மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல்
நட்பாராய்தல்
நாடாது நட்டலிற் கேட்டில்லை நட்டபின்
வீட்டில் நட்பால் பவர்க்கு. (௭௱௯௧ - 791)
நன்றாக ஆராயாமல் நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை; அப்படி நட்புச் செய்தபின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவது இல்லை (௭௱௯௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, எனவே ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை. (௭௱௯௧)
-மு. வரதராசன்
விரும்பி நட்புச் செய்தவருக்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை. (௭௱௯௧)
—சாலமன் பாப்பையா
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பில் விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும் (௭௱௯௰௧)
-மு. கருணாநிதி.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். (௭௦௨ - 792)
பலப்பல வகையாலும் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்குப் பெரும் துயரத்தைத் தந்துவிடும் (௭௱௯௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும். (௭௱௨)
-மு. வரதராசன்
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும். (௭௱௨)
—சாலமன் பாப்பையா
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிறது நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும் (௭௱௯௨)
-மு. கருணாநிதி
குணமும் குடிமையும் குற்றமும் குன்ற
இனனும் அறிந்தியாக்க நட்பு. (௭௱௩ - 793)
ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றங்குறைகளையும், நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையும் அறிந்தே, நட்புச் செய்ய வேண்டும் (௭௱௯௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும். (௭௱௯௰௩)
-மு. வரதராசன்
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க. (௭௱௯௰௩)
—சாலமன் பாப்பையா
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும் (௭௱௯௰௩)
-மு. கருணாநிதி
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. (௭௦௪ - 794)
உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை, எந்தப் பொருளைக் கொடுத்தானாலும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும் (௭௱௯௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடம் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும். (௭௱௯௪)
-மு. வரதராசன்
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும். (௭௱௯௪)
—சாலமன் பாப்பையா
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும் (௭௱௯௰௪)
-மு. கருணாநிதி
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல். (௭௱௯௫ - 795)
நாம் தவறு செய்யும் பொழுது கடுமையாகப் பேசும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும் (௭௱௯௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்வது வேண்டும். (௭௱௯௫)
-மு. வரதராசன்
நாம் தவறு செய்ய நினைத்தால் நம் மனம் நோகச் சொல்லியும் விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து ஆற்றலைப் பெற்று உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க. (௭௱௯௫)
—சாலமன் பாப்பையா
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும் (௭௱௯௰௫)
-மு. கருணாநிதி
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். (௭௱௯௬ - 796)
ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு; அது, நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக அது விளங்குவதுதான் (௭௱௯௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கேடு வந்தால் போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும். (௭௱௯௰௬)
-மு. வரதராசன்
எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு. (௭௱௯௰௬)
—சாலமன் பாப்பையா
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது (௭௱௯௰௬)
-மு. கருணாநிதி
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். (௭௱௯௭ - 797)
ஒருவனுக்கு ஊதியமாவது யாதென்றால், அறிவற்றவர்களோடு அறியாமல் கொண்ட நட்பினை, அவரைப்பற்றித் தெரிந்த அப்பொழுதிலேயே விட்டுவிடுதல் ஆகும் (௭௱௯௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பில் நீங்கி அவரைக் கைவிடுதலாகும். (௭௱௯௰௭)
-மு. வரதராசன்
அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம். (௭௱௯௰௭)
—சாலமன் பாப்பையா
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் இருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும் (௭௱௯௰௭)
-மு. கருணாநிதி
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. (௭௱௯௮ - 798)
உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும் (௭௱௯௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமல் இருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்தால் கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். (௭௱௯௰௮)
-மு. வரதராசன்
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா. (௭௱௯௰௮)
—சாலமன் பாப்பையா
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும் (௭௱௯௰௮)
-மு. கருணாநிதி
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். (௭௱௯௯ - 799)
நாம் கெட்டுப் போன காலத்திலே, நம்மைக் கைவிட்டு விலகிப் போனவரின் நட்பைப் பற்றிச் சாகிற காலத்திலே நினைத்தாலும், நம் உள்ளம் வேதனையால் எரியும் (௭௱௯௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும். (௭௱௯௰௯)
-மு. வரதராசன்
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும். (௭௱௯௰௯)
—சாலமன் பாப்பையா
ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும் (௭௱௯௰௯)
-மு. கருணாநிதி
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. (௮௱ - 800)
குற்றம் இல்லாத நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்; தகுதியில்லாத கீழோரின் நட்பினை, ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிட வேண்டும் (௮௱)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும். (௮௱)
-மு. வரதராசன்
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக. (௮௱)
—சாலமன் பாப்பையா
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்க வேண்டும் (௮௱)
-மு. கருணாநிதி
பொருட்பால்
நட்பியல்
நட்பாராய்தல்
நாடாது நட்டலிற் கேட்டில்லை நட்டபின்
வீட்டில் நட்பால் பவர்க்கு. (௭௱௯௧ - 791)
நன்றாக ஆராயாமல் நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை; அப்படி நட்புச் செய்தபின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவது இல்லை (௭௱௯௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, எனவே ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை. (௭௱௯௧)
-மு. வரதராசன்
விரும்பி நட்புச் செய்தவருக்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை. (௭௱௯௧)
—சாலமன் பாப்பையா
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பில் விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும் (௭௱௯௰௧)
-மு. கருணாநிதி.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். (௭௦௨ - 792)
பலப்பல வகையாலும் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்குப் பெரும் துயரத்தைத் தந்துவிடும் (௭௱௯௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும். (௭௱௨)
-மு. வரதராசன்
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும். (௭௱௨)
—சாலமன் பாப்பையா
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிறது நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும் (௭௱௯௨)
-மு. கருணாநிதி
குணமும் குடிமையும் குற்றமும் குன்ற
இனனும் அறிந்தியாக்க நட்பு. (௭௱௩ - 793)
ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றங்குறைகளையும், நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையும் அறிந்தே, நட்புச் செய்ய வேண்டும் (௭௱௯௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும். (௭௱௯௰௩)
-மு. வரதராசன்
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க. (௭௱௯௰௩)
—சாலமன் பாப்பையா
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும் (௭௱௯௰௩)
-மு. கருணாநிதி
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. (௭௦௪ - 794)
உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை, எந்தப் பொருளைக் கொடுத்தானாலும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும் (௭௱௯௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடம் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும். (௭௱௯௪)
-மு. வரதராசன்
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும். (௭௱௯௪)
—சாலமன் பாப்பையா
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும் (௭௱௯௰௪)
-மு. கருணாநிதி
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல். (௭௱௯௫ - 795)
நாம் தவறு செய்யும் பொழுது கடுமையாகப் பேசும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும் (௭௱௯௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்வது வேண்டும். (௭௱௯௫)
-மு. வரதராசன்
நாம் தவறு செய்ய நினைத்தால் நம் மனம் நோகச் சொல்லியும் விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து ஆற்றலைப் பெற்று உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க. (௭௱௯௫)
—சாலமன் பாப்பையா
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும் (௭௱௯௰௫)
-மு. கருணாநிதி
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். (௭௱௯௬ - 796)
ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு; அது, நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக அது விளங்குவதுதான் (௭௱௯௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கேடு வந்தால் போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும். (௭௱௯௰௬)
-மு. வரதராசன்
எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு. (௭௱௯௰௬)
—சாலமன் பாப்பையா
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது (௭௱௯௰௬)
-மு. கருணாநிதி
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். (௭௱௯௭ - 797)
ஒருவனுக்கு ஊதியமாவது யாதென்றால், அறிவற்றவர்களோடு அறியாமல் கொண்ட நட்பினை, அவரைப்பற்றித் தெரிந்த அப்பொழுதிலேயே விட்டுவிடுதல் ஆகும் (௭௱௯௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பில் நீங்கி அவரைக் கைவிடுதலாகும். (௭௱௯௰௭)
-மு. வரதராசன்
அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம். (௭௱௯௰௭)
—சாலமன் பாப்பையா
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் இருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும் (௭௱௯௰௭)
-மு. கருணாநிதி
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. (௭௱௯௮ - 798)
உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும் (௭௱௯௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமல் இருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்தால் கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். (௭௱௯௰௮)
-மு. வரதராசன்
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா. (௭௱௯௰௮)
—சாலமன் பாப்பையா
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும் (௭௱௯௰௮)
-மு. கருணாநிதி
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். (௭௱௯௯ - 799)
நாம் கெட்டுப் போன காலத்திலே, நம்மைக் கைவிட்டு விலகிப் போனவரின் நட்பைப் பற்றிச் சாகிற காலத்திலே நினைத்தாலும், நம் உள்ளம் வேதனையால் எரியும் (௭௱௯௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும். (௭௱௯௰௯)
-மு. வரதராசன்
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும். (௭௱௯௰௯)
—சாலமன் பாப்பையா
ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும் (௭௱௯௰௯)
-மு. கருணாநிதி
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. (௮௱ - 800)
குற்றம் இல்லாத நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்; தகுதியில்லாத கீழோரின் நட்பினை, ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிட வேண்டும் (௮௱)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும். (௮௱)
-மு. வரதராசன்
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக. (௮௱)
—சாலமன் பாப்பையா
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்க வேண்டும் (௮௱)
-மு. கருணாநிதி