மொழி: இருள் பாணி
பொருட்பால்
கூழியல் பொருள்செயல்வகை
பொருள்செயல்வகை
பொருளால் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். (௭௱௫௧ - 751)
ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும்படியாகச் செய்யக் கூடிய பொருளை அல்லாமல் உலக வாழ்வுக்குச் சிறந்த பொருளாவது யாதும் இல்லை (௭௱௫௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை. (௭௱௫௧)
-மு. வரதராசன்
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை. (௭௱௫௧)
—சாலமன் பாப்பையா
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை (௭௱௫௰௧)
-மு. கருணாநிதி
இல்லரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. (௭௦௫௨ - 752)
பொருள் இல்லாத வறியவரை எல்லாருமே இகழ்ச்சியாகப் பேசுவார்கள்; செல்வம் உடையவரையோ எல்லாரும் சிறப்புச் செய்து போற்றுவார்கள் (௭௱௫௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர். (௭௱௫௨)
-மு. வரதராசன்
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர். (௭௱௫௨)
—சாலமன் பாப்பையா
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது (௭௱௫௰௨)
-மு. கருணாநிதி
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. (௭௱௫௰௩ - 753)
'பொருள்' என்னும் நந்தா விளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று, அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும் (௭௱௫௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்கு சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும் (௭௱௫௰௩)
-மு. வரதராசன்
பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள் சென்று பகையாகிய இருளைப் போக்கும். (௭௱௫௰௩)
—சாலமன் பாப்பையா
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது (௭௱௫௰௩)
-மு. கருணாநிதி
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். (௭௱௫௪ - 754)
தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும் (௭௱௫௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். (௭௱௫௪)
-மு. வரதராசன்
நேரிய வழி அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும். (௭௱௫௪)
—சாலமன் பாப்பையா
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும் (௭௱௫௪)
-மு. கருணாநிதி
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். (௭௱௫௫ - 755)
'அருள்' என்னும் இயல்போடும், மக்களின் அன்போடும் பொருந்திவாராத பொருட் பெருக்கத்தைத் தீயவர் புரள்வதற்கு விலக்கி விட வேண்டும் (௭௱௫௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும். (௭௱௫௫)
-மு. வரதராசன்
பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக (௭௱௫௰௫)
—சாலமன் பாப்பையா
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும் (௭௱௫௰௫)
-மு. கருணாநிதி
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். (௭௱௫௬ - 756)
உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும், வேந்தனின் உரிமைப் பொருளாகும் (௭௱௫௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கூறும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும். (௭௱௫௰௬)
-மு. வரதராசன்
வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை அனைத்தும் அரசிற்கு உரிய பொருள்கள். (௭௱௫௰௬)
—சாலமன் பாப்பையா
வரியும், சுங்கமும், வெற்றி பெறப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும் (௭௱௫௰௬)
-மு. கருணாநிதி
அருளென்னும் அன்பின் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. (௭௱௫௰௭ - 757)
'அன்பு' என்னும் தாய் பெற்றெடுத்த 'அருள்' என்னும் குழந்தையானது (௭௱௫௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வது. (௭௱௫௰௭)
-மு. வரதராசன்
அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும். (௭௱௫௰௭)
—சாலமன் பாப்பையா
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும் (௭௱௫௰௭)
-மு. கருணாநிதி
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. (௭௱௫௮ - 758)
தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும் (௭௱௫௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது. (௭௱௫௰௮)
-மு. வரதராசன்
தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போல. (௭௱௫௰௮)
—சாலமன் பாப்பையா
தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது (௭௱௫௰௮)
-மு. கருணாநிதி
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூறிய தில். (௭௱௫௯ - 759)
பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம், பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை (௭௱௫௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்லவள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை. (௭௱௫௰௯)
-மு. வரதராசன்
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூறிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை. (௭௱௫௰௯)
—சாலமன் பாப்பையா
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவியைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது (௭௱௫௰௯)
-மு. கருணாநிதி
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
என்னை இரண்டும் ஒருங்கு. (௭௱௬௰ - 760)
சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும் (௭௱௬௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூட எளிய பொருளாகும். (௭௱௬௰)
-மு. வரதராசன்
நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாகக் கிடைக்கும் பொருள்களாகும். (௭௱௬௰)
—சாலமன் பாப்பையா
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு மற்ற இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும் (௭௱௬௰)
-மு. கருணாநிதி
பொருட்பால்
கூழியல் பொருள்செயல்வகை
பொருள்செயல்வகை
பொருளால் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். (௭௱௫௧ - 751)
ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும்படியாகச் செய்யக் கூடிய பொருளை அல்லாமல் உலக வாழ்வுக்குச் சிறந்த பொருளாவது யாதும் இல்லை (௭௱௫௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை. (௭௱௫௧)
-மு. வரதராசன்
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை. (௭௱௫௧)
—சாலமன் பாப்பையா
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை (௭௱௫௰௧)
-மு. கருணாநிதி
இல்லரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. (௭௦௫௨ - 752)
பொருள் இல்லாத வறியவரை எல்லாருமே இகழ்ச்சியாகப் பேசுவார்கள்; செல்வம் உடையவரையோ எல்லாரும் சிறப்புச் செய்து போற்றுவார்கள் (௭௱௫௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர். (௭௱௫௨)
-மு. வரதராசன்
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர். (௭௱௫௨)
—சாலமன் பாப்பையா
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது (௭௱௫௰௨)
-மு. கருணாநிதி
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. (௭௱௫௰௩ - 753)
'பொருள்' என்னும் நந்தா விளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று, அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும் (௭௱௫௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்கு சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும் (௭௱௫௰௩)
-மு. வரதராசன்
பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள் சென்று பகையாகிய இருளைப் போக்கும். (௭௱௫௰௩)
—சாலமன் பாப்பையா
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது (௭௱௫௰௩)
-மு. கருணாநிதி
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். (௭௱௫௪ - 754)
தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும் (௭௱௫௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். (௭௱௫௪)
-மு. வரதராசன்
நேரிய வழி அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும். (௭௱௫௪)
—சாலமன் பாப்பையா
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும் (௭௱௫௪)
-மு. கருணாநிதி
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். (௭௱௫௫ - 755)
'அருள்' என்னும் இயல்போடும், மக்களின் அன்போடும் பொருந்திவாராத பொருட் பெருக்கத்தைத் தீயவர் புரள்வதற்கு விலக்கி விட வேண்டும் (௭௱௫௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும். (௭௱௫௫)
-மு. வரதராசன்
பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக (௭௱௫௰௫)
—சாலமன் பாப்பையா
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும் (௭௱௫௰௫)
-மு. கருணாநிதி
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். (௭௱௫௬ - 756)
உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும், வேந்தனின் உரிமைப் பொருளாகும் (௭௱௫௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கூறும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும். (௭௱௫௰௬)
-மு. வரதராசன்
வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை அனைத்தும் அரசிற்கு உரிய பொருள்கள். (௭௱௫௰௬)
—சாலமன் பாப்பையா
வரியும், சுங்கமும், வெற்றி பெறப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும் (௭௱௫௰௬)
-மு. கருணாநிதி
அருளென்னும் அன்பின் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. (௭௱௫௰௭ - 757)
'அன்பு' என்னும் தாய் பெற்றெடுத்த 'அருள்' என்னும் குழந்தையானது (௭௱௫௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வது. (௭௱௫௰௭)
-மு. வரதராசன்
அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும். (௭௱௫௰௭)
—சாலமன் பாப்பையா
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும் (௭௱௫௰௭)
-மு. கருணாநிதி
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. (௭௱௫௮ - 758)
தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும் (௭௱௫௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது. (௭௱௫௰௮)
-மு. வரதராசன்
தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போல. (௭௱௫௰௮)
—சாலமன் பாப்பையா
தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது (௭௱௫௰௮)
-மு. கருணாநிதி
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூறிய தில். (௭௱௫௯ - 759)
பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம், பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை (௭௱௫௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்லவள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை. (௭௱௫௰௯)
-மு. வரதராசன்
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூறிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை. (௭௱௫௰௯)
—சாலமன் பாப்பையா
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவியைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது (௭௱௫௰௯)
-மு. கருணாநிதி
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
என்னை இரண்டும் ஒருங்கு. (௭௱௬௰ - 760)
சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும் (௭௱௬௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூட எளிய பொருளாகும். (௭௱௬௰)
-மு. வரதராசன்
நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாகக் கிடைக்கும் பொருள்களாகும். (௭௱௬௰)
—சாலமன் பாப்பையா
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு மற்ற இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும் (௭௱௬௰)
-மு. கருணாநிதி