மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல் பகைமாட்சி
பகைமாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. (௮௱௬௧ - 861)
தம்மை விட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிட வேண்டும்; தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும் (௮௱௬௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்ட எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். (௮௱௬௰௧)
-மு. வரதராசன்
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க. (௮௱௬௰௧)
—சாலமன் பாப்பையா
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும் (௮௱௬௰௧)
-மு. கருணாநிதி
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. (௮௱௬௨ - 862)
தன் சுற்றத்தாரிடம் அன்பில்லாதவன், வலிய துணையில்லாதவன், தானும் வலிமையற்றவன், பகைவரது வலிமையை எவ்வாறு, எதனால் போக்க முடியுமா? (௮௱௬௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும். (௮௱௬௰௨)
-மு. வரதராசன்
மக்களிடம் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலியை எப்படி அழிக்க முடியும்? (௮௱௬௰௨)
—சாலமன் பாப்பையா
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்? (௮௱௬௰௨)
-மு. கருணாநிதி
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. (௮௱௬௰௩ - 863)
அஞ்சுபவன், அறியவேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான் (௮௱௬௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன். (௮௱௬௰௩)
-மு. வரதராசன்
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிகவும் எளிது. (௮௱௬௰௩)
—சாலமன் பாப்பையா
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான் (௮௱௬௰௩)
-மு. கருணாநிதி
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (௮௱௬௰௪ - 864)
நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன் மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும் (௮௱௬௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன். (௮௱௬௰௪)
-மு. வரதராசன்
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது. (௮௱௬௰௪)
—சாலமன் பாப்பையா
சினத்தையும் மனத்தையும் முடியாதவர்கள், எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம் (௮௱௬௰௪)
-மு. கருணாநிதி
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. (௮௱௬௫ - 865)
நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன், ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும் (௮௱௬௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியவன். (௮௱௬௫)
-மு. வரதராசன்
நீதி நூல்கள் ’சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது. (௮௱௬௫)
—சாலமன் பாப்பையா
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பு இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான் (௮௱௬௰௫)
-மு. கருணாநிதி
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். (௮௱௬௰௬ - 866)
தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமான சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும் (௮௱௬௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும். (௮௱௬௰௬)
-மு. வரதராசன்
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்பப்படும். (௮௱௬௰௬)
—சாலமன் பாப்பையா
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம் (௮௱௬௰௬)
-மு. கருணாநிதி
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்து
மானாத செய்வான் பகை. (௮௱௬௰௭ - 867)
தொடங்கும்போது உடனடியாக, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருட்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும் (௮௱௬௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும். (௮௱௬௰௭)
-மு. வரதராசன்
ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும். (௮௱௬௰௭)
—சாலமன் பாப்பையா
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும் (௮௱௬௰௭)
-மு. கருணாநிதி
குணநிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து. (௮௱௬௰௮ - 868)
நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன், எவ்வகைத் துணையுமே இல்லாதவன் ஆவான்; அப்படி இல்லாததே அவன் பகைவருக்குத் துணையாகும் (௮௱௬௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும். (௮௱௬௰௮)
-மு. வரதராசன்
நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாமல் போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம். (௮௱௬௰௮)
—சாலமன் பாப்பையா
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார் (௮௱௬௰௮)
-மு. கருணாநிதி
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். (௮௱௬௯ - 869)
நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு, உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும் (௮௱௬௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்களுக்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும். (௮௱௬௰௯)
-மு. வரதராசன்
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா. (௮௱௬௰௯)
—சாலமன் பாப்பையா
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும் (௮௱௬௰௯)
-மு. கருணாநிதி
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தோளி. (௮௱௭௰ - 870)
நீதி நூலைக் கல்லாதவனோடு பகை கொண்டு அழிப்பதனால் வரும் சிறுபொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது (௮௱௭௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது. (௮௱௭௰)
-மு. வரதராசன்
நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது புகழ் சேராது. (௮௱௭௰)
—சாலமன் பாப்பையா
போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும் (௮௱௭௰)
-மு. கருணாநிதி
பொருட்பால்
நட்பியல் பகைமாட்சி
பகைமாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. (௮௱௬௧ - 861)
தம்மை விட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிட வேண்டும்; தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும் (௮௱௬௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்ட எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். (௮௱௬௰௧)
-மு. வரதராசன்
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க. (௮௱௬௰௧)
—சாலமன் பாப்பையா
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும் (௮௱௬௰௧)
-மு. கருணாநிதி
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. (௮௱௬௨ - 862)
தன் சுற்றத்தாரிடம் அன்பில்லாதவன், வலிய துணையில்லாதவன், தானும் வலிமையற்றவன், பகைவரது வலிமையை எவ்வாறு, எதனால் போக்க முடியுமா? (௮௱௬௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும். (௮௱௬௰௨)
-மு. வரதராசன்
மக்களிடம் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலியை எப்படி அழிக்க முடியும்? (௮௱௬௰௨)
—சாலமன் பாப்பையா
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்? (௮௱௬௰௨)
-மு. கருணாநிதி
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. (௮௱௬௰௩ - 863)
அஞ்சுபவன், அறியவேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான் (௮௱௬௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன். (௮௱௬௰௩)
-மு. வரதராசன்
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிகவும் எளிது. (௮௱௬௰௩)
—சாலமன் பாப்பையா
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான் (௮௱௬௰௩)
-மு. கருணாநிதி
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (௮௱௬௰௪ - 864)
நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன் மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும் (௮௱௬௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன். (௮௱௬௰௪)
-மு. வரதராசன்
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது. (௮௱௬௰௪)
—சாலமன் பாப்பையா
சினத்தையும் மனத்தையும் முடியாதவர்கள், எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம் (௮௱௬௰௪)
-மு. கருணாநிதி
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. (௮௱௬௫ - 865)
நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன், ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும் (௮௱௬௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியவன். (௮௱௬௫)
-மு. வரதராசன்
நீதி நூல்கள் ’சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது. (௮௱௬௫)
—சாலமன் பாப்பையா
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பு இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான் (௮௱௬௰௫)
-மு. கருணாநிதி
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். (௮௱௬௰௬ - 866)
தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமான சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும் (௮௱௬௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும். (௮௱௬௰௬)
-மு. வரதராசன்
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்பப்படும். (௮௱௬௰௬)
—சாலமன் பாப்பையா
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம் (௮௱௬௰௬)
-மு. கருணாநிதி
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்து
மானாத செய்வான் பகை. (௮௱௬௰௭ - 867)
தொடங்கும்போது உடனடியாக, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருட்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும் (௮௱௬௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும். (௮௱௬௰௭)
-மு. வரதராசன்
ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும். (௮௱௬௰௭)
—சாலமன் பாப்பையா
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும் (௮௱௬௰௭)
-மு. கருணாநிதி
குணநிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து. (௮௱௬௰௮ - 868)
நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன், எவ்வகைத் துணையுமே இல்லாதவன் ஆவான்; அப்படி இல்லாததே அவன் பகைவருக்குத் துணையாகும் (௮௱௬௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும். (௮௱௬௰௮)
-மு. வரதராசன்
நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாமல் போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம். (௮௱௬௰௮)
—சாலமன் பாப்பையா
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார் (௮௱௬௰௮)
-மு. கருணாநிதி
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். (௮௱௬௯ - 869)
நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு, உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும் (௮௱௬௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்களுக்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும். (௮௱௬௰௯)
-மு. வரதராசன்
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா. (௮௱௬௰௯)
—சாலமன் பாப்பையா
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும் (௮௱௬௰௯)
-மு. கருணாநிதி
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தோளி. (௮௱௭௰ - 870)
நீதி நூலைக் கல்லாதவனோடு பகை கொண்டு அழிப்பதனால் வரும் சிறுபொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது (௮௱௭௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது. (௮௱௭௰)
-மு. வரதராசன்
நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது புகழ் சேராது. (௮௱௭௰)
—சாலமன் பாப்பையா
போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும் (௮௱௭௰)
-மு. கருணாநிதி