மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல்
நட்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. (௭௱௮௧ - 781)
நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பு எதுவுமில்லை (௭௱௮௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன. (௭௱௮௧)
-மு. வரதராசன்
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு? (௭௱௮௧)
—சாலமன் பாப்பையா
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை (௭௱௮௰௧)
-மு. கருணாநிதி
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (௭௱௮௨ - 782)
நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும் (௭௱௮௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன. (௭௱௮௰௨)
-மு. வரதராசன்
பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும். (௭௱௮௰௨)
—சாலமன் பாப்பையா
அறிவுள்ளவர்களுடன் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பிறகு தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும் (௭௱௮௰௨)
-மு. கருணாநிதி
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (௭௱௮௰௩ - 783)
நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும் (௭௱௮௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். (௭௱௮௰௩)
-மு. வரதராசன்
படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு நட்பு அவரோடு பழகும் போது மகிழ்ச்சி தரும். (௭௱௮௰௩)
—சாலமன் பாப்பையா
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு (௭௱௮௰௩)
-மு. கருணாநிதி
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. (௭௱௮௪ - 784)
நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும் (௭௱௮௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காக. (௭௱௮௰௪)
-மு. வரதராசன்
ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம். (௭௱௮௰௪)
—சாலமன் பாப்பையா
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காக (௭௱௮௰௪)
-மு. கருணாநிதி
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். (௭௱௮௫ - 785)
நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழக வேண்டியதில்லை; இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே, நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும் (௭௱௮௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்த வேண்டிய உரிமையைக் கொடுக்கும். (௭௱௮௫)
-மு. வரதராசன்
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும். (௭௱௮௫)
—சாலமன் பாப்பையா
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்றால் இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது (௭௱௮௰௫)
-மு. கருணாநிதி
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. (௭௱௮௰௬ - 786)
உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு (௭௱௮௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும். (௭௱௮௰௬)
-மு. வரதராசன்
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு. (௭௱௮௰௬)
—சாலமன் பாப்பையா
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும் (௭௱௮௰௬)
-மு. கருணாநிதி
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (௭௱௮௰௭ - 787)
நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும் (௭௱௮௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அழிவைத் தரும் தீமைகளை நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். (௭௱௮௰௭)
-மு. வரதராசன்
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்று அவனுடன் பகிர்வது நட்பு. (௭௱௮௰௭)
—சாலமன் பாப்பையா
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும் (௭௱௮௰௭)
-மு. கருணாநிதி
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (௭௱௮௰௮ - 788)
ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு (௭௱௮௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. (௭௱௮௰௮)
-மு. வரதராசன்
பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்தால் உடனே சென்று போக்குவதே நட்பு. (௭௱௮௰௮)
—சாலமன் பாப்பையா
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்படுத்தி அதைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும் (௭௱௮௰௮)
-மு. கருணாநிதி
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (௭௱௮௰௯ - 789)
'நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது?' என்றால், மனவேறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும் (௭௱௮௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும். (௭௱௮௰௯)
-மு. வரதராசன்
நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம். (௭௱௮௰௯)
—சாலமன் பாப்பையா
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும் (௭௱௮௰௯)
-மு. கருணாநிதி
இனியர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புள்ளென்னும் நட்பு. (௭௱௯ - 790)
'இவர் எமக்கு இப்படிப்பட்டவர்', 'யாம் இவருக்கு இத்தன்மைவர்' என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும் (௭௱௯௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும். (௭௱௯)
-மு. வரதராசன்
இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும். (௭௱௯)
—சாலமன் பாப்பையா
நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும் (௭௱௯௰)
-மு. கருணாநிதி
பொருட்பால்
நட்பியல்
நட்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. (௭௱௮௧ - 781)
நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பு எதுவுமில்லை (௭௱௮௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன. (௭௱௮௧)
-மு. வரதராசன்
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு? (௭௱௮௧)
—சாலமன் பாப்பையா
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை (௭௱௮௰௧)
-மு. கருணாநிதி
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (௭௱௮௨ - 782)
நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும் (௭௱௮௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன. (௭௱௮௰௨)
-மு. வரதராசன்
பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும். (௭௱௮௰௨)
—சாலமன் பாப்பையா
அறிவுள்ளவர்களுடன் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பிறகு தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும் (௭௱௮௰௨)
-மு. கருணாநிதி
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (௭௱௮௰௩ - 783)
நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும் (௭௱௮௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். (௭௱௮௰௩)
-மு. வரதராசன்
படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு நட்பு அவரோடு பழகும் போது மகிழ்ச்சி தரும். (௭௱௮௰௩)
—சாலமன் பாப்பையா
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு (௭௱௮௰௩)
-மு. கருணாநிதி
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. (௭௱௮௪ - 784)
நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும் (௭௱௮௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காக. (௭௱௮௰௪)
-மு. வரதராசன்
ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம். (௭௱௮௰௪)
—சாலமன் பாப்பையா
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காக (௭௱௮௰௪)
-மு. கருணாநிதி
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். (௭௱௮௫ - 785)
நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழக வேண்டியதில்லை; இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே, நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும் (௭௱௮௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்த வேண்டிய உரிமையைக் கொடுக்கும். (௭௱௮௫)
-மு. வரதராசன்
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும். (௭௱௮௫)
—சாலமன் பாப்பையா
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்றால் இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது (௭௱௮௰௫)
-மு. கருணாநிதி
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. (௭௱௮௰௬ - 786)
உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு (௭௱௮௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும். (௭௱௮௰௬)
-மு. வரதராசன்
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு. (௭௱௮௰௬)
—சாலமன் பாப்பையா
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும் (௭௱௮௰௬)
-மு. கருணாநிதி
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (௭௱௮௰௭ - 787)
நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும் (௭௱௮௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அழிவைத் தரும் தீமைகளை நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். (௭௱௮௰௭)
-மு. வரதராசன்
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்று அவனுடன் பகிர்வது நட்பு. (௭௱௮௰௭)
—சாலமன் பாப்பையா
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும் (௭௱௮௰௭)
-மு. கருணாநிதி
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (௭௱௮௰௮ - 788)
ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு (௭௱௮௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. (௭௱௮௰௮)
-மு. வரதராசன்
பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்தால் உடனே சென்று போக்குவதே நட்பு. (௭௱௮௰௮)
—சாலமன் பாப்பையா
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்படுத்தி அதைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும் (௭௱௮௰௮)
-மு. கருணாநிதி
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (௭௱௮௰௯ - 789)
'நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது?' என்றால், மனவேறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும் (௭௱௮௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும். (௭௱௮௰௯)
-மு. வரதராசன்
நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம். (௭௱௮௰௯)
—சாலமன் பாப்பையா
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும் (௭௱௮௰௯)
-மு. கருணாநிதி
இனியர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புள்ளென்னும் நட்பு. (௭௱௯ - 790)
'இவர் எமக்கு இப்படிப்பட்டவர்', 'யாம் இவருக்கு இத்தன்மைவர்' என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும் (௭௱௯௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும். (௭௱௯)
-மு. வரதராசன்
இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும். (௭௱௯)
—சாலமன் பாப்பையா
நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும் (௭௱௯௰)
-மு. கருணாநிதி