• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 92

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல்

வரைவின் மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். (௱௧ - 911)


அன்பால் விரும்பாமல், அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சு, அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும் (௯௱௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும். (௱௰௧)
-மு. வரதராசன்

அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளியின் இனிய சொற்கள் துன்பமே தரும். (௱௰௧)
—சாலமன் பாப்பையா

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமக்கள் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுபவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும் (௯௱௰௧)
-மு. கருணாநிதி

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நல்லா விடல். (௧௨ - 912)


ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதனை அடையும் வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டு விடுக (௯௱௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும். (௮௰௨)
-மு. வரதராசன்

ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளியின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக. (௮௰௨)
—சாலமன் பாப்பையா

ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது (௯௱௰௨)
-மு. கருணாநிதி

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று (௱௰௩ - 913)


கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும் (௯௱௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது. (௯௱௰௩)
-மு. வரதராசன்

பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளியின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போல. (௱௰௩)
—சாலமன் பாப்பையா

விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும் (௯௱௰௩)
-மு. கருணாநிதி

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஐயும் அறிவி னர். (914)


இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொதுமகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பினார் (௯௱௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார். (௮௰௪)
-மு. வரதராசன்

அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளியின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார். (௮௰௪)
—சாலமன் பாப்பையா

அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள் (௯௱௰௪)
-மு. கருணாநிதி

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னர். (௱௰௫ - 915)


இயற்கையான மதிநலத்தால் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர்கள், பொருள் தருவார்க்கெல்லாம் பொதுவான ஆசைகாட்டும் மகளிரது இழிவான நலத்தைத் தீண்டார் (௯௱௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருத்தார். (௱௰௫)
-மு. வரதராசன்

இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவை உடையவர், பாலியல் தொழிலாளியின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார். (௱௰௫)
—சாலமன் பாப்பையா

இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமக்கள் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள் (௯௱௰௫)
-மு. கருணாநிதி

தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். (௱௬ - 916)


தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை, விலை தருவரிடம் எல்லாம் பரப்பும் பொது மகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்டமாட்டார் (௯௱௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அழகு முதலியவற்றால் செருக்குக் கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார். (௱௰௬)
-மு. வரதராசன்

தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளியின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார். (௱௰௬)
—சாலமன் பாப்பையா

புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார் (௯௱௰௬)
-மு. கருணாநிதி

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். (௱௰௭ - 917)


நெஞ்சிலே பொருள் மேல் ஆசைகொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர் (௯௱௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர். (௱௰௭)
-மு. வரதராசன்

பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளியின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர். (௱௰௭)
—சாலமன் பாப்பையா

உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர் (௯௱௰௭)
-மு. கருணாநிதி

ஐயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. (௱௰௮ - 918)


வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ் வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, 'அணங்குத் தாக்கு' என்று சொல்வார்கள் (௯௱௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்க(மோகினி மயக்கு) என்று கூறுவர். (௱௰௮)
-மு. வரதராசன்

வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளியின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர். (௱௰௮)
—சாலமன் பாப்பையா

வஞ்சக எண்ணங்கொண்ட ``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள் (௯௱௰௮)
-மு. கருணாநிதி

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. (௱௰௯ - 919)


உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும் (௯௱௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும். (௱௰௯)
-மு. வரதராசன்

வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும். (௱௰௯)
—சாலமன் பாப்பையா

விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் ``நரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை (௯௱௰௯)
-மு. கருணாநிதி

இருமனப் பெண்டிரும் கல்லும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. (௨௦ - 920)


எப்போதும் கவர்ந்த மனத்தையுடைய மகளிரும், கல்லும், சூதும், என்னும் மூன்று தொடர்புகளும், திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும் (௯௱௨௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கல்லும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும். (௯௨௰)
-மு. வரதராசன்

உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும். (௯௨௰)
—சாலமன் பாப்பையா

இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும் (௯௱௨௰)
-மு. கருணாநிதி