அந்த வீட்டின் மாட்டுக் கொட்டகையில் நின்று கொண்டு,”ஏலேய் பரணி! மாடுகளைப் பிடிச்சுக் கட்டி வைக்கச் சொல்லி எப்போ சொன்னேன் உன்னிய? இங்கே வாலே!”என்று ஒரு மாட்டின் கயிற்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்த வீரபத்திரனின் கணீர் குரலைக் கேட்டதும் வேலையாட்கள் யாவரும் அடித்துப், பிடித்துக் கொண்டு அவ்விடத்திற்கு வந்தார்கள்.
அதைக் கண்டு,”என்னலே எல்லாரும் ஓடியாந்துருக்கீங்க? உங்க எல்லாரோட பேரும் பரணியா?”என்று சீற்றமாக வினவினான்.
“இல்லைங்கய்யா!”என நடுங்கிய குரலில் கூறவும்,
“அப்போ போய் அவங்க, அவங்க சோலியைப் பாருங்க!”என்று மற்றவர்களை அனுப்பி விட்டு,
“மாட்டைக் கட்டுறது உன் வேலை தானே?”என்று பரணியிடம் கேட்டான் வீரபத்திரன்.
“ஆமாங்கய்யா!”என்றவனை அழுத்தமாகப் பார்த்தவனோ,
“அப்பறம் ஏன் அதை இவ்வளவு நேரமாகப் பண்ணாமல் இருந்த? வேற யாரும் வேலை எதுவும் கொடுத்து இருந்தாங்களா?”ன்று வினவ,
“இல்லங்கய்யா”என்றுரைத்தான் பரணி.
“அப்பறம் என்னப் பண்ணிட்டு இருந்த?”என்றான் தீர்க்கமாக,
“அது வந்துங்க ஐயா!”என்றதும் அடுத்த நிமிடம் அவனது செவிப்பறைக் கிழியும் அளவிற்கு அறை விழுந்தது.
கண்களில் பொறி கலங்கி, கன்னத்தைத் தாங்கிக் கொண்டு, விழிகளில் நீர் கசிய தன்னை ஏறிட்டவனிடம்,”இன்னொரு தடவை இப்படி ஆச்சு! உன்னை இந்த சுத்து வட்டாரத்துல எங்கேயும் வேலை செய்ய விடாமல் செஞ்சிடுவேன். சாக்கிரதை!”என்று எச்சரிக்கை விடுத்து அவனிடம் மாட்டின் கயிற்றைக் கொடுத்து விட்டு வீட்டினுள் நுழைந்த வீரபத்திரனோ,
தனது சிற்றன்னையைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அறைக்குள் போய் விட்டான்.
அதைக் கண்டுக் கழுத்தை நொடித்துக் கொண்டார் முனீஸ்வரி.
அவர் வீரபத்திரனின் தந்தை தர்மராஜின் இரண்டாம் மனைவி.
அவரது முதல் மனைவியான அஞ்சுகமோ வீரபத்திரனைப் பிரசவித்த ஒரு சில மாதங்களிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் மரணத்தை எய்தி விட்டார்.
அந்த சமயத்தில், தர்மராஜின் பெற்றோரும் அப்போது உயிருடன் இல்லை. ஆதலால், வேலையாட்களின் உதவியுடன் வளர்ந்து கொண்டிருந்த வீரபத்திரனைக் காரணம் காட்டி அவனுக்குத் தாய் வேண்டும் அப்போது தான் அவன் நன்முறையில் வளர்வான் என்றெல்லாம் தர்மராஜைப் பசப்பு வார்த்தைகளைக் கூறி மனம் மாற்றி அவரது தூரத்து உறவினரான முனீஸ்வரியைத் திருமணம் செய்து வைத்தனர் அவரது சொந்தங்கள்.
ஆனால் வீரபத்திரனைக் கவனிக்கும் சாக்கில் தர்மராஜைத் திருமணம் செய்து கொண்ட முனீஸ்வரியை அதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்தார் எனலாம்.
ஏனெனில் அவருக்குப் பணத்தின மேலும், அதிகாரத்தின் மேலும் அடங்காத பேராசை இருந்தது.
அதனாலேயே திருமணமாகி வந்த ஒரு சில மாதங்கள் மட்டும் கண் துடைப்பிற்காக வீரபத்திரனைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதாகப் பாசாங்கு செய்தவர், அதற்குப் பிறகு அவனைக் கண்டு கொள்ளவே இல்லை.
அதேபோல், வீரபத்திரனும் கூடத் தன்னுடைய சிற்றன்னையுடன் ஒட்டாத தன்மையில் தான் வளர்ந்தான்.
ஏனென்றால் தான் வளர, வளர முனீஸ்வரியின் பார்வையிலோ, செய்கையிலே மருந்துக்கும் பாசம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு
அவரிடமிருந்து ஒதுங்கியே இருந்து கொண்டான்.
இப்போது நன்றாக வளர்ந்து வாலிபனாக மாறிய பின்னர் அவரை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டான் வீரபத்திரன்.
அதைப் பற்றி மகனிடம் பலமுறை எடுத்துக் கூறிய தர்மராஜிடம்,”எனக்கு அவங்களை என் அம்மாவாகப் பார்க்க முடியலைப்பா!”என்று உறுதியாக உரைத்து விட,
அதற்குப் பிறகும் அவர் செய்த முயற்சிகள் யாவும் கடைசி வரையிலும் பலிக்கவில்லை.
அதனாலேயே அதைப் பற்றித் தன்னிடம் புலம்பிப் பாசாங்கு செய்த மனைவியிடம்,”அவன் தான் அவ்வளவு உறுதியாக சொல்றானே? பிறவென்ன பண்ண முடியும்?”என்றுரைத்து விடவும்,
அதிலிருந்து வீரபத்திரனைப் பார்க்கும் போதெல்லாம் முனீஸ்வரிக்குக் கோபமும், பொருமலும் தான் வரும்.
தர்மராஜூக்கும், முனீஸ்வரிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவளது பெயர் ஈஸ்வரி.
அவளுக்குத் தன் தந்தையின் முதல் மனைவியின் மகன் வீரபத்திரன், அவன் தனது அண்ணன் என்பது நன்றாகவே தெரிந்தாலும் கூட, அவனிடம் எந்தவித கல்மிஷமும் இன்றி பாசத்தைக் காட்டினாள்.
அவளது அந்த உன்னதமான அன்பை உதாசீனப்படுத்த முடியாமல் அவளிடம் கனிவாக நடந்து கொள்வான் வீரபத்திரன்.
அதைக் கண்டுத் தாய் பகை, குட்டி உறவா? என்று எண்ணிப் பொருமிக் கொள்வார் முனீஸ்வரி.
ஆனால் அவரைப் பொறுத்த வரையில் அதுவும் நல்ல விஷயம் தான். ஏனெனில் தர்மராஜின் பரம்பரைச் சொத்தை தவிர்த்து, அஞ்சுகத்தின் வீட்டார் அவனுக்குக் கொடுத்த சொத்தைப் பெருக்கிய நில, புலன்கள் யாவும் அளவுக்கதிகமாகவே இருந்தது.
அதையும் அவன் தங்கையின் மீதுள்ள பாசத்தால் தன் மகளுக்கு பிரித்து தர வாய்ப்புள்ளது என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தார் முனீஸ்வரி.
ஆனால், அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் தான் வீரபத்திரனும், ஈஸ்வரியும் தங்களது அண்ணன், தங்கை உறவைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
இதே சமயம்,“எப்போ பார்த்தாலும் அந்தக் கண்ணாடியையே பார்த்துட்டு இருக்காதே! கரிச்சட்டிக் கலருக்காரிக்கு வெள்ளையா ஆகனும்னு ஆசை வந்துருச்சோ? நீ எத்தனை தடவை பார்த்தாலும் உன் முகரைக்கட்டை அழகாக மாறாதுடி!” என்று அவளைத் தன்னுடைய வெண்கல குரலில் அதட்டினார் அவளது மாமியார் சற்குணம்.
அவரது பெயர் மட்டும் தான் சற்குணம்! ஆனால் அதற்கும், அவருக்கும் சம்பந்தமே இருக்காது.
அவரது வாய்க்குப் பயந்தே அவருடைய கணவர் வளையாபதி கூட மனைவியிடம் அவ்வளவாகப் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டார்.
அவரைப் போலத் தான், அவர்களது மகனான ராஜனும் தன் அன்னையிடம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள மாட்டான். ‘தாய் சொல்லைத் தட்டாதே!’ என்ற பழமொழிக்கேற்ப நடப்பவன் அவன்.
தன்னுடைய கணவன் மற்றும் மகனையே தன் தாளத்திற்கு ஏற்ப ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் சற்குணத்திற்குத் தான் பார்த்து மகனுக்குக் கட்டி வைத்திருந்த தனது மருமகளை மட்டும் சுதந்திரமாக நடக்க விட்டு விடுவாரா என்ன?
ராஜனின் மனைவியான தங்கபுஷ்பத்தைக் கொடுமை செய்யத் தொடங்கினார் சற்குணம்.
என்ன தான் கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கூடத் தான் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய வீட்டில் அவ்வளவாக வேலை செய்ததில்லை. அதனால் இங்கே தன் மாமியாரின் கொடும் சொற்களுக்கு ஆளாகி நின்றாள் தங்கபுஷ்பம்.
அதற்குப் பிறகுத் தனது தாயின் உதவியுடன் கொஞ்சம், கொஞ்சமாக சமையல் மற்றும் மற்ற வேலைகளைக் கற்றுக் கொண்டாள்.
இப்போது ஓரளவிற்கு எல்லாவற்றையும் நறுவிசாக செய்து விடுவாள் தங்கபுஷ்பம்.
சற்குணம்,“ஏய்! இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்கிறவ? கண்ணாடியைத் தேய்ச்சிறாதே! இங்கே வா!”என்று மீண்டும் அவளை அதட்டவும்,
“ப்ச்! இந்தம்மாவோட தொல்லைத் தாங்க முடியலை”என்று முணுமுணுத்து விட்டு நிலைக் கண்ணாடியில் தனது பிம்பத்தை ஒரு முறை பார்த்து விட்டு மாமியாரிடம் சென்றாள் தங்கபுஷ்பம்.
“இப்படி உட்காரு” என்று தரையைச் சுட்டிக் காட்டிக் கூறவும், உடனே அமைதியாக அமர்ந்தாள்.
“எல்லா வேலையையும் முடிச்சிட்டியா?”என்ற சற்குணத்திடம்,
“முடிச்சிட்டேன் அத்தை”எனப் பவ்யமாக உரைத்தாள் மருமகள்.
“சரி. இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க மாமா எழுந்து வந்துருவாரு. அவருக்குக் காப்பித் தண்ணிப் போட்டுக் கொடுத்துரு. உன் புருஷன் வேலை முடிஞ்சி எத்தினி மணிக்கு வருவானாம்?”
“அதை இன்னும் நான் அவர் கிட்ட கேட்கலை அத்தை. நீங்க கேட்க சொன்னால் கேட்கனும்னு காத்திருந்தேன்”என்று பதிலளிக்க,
அதைக் கேட்டதும், அவளைச் செருக்குடன் பார்த்த சற்குணமோ,“இப்போ என் முன்னாடி போனு பண்ணிக் கேளு”என்றதும் தனது பட்டன் மொபைலை எடுத்துக் கணவருக்கு அழைக்க,
அதை ஏற்று,”என்ன?”என்று அசுவாரசியமாக கேட்டான் அவளது கணவன் ராஜன்.
“நீங்க எப்போ வீட்டுக்கு வருவீகன்னு அத்தை உங்களுக்குக் கூப்பிட்டுக் கேக்க சொன்னாக”என்று இயந்திரத் தனமாக உரைத்தாள் தங்கபுஷ்பம்.
“ஓஹ், கொஞ்சம் தாமசம் ஆகும்ன்னு சொல்லு”என்று கூறி அவளை அடுத்துப் பேச அனுமதிக்காது அழைப்பை வைத்து விடவும்,
அவன் சொன்னதை தன் மாமியாரிடம் தெரிவிக்க,”சரி. வரட்டும்”என்ற போதே எழுந்து வந்தார் அவரது கணவர் வளையாபதி.
உடனே எழுந்து,“வாங்க மாமா. காப்பித் தண்ணிப் போட்டுத் தரவா?”என்று அவரிடம் வினவினாள் தங்கபுஷ்பம்.
“ம்ம். கொண்டு வா”என்று அதிகாரமாக உரைத்து விட்டு மனைவியின் அருகில் அமர்ந்து கொள்ள,
உடனே அடுக்களைக்குச் சென்று அவருக்குக் காபி தயாரிக்கத் தொடங்கினாள்.
“என்னவாம் உம் பையன்?”என்று மனைவியிடம் விசாரித்தார் வளையாபதி.
சற்குணம்,“வீட்டுக்கு வரத் தாமசம் ஆகுமாம்! போனு போட்டுக் கேட்டா தான் சொல்லுவார் துரை”என அவரிடம் சலித்துக் கொண்டார்.
“ம்ஹ்ம். அவன் வந்ததும் பிடிச்சு ஏறி விடு”என்று யோசனை கூறினார் கணவர்.
அந்த நேரத்தில் காப்பிக் கோப்பையைக் கொண்டு வந்து,”இந்தாங்க மாமா”என்று அவரிடம் கொடுத்தாள் தங்கபுஷ்பம்.
அதை வாங்கிப் பருக ஆரம்பித்து விட்டார் வளையாபதி.
“வேற ஏதாவது வேலை இருந்தால் போய்ப் பாரு. ஆனால் சும்மா மட்டும் இருக்காதே!”என்று அவளை அனுப்பிய சற்குணமோ, தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்து அதில் கவனத்தைப் பதிக்கத் தொடங்கினார்.
இதே சமயம்,‘ஏதாவது வேலையைச் செய்து கொண்டு இரு!’என்ற மாமியாரின் கட்டளைக்கு இணங்கி அடுக்களையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் தங்கபுஷ்பம்.
அவளது குடும்பம் ஒரு பணக்கார குடும்பமாகத் தான் இருந்தது. அவளுடைய பெற்றோருக்கு நில, புலன்கள் ஏராளமாகவும் இருந்தது.
ஆனால் அவை அனைத்தும் கடந்த காலத்தில் இருந்தது எனலாம். இப்போது அவளது சொத்துக்களில் முக்கால்வாசியை வரதட்சணை என்னும் பெயரில் ராஜனின் பொறுப்பில் இருக்கிறது.
அதை அவனும், அவனது பெற்றோரும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கிராமத்தின் சுற்று வட்டாரம் முழுவதிலும் வாழும் மக்களுக்குக் காலம், காலமாகப் படிப்பித்து இருக்கும் விஷயம் என்னவென்றால், திருமணம், மாங்கல்யம் இதையெல்லாம் தங்கள் உயிர் மூச்சாக கருத வேண்டும் என்பது தான்!
அதையே வழி வழியாகத், தங்களது மகள்களுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பார்கள். அந்தக் கிராமத்தில் வாழும் குடும்பங்களில் ஒன்று தான் தங்கபுஷ்பத்தின் குடும்பம்.
ஆகவே, அவர்களும் தங்களது மகளுக்கு அதையே படிப்பித்து இருந்தார்கள்.
தங்கபுஷ்பத்தின் தந்தையின் சொந்த தங்கை தான் சற்குணம். அவளது கருத்த நிறத்தைக் காரணம் காட்டி அவளது பெற்றோர்களை மேலும் யோசிக்க விடாமல் தங்கபுஷ்பம் மற்றும் ராஜனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்.
அதேபோல் அவர்களது சொத்தில் இருந்து பெரும் பங்கை வரதட்சணையாக வாங்கிக் கொண்டனர்.
ஆனால் ராஜன் மற்றும் தங்கபுஷ்பத்தின் திருமணம் அதற்காக மட்டுமே நிகழவில்லை என்பதை அவள் அறியும் போது இதை விட இன்னும் துடிதுடித்துப் போய் விடுவாள்!
இதே சமயம், தங்களது வயலில் கட்டியிருந்த சிறு அறையில் கட்டிலில் மல்லாக்கப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் ராஜன்.
- தொடரும்
அதைக் கண்டு,”என்னலே எல்லாரும் ஓடியாந்துருக்கீங்க? உங்க எல்லாரோட பேரும் பரணியா?”என்று சீற்றமாக வினவினான்.
“இல்லைங்கய்யா!”என நடுங்கிய குரலில் கூறவும்,
“அப்போ போய் அவங்க, அவங்க சோலியைப் பாருங்க!”என்று மற்றவர்களை அனுப்பி விட்டு,
“மாட்டைக் கட்டுறது உன் வேலை தானே?”என்று பரணியிடம் கேட்டான் வீரபத்திரன்.
“ஆமாங்கய்யா!”என்றவனை அழுத்தமாகப் பார்த்தவனோ,
“அப்பறம் ஏன் அதை இவ்வளவு நேரமாகப் பண்ணாமல் இருந்த? வேற யாரும் வேலை எதுவும் கொடுத்து இருந்தாங்களா?”ன்று வினவ,
“இல்லங்கய்யா”என்றுரைத்தான் பரணி.
“அப்பறம் என்னப் பண்ணிட்டு இருந்த?”என்றான் தீர்க்கமாக,
“அது வந்துங்க ஐயா!”என்றதும் அடுத்த நிமிடம் அவனது செவிப்பறைக் கிழியும் அளவிற்கு அறை விழுந்தது.
கண்களில் பொறி கலங்கி, கன்னத்தைத் தாங்கிக் கொண்டு, விழிகளில் நீர் கசிய தன்னை ஏறிட்டவனிடம்,”இன்னொரு தடவை இப்படி ஆச்சு! உன்னை இந்த சுத்து வட்டாரத்துல எங்கேயும் வேலை செய்ய விடாமல் செஞ்சிடுவேன். சாக்கிரதை!”என்று எச்சரிக்கை விடுத்து அவனிடம் மாட்டின் கயிற்றைக் கொடுத்து விட்டு வீட்டினுள் நுழைந்த வீரபத்திரனோ,
தனது சிற்றன்னையைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அறைக்குள் போய் விட்டான்.
அதைக் கண்டுக் கழுத்தை நொடித்துக் கொண்டார் முனீஸ்வரி.
அவர் வீரபத்திரனின் தந்தை தர்மராஜின் இரண்டாம் மனைவி.
அவரது முதல் மனைவியான அஞ்சுகமோ வீரபத்திரனைப் பிரசவித்த ஒரு சில மாதங்களிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் மரணத்தை எய்தி விட்டார்.
அந்த சமயத்தில், தர்மராஜின் பெற்றோரும் அப்போது உயிருடன் இல்லை. ஆதலால், வேலையாட்களின் உதவியுடன் வளர்ந்து கொண்டிருந்த வீரபத்திரனைக் காரணம் காட்டி அவனுக்குத் தாய் வேண்டும் அப்போது தான் அவன் நன்முறையில் வளர்வான் என்றெல்லாம் தர்மராஜைப் பசப்பு வார்த்தைகளைக் கூறி மனம் மாற்றி அவரது தூரத்து உறவினரான முனீஸ்வரியைத் திருமணம் செய்து வைத்தனர் அவரது சொந்தங்கள்.
ஆனால் வீரபத்திரனைக் கவனிக்கும் சாக்கில் தர்மராஜைத் திருமணம் செய்து கொண்ட முனீஸ்வரியை அதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்தார் எனலாம்.
ஏனெனில் அவருக்குப் பணத்தின மேலும், அதிகாரத்தின் மேலும் அடங்காத பேராசை இருந்தது.
அதனாலேயே திருமணமாகி வந்த ஒரு சில மாதங்கள் மட்டும் கண் துடைப்பிற்காக வீரபத்திரனைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதாகப் பாசாங்கு செய்தவர், அதற்குப் பிறகு அவனைக் கண்டு கொள்ளவே இல்லை.
அதேபோல், வீரபத்திரனும் கூடத் தன்னுடைய சிற்றன்னையுடன் ஒட்டாத தன்மையில் தான் வளர்ந்தான்.
ஏனென்றால் தான் வளர, வளர முனீஸ்வரியின் பார்வையிலோ, செய்கையிலே மருந்துக்கும் பாசம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு
அவரிடமிருந்து ஒதுங்கியே இருந்து கொண்டான்.
இப்போது நன்றாக வளர்ந்து வாலிபனாக மாறிய பின்னர் அவரை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டான் வீரபத்திரன்.
அதைப் பற்றி மகனிடம் பலமுறை எடுத்துக் கூறிய தர்மராஜிடம்,”எனக்கு அவங்களை என் அம்மாவாகப் பார்க்க முடியலைப்பா!”என்று உறுதியாக உரைத்து விட,
அதற்குப் பிறகும் அவர் செய்த முயற்சிகள் யாவும் கடைசி வரையிலும் பலிக்கவில்லை.
அதனாலேயே அதைப் பற்றித் தன்னிடம் புலம்பிப் பாசாங்கு செய்த மனைவியிடம்,”அவன் தான் அவ்வளவு உறுதியாக சொல்றானே? பிறவென்ன பண்ண முடியும்?”என்றுரைத்து விடவும்,
அதிலிருந்து வீரபத்திரனைப் பார்க்கும் போதெல்லாம் முனீஸ்வரிக்குக் கோபமும், பொருமலும் தான் வரும்.
தர்மராஜூக்கும், முனீஸ்வரிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவளது பெயர் ஈஸ்வரி.
அவளுக்குத் தன் தந்தையின் முதல் மனைவியின் மகன் வீரபத்திரன், அவன் தனது அண்ணன் என்பது நன்றாகவே தெரிந்தாலும் கூட, அவனிடம் எந்தவித கல்மிஷமும் இன்றி பாசத்தைக் காட்டினாள்.
அவளது அந்த உன்னதமான அன்பை உதாசீனப்படுத்த முடியாமல் அவளிடம் கனிவாக நடந்து கொள்வான் வீரபத்திரன்.
அதைக் கண்டுத் தாய் பகை, குட்டி உறவா? என்று எண்ணிப் பொருமிக் கொள்வார் முனீஸ்வரி.
ஆனால் அவரைப் பொறுத்த வரையில் அதுவும் நல்ல விஷயம் தான். ஏனெனில் தர்மராஜின் பரம்பரைச் சொத்தை தவிர்த்து, அஞ்சுகத்தின் வீட்டார் அவனுக்குக் கொடுத்த சொத்தைப் பெருக்கிய நில, புலன்கள் யாவும் அளவுக்கதிகமாகவே இருந்தது.
அதையும் அவன் தங்கையின் மீதுள்ள பாசத்தால் தன் மகளுக்கு பிரித்து தர வாய்ப்புள்ளது என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தார் முனீஸ்வரி.
ஆனால், அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் தான் வீரபத்திரனும், ஈஸ்வரியும் தங்களது அண்ணன், தங்கை உறவைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
இதே சமயம்,“எப்போ பார்த்தாலும் அந்தக் கண்ணாடியையே பார்த்துட்டு இருக்காதே! கரிச்சட்டிக் கலருக்காரிக்கு வெள்ளையா ஆகனும்னு ஆசை வந்துருச்சோ? நீ எத்தனை தடவை பார்த்தாலும் உன் முகரைக்கட்டை அழகாக மாறாதுடி!” என்று அவளைத் தன்னுடைய வெண்கல குரலில் அதட்டினார் அவளது மாமியார் சற்குணம்.
அவரது பெயர் மட்டும் தான் சற்குணம்! ஆனால் அதற்கும், அவருக்கும் சம்பந்தமே இருக்காது.
அவரது வாய்க்குப் பயந்தே அவருடைய கணவர் வளையாபதி கூட மனைவியிடம் அவ்வளவாகப் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டார்.
அவரைப் போலத் தான், அவர்களது மகனான ராஜனும் தன் அன்னையிடம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள மாட்டான். ‘தாய் சொல்லைத் தட்டாதே!’ என்ற பழமொழிக்கேற்ப நடப்பவன் அவன்.
தன்னுடைய கணவன் மற்றும் மகனையே தன் தாளத்திற்கு ஏற்ப ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் சற்குணத்திற்குத் தான் பார்த்து மகனுக்குக் கட்டி வைத்திருந்த தனது மருமகளை மட்டும் சுதந்திரமாக நடக்க விட்டு விடுவாரா என்ன?
ராஜனின் மனைவியான தங்கபுஷ்பத்தைக் கொடுமை செய்யத் தொடங்கினார் சற்குணம்.
என்ன தான் கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கூடத் தான் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய வீட்டில் அவ்வளவாக வேலை செய்ததில்லை. அதனால் இங்கே தன் மாமியாரின் கொடும் சொற்களுக்கு ஆளாகி நின்றாள் தங்கபுஷ்பம்.
அதற்குப் பிறகுத் தனது தாயின் உதவியுடன் கொஞ்சம், கொஞ்சமாக சமையல் மற்றும் மற்ற வேலைகளைக் கற்றுக் கொண்டாள்.
இப்போது ஓரளவிற்கு எல்லாவற்றையும் நறுவிசாக செய்து விடுவாள் தங்கபுஷ்பம்.
சற்குணம்,“ஏய்! இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்கிறவ? கண்ணாடியைத் தேய்ச்சிறாதே! இங்கே வா!”என்று மீண்டும் அவளை அதட்டவும்,
“ப்ச்! இந்தம்மாவோட தொல்லைத் தாங்க முடியலை”என்று முணுமுணுத்து விட்டு நிலைக் கண்ணாடியில் தனது பிம்பத்தை ஒரு முறை பார்த்து விட்டு மாமியாரிடம் சென்றாள் தங்கபுஷ்பம்.
“இப்படி உட்காரு” என்று தரையைச் சுட்டிக் காட்டிக் கூறவும், உடனே அமைதியாக அமர்ந்தாள்.
“எல்லா வேலையையும் முடிச்சிட்டியா?”என்ற சற்குணத்திடம்,
“முடிச்சிட்டேன் அத்தை”எனப் பவ்யமாக உரைத்தாள் மருமகள்.
“சரி. இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க மாமா எழுந்து வந்துருவாரு. அவருக்குக் காப்பித் தண்ணிப் போட்டுக் கொடுத்துரு. உன் புருஷன் வேலை முடிஞ்சி எத்தினி மணிக்கு வருவானாம்?”
“அதை இன்னும் நான் அவர் கிட்ட கேட்கலை அத்தை. நீங்க கேட்க சொன்னால் கேட்கனும்னு காத்திருந்தேன்”என்று பதிலளிக்க,
அதைக் கேட்டதும், அவளைச் செருக்குடன் பார்த்த சற்குணமோ,“இப்போ என் முன்னாடி போனு பண்ணிக் கேளு”என்றதும் தனது பட்டன் மொபைலை எடுத்துக் கணவருக்கு அழைக்க,
அதை ஏற்று,”என்ன?”என்று அசுவாரசியமாக கேட்டான் அவளது கணவன் ராஜன்.
“நீங்க எப்போ வீட்டுக்கு வருவீகன்னு அத்தை உங்களுக்குக் கூப்பிட்டுக் கேக்க சொன்னாக”என்று இயந்திரத் தனமாக உரைத்தாள் தங்கபுஷ்பம்.
“ஓஹ், கொஞ்சம் தாமசம் ஆகும்ன்னு சொல்லு”என்று கூறி அவளை அடுத்துப் பேச அனுமதிக்காது அழைப்பை வைத்து விடவும்,
அவன் சொன்னதை தன் மாமியாரிடம் தெரிவிக்க,”சரி. வரட்டும்”என்ற போதே எழுந்து வந்தார் அவரது கணவர் வளையாபதி.
உடனே எழுந்து,“வாங்க மாமா. காப்பித் தண்ணிப் போட்டுத் தரவா?”என்று அவரிடம் வினவினாள் தங்கபுஷ்பம்.
“ம்ம். கொண்டு வா”என்று அதிகாரமாக உரைத்து விட்டு மனைவியின் அருகில் அமர்ந்து கொள்ள,
உடனே அடுக்களைக்குச் சென்று அவருக்குக் காபி தயாரிக்கத் தொடங்கினாள்.
“என்னவாம் உம் பையன்?”என்று மனைவியிடம் விசாரித்தார் வளையாபதி.
சற்குணம்,“வீட்டுக்கு வரத் தாமசம் ஆகுமாம்! போனு போட்டுக் கேட்டா தான் சொல்லுவார் துரை”என அவரிடம் சலித்துக் கொண்டார்.
“ம்ஹ்ம். அவன் வந்ததும் பிடிச்சு ஏறி விடு”என்று யோசனை கூறினார் கணவர்.
அந்த நேரத்தில் காப்பிக் கோப்பையைக் கொண்டு வந்து,”இந்தாங்க மாமா”என்று அவரிடம் கொடுத்தாள் தங்கபுஷ்பம்.
அதை வாங்கிப் பருக ஆரம்பித்து விட்டார் வளையாபதி.
“வேற ஏதாவது வேலை இருந்தால் போய்ப் பாரு. ஆனால் சும்மா மட்டும் இருக்காதே!”என்று அவளை அனுப்பிய சற்குணமோ, தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்து அதில் கவனத்தைப் பதிக்கத் தொடங்கினார்.
இதே சமயம்,‘ஏதாவது வேலையைச் செய்து கொண்டு இரு!’என்ற மாமியாரின் கட்டளைக்கு இணங்கி அடுக்களையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் தங்கபுஷ்பம்.
அவளது குடும்பம் ஒரு பணக்கார குடும்பமாகத் தான் இருந்தது. அவளுடைய பெற்றோருக்கு நில, புலன்கள் ஏராளமாகவும் இருந்தது.
ஆனால் அவை அனைத்தும் கடந்த காலத்தில் இருந்தது எனலாம். இப்போது அவளது சொத்துக்களில் முக்கால்வாசியை வரதட்சணை என்னும் பெயரில் ராஜனின் பொறுப்பில் இருக்கிறது.
அதை அவனும், அவனது பெற்றோரும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கிராமத்தின் சுற்று வட்டாரம் முழுவதிலும் வாழும் மக்களுக்குக் காலம், காலமாகப் படிப்பித்து இருக்கும் விஷயம் என்னவென்றால், திருமணம், மாங்கல்யம் இதையெல்லாம் தங்கள் உயிர் மூச்சாக கருத வேண்டும் என்பது தான்!
அதையே வழி வழியாகத், தங்களது மகள்களுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பார்கள். அந்தக் கிராமத்தில் வாழும் குடும்பங்களில் ஒன்று தான் தங்கபுஷ்பத்தின் குடும்பம்.
ஆகவே, அவர்களும் தங்களது மகளுக்கு அதையே படிப்பித்து இருந்தார்கள்.
தங்கபுஷ்பத்தின் தந்தையின் சொந்த தங்கை தான் சற்குணம். அவளது கருத்த நிறத்தைக் காரணம் காட்டி அவளது பெற்றோர்களை மேலும் யோசிக்க விடாமல் தங்கபுஷ்பம் மற்றும் ராஜனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்.
அதேபோல் அவர்களது சொத்தில் இருந்து பெரும் பங்கை வரதட்சணையாக வாங்கிக் கொண்டனர்.
ஆனால் ராஜன் மற்றும் தங்கபுஷ்பத்தின் திருமணம் அதற்காக மட்டுமே நிகழவில்லை என்பதை அவள் அறியும் போது இதை விட இன்னும் துடிதுடித்துப் போய் விடுவாள்!
இதே சமயம், தங்களது வயலில் கட்டியிருந்த சிறு அறையில் கட்டிலில் மல்லாக்கப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் ராஜன்.
- தொடரும்