மொழி: இருள் பாணி
பொருட்பால்
அமைச்சில்
அவையறிதல்
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக
தொகையறிந்த தூய்மை யவர். (௭௱௧ - 711)
சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும் (௭௱௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைகளின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும். (௭௱௰௧)
-மு. வரதராசன்
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என்ன தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுங்கள். (௭௱௰௧)
—சாலமன் பாப்பையா
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள் (௭௱௰௧)
-மு. கருணாநிதி
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். (௭௦௨ - 712)
சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே, சொல்ல வேண்டும் (௭௱௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.(௭௱௰௨)
-மு. வரதராசன்
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்டு நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுங்கள்.(௭௱௰௨)
—சாலமன் பாப்பையா
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும் (௭௱௰௨)
-மு. கருணாநிதி
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். (௭௱௰௩ - 713)
தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்கள், ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்;அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது (௭௱௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை. (௭௱௰௩)
-மு. வரதராசன்
தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர். (௭௱௰௩)
—சாலமன் பாப்பையா
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது (௭௱௰௩)
-மு. கருணாநிதி
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். (௭௦௰௪ - 714)
அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளியினர் ஆக வேண்டும்; அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல் போல ஆகிவிட வேண்டும் (௭௱௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும். (௭௱௰௪)
-மு. வரதராசன்
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுங்கள்.(௭௱௰௪)
—சாலமன் பாப்பையா
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் (௭௱௰௪)
-மு. கருணாநிதி
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. (௭௱௫ - 715)
அறிவால் முதிர்ந்தவர் அவையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது, சிறந்த நன்மை தருவதாகும் (௭௱௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது. (௭௱௰௫)
-மு. வரதராசன்
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது. (௭௱௰௫)
—சாலமன் பாப்பையா
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கோட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும் (௭௱௰௫)
-மு. கருணாநிதி
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. (௭௬ - 716)
விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர் முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆறு வெள்ளத்தில் நீந்துபவன், இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம் (௭௱௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணருகின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும். (௭௱௰௬)
-மு. வரதராசன்
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும். (௭௱௰௬)
—சாலமன் பாப்பையா
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும் (௭௱௰௬)
-மு. கருணாநிதி
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. (௭௱௰௭ - 717)
குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிவதற்கு வல்லமை உடையவர்களிடையே, கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும் (௭௱௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடம் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும். (௭௱௰௭)
-மு. வரதராசன்
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திரம் அனைவருக்கும் விளங்கும்.(௭௱௰௭)
—சாலமன் பாப்பையா
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும் (௭௱௰௭)
-மு. கருணாநிதி
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (௭௱௰௮ - 718)
சொல்லின் பயனை உணருகின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகவும் (௭௱௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தாமே உணருகின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாதியில் நீரைச் சொரிந்தாற் போன்றது. (௭௱௰௮)
-மு. வரதராசன்
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசி வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போல. (௭௱௰௮)
—சாலமன் பாப்பையா
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளையும் (௭௱௰௮)
-மு. கருணாநிதி
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார். (௭௱௰௯ - 719)
நல்ல அறிவாளர்கள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாகப் பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும் (௭௱௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நல்ல அறிவாளியின் அவையில் நல்ல பொருளை மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது. (௭௱௰௯)
-மு. வரதராசன்
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் போது அவையில் மறந்தும் பேச வேண்டா. (௭௱௰௯)
—சாலமன் பாப்பையா
நல்லோர் நிறைந்த அவையில் மனதில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம் (௭௱௰௯)
-மு. கருணாநிதி
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். (௭௨௦ - 720)
தம் போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப் பற்றி விரிவாகப் பேசுதல் அங்கணத்துள்ளே அமுதத்தைக் கொட்டியது போலப் பாழாகிவிடும் (௭௱௨௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது. (௭௱)
-மு. வரதராசன்
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும். (௭௱௨)
—சாலமன் பாப்பையா
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்தித்தும் அமிழ்தம்போல் வீணாகிவிடும் (௭௱௨௰)
-மு. கருணாநிதி
பொருட்பால்
அமைச்சில்
அவையறிதல்
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக
தொகையறிந்த தூய்மை யவர். (௭௱௧ - 711)
சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும் (௭௱௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைகளின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும். (௭௱௰௧)
-மு. வரதராசன்
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என்ன தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுங்கள். (௭௱௰௧)
—சாலமன் பாப்பையா
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள் (௭௱௰௧)
-மு. கருணாநிதி
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். (௭௦௨ - 712)
சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே, சொல்ல வேண்டும் (௭௱௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.(௭௱௰௨)
-மு. வரதராசன்
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்டு நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுங்கள்.(௭௱௰௨)
—சாலமன் பாப்பையா
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும் (௭௱௰௨)
-மு. கருணாநிதி
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். (௭௱௰௩ - 713)
தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்கள், ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்;அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது (௭௱௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை. (௭௱௰௩)
-மு. வரதராசன்
தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர். (௭௱௰௩)
—சாலமன் பாப்பையா
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது (௭௱௰௩)
-மு. கருணாநிதி
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். (௭௦௰௪ - 714)
அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளியினர் ஆக வேண்டும்; அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல் போல ஆகிவிட வேண்டும் (௭௱௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும். (௭௱௰௪)
-மு. வரதராசன்
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுங்கள்.(௭௱௰௪)
—சாலமன் பாப்பையா
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் (௭௱௰௪)
-மு. கருணாநிதி
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. (௭௱௫ - 715)
அறிவால் முதிர்ந்தவர் அவையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது, சிறந்த நன்மை தருவதாகும் (௭௱௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது. (௭௱௰௫)
-மு. வரதராசன்
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது. (௭௱௰௫)
—சாலமன் பாப்பையா
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கோட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும் (௭௱௰௫)
-மு. கருணாநிதி
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. (௭௬ - 716)
விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர் முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆறு வெள்ளத்தில் நீந்துபவன், இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம் (௭௱௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணருகின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும். (௭௱௰௬)
-மு. வரதராசன்
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும். (௭௱௰௬)
—சாலமன் பாப்பையா
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும் (௭௱௰௬)
-மு. கருணாநிதி
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. (௭௱௰௭ - 717)
குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிவதற்கு வல்லமை உடையவர்களிடையே, கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும் (௭௱௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடம் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும். (௭௱௰௭)
-மு. வரதராசன்
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திரம் அனைவருக்கும் விளங்கும்.(௭௱௰௭)
—சாலமன் பாப்பையா
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும் (௭௱௰௭)
-மு. கருணாநிதி
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (௭௱௰௮ - 718)
சொல்லின் பயனை உணருகின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகவும் (௭௱௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தாமே உணருகின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாதியில் நீரைச் சொரிந்தாற் போன்றது. (௭௱௰௮)
-மு. வரதராசன்
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசி வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போல. (௭௱௰௮)
—சாலமன் பாப்பையா
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளையும் (௭௱௰௮)
-மு. கருணாநிதி
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார். (௭௱௰௯ - 719)
நல்ல அறிவாளர்கள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாகப் பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும் (௭௱௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நல்ல அறிவாளியின் அவையில் நல்ல பொருளை மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது. (௭௱௰௯)
-மு. வரதராசன்
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் போது அவையில் மறந்தும் பேச வேண்டா. (௭௱௰௯)
—சாலமன் பாப்பையா
நல்லோர் நிறைந்த அவையில் மனதில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம் (௭௱௰௯)
-மு. கருணாநிதி
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். (௭௨௦ - 720)
தம் போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப் பற்றி விரிவாகப் பேசுதல் அங்கணத்துள்ளே அமுதத்தைக் கொட்டியது போலப் பாழாகிவிடும் (௭௱௨௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது. (௭௱)
-மு. வரதராசன்
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும். (௭௱௨)
—சாலமன் பாப்பையா
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்தித்தும் அமிழ்தம்போல் வீணாகிவிடும் (௭௱௨௰)
-மு. கருணாநிதி