• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕 48

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
75
89
18
Madurai
பச்சிளம் பிள்ளை போல் பஞ்சனையில் தவழ்ந்தவனின் கண்களில் மருந்துக்கும் உறக்கம் இல்லாமல் சிவந்து போய் காட்ச்சி அளித்தது..

அன்று மருத்துவமனையில் அவளின் கதகதப்பில் சுகமாக தூகத்தை வாரி கொண்டு மூடிய கண்கள் மீண்டு அதே போல் மூடி கொள்ள அப்போது கிடைத்த அவளின் அதே போலான கதகதப்பை கேட்டு நின்றதிற்கு சூழல் ஏதிர்பதமாக விழி எதிர்பார்த்த விசயத்தை எட்டாக்கனியாக்கியதில் அவனுக்கு தூக்கமும் எட்டாக்கனியாகி போனது..

தூக்கதோடு நிம்மதியும் தொலைந்ததாய் ஆசுவாசமாக கண்களை கூட மூட முடியாது இமை குடைக்குள் சிரித்த முகமாக தோன்றி சதிராட்டம் காட்டியவளில் பிம்பத்தை பார்த்து நொந்தே போனவன் ஏன்டி இப்படி பண்ணுற தூங்க விடுடி உன்கிட்ட வம்பு இழுத்ததுக்கு எல்லாம் இப்போ என்ன பழி வாங்குறியாடி பீளிஸ் சனாமா தூங்க விடுடி என்று என்னமோ அவள் தான் அவன் இமைகளுக்கு இடையை விரலை உன்றி அவன் உறக்கத்தை தடுத்ததாய் மானசீகமாக அவளிடம் செல்ல சன்டையிட்டு கெஞ்சலில் இறங்கி இருந்தான் அவன்...


அஞ்சனா உனக்கு வேண்டாம் என்றாவது அவளாள் நீ காயப்பட்டு போவாய் என்று ஆணித்தரமான உறுதியோடு ஏற்க்க துனிந்த மனதை அனைக்கட்டி தடுப்பதாய் சதி செய்த மூளையை சாமாதானம் படுத்தும்படி எதை முன் வைப்பது என்று குழம்பியவன் மூளைக்கும் மனதிற்கு இடையில் மாட்டி இருதலைகொள்ளு எறும்பாய் துன்ப பட்டு போனவனுக்கு இந்த இடர்பாட்டில் இருந்து மீண்டு வருவும் கூட குழந்தையாய் அஞ்சனாவின் இதமான அரவனைப்பை வேண்டி நின்றான் இந்த பெரிய சைஸ் குழந்தை...

இருபக்கமும் ஏதோ ஓர் கோனத்தில் பார்க்கையில் ஒருவருக்கு ஒருவர் மேல் தோன்றிய ஈர்ப்பே இருவரையும் காரணமின்றி சண்டை கலத்திற்கு இழுத்து வந்து விட்டதை இருவரும் அறியாது போனார்கள் பாவம்...

ஈர்ப்பின் தூண்டுதலில் ஏதோ பரம ஏதிரி போல் நின்று கொண்டு சின்ன பிள்ளை தனமாக சண்டையிடுவது வழக்கமாகி போய் ஒரு கட்டத்தில் தேவாவிற்கு அது விரும்பிய பொழுது போக்காகவே மாறியதோடு உடலில் சுரந்த காதல் ஹார்மோன் தூண்டுதலின் பெயரில் அவளை ரசிக்கவும் தொடங்கியவனுக்கு அதன் சாரம்சத்தை பிரித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு எல்லாம் முன்னேறாது போனதில் அவன் ரசனை என்னும் கட்டதிலேயே தேங்கி போனான்..


மூக்கு நுனி சிவக்க கண்கள் திருதிருக்க சிலுப்பி நிற்க்கும் செல்ல முயல்குட்டியை காணவே பல நேரங்களில் வழிய சென்று சன்டை இழுத்ததும் உண்டு...

ரசிப்பவனின் மனம் பழமாக குழைந்தாலும் முகம் மட்டும் வீராப்பை விடாது இழுத்து பிடிப்பதாய் உர் என்றே இருப்பது ரசிக்க தோதாகி போனது...

உர் என்று பார்வையால் செல்லமாக மிரட்டுபவனின் பார்வையில் ஜெர்க்கானாலும் அவனுக்கு சலைக்காது உள்ளுக்குள் ஒளித்து மறைத்து வெளியே விரப்பாக சிலிர்த்து நிற்பது அவளின் வழக்கத்தினுள் ஒன்று...

அவளின் நினைவலைகள் தன் நெஞ்சம் என்னும் கறையை முட்டி சுக அவஸ்தையை கூட்டியதில் பித்துபிடிக்காத குறையாக கட்டிலில் புரண்டவனின் காதை தீண்டிய அவனவளின் குரலில் வந்துருக்காலா என்ற ஆரவத்தோடு பக்கம் இருந்த வாக்கரை இழுத்து உண்றி கதவு பக்கம் ஓடியிருந்தான் தேவா...


அன்றுக்கு பிறகு அவனை நா பார்க்கவே மாட்டேனே என்ன பார்த்து என்ன கேட்டான் போகட்டும் என் லவ்வை அவன்கிட்ட சொல்லவே மாட்டேன் என பக்கம் பக்கமாக மனதிடம் வீரவசனம் வாசித்த மானஸ்தி இன்று இங்கு வந்து நின்றதற்கு காரணம் என்னவோ...

அஞ்சலி என்ற அப்பாவி பெண்ணை சாக்கிட்டு தன்னவனை பார்க்க ஒடோடி வந்தவள் பேச்சிற்காக கூட முதலில் அஞ்சலியை போய் பார்க்காது வீட்டிற்குள் நுழைந்ததும் தன்னவனை கண்களால் அலசி தேடும் வேட்டையில் இறங்கி இருந்தாள்...


அங்கும் இங்குமாய் பார்வை சுழட்டியபடி நின்றவளில் பக்கம் வந்த சாந்தி அவள் தோள் தட்டி பாப்பா நீ எங்க இங்க என கேட்வருக்கு அவளை ஒரிரு முறை பார்த்த நியாபகத்தோடு அவளோடு அப்போது நன்றாக கழித்த தருணங்களும் நினைவலைகளில் இதமாக பதிந்திருந்ததில் மகிழ்ச்சியாகவே அவளை வரவேற்றவள் அடுத்ததாக அவள் பக்கம் இருந்த புதிய ஆடவனை கண் சுருக்கி பார்த்து யாரு இந்த தம்பி என கேட்க...

சிறிதாக சிரித்தவள் அவள் அடுக்கிய கேள்விக்கு வரிசையாக பதில் அளிக்க தொடங்கியவளாய் அஞ்சலியை பாக்க வந்தேன் அக்கா இது என் அண்ணா வைத்திஸ்வரன் இவனும் அவளை பார்க்கனும்னு சொன்னான் அதான் கூட்டிட்டு வந்தேன் என்று பதிலை அடுக்கியவளிடம் ஒஒ என்றவர் வைத்தியை பார்த்தும் சினேகமாக சிரித்து வைத்து கொண்டவர் அஞ்சலி தோட்ட பக்கம் தான் அதர்ஷன் தம்பி கூட இருக்கா போய் பாருங்க என அவர் சென்று விட இவர்களும் தோட்டத்து பக்கம் நகர்ந்தனர்...நகரும் போதும் கண்களை சுழட்டி தேவாவை தேடுவதை விடாது தொடர்ந்தபடி தோட்டத்திற்கு வந்திருந்தாள்...


அஞ்சனா வேனலைக்காக சென்னையில் தங்கி இருப்பதால் அடிக்கடி வந்து பார்த்து அவள் நலனை விசாரித்து கொள்வான் வைத்தீஸ்வரன்...

அப்படி ஒரு தடவை தன் தங்கையை பார்க்க வந்த போது தான் அவன் அஞ்சலியையும் பார்த்திருந்தான் பார்த்தமாத்திரத்தில் மிக இளகுவாக தன்னிடம்‌ ஒட்டி கொன்டு உரிமையோடு உரையாட தொடங்கியது அவனுக்கும் பிடித்து போக அவளையும் தன் தங்கை என்னும் அனியில் ஒருவளாக சேர்த்து கொண்டிருந்தான் அந்த பாசமலர்...


அஞ்சனாவின் குரல் கேட்டு வேவேகமாக வெளி வந்த தேவாவின் முகம் அவளின் அரவம் அங்கு தெரியாததில் சுருங்கியபோனதோடு ஒருவேலை பிரம்மையோ என்ற குழப்பத்தோடு நின்றவனின் முகம் மீண்டு மலர தோட்டத்திற்கு பக்கம் ஓடி இருந்தவனின் முகம் தூக்கமின்மையின் சோர்வை தாண்டி மலர்வதாய்...


வைத்தியை கண்டதும் ஒடி வந்து அனைத்து கொண்ட அஞ்சலி பின் சில நிமிடத்தில் அவனை பிரிந்து இப்போ தான் என்னை பாக்க வர உங்களுக்கு நேரம் கிடைச்சுசா அன்னைக்கு என்ன சொன்னிங்க அஞ்சனா அக்காவை பாக்க வரும் போது எல்லாம் உன்னையும் பார்பேன்னு சொன்னிங்க தான ஆனா நீங்க அதுக்கு அப்பறம் இன்னைக்கு தான் வரிங்க என செல்ல சண்டைக்கு அழைப்புவிடுத்தவளை கண்டு சிரித்தவன்...


சாரி தப்பு தான் வேணும்னா நீ எதாவது என்ன பனிஷ் பண்ணிரு என்று கூறவும் சரி என மண்டையை ஆட்டி யோசிச்சு பனிஷ்மேன்ட் தாரேன் இப்போ வாங்க என இத்தனை நேரம் அவளின் செல்ல சண்டையை ரசித்தபடி பார்த்து நின்றிருந்த அதர்ஷனிடம் வைத்தீயை அழைத்து வந்து அறிமுக படுத்தி வைத்ததை தொடர்ந்து அவனும் அவனை சினேக புன்னகையுடன் மெதுவாக அனைத்து விடுத்து வறவேற்றான்...

அறிமுக படலம் முடிந்த பின் நால்வரும் பொதுவான பேச்சில் முழ்கி இருந்த நேரத்தில் தான் அங்கு வந்து நின்றிருந்தான் தேவா...


தேவாவின் அரவத்தை கண்டு கொண்டதும் அறிவிப்பு இன்றி அவளுள் உட்புகுந்த நானத்தில் அவனை நிமிர்ந்த பார்க்க கூட முடியாது அளவிற்கு கூச்சமுற்று போனவள் அவன் பக்கம் பார்வையை திருப்பாது அஞ்சலியிடம் பேசவதிலேயே தன்னை முனைப்பாக்கி கொண்டாள் அவள்...


அவள் குரலில் வீசைக்கேற்ப்ப அவன் கால்கள் நடைப்போட்டு தோட்டத்திற்கு பக்கம் வந்து நின்ற அடுத்து முகத்தில் இருந்த மலர்ச்சிக்கு மேலும் தீணி கிடைக்காததாய் தட்டுபாடு ஏற்பட்டு குன்றி போனதோடு சிறு கடுகடுப்பும் முகிழ்ந்தெழுந்தது...

அஞ்சனாவிற்கு சிறு இடைவெளி விட்டு அமர்ந்திருந்த வைத்தீயை பார்த்து முகத்தை சுருக்கியவனை கண்டு கொண்ட அதர்ஷன்..

தேவா நீ ஏன் இங்க வந்த என அழைத்து அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பியவன் மேலும் தொடர்ச்சியாக டேய் உன் கையும் காலையும் கொஞ்சம் குனம் ஆகுற வரை அடக்கி வைச்சுட்டு ஒரு இடத்துல உக்கார முடியாதா எப்ப பார்த்தாலும் துரு துருனு வர என்ற கேட்டவனிடம் அஞ்சனாவை ஒரு முறை ஆழ பார்த்து அவன் புறம் திரும்பி சும்மா இருந்தா கால் வலிக்குதுனா அதான் கொஞ்சம் நடந்தா நல்லா இருக்கும்னு நடக்க வந்தேன் என்றதும் சரி நடந்தது போதும் வந்து உக்காறு என்று அவன் கூறிவிட்ட பின் திருப்பி செல்லவும் முடியாது கட்டாயமாக அதர்ஷன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான் அவன்...

வந்து அமர்ந்ததில் இருந்து அஞ்சனாவையே பார்வையால் வட்டமடித்த தேவாவை கண்டு கொண்ட அதர்ஷனோ அதனை சிறு சிரிப்புடன் உள்வாங்கி கொண்ட போதும் காணதது போல் வைத்தியிடம் பேசவதிலேயே கருத்தாய் காட்டி கொண்டான்...

நால்வரும் பேச்சில் முழ்கி இருக்க அங்க தேவை இல்லாத ஆணியாக இடப்பெற்றதாய் அமர்ந்திருந்த தேவாவிற்கு அங்க இருப்பதே சற்று கூச்சமாக இருந்த போதும் அப்போதும் கண்கள் தன்னவளை வட்டமடிப்பதை நிறுத்தி இருக்கவில்லை...

தன்னை குறுகுறுக்கும் அவன் விழி வீச்சை உணர்ந்து கொண்டாளும் கடினப்பட்டு பார்வை நகர்த்தாது அஞ்சலி பக்கமே நிலை நிறுத்தி கொண்டாள் அவள்...

பேச்சு நீண்டு கொண்டே போனதற்கு தடையாய் வைத்தீயின் போன் இறைந்ததை தொடர்ந்து அப்போ நா கிளம்புறேன் அதர்ஷன் சார் டைம் ஆச்சு என பரபரப்பை காட்டி எழுந்து நின்றவனை பார்த்து அவனின் அவசரம் உணர்ந்தவனாய் சரி என தலை அசைத்த அதர்ஷனும் எழுந்து நின்று இனிமையாகவே விடை கொடுத்ததை அடுத்து அஞ்சலியை பார்த்து பத்திரமா இருக்கனும் சரி அடுத்து எப்ப வந்தாலும் கண்டிப்பா உன்ன பார்க்க வருவேன் பிராமிஸ் இந்த தடவை கண்டிப்பா பிராமிஸை மீர மாட்டேன் என சிரித்தபடி அவள் தலை வருடி கூறியதை அவளும் சிரித்தபடியே ஏற்று இருந்தாள்..


கடைசியாக அஞ்சனா புறம் திருப்பி சீக்கிரம் வீட்டுக்கு போய்ரு லேட் பண்ணாறிதா பாப்பா என பல அறிவுரையோடு நகர இருந்தவனிடம் நா சீக்கிரம் போய்ருவேன் நீ பாத்து போட்டுவா என அவனை அனைத்து வழி அனுப்பி வைத்தை கண்ட தேவாவிற்கோ மூக்கு காதில் புகை வராத நிலை...

அத்தனை நேரம் அசௌகரியமாக அங்கு இடம் பிடித்திருந்த தேவா வைத்தீ கிளம்புகிறேன் என்ற உடன் தான் சற்று நிம்மிதி பெருமூச்சு விட்டுறுக்க அதை கொஞ்ச நேரம் கூட நீண்டிக்க விடாது அஞ்சனா அவனை அனைத்ததில் மீண்டும் வேதாளம் முரங்கை மரம் ஏறியதாய் முகம் சுருங்க கடுகடுத்து போனான்...


அவன் சென்று விட்டதை அடுத்து அதர்ஷனும் தன் அம்முவிடம் அம்மு வா மாத்திரை சாப்பிடுற டைம் ஆச்சு என நாசுக்காக தேவா பார்வையின் அர்த்தம் உணர்ந்ததால் அவர்களுக்கு தனிமை வழங்கி தன்னவளை தூக்கி இடுப்பில் வைத்து கொள்ளாத குறையாக அழைத்து சென்றிருந்தான்..


இப்போது அஞ்சனாவும் தேவாவும் மட்டுமே அந்த இடத்தில் எஞ்சி இருக்க அப்போதும் கூட தன்னை நிமிர்ந்து பார்க்காது அமர்ந்திருப்பவளை கண்டு சிறிதாக அவனுள் கோபம் முகிழ்ந்தெழுந்தது...

நானத்தின் விழைவால் குனிந்திருந்தை பார்த்தவனுக்கோ அதன் முலகாரணம் வேறாக தோன்ற கோபத்தில் கொதித்து போனான்..


துளிர்த்த கோவத்தில் முகம் இறுக அவளை பார்த்து என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது பொருக்கி மாதிரி இருக்கா என சற்று காரம் தொனிக்க கேட்டதில் பட்டென நிமிர்ந்து அவனை பாரத்தவள் சிறு பயத்தோடு இல்லை என்பதாக தலை அசைத்தவளை இன்னும் கூட கோபம் குறையாமல் பார்த்தவன் படபடவென வார்த்தையை விட்டிருந்தான்...


நீ செய்றது எல்லாம் நீ என்ன பொறுக்கியா போட்ரெ பண்ணுற மாதிரி தான் இருக்கு...அன்னைக்கு என்னமோ நா உன்னை போர்ஸ் பண்ணி கட்டிக்கிட்ட மாதிரி பண்ணுற அன்னைக்கு நீயும் என்ஜாய் பண்ண தானா இப்போ என்ன சீன் கிரியேட் பண்ணுற என்று அவள் தன்னை பார்க்கவில்லையே என்ற ஆதங்கத்தில் விட்ட வார்த்தை அவள் மனதை காயப்படுத்தி இருந்தது...

பட்டென எழுந்து நின்றவள் அவனை இவ்வளவு தானா நீ என்னும் விதமாக ஒரு பார்வை பார்த்து விட்டு நகற இருந்தவளின் மணிக்கட்டை இறுக்கி பிடித்தவன் என்னடி திமிரா நா பேசிக்கிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு எழுந்து போற நா கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ என்ன பார்த்தா பொறுக்கி மாதிரி இருக்கா என்றவனை கண்ணீர் துளிர்க்க பார்த்தவள்..

நீங்களா ஒன்னு நினைச்சுகிட்டு என்ன கேள்வி கேட்டா அதுக்கு நா பொறுப்பாக முடியாது முதல்ல கைய விடுங்க வலிக்குது என்றவளின் மணிக்கட்டை இறுக்கியவன் என்னது நானா நினைச்சேனா சரி நானா நினைச்சேனே வச்சுகோ என்ன பார்த்தா ஏன்டி தலையை குனிச்சுகிட்டே போற நீயே சொல்லு அன்னைக்கு நா உன்ன அனைச்சுக்கும் போது நீ அமைதியா தான இருந்த இப்போ மட்டும் என்ன எழவுடி வந்துச்சு என அவள் பிடித்திருந்த கரத்தை இழுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டவன் லேசாக அவள் கழுத்து இறுக தாடையை பற்றி இருந்தான்...

தாடையில் வலி ஏற்படுத்திய அவன் கரத்தை விலக்க முயன்றவளாய் விடுங்க ஏன் இப்படி பண்ணுறிங்க வலிக்குது என்றதில் லேசாக கையை தளர்த்தி கொண்ட போதும் அவளை விடாது...

நா தொட்டா மட்டும் வலிக்கு மானபங்கமா ஆயிடும் அப்பறம் மேடம் அப்படியே உருகி போயுடுவிங்க ஆனா மத்த எல்லாதையும் மேடம் கட்டி புடிச்சு வழி அனுப்பி வைக்கும் போது மட்டும் ஒன்னும் ஆகாது அப்படி தானடி என கட்டிய மனைவியை போல் அவளை மடியில் அமர்த்தி கொண்டு தன் உரிமையை நிலைநாட்டும் விதமான கேள்வியை அடுக்கியவனை கடைசி கேள்வி நெஞ்சை உறுத்தியதில் கோபம் கொண்டவள்...

நா யாரை அனைச்சு வழி அனுப்பி வச்சா உனக்கு என்ன வந்துச்சு முதல்லை நீ யாரு டா என்னை கேள்வி கேட்க அவன் எனக்கு யாரா இருந்தாலும் உன்கிட்ட விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை முதல்ல என்னை விடு என தள்ள பார்த்தவளுக்கு மரியாதை எல்லாம் மாமாங்க காலம் முன்பே தொலைந்ததாய் ஒருமையில் அவனிடம் சீற அவனோ இன்னும் வலுவாய் அவளை பிடித்து கொண்டு...


அவள் கேட்ட நீ யாரு என்னும் வார்த்தையில் உள்ளுற காயப்பட்டு போனவன் வலியை அதை மீரிய கோவம் கண்னை மறைக்க என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஆத்திரத்தில் அவளின் இதழை வன்மையாக சிறை பிடித்து கொண்டு தன் கோவத்தை குறைக்கும் முயற்ச்சியில் இறங்கி இருந்தான்...


அவள் அவனை தள்ளிவிட பார்க்க அவனோ அசையாது அவள் பின்னங்கழுத்தை இறுக்கி கொண்டு அவளின் இதழை சிறிது சிறிதாக சிதைக்க தொடங்கினான்...


எப்போதும் அவள் கண்ணுக்கு குறுப்பு கண்ணனாக தொற்றமளித்தவன் இப்போது அசுரானாக தோன்றியதில் அவனிடம் பயத்தோடு கட்டாயமாக மடிங்கி கொண்டாள் அவள்...


இங்கே அந்த மர்பெண்ணோ (வீருக்கு இவளை பத்தி தெரிஞ்ச அப்பறம் பெயர் சொல்லுறேன் அது வர மர்ம பெண்னே வச்சுக்கலாம்) சுவற்றை வெறித்து ஏதோ வாழ்க்கை அடிமட்டத்தை தொட்டதாய் அமர்ந்திருந்தவளை பார்த்த விஜிக்கும் மனதில் பாரம் குடி கொண்டது....


அன்று அவளிடம் இனிமேல் நீ வீரை பார்க்க கூடாது என சொல்லியதில் இருந்து இதோ இப்படியோரு நிலை தான் தொடர்கிறது ஒரு பக்கம் மனம் அவளின் நிலையை கண்டு கழிவிரக்கதோடு பாவம் பார்த்து கொண்டாலும் மற்றோரு புறம் கோபமே மிஞ்சியது...


இப்படி திருப்புமுனையை அமைத்தால் வேறு வழிகள் இன்றி வீரிடம் தன் காதலை வெளிப்படுத்துவாள் என்ற விஜியின் நினைப்பில் ஒரு கூட மண்ணை வாரி இறைத்து இருந்தாள் அந்த மர்ம பெண்...


கிடைப்பதும் கிடைக்காததும் விதியின் வசம் இருப்பினும் அதற்காக கொஞ்சமும் முயலாது அப்படியே இருப்பதும் தவறு தானே எல்லாம் முடிந்த பின் கை தவறியது நினைத்து நோவதை விட சிறு முயற்ச்சி எடுத்தும் கிடைக்காமல் போனால் சிறு ஆறுதலாவது மிஞசும் என்ற நோக்கில் தான் அவளை கூற சொல்லி வற்புறுத்தியது...


ரிது என விஜி அவளை அழைத்ததை தொடரந்து விழியோரம் கசிந்த கண்ணீரை துடைத்தபடி தன்னை நிமிரந்து பார்த்தவளின் முகத்தை கவலையோடு உள்வாங்கியபடி என்ன தான்டி பிரச்சனை உனக்கு சொல்லுனா வேண்டாம்னு சொல்லுற..சரி அவுங்கள மறந்துட்டு பழைய மாதிரி இருனு தான சொன்னேன் அதுக்கு என்னமோ வாழ்க்கையே தொலைச்சு போன மாதிரி உட்காந்து இருந்தா என்ன அர்த்தம் சொல்லு...

அவள் கேள்விகளை அடுக்கி முடித்த மறுநொடி அவளை தாவி அனைத்து கொண்டவள் என்னால அவர மறக்க முடியல விஜி நா கூட அ..அவ..அவனை மற..ந்.து போய்..ரலா..ம்னு தா..ன் நினச்..சேன் ஆனா முடி..யலை... என விசும்பியபடி குரல் திக்க கூறியவளின் முதுகை வருடிவிட்டவளிடம் இருந்து பிரிந்தவள்...

தப்பே பண்ணாம எங்க அப்பா அம்மா பார்வைல கூனி குறுகி நின்ன மாதிரி இவரோடு முன்னாடி நிக்க வேண்டி நிலை வந்துருமோனு பயமா இருக்கு விஜி...எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது விஜி என தேம்பியவளே மேலும் தொடர்ந்தாள்

நா அவர பார்த்து இருக்கவே கூடாது...அப்படியே பார்த்தாலும் கடந்து போய் இருக்கனும் எல்லாம் என் தப்பு தான் என தலையில் அடித்து கொண்டு அழதவளின் கையை பிடித்து கொண்ட விஜி சரி அழுகாத பாரத்துகலாம் என அவள் கண்களை துடைத்து விட்டு சற்று நேரம் அவள் கவனத்தை திருப்பி தன் புறமே தக்கவத்து கொள்வதாய் நீ இன்னும் சாப்பிடலேல எந்திரி வா என அவளை ஹாலில் அமைத்திருந்த குட்டி டைனிங்க டெபிலில் அமர்த்தியவள் கிச்ஙனிற்கு சென்று தட்டில் சாப்பாடு எடுத்து வந்தவள் அவள் கையில் கொடுக்காது தானே ஓட்டி விட்டு முடித்தவள்...

பாலில் தூக்க மாத்திரையை கலந்து அதையும் வற்புறுத்தி குடிக்க வைத்தவள் அவளை அறையினுள் தள்ளி சாப்பிட்டேல நல்லா தூங்கு எதை பத்தியும் நினைக்காத நிலமை எப்படி மாறுனாலும் உன் கூட நா இருப்பேன் நேத்து புல்லா தூங்காம கண்ணு எப்படி சிவந்து இருக்கு பாரு நீ தூங்கு என அவளை தூங்க வைத்திருந்தாள்...


அதன் பின் ஒரு முடிவு எடுத்தவளாய் மறுநாள் தன் தோழியின் காதல் கடந்த காலம் என அனைத்தையும் வேண்டப்பட்டவனான வீரிடமே அனைத்தையும் போட்டு உடைத்து இருந்தாள் விஜி..


தொடரும்....
 
Last edited: