• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 03

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur

நிழல் - 3

“என்ன மாமா.. என்ன யோசனை..” என்ற ஆகனிடம் ஒன்றுமில்லை எனத் தலையாட்டியவர், அமைதியாக எழுந்து அறைக்குள் போக, அங்கோ பாதி மயக்கத்தில் தூங்கியும், தூங்காத விழிகளுடன் அறை வாசலையேப் பார்த்தபடி படுத்திருந்தார் மைதிலி.

ஒரு பெருமூச்சுடன் மைதிலிக்கு அருகில் அமர்ந்த ரவீந்திரன் மனைவியின் தலையை வருட, மெல்ல கண் விழித்தார். கணவரின் முகத்தில் தெரிந்த வேதனையில் “என்னாச்சு..” என மெல்ல வாயசைக்க, ‘ஒன்றுமில்லை’ என்பது போல தலையை மட்டும் அசைத்தார். ஆனால் வருடலை நிறுத்தவில்லை.

இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்திருந்தாலும் சிந்தனைகள் வேறிடத்தில் இருந்தது. மஞ்சரி இவர்கள் வாழ்வில் இருந்து சென்ற பிறகு வாழ்க்கை மிகவும் அழகாக இருப்பது போல் தோன்றியது ரவீந்திரனுக்கு. எந்த தடையும் இல்லை. பணத்திற்கு கஷ்டமில்லை. குழந்தையின் கல்விக்கு பணம் வேண்டும் என அலைய வேண்டியதில்லை. வாடகை கொடுக்க பணம் பத்தவில்லை என புலம்ப வேண்டியதில்லை. மாசக்கடைசியில் இது இல்லை, அது வேண்டும் என புலம்ப மனைவி இல்லை. பெற்றவர்கள் எதிர்பார்த்த வசதி வாய்ப்புகள் கிடைத்துவிட்டது, அவர்களின் புலம்பல்களும் தீர்ந்தது. எல்லாம் முடிந்தது. இனி அனைத்தும் சரியாகிவிட்டது என நினைக்க, அப்படி இல்லை என்று வந்து நின்றாள் மைதிலி.

முதல் மூன்று மாதங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லை. மறந்தும் கூட யாரும் மஞ்சரியைப் பத்தி பேசவே இல்லை. மைதிலிக்குப் பிடிக்காத எதையும் யாரும் செய்யக்கூடாது என சரஸ்வதி திட்டவட்டமாக சொல்லியிருக்க, அதையேதான் அனைவரும் பின்பற்றினர்.

நான்காம் மாதம் மைதிலிக்கு நாள் தள்ளிப் போயிருக்க, அனைவரும் சந்தோசமாக இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, அந்த ஒருநாள் கூட அவர்கள் சந்தோசம் நிலைக்கவில்லை.

மைதிலியை செக் செய்த மருத்துவர், “உங்களுக்கு இது எத்தானவது ப்ரெக்னன்சி” எனக் கேட்க, “செகண்ட் டைம்” என்றாள் மைதிலி.

“ஓ.. ஃபர்ஸ்ட் பேபி….”

“ட்வின்ஸ் சார் பட் இப்போ இல்ல.. பிரசவத்துலையே இறந்துட்டாங்க..”

“ஓ.. ஓக்கே… எவ்வளவு நாளாச்சு..”

“ஃபோர் யேர்ஸ் ஆச்சு,”

“ஏன் இவ்வளவு லேட் பண்ணீங்க.. உங்க ஏஜ் இப்பவே தர்டிஃபைவ்..” என இழுக்க,

“ஃபர்ஸ்ட் மேரேஜ், ஃபர்ஸ்ட் பேபிஸ் அன்ட் டிவோர்ஸ்ட்,” என பெருமூச்சு விட்டவள் “இப்போ இவர் தான் என்னோட ஹஸ்பண்ட்..” எனவும்,

“ஓ.. ஐம் சாரி.. பட் நான் உங்களுக்கு ஹோப் கொடுக்க விரும்பல, இப்ப தங்கியிருக்கிற கருவுமே ட்வின்ஸ்தான், இதுல ஒரு கருவுக்கு உயிர் துடிப்பு இல்ல. அது எதுன்னு கண்டுபிடிக்க கொஞ்ச சிரமமாகும், அதோட ஒரு கரு உயிரோடவும், ஒன்னு உயிர் இல்லாமலும் உள்ள இருக்குறது சேஃப் இல்ல.. சோ பெட்டர் டிசீசன் அபார்ட் பண்ணிக்கிறது தான்..” என பெரும் இடியைத் தூக்கி தலையில் போட, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகிப் போனது இருவருக்கும்.

இரண்டு நாட்களில் பதில் சொல்லும்படி அனுப்பிய மருத்துவர், அப்படி வர வேண்டுமென்றால் என்ன என்ன செய்து வரவேண்டும் எனவும் கூறி அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்து பெரியவர்களிடம் விஷயம் போக, மைதிலியின் பெற்றோருக்கு இந்த விசயத்தைத் தாங்கவே முடியவில்லை. என் பிள்ளையால் குழந்தைப் பெற்றுக் கொள்ளவே முடியாதா.? என அனைவரின் முன்பும் சொல்லி அழ, அது சரியாக மைதிலியின் மனதைத் தாக்க, ‘என்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாதா.?’ உள்ளுக்குள் தவிக்கத் தொடங்கினாள்.

பெரியவர்கள் பேசி ஒரு முடிவோடு இரண்டாம் நாள் மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்து என அனைத்தையும் முடிந்து வீட்டுக்கு கிளம்பும் நேரம், அவர்களைப் பார்க்கவென வந்திருந்தார் மைதிலியின் முன்னால் மாமியார்.

நல்லவேளையாக ரவீந்திரனின் குடும்பம் யாரும் இருக்கவில்லை. அவரைப் பார்த்ததும் மைதிலியின் பெற்றவர்கள் கையைப் பிசைய, “என் மருமருகளுக்கு இரண்டாவது பையன் பிறந்திருக்கான் மதினி. இங்கதான் சேர்த்துருக்கோம். நேத்து உங்களப் பார்த்தேன், அதான் என்னனு விசாரிச்சிட்டு போலாம்னு வந்தேன்..” என்றவர் வினையாமாக எதுவும் பேசவில்லை. ஆனால் மைதிலிக்கு அப்படித்தான் தோன்றியது. குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறுக்க வைத்தது.

“அப்படியா மதினி, நல்லா இருக்கட்டும். கடவுள் நல்லதே செய்யட்டும்.” என்றவர், ஒரு பெருமூச்சோடு “எங்க மதினி இவ செஞ்சி வச்ச வேலைக்கு யார் முகத்தையும் பார்க்ககூட முடியாம, ஊரையே காலி செஞ்சி வரமாதிரி ஆகிடுச்சு..” என விட்டிருந்த அழுகையைத் தொடர,

“விடுங்க மதினி முடிஞ்சதைப் பத்தி பேசி என்னாகப் போகுது. புள்ளைக்கு ஏனோ என் பையனைப் பிடிக்கல, அதுக்கு இவ்வளவு பிரச்சினை செய்திருக்க வேண்டாம். நம்மக்கிட்ட சொல்லியிருந்தா கையை காலைக் கட்டியா பொழைக்க வச்சிருக்க போறோம். இப்போ எங்க வந்து நிக்கிது பாருங்க. என்ன நடந்ததுன்னூ தெரியாமலே எம் புள்ள கஷ்டப்பட்டுட்டான். அதுல இருந்து அவனை வெளியக் கொண்டுவரவே ரொம்ப கஷ்டப்பட்டோம். இனி பிரச்சினை இல்லை. அவனை அனுசரிச்சு போற மாதிரி மருமக அமைஞ்சிட்டா. எல்லாம் சரியாகிடுச்சு மதினி.. கவலைப்படாததீங்க, இப்போ புள்ளைக்கு என்னாச்சு..?” என வந்தவர் அனுசரனையாகப் பேச,

“அத ஏன் கேட்குறீங்க மதினி” என ஆரம்பித்து மஞ்சரியைப் பற்றி, ரவீந்திரனைப் பற்றி அவன் குடும்பம் பற்றி எல்லாம் சொன்னவர், “இப்பதான் நாள் தள்ளிப் போயிருக்குன்னு வந்து சொன்னா மதினி, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு..” என அழ,

“சரி மதினி விடுங்க.. இதெல்லாம் நடக்கனும்னு இருந்துருக்கு நடக்குது. கடவுள் என்ன எழுதி வச்சிருக்கானோ அதுதானே நடக்கும். இப்போ நான் என்ன கேட்குறேன்னா, பத்து வருசம் காதலிச்சு, எட்டு வருஷம் குடும்பம் நடத்தின, ஒரு பொண்ணை பணத்துக்காக தூக்கியெறிஞ்சிட்டு வந்தவனை எந்தளவுக்கு நம்பனும்னு இருக்குல்ல. எனக்கு என்னமோ அவங்க குடும்பமே சரியில்லன்னு தோனுது மதினி. கொஞ்சம் விசாரிச்சிருக்கலாமே..” என யோசனையாகச் சொல்ல,

“நான் சொல்றதை எங்க மதினி அப்பனும் புள்ளையும் கேட்குறாங்க, இன்னும் நாள் எங்க கிடக்கு, இப்பவே இவ்வளவு பிரச்சினை. இந்த பணத்துக்காகத்தான் அந்த குடும்பம் காக்கா கூட்டம் போல சுத்தி வந்துச்சு, நாளைக்கே அது இல்லைன்னா என்ன நடக்கும். அந்த பொண்ணை துரத்தி விட்ட மாதிரி இவளையும் துரத்துவாங்க. எல்லாம் சொல்லிப் பார்த்துட்டேன், கேட்டாதானே, நான் பிடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு சுத்துறாங்க, அந்த பொம்பள என்ன மாயம் பண்ணாலோ, அவ பேச்சைத் தான் கேட்டுட்டு ஆடுறாங்க..” எனத் தன் ஆதங்கத்தைக் காட்ட, வந்தவருக்கு என்ன பேச முடியும். சில நொடிகள் மைதிலியைப் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டார்.

அவர் கிளம்பவும் தான் மைதிலிக்கு நேராக மூச்சு விட முடிந்தது. அவள் அவர்களுக்கு செய்துவிட்ட வந்த குற்றங்கள், அவளை நேரடியாக நிமிர்ந்து கூடப் பார்க்க விடவில்லை. அப்போது தவறாகத் தெரியாத அனைத்தும் இப்போது தப்பாக மட்டுமே தெரிந்தது. அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியைப் போல சரியாகப் போய் அவளைத் தாக்கியிருந்ததே.

மைதிலிக்கு திருமணத்திற்கு முன்பே ரவீந்திரன் மீது ஒரு ஈர்ப்பு இருக்க, அதை எப்படி வெளிக்காட்ட என நினைக்கும் போது ரவீந்திரனும், மஞ்சரியும் இரண்டு வருடங்களாக விரும்புவதாக தெரிய வர, தன் எண்ணத்தை முயன்ற அளவு மாற்றிக் கொள்ள முயற்சித்தாள். ஆனால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிப் போனதுதான் விதியின் சதியோ.

அந்த நேரம் அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க, நல்ல இடமாகத்தான் அமைந்தது. சென்னையில் அரசு வேலையில் இருந்தான் குரு. சென்னை.. தொலைவான இடம், இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க இதுவும் சரிதான் என்பதால் மைதிலியும் ஒத்துக்கொள்ள, திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. மைதிலியின் வீட்டினரின் வசதிக்கு சற்றும் குறைவில்லை குருவின் குடும்பம். அதனால் பணத்தை வாரியிறைத்தனர்.

அனைத்தும் நன்றாகவேப் போனது. ஒரு வேலையாக ரவீந்திரன் சென்னை செல்ல, அங்கு மைதிலியைப் பார்க்க போக, மீண்டும் மைதிலிக்கு பைத்தியம் பிடித்தது. அப்போது இருந்து குருவிடமிருந்து ஒதுங்க ஆரம்பிக்க, ஏன் எதற்கென்று புரியாமல் குரு தவிக்க, மைதிலி கருவுற்றாள்.

குழந்தை வந்தால் எல்லாம் சரியாகும் என்று நினைத்திருக்க, ஒருநாள் யாருக்கும் சொல்லாமல் சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்தாள். அதன் பிறகு பிரச்சினையோ பிரச்சினை. இரண்டு வீட்டுப் பக்கமும் எவ்வளவோ சமாதானங்கள் பேசியும் அவள் மசியவில்லை. குழந்தைகளயும் சரியாக கவனிக்கமல் விட, உடல்நிலையும் மோசமாகிக் கொண்டே போக, கடைசியில் குழந்தைப் பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அனைவரும் பிரச்சினையைத் தள்ளிப்போட, பிறந்த குழந்தைகள் இரண்டும் இறந்தேப் பிறக்க, குரு கிட்டத்தட்ட பைத்தியக்காரன் ஆகிப்போனான்.

அதன்பிறகு குருவிற்கும் அவளோடு வாழ விருப்பம் இல்லாமல் போக, மியூச்சுவலாக விவாகரத்து வாங்கிப் பிரிந்து விட்டனர். தனக்கான காலம் எப்போது அமையும் என கொக்கைப் போலக் காத்திருக்க, அனைத்தும் அமைந்தது.

ஒருமுறைத் தவறவிட்டதை மீண்டும் தவறவிடும் எண்ணம் சுத்தமாக இல்லை மைதிலிக்கு. சரஸ்வதியின் பணத்தாசையைத் தனக்கு சாதகமாக பயண்படுத்தி அனைத்து காரியங்களையும் நடத்திக் கொண்டாள்.

இதில் அப்போது தான் ரவீந்திரனுக்கும் மஞ்சரிக்கும் பணத்தை வைத்து, சிறு பிரச்சினை வந்திருக்க, குழம்பிய குட்டையில் அழகாய் மீனை பிடித்து விட்டார் சரஸ்வதி. அதன்பிறகு நடந்ததெல்லாம் மஞ்சரிக்கு துரோகத்தின் உச்சம். அவளுடனே இருந்து கொண்டு அவளுக்குத் தெரியாமலே விவாகரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, நொறுங்கிப் போனாள் பெண்.

ஏன்..? எதற்கு என கேட்டு, அழுது, சண்டையிட்டு, கெஞ்சி என எதற்கும் ரவியிடம் பதிலில்லை. இருவரையும் அப்படியே விட்டுவிட்டு பெற்றவர்களுடன் வந்துவிட்டான். அதன்பிறகு நான்காண்டுகள் மஞ்சரி விவாகரத்து கொடுக்க மாட்டேன் என போராடினாள், பல மிரட்டல்கள், அவமனாங்கள், ‘புருஷன் வேண்டாம்னு போயிட்டான்னா, இவ என்ன செஞ்சி வச்சாளோ’ என கடைசியில் அவளது நடத்தையிலும் கைவைத்தனர். அதையும் கண்டுகொள்ளவில்லை பெண்.

என்ன தவறு செய்தேன் ஏன் இப்படி ஒரு துரோகம் அதற்கான பதில் கிடைக்க வேண்டும் என போராடினாள். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போனது குழந்தையின் வடிவில். அகானாவிற்கு திடீரென காய்ச்சல் வர, அது மூளைக்காச்சலும், கூடவே மஞ்சள் காமாலையும் என மருத்துவர்கள் கூறிவிட மிகவும் ஓய்ந்து போனாள் மஞ்சரி.

மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கியே நொடிந்து போக, மஞ்சள்காமாலையின் விளைவால் கல்லீரல் பாதிக்கப்பட்டுவிட்டது. அதற்கு கண்டிப்பாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று மருத்துவர் குழு கூறிவிட, பணத்திற்காக அலையும் போதுதான், இந்த சமுதாயத்தில் தனியாக வாழும் பெண்களின் நிலை புரிந்தது.

அதுவரை வீராப்பாக இருந்தவள், தனக்கு துணையில்லாத துணைவனை தூக்கி எரிந்தாள். அந்தப் பணத்தில் தான் அகானாவின் மருத்துவச் செலவு நடத்தப்பட்டது. இதெல்லாம் மைதிலியின் மண்டைக்குள் நொடியில் ஓடி மறைய வீட்டுக்கு வந்தவள் நேராக ரவீந்திரனிடம் சென்று “குழந்தை இல்லன்னா என்னையும் வேண்டாம்னு துரத்தி விட்டுடுவீங்களா..?” என்றாள் ஆங்காரமாக,

“என்ன பேசுற நீ.. நான் எதுக்கு உன்னை துரத்தனும்.?” என அதிர்ச்சியாக ரவீந்திரன் கேட்க,

“காரணமே இல்லாமத்தான் ஒருத்தியை குடும்பமே சேர்ந்து விரட்டினீங்க, இப்போ எனக்கு காரணமே இருக்கு. அப்போ என்னையும் தானே விரட்டுவீங்க..” எனக் கத்த, ரவீந்திரனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியானது.

ஒருவழியாக அவளை சமாதானம் செய்தான் ரவி. மிகவும் பக்குவமாகத்தான் கையாள வேண்டியக் கட்டாயம். அதற்குப் பிறகும் இருமுறை கருத்தரித்து, அதுவும் கலைந்து விட மொத்தமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு வரப்பட்டாள் மைதிலி. அதிலிருந்து வெளியில் வரவே முடியவில்லை.

இதற்கிடையில் வினோத்திற்கு அவன் விரும்பிய பெண்ணுடன் திருமணம் முடிய, அவன் திருமணத்தின் போதே தனியாகத்தான் இருப்பேன் என தனிக்குடித்தனம் சென்றுவிட, மைதிலியின் பணத்திற்காக ரஞ்சனியும், சரஸ்வதியும் பொறுமையாக போக ஆரம்பித்தனர்.

இப்படியான ஒருநாளில் ரவீந்திரன் எதார்த்தமாக குழந்தைப்பற்றி பேச, “அப்போ உங்க மஞ்சரியும், குழந்தையும் வந்துட்டா, என்னை விட்டு போயிடுவீங்களா..? உங்களுக்காக நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்னுமே இல்லாமா போச்சா.? நீங்க எனக்கு இல்லன்னா யாருக்குமே இல்ல..” என அவனை அடித்துவிட்டு, கத்தியை எடுத்து தன் கையை கிழித்துக் கொள்ள, மைதிலியின் செய்கையில் அரண்டுதான் போயினர் ரவியின் குடும்பத்தினர்.

அதிலிருந்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாள்வது போல, மிகவும் பொறுமையாகவும், கவனமாகவும் தான் அவளைக் கையாள வேண்டி வந்தது. ரவிக்கு வீடும், குடும்பமும் நரகமாக மாற ஆரம்பித்தது. அதிர்ந்து பேசாத மனைவி, தன் பார்வைக்காக ஏங்கிக் கிடந்த மனைவி, தன்னைக் கண்டதும் ஆர்ப்பாட்டமாக ஓடிவரும் குழந்தை என அவனின் எண்ணங்கள் கடந்து போன இருவரையும் நோக்கி சுழல ஆரம்பித்தது.

இதற்கிடையில் நித்யாவும் கருவுற்றிருக்க, குழந்தைப் பிறக்கும் வரை அவளை மைதிலியின் முன்னே கூட வரவிடவில்லை சரஸ்வதி. மைதிலிக்கு இல்லாத உரிமை தனக்கும் இல்லை என ரவீந்தர் அந்த குழந்தைகளைக் கூட பார்க்க செல்லவில்லை. மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என மைதிலியின் பெற்றோரும் ஒருவருக்குப் பின் ஒருவராக இறந்துவிட, இப்போது மைதிலி மொத்தமாக துவண்டு போயிருந்தாள்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்ததற்குத்தான் கடவுள் இப்படியொரு தண்டனையைக் கொடுத்திருக்கிறான் என ரவியும் மைதிலியும் நினைக்க ஆரம்பித்தனர். அவளோடு அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தான். அவள் மனநிலை மாற ஆரம்பிக்க ரஞ்சனியையும், வினோத்தையும் தன்னுடனே அழைத்துக் கொண்டான்.

நித்யாவும் மைதிலியிடம் அதிகம் பேச மாட்டாளேத் தவிர குழந்தைகளை அவளிடம் விட ஆரம்பித்தாள், குடும்பம் முன்னே போல் இல்லையென்றாலும் ஓரளவுக்கு சுமுகமாகப் போனது. இதற்கிடையில் ரஞ்சனியின் மகனான ஆகனுக்கு பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து அவன் அங்கு சென்றுவிட்டான்.

அமைதியாகச் சென்ற வாழ்க்கையில் மீண்டும் ஒரு புயல் மைதிலி மூலமாகவே வீச ஆரம்பித்தது. ஒருநாள் மைதிலியிடம் பேசிக் கொண்டிருந்த ரஞ்சனி “ஏன் அண்ணி, நான் ஒன்னு சொன்னா நீங்க தப்ப எடுத்துக்கக் கூடாது சரியா..” எனப் பீடிகையுடன் ஆரம்பிக்க,

“என்னனு சொல்லு ரஞ்சனி, சரியா இருந்தா செய்யலாம்” என அவளும் பதில் கொடுக்க,

“அதுவந்து அண்ணி, அந்த பொண்ணு, அதுதான் அந்த அகானாவோ, சஹானாவோ அந்த பொண்ணை நீங்க தத்தெடுத்தா என்ன.? எப்படியும் இப்போ சோத்துக்கு வழியில்லாமத்தான் அலைவாங்க, புள்ளையைக் கொடு நாங்க வளர்க்குறோம்னு சொன்னா அந்தப் பிச்சைக்காரி கொடுக்கமாட்டாளா என்ன.? அண்ணங்கிட்ட பேசிப் பாருங்களேன்..” என சொல்லி முடிக்கும் முன்னே வினோத்தின் கைகள் தன் அக்காவின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
8
18
Ullagaram
அ.. ஆ...
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 3)


இது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்ங்கிறதோ...? வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

தனக்கொரு குழந்தை இல்லைன்னாத்தான், முதல் பொண்டாட்டியோட குழந்தையே நினைப்பு வரும் போல. அதே மைதிலிக்கும் ரவீந்தினுக்கும் மட்டும் குழந்தையிருந்திருந்தா
செஞ்ச தப்பையே உணரடந்திருக்க மாட்டாங்களோ...?


வினோத் இதே முதல்லயே செஞ்சிருக்கணும். என்னவொன்னு, அண்ணனுக்கு புரியாதது தம்பிக்காவது புரிஞ்சதே.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
792
79
63
Coimbatore
வினோத் கொஞ்சம் மனசாட்சி உள்ளவன் தானோ.