமற் கைவிடுதலும் வேண்டும் (௬௱௯௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும். (௬௱௯௰௭)
-மு. வரதராசன்
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுங்கள்; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக. (௬௱௯௰௭)
—சாலமன் பாப்பையா
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும் (௬௱௯௰௭)
-மு. கருணாநிதி
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். (௬௱௮ - 698)
'இளையவர்' என்று கருதியோ, 'இனமுறை' என்று கருதியோ இகழாமல், நிலைபெற்ற அறிவுடன் அரசனிடம் நடந்து கொள்ள வேண்டும் (௬௱௯௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இந்த முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த வேண்டும். (௬௱௯௰௮)
-மு. வரதராசன்
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இந்த முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக. (௬௱௯௰௮)
—சாலமன் பாப்பையா
எமக்கு இளையவர்தான்; இந்த முறையில் உறவுடையவர் தான் என்ற ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் (௬௱௯௰௮)
-மு. கருணாநிதி
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். (௬௱௯ - 699)
'தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம்' என்றும், அவர் ஏற்றுக் கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் (௬௱௯௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். (௬௱௯௰௯)
-மு. வரதராசன்
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்குரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். (௬௱௯௰௯)
—சாலமன் பாப்பையா
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்க முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் (௬௱௯௰௯)
-மு. கருணாநிதி
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். (௭௱ - 700)
'மிகப் பழைய காலத் தொடர்புடையோர்' என்று நினைத்துப் பண்பில்லாத செயல்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை, அவனுக்கே கெடுதல் தரும் (௭௱)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும். (௭௱)
-மு. வரதராசன்
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும். (௭௱)
—சாலமன் பாப்பையா
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும் (௭௱)
-மு. கருணாநிதி
பொருட்பால்
அமைச்சியல்
மன்னரைச் சேர்ந்தொழுதல்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (௬௱௧ - 691)
மாறுபடும் வேந்தரைச் சேர்ந்து வாழ்கின்றவர்கள், அவரை விட்டு மிகவும் நீங்காமலும், மிகவும் நெருங்காமலும், தீயில் குளிர்காய்பவரைப் போலப் பழகிவர வேண்டும் (௬௱௯௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும். (௬௱௧)
-மு. வரதராசன்
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக. (௬௱௧)
—சாலமன் பாப்பையா
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள் (௬௱௯௰௧)
-மு. கருணாநிதி
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். (௬௦௨ - 692)
மன்னர் விரும்புகின்ற பொருள்களைத் தானும் விரும்பாத தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும் (௬௱௯௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும். (௬௦௯)
-மு. வரதராசன்
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவரது ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும். (௬௦௯)
—சாலமன் பாப்பையா
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமென்றே தாமும் விரும்பாமலிருத்தால் அவருக்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும் (௬௱௯௰௨)
-மு. கருணாநிதி
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. (௬௱௯ - 693)
அரசன் சினம் கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும் (௬௱௯௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
.( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தால் எவர்க்கும் முடியாது. (௬௱௯௰௩)
-மு. வரதராசன்
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவுபடுத்துவது எவர்க்கும் கடினம். (௬௱௯௰௩)
—சாலமன் பாப்பையா
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படிச் செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல (௬௱௯௰௩)
-மு. கருணாநிதி
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. (௬௯௪ - 694)
அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும் போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும் (௬௱௯௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும். (௬௦௯௪)
-மு. வரதராசன்
மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க. (௬௦௯௪)
—சாலமன் பாப்பையா
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும் (௬௱௯௪)
-மு. கருணாநிதி
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. (௬௱௫ - 695)
அரசனின் மறைவான பேச்சுக்களைக் கேளாமலும், அது தொடர்பாக எதுவும் சொல்லாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்க வேண்டும் (௬௱௯௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும். (௬௱௫)
-மு. வரதராசன்
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசும்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க. (௬௱௫)
—சாலமன் பாப்பையா
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும் (௬௱௯௰௫)
-மு. கருணாநிதி
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொல். (௬௱௯௬ - 696)
அரசனது உள்ளக்குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும் (௬௱௯௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும். (௬௱௯௰௬)
-மு. வரதராசன்
ஆட்சியாளருக்கு எதையுமே சொல்ல வேண்டும், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராதது, வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்பச் சொல்லுங்கள். (௬௱௯௰௬)
—சாலமன் பாப்பையா
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும் (௬௱௯௬)
-மு. கருணாநிதி
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். (௬௱௭ - 697)
அரசன் விரும்புகிற செய்திகளை மட்டும் அவனிடம் சொல்லியும், அவனுக்குரியவை அல்லாதன பற்றி அரசனிடம் சொல்லாமற் கைவிடுதலும் வேண்டும் (௬௱௯௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும். (௬௱௯௰௭)
-மு. வரதராசன்
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுங்கள்; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக. (௬௱௯௰௭)
—சாலமன் பாப்பையா
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும் (௬௱௯௰௭)
-மு. கருணாநிதி
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். (௬௱௮ - 698)
'இளையவர்' என்று கருதியோ, 'இனமுறை' என்று கருதியோ இகழாமல், நிலைபெற்ற அறிவுடன் அரசனிடம் நடந்து கொள்ள வேண்டும் (௬௱௯௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இந்த முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த வேண்டும். (௬௱௯௰௮)
-மு. வரதராசன்
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இந்த முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக. (௬௱௯௰௮)
—சாலமன் பாப்பையா
எமக்கு இளையவர்தான்; இந்த முறையில் உறவுடையவர் தான் என்ற ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் (௬௱௯௰௮)
-மு. கருணாநிதி
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். (௬௱௯ - 699)
'தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம்' என்றும், அவர் ஏற்றுக் கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் (௬௱௯௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். (௬௱௯௰௯)
-மு. வரதராசன்
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்குரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். (௬௱௯௰௯)
—சாலமன் பாப்பையா
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்க முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் (௬௱௯௰௯)
-மு. கருணாநிதி
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். (௭௱ - 700)
'மிகப் பழைய காலத் தொடர்புடையோர்' என்று நினைத்துப் பண்பில்லாத செயல்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை, அவனுக்கே கெடுதல் தரும் (௭௱)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும். (௭௱)
-மு. வரதராசன்
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும். (௭௱)
—சாலமன் பாப்பையா
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும் (௭௱)
-மு. கருணாநிதி