மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல்
பேதைமை
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். (௮௱௩௰௧ - 831)
'பேதைமை' என்பதன் தன்மை யாது?' என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும் (௮௱௩௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். (௮௱௩௰௧)
-மு. வரதராசன்
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம். (௮௱௩௰௧)
—சாலமன் பாப்பையா
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டு (௮௱௩௰௧)
-மு. கருணாநிதி
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். (௮௱௩௰௨ - 832)
பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும் (௮௱௩௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும். (௮௱௩௰௨)
-மு. வரதராசன்
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும். (௮௱௩௰௨)
—சாலமன் பாப்பையா
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும் (௮௱௩௰௨)
-மு. கருணாநிதி
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். (௮௱௩௰௩ - 833)
பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்புகொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும், பேதையரது தொழிலாகும் (௮௱௩௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள். (௮௱௩௰௩)
-மு. வரதராசன்
தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும். (௮௱௩௰௩)
—சாலமன் பாப்பையா
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும் (௮௱௩௰௩)
-மு. கருணாநிதி
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். (௮௱௩௰௪ - 834)
நூல்களை முறையாக ஓதி உணர்ந்தும், பிறருக்குச் சொல்லி வரும், தான் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும், பெரிய பேதையர் உலகில் எவரும் இலர் (௮௱௩௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை. (௮௱௩௰௪)
-மு. வரதராசன்
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்களுக்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை. (௮௱௩௰௪)
—சாலமன் பாப்பையா
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாராலும் இருக்க முடியாது (௮௱௩௰௪)
-மு. கருணாநிதி
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. (௮௱௩௰௫ - 835)
இந்தப் பிறப்பில் பேதைமைச் செயல்களையே செய்துவரும் பேதை (௮௱௩௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான். (௮௱௩௰௫)
-மு. வரதராசன்
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான். (௮௱௩௰௫)
—சாலமன் பாப்பையா
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும் (௮௱௩௰௫)
-மு. கருணாநிதி
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின். (௮௱௩௰௬ - 836)
ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான் (௮௱௩௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான். (௮௱௩௰௬)
-மு. வரதராசன்
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான். (௮௱௩௰௬)
—சாலமன் பாப்பையா
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர் (௮௱௩௰௬)
-மு. கருணாநிதி
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் ஊற்றக் கடை. (௮௱௩௰௭ - 837)
பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர் (௮௱௩௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர். (௮௱௩௰௭)
-மு. வரதராசன்
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர். (௮௱௩௰௭)
—சாலமன் பாப்பையா
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது (௮௱௩௰௭)
-மு. கருணாநிதி
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின். (௮௱௩௰௮ - 838)
பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கல்லைப் பருகியது போல நிலைமாறி வழிதவறி நடப்பான் (௮௱௩௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும். (௮௱௩௰௮)
-மு. வரதராசன்
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கல்லால் மயங்கியும் நிற்பது போல் ஆகும். (௮௱௩௰௮)
—சாலமன் பாப்பையா
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கல்லையும் குடித்துவிட்ட கதையாகிவிடும் (௮௱௩௰௮)
-மு. கருணாநிதி
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். (௮௱௩௰௯ - 839)
ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால் (௮௱௩௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, எனவே பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும். (௮௱௩௰௯)
-மு. வரதராசன்
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு மிகவும் இனிமையானது! (௮௱௩௰௯)
—சாலமன் பாப்பையா
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனெனில் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை (௮௱௩௰௯)
-மு. கருணாநிதி
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். (௮௪௦ - 840)
சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும் (௮௱௪௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது. (௮௱௪௰)
-மு. வரதராசன்
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும். (௮௱௪௰)
—சாலமன் பாப்பையா
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது (௮௱௪௰)
-மு. கருணாநிதி
பொருட்பால்
நட்பியல்
பேதைமை
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். (௮௱௩௰௧ - 831)
'பேதைமை' என்பதன் தன்மை யாது?' என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும் (௮௱௩௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். (௮௱௩௰௧)
-மு. வரதராசன்
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம். (௮௱௩௰௧)
—சாலமன் பாப்பையா
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டு (௮௱௩௰௧)
-மு. கருணாநிதி
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். (௮௱௩௰௨ - 832)
பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும் (௮௱௩௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும். (௮௱௩௰௨)
-மு. வரதராசன்
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும். (௮௱௩௰௨)
—சாலமன் பாப்பையா
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும் (௮௱௩௰௨)
-மு. கருணாநிதி
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். (௮௱௩௰௩ - 833)
பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்புகொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும், பேதையரது தொழிலாகும் (௮௱௩௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள். (௮௱௩௰௩)
-மு. வரதராசன்
தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும். (௮௱௩௰௩)
—சாலமன் பாப்பையா
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும் (௮௱௩௰௩)
-மு. கருணாநிதி
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். (௮௱௩௰௪ - 834)
நூல்களை முறையாக ஓதி உணர்ந்தும், பிறருக்குச் சொல்லி வரும், தான் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும், பெரிய பேதையர் உலகில் எவரும் இலர் (௮௱௩௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை. (௮௱௩௰௪)
-மு. வரதராசன்
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்களுக்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை. (௮௱௩௰௪)
—சாலமன் பாப்பையா
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாராலும் இருக்க முடியாது (௮௱௩௰௪)
-மு. கருணாநிதி
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. (௮௱௩௰௫ - 835)
இந்தப் பிறப்பில் பேதைமைச் செயல்களையே செய்துவரும் பேதை (௮௱௩௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான். (௮௱௩௰௫)
-மு. வரதராசன்
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான். (௮௱௩௰௫)
—சாலமன் பாப்பையா
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும் (௮௱௩௰௫)
-மு. கருணாநிதி
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின். (௮௱௩௰௬ - 836)
ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான் (௮௱௩௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான். (௮௱௩௰௬)
-மு. வரதராசன்
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான். (௮௱௩௰௬)
—சாலமன் பாப்பையா
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர் (௮௱௩௰௬)
-மு. கருணாநிதி
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் ஊற்றக் கடை. (௮௱௩௰௭ - 837)
பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர் (௮௱௩௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர். (௮௱௩௰௭)
-மு. வரதராசன்
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர். (௮௱௩௰௭)
—சாலமன் பாப்பையா
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது (௮௱௩௰௭)
-மு. கருணாநிதி
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின். (௮௱௩௰௮ - 838)
பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கல்லைப் பருகியது போல நிலைமாறி வழிதவறி நடப்பான் (௮௱௩௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும். (௮௱௩௰௮)
-மு. வரதராசன்
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கல்லால் மயங்கியும் நிற்பது போல் ஆகும். (௮௱௩௰௮)
—சாலமன் பாப்பையா
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கல்லையும் குடித்துவிட்ட கதையாகிவிடும் (௮௱௩௰௮)
-மு. கருணாநிதி
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். (௮௱௩௰௯ - 839)
ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால் (௮௱௩௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, எனவே பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும். (௮௱௩௰௯)
-மு. வரதராசன்
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு மிகவும் இனிமையானது! (௮௱௩௰௯)
—சாலமன் பாப்பையா
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனெனில் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை (௮௱௩௰௯)
-மு. கருணாநிதி
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். (௮௪௦ - 840)
சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும் (௮௱௪௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது. (௮௱௪௰)
-மு. வரதராசன்
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும். (௮௱௪௰)
—சாலமன் பாப்பையா
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது (௮௱௪௰)
-மு. கருணாநிதி