• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 94

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல் சூது
சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. (௱௩௰௧ - 931)


தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம் (௱௩௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது. (௱௩௰௧)
-மு. வரதராசன்

வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம். (௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முல்லையே கௌவிக் கொண்டது போலாகிவிடும் (௱௩௰௧)
-மு. கருணாநிதி

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. (௯௩௨ - 932)


பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ? (௯௩௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ. (௯௩௰௨)
-மு. வரதராசன்

ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழ ஒரு வழி உண்டாகுமோ? (௯௩௰௨)
—சாலமன் பாப்பையா

ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது? (௯௩௰௨)
-மு. கருணாநிதி

உருளாயம் ஓவது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். (௱௩௰௩ - 933)


உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம் போய்ச் சேர்ந்துவிடும் (௯௱௩௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினாள், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும். (௱௩௰௩)
-மு. வரதராசன்

சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும். (௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

பணயம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும் (௯௱௩௰௩)
-மு. கருணாநிதி

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். (௯௩௰௪ - 934)


தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப் போல், வறுமையைத் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை (௯௱௩௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை. (௱௩௰௪)
-மு. வரதராசன்

துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை. (௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை (௯௱௩௰௪)
-மு. கருணாநிதி

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவர்யார் இல்லகி யார். (௱௩௰௫ - 935)


முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்து, தற்போது இல்லாதவரானவர்கள், சுவற்றினையும், அ·தாடும் களத்தினையும், கைத்திறனையும், மேற்கொண்டு விடாதவரே (௯௱௩௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார். (௱௩௰௫)
-மு. வரதராசன்

சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு. (௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்கான முயற்சியை கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள் (௯௱௩௰௫)
-மு. கருணாநிதி

அகடாரர் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். (௱௩௰௬ - 936)


சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள் (௯௱௩௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர். (௱௩௰௬)
-மு. வரதராசன்

சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர். (௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள் (௯௱௩௰௬)
-மு. கருணாநிதி

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். (௱௩௰௭ - 937)


நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது, தொன்று தொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்துவிடும் (௯௱௩௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும். (௱௩௰௭)
-மு. வரதராசன்

சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும். (௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும் (௯௱௩௰௭)
-மு. கருணாநிதி

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. (௱௩௰௮ - 938)


பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது, ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும் (௯௱௩௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும். (௱௩௰௮)
-மு. வரதராசன்

சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும். (௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது (௯௱௩௰௮)
-மு. கருணாநிதி

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையவாம் ஆயங் கொளின். (௱௩௰௯ - 939)


சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும் (௯௱௩௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும். (௱௩௰௯)
-மு. வரதராசன்

சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்ட. (௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும் (௯௱௩௰௯)
-மு. கருணாநிதி

இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறுஉம் காதற்று உயிர். (௯௪௦ - 940)


இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பம் கொள்ளுகின்ற சூதனைப் போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த மேன்மேலும் அதனை விரும்பும் (௯௱௪௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் வைத்து இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும். (௯௪௰)
-மு. வரதராசன்

துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும். (௯௪௰)
—சாலமன் பாப்பையா

பொருளை இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான் (௯௱௪௰)
-மு. கருணாநி