• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕52

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
75
89
18
Madurai
ஆத்தா வையும் சந்தைக்கு போகனும் காசு கொடு என்பது போல் அவன் கிறக்க பார்வையில் தடுமாறி ந..நா வீ..ட்டு.க்கு போ..கனு.ம் விடு..ங்க என திக்கி தினறியவளின் மிச்ச மீதி வார்த்தையை அவள் தொண்டையிலேயே அனைக்கட்டும் விதமாய் அவளை கூறியதை ஆஹான் என நக்கலாக உள்ளவாங்கியபடி நெருங்கி வந்து அவள் இடையை அழுந்த பற்றியதில் ஹாக் என சத்ததோடு வார்த்தையையும் வழுங்கி கொணடாள் அவள்...

அதற்கு மேல் வார்த்தைகளுக்கு பஞ்சமாகி போனதில் திருதிருத்து விழித்தவளில் பார்வையில் இன்னும் இன்னும் கிறக்கம் கூடி போதில் இருவருக்கும் இடையே இருந்த மெல்லிய இடைவெளியும் குன்றி போனதாய்...


நெருங்கிய பின் அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தபடியே இதழில் கலந்தவனின் செயலும் விழி வீச்சும் உடம்பின் உள்ளுற ஏதோ ரசாயன மாற்றத்தை தொற்றுவித்ததில் கண்களை இறுக மூடி கொண்டவளின் இடையை இன்னும் அழுத்தி இறுக்கி அவள் கண்களை திறக்க வைத்து அதை பார்த்தபடியே அடமாக ஓர் முத்த சண்டையை நிகழ்த்தியிருந்தான் அவன்...

அவளை காணாது விரையமாகிய நேரங்களையும் அவர்களின் இடையே போட்டு நொறுக்குவதாய் அவள் இதழில் கரைந்திருந்ததில் பாவம் பெண்ணவள் தான் திணறி துடித்தாள்...

மூச்சுக்கு திணறி தவித்தவளின் மேல் கரிசனம் கொண்டவனாக ஓரிரு நிமிடங்களிலேயே தன் முத்த வெட்டையை மனமே இல்லாமல் முடித்து கொண்டவனின் இதழ்கள் காந்த வீசைப்படி துடித்து நகர்வதாய் மீண்டும் அவள் இதழை ஒட்டி கொள்ள விளைந்த நேரம் அவன் இதழில் கை வைத்து தடுத்தவள் மூச்சிறைக்க செல்லமாக முறைத்ததை பார்த்து ஒன்னே ஒன்னு பீளிஸ் நீ என் லட்டு குட்டி தான என மிட்டாயை காட்டி பிள்ளையை மயக்குவதை போல் இங்கே அவன் வார்த்தை ஜாலத்தில் விழுந்து போனது இந்த வளர்ந்த பிள்ளை...


மீண்டும் யுத்தத்தில் களமிறங்கிய இருவரின் இதழில்களின் இடையே என்னமோ ஐனா சபையில் நிகழும் பேச்சு வார்த்தை போல் முத்தம் நீண்டு கொண்டே போனதற்கு முற்று புள்ளி வைக்கவே அஞ்சனாவின் போன் அலறி என்ன எடுங்களேன்டா என்னும் படி பச்சிளம் பிள்ளையாய் அதிர்ந்தது...

போன் சத்தத்தில் கிறக்க வலையில் இருந்து மீண்டு மெல்ல நிதர்சத்திற்கு திருப்பியவள் அவனையும் மீட்டு வர தன்னில் இருந்து தள்ளி நிறுத்த..அவனோ பால்மனம் தேடி தாயை ஒட்டி கொள்ளும் குழந்தை போல் பிரிந்த வேகத்தில் மீண்டுமாக அவளை நெருங்கி இன்னும் கூட சலிப்பு தட்டாது இன்னும் ஒரு யுத்ததை நிகழ்தும் ஆவலில் அவளுக்கு கொக்கி போட்டு காரயம் சாதிக்க முயன்றான்...

இந்த தடவை தெளிவாக அவன் வலையில் சிக்காமல் அவனை பெரும்பாடு பட்டு தள்ளி நிறுத்தியவள் அவசரமாக தனது கைப்பையில் இருந்து போனை எடுத்து காதில் வைத்து கொண்டு அவன் செயலில் செவ்வானமாய் சிவந்து போன தன் கன்ன கதுப்பை மறைத்தபடி வெளி செல்ல எத்தனித்தவளின் இடையில் கைவிட்டு தன்னோடு ஒட்ட வைத்து கொண்டவன்...

போன்ல கால் கட்டாகிருச்சுடி லட்டு என அவள் காதோரோம் முனுமுனுத்தவனும் இப்பதோ சற்று கிறக்கத்தில் இருந்து மீண்டிருந்தான்...

தன் குட்டு வெளிப்பட்டதில் இன்னும் தலையை குனிந்தவளின் நாடியை பிடித்து அவளின் தலையை நிமிர்த்தியவன் போனுமா என கேட்டதற்கு தடுமாற்றதோடு நாலாபுறமும் தலை அசைத்தவளின் தலையை சிரிப்புடன் பிடித்து நிறுத்தி போதும் ரொம்ப ஆட்டாத என்றவன் பின் சரி போட்டு வா என பெரிய மனதோடு கூறி அவள் நெற்றியில் இதழ் பதித்து வழி அனுப்பி வைக்க அவளோ விட்டால் போதும் என ஒடவே தொடங்கியிருந்தாள் பாவம்...

வேக நடையிட்டு கிட்டதட்ட ஒடியவளை இதழ் நிறைந்த சிரிப்புடன் பார்த்தவன் ஏய் பாத்து டி திரும்ப இழுத்துக்க மாட்டேன் பாத்து போ என்ற அவனின் சொல் எதையும் காதில் ஏற்ற கொள்ளாது அவன் விட்டதே தெய்வாதினம் என்ற நினைப்பில் ஒடி மறைந்திருந்தாள் அஞ்சனா...


மாலை வேலை நெருங்கியதை அடுத்து ஒவ்வொருவராக தங்கள் வீட்டை நோக்கி படையெடுக்க தொடங்கிய நேரமதில் வழக்கம் போல் ரிதன்யா வீரை நோட்டமிட்டபடி அவன் கிளம்பியதும் கிளம்பலாம் என்ற நினைப்போடு தட்டச்சு பலகையில் வேலை பார்க்கிறேன் என்ற பெயர்வழி இஷ்டத்திற்கு கைகளை உலாவ விட்டு கண்களை வீர் பக்கம் பட்டும்படாமலும் பதித்து ரசித்திருந்தாள்...


அவள் ரசனைக்கு சற்று நேரம் தடையாய் அங்கு வந்து தன்னை அழைத்து நின்ற தன் டீம் மேட் திவ்யாவின் பக்கம் சலிப்பாக பார்வையை பதித்தவள் இந்த கிளம்பனும் கா கொஞ்சம் வர்கு பென்டிங் என அவள் கேட்டதிற்கு பதிலை கூறி விட்டு கள்ளத்தனமாக அவனை ரசிப்பதற்கு தொடர்புள்ளி இட்டு தொடர இருந்த நேரம் மீண்டு திவ்யா அவளுக்கே தெரியாமல் அவளின் ரசனைக்கு இடைவெட்டி ரிதன்யா ஒரு சின்ன ஹெல்ப் மட்டும் பண்ணுறியா என கேட்கவும் சலிப்பை உள்ளுக்குள்ளேயே அமிழ்த்தியபடி சொல்லுங்க என்ற விட்டு திரும்ப போனவளின் செவியை நிறைத்த திவ்யாவின் கடைசி வார்த்தை ரிதன்யாவின் விழிகளை அவள் முகத்திலேயே ஆரவமாக தேக்க நிறுத்தியது...


இந்த டிசைன்ன வீர் சார் கிட்ட காட்டி எக்ஸ்பிலென் பண்ணனும் நம்ம ஹெட் வேற வரலைல அதுனால இவருகிட்ட தான் கரேக்ஷன் கேட்கனும் நானே போவேன் ஆனால் எனக்கு டைம் ஆச்சு வீட்டுக்கு போகனும் அதுவும் இல்லாம இதை பைனலைஸ் பண்ண கொஞ்ச நாள் தான் இருக்கு உனக்கே தெரியும்ல அதுனால கொஞ்சம் ஹெல் பண்ணுறியா பீளிஸ் என்ற கேட்டவளை பார்த்து கரும்பு தின்ன கூலியா என்ற தோரனையில் பார்த்து வைத்தவள்..

உடனே சம்மதித்தும் இருந்தாள் சரி பண்ணுறேன் கா என்றவுடன் அவளை வாரி தூக்கி கொஞ்சாத குறையாக ரொம்ப தேங்ஸ் ரிதன்யா என்று கூறிவிட்டு வேகவேகமாக வீட்டிற்கு கிளம்பி சென்றவளுக்கு அவள் மீது இனிய சுமையை சுமத்தி சென்றது தெரியாததால் பீளிஸ் டா மறந்துறாத என கடைசியாக கெஞ்சி கொண்டு வேறு சென்றிருந்தாள் அவள்...

இப்படி சில நேரங்களில் மட்டுமே இம்மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணியவள் திவ்யா வெளி சென்ற மறு நிமிடம் குதூகலமாகவே அவன் அறை முன் சென்று நின்றிருந்தாள்...

கண்ணாடி தடுப்பு மட்டுமே இருவருக்கும் இடையே நெருங்க மிஞ்சம் இருந்த தூரமாக இருக்க அப்போதும் அவனை நெருங்கும் முன் ஒவ்வொரு அடிக்கும் பார்வையில் ரசனையை கூட்டி கதவை கூட தட்ட மறந்து அப்படியே பார்த்து கொண்டிருந்தாள்...

ஏதோ ஓர் குறுகுறுப்பில் நிமிர்ந்து பார்த்தவன் தன்னையே பார்த்து நின்ற பெண்ணின் விழியை கூர்ந்து எதற்காக இங்கே வந்தாய் என கேட்டும் முன் தெளிந்தவளாய் மானசீகமாக தன் தலையில் தட்டி அவரு கவனிக்கிற வரைக்குமா பார்த்து வைப்ப லூசு நல்ல வேலை அவரு கேட்கிறதுக்கு முன்னாடியாவது சுதாரிச்சு தொலைச்சியே என தன்னையே திட்டி கொண்டபடி அவன் அனுமதி பெற்ற அறையினுள் நுழைந்திருந்தாள் ரிதன்யா..

நீங்க என்றவன் பின் என்ன வேணும் என்று கேட்கவும் கையில் இருந்த பைலை பிரித்து அவனிடம் காட்டும் சாக்கிலும் கீழ்கண்ணால் அவனை களவாடி மனதில் நிறப்பி கொண்டு அவனிடம் நீட்டியவள் ஹெட் கொஞ்ச நாள் சிக் லீவ்ல போயிருக்காங்க அதான் உங்கிட்ட கரெக்ஷன் கேட்கனும் என்றவளை கூர்ந்தவன் தன் முன் இருந்த இருக்கையை கைக்காட்டி அமரும் படி செய்கை செய்து விட்டு சொல்லுங்க...

என்றவுடன் வேகவேகமாக அந்த இருக்கையில் இடம்பிடித்து கொண்டவள் கையோடு எடுத்து வந்திருந்த அவள் மடி கணிணியில் விஷ்யுவலாக காட்டி விளக்க தொடங்கியவளின் பின் சற்று மூன்றடி இடைவெளி விட்டு நின்ற கவனித்தவன்...

திடிரென அவளை இடைவெட்டி இல்லை இது பேஸே தப்பா இருக்கு..

இல்லை சார் இந்த இடத்துக்குள்ள லக்ஷூரியஸ் திங்கஸ் நிறையா சேர்க்குறதுனால இப்பிடி தான் வரும் என்றவளின் பின்னால் விலகி நின்றவன் இப்போது நெருங்கி குனிந்து வந்து சற்று அவள் பக்கம் முகத்தை பக்கவாட்டாக திருப்பி மிஸ் என அவள் பெயரை தெரிந்து கொள்ள இழுத்து நிறுத்தவும் திவ்யா என்று கூறி அவன் இழுவைக்கு முற்று புள்ளி வைத்திருந்தாள் அவள்..

அவள் கூறியதை அடுத்து ம்ம் மிஸ் திவ்யா என கணிணியில் கண் பதித்து இதுலையும் நம்ம தாரளமாவே கிளைன்ட் கேட்கிறத ஆட் பண்ணலாம் என்றவன் வேலையிலேயே கண்ணாக இடைவெளியை குறைத்து அவளில் இரு பக்கமும் அவளை உரசாது கையை விட்டு கணிணியில் பட்பட்டென தட்டி கொண்டு ஏதேதோ விளக்கமளித்தவனின் சந்தை முழுவதும் வேலை என்றாள் அவள் சிந்தை முழுவதும் அவனை ரசிப்பதாக கவனிப்பதாக ஒருகண்களால் அவள் வேலையை தொடர்ந்தாள்...

அவனின் நெருக்கம் அவளை மூச்சடைக்க செய்தாலும் கண்கள் அது உன் பிரச்சனை என்ன டிஸ்டர்ப் பண்ணாத என்னும் விதமாக அவன் முகத்திலேயே பதிந்து கொண்டு பிரிய மாட்டேன் என சண்டி தனம் செய்வதாய்...

தான் விளக்கம் அளித்தற்கு சத்தம் காட்டாமல் அமைதியை கடைப்பித்து அமர்ந்திருந்தவளை என்னாச்சு என்ற சிந்தையோடு திருப்பி பார்த்தவனின் விழியும் அவள் பார்வைக்கு அடிப்பனிந்ததாய் அவள் விழியிலேயே நிலை நின்று கொண்டு பிரிந்து வர முடியாமல் தவித்தது...


அவள் கண்களையே சில கனங்கள் உன்றி பார்த்திருந்தவனுக்கு அடிக்கடி தன்னை இம்சிக்கும் கண்கள் இது தான் என்று அறிந்து கொள்ள வேகு நேரம் பிடித்திருக்கவில்லை...

வேகு நாட்கள் தொடர்ந்த மெய்த்தேடல் பொருளோடு முடிவுற்றதாய் மனதினுள் ஆனந்த கூத்தாடி கொண்டவனுக்கும் அவள் நோய் தொற்றியதாய் அவள் பார்வையில் பித்து கொண்டு அப்படியே நின்றான் அவன்...

அன்று அவள் மீது மோதி விழுந்து கட்டி உருண்டு போதும் விழியை தாண்டி முழு முகத்தை அளக்கும் வாய்ப்பு கிடைத்திராததில் சிறு சலிப்போடு காரணமே இன்றி ச்சே என்று மனதோடு முனங்கி கொண்டவனுக்குஅப்போதே நெஞ்சுக்குள் சலன விதை விழுந்திருந்தது...

தன் பின் மாறன் வந்து நின்ற பின் கன்னியம் காக்க வேண்டிய கட்டாயத்தோடு மாறன் பக்கமே பார்வையை நிலை நிறுத்தி பேசி சென்றிருந்தான் கள்ளனவன்...

அன்று இரவு அவளின் தூக்கதோடு இலவச இனைப்பாக அவனின் தூக்கத்தையும் திருடி கொண்ட காதல் தேவனின் ஆளுகைக்குள் அன்று பிடிகொண்டவன் அவளை பார்த்திராத இன்னாள் வரையும் கூட மீல வாய்ப்பின்றி சிக்கிதானே கிடந்தான்..

கனவில் வரும் உருவம் மொத்தமும் மங்களாக தெரிந்த போதும் பளிச்சிட்டு தெரியும் கண்களே மொழிக்கு அவசியமின்றி அத்தனை கதைகள் பேசும்..கனவில் பார்த்து ரசித்து செல்ல இம்சையாயினும் சுக்கித்தவனுக்கு இது தான் தன் கனவில் உலா வரும் கண்கள் என தெரியாமலா போய் விடும் இதோ இவனும் உணர்ந்து கொண்டான் சற்று நேரத்திலேயே...


அவனுக்கு முகம் அறிமுகம் ஆகும் முன்பே உணர்வுகளால் அறிமுகமான காதல் இது...

அவளை ஒருவழியாக கண்டெடுத்து கொண்டவன் இனி எப்படி அவளின் நெருடலில் இருந்து பெண்ணவளை மீட்டெடுத்து தன் காதல் சிறையில் அடைத்து கொள்வான் என்பதை பொருத்து இருந்து தான் காண வேண்டும்...பார்க்கலாம்...

அவள் கண்களை தன் கண்களால் கவ்வி கொண்டவனுக்கு பார்வையை விலகும் என்னம் விட்டு போனதாய் அவள் விழிகளிலேயே சுற்றம் மறந்து முழுக்கி இருந்தவனுக்கு இன்று முழுவதும் இப்படியே தான் நின்றக வேண்டும் என யாராவது பெயருக்காக கூறினாலும் தெய்வ வாக்காக ஏற்று பின்பற்றும் அளவிற்கு இந்த வேலை அத்தனை பிடித்து போனது அவனுக்கு...

அவன் கடை கண் பார்வையேனும் தன் மேல் பதியாதா என ஏங்கியவளுக்கு இன்று அவன் மொத்த பார்வையும் தன் மேல் நிலையாக நின்று வசீகரித்ததில் சிறகு இல்லாமல் வானில் தூரம் பறந்த உணர்வோடு சிலிர்த்து போனாள்...

மொழிகளே வேண்டாம் என்னும் விதமாய் வாயை திறந்து கவலைகளை கொட்டி திர்க்கும் முன் பாற்வையே இத்தனை நாட்களில் கடந்து வந்த பாதையில் அச்சுறுத்திய ஏக்கம் தவிப்பு இது கானல் நீராகவே போகுமோ என்ற பயம் என அனைத்தையும் வேகவேகமாக பரிமாறி கொண்டது...

அதற்கு மேல் அவனின் விழி வீச்சை உள்வாங்கி கொள்ளும் அளவிற்கு திராணி இல்லாது குனிய போனவளின் கன்னங்களை அவசரமாக பற்றி குனிய விடாது தடுத்து மீண்டும் தன் விழியோடு அவள் விழியை கலக்கவிட்டவன் திவ்யா இல்லை ரிதன்யா என மெல்ல கூறியவன் மறு நிமிடம் அவள் இதழிலும் ஆழ கலந்து போனான்...


அவன் தீடிர் செயலில் துள்ளி விழுந்தவள் அவனிடம் இருந்து இப்படியோரு செயலை ஏதிர்பார்த்திருக்கவில்லை என்பதே உன்மை...

அவன் செயலில் அதிர்ந்த போதும் நெஞ்சில் மேல் எழும்பிய விருப்ப அவனின் தீண்டலை மறுத்தலிக்க முடியாது அவன் கரங்களில் குழைந்து போனாள் அவள்...


இதழையும் விழியையும் அவளின் இழுக்கும் விழிக்கு நேரில் பொருத்தி கொண்டவன் அவளின் இடுப்பில் கைவிட்டு கதிரையில் இருந்து தூக்கி மேஜையில் தனக்கு நேராக அமர்த்தி கொண்டு குனிய அவசியமின்றி சிரமம் இல்லாது முத்ததை தொடர்ந்தான்...

அவன் முத்ததின் வேகத்தில் திணறி விலக முயன்றவளில் கைப்பட்டு கீழே விழுந்த பைல் டப் என சத்தம் எழுப்பியதில் அவன் தெளிந்து நிதர்சத்தை உணரும் முன் போச்சு இல்லாம் போச்சு எது நடக்க கூடாதுனு நினைச்சேனோ அதுக்கு நானே அடித்தளம் போட்டுடேன் எல்லாம் என் தப்பு தான் என தன்னையே நொந்து கொண்டவள் மறு கனவம் மௌன நிலையில் இன்னும் சிக்குண்டு கிடந்தவனை தன்னில் இருந்து வலுக்கட்டாயமாக நகர்த்தி வட்டு வேகவேகமாக தன் கேபினை நோக்கி ஒடியிருந்தாள் அவள்....

மூச்சு வாங்கியபடி தன் அருகே வந்து அமர்ந்தவளை கண்டு கொண்ட விஜ் என்னாச்சு ரிது ஏன் இப்படி பதட்டமா இருக்க எதுவும் பிரச்சனையா...

சிரமப்பட்டு தன்னை சமன்படுத்தி கொண்டு முயன்று சிரித்தவளாய் நா எப்பையும் போல நல்லாதா இருக்கேன் ஒன்னும் பிரச்சனை இல்லை என்றவளை குழப்பமாக பார்த்து வைத்தவளிடம் வீட்டுக்கு போகலாமா என கேட்கவும் இன்னும் குழப்பம் கூடிய போதும் சரி என தலை அசைத்து அவளை அழைத்து கொண்டு சென்றிருந்தாள் விஜி...

அவசரமாக தன்னில் இருந்து பிரிந்து ஒடி சென்றவளை நோட்டம் விட்டு கொண்டே நின்றவனுக்கு அப்போது தான் சில விஷயங்கள் விளங்கியது...


இத்தனை நாள் யாரோ தன்னை பார்வையால் துளையிடுவதை போல் நெஞ்சில் தழும்பிய உணர்வு இவளால் தானா என்று தன்னிடமே கேட்டு கொண்டவன் இவ்வளவு பக்கத்துல இருந்த உன்னையா லூசு மாதிரி உன்னும் புரியாம தொடர்பில்லாத இடத்துல தேடி அளைந்தேன் என தன்னை ஏசி கொண்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது...


ஏதோ ஒரு யோசனையில் புருவம் சுருங்க திவிரமாக ஆழ்ந்து இருந்த அஞ்சலியை .. அப்போது தான் அலுவலக அறையில் இருந்து வெளி வந்த அதர்ஷன் கண்டு கொண்டு மெல்ல அவள் பின் சென்று முடிச்சிட்ட புருவங்களை வருடிவிட்டு அப்படியே அவள் இரு கன்னத்தையும் பற்றி பின்னோக்கி உயர்த்தி நெற்றியில் முத்தமிட்டு என்ன தீவிர யோசனை அம்மு என கண் சிமிட்டி கேட்டவனை பார்த்து ஆழகாக சிரித்தவள் பின் நின்றவனின் கைப்பற்றி முன்னுக்கு இழுத்து தன் முன் அமர்த்தியவள் அவன் நெஞ்சோடு ஒன்றி கொண்டு...

நா என்ன நினைச்சாலும் கண்டு புடிச்சுருவேன்னு சொல்லுவிங்கல எங்க இப்போ சொல்லுங்க பார்ப்போ என்றவளின் முகத்தை நிமிர்த்து கண்களை உன்றி பார்த்தவன் நீ ஏதோ என்கிட்ட கேட்க நினைக்கிற கரேக்டா என்றதும் அவனை பார்த்து சிரித்து ஆமொதிப்பாய் தலை அசைத்தவள் அப்படியே எதை பத்தினும் கண்டு பிடிங்க பார்ப்போம் என இப்போதும் அவளே அவன் கரங்களில் நாடியை தன் முட்டு கொடுத்து கேட்க...

ஏதோ குழப்பம்னு சொல்லுற என அம்முவோட கண்ணு எதை பத்தினு சொல்ல மாட்டிக்கிதே என அவளை நன்றாக நெருங்கி வர...

தள்ளி இருந்தே கண்டுபிடிக்கலாம் என நிமிடங்களையும் விரையமாக்காது தன்னை ஒட்டி கொள்ள துடித்தவனை விலக்கி நிறுத்து கூற..

இரு டி நல்லா கிட்டக்க வந்து பார்த்தாதான் தெரியும் அப்பறம் தப்பா சொன்னா இதை கூட கண்டு பிடிக்க முடியாதானு திட்ட கூடாது சொல்லிட்டேன் ஆமா என்ற குறும்பாக பார்த்தவள் ஒஒ சரி சரி சொல்லுங்க என்றதும் அவளை நன்றாக நெருங்கி அனைத்து கொண்டவன் என்னடா கண்ணா என்னச்சு எதாவது சொல்லனுமா என்றவன் தன் கேலி கின்டலுக்கு சற்று இடைவெளி விட்டு கேட்டவனுக்கு இவளுக்கு எதுவும் பிரச்சனையா என்றே யோசித்திருந்தான்...

ஒன்னும் இல்லை பதட்ட படாதிங்க‌ என்றவளிடம் அப்பறம் என்னமா யோசனை...

ஆது அது வந்து செல்வா உங்க தம்பி தான என்றவுடன் அவன் முகம் சற்று இறுகி போவதை கவனித்தாலும் பேச்சை அத்தோடு முடித்து கொள்ளாது மேலும் தொடர்ந்தவளாய்‌ அதுக்கு உங்க அ..ம்ம.மா மா..மா எதுவும் கேட்களையா என்றவளுக்கு எங்கே அவர்களால் தன்னவனுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்ற எண்ணமே நெஞ்சோடு தழும்பியதில் இம்மாதிரியான கேள்விகள் இன்று யோசனையோடு அவனிடம் வெளிப்பட்டிருந்தது..


அவுங்க இப்போ இல்ல அவ்வளவு தான் அவுங்களை பத்தி இனி பேச வேண்டாமே என முயன்று வார்த்தைகளுக்கு கனவை பூசி அவளிடம் கூறியவன் பின் கடைசியாக அவுங்களை என்னோட அம்மானு சொல்லாத அம்மு என்றவன் படபடவென எழுந்து பால்கனியை நோக்கி சென்றிருந்தான் அவன்..

எழுந்து சென்று பால்கனி கம்பியில் கைகளை உண்றி நின்றவனை பின்னிருந்து அனைத்து சாரி மாமா இனி அவுங்கள பத்தி கேட்க மாட்டேன் எனக்கு அவுங்களால உனக்கு ஏதுவுமாக கூடாது அவ்வளவு தான் உன்னோட இந்த வார்த்தையே போதும் இனி நா எதுவும் கேட்க மாட்டேன் பிராமிஸ் என்றவளை உநோக்கி அவசரமாக திரும்பியவன் என்ன சொன்ன என‌ வினவ..

இனிமே அவுங்கள பத்தி கேட்க மாட்டேன்னு சொன்னேன்..

இல்ல இல்லடி என்ன என்னனு கூப்பிட...

அவன் எதை கேட்கிறான் என உணர்ந்தாலும் ஒன்னும் இல்லை இதான் சொன்னேன் என்று கூறி விலக நினைத்தவளின் இடையை இறுக்கி தன் பக்கம் திருப்பி ஒரு தடவை சொல்லுடி என் செல்ல பட்டுல தங்கம்ல சொல்லுமா என்வும்...

அப்போது தான் பேசி பழகும் கிள்ளை போல் மா..மா என வார்த்தை கோர்த்து பேசியவளை இழுத்து தன் மார்பில் புதைந்து கொண்டான் இறுக்கமாக...

தொடரும்.....
 
Last edited: