• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாணிலா அழகன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
21
அவள்- 5
🤎🤎🤎


"
எஸ் கியூஸ் மீ சார்".. என்று வெளியில் இருந்து வந்த அவள் குரல்..

அவனின் செவிப்பறைக்குள் சென்ற உடன் வாய் முனுமுனுத்தன..

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்..மழலைச்சொல் கேளா தவர் - என்ற குறளின் கூற்றை பொய்யாக்கியது" அவள் குரல்"

"எஸ்" என்ற ஒற்றை சொல்லுடன்..அவள் வருகையில் ரூம் முழுதும் சந்தனம் கலந்த மல்லிகை வாசனை.. அப்பப்பா நிமிர்ந்தவன் அப்படியே நிலை தடுமாறி போக செய்தாள் எதிரில் நின்ற இளம் தேவதை பார்த்த பின்பு ..

.."ப்ளீஸ்".. என இருக்கையை காட்டினான்.

"தேங்க்ஸ் சார்",.. என்றவளை பார்த்து,

"மிஸ் ( or) மிஸ்ஸஸ்",,

"மிஸ்ஸஸ் ஆன மிஸ் சார்".. அவள் பேச்சில் நக்கல் கொஞ்சம் தூக்கலா தான் தெரிந்தது..

" மிஸ் சுதா".. பெயரை படித்த படியே அவளுடைய விவரங்களை அறிந்துக்கொண்டே கேட்டான் உங்க அப்பா என்ன மேஸ்திரியா??

"ஏன்? சார்"..

"இல்ல த்ரிஷா, நயன், இலியானா என கலவைகள் கலந்து பெற்று உள்ளாரே அதற்காக தான் கேட்டேன்" என அசட்டு தனமான ஒரு இளிப்பிற்கு..

அவளும் மறு சிரிப்பினை சிரித்து வைத்தாள்..

வெளியில் சார் இதற்காக தான் வேகமாக வர சொன்னார் போல நகைத்தவாறே காதுகள் கிசுகிசுத்து கொண்டன..

"சுதா ஏன்? நல்ல கம்பெனியில் தானே வேலையில் இருந்து உள்ளீர்கள் பிறகு ஏன் தொடர்ந்து இருக்கல்ல"..

"இல்ல சார் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எங்க சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது ஆகிவிட்டது அதனால் தான் சார்"..

"ஓ.. ஓகே சுதா ஆல் தே பெஸ்ட், உங்களுக்கான வேலையை பற்றி ரகுபதி சார் சொல்லுவார்கள்.. வாழ்த்துகள் சுதா"..

புன்னகை உடன் விடை பெற்றாள்..

ரகுபதி சார் இவளின் வருகைக்காவே வெளியில் காத்து இருந்தவர், "வாங்க மேடம்" என அவளுக்கான வேலைகளை பற்றி விரிவுரை விடுத்தார்..

அவருக்கு வணக்கத்தை அளித்து விட்டு தனது கேபினில் தனக்கான வேலையில் ஆயத்தம் ஆனாள்..

மாலை நேரம் சீக்கிரமாக வீட்டிற்கு வந்த தன் கணவனை பார்த்து ஆச்சர்யத்தில் கேட்டாள் சிந்தியா "என்னங்க இன்று சீக்கிரமாக வந்து விட்டீங்க".

"சிந்துமா நீ முதலில் கண்ணை மூடிக்கிட்டு, என்னுடன் வா" என்றவாறே சமையல் அறையில் இருந்து ஹாலிற்கு சிந்தியாவின் கண்மூடிக் கொண்டு அழைத்து வந்தான் பின்னர் சிந்தியாவை ஷோபாவில் அமர வைத்து விட்டு சிந்தியாவின் முன் நின்றவன் தன்னிடம் மறைத்து வைத்திருக்கும் நைட்டி கவரை சிந்தியா இடம் தந்தான்..

"என்னங்க ஏன் இதெல்லாம் எனக்கு வேணாம்.. கல்யாண ஆன புதியதில் நீங்க தானே போட கூடாது உங்களுக்கு பிடிக்காது என என்னிடம் சொன்னீர்கள், இப்பொழுது என்றாயிற்று?"

"அது போன மாசாம்.. இது இந்த மாசாம்.. சிரித்து கொண்டே தந்தான்.. உன்னை எப்பொழுதும் போட்டுக்கொள்ள சொல்லல, இரவில் மட்டும் தான்.. சிந்தியா ப்ளீஸ் வாங்கிக்கிட்டு போய் போட்டுட்டு வா முதன்முதலில் வாங்கி வந்து உள்ளேன் அளவு சரியாக இருக்க என பார்க்கிறேன், இல்லன்னா கடை சாத்துவதற்கு முன்பு போகனும்" என்று நச்சரித்தான்..

ஒருவழியாக சிந்தியா நைட்டி அணிந்து கொண்டு வந்தாள். மிகவும் கச்சிதமாக இருந்தது.. (மனதில் சிரித்து கொண்டான் ஒருவழியாக இனிவரும் நாட்களில் மசாலா நாற்றம் இல்லாமல் கொஞ்ச நாள் நிம்மதியாக உறங்கலாம்..) சிந்தியாவினை இழுத்து இறுக்க தனது மார்ப்போடு தழுவிக்கொண்டான் மெல்லிய இதழில் அன்போடு முத்தரசம் பொழிந்தவனிடம் நாணத்தால் நழுவி சென்றவளை தழுவியப்படி அணைத்தவனை குக்கர் விசில் அடித்து கூப்பிட்டது.

" அச்சோ விடுங்க" என்றவள் அவனை அணைப்பில் இருந்து நழுவி ஓடினாள். சமையல் அறைக்கு.. அன்றைய இரவு இனிய இருளாக நகர்ந்தது..

மறுதினம்;

ஆபிஸ் சென்றவனுக்கு தான் வந்தது தன்னுடைய ஆபிஸ் தானா என்ற ஐயம் வரும் அளவிற்கு அவ்வளவு பெரிய மாற்றம்.. பொருட்கள் எல்லாம் அவ்வளவு அழகாக விமரிசையாக வரிசை படுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.. அவர்கள்.. அவர்கள்.. சரியாகவும் அமைதியாகவும் வேலை பார்த்த வண்ணம் நகர்ந்தன.. சுந்தருக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் அன்றைய தினங்கள் மட்டுமல்ல வருகின்ற தினங்களும் ஆச்சர்யத்தில் ஆழ்த்த காத்திருந்தன..

புது ஏஎம் - யேன் வருகைக்கு பின்னர்.. இப்பொழுது எல்லாம் ஆபிஸ் முன்பு போல அழு மூஞ்சாக இல்லை மணி துளிகள் எல்லாம் நிமிடமாக கரைந்தன..அவள் வருகைக்கு பிறகு ஆபிஸ் மட்டுமல்ல அங்கிருக்கும் அனைவரும் மனம் கூட நிறம் மாறி இருந்தனர்.. ஒருவரும் திட்டு வாங்குவது போல வேலை செய்யவில்லை.. ஆண் என்ன?? பெண் என்ன?? என போட்டி போட்டு கொண்டு வேலை ஓடியது..

அவள் வந்து இந்த ஒரு வருட காலத்தில் கம்பெனி 53- வது இடத்தில் இருந்து அசுர வேகத்தில் முன்னேறி 22 - வது இடத்தை அடைந்து இருந்தது..அதற்காக அவளுக்கு பாராட்டு விழா ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..

ஆஹா!!

விமரிசையாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..
விழாவிற்கு வருகை தந்து இருந்த அனைவரும் கண்களும் மின்னலடித்து பறித்தது.

அவளது வருகை.. அந்த பௌர்ணமி வெளிச்சத்தின் நடுவே மின்மினியாக மின்னிடும் மின் விளக்கு வெளிச்சத்தில் வெள்ளி நிலவாக அவள் வருகை.. அனைவரின் பார்வை கனலும் அவளை நோக்கிய பாய்ந்தன.. அவளின் முக அலங்காரம் அவ்வளவு மெல்லினமாக செய்து இருந்தாள். எதையும் மிகை படித்தி விடாத வண்ணத்தில் மிகவும் கவனம் செலுத்தி இருந்தாள்.. கோதுமை மேனிக்கு செந்தாமரை கலரில் அவள் உடுத்தி இருந்த சேலையில் இன்னும் நேர்த்தியாக தெரிந்தாள். காற்றின் குழலில் இசைத்திடும் கார்மேக கூந்தலுக்கு இனங்க கவிப்பாடும் கன்ன குழியே தொட்டு போகும் குடை பிடித்த சிமிக்கியும் எடுத்து வைத்தார் போன்ற நாசிக்கு எடுப்பான மூக்கத்தியும்.. சதை பிடிப்பற்ற இடையழகும்.. எப்பொழுதும் உதட்டோரத்தில் சிதறிக்கொண்டு இருக்கும் சிற்பி பல் வரிசையும் காட்டிய புன்னகையும் கண்டவர் வியக்கத்தக்க அளவில் இருந்ததாள்..

அனைவரும் அமர்ந்து இருக்கையில் எதிரே மேடையில் அவள் மட்டும் தனித்து தெரிந்தாள்.. நிர்வாக அதிகாரிகளின் பாராட்டுகளும்.. வாழ்த்துகளும்.. பரிசளிப்புகளும் தொடர்ந்து அனைவரையும் மேடை ஏற செய்தது இருந்தது.. வாழ்த்து உரை முடிந்த கையோடு ..

மேடையில் இருந்து கீழே வந்தவளுக்கு அனைவரும் பூக்கள், பொக்கை தருவதும், வாழ்த்துகள் கூறுவதும் அனைவரையும் ஒருசேர தன் அன்பினும் புன்னகை பூட்டால் பூட்டி தாழ் இட்டு இருந்தாள்..

அவனை ஒவ்வொரு முறை அவள் கடந்து செல்லும்போது எல்லாம் அவன் இதயத்தையும் கடத்தி சென்றாள்..அவன் இரத்த நாளங்களில் இருந்து வரும் தாளங்கள் இதய துடிப்பை இரட்டிப்பாகின..விழா நடைபெற்ற முடிவடைய நள்ளிரவு தொட்டு விட்டது..

அனைவரும் கிளம்பி சென்ற பின்னர் அவளுடன் சுந்தர் இவன் கிளம்ப நேரிட்டது..

"சுதா.. தனியாகவா போக போறிங்க.. நான் வேணும் என்ற உங்களை வீட்டில் கொண்டு போய் விடவா.. என்றான்?"

வீதி நடமாற்றம் இன்றி வெறித்து போய் கிடந்தது..


அவள் வருவாள்-6
 
Top