• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕 49

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
75
89
18
Madurai
எல்லொரின் கண்ணோட்டமும் ஒன்றுபட்டு போகாது என்பதை நம்பியவளாய் உறுதியான முடிவு ஒன்றை எடுத்து கொண்டு இதோ வீரின் அறை வரை வந்துவிட்டவளுக்கு நெஞ்சில் நம்பிக்கை நிறம்பி இருந்தாலும் சிறு தடுமாற்றமும் செழித்த சேடிகளின் இடையை தேவையற்ற கள்ளிச்சேடியா மனதை உருத்தியது...

எங்கே தன் தோழியின் பயம் போலவே அவளின் கடந்த காலத்தின் கருப்பு பக்கமான சில பக்கங்களை அவனிடம் புரட்டி காட்டுகையில் வீரின் கண்ணோட்டமும் அவளின் தாய் தந்தையின் கண்ணோடத்தை ஒத்த பதிந்து போனால் என்று அவள் தடுமாறினாலும் இதற்கு ஒர் முற்று புள்ளி வைக்கவோ இல்லை தொடர் புள்ளி இட்டு இன்னும் இதை நீட்டித்து கொண்டு செல்லவோ அவனின் கண்ணோட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக துணிந்து அவன் அறையினுள் அவன் அனுமதி பெற்று உள் நுழைந்திருந்தாள் விஜி...

இதோ உள் வந்தாயிற்று ஆனால் தொடங்குவதற்கு தடுமாறியவளாய் மௌனமாக விழித்து நின்று இருந்தாள்..

அவள் மௌனத்தை உடைப்பதாய் எல்லை என்பதை உணர்ந்தானோ என்னவோ அவனே இருவருக்கும் இடையே ஆக்ரமித்து இருந்த நிஷப்தத்தை களைப்பதாய் நீங்க டிசைனிங் டிபார்ட்மென்ட் ஸ்டாப் தான என்று அவனை கேட்டதை தொடர்ந்து ஆம் என தலை ஆட்டி நின்றவளிடம் என்ன ஏன் பாக்க வந்திங்க உங்க ஹெட்டை அனுகியிருக்கலாமே என்று கேள்வியோடு அவள் பதிலை ஏதிர்பார்த்து மீண்டும் அமைதியை தத்தெடுத்து கொண்டாவனை..

இப்போது அவனை நிமிர்ந்து நேர்கொண்டு பார்த்தவளாய் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் இட்ஸ் சம்திங் பர்ஸ்னல் என்றவளை பார்த்து புருவம் சுருக்கியவன்...

கம் அகென் என்னது என்றவனை பார்த்து ஓர் பெருமூச்சை விட்டெறிந்தவள் சார் பீளிஸ் ஒரு டென் மினிட்ஸ் டைம் கொடுங்க சொல்ல வந்தததை சொல்லிட்டு போய்றேன் என தன் முன் இவள் வந்து நிற்பதற்கான சாராம்சம் எல்லாம் தெரியவில்லை என்றாலும் அவளின் கோரிக்கையை மறுக்க தோன்றாது சரி என சம்மதித்து இருந்தவனிடம் சார் வெளிய பேசலாமா என கேட்க..

அதற்கும் தலை அசைத்து சம்மதித்து கொண்டவன் அவனே எங்கு சந்தித்து பேசலாம் என்ற ஸ்பாட்டையும் கூறிவிடவே அதனை மனதில் குறித்து கொண்டவளாய் தேங்க்யூ சார் என்ற வார்த்தையோடு அப்போதைக்கு அந்த பேச்சை முடித்து கொண்டவளாய் அவன் அறையில் இருந்து வெளியேறினாள் விஜி...

அவன் அறையில் இருந்து வெளியேறியதை அடுத்து தன் கெபினிற்கு வந்து அமர்ந்தவளின் மனம் தோழியை சுற்றியே வட்டமடித்து அவளின் துடிதுடிப்பின் வாயிலாகவும் கதறலின் வாயிலாகவும் தன்னிடம் அம்பலப்பட்டு போன அவளின் காதலை அளவை உணர்ந்து கொண்டவளுக்கு அவளின் காதலை உரியவனிடம் சேர்த்து புரியவைக்கும் வரை நிலைக்கொள்ள முடியாமல் தவித்து போனாள்.....

கண்டிப்பாக எந்த ஒரு இக்கட்டில் அவளை நிறுத்தினாலும் வீரிடம் அவளின் காதலை அவள் பகிர போவதே இல்லை என்பதை தெளியாக உணர்ந்து கொண்ட விஜி வேண்டப்பட்டவனிடமே விஷயங்களை போட்டு உடைக்க துனிந்திருந்தாள் அந்த மர்ம பெண்ணின் உயிர் தோழி...

இங்கே தேவா அஞ்சனாவின் இதழ் பேர் முழுதாக ஆறுபது நொடிகளை கடந்து நிமிடங்களை தொட்டிருந்த போது இருவருக்கும் விலகி கொள்ளு எண்ணம் இல்லை போலும்...

கோபம் தொனிக்க வன்முறையை கையாண்டு இழில் பதித்த வன்முத்தம் எப்போது ரசனைக்கு இடம்பெயர்ந்து மென்மையானதோ என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவைகள் இன்றி அவளின் இதழ் ரேகையை துள்ளியமாக கணக்கெடுப்பதிலேயே அவன் முனைப்பாய் அதற்கு இசைந்து கொடுத்தவளாய் அவள்...

அவள் மென்மையில் கசிந்துருகிய கள்வனை விலக்க முடியாது துவண்ட அவனின் காதல் கன்மனியோ ஒரு கட்டத்தில் துளிர்த்து நின்ற சிறு வெறுப்பையும் மறந்து அவனோடு ஒன்றி இருந்தாள்‌..

முழுதாக ஆறுபது நொடி கடந்ததை போல் முழுதாக ஒரு நிமிடமும் கடந்த பின்பே அவள் இதழில் இருந்து தன் இதழை பிரித்து கொள்ள முயன்றவனாய் மெல்ல விலகியவனின் இதழ் காந்த வீசை கொண்டு மீண்டு அவள் இதழ் என்னும் காந்தத்தில் ஒட்டி கொள்வதாய் உணர்ந்தவன் தன் உதட்டோடு அவள் உதட்டை உரசியபடியே அவள் கண்களில் கசிந்து கன்னத்தை தொட்ட கண்ணீரை தன் கட்டைவிரலால் துடைத்து விட்டவன் அப்போதும் தன் உதட்டை அவளின் உதட்டில் இருந்து முழுதாக பிரித்து கொள்ளும் எண்ணம் இன்றி அப்படியே பேசலானான்...

நா யாருனு இப்போ புரிஞ்சுடுச்சுல சனாமா என்றவனின் மனதில் தொக்கிய குழப்பம் எல்லாம் நீங்கியதா என்றால் அது சந்தேகமாகவே இருந்த போதும் அவளை இனி விடவே கூடாது என்பதில் உறுதியாய் வார்த்தைகள் உரிமையோடே அவள் முன் கொட்டி அவளின் மேல் தனக்குள் உரிமையை நிலை நாட்ட தொடங்கினான்..

உன் புருஷன் நான் தான் நான் மட்டும் தான் அப்போ நான் கேள்வி கேட்கலாம் இல்லையா என்றவன் இவள் கீழ் உதட்டை மெல்ல கடித்து கேட்கலாம்ல என தலை சாய்த்து கேட்வனின் செயலில் சற்று தள்ளி அடங்கியவள் பின் அவனின் உண்மையான முகம் தான் என்ன என்று குழம்பியவளாய் விழித்து பார்த்தவளை ஒரு விழியாக விடுவித்தவன் அடுத்து இந்த மாதிரி கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி இப்போ கொடுத்த பனிஷ்மென்டை மறக்க மாட்டனு நம்புறேன் என்றபடி தன் மடியில் அமர்ந்திருந்தவளை தூக்கி பக்கத்தில் இருக்கையில் அமர்த்தியவன் எழுந்து கொண்டு கடைசியாக அவள் நெற்றியில் இதழை ஒற்றி தோட்டத்தை தாண்டி வீட்டிற்குள் சென்று மறைந்திருந்தான்...

அன்னியன் ரெமோ என மாறி மாறி தன்னிடம் தோற்றம் காட்டி சென்று மறைந்தவனை யாரு தான்டா நீ என்னும் விதமாக பார்த்து வைத்தவளுக்கு அவனுள் மறைந்திருக்கும் அம்பியின் சாயலை காணவும் ஆவல் தோன்றியதை தடுக்கமுடியவில்லை அவளால்...


ஒரு சமயம் தென்றலை போல் மனதை மிருதுவாக வருடி விட்டு சுகம் காட்டுபவன் தான் சில சமயம் அவனே தன்னை குழப்பி கொண்டு நெகிழியை கிழிக்கும் நெருஞ்சி முள் போல் அவள் மனதை காயம் கொள்ளவும் செய்திருந்தான் அவன்... இப்படி மாறும் அவன் மனதை தான் புரிந்து கொள்ள முடியாது குழம்பியவள் குழப்பியபடியே தன் வீட்டை நோக்கி நடைப்போட தொடங்கினாள் அவள்...

ஏதோ பேய் அறைந்ததை போல் வாசலை தாண்டி சாலையில் நடந்து சென்றவளை சாளரத்தின் வழியே நோட்டம் விட்டவனின் செயல்கள் அவனுக்கே முரனாக தோன்றிய போதும் தன் செயலுக்கு அவள் காட்டும் விதவிதமான பாவம் அவனுக்கு நெருடலை விடுத்து ஸ்வாரஸ்யத்தை கூட்டுவதாய்....‌


ஒரே நிலையில் பிடிவாதமாக நின்றவனை அலைக்கழித்து பார்த்திருந்தாள் அவனின் செல்ல ராட்ச்சசி..


இத்தனை நாள் கண்களுக்கு எட்டாது போக்கு காட்டிய உறக்கமும் மனது விரும்பி கேட்ட வேண்டுகொளான அவளின் அருகாமை பெற்று கொடுத்ததால் உறக்கம் மறுக்காது அவன் கண்களை தழுவி அவனை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தி இருந்தது....


விஜியின் கேண்டுகோளை ஏற்று அவளிடம் சற்று தனிமையில் பேச சம்மதித்திருந்தவன் இப்போது அவன் கூறியதை போலவே கூறிய இடத்திற்கு சரியான நேரத்தில் அவள் முன் வந்தே ஆஜராகியிருந்தான் அவன்...

வந்து சில நிமிடங்கள் கடந்திருந்த போதும் ஆரம்பிக்க தயங்கியவளாய் மௌளனத்தின் பிடியில் நிலைகொண்டு இருந்தவளை பார்த்தவனுக்கு வியஷம் எதை பற்றி என தெரியாத பட்ச்சதில் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வதோடு அதற்கு மேல் அவளின் மௌனத்தை நீட்டிக்க விடாது களைத்திருந்தான்..


தன் குரலை செருமி கொண்டு பேசனும்னு சொன்னிங்கலே என அவனே தொடக்க புள்ளியிட்டு ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து ஆம் என தலை அசைத்தவள் சற்று தன்னை நிலைபடுத்தி கொண்டு சுத்தல் எதுவும் இன்றி நேராக விஷயத்திற்கு வந்திருந்தாள்..‌


சார் உங்களுக்கு ரிதன்யா தெரியுமா என அவள் கேட்ட உடன் ரிதன்யா என மனதோடு உச்சரித்து பார்த்து கொண்டவனுக்கு சில நெகட்டிவ் காட்ச்சிகள் மண்டை ஓட்டை முட்டியதாய் மண்டைக்குள் தோன்றி மறைந்ததோடு அந்த பெயரே அவனுள் ஒரு இனிய உணர்வை தொற்றுவித்திருந்ததில் மெல்ல தன் நெஞ்சை வருடி விட்டு கொண்டவனின் மண்டைக்குள் தோன்றிய நெகட்டிவ் காட்ச்சியை தொடர்ந்து தெளிந்த காட்ச்சியா படபடக்கும் ஒரு ஜோடி நயனங்களும் தோன்றி மறைந்தது....


மெல்ல அந்த உணர்வின் கட்டுக்குள் இருந்து தன்னை விடுவித்து கொண்டவனாய் அதன் பின் கதை கேட்க இன்னும் ஆர்வமாய் அவளை பார்த்தவன் ரிதன்யா யாரு அவுங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் அவுங்க எங்க என படபடவென கேள்வியை அடுக்கியவனை இயல்பாக ஏதிர்கொண்டவள்...

அவன் அடுக்கிய அத்தனை கேள்விக்கும் வரிசைப்படி ஒன்று ஒன்றாக தெளிவாக பதில் அளிக்க தொடங்கியவளாய் ரிதன்யா என பிரண்ட் என்றவள் பின் உங்களுக்கு அவளை தெரியாதுனு அந்த கிறுக்கச்சிக்கும் தெரியும் அப்பறம் நீங்க அவ வாழ்க்கைல ஏதோ ஒரு கோனத்துல சம்மந்த பட்டு ஊறி போன விஷயமும் உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்றவளை குழப்பமாக ஏறிட்டவன் என்ன சொல்ல வரிங்க புரியலை அவுங்க வாழ்க்கைல நா சம்மந்த பட்டுறுக்கேனா என அவனை அறியாமல் படபடத்தவனை கண்டு..


ஆமா அவ உங்கள கிறுக்கு தனமா லவ் பண்ணுறா ஷி இஸ் மேட்லி இன் லவ் வித் யூ...


சார் நா சொல்லுறதை எல்லாம் நீங்க நம்புவிங்களா மாட்டிங்களானு எனக்கு தெரியலை ஆனா இது எல்லாம் உண்மை தானாங்குறதுல உங்களுக்கு குழப்பம் வேணாம் நீங்க நூறு சதவிதம் நம்பலாம் அப்படியே சந்தேகமா இருந்தா உங்க மனசாட்ச்சி கேளுங்க அதுவே சொல்லும் என்றவள் அதற்கு மேலும் தொடர்ச்சியாக அவ உங்க மேல பைத்தியமா இருக்குறதை பார்த்தா எனக்கு பயமா இருக்கு எங்க விட்டா எல்லாமே அவ நினைச்சு பயந்து மாதிரியே முடிஞ்சு போட்டா செத்துருவாளோனு பயமா இருந்துச்சு அதான உங்க முன்னாடி இதோ உட்காந்து இருக்கேன்...

கண்டிப்பா உங்க மேல இத்தனை காதலை வச்சுருக்கவ அதை ஒரு நாளும் அவ பயத்தை மீறி எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டா என்று கூறியவளை குழப்பமாக பார்த்தவனை கண்டு அவளின் கருப்பு பக்கங்களை அவன் முன் புரட்டலானாள்...


கவியரசன் மற்றும் வேதவள்ளியின் இரண்டாவது பிள்ளை தான் ரிதன்யா கவியரசன் குடும்பத்தில் இரண்டு தலைமுறைகளாக பெண் பிள்ளை இல்லாமல் அடுத்து தலைமுறையில் பிறந்த பெண் பிள்ளை இவள் என்பதால் வீட்டில் அம்மா முதல் அண்ணன் வரை அனைவருக்கும் செல்லம்...

அதே சமயம் கண்டிப்பும் சம விகிதம் உண்டு என்பாதால் நற்குனங்கள் கொண்டே வளர்ந்தாள் ரிதன்யா...


கவியரசன் எவ்வளவு செல்லம் கொடுக்கிறாறோ அதே சமயம் சிறு தவறு செய்தாலும் அவரின் நடவடிக்கையே வேறு மாதிரியாக அமைந்து ஏதிரில் இருப்பவர் எவராயினும் கொஞ்சம் பலமாகவே தாக்கி விடும்...கௌரவம் தான் உயிர் மூச்சு என்னும் கொட்பாட்டிற்குள் வாழும் புதிய கால மனிதர் அவர்..


ஓர் அளவு வசதியான குடும்பம் தான் இவர்களுடையது...


ஊரின் முக்கிய பொறுப்பில் அமர்ந்து கொண்டு பெரிய தலைகட்டாக கவியரசன் வலைய வருவதாளோ என்னவோ தன்ன குழந்தைகளை மீறி வெட்டி கௌரவத்தின் மீது அதிக பற்று அவருக்கு...


இவரின் வரட்டு கௌரவமும் அதிகபடியான கண்டிப்பும் தான் இன்று அவள் எல்லொரும் இருந்தும் அகதி போல் ஊரை விட்டு வந்து அனாதையாக நிற்க்க காரணியாக போனது....


ரிதன்யாவுக்கும் தந்தை மேல் பயம் இருந்தாலும் அவரை தான் மிகவும் பிடிக்கும்...


ரிதன்யா தன் இறுதி ஆண்டு கல்லூரி பயிலும் போது தான் அவளே எதிர்பாராத பல இனிமையான உணர்வுகளோடு அவள் வாழ்க்கையையே தடம் புரட்டும் சம்பவங்களும் நடந்தெறி இருந்தது...


எப்போதும் போல் தந்தையிடம் சற்று பயந்தும் தாயுடன் வம்பிழுத்து கொண்டு அண்ணனோடு கல்லுரிக்கு கிளம்பியிருந்தாள் ரிதன்யா..


தன் அண்ணன் மாறனுடன் வாயாடி கொண்டே அவன்‌‌ வண்டியில் பின்னால் வந்தவளின் பேச்சில் தலை கிறுகிறுத்து போனவனோ அதற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாது பொங்கியிருந்தான்...


அடியே கொஞ்சம் நேரம் வாய மூடுடி அது என்ன வாயா என்னது ஒரு நிமிசம் அந்த பஞ்சாயத்து கினறு மூடுதா என அவன் கிண்டலாக கூறியதும் முகத்தை சுருக்கி கொண்டவள் இனிமே நா ஒன்னும் பேசலபா என்ற கொனட்டி கொண்டு கூறியவள் அதான உனக்கு நாங்க பேசுனா எல்லாம் புடிக்குமா இதே நேரம் அவை பேசி இருந்தா பேனு உக்காந்து கேட்டுறுப்ப என மெல்ல முனங்கியது அவன் காதில் தெளிவாக விழுந்தாலும் கேட்காதது போல் என்ன சொன்ன என கேட்க..ஒன்னும் இல்லை லேட் ஆச்சுனு சொன்னேன் என கூறி சமாளித்து விட்டதாக நிம்மதி அடைந்தவள் அதன் பின் கொஞ்ச நேரம் வாயை மூடி கொண்டு வந்தாலும் அது பயனம் முடியும் வரை நீடித்திருக்கவில்லை...


மாறனுக்கும் ரிதன்யாவுக்கும் இடையே வேறும் இரண்டு வயது மட்டுமே வித்தியாசம் என்பதால் பேச்சில் அத்தனை மரியாதை எல்லாம் தென்படாது மிஞ்சி மிஞ்சி போனால் காரியம் ஆக வேண்டி நேரத்தில் மட்டும் அண்ணா என்ற வார்த்தையோடு சில சொற்களும் மரியாதையை தழுவி விழுவதோடு சரி மத்தபடி மற்ற நேரம் எல்லாம் அண்ணா என்று வாயில் வருவதே அரிது தான்...

அவனும் அவளிடம் காரணமாக வேண்டிய நேரத்தில் மட்டும் ரிது மா தங்கபுள்ள என பாசத்தில் வழுக்கி விழும் அளவிற்கு பாசத்தை கொட்டுவான்..

இதை எல்லாம் தாண்டி அவனுக்கு ரிதன்யா என்றால் அத்தனை பிடித்தம் அவளுக்கும் அதே போல தான் ஆக மொத்தம் சராசரி அண்ணன் தங்கை போல் ஒருவர் மீது ஒருவர் பாசம் கொண்டிருந்தாளும் கொஞ்சி கொஞ்சி காட்டு பழக்கம் எல்லாம் இருவரிடத்திலும் இல்லை...


அவளை கல்லூரியில் இறக்கி விட்டு திரும்ப ஏத்தனித்தவனின் வண்டி கொஞ்சம் நேரம் அங்கையே நிற்பதை கண்ட ரிதன்யா தீடிரென தன் அண்ணனின் முப்பத்தி ரெண்டு பற்களும் வாயிற்குள் அடங்காமல் வெளிய தெரிய ஆஆ என்ற நின்றவனின் பார்வை பயனித்த திசை தொடர்ந்து அவளும் பார்த்தவள் ஒஒ கதை இப்படி திரும்புதா என நினைத்து கொண்டவள்...

மாறா சீக்கிரம் போடா அப்பா வேற உன்ன கூப்பிடாருல என கூறியவளை இறஞ்சும்படியாக பார்த்தவன் பாப்பா இரு மா அண்ணா இப்போ கிளம்பிறுவேன் என்றவனை நக்கலாக பார்த்தவள் இரு அப்பாகிட்ட போன் பண்ணி என்னை காலெஜ்ல விட்டுட்டு எங்கோ வெளிய போறேன்னு சொல்லுறேன் என்றவளின் கையை பிடித்தவன் பாப்பா அண்ணாடா என கூற...

அதுனாலதான் பாஸ் போட்டு விடலாம்னு நினைக்கிறேன் என மடங்காது நின்றவளை பார்த்து அவனும் மிஞ்சயதாய் சரி போன வாரம் நீ கொடுத்த லிஸ்ட்ல இருக்க எல்லாம் வாங்கி தரலாம்னு நினைச்சென் என கூறவும் அப்படியே பல்டி அடித்தவளாய் அண்ணா அங்க பாரு அண்ணி வராங்க நீ என்ன இன்னும் என்கிட்டேயே நின்னு கதை அடிக்கிற போ போய் ரோஸ்சு கிஸு கொடுத்து அவங்கட்ட கடலை போடு இதை எல்லாம் நானே சொல்லி கொடுக்க வேண்டியதா இருக்கு சில்லி பாய் என்றவளை ஆத்தி இது உலகமகா நடிப்புடா சாமி என்னும் விதமாக பார்த்து வைத்தவன் நீ பிழைச்சுக்குவா அதுல டவுட் இல்லை...

எல்லாம் உங்கள் சித்தம் குருவே அப்பறம் தங்கச்சி கிஸூக்கு போய்ட்டு வரேன் என்றவள் பின் மெல்ல அப்பறம் அந்த லிஸ்டையும் மறந்துறாதீங்க என கூறிவிட்டு நடக்க தொடங்கியவள் ஏதிரில் வந்த விஜியையும் விடாது கலாய்த்து விட்ட பின்னே தன் கிளாஸ்ரூமிற்குள் நுழைந்திருந்தாள் அவள்....


ஆம் மாறனின் காதல் தேவதை விஜியே தான்...

கண்டதும் காதல் என்பதை போல் அவளை பார்த்ததும் பிடித்து விட அதை சில நாட்களிலேயே அவளிடமும் பகிர்ந்து இருந்தான் அவளோ அவனின் தந்தை குனம் அறிந்து அவளுக்கும் பிடித்திதே இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வெகுவாக தயக்கம் காட்டியவளை ஐஸ்கிரீம் காட்டி குழந்தையை ஏமாற்றுவதை போல் காதல் வசனங்களை வாரி இறைத்து அவளை கவுத்து விட்டிருந்தான்..‌


ரிது கின்டல் செய்து விட்டு சென்றதில் அவனை முறைக்க முயன்று தோற்றவளாய் மாறா என சினுங்கி சிரித்தவளின் சிரிப்பில் தொலைந்தே போனவன் அப்படி சிரிக்காதடி டெம்ட் ஆகுது அப்பறம் இழுத்து வச்சு கிஸ் அடிச்சுருவேன் என்று கூறியதும் நானி சிவந்தவள்

போடா லூசு

அவளையே காதல் போங்க பார்த்தான்..பிறகு காதலர்களுகே உண்டான சில பேச்சு வார்த்தைகளோடு சிறு சிறு தீண்டல் என நிகழ்த்தி விட்டு அவர் அவர் வேலைகளை பார்க்க சென்றனர்...


நாட்கள் அதன் போக்கில் மெண்மையாய் நகர்ந்தது...


அன்று ரிது வழக்கம் போல் தன் அண்ணனிடம் வலவலத்து கொண்டே வர...அப்போது தான் அவள் காதல் கள்வனை முதல் முதலாக சந்திக்க நேரிட்டது...


ஒரு சிறு குழந்தை தன் அண்ணையின் கைகோர்த்து அழகாக நடந்து வந்து கொண்டிருக்க அந்த பிள்ளையின் தாயோ பிள்ளை தன் கைபிடித்து தானே இருக்கிறது என்ற மிதப்பில் போனில் யாரிடமோ பேசுவதிலேயே கவனத்தை பதித்திருந்தாள்...

சாலைக்கு அந்த பக்கம் தெரிந்த பலுனை கண்ட பிள்ளைக்கு தாயை விட்டு செல்ல கூடாது என்ற சாரம்சம் எல்லாம் தெரியாததில் தன் கையை தாயின் கையில் இருந்து உருவி கொண்டு அதை பிடிக்கும் ஆர்வத்தில் எதை பற்றியும் பயம் கொள்ளாது அதன் பாட்டிற்கு பலூனை பிடிப்பதிலேயே முனைப்பாய் அது இருக்கும் திசை பக்கம் செல்ல தாயவளோ குழந்தை கையை விலக்கி கொண்டதை கூட தெரியாமல் போனில் அத்தனை ஆர்வமாய கதைத்து கொண்டிருந்தாள்...


ஒரு லாரி தன்னை நெருங்கி வருவது கூட உணர்ந்து கொள்ளாத குழந்தை அதன்பாட்டிற்கு நடந்து சென்றதை எதர்ச்சியாக பார்வையை அங்கும் இங்கும் சுழட்டுகையில் கண்டு கொண்ட ரிதன்யா அண்ணா சீக்கிரம் நிறுத்துடா என அவன் தோளை வேகவேகமாக தட்டி அவனை நிறுத்த வைத்தவள் அவன் நிறுத்திய மறு கனம் குழந்தை இருந்த இடத்திற்கு ஒடி சென்று குழந்தையை தூக்கி கொண்ட பின் தான் ஆசுவாசமாக மூச்சே வெளியேறியது அவளுக்கு...

குழந்தையை தூக்கி கொண்டு நகருவதற்கு முன்பே நெருங்கி விட்டிருந்த லாரியை கவனித்திருக்கவில்லை...

அது இருவருக்கும் ஒரு இன்ச் தொலைவில் நெருங்கிய நேரத்தில் ஓர் வலிய கரம் குழந்தையோடு சேர்த்து பெண்ணவளின் இடையில் கை கொடுத்து இழுத்திருந்தது...


மயிரிலையிலை இருவரின் உயிர காத்து தன் பக்கம் இழுத்து கொண்டவன் வேகமாக லாரியை ஒட்டியவனை திட்டி குவித்தான்...அவனோ எப்போதோ நாம் இடித்து விட்டாமோ என்ற பயத்தில் சீட்டாக பறந்திருந்தான்...


இழுத்தவனின் மேலேயே குழந்தையோடு சேர்த்து விழுந்ததில் மூவருமாக அந்த தார் சாலையில் விழுந்து உருண்டு ஒருத்திற்கு வந்த போது இருவர் விழியும் சந்தித்து கொண்டது...


மாறன் அந்த பக்கம் சாலையில் நடப்பதை பார்த்தவன் இவர்களை நெருங்கும் முன் இந்த பக்கம் சிக்னல் பச்சை நிறத்தில் விழுந்ததில் சட்டென சாலையை கடக்க முடியாமல் போனது...


இருவரும் சரிந்து பக்கவாட்டாக குழந்தையை பற்றியபடி ஒருவர் மற்றவர் விழியில் முழ்கி இருக்க அப்போது அவர்களின் பார்வை பறிமாற்றத்தை களைக்கும் விதமாய் குழந்தை வீல் என கத்தியதில் இருவரும் பிரிந்து நின்றனர்...

அந்த குழந்தையின் தாயும் பேசி முடித்த பின்பே பிள்ளை தன் கையை உதறி சென்றதை உணர்ந்தவளாக பிள்ளையை தேடி சாலைக்கு அந்த பக்கம் பார்த்து வருவதற்கு முன்பே எல்லாம் நிகழந்து முடிந்திருந்தது.. இருந்தது...


அழும் குழந்தையை வாரி அனைத்து கொண்டவள் தன் மடதனத்தை என்னி தன்னையே திட்டி கொண்டவள் இவர்கள் இருவரிடமும் நன்றி கூறியதை ஏற்று கொள்ள முடியாத வீரோ அவளின் கவனமின்மையில் நிகழ இருந்த காரத்தியத்தை அவளுக்கு சுட்டி காட்டி வாட்டி எடுத்திருந்தான்..

அவளும் பல மன்னிப்புகளோடு நன்றியும் கூறி விடைபெற்றாள்...


மாறனும் தன் தங்கையை காப்பாத்தியதர்க்கு நன்றி கூற..அதை சிறு சிரிப்புடன் ஏற்றவன் பரவாயில்லை ப்ரோ என நகர்ந்து விட்டான்...


அவன் அவள் பார்வையில் இருந்து சாதரனமாக மீண்டு விட்டான்..ஆனால் பெண்ணவள் தான் அவன் பார்வையில் ஆழியில் சிக்கியது போல் வாழ்வு மொத்ததிற்கும் மீல முடியாது சிக்கி கொண்டாள்...

ஆக மொத்தம் ஒற்றை பார்வையில் சத்தமே இல்லாம் அவளுள் காதலை விதைத்து விட்டு சென்றான் ரிதுவின் வீர்....


தொடரும்....
 
Last edited: