மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல் புல்லறிவாண்மை
புல்லறிவாண்மை
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. (௮௦௪௧ - 841)
அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது (௮௱௪௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. (௮௱௪௧)
-மு. வரதராசன்
இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமைக் கருதமாட்டார். (௮௱௪௧)
—சாலமன் பாப்பையா
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது (௮௱௪௰௧)
-மு. கருணாநிதி
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிரிதியாதும்
இல்லை பெறுவான் தவம். (௮௦௪௨ - 842)
அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை (௮௱௪௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். (௮௦௪௨)
-மு. வரதராசன்
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே. (௮௦௪௨)
—சாலமன் பாப்பையா
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும் (௮௱௪௰௨)
-மு. கருணாநிதி
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. (௮௱௪௩ - 843)
அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும் (௮௱௪௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும். (௮௱௪௰௩)
-மு. வரதராசன்
அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது. (௮௱௪௰௩)
—சாலமன் பாப்பையா
எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள் (௮௱௪௰௩)
-மு. கருணாநிதி
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. (௮௦௪௪ - 844)
'அறியாமை என்று சொல்லப்படுவது யாது?' என்றால், அ·து, அறிவில்லாதவனும், 'தான் அறிவுடையவன்' என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்! (௮௱௪௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துக்கொள்ளும். (௮௱௪௪)
-மு. வரதராசன்
அறிவின்மை என்று சொல்லப்படுவது என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்றும் மயக்கமே ஆகும். (௮௱௪௪)
—சாலமன் பாப்பையா
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்து கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும் (௮௱௪௰௪)
-மு. கருணாநிதி
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும். (௮௦௪௫ - 845)
தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும் (௮௱௪௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களைக் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும். (௮௱௪௫)
-மு. வரதராசன்
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும். (௮௱௪௫)
—சாலமன் பாப்பையா
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும்போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும் (௮௱௪௫)
-மு. கருணாநிதி
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. (௮௱௪௬ - 846)
தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும் (௮௱௪௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும். (௮௱௪௬)
-மு. வரதராசன்
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே. (௮௱௪௬)
—சாலமன் பாப்பையா
நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும் (௮௱௪௰௬)
-மு. கருணாநிதி
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (௮௱௪௭ - 847)
அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான் (௮௱௪௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரிய மறைபொருளை மனதில் வைத்து காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான். (௮௱௪௭)
-மு. வரதராசன்
அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான். (௮௱௪௭)
—சாலமன் பாப்பையா
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவாளிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள் (௮௱௪௰௭)
-மு. கருணாநிதி
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓம் அளவுமோர் நோய். (௮௱௪௮ - 848)
அறிவுடையோர் 'இன்னின்னபடி செய்க' என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான் (௮௱௪௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும். (௮௱௪௰௮)
-மு. வரதராசன்
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே. (௮௱௪௰௮)
—சாலமன் பாப்பையா
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுவதும் அவரை விட்டு நீங்காத நோயாகும் (௮௱௪௰௮)
-மு. கருணாநிதி
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. (௮௱௪௯ - 849)
தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான் (௮௱௪௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான். (௮௱௪௯)
-மு. வரதராசன்
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான். (௮௱௪௯)
—சாலமன் பாப்பையா
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான் (௮௱௪௰௯)
-மு. கருணாநிதி
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். (௮௱௫௰ - 850)
உலகத்தார் 'உண்டு' என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே 'இல்லை' என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான் (௮௱௫௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகில் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான். (௮௱௫௰)
-மு. வரதராசன்
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான். (௮௱௫௰)
—சாலமன் பாப்பையா
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும் (௮௱௫௰)
-மு. கருணாநிதி
பொருட்பால்
நட்பியல் புல்லறிவாண்மை
புல்லறிவாண்மை
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. (௮௦௪௧ - 841)
அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது (௮௱௪௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. (௮௱௪௧)
-மு. வரதராசன்
இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமைக் கருதமாட்டார். (௮௱௪௧)
—சாலமன் பாப்பையா
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது (௮௱௪௰௧)
-மு. கருணாநிதி
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிரிதியாதும்
இல்லை பெறுவான் தவம். (௮௦௪௨ - 842)
அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை (௮௱௪௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். (௮௦௪௨)
-மு. வரதராசன்
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே. (௮௦௪௨)
—சாலமன் பாப்பையா
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும் (௮௱௪௰௨)
-மு. கருணாநிதி
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. (௮௱௪௩ - 843)
அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும் (௮௱௪௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும். (௮௱௪௰௩)
-மு. வரதராசன்
அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது. (௮௱௪௰௩)
—சாலமன் பாப்பையா
எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள் (௮௱௪௰௩)
-மு. கருணாநிதி
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. (௮௦௪௪ - 844)
'அறியாமை என்று சொல்லப்படுவது யாது?' என்றால், அ·து, அறிவில்லாதவனும், 'தான் அறிவுடையவன்' என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்! (௮௱௪௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துக்கொள்ளும். (௮௱௪௪)
-மு. வரதராசன்
அறிவின்மை என்று சொல்லப்படுவது என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்றும் மயக்கமே ஆகும். (௮௱௪௪)
—சாலமன் பாப்பையா
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்து கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும் (௮௱௪௰௪)
-மு. கருணாநிதி
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும். (௮௦௪௫ - 845)
தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும் (௮௱௪௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களைக் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும். (௮௱௪௫)
-மு. வரதராசன்
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும். (௮௱௪௫)
—சாலமன் பாப்பையா
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும்போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும் (௮௱௪௫)
-மு. கருணாநிதி
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. (௮௱௪௬ - 846)
தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும் (௮௱௪௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும். (௮௱௪௬)
-மு. வரதராசன்
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே. (௮௱௪௬)
—சாலமன் பாப்பையா
நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும் (௮௱௪௰௬)
-மு. கருணாநிதி
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (௮௱௪௭ - 847)
அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான் (௮௱௪௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அரிய மறைபொருளை மனதில் வைத்து காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான். (௮௱௪௭)
-மு. வரதராசன்
அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான். (௮௱௪௭)
—சாலமன் பாப்பையா
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவாளிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள் (௮௱௪௰௭)
-மு. கருணாநிதி
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓம் அளவுமோர் நோய். (௮௱௪௮ - 848)
அறிவுடையோர் 'இன்னின்னபடி செய்க' என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான் (௮௱௪௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும். (௮௱௪௰௮)
-மு. வரதராசன்
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே. (௮௱௪௰௮)
—சாலமன் பாப்பையா
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுவதும் அவரை விட்டு நீங்காத நோயாகும் (௮௱௪௰௮)
-மு. கருணாநிதி
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. (௮௱௪௯ - 849)
தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான் (௮௱௪௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான். (௮௱௪௯)
-மு. வரதராசன்
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான். (௮௱௪௯)
—சாலமன் பாப்பையா
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான் (௮௱௪௰௯)
-மு. கருணாநிதி
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். (௮௱௫௰ - 850)
உலகத்தார் 'உண்டு' என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே 'இல்லை' என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான் (௮௱௫௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகில் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான். (௮௱௫௰)
-மு. வரதராசன்
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான். (௮௱௫௰)
—சாலமன் பாப்பையா
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும் (௮௱௫௰)
-மு. கருணாநிதி