• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ - 08

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அ.ஆ.. - 08

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

தன் வேலை நாளின் கடைசி நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்தது அந்த ஆட்சியர் அலுவலகம். அப்போது புயல் போல ஒரு BMW X7 கார் வந்து நிற்க, வெளியில் காவலுக்கு இருந்த காவலர்கள் அனைவரும் அந்தக் காரை மறைத்து புடை சூழ, அதில் இருந்து கண்ணில் கோபக் கனலுடன் இறங்கியவனைப் பார்த்ததும் அனைவரும் பின்வாங்க, அதில் ஒரு காவலரை மட்டும் பார்த்தவன், தன் கார் சாவியை எடுத்து அவரிடம் எரிந்துவிட்டு ‘பார்க் பண்ணிடு’ என்றவாறே வேகமாக உள்ளே நடக்க ஆரம்பித்தான்.

எதிரில் வந்த அனைவரும் அவனுக்கு வணக்கம் வைத்ததைக் கூட கண்டுகொள்ளாமல் வேக நடையில் சென்றவன் “அகானா இரவீந்திரன் IAS” என்றுப் பொறிக்கப்பட்டிருந்த அறையின் முன்னே நின்று, கதவைத் தட்டுவதற்கு கையைத் தூக்கியவன், பின் என்ன நினைத்தானோ ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு வேகமாக கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஆகன்.

உள்ளே நுழைந்தவனை நிதானமாக ஏறிட்டாள் அகானா. பின் அவனையும், தன் கடிகாரத்தையும் ஒரு முறைப் பார்த்தவள் “ஃபைவ் மினிட்ஸ் வெயிட் செய்ய முடியுமா..?” என அதே நிதானத்துடன் கேட்க, வந்தவனுக்கு அவளது நிதானம் இருக்கவில்லை.

அவளுக்கு எதிரில் இருந்த சேரைக் கோபமாகாத் தள்ளிவிட்டவன், “ஹவ் டேர் யூ ப்ளடி..” என் ஆக்ரோசமாகக் கத்த,

“இது ஒன்னும் உன்னோட வீடு இல்ல, என்னோட ஆஃபிஸ்.. இங்க எனக்கு மரியாதை ரொம்ப முக்கியம்.. ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ண முடிஞ்சா உட்கார். இல்லை ஜஸ்ட் அவுட்..” என்று கதவுப்பக்கம் கையைக் காட்டிவிட்டு, எதுவுமே நடவாதது போலத் தன் முன் இருந்த கோப்பில் கவனத்தைப் பதித்தாள் அகானா.

“ஹேய் உன்னோட பதவியை யூஸ் பண்ணி எங்களை பழிவாங்க நினைக்கிற, அது ஒருபோதும் நடக்காது. நான் நினைச்சா இப்போ இந்த செகண்ட் உன்னை இங்க இருந்து தூக்க முடியும, பார்க்குறியா.?” என ஆக்ரோசமாக கர்ஜித்தவனை,

சலனமே இல்லாமல் பார்த்தவள் “டூ இட்..” என்றாள் நக்கலாக.

அதில் அவன் கோபம் மேலும் ஏற, “ஏய் என்ன முடியாதுன்னு பார்க்குறியா.? ஹான்.. ஆனா நான் அதை பண்ணமாட்டேன். என் மேல கை வைச்ச உன்னை அப்படியே அனுப்ப எனக்கு மனசு இல்ல. ஏண்டா இவனைப் பகைச்சுக்கிட்டோம்னு நீ நொந்துதான் இங்க இருந்து போகனும். அதுவரைக்கும் உன்னை விடமாட்டேன்..” என்று அதே ஆங்காரத்தில் கர்ஜித்தவன், அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டான்.

ஆகன் கிளம்பியதும் உள்ளே வந்த கண்ணன் “பாப்பா உங்களுக்கு ஒன்னுமில்லயே, என்னாச்சு பாப்பா..?” என பயந்து போய் கேட்க,

“ஒன்னுமே நடக்கல அங்கிள்.. நீங்க ஏன் இவ்ளோ பயப்படுறீங்க.. நான் கேட்ட இன்ஃபர்மேஷன் எல்லாம் வந்துடுச்சா.?” என்றாள் ஒன்றுமே நடக்காதது போல.

“ஹான் வந்துடுச்சு பாப்பா… நான் செக் பண்ணிட்டு உங்களுக்கு அனுப்பறேன்.” என்றவர் தயங்கி நிற்க,

“என்ன அங்கிள்? எங்கிட்ட எதுவும் சொல்லனுமா.?” என கேட்க,

“இல்ல பாப்பா.. ஆனா ஆமா பாப்பா..” என மாற்றி மாற்றி சொல்ல,

“என்ன அங்கிள் தெளிவா சொல்லுங்க..?” என நிதானமாக கேட்க,

“அது பாப்பா.. அந்த மெடிகல் ஏஜென்சி நடத்துறது வினோத் சார்தான். ஆனா ரிஜிஸ்ட்ரெசன் பண்ணிருக்கிறது நித்யா மேடம் பேர்ல. நாம அர்ரெஸ்ட் பண்ணனும்னா அவங்களைத்தான் அரெஸ்ட் பண்ணனும். அவங்களை எப்படி.?” என அவர் தயங்க..

“ஓ…” என்றவள் சில நொடி அமைதியாகிவிட்டு, “அப்போ அரெஸ்ட் பண்ண வேண்டாம் அங்கிள். லீகல் நோட்டிஸ் அனுப்புங்க. டூ டேய்ஸ் டைம் கொடுங்க. அப்புறம் அரெஸ்ட் பண்ண சொல்லிடுங்க. அதுக்குள்ள அவங்க என்ன செய்றாங்கன்னு பார்ப்போம்..” என முடித்தவள், “அரெஸ்ட் பன்றது ஃபரைடே இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க..” என்றதும், கண்ணன் அதிர்ந்தாலும் வேறுவழியில்லாமல் ‘சரியென்று’ வெளியில் வந்தார்.

இங்கு காரில் ஏறிய ஆகனுக்கு கோபம் கோபம் கோபம் மட்டும்தான். மகியைக் காணவில்லை என்று பதறியடித்து தேட ஆரம்பித்த நேரம், சரியாக தன் மருத்துவமனையில் இன்ஸ்பெக்ஷ்னுக்கு சுகாதாரத்துறையில் இருந்து ஆட்கள் வந்திருப்பதாக தகவல் வர, உடனே மருத்துவமனைக்கு ஓடினான் ஆகன்.

அனைத்தும் முடிந்து அவர்கள் கிளம்ப கிட்டத்தட்ட மாலை ஆகிவிட்டது. அதற்குள் வீட்டில் இருந்து அத்தனை போன் கால்ஸ். ரஞ்சனி மயங்கி விழுந்துவிட்டதாக மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்க, தன் தாயைப் பார்க்கக்கூட போக விடாமல் தடுத்தனர் அதிகாரிகள்.

மற்ற மருத்துவர்களை வைத்து பார்க்க, அதிர்ச்சியில் வந்த மயக்கம்தான் என்று கூறினாலும், அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

வினோத், ரவீந்திரன், சங்கர் என அனைவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் தேடிக்கொண்டுதான் இருந்தனர். ஆனால் மகிழினி கிடைத்தபாடில்லை.

சரஸ்வதியும், மைதிலியும் ரஞ்சனியுடன் இருக்க, பிள்ளைளைப் பார்க்க வீட்டில் இருந்தாள் நித்யா.

ஒருவழியாக வந்த அதிகாரிகளை அனுப்பிவிட்டு ரஞ்சனியைப் பார்க்க ஓடினான் ஆகன்.

நித்யாவைத் தவிர அனைவரும் அங்குதான் இருந்தனர். ஆகனைப் பார்த்ததும் ரஞ்சனி மீண்டும் அழ ஆரம்பிக்க, “ம்மா மகிக்கு ஒன்னும் இருக்காது. சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சிடலாம். இப்போ எதுக்கு நீங்க அழுது, அழுது மயக்கம் போட்டு வச்சிருக்கீங்க. உங்களைப் பார்க்குறதா? அவளைத் தேடுறதா.?” என கத்த,

“டேய் என்ன நினைச்சிட்டு இப்படி பேசுற..” என பேரனிடம் எகிறிய சரஸ்வதியை “ம்மா கொஞ்ச நேரம் சும்மா இருங்க. இங்க என்ன நடக்குதுனு தெரியாம அவன்கிட்ட எகிறிட்டு போறீங்க. இவளுக்கு மட்டும்தான் மகளா? இல்ல இவளுக்கு மட்டும்தான் மகி மேல பாசமா.? உதவ முடிலன்னாலும், உபத்திரவம் பண்ணாம இருக்கலாம்ல. அவனுக்கு எவ்ளோ ப்ரெசர் தெரியுமா.? எதையும் தெரியாம?” என வினோத் கத்த, பெண்கள் மூவரும அமைதியாகிவிட்டனர்.

அங்கிருந்த சங்கரின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு வலி அந்த முகத்தில். வயதுப்பெண் காணவில்லை என்றால் ஒரு பெற்ற தந்தையின் நிலை எப்படி இருக்கும்? அதுவும் இப்போது நடக்கும் நிகழ்வுகளைக் கேட்கும் போது அவர் உயிர்வரை பயம் சென்று வதைத்தது.

தன் மகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக தன்னிடம் வந்துவிட வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தார்.

அப்போது மைதிலி வாயை வைத்து சும்மா இருக்காமல் “யாரையும் லவ் பண்ணி அவன்கூட..” என முடிக்கும் முன்னே,

“வாயை மூடுங்க..” என அந்த அறையே அதிரும்படி, ஓங்கி கத்தியிருந்தார் சங்கர்.

மைதிலியின் இந்த பேச்சில் அனைவரும் அதிர்ந்து ‘என்ன பேச்சு இது’ என அதட்ட நினைத்த நேரம், சங்கரின் சத்தத்தில் அவரைப் பார்த்தனர்.

அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்திருந்த ரஞ்சனியைப் பார்த்து “இதோ இவ வளர்த்த வளர்ப்பு வேணும்னா அப்படி இருக்கும். ஆனா என்னோட வளர்ப்பு அப்படி இல்ல. அப்படியே லவ் பண்ணிருந்தாலும், தைரியமா எங்கிட்ட வந்து சொல்லிருப்பா, யாருக்கும் பயந்து ஓடி ஒழிய மாட்டா..” என மைதிலியை முறைத்து சொல்ல, அங்கு யாராலும் அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை.

ரவீந்திரனால் பதிலே பேச முடியவில்லை. அவர் இன்னும் அகானாவை சந்தித்ததில் இருந்தே வெளிவரவில்லை. அதற்குள் அடுத்தடுத்து சம்பவங்கள் நடக்க, மிகவும் தளர்ந்து போயிருந்தார் மனிதர். ஆனால் அதை கவனிக்கத்தான் அங்கு யாருமில்லை.

அவர் பார்வை எங்கோ வெறித்திருக்க, “செஞ்ச பாவமெல்லாம் சும்மா விடுமா என்ன.? நீ செஞ்ச பாவம்தான் என் பொண்ணுக்கு வந்து நிக்குது.” என சங்கர் ரஞ்சனியை அடிக்கப் போக, அவரை வேகமாக வந்து தடுத்து நிறுத்தினான் வினோத்.

“மாமா என்ன பன்றீங்க.. இப்போ நமக்கு இது முக்கியமா? மகியைத் தேடுறது முக்கியமா?” என அதட்ட,

“என் பொண்ணு மட்டும் கிடைக்காம இருக்கட்டும், உன்னை உயிரோட கொழுத்திடுவேன்..” என மனைவியைப் பார்த்து கத்தியவர், மகனை முறைத்துவிட்டு வெளியில் செல்ல, மகனோ வேறு யோசனையில் இருந்தான்.

ஆம் அவன் முகத்தில் வேறு யோசனைதான். தன் தந்தை பாவம் என்று பேசும் வரைக்கும், யாரும் கடத்தியிருப்பார்களோ, பணத்திற்காகவோ? என்று யோசித்துக் கொண்டிருந்தான்தான்.

ஆனால் தந்தையின் பேச்சுக்குப் பிறகு, அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது அகானாவும் அவளது பழிவாங்கலும்தான்.

மாமாவின் கல்லூரியில் ஆய்வு, மகி காணாமல் போனது, தொடர்ந்து தன் மருத்துவமனையில் ரெய்டு, என அனைத்தையும் மூளைக்குள் ஓட்டியவனுக்கு நிச்சயம் இது அகானாவின் வேலைதான் என்று புரிந்து போனது.

அந்த கோபத்தில்தான் இப்போது அகானவை சென்று மிரட்டியிருந்தான். அதிலும் ஒரு ஆசுவாசம் தன் தங்கையை தவறாக பயன்படுத்தியிருக்கமாட்டாள் என்று நம்பியிருந்தான். அவளைத் தேடும் பணியில் தீவிரமானான்.

அடுத்த நாளும் அந்த குடும்பத்தினருக்கு பதட்டத்துடனே கழிய, மகிதான் கிடைக்கவில்லை. காவல்துறையும் தீவிரத் தேடலில் இறங்கியிருந்தனர்.

மகள் கிடைக்கவில்லை என்ற செய்தியில் பிபி அதிகமாகி அடிக்கடி மயங்கி விழுந்தார் ரஞ்சனி. அதனால் வீட்டுக்கு அனுப்பாமல் மருத்துவமனையிலேயே வைத்திருக்க, வயது மூப்பின் காரணமாக சரஸ்வதியை வீட்டுக்கு அனுப்பிய ஆகன், அவனும் சங்கரும் ரஞ்சனியைப் பார்த்துக் கொண்டனர்.

அன்று மாலை மருத்துவமனையிலிருந்து மைதிலியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த ரவீந்திரன் பயத்தில் வெளிறிப் போயிருந்த நித்யாவின் முகத்தைப் பார்த்து யோசனையானார்.

“என்ன நித்யா? ஏன் ஒருமாதிரி இருக்க.?” என மைதிலி கேட்க, தன் கையில் இருந்த பேப்பரை அவளிடமிருந்து வாங்கிப் படிக்க, அவ்வளவு பொறுமையில்லாத ரவி மைதிலியிடமிருந்து பிடுங்கி படித்தார்.

படித்தவருக்கும் அதிர்ச்சிதான். என்ன நடக்கிறது தங்களைச் சுற்றி..? என யோசிக்க,

“மாமா என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்களா?” என நித்யா பயந்து போய் கேட்க,

“அப்படியெல்லாம் இல்லம்மா.?” என அவர் சமாதானம் செய்ய,

“இல்ல மாமா அதுல அப்படித்தானே போட்டுருக்கு..?” என அந்த பேப்பரையே வெறித்துக் கொண்டு சொல்ல,

“நம்மக்கிட்டத்தான் எல்லா ரெகார்டுசும் சரியா இருக்கேமா, சரியா இருந்தா எதுக்கு அரஸ்ட் பண்ண போறாங்க. ரெகார்ட்ஸ்ல மிஸ் மேட்ச் ஆனாதான் அவங்க அரெஸ்ட் பண்ணுவாங்க. அது ரூல்ஸ்தான். நீ இதுக்கெல்லாம் பயப்படாத, வினோவும் ஆகனும் பார்த்துப்பாங்க..” என சமாதானம் செய்தாலும், நித்யாவிற்கு பயம் குறையவில்லை.

இந்த செய்தி வினோத் மூலம் ஆகனுக்கு போக, பல்லைக் கடித்தான் ஆகன். வீட்டில் உள்ளவர்களிடம் அகானாவின் வேலைதான் என சொல்லிவிடலாமா என்று ஒரு நொடி யோசித்தான். ஒரு நொடிதான் உடனே வேண்டாம் என விட்டுவிட்டான்.

தன் அம்மாவிற்கும், மைதிலி அத்தைக்கும் தெரிந்தால் அவளை நேரில் சென்று வார்த்தைகளால் வதைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

ஏற்கனவே பழிவாங்கும் வெறியில் இருப்பவள், இதையும் சேர்த்து மகியிடம்தான் காட்டுவாள். அதோடு அவளது கோபமும் அதிகமாகும் என யோசித்து, தனக்குள்ளே புதைத்துக் கொண்டான்.

மகளைக் காணவில்லை என்ற பதட்டம் கொஞ்சமும் மகனிடம் இல்லையே என்று லேட்டாகத்தான் கண்டு கொண்டார் சங்கர். ‘அப்போ மகியைப் பத்தி அவனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு, நம்மக்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறான். அவன் நிதானமே தப்பா எதுவும் இருக்காதுன்னு புரியுது. ஆனா அப்படி சொல்ல முடியாம போக என்ன காரணம்..’ என ஆராயத் தொடங்கினார்.

வீட்டில் இத்தனை பிரச்சினைகள் ஓடினாலும், ரவியின் மனதையும், மூளையையும் ஆட்டிப் படைத்தது அகானாதான்.

அன்று ‘ஐம் அகானா ரவீந்த்ரன்’ என தன்முன் கம்பீரமாக வந்து நின்ற மகள்தான் அவரை வாட்டி வதைத்தாள்.

‘என் மகள்’ என்று பெருமையாக சொல்லிக்கொள்ள கூட அவர் உடல் கூசியது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் சென்று ‘நான் உன் அப்பா’ என அறிமுகம் செய்துகொள்வது என தவித்துப் போனார்.

நிச்சயம் முகத்தில் காரித்துப்பி, கேவலமாக பேசி அனுப்பி விடுவாள் என்று அவர் மனது உண்மையை எடுத்து சொன்னது. அவர் மனம் நூலில்லா பட்டம்போல் திக்கு தெரியாமல் பறக்க, கடவுளிடம் சரணடையலாம் என்று வீரபாண்டி ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்தார்.

கடவுளே இல்லையென்றவர், இப்போதெல்லாம் அடிக்கடி கடவுளிடம்தான் சரணடைகிறார். கடவுளை வணங்கிவிட்டு கண் திறந்தவர் எதிரே கண்மூடி நின்றிருந்த இரு பெண்களையும் பார்த்து அதிர்ந்து, எங்கே விழிகளை மூடினால் கூட காணாமல் போய் விடுவார்களோ என்று பயந்து, இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ரவீந்திரன்.

 
  • Like
  • Haha
Reactions: saru and CRVS2797

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
8
18
Ullagaram
அ.. ஆ...
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 8)


அது மஞ்சரி & அகானா தானே..?


நல்லா வைச்சு செய்யுறாப் போல..? ஆனா, அந்த வீட்டு ஆளுங்க எல்லாரையும் செய்யட்டும். வயசுப் பெண்ணை கடத்தி வைச்சு ஏன் செய்யணும்ன்னு தோணினாலும்.... நல்லா படட்டும்ன்னும் நினைக்கத் தோணுது. ஏன்னா, மஞ்சரியை அப்படித்தானே கேவலப்படுத்தினாங்க. இப்ப அதையே அவங்களுக்கு செய்யும்போது வலிக்குதோ...?
இதைத்தான் அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்ன்னும், வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்னும் சொல்றது.
முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்ங்கிறதும் இது தானோ..?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
792
79
63
Coimbatore
எதிரே நின்றதுஅம்மாவும் பொண்ணுமா?.