மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரணியல்
நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. (௭௱௩௰௧ - 731)
நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும் (௭௱௩௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேட்டில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். (௭௱௩௰௧)
-மு. வரதராசன்
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு. (௭௱௩௰௧)
—சாலமன் பாப்பையா
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும் (௭௱௩௰௧)
-மு. கருணாநிதி
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. (௭௱௩௨ - 732)
பெரும் பொருள் பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத் தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுதியான விளைச்சலை உடையதாகியும் விளங்குவதே, நல்ல நாடு (௭௱௩௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும். (௭௱௩௰௨)
-மு. வரதராசன்
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விலை உடையது; இதுவே நாடு. (௭௱௩௰௨)
—சாலமன் பாப்பையா
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேட்டதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும் (௭௱௩௰௨)
-மு. கருணாநிதி
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. (௭௱௩௰௩ - 733)
வேற்று நாட்டாரையும் தாங்குவதற்கான நிலையில், அவரைத் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைப்பொருளை முழுவதும் கொடுத்தும் காப்பதே, நல்ல நாடாகும் (௭௱௩௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும். (௭௱௩௰௩)
-மு. வரதராசன்
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரதத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு. (௭௱௩௰௩)
—சாலமன் பாப்பையா
புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும் (௭௱௩௰௩)
-மு. கருணாநிதி
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேர தியல்வது நாடு. (௭௱௩௰௪ - 734)
நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும் (௭௱௩௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும். (௭௱௩௰௪)
-மு. வரதராசன்
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு. (௭௱௩௰௪)
—சாலமன் பாப்பையா
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும் (௭௱௩௰௪)
-மு. கருணாநிதி
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. (௭௱௩௰௫ - 735)
பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், நாட்டைப் பாழாக்கும் உட்பகையும், வேந்தனைத் துன்புறுத்தும் கொலை வெறியுள்ள குறுநில மன்னரும், இல்லாத நாடு (௭௱௩௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு. (௭௱௩௰௫)
-மு. வரதராசன்
சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் கட்சியினர், அரசை நெரக்கடிக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாத நாடு. (௭௱௩௰௫)
—சாலமன் பாப்பையா
பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும் (௭௱௩௰௫)
-மு. கருணாநிதி
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்ற
நாடன்ப நாட்டின் தலை. (௭௱௩௰௬ - 736)
பகைவராலே கெடுதல்களை அறியாததாய், இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்திலும் வளம் குன்றாமலிருக்கும் நாடு தான், நாடுகளுள் சிறந்த நாடாகும் (௭௱௩௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர். (௭௱௩௰௬)
-மு. வரதராசன்
பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாதாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர். (௭௱௩௰௬)
—சாலமன் பாப்பையா
எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்ற நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும் (௭௱௩௰௬)
-மு. கருணாநிதி
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. (௭௱௩௰௭ - 737)
கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர் வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும், ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புக்களாம் (௭௱௩௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும். (௭௱௩௰௭)
-மு. வரதராசன்
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம். (௭௱௩௰௭)
—சாலமன் பாப்பையா
ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும் (௭௱௩௰௭)
-மு. கருணாநிதி
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. (௭௱௩௰௮ - 738)
மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளைபொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்ல காவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு! (௭௱௩௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். (௭௱௩௰௮)
-மு. வரதராசன்
நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர். (௭௱௩௰௮)
—சாலமன் பாப்பையா
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும் (௭௱௩௰௮)
-மு. கருணாநிதி
நாடன்ப நாட வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. (௭௱௩௰௯ - 739)
வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியை நாடி அதனால் வளமை வரும் நாடு, நாடே ஆகாது (௭௱௩௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல. (௭௱௩௰௯)
-மு. வரதராசன்
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் நாடு அன்று. (௭௱௩௰௯)
—சாலமன் பாப்பையா
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய சிறந்த நாடுகளாகும் (௭௱௩௰௯)
-மு. கருணாநிதி
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. (௭௦௪௰ - 740)
மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி நடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும் (௭௱௪௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவர்களால் பயன் இல்லாமல் போகும். (௭௱௪௰)
-மு. வரதராசன்
மேலே சொல்லப்பட்ட அனைத்தும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்திருந்தால் அதனால் ஒரு நன்மையும் இல்லை. (௭௱௪௰)
—சாலமன் பாப்பையா
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும் (௭௱௪௰)
-மு. கருணாநிதி
பொருட்பால்
அரணியல்
நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. (௭௱௩௰௧ - 731)
நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும் (௭௱௩௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேட்டில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். (௭௱௩௰௧)
-மு. வரதராசன்
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு. (௭௱௩௰௧)
—சாலமன் பாப்பையா
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும் (௭௱௩௰௧)
-மு. கருணாநிதி
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. (௭௱௩௨ - 732)
பெரும் பொருள் பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத் தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுதியான விளைச்சலை உடையதாகியும் விளங்குவதே, நல்ல நாடு (௭௱௩௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும். (௭௱௩௰௨)
-மு. வரதராசன்
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விலை உடையது; இதுவே நாடு. (௭௱௩௰௨)
—சாலமன் பாப்பையா
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேட்டதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும் (௭௱௩௰௨)
-மு. கருணாநிதி
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. (௭௱௩௰௩ - 733)
வேற்று நாட்டாரையும் தாங்குவதற்கான நிலையில், அவரைத் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைப்பொருளை முழுவதும் கொடுத்தும் காப்பதே, நல்ல நாடாகும் (௭௱௩௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும். (௭௱௩௰௩)
-மு. வரதராசன்
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரதத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு. (௭௱௩௰௩)
—சாலமன் பாப்பையா
புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும் (௭௱௩௰௩)
-மு. கருணாநிதி
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேர தியல்வது நாடு. (௭௱௩௰௪ - 734)
நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும் (௭௱௩௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும். (௭௱௩௰௪)
-மு. வரதராசன்
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு. (௭௱௩௰௪)
—சாலமன் பாப்பையா
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும் (௭௱௩௰௪)
-மு. கருணாநிதி
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. (௭௱௩௰௫ - 735)
பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், நாட்டைப் பாழாக்கும் உட்பகையும், வேந்தனைத் துன்புறுத்தும் கொலை வெறியுள்ள குறுநில மன்னரும், இல்லாத நாடு (௭௱௩௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு. (௭௱௩௰௫)
-மு. வரதராசன்
சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் கட்சியினர், அரசை நெரக்கடிக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாத நாடு. (௭௱௩௰௫)
—சாலமன் பாப்பையா
பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும் (௭௱௩௰௫)
-மு. கருணாநிதி
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்ற
நாடன்ப நாட்டின் தலை. (௭௱௩௰௬ - 736)
பகைவராலே கெடுதல்களை அறியாததாய், இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்திலும் வளம் குன்றாமலிருக்கும் நாடு தான், நாடுகளுள் சிறந்த நாடாகும் (௭௱௩௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர். (௭௱௩௰௬)
-மு. வரதராசன்
பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாதாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர். (௭௱௩௰௬)
—சாலமன் பாப்பையா
எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்ற நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும் (௭௱௩௰௬)
-மு. கருணாநிதி
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. (௭௱௩௰௭ - 737)
கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர் வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும், ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புக்களாம் (௭௱௩௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும். (௭௱௩௰௭)
-மு. வரதராசன்
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம். (௭௱௩௰௭)
—சாலமன் பாப்பையா
ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும் (௭௱௩௰௭)
-மு. கருணாநிதி
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. (௭௱௩௰௮ - 738)
மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளைபொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்ல காவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு! (௭௱௩௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். (௭௱௩௰௮)
-மு. வரதராசன்
நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர். (௭௱௩௰௮)
—சாலமன் பாப்பையா
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும் (௭௱௩௰௮)
-மு. கருணாநிதி
நாடன்ப நாட வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. (௭௱௩௰௯ - 739)
வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியை நாடி அதனால் வளமை வரும் நாடு, நாடே ஆகாது (௭௱௩௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல. (௭௱௩௰௯)
-மு. வரதராசன்
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் நாடு அன்று. (௭௱௩௰௯)
—சாலமன் பாப்பையா
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய சிறந்த நாடுகளாகும் (௭௱௩௰௯)
-மு. கருணாநிதி
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. (௭௦௪௰ - 740)
மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி நடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும் (௭௱௪௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவர்களால் பயன் இல்லாமல் போகும். (௭௱௪௰)
-மு. வரதராசன்
மேலே சொல்லப்பட்ட அனைத்தும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்திருந்தால் அதனால் ஒரு நன்மையும் இல்லை. (௭௱௪௰)
—சாலமன் பாப்பையா
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும் (௭௱௪௰)
-மு. கருணாநிதி