நிழல் - 5
தனக்கு எதிரே முறைத்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து அதிர்ந்த அகானா, பின் “ஹல்லோ நீங்க ஆகன் அண்ணாதானே..” என சிரித்தபடியே கேட்க,
அவனும் அவளை மேலும், கீழும் பார்த்தபடியே ‘ஆம்’ என்பது போலத் தலையை ஆட்ட, “எஸ்.. எனக்குத்தான் உங்களைத் தெரியுமே… நான் உங்களுக்கு தீவிர விசிறி..” என முன்னதை சத்தமாகவும், பின்னதை அவனுக்கு மட்டும் கேட்குமளவிற்கு சத்தத்தைக் குறைத்து சொல்ல, ‘யாரும்மா நீ’ என்பது போல இப்போது ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
அதற்குள் அகானவின் தோழிகள் அவ்விடம் வந்துவிட, “ஹேய் சீனியர்ப்பா, உனக்கு இவரை முன்னாடியே தெரியுமா..? சைத்தான் சொல்லவே இல்ல, இன்ட்ரடியூஸ் பண்ணி விடுடி.” என அனைவரும் அவள் காதைக் கடிக்க, அவளோ பல்லைக் கடித்தாள்.
‘நானே இப்போதான் பார்க்குறேன் பிசாசுங்களா’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டு, அவர்களைப் பார்த்து ஈஈ என்றாள்.
இவர்களின் அடிதடியைப் பார்த்தவன், ‘சரியான லூசுங்க போல’ என நினைத்தபடியே பேச வந்ததை விட்டுவிட்டு நகரப் போக, “ஹேய் சீனியர் போறார்டீ,” என்றவர்கள், “சீனியர் சாரி சாரி, நாங்க வந்து உங்களை டிஸ்டர்ப் செஞ்சிட்டோம், நீங்க பேசுங்க, நாங்க இன்னொரு ரவுன்ட் போயிட்டு வரோம்..” என அவனிடம் சத்தமாகச் சொல்லிவிட்டு அகானாவைப் பார்த்து ஈஈஈ என்றுவிட்டு ஓட, “இந்த பைத்தியங்கள வச்சுக்கிட்டு” எனப் பல்லைக் கடித்தாள் பெண்.
சொன்னது போலவே அகானாவின் தோழிகள் நகர, “உனக்கும் இவங்களுக்கும் சம்மந்தமே இல்ல, இப்படி இந்த கூட்டத்துல வந்து செட்டான… சரியான வானரக் கூட்டம்..” என எரிச்சலாகக் கேட்க,
“ஹலோ அவங்க எல்லாம் என்னோட ஃப்ரண்ட்ஸ், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, கொஞ்சம் ஆர்வக்கோளாறு அவ்ளோதான், அதுக்காக பைத்தியம் ரேஞ்சுக்கு யோசிக்கக்கூடாது. ஓக்கே..” என்ற அகானாவை சிரிப்புடன் பார்த்தான்.
“என்ன ஃபர்ஸ்ட் பார்க்கும் போது முறைச்சிட்டு இருந்தீங்க, இப்போ சிரிக்கிறீங்க.. நான் என்ன லூசா..” என எரிச்சலாகி பல்லைக் கடிக்க, இப்போது வாய்விட்டேச் சிரித்தான்.
“ஆமா ஏன் முறைச்சிட்டு இருந்தீங்க..” என சந்தேகமாகக் கேட்க,
“ம்ம்… இந்த மால்ல நீங்க மட்டும் தான் இருக்கூற மாதிரி பிகேவ் பண்ணீங்களே, அந்தக் கடுப்பு..” என அவனும் கடுப்பாகச் சொல்ல,
“அச்சோ சாரி… சாரி.. ஓவர் ரியாக்ட் பண்ணிட்டோமோ, எல்லாம் இந்த பிசாசுங்களாலத்தான், ட்ரீட் கேட்டு சாவடிச்சிருச்சீங்க, வேறவழியில்லாம..” என இழுக்க,
“இட்ஸ் ஓக்கே.. இனி இப்படி செய்யாதீங்க, எல்லாரும் இதை அமைதியா பார்த்துட்டு போயிடுவாங்கன்னு சொல்ல முடியாது இல்ல..” என்றவனிடம், “ம்ம்ம்” என்று மட்டும் தலையை அசைத்தாள். ‘தட்ஸ் குட்” என்றவனுக்கு விரிந்த புன்னைகை.
இதுவரை அகானா யாரிடமும் இப்படி வாய்துடுக்காக பேசியதில்லை, அதே சமயம் பதில் பேசாமல் போனதும் இல்லை. எப்போதும் ஒரு அமைதி. கேட்டால் கேட்ட கேள்விக்கு பதில். அவள் சற்றேத் தன் கூட்டில் இருந்து வெளியில் வருவது தன் தோழிகளிடம் மட்டும் தான். இன்று இவனிடம். அவளின் தோழிகள் எல்லாம் அந்த மாலில் சுற்றியபடி இருந்தாலும், காதை இவர்களிடம் தான் வைத்திருந்தனர். நம் அகானாவா இது என்று எல்லோருக்கும் தோன்றாமல் இல்லை.
ஆகன் சிரிப்பதைப் பார்த்து எரிச்சலானவள், அவனை முறைத்துவிட்டு, அங்கிருந்த சேரில் அமர்ந்து மொபைலை நோண்ட ஆரம்பிக்க, அவனும் அவளுக்கு முன்னே வந்து அமர்ந்தான்.
“சாரி.. நான் சிரிச்சிருக்கக்கூடாது, பட்..” என்று இழுத்தவன், “சாரி..” என மீண்டும் இழுக்க,
“இட்ஸ் ஓக்கே.. உங்களுக்கு எங்களைத் தெரியாது இல்லையா.. சோ நோ ப்ராப்ளம்..” என்று சொல்லும் போதே அவள் போன் அலற, ‘அம்மா’ என அவனிடம் வாயசைத்தவள், “எஸ் ம்மா.. கிளம்ப போறோம், அந்த வானரங்க இன்னும் சுத்தி முடிக்கல.. வந்துட்டு கால் பன்றேன். சரிம்மா… பை..” என்றுவிட்டு அவனைப் பார்த்தாள்.
அவனும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான், ஏன் இப்படி சிரிக்கிறான் என யோசித்தவள், சற்று முன் தன் தோழிகளை அவன் வானரம் என்ற போது எகிறிவிட்டு, அதையே அவளும் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வான் என மனசாட்சி காரித்துப்ப, அதை மறைத்தபடியே நிமிர்ந்து அவனைப் பார்க்க, “என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா.?” என்றவனிடம், புரியாத பார்வை பார்த்தபடியே “நீங்க எங்க காலேஜ்தானே..” எனப் பதில் கொடுக்க,
“ஓ… நான் பார்த்தது இல்ல..” என்றான் யோசனையாக.
“நான் பார்த்துருக்கேன், சின்சியர் சிகாமணி நீங்க..” என்றாள் சிரிப்புடன்.
“அப்படி இருந்தது தப்புன்னு இப்போ புரியுது…” எனக் கண்ணைச் சிமிட்டி சிரித்தவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஹலோ… என்னவாம்…” என அதே முறைப்புடன் கேட்க,
அந்தக் கேள்வியை அப்படியே விட்டவன், “உன்னை எங்கையோ பார்த்துருக்கேன், பார்த்த மாதிரியே இருக்கு, எங்கேன்னு யோசிச்சிட்டு இருக்கேன், நீங்க தேனியா..” என்று யோசனையாகக் கேட்டவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
‘தேனி’ சட்டென்று அவள் உடலில் ஒரு இறுக்கம். இல்லை என்பது போலத் தலையை மட்டும் அசைத்தாள்.
“ஓ.. உங்க நேடிவ் எங்க..” என அடுத்த கேள்வி கேட்டவனிடம்,
“நாங்க ரொம்ப வருஷமாவே இங்க தான் இருக்கோம், சாரி டைம் ஆகிடுச்சு. அம்மா மறுபடியும் கால் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க பை” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமலே நடக்க,
நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவளிடம் திடீரென வந்த மாற்றத்தில் யோசனையானவன், பின் “ஹல்லோ மிஸ்..” என்று சத்தமாக அழைக்க, நின்று அவனைத் திரும்பி பார்த்தவளிடம், “சீனியர்ன்னு கூப்பிடு கேட்க நல்லா இருக்கு, ஆனா இந்த அண்ணா அது எப்பவும் வேண்டாம்..” என மீண்டும் கண்ணைச் சிமிட்டி சிரிக்க, ‘கண்ணை நோண்டிடுவேன்’ என வாயசைத்தவள் திரும்பி பார்க்காமல் நடக்க, அதற்காகவே காத்திருந்தது போல, தோழிகளும் சேர்ந்து கொள்ள, அவர்களையேப் பார்த்தபடி நின்றிருந்தான் ஆகன்.
‘என்னாச்சு இவளுக்கு..? நல்லாத்தானே இருந்தா.? ச்சே பேரைக் கூட கேட்காம விட்டுட்டோமே.. சரி நம்ம காலேஜ் தானே பார்த்துப்போம்..’ என ஒரு துள்ளல் மனநிலையுடன் நகர்ந்தான் ஆகன்.
அதன் பிறகு நாட்கள் ஜெட் வேகத்தில் சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஆகன் எப்படி படிப்பில் ஒரு சின்சியர் சிகாமனியோ, அதே போல் தான் அகானவும் ஒரு புத்தகப் புழு. அன்றைய சந்திப்பிற்கு பிறகு பல நாட்கள் கழித்து தான் இருவரும் பார்த்துக் கொண்டனர். அதுவும் அவர்கள் இருவருக்குமே பிடித்த இடமான நூலகத்தில்.
படிப்பை பற்றியே தான் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைகள் இருந்தது. ஆகனின் பார்வை எப்போதாவது ரசனையாக மாறும் வேளை சட்டென்று வேலையிருப்பதாக அங்கிருந்து நகர்ந்துவிடுவாள் அகானா.
அது இருவருக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் பேசிக் கொள்ளவும் இல்லை, அந்த உணர்வை சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஆகனுக்கு முதுகலையில் இது கடைசி வருடம். அடுத்து அவன் தன்னுடைய மாமாவின் மருத்துவமனையில் சேரப் போவதாகச் சொல்லியிருந்தான்.
அவனைப் பற்றி அதிகம் சொல்வான், குடும்பம் பற்றி, தன் மாமாதான் தனக்கு ரோல் மாடல், அவரைப் பார்த்தே தான் நான் இந்த ஃபீல்ட் எடுத்தேன் என்று எல்லாம் சொல்ல, அகானா அவளைப் பற்றி எதையும் சொன்னதில்லை.
அப்பா இல்லை, அம்மா மட்டும் தான் அவளுக்கு என்ற வரைத் தெரியும், அதற்குப் பிறகு எதையும் அவள் சொன்னதில்லை. கேட்டாலும், “வேண்டாம் சீனியர், அது ஒரு அழுகாச்சி காவியம்.. சிம்பதி கிரியேட் பன்ற மாதிரி ஃபீலாகும். சோ நான் எதுவும் சொல்லமாட்டேன்..” என்று விட்டாள்.
அன்று அவன் சொன்னதில் இருந்தே ‘சீனியர்’ என்று மட்டுமே விழிக்கிறாள். ஏன் என்று இருவருக்கும் தெரியும். கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறு நூலளவான உணர்வது. அதை வெளிப்படுத்த இருவருக்குமே தயக்கம். ஆகனாக சொல்லாமல் அது புரியாது. நிச்சயம் அகானா இதைச் சொல்லமாட்டாள். அவள் சொல்லமாட்டாள் என்று ஆகனுக்குமேத் தெரிந்து தான் இருந்தது.
கல்லூரி முடிந்து ஊருக்கு செல்லும் முன் அவள் அம்மாவிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். நாட்கள் மாதங்களாகிப் போக இப்போது எல்லாம் மஞ்சரியிடமும் தன் சீனியரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள் அகானா. மகளைப் பற்றி மஞ்சரிக்கு நன்றாகத் தெரியும், அவள் படிப்பைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்த மாட்டாள் என்றும் தெரியும். அதனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அதிலும் அவரும் இந்த வயதினைத் தாண்டி வந்தவர் தானே. சில ஈர்ப்புகளை தவிர்க்க முடியாது. ஈர்ப்பை ஈர்ப்பாக கடந்துவிடுதல் நலம். தன் மகளும் கடந்து விடுவாள் என்று எண்ணிக் கொண்டார்.
இன்னும் இரண்டு நாட்களில் ஆகன் கிளம்ப வேண்டியிருந்தது. அதற்குள் அகானாவின் அம்மாவிடம் பேசியே ஆகவேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதற்குள் இதைப்பற்றித் தன் மாமனிடமும் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் பேச, ஒரு நிமிடம் அவரிடம் வார்த்தைகளே இல்லை.
“மாமா.” என ஆகன் மீண்டும் அழைத்தப் பிறகே பேச ஆரம்பித்தார், “எல்லா பிரச்சினையையும் தாண்டி, உன்னால உறுதியா அந்த பொண்ணுதான் வேனும்னு இருக்க முடியும்னா சொல்லு, நான் வீட்டுல பேசுறேன்..” என்று விட்டார்.
“என்னாச்சு மாமாவுக்கு” எனக் குழம்பியவன், அகானாவின் பெயரையாவது அப்போதே சொல்லியிருக்கலாம். சரி முதலில் இங்கு பேசி விடலாம் என்று நினைத்து அகானாவிடம் சொல்லி அன்று அவர்கள் வீட்டிற்குச் சென்றான்.
“உள்ள வாங்க சீனியர்.. அம்மா இப்போ வந்துடுவாங்க.” என்றபடியே அந்த சிறிய வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள் அவள்.
“ம்ம்.. சின்ன வீடா இருந்தாலும், ரொம்ப அழகா இருக்கு.. ஆன்டி அருமையா அழகுபடுத்தி வச்சிருக்காங்க..” என்று சிலாகித்தபடியே இருக்கையில் அமர்ந்தான் ஆகன்.
அவன் முன்னேத் தண்ணீர் பாட்டிலை நீட்டியவள் “சின்ன வீடுன்னு சொல்லாதீங்க சீனியர், வீடு அவ்வளவுதான்..” என்றவளின் குரலில் இதுவரை அவன் அறிந்திராத இறுக்கம் கூடியிருந்தது.
அதில் அவனுக்கு என்ன புரிந்ததோ “ஸாரி” என்றான் அமைதியாக.
“ம்ம்” என்பது போல் அவள் நிற்க, அவளைப் பார்த்து புன்னகைத்தவன் நீரைக் குடிக்க நிமிரும் போது, அந்த வீட்டின் சுவற்றில் அழகான ஒரு புகைப்படம் மாலையோடு காட்சியளித்தது.
அதைப் பார்த்தவன் அதிர்ச்சியில் தன் கையில் இருந்த பாட்டிலைக் கீழே விட, அவளோ அவனைப் புரியாமல் பார்த்தாள்.
“இது.. இது யாரு..” என அதிர்ச்சியில் துடிக்க மறந்த இதயத்தை தடவிக்கொண்டே கேட்டவனிடம், “இவர் எங்கப்பா சீனியர். ரவீந்திரன்.! இப்போ இவர் இங்க இல்ல..” என்றவளின் குரலில் மருந்திற்கும் சோகமோ வருத்தமோ துளியும் இல்லை.
அடுத்து அவன் என்ன பேச வேண்டும் என்று கூடத் தெரியாத நிலை, இருவரும் அமைதியாகவே நிற்க, அப்போது வாசலில் அரவம் கேட்க, இருவரும் ஒன்றாகத் திரும்ப அங்கே நின்றிருந்த மஞ்சரியைப் பார்த்து மேலும் அதிர்ச்சியானான் ஆகன்.
‘மஞ்சு அத்தை’ என வாய்த் தானாகச் சொல்ல, அதற்குள் மஞ்சரி சுதாரித்து உள்ளே வந்து “வாங்க தம்பி.. எப்படி இருக்கீங்க, உங்களைப் பத்தி தான் அம்மு பேசிட்டே இருப்பா..” என பேச,
‘அம்மு’ இப்போது ஆகனின் இதயம் வேகவேகமாகத் துடித்தது. அவன் நிலையை உணர்ந்த மஞ்சரி, “அம்மு.. தம்பிக்கு சாப்பிட ரெடி பண்ணு..” எனச் சொல்ல, தாயின் மறுக்க முடியாதக் குரலில் ‘சரி’ என்பது போல் கிச்சனுக்குள் நுழைந்தாள் அகானா.
“உக்காருங்க தம்பி..” என்றதும் குழப்பத்துடன் அமர்ந்தவன், மஞ்சரியைக் கேள்வியாகப் பார்க்க, “எங்களைப் பொறுத்த வரைக்கும் அவர் எங்க வாழ்க்கைல எங்கேயும் இல்ல தம்பி.” என மஞ்சரி அமைதியானக் குரலில் சொல்ல,
“ஆனா.. ஆனா ஏன் எப்படி இதுக்கெல்லாம் மனசு வந்தது, உயிரோட இருக்குற ஒரு மனுசனுக்குப் போய்..” என்றவனுக்கு அடுத்து பேச்சே வரவில்லை.
“அவர் இருந்தும் இல்லைன்னு அர்த்தம்.. அவர் எங்க வாழ்க்கைக்கு தேவையில்லன்னு அர்த்தம்..” என்று ஆக்ரோசமாக வந்து விழுந்தது அகானவின் வார்த்தைகள்.
“அம்மு சும்மா இரு.” என அதட்டிய மஞ்சரியைக் கண்டு கொள்ளாமல், “நீங்க சொன்ன உங்க மாமா இவர்தானா.? பெத்த பொண்ணையும், பொண்டாட்டியையும் பார்த்துக்க துப்பில்ல..” என முடிக்கும் முன்னே, “ஏய்..”, “அம்மு” என இருவரும் அதட்ட, “ஏன் ஏன் கோபம் வருது.. எதுக்கு கோபம் வருது உங்களுக்கு, இந்தாளாளா நாம தெருவுல நின்னது, பிச்சையெடுக்காத குறையா ஊர் ஊரா அலைஞ்சது எல்லாம் மறந்துடுச்சா..” என ஆங்காரமாகக் கத்த,
“போதும் சும்மா நிறுத்து, நானும் பார்த்துட்டே இருக்கேன்.. பேசிட்டே போற, என் மாமா தப்பே செஞ்சிருந்தாலும், எனக்கு மாமா. அவரை நான் எங்கேயும் விட்டுக் கொடுக்க முடியாது. அங்க இருந்து போராடாம, பணத்துக்காக வாழ்க்கையைத் தூக்கிக் கொடுத்துட்டு வந்துட்டு, இப்போ இவ்வளவு நியாயம் பேசுவீங்களா.? பணம்.. பணத்துக்காகத்தானே இந்த நாடகம் எல்லாம்.. ச்சே என்ன ஜென்மமோ… இனி உன்னை என் லைஃப்ல நான் எங்கேயும் பார்க்கக்கூடாது..” என அவளுக்கு மேலேக் கத்தியவன், போட்டோவில் தொங்கிக் கொண்டிருந்த மாலையை, இழுத்து அத்து, அவள் மூஞ்சிலேயே எறிந்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.
அதுதான் அகானா அவனைக் கடைசியாகப் பார்த்தது. அவன் எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் என எல்லாம் தெரியும், ஆனாலும் அதை அவள் கண்டு கொண்டதில்லை, தன் தாயை மரியாதை இல்லாமல் பேசிய யாரையும் மன்னிக்கும் மனப்பக்குவம் அவளுக்கு இல்லை. அது யாராக இருந்தாலும்.
‘வந்தான்.. பார்த்தான்.. சென்றான்’ என்பது போல, அவள் வாழ்வில் அதிசய உலகமாக வந்தான். அவளுக்குள்ளும் உணர்வுகள் இருக்கிறது என்பதை உணர வைத்தான். அது மலர்ந்து மனம் பரப்புவதற்குள் மொத்தமாக வெந்நீர் போன்ற சுடு சொற்களைப் பேசி, அந்த உணர்வு மீண்டும் மீண்டு வராத அளவிற்கு அவளையும், அவளது உணர்வுகளையும் கொன்றுவிட்டுச் சென்றுவிட்டான்.
அவளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பழிவெறியை தூண்டிவிட்டும் சென்றுவிட்டான். இனி அகானாவின் பழிவாங்கல் தொடரும்…
தனக்கு எதிரே முறைத்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து அதிர்ந்த அகானா, பின் “ஹல்லோ நீங்க ஆகன் அண்ணாதானே..” என சிரித்தபடியே கேட்க,
அவனும் அவளை மேலும், கீழும் பார்த்தபடியே ‘ஆம்’ என்பது போலத் தலையை ஆட்ட, “எஸ்.. எனக்குத்தான் உங்களைத் தெரியுமே… நான் உங்களுக்கு தீவிர விசிறி..” என முன்னதை சத்தமாகவும், பின்னதை அவனுக்கு மட்டும் கேட்குமளவிற்கு சத்தத்தைக் குறைத்து சொல்ல, ‘யாரும்மா நீ’ என்பது போல இப்போது ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
அதற்குள் அகானவின் தோழிகள் அவ்விடம் வந்துவிட, “ஹேய் சீனியர்ப்பா, உனக்கு இவரை முன்னாடியே தெரியுமா..? சைத்தான் சொல்லவே இல்ல, இன்ட்ரடியூஸ் பண்ணி விடுடி.” என அனைவரும் அவள் காதைக் கடிக்க, அவளோ பல்லைக் கடித்தாள்.
‘நானே இப்போதான் பார்க்குறேன் பிசாசுங்களா’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டு, அவர்களைப் பார்த்து ஈஈ என்றாள்.
இவர்களின் அடிதடியைப் பார்த்தவன், ‘சரியான லூசுங்க போல’ என நினைத்தபடியே பேச வந்ததை விட்டுவிட்டு நகரப் போக, “ஹேய் சீனியர் போறார்டீ,” என்றவர்கள், “சீனியர் சாரி சாரி, நாங்க வந்து உங்களை டிஸ்டர்ப் செஞ்சிட்டோம், நீங்க பேசுங்க, நாங்க இன்னொரு ரவுன்ட் போயிட்டு வரோம்..” என அவனிடம் சத்தமாகச் சொல்லிவிட்டு அகானாவைப் பார்த்து ஈஈஈ என்றுவிட்டு ஓட, “இந்த பைத்தியங்கள வச்சுக்கிட்டு” எனப் பல்லைக் கடித்தாள் பெண்.
சொன்னது போலவே அகானாவின் தோழிகள் நகர, “உனக்கும் இவங்களுக்கும் சம்மந்தமே இல்ல, இப்படி இந்த கூட்டத்துல வந்து செட்டான… சரியான வானரக் கூட்டம்..” என எரிச்சலாகக் கேட்க,
“ஹலோ அவங்க எல்லாம் என்னோட ஃப்ரண்ட்ஸ், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, கொஞ்சம் ஆர்வக்கோளாறு அவ்ளோதான், அதுக்காக பைத்தியம் ரேஞ்சுக்கு யோசிக்கக்கூடாது. ஓக்கே..” என்ற அகானாவை சிரிப்புடன் பார்த்தான்.
“என்ன ஃபர்ஸ்ட் பார்க்கும் போது முறைச்சிட்டு இருந்தீங்க, இப்போ சிரிக்கிறீங்க.. நான் என்ன லூசா..” என எரிச்சலாகி பல்லைக் கடிக்க, இப்போது வாய்விட்டேச் சிரித்தான்.
“ஆமா ஏன் முறைச்சிட்டு இருந்தீங்க..” என சந்தேகமாகக் கேட்க,
“ம்ம்… இந்த மால்ல நீங்க மட்டும் தான் இருக்கூற மாதிரி பிகேவ் பண்ணீங்களே, அந்தக் கடுப்பு..” என அவனும் கடுப்பாகச் சொல்ல,
“அச்சோ சாரி… சாரி.. ஓவர் ரியாக்ட் பண்ணிட்டோமோ, எல்லாம் இந்த பிசாசுங்களாலத்தான், ட்ரீட் கேட்டு சாவடிச்சிருச்சீங்க, வேறவழியில்லாம..” என இழுக்க,
“இட்ஸ் ஓக்கே.. இனி இப்படி செய்யாதீங்க, எல்லாரும் இதை அமைதியா பார்த்துட்டு போயிடுவாங்கன்னு சொல்ல முடியாது இல்ல..” என்றவனிடம், “ம்ம்ம்” என்று மட்டும் தலையை அசைத்தாள். ‘தட்ஸ் குட்” என்றவனுக்கு விரிந்த புன்னைகை.
இதுவரை அகானா யாரிடமும் இப்படி வாய்துடுக்காக பேசியதில்லை, அதே சமயம் பதில் பேசாமல் போனதும் இல்லை. எப்போதும் ஒரு அமைதி. கேட்டால் கேட்ட கேள்விக்கு பதில். அவள் சற்றேத் தன் கூட்டில் இருந்து வெளியில் வருவது தன் தோழிகளிடம் மட்டும் தான். இன்று இவனிடம். அவளின் தோழிகள் எல்லாம் அந்த மாலில் சுற்றியபடி இருந்தாலும், காதை இவர்களிடம் தான் வைத்திருந்தனர். நம் அகானாவா இது என்று எல்லோருக்கும் தோன்றாமல் இல்லை.
ஆகன் சிரிப்பதைப் பார்த்து எரிச்சலானவள், அவனை முறைத்துவிட்டு, அங்கிருந்த சேரில் அமர்ந்து மொபைலை நோண்ட ஆரம்பிக்க, அவனும் அவளுக்கு முன்னே வந்து அமர்ந்தான்.
“சாரி.. நான் சிரிச்சிருக்கக்கூடாது, பட்..” என்று இழுத்தவன், “சாரி..” என மீண்டும் இழுக்க,
“இட்ஸ் ஓக்கே.. உங்களுக்கு எங்களைத் தெரியாது இல்லையா.. சோ நோ ப்ராப்ளம்..” என்று சொல்லும் போதே அவள் போன் அலற, ‘அம்மா’ என அவனிடம் வாயசைத்தவள், “எஸ் ம்மா.. கிளம்ப போறோம், அந்த வானரங்க இன்னும் சுத்தி முடிக்கல.. வந்துட்டு கால் பன்றேன். சரிம்மா… பை..” என்றுவிட்டு அவனைப் பார்த்தாள்.
அவனும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான், ஏன் இப்படி சிரிக்கிறான் என யோசித்தவள், சற்று முன் தன் தோழிகளை அவன் வானரம் என்ற போது எகிறிவிட்டு, அதையே அவளும் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வான் என மனசாட்சி காரித்துப்ப, அதை மறைத்தபடியே நிமிர்ந்து அவனைப் பார்க்க, “என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா.?” என்றவனிடம், புரியாத பார்வை பார்த்தபடியே “நீங்க எங்க காலேஜ்தானே..” எனப் பதில் கொடுக்க,
“ஓ… நான் பார்த்தது இல்ல..” என்றான் யோசனையாக.
“நான் பார்த்துருக்கேன், சின்சியர் சிகாமணி நீங்க..” என்றாள் சிரிப்புடன்.
“அப்படி இருந்தது தப்புன்னு இப்போ புரியுது…” எனக் கண்ணைச் சிமிட்டி சிரித்தவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஹலோ… என்னவாம்…” என அதே முறைப்புடன் கேட்க,
அந்தக் கேள்வியை அப்படியே விட்டவன், “உன்னை எங்கையோ பார்த்துருக்கேன், பார்த்த மாதிரியே இருக்கு, எங்கேன்னு யோசிச்சிட்டு இருக்கேன், நீங்க தேனியா..” என்று யோசனையாகக் கேட்டவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
‘தேனி’ சட்டென்று அவள் உடலில் ஒரு இறுக்கம். இல்லை என்பது போலத் தலையை மட்டும் அசைத்தாள்.
“ஓ.. உங்க நேடிவ் எங்க..” என அடுத்த கேள்வி கேட்டவனிடம்,
“நாங்க ரொம்ப வருஷமாவே இங்க தான் இருக்கோம், சாரி டைம் ஆகிடுச்சு. அம்மா மறுபடியும் கால் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க பை” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமலே நடக்க,
நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவளிடம் திடீரென வந்த மாற்றத்தில் யோசனையானவன், பின் “ஹல்லோ மிஸ்..” என்று சத்தமாக அழைக்க, நின்று அவனைத் திரும்பி பார்த்தவளிடம், “சீனியர்ன்னு கூப்பிடு கேட்க நல்லா இருக்கு, ஆனா இந்த அண்ணா அது எப்பவும் வேண்டாம்..” என மீண்டும் கண்ணைச் சிமிட்டி சிரிக்க, ‘கண்ணை நோண்டிடுவேன்’ என வாயசைத்தவள் திரும்பி பார்க்காமல் நடக்க, அதற்காகவே காத்திருந்தது போல, தோழிகளும் சேர்ந்து கொள்ள, அவர்களையேப் பார்த்தபடி நின்றிருந்தான் ஆகன்.
‘என்னாச்சு இவளுக்கு..? நல்லாத்தானே இருந்தா.? ச்சே பேரைக் கூட கேட்காம விட்டுட்டோமே.. சரி நம்ம காலேஜ் தானே பார்த்துப்போம்..’ என ஒரு துள்ளல் மனநிலையுடன் நகர்ந்தான் ஆகன்.
அதன் பிறகு நாட்கள் ஜெட் வேகத்தில் சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஆகன் எப்படி படிப்பில் ஒரு சின்சியர் சிகாமனியோ, அதே போல் தான் அகானவும் ஒரு புத்தகப் புழு. அன்றைய சந்திப்பிற்கு பிறகு பல நாட்கள் கழித்து தான் இருவரும் பார்த்துக் கொண்டனர். அதுவும் அவர்கள் இருவருக்குமே பிடித்த இடமான நூலகத்தில்.
படிப்பை பற்றியே தான் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைகள் இருந்தது. ஆகனின் பார்வை எப்போதாவது ரசனையாக மாறும் வேளை சட்டென்று வேலையிருப்பதாக அங்கிருந்து நகர்ந்துவிடுவாள் அகானா.
அது இருவருக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் பேசிக் கொள்ளவும் இல்லை, அந்த உணர்வை சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஆகனுக்கு முதுகலையில் இது கடைசி வருடம். அடுத்து அவன் தன்னுடைய மாமாவின் மருத்துவமனையில் சேரப் போவதாகச் சொல்லியிருந்தான்.
அவனைப் பற்றி அதிகம் சொல்வான், குடும்பம் பற்றி, தன் மாமாதான் தனக்கு ரோல் மாடல், அவரைப் பார்த்தே தான் நான் இந்த ஃபீல்ட் எடுத்தேன் என்று எல்லாம் சொல்ல, அகானா அவளைப் பற்றி எதையும் சொன்னதில்லை.
அப்பா இல்லை, அம்மா மட்டும் தான் அவளுக்கு என்ற வரைத் தெரியும், அதற்குப் பிறகு எதையும் அவள் சொன்னதில்லை. கேட்டாலும், “வேண்டாம் சீனியர், அது ஒரு அழுகாச்சி காவியம்.. சிம்பதி கிரியேட் பன்ற மாதிரி ஃபீலாகும். சோ நான் எதுவும் சொல்லமாட்டேன்..” என்று விட்டாள்.
அன்று அவன் சொன்னதில் இருந்தே ‘சீனியர்’ என்று மட்டுமே விழிக்கிறாள். ஏன் என்று இருவருக்கும் தெரியும். கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறு நூலளவான உணர்வது. அதை வெளிப்படுத்த இருவருக்குமே தயக்கம். ஆகனாக சொல்லாமல் அது புரியாது. நிச்சயம் அகானா இதைச் சொல்லமாட்டாள். அவள் சொல்லமாட்டாள் என்று ஆகனுக்குமேத் தெரிந்து தான் இருந்தது.
கல்லூரி முடிந்து ஊருக்கு செல்லும் முன் அவள் அம்மாவிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். நாட்கள் மாதங்களாகிப் போக இப்போது எல்லாம் மஞ்சரியிடமும் தன் சீனியரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள் அகானா. மகளைப் பற்றி மஞ்சரிக்கு நன்றாகத் தெரியும், அவள் படிப்பைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்த மாட்டாள் என்றும் தெரியும். அதனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அதிலும் அவரும் இந்த வயதினைத் தாண்டி வந்தவர் தானே. சில ஈர்ப்புகளை தவிர்க்க முடியாது. ஈர்ப்பை ஈர்ப்பாக கடந்துவிடுதல் நலம். தன் மகளும் கடந்து விடுவாள் என்று எண்ணிக் கொண்டார்.
இன்னும் இரண்டு நாட்களில் ஆகன் கிளம்ப வேண்டியிருந்தது. அதற்குள் அகானாவின் அம்மாவிடம் பேசியே ஆகவேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதற்குள் இதைப்பற்றித் தன் மாமனிடமும் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் பேச, ஒரு நிமிடம் அவரிடம் வார்த்தைகளே இல்லை.
“மாமா.” என ஆகன் மீண்டும் அழைத்தப் பிறகே பேச ஆரம்பித்தார், “எல்லா பிரச்சினையையும் தாண்டி, உன்னால உறுதியா அந்த பொண்ணுதான் வேனும்னு இருக்க முடியும்னா சொல்லு, நான் வீட்டுல பேசுறேன்..” என்று விட்டார்.
“என்னாச்சு மாமாவுக்கு” எனக் குழம்பியவன், அகானாவின் பெயரையாவது அப்போதே சொல்லியிருக்கலாம். சரி முதலில் இங்கு பேசி விடலாம் என்று நினைத்து அகானாவிடம் சொல்லி அன்று அவர்கள் வீட்டிற்குச் சென்றான்.
“உள்ள வாங்க சீனியர்.. அம்மா இப்போ வந்துடுவாங்க.” என்றபடியே அந்த சிறிய வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள் அவள்.
“ம்ம்.. சின்ன வீடா இருந்தாலும், ரொம்ப அழகா இருக்கு.. ஆன்டி அருமையா அழகுபடுத்தி வச்சிருக்காங்க..” என்று சிலாகித்தபடியே இருக்கையில் அமர்ந்தான் ஆகன்.
அவன் முன்னேத் தண்ணீர் பாட்டிலை நீட்டியவள் “சின்ன வீடுன்னு சொல்லாதீங்க சீனியர், வீடு அவ்வளவுதான்..” என்றவளின் குரலில் இதுவரை அவன் அறிந்திராத இறுக்கம் கூடியிருந்தது.
அதில் அவனுக்கு என்ன புரிந்ததோ “ஸாரி” என்றான் அமைதியாக.
“ம்ம்” என்பது போல் அவள் நிற்க, அவளைப் பார்த்து புன்னகைத்தவன் நீரைக் குடிக்க நிமிரும் போது, அந்த வீட்டின் சுவற்றில் அழகான ஒரு புகைப்படம் மாலையோடு காட்சியளித்தது.
அதைப் பார்த்தவன் அதிர்ச்சியில் தன் கையில் இருந்த பாட்டிலைக் கீழே விட, அவளோ அவனைப் புரியாமல் பார்த்தாள்.
“இது.. இது யாரு..” என அதிர்ச்சியில் துடிக்க மறந்த இதயத்தை தடவிக்கொண்டே கேட்டவனிடம், “இவர் எங்கப்பா சீனியர். ரவீந்திரன்.! இப்போ இவர் இங்க இல்ல..” என்றவளின் குரலில் மருந்திற்கும் சோகமோ வருத்தமோ துளியும் இல்லை.
அடுத்து அவன் என்ன பேச வேண்டும் என்று கூடத் தெரியாத நிலை, இருவரும் அமைதியாகவே நிற்க, அப்போது வாசலில் அரவம் கேட்க, இருவரும் ஒன்றாகத் திரும்ப அங்கே நின்றிருந்த மஞ்சரியைப் பார்த்து மேலும் அதிர்ச்சியானான் ஆகன்.
‘மஞ்சு அத்தை’ என வாய்த் தானாகச் சொல்ல, அதற்குள் மஞ்சரி சுதாரித்து உள்ளே வந்து “வாங்க தம்பி.. எப்படி இருக்கீங்க, உங்களைப் பத்தி தான் அம்மு பேசிட்டே இருப்பா..” என பேச,
‘அம்மு’ இப்போது ஆகனின் இதயம் வேகவேகமாகத் துடித்தது. அவன் நிலையை உணர்ந்த மஞ்சரி, “அம்மு.. தம்பிக்கு சாப்பிட ரெடி பண்ணு..” எனச் சொல்ல, தாயின் மறுக்க முடியாதக் குரலில் ‘சரி’ என்பது போல் கிச்சனுக்குள் நுழைந்தாள் அகானா.
“உக்காருங்க தம்பி..” என்றதும் குழப்பத்துடன் அமர்ந்தவன், மஞ்சரியைக் கேள்வியாகப் பார்க்க, “எங்களைப் பொறுத்த வரைக்கும் அவர் எங்க வாழ்க்கைல எங்கேயும் இல்ல தம்பி.” என மஞ்சரி அமைதியானக் குரலில் சொல்ல,
“ஆனா.. ஆனா ஏன் எப்படி இதுக்கெல்லாம் மனசு வந்தது, உயிரோட இருக்குற ஒரு மனுசனுக்குப் போய்..” என்றவனுக்கு அடுத்து பேச்சே வரவில்லை.
“அவர் இருந்தும் இல்லைன்னு அர்த்தம்.. அவர் எங்க வாழ்க்கைக்கு தேவையில்லன்னு அர்த்தம்..” என்று ஆக்ரோசமாக வந்து விழுந்தது அகானவின் வார்த்தைகள்.
“அம்மு சும்மா இரு.” என அதட்டிய மஞ்சரியைக் கண்டு கொள்ளாமல், “நீங்க சொன்ன உங்க மாமா இவர்தானா.? பெத்த பொண்ணையும், பொண்டாட்டியையும் பார்த்துக்க துப்பில்ல..” என முடிக்கும் முன்னே, “ஏய்..”, “அம்மு” என இருவரும் அதட்ட, “ஏன் ஏன் கோபம் வருது.. எதுக்கு கோபம் வருது உங்களுக்கு, இந்தாளாளா நாம தெருவுல நின்னது, பிச்சையெடுக்காத குறையா ஊர் ஊரா அலைஞ்சது எல்லாம் மறந்துடுச்சா..” என ஆங்காரமாகக் கத்த,
“போதும் சும்மா நிறுத்து, நானும் பார்த்துட்டே இருக்கேன்.. பேசிட்டே போற, என் மாமா தப்பே செஞ்சிருந்தாலும், எனக்கு மாமா. அவரை நான் எங்கேயும் விட்டுக் கொடுக்க முடியாது. அங்க இருந்து போராடாம, பணத்துக்காக வாழ்க்கையைத் தூக்கிக் கொடுத்துட்டு வந்துட்டு, இப்போ இவ்வளவு நியாயம் பேசுவீங்களா.? பணம்.. பணத்துக்காகத்தானே இந்த நாடகம் எல்லாம்.. ச்சே என்ன ஜென்மமோ… இனி உன்னை என் லைஃப்ல நான் எங்கேயும் பார்க்கக்கூடாது..” என அவளுக்கு மேலேக் கத்தியவன், போட்டோவில் தொங்கிக் கொண்டிருந்த மாலையை, இழுத்து அத்து, அவள் மூஞ்சிலேயே எறிந்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.
அதுதான் அகானா அவனைக் கடைசியாகப் பார்த்தது. அவன் எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் என எல்லாம் தெரியும், ஆனாலும் அதை அவள் கண்டு கொண்டதில்லை, தன் தாயை மரியாதை இல்லாமல் பேசிய யாரையும் மன்னிக்கும் மனப்பக்குவம் அவளுக்கு இல்லை. அது யாராக இருந்தாலும்.
‘வந்தான்.. பார்த்தான்.. சென்றான்’ என்பது போல, அவள் வாழ்வில் அதிசய உலகமாக வந்தான். அவளுக்குள்ளும் உணர்வுகள் இருக்கிறது என்பதை உணர வைத்தான். அது மலர்ந்து மனம் பரப்புவதற்குள் மொத்தமாக வெந்நீர் போன்ற சுடு சொற்களைப் பேசி, அந்த உணர்வு மீண்டும் மீண்டு வராத அளவிற்கு அவளையும், அவளது உணர்வுகளையும் கொன்றுவிட்டுச் சென்றுவிட்டான்.
அவளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பழிவெறியை தூண்டிவிட்டும் சென்றுவிட்டான். இனி அகானாவின் பழிவாங்கல் தொடரும்…