அ.. ஆ.. -11
“அப்பா, அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க..?” என்ற ஹரினியின் அழைப்பில்தான் நிகழ்வுக்கு வந்தான் வினோத்.
“வரேன் பாப்பு, நீ போ..” என்றவனுக்கு இனி தன் கையில் எதுவுமில்லை என்று புரிந்தது.
அமைதியாக வந்து டைனிங்க் டேபிளில் அமர்ந்தாலும், அவனுக்குள் எண்ணங்கள் எல்லாம் சூறாவளியாய் சுழன்று கொண்டிருந்தது.
அதேநேரம் மைதிலியும் சரஸ்வதியும் வந்து சாப்பிட அமர, “என்னம்மா ரவி சாப்பிட வரலையா?” என்றதும்,
“இல்லத்த. பசிக்கலன்னு சொன்னார். முகமும் ஒன்னும் சரியில்ல. கலெக்டர் இன்ஸ்பெக்ஷன் வந்ததுல இருந்து அவர் முகமே சரியில்ல. ஏதும் பிரச்சினையான்னும் தெரியல.” என மைதிலி புலம்ப, வினோத்தும் நித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
‘அப்போ அகானா இங்க வந்தது இவருக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு’ என இருவரும் ஒன்று போலவே நினைத்துக்கொண்டனர்.
அப்போது ரஞ்சனியை அழைத்துக்கொண்டு சங்கரும் ஆகனும் உள்ளே வந்தனர்.
“என்னாச்சு தம்பி மகி இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சா? எங்க இருக்காளாம்? எப்படி இருக்காளாம்?” என சரஸ்வதி பதறிக்கொண்டு எழ,
“ம்ச் கொஞ்ச நேரம் சும்ம இருங்க பாட்டிம்மா, ஏற்கனவே அவங்க பயத்துல இருக்காங்க. நீங்களும் பேசிப்பேசி பயமுறுத்தாதீங்க. அவ ஃப்ரண்ட் கூடத்தான் போயிருக்கா., ரெண்டு நாள்ள வந்துடுவா. நீங்க எல்லாரையும் பயமுறுத்தாம, வெளியவும் சொல்லாம இருங்க போதும்..” என்ற ஆகனின் முகத்தில் அத்தனை கோபம்.
அந்த சத்தத்தில் அறையில் இருந்து ரவி கூட எழுந்து ஹாலுக்கு வந்திருந்தார்.
“இப்போ எதுக்கு அத்தைக்கிட்ட சத்தம் போடுற ஆகன். அவங்க இப்போ என்ன கேட்டாங்க.?” என மைதிலி ஆரம்பிக்க,
“அக்கா அதுதான் ஆகன் இதைப்பத்தி பேச வேண்டாம்னு சொல்றான்ல விடுங்க. அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும்.” என நித்யா பட்டென சொல்ல,
அப்படியென்ன ஏகப்பட்ட பிரச்சினை. வீட்டுக்குத் தெரியாம அப்படி எதை மறைக்க ட்ரை பன்றான். எல்லாம் எல்லாருக்கும் தெரியனும்..” என மீண்டும் மைதிலி கத்த,
“போதும் நிறுத்துமா? இந்த வீட்டுல இருக்குறதுனாலயே இது என் குடும்பம் ஆகாது. என் வீட்டு பொண்ணு காணோம். அதை நாங்க விசாரிச்சிக்கிறோம். சும்மா தொட்டதுக்கெல்லாம் உங்கிட்ட சொல்லிட்டு செய்யனும்னு என்ன இருக்கு..” என சங்கர் கத்திவிட,
“மாப்பிள்ளை என்ன பேசுறீங்க? மைதிலி நம்ம நல்லதுக்குத்தான் பேசுது.?” என அதுவரை அமைதியாக இருந்த ரவியின் அப்பா பேச,
அதில் கோபம் தலைக்கேற, உடம்பு சரியில்லாதவள் என்று கூட பாராமல் ரஞ்சனியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் சங்கர்.
“ப்பா, மாமா, அண்ணா..” என அங்கிருந்த அத்தனை பேரின் குரலும், அதிர்ச்சியிலும், கோபத்திலும், ஆதங்கத்திலும் வெளிவர,
“போ..போய் கிளம்பு. இன்னும் பத்து நிமிசத்துல இங்க இருந்து கிளம்பனும். என்ன நினைச்சிட்டு இருக்க நீ.? உன்னால் இன்னும் நான் எவ்வளவுதான் அசிங்கப்படனும். ஒரு வயசு பொண்ணைக் காணோம்னா அந்த பெத்தவனோட வலி என்னனு இங்க யாருக்காவது புரியுதா? கட்டுன பொண்டாட்டி உனக்கே அந்த வலி புரியல, அடுத்தவங்களை பத்தி நான் ஏன் பேசனும்.. கிளம்பு..” எனக் கட்டளையாக கூற, அங்கிருந்த யாராலும் எதுவும் பேச முடியவில்லை.
வினோத் தான் சங்கரை தனியாக அழைத்து வந்து, “என்ன மாமா? ஏன் இவ்ளோ கோபம். அவங்களப்பத்திதான் தெரியுமே. அதுக்காக ஏன் நீங்க டென்சன் ஆகுறீங்க..” என சமாதானம் செய்ய,
“மூனு நாளாச்சு வினோ? எப்படி எங்க இருக்காளோ? உடம்பெல்லாம் நடுங்குது, கண்ண மூடினாலே ஏதேதோ கனவா வருது..” என்ற சங்கரின் குரலில் இருந்த பயத்தை வினோத்தால் புரிந்து கொள்ள முடிந்தது.
“மாமா நான் உங்ககிட்ட வேற ஒன்னு சொல்லனும்னு இருந்தேன்..” என்றவனை யோசனையாக பார்த்தார் சங்கர்.
“நம்ம அம்மு இருக்காள்ள, அவ இங்க வந்துருக்கா?” என நிறுத்த,
“என்ன சொல்ற வினோ? நிஜமாவா? அப்போ மஞ்சுவும் வந்துருக்கா? எங்க இருக்காங்க? எப்படி இங்க வந்தாங்க?” என பரபரப்பாக கேட்க,
“அம்முதான் இப்போ நம்ம தேனி டிஸ்ட்ரிக்ட் கலெக்டராம். இங்க அவங்க அக்கா வீட்டுக்கு வந்துருக்காங்க. அங்க இருக்காங்க..” என அமைதியாக கூறவும்,
“ஓ அதுதான் நாங்க வரும் போது கலெக்டர் கார் க்ராஸ் பண்ணி போச்சா? ஆனா அவதான் டாக்டருக்கு படிச்சாலே, எப்படி கலெக்டர்?” என யோசிக்க,
“அம்மு டாக்டரா? அப்போ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா மாமா?” என்ற வினோத்திடம்,
“ஆகன் படிச்ச காலேஜ்லதான் அம்மு படிச்சா? அப்போவே அவங்க ரெண்டு பேரையும் ஆகன் பார்த்துட்டு வந்து எங்கிட்ட சொன்னான். நான்தான் இதைப்பத்தி யாருக்கிட்டயும் மூச்சு விடக்கூடாதுன்னு சொல்லி வச்சேன்.” என்றார் அமைதியாக.
மேலும் “அம்மு இங்க வந்து எந்த பிரச்சினையும் செய்யலையா?” என்ற சங்கரிடம், ‘இல்லை’ என்று தலையசைக்க,
“மஞ்சு அதெல்லாம் விரும்ப மாட்டா வினோ. அம்முவையும் அப்படித்தான் வளர்த்துருப்பா.” என்ற சங்கரிடம், வினோத்தும் ‘ஆமாம்’ என்பது போலத்தான் தலையை ஆட்டினான்.
ஆனால் அகானாவின் பழிவாங்கும் சுயரூபம் தெரிந்தால் என்ன செய்வார்கள்.?
“அவங்க வந்தது உங்க அண்ணனுக்கு தெரியுமா?”
“தெரியும்னுதான் நினைக்கிறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி அங்க காலேஜ்ல இன்ஸ்பெக்ஷன் நடந்ததுல, அப்போ வந்தது அம்முதான் போல, அப்போ ஆகனுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு..”
“ஓ.. ஆனா ஒன்னும் தெரிஞ்ச மாதிரியே காட்டிகலையே உங்க அண்ணன். இவ்வளவு பட்டும் திருந்தல. இவனெல்லாம் என்ன மனுசனோ?” என்றவர், “நாங்க கிளம்பறோம் வினோ.. இனி இங்க இருக்குறது சரியா இருக்காது. உங்க அண்ணி எதையும் சொல்லுவா? கேட்டுட்டு நான் பொறுமையா எல்லாம் இருக்கமாட்டேன்..” என்ற சங்கர், அடுத்த சில நிமிடங்களில் மனைவி மகனுடன் கிளம்பிவிட்டார்.
“இப்போ என்ன சொல்லிட்டோம்னு இந்த மனுசன் என் பொண்ணை இழுத்துட்டு போறார். என்ன பிரச்சினைனு கேட்டது குத்தமா?” என சரஸ்வதி ஆரம்பிக்க,
“கேட்டது பிரச்சினையில்ல அத்த, நான் கேட்டதுதான் பிரச்சினை. அவருக்கு என்னைப் பிடிக்காது. அதான் நான் பேச ஆரம்பிச்சதும் இவ்ளோ பிரச்சினை பண்ணிட்டு, அண்ணியையும் அடிச்சி இழுத்துட்டு போறார்..” என மைதிலி ஏற்ற இறக்கத்துடன் எடுத்து கொடுக்க, எரிச்சலாகிப் போனது நித்யாவிற்கு.
“ஹேய் இன்னும் என்ன வேடிக்க பார்த்துட்டு இருக்கீங்க, சாப்பிட்டா எந்திருச்சு போங்க. போய் படுங்க.” என நித்யா குழந்தைகளை விரட்ட, அடுத்த ஒரு வார்த்தை பதில் பேசாமல் பிள்ளைகள் எழுந்து சென்று விட்டனர்.
“இந்த வீட்டுல ஆளாளுக்கு ஒரு நாட்டாமைத்தனம் பன்றாங்க. இங்க யார் பெரியவங்கன்னே தெரில, பெரியவங்க பேச்சுக்கு ஒரு மரியாதை இல்ல..” என சரஸ்வதி புலம்ப, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை நித்யா.
இத்தனை பிரச்சினையிலும் ரவி ஒரு வார்த்தைக்கூட பேசவே இல்லை. அதை வினோத் தவிர யாரும் கவனிக்கவே இல்லை.
அகானா பற்றி கேட்கலாமா? என்று கூட தோன்றியதுதான். ஆனால் அக்கறை இல்லாத அவரிடம் அதைப்பற்றி பேசி பிரயோஜனமில்லை என்று புரிந்து அமைதியாக அறைக்கு சென்றுவிட்டான்.
இங்கு விடிய விடிய தூங்காமல் மஞ்சரியைச் சுற்றி அமர்ந்துகொண்டு அவளிடம் கடந்த கால கதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் கவிதா குடும்பத்தினர்.
ஒருக்கட்டத்தில் அகானாதான் “பெரிப்பா எங்க பெரிம்மா? நான் வந்ததுல இருந்து இன்னும் பார்க்கவே இல்ல..” என்றதும்,
“ஆமாக்கா எங்க மாமாவை கானோம்.?” என்று மஞ்சரியும் கேட்க,
“எங்கையாச்சும் திருடி, அதை வித்து குடிச்சிட்டு, எங்கையாச்சும் விழுந்து கிடக்கும். போதை தெளியவும் வீடு வந்து சேரும்..” என அமைதியாக சொல்ல,
“என்னக்கா என்ன சொல்ற? மாமாவுக்கு என்னாச்சு? ஏன் இப்படில்லாம் சொல்ற.?” என மஞ்சு பதற,
“அதை விடு.. எல்லாம் நடக்கனும்னு இருக்கு. நடந்துருச்சு. இனி அதைப்பத்தி பேசி என்ன ஆகப்போகுது சொல்லு..” என வருந்தி பேச,
“பெரிம்மா என்ன மறைக்கிறீங்க நீங்க? என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.?” என அகானா கோபமாக கேட்க,
“விடு அம்மு.. அதை ஏன் பேசிட்டு..?” என நவீனும் சொல்ல,
“ஏன் சொன்னா என்ன? அவளுக்கும் எல்லாம் தெரியனும்.” என்ற குமரன, “அப்பாவுக்கு நம்ம பக்கத்து ஊர் ஸ்கூல்ல தான் வேலை கிடைச்சது. அஞ்சு லட்சம் பணம் கட்டித்தான் வேலை வாங்கினது. வேலைக்கு எல்லாம் நல்லாத்தான் போய்டு இருந்தார். ஒரு நாள் நைட் வேலைக்கு போகும் போது நம்ம ஊர் விலக்கு பக்கத்துல ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அந்த ஆக்சிடென்ட்ல அவருக்கு மூளையில அடிப்பட்டு புத்தி சுவாதினம் இல்லாம போய்டுச்சு. அந்த நேரம் மாமாவுங்க ரெண்டு பேரும்தான் கூட இருந்து எல்லாம் பார்த்துக்கிட்டாங்க..” என்ற குமரனை யோசனையாக பார்த்தாள் அகனா.
“இன்னும் வேற ஏதோ இருக்குற மாதிரி இருக்கே அண்ணா. நீங்க பாதிதான் சொல்லிருக்கீங்க போல..”
“விடு பாப்பா. பழசை கிளற கிளற வருத்தம்தான் மிஞ்சும். இனி அதையெல்லாம் பேச என்ன நினைக்கக்கூட எங்களுக்கு விருப்பமில்ல..” என்ற கவிதாவிடம்,
“ம்மா எதுக்கு இப்போ எல்லாத்தையும் மறைக்கிறீங்க. அம்முவுக்கு எல்லாம் தெரியனும்..” என்ற காயத்ரி “அந்த ஆக்சிடென்ட் பண்ணதே அந்த வீட்டுக்காரங்கதான் பாப்பா. அந்த பொம்பள மைதிலியும் ரஞ்சனியும் சேர்ந்து ஆள் வச்சு ஆக்சிடென்ட் பண்ணிருக்காங்க. அடி சரியா விழலன்னு, அப்பாவை இழுத்து அங்கிருந்த கல்லுல மோத வச்சிருக்காங்க. எங்களுக்கு ரொம்ப நாளா இது தெரியல. அப்பாவும் அன்னைக்கு குடிச்சிருந்தார். அதனால நிதானம் இல்லாம போய் ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு நினைச்சோம். ஆனா செஞ்சது அவங்க. அதைப்பத்தி கேட்க போனப்ப அந்த ரஞ்சனியும் கிழவியும் கொஞ்ச பேச்சா பேசிச்சு. நம்ம குடும்பம் மொத்தத்தையும் அவ்வளவு கேவலமா பேசிச்சு. நான் சொல்றேன் பாரு அதுக்கெல்லாம் நல்ல சாவே வராது..” என ஆதங்கமாக பேச, கவிதாவின் விழிகள் கலங்க ஆரம்பிக்க, மஞ்சரியும் அழ ஆரம்பித்தார்.
“எப்படி எப்படியோ சுத்திட்டு இருந்த மனுசன், ரஜினி ரசிகர் மன்ற தலைவர் அது இதுன்னு ஊருக்குள்ள அவ்ளோ செல்வாக்கா இருந்த மனுசன், வீட்டுக்கு ஒன்னும் பண்ணலன்னா கூட, ஊருக்கு நல்லது பன்றாரேன்னு சந்தோசப்பட்டோம். நீ ஊரவிட்டு போனது உங்க மாமாவுக்கு அவ்ளோ கோபம், அதனால ஊருக்குள்ள பேசி பஞ்சாயத்து வச்சு, அவங்க குடும்பத்தயே நாறடிச்சிட்டார். அந்த கோபத்த மனசுல வச்சிட்டு, வேலை கிடைச்ச ஒரே மாசத்துல இப்படி பண்ணிட்டாளுங்க. போலிஸ் கேஸ் கொடுக்க போனதுக்கு எங்களைத்தான் திட்டி அனுப்பினாங்க. அப்போ பசங்களும் சின்னவனுங்க. நானும் எங்க போய் அலைய? இந்தாள் வாங்கி வச்ச கடன், ஆஸ்பத்திரிக்கு கட்டின காசு எல்லாம் என் தலையில விழுந்துச்சு. வேறவழி எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு நான் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். இதோ நவீனு படிச்சி முடிச்சதும், அங்க இங்கன்னு அலைஞ்சு மாமா வேலைய வாங்கியாச்சு. இப்போதான் கொஞ்சம் நிம்மதியான பொழப்பு போகுது..” என கவிதா தன் நிலையை கூற,
“என் நேரம் உங்களையும் வாழ விடலையா? இந்த பாவமெல்லாம் எனக்கேதானே வரும்..” என மஞ்சரியும் அழ,
“அய்யோ ஆத்தா என்ன பேசுற நீ? யார் பாவம் யார வந்து சேரும். செஞ்சவனே நெஞ்ச நிமித்தி அழையுறான். நீ ஏன் இவ்வளவு கலங்குற. அவன் இன்னும் இன்னும் வருத்தப்படுவான் பாரு..” என்ற கவிதாவை கட்டிக்கொண்டு அழுதார் மஞ்சரி.
இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியாகவே அமர்ந்திருந்தாள் அகானா. அவள் முகத்தை வைத்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நவீன் அவளையேத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மணி இரண்டு என கடிகாரம் ஒலிக்க, “ம்மா அப்பா சத்திரத்துல படுத்துருக்காரான்னு பார்த்துட்டு தூக்கிட்டு வரேன்..” என நவீன் எழ,
“நானும் வரேண்ணா” என அகானாவும் எழுந்து கொண்டாள்.
“நீ ஏன் பாப்பா?” என குமரன் கேட்க,’’
“இல்ல பகல்ல வெளிய எல்லாம் சாதாரணமா சுத்த முடியாது. அதான் இப்போ போய் பார்க்கலாம்னு..” என நிறுத்த,
“அதுவும் சரிதான்..” என்ற குமரன், “சரி நானும் வரேன்..” என்றதும் மூவரும் இரண்டு வீதி தள்ளி இருக்கும் சத்திரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் வீட்டை விட்டு இறங்கி தெருவில் நடக்க ஆரம்பிக்க, அதுவரை அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்த ரவியின் கண்களில் மின்னல் வந்து போனது.
இரு ஆண்களுக்கும் நடுவில் ராணியின் கம்பீரத்தோடு நடந்து வரும் மகளை இமை சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் ரவி.
காலம் கடந்த அவருடைய பாசம் யாரை வழுக்கி விழச் செய்யும் என்று பொருத்திருந்து பார்ப்போம்.
“அப்பா, அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க..?” என்ற ஹரினியின் அழைப்பில்தான் நிகழ்வுக்கு வந்தான் வினோத்.
“வரேன் பாப்பு, நீ போ..” என்றவனுக்கு இனி தன் கையில் எதுவுமில்லை என்று புரிந்தது.
அமைதியாக வந்து டைனிங்க் டேபிளில் அமர்ந்தாலும், அவனுக்குள் எண்ணங்கள் எல்லாம் சூறாவளியாய் சுழன்று கொண்டிருந்தது.
அதேநேரம் மைதிலியும் சரஸ்வதியும் வந்து சாப்பிட அமர, “என்னம்மா ரவி சாப்பிட வரலையா?” என்றதும்,
“இல்லத்த. பசிக்கலன்னு சொன்னார். முகமும் ஒன்னும் சரியில்ல. கலெக்டர் இன்ஸ்பெக்ஷன் வந்ததுல இருந்து அவர் முகமே சரியில்ல. ஏதும் பிரச்சினையான்னும் தெரியல.” என மைதிலி புலம்ப, வினோத்தும் நித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
‘அப்போ அகானா இங்க வந்தது இவருக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு’ என இருவரும் ஒன்று போலவே நினைத்துக்கொண்டனர்.
அப்போது ரஞ்சனியை அழைத்துக்கொண்டு சங்கரும் ஆகனும் உள்ளே வந்தனர்.
“என்னாச்சு தம்பி மகி இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சா? எங்க இருக்காளாம்? எப்படி இருக்காளாம்?” என சரஸ்வதி பதறிக்கொண்டு எழ,
“ம்ச் கொஞ்ச நேரம் சும்ம இருங்க பாட்டிம்மா, ஏற்கனவே அவங்க பயத்துல இருக்காங்க. நீங்களும் பேசிப்பேசி பயமுறுத்தாதீங்க. அவ ஃப்ரண்ட் கூடத்தான் போயிருக்கா., ரெண்டு நாள்ள வந்துடுவா. நீங்க எல்லாரையும் பயமுறுத்தாம, வெளியவும் சொல்லாம இருங்க போதும்..” என்ற ஆகனின் முகத்தில் அத்தனை கோபம்.
அந்த சத்தத்தில் அறையில் இருந்து ரவி கூட எழுந்து ஹாலுக்கு வந்திருந்தார்.
“இப்போ எதுக்கு அத்தைக்கிட்ட சத்தம் போடுற ஆகன். அவங்க இப்போ என்ன கேட்டாங்க.?” என மைதிலி ஆரம்பிக்க,
“அக்கா அதுதான் ஆகன் இதைப்பத்தி பேச வேண்டாம்னு சொல்றான்ல விடுங்க. அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும்.” என நித்யா பட்டென சொல்ல,
அப்படியென்ன ஏகப்பட்ட பிரச்சினை. வீட்டுக்குத் தெரியாம அப்படி எதை மறைக்க ட்ரை பன்றான். எல்லாம் எல்லாருக்கும் தெரியனும்..” என மீண்டும் மைதிலி கத்த,
“போதும் நிறுத்துமா? இந்த வீட்டுல இருக்குறதுனாலயே இது என் குடும்பம் ஆகாது. என் வீட்டு பொண்ணு காணோம். அதை நாங்க விசாரிச்சிக்கிறோம். சும்மா தொட்டதுக்கெல்லாம் உங்கிட்ட சொல்லிட்டு செய்யனும்னு என்ன இருக்கு..” என சங்கர் கத்திவிட,
“மாப்பிள்ளை என்ன பேசுறீங்க? மைதிலி நம்ம நல்லதுக்குத்தான் பேசுது.?” என அதுவரை அமைதியாக இருந்த ரவியின் அப்பா பேச,
அதில் கோபம் தலைக்கேற, உடம்பு சரியில்லாதவள் என்று கூட பாராமல் ரஞ்சனியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் சங்கர்.
“ப்பா, மாமா, அண்ணா..” என அங்கிருந்த அத்தனை பேரின் குரலும், அதிர்ச்சியிலும், கோபத்திலும், ஆதங்கத்திலும் வெளிவர,
“போ..போய் கிளம்பு. இன்னும் பத்து நிமிசத்துல இங்க இருந்து கிளம்பனும். என்ன நினைச்சிட்டு இருக்க நீ.? உன்னால் இன்னும் நான் எவ்வளவுதான் அசிங்கப்படனும். ஒரு வயசு பொண்ணைக் காணோம்னா அந்த பெத்தவனோட வலி என்னனு இங்க யாருக்காவது புரியுதா? கட்டுன பொண்டாட்டி உனக்கே அந்த வலி புரியல, அடுத்தவங்களை பத்தி நான் ஏன் பேசனும்.. கிளம்பு..” எனக் கட்டளையாக கூற, அங்கிருந்த யாராலும் எதுவும் பேச முடியவில்லை.
வினோத் தான் சங்கரை தனியாக அழைத்து வந்து, “என்ன மாமா? ஏன் இவ்ளோ கோபம். அவங்களப்பத்திதான் தெரியுமே. அதுக்காக ஏன் நீங்க டென்சன் ஆகுறீங்க..” என சமாதானம் செய்ய,
“மூனு நாளாச்சு வினோ? எப்படி எங்க இருக்காளோ? உடம்பெல்லாம் நடுங்குது, கண்ண மூடினாலே ஏதேதோ கனவா வருது..” என்ற சங்கரின் குரலில் இருந்த பயத்தை வினோத்தால் புரிந்து கொள்ள முடிந்தது.
“மாமா நான் உங்ககிட்ட வேற ஒன்னு சொல்லனும்னு இருந்தேன்..” என்றவனை யோசனையாக பார்த்தார் சங்கர்.
“நம்ம அம்மு இருக்காள்ள, அவ இங்க வந்துருக்கா?” என நிறுத்த,
“என்ன சொல்ற வினோ? நிஜமாவா? அப்போ மஞ்சுவும் வந்துருக்கா? எங்க இருக்காங்க? எப்படி இங்க வந்தாங்க?” என பரபரப்பாக கேட்க,
“அம்முதான் இப்போ நம்ம தேனி டிஸ்ட்ரிக்ட் கலெக்டராம். இங்க அவங்க அக்கா வீட்டுக்கு வந்துருக்காங்க. அங்க இருக்காங்க..” என அமைதியாக கூறவும்,
“ஓ அதுதான் நாங்க வரும் போது கலெக்டர் கார் க்ராஸ் பண்ணி போச்சா? ஆனா அவதான் டாக்டருக்கு படிச்சாலே, எப்படி கலெக்டர்?” என யோசிக்க,
“அம்மு டாக்டரா? அப்போ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா மாமா?” என்ற வினோத்திடம்,
“ஆகன் படிச்ச காலேஜ்லதான் அம்மு படிச்சா? அப்போவே அவங்க ரெண்டு பேரையும் ஆகன் பார்த்துட்டு வந்து எங்கிட்ட சொன்னான். நான்தான் இதைப்பத்தி யாருக்கிட்டயும் மூச்சு விடக்கூடாதுன்னு சொல்லி வச்சேன்.” என்றார் அமைதியாக.
மேலும் “அம்மு இங்க வந்து எந்த பிரச்சினையும் செய்யலையா?” என்ற சங்கரிடம், ‘இல்லை’ என்று தலையசைக்க,
“மஞ்சு அதெல்லாம் விரும்ப மாட்டா வினோ. அம்முவையும் அப்படித்தான் வளர்த்துருப்பா.” என்ற சங்கரிடம், வினோத்தும் ‘ஆமாம்’ என்பது போலத்தான் தலையை ஆட்டினான்.
ஆனால் அகானாவின் பழிவாங்கும் சுயரூபம் தெரிந்தால் என்ன செய்வார்கள்.?
“அவங்க வந்தது உங்க அண்ணனுக்கு தெரியுமா?”
“தெரியும்னுதான் நினைக்கிறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி அங்க காலேஜ்ல இன்ஸ்பெக்ஷன் நடந்ததுல, அப்போ வந்தது அம்முதான் போல, அப்போ ஆகனுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு..”
“ஓ.. ஆனா ஒன்னும் தெரிஞ்ச மாதிரியே காட்டிகலையே உங்க அண்ணன். இவ்வளவு பட்டும் திருந்தல. இவனெல்லாம் என்ன மனுசனோ?” என்றவர், “நாங்க கிளம்பறோம் வினோ.. இனி இங்க இருக்குறது சரியா இருக்காது. உங்க அண்ணி எதையும் சொல்லுவா? கேட்டுட்டு நான் பொறுமையா எல்லாம் இருக்கமாட்டேன்..” என்ற சங்கர், அடுத்த சில நிமிடங்களில் மனைவி மகனுடன் கிளம்பிவிட்டார்.
“இப்போ என்ன சொல்லிட்டோம்னு இந்த மனுசன் என் பொண்ணை இழுத்துட்டு போறார். என்ன பிரச்சினைனு கேட்டது குத்தமா?” என சரஸ்வதி ஆரம்பிக்க,
“கேட்டது பிரச்சினையில்ல அத்த, நான் கேட்டதுதான் பிரச்சினை. அவருக்கு என்னைப் பிடிக்காது. அதான் நான் பேச ஆரம்பிச்சதும் இவ்ளோ பிரச்சினை பண்ணிட்டு, அண்ணியையும் அடிச்சி இழுத்துட்டு போறார்..” என மைதிலி ஏற்ற இறக்கத்துடன் எடுத்து கொடுக்க, எரிச்சலாகிப் போனது நித்யாவிற்கு.
“ஹேய் இன்னும் என்ன வேடிக்க பார்த்துட்டு இருக்கீங்க, சாப்பிட்டா எந்திருச்சு போங்க. போய் படுங்க.” என நித்யா குழந்தைகளை விரட்ட, அடுத்த ஒரு வார்த்தை பதில் பேசாமல் பிள்ளைகள் எழுந்து சென்று விட்டனர்.
“இந்த வீட்டுல ஆளாளுக்கு ஒரு நாட்டாமைத்தனம் பன்றாங்க. இங்க யார் பெரியவங்கன்னே தெரில, பெரியவங்க பேச்சுக்கு ஒரு மரியாதை இல்ல..” என சரஸ்வதி புலம்ப, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை நித்யா.
இத்தனை பிரச்சினையிலும் ரவி ஒரு வார்த்தைக்கூட பேசவே இல்லை. அதை வினோத் தவிர யாரும் கவனிக்கவே இல்லை.
அகானா பற்றி கேட்கலாமா? என்று கூட தோன்றியதுதான். ஆனால் அக்கறை இல்லாத அவரிடம் அதைப்பற்றி பேசி பிரயோஜனமில்லை என்று புரிந்து அமைதியாக அறைக்கு சென்றுவிட்டான்.
இங்கு விடிய விடிய தூங்காமல் மஞ்சரியைச் சுற்றி அமர்ந்துகொண்டு அவளிடம் கடந்த கால கதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் கவிதா குடும்பத்தினர்.
ஒருக்கட்டத்தில் அகானாதான் “பெரிப்பா எங்க பெரிம்மா? நான் வந்ததுல இருந்து இன்னும் பார்க்கவே இல்ல..” என்றதும்,
“ஆமாக்கா எங்க மாமாவை கானோம்.?” என்று மஞ்சரியும் கேட்க,
“எங்கையாச்சும் திருடி, அதை வித்து குடிச்சிட்டு, எங்கையாச்சும் விழுந்து கிடக்கும். போதை தெளியவும் வீடு வந்து சேரும்..” என அமைதியாக சொல்ல,
“என்னக்கா என்ன சொல்ற? மாமாவுக்கு என்னாச்சு? ஏன் இப்படில்லாம் சொல்ற.?” என மஞ்சு பதற,
“அதை விடு.. எல்லாம் நடக்கனும்னு இருக்கு. நடந்துருச்சு. இனி அதைப்பத்தி பேசி என்ன ஆகப்போகுது சொல்லு..” என வருந்தி பேச,
“பெரிம்மா என்ன மறைக்கிறீங்க நீங்க? என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.?” என அகானா கோபமாக கேட்க,
“விடு அம்மு.. அதை ஏன் பேசிட்டு..?” என நவீனும் சொல்ல,
“ஏன் சொன்னா என்ன? அவளுக்கும் எல்லாம் தெரியனும்.” என்ற குமரன, “அப்பாவுக்கு நம்ம பக்கத்து ஊர் ஸ்கூல்ல தான் வேலை கிடைச்சது. அஞ்சு லட்சம் பணம் கட்டித்தான் வேலை வாங்கினது. வேலைக்கு எல்லாம் நல்லாத்தான் போய்டு இருந்தார். ஒரு நாள் நைட் வேலைக்கு போகும் போது நம்ம ஊர் விலக்கு பக்கத்துல ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அந்த ஆக்சிடென்ட்ல அவருக்கு மூளையில அடிப்பட்டு புத்தி சுவாதினம் இல்லாம போய்டுச்சு. அந்த நேரம் மாமாவுங்க ரெண்டு பேரும்தான் கூட இருந்து எல்லாம் பார்த்துக்கிட்டாங்க..” என்ற குமரனை யோசனையாக பார்த்தாள் அகனா.
“இன்னும் வேற ஏதோ இருக்குற மாதிரி இருக்கே அண்ணா. நீங்க பாதிதான் சொல்லிருக்கீங்க போல..”
“விடு பாப்பா. பழசை கிளற கிளற வருத்தம்தான் மிஞ்சும். இனி அதையெல்லாம் பேச என்ன நினைக்கக்கூட எங்களுக்கு விருப்பமில்ல..” என்ற கவிதாவிடம்,
“ம்மா எதுக்கு இப்போ எல்லாத்தையும் மறைக்கிறீங்க. அம்முவுக்கு எல்லாம் தெரியனும்..” என்ற காயத்ரி “அந்த ஆக்சிடென்ட் பண்ணதே அந்த வீட்டுக்காரங்கதான் பாப்பா. அந்த பொம்பள மைதிலியும் ரஞ்சனியும் சேர்ந்து ஆள் வச்சு ஆக்சிடென்ட் பண்ணிருக்காங்க. அடி சரியா விழலன்னு, அப்பாவை இழுத்து அங்கிருந்த கல்லுல மோத வச்சிருக்காங்க. எங்களுக்கு ரொம்ப நாளா இது தெரியல. அப்பாவும் அன்னைக்கு குடிச்சிருந்தார். அதனால நிதானம் இல்லாம போய் ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு நினைச்சோம். ஆனா செஞ்சது அவங்க. அதைப்பத்தி கேட்க போனப்ப அந்த ரஞ்சனியும் கிழவியும் கொஞ்ச பேச்சா பேசிச்சு. நம்ம குடும்பம் மொத்தத்தையும் அவ்வளவு கேவலமா பேசிச்சு. நான் சொல்றேன் பாரு அதுக்கெல்லாம் நல்ல சாவே வராது..” என ஆதங்கமாக பேச, கவிதாவின் விழிகள் கலங்க ஆரம்பிக்க, மஞ்சரியும் அழ ஆரம்பித்தார்.
“எப்படி எப்படியோ சுத்திட்டு இருந்த மனுசன், ரஜினி ரசிகர் மன்ற தலைவர் அது இதுன்னு ஊருக்குள்ள அவ்ளோ செல்வாக்கா இருந்த மனுசன், வீட்டுக்கு ஒன்னும் பண்ணலன்னா கூட, ஊருக்கு நல்லது பன்றாரேன்னு சந்தோசப்பட்டோம். நீ ஊரவிட்டு போனது உங்க மாமாவுக்கு அவ்ளோ கோபம், அதனால ஊருக்குள்ள பேசி பஞ்சாயத்து வச்சு, அவங்க குடும்பத்தயே நாறடிச்சிட்டார். அந்த கோபத்த மனசுல வச்சிட்டு, வேலை கிடைச்ச ஒரே மாசத்துல இப்படி பண்ணிட்டாளுங்க. போலிஸ் கேஸ் கொடுக்க போனதுக்கு எங்களைத்தான் திட்டி அனுப்பினாங்க. அப்போ பசங்களும் சின்னவனுங்க. நானும் எங்க போய் அலைய? இந்தாள் வாங்கி வச்ச கடன், ஆஸ்பத்திரிக்கு கட்டின காசு எல்லாம் என் தலையில விழுந்துச்சு. வேறவழி எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு நான் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். இதோ நவீனு படிச்சி முடிச்சதும், அங்க இங்கன்னு அலைஞ்சு மாமா வேலைய வாங்கியாச்சு. இப்போதான் கொஞ்சம் நிம்மதியான பொழப்பு போகுது..” என கவிதா தன் நிலையை கூற,
“என் நேரம் உங்களையும் வாழ விடலையா? இந்த பாவமெல்லாம் எனக்கேதானே வரும்..” என மஞ்சரியும் அழ,
“அய்யோ ஆத்தா என்ன பேசுற நீ? யார் பாவம் யார வந்து சேரும். செஞ்சவனே நெஞ்ச நிமித்தி அழையுறான். நீ ஏன் இவ்வளவு கலங்குற. அவன் இன்னும் இன்னும் வருத்தப்படுவான் பாரு..” என்ற கவிதாவை கட்டிக்கொண்டு அழுதார் மஞ்சரி.
இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியாகவே அமர்ந்திருந்தாள் அகானா. அவள் முகத்தை வைத்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நவீன் அவளையேத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மணி இரண்டு என கடிகாரம் ஒலிக்க, “ம்மா அப்பா சத்திரத்துல படுத்துருக்காரான்னு பார்த்துட்டு தூக்கிட்டு வரேன்..” என நவீன் எழ,
“நானும் வரேண்ணா” என அகானாவும் எழுந்து கொண்டாள்.
“நீ ஏன் பாப்பா?” என குமரன் கேட்க,’’
“இல்ல பகல்ல வெளிய எல்லாம் சாதாரணமா சுத்த முடியாது. அதான் இப்போ போய் பார்க்கலாம்னு..” என நிறுத்த,
“அதுவும் சரிதான்..” என்ற குமரன், “சரி நானும் வரேன்..” என்றதும் மூவரும் இரண்டு வீதி தள்ளி இருக்கும் சத்திரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் வீட்டை விட்டு இறங்கி தெருவில் நடக்க ஆரம்பிக்க, அதுவரை அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்த ரவியின் கண்களில் மின்னல் வந்து போனது.
இரு ஆண்களுக்கும் நடுவில் ராணியின் கம்பீரத்தோடு நடந்து வரும் மகளை இமை சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் ரவி.
காலம் கடந்த அவருடைய பாசம் யாரை வழுக்கி விழச் செய்யும் என்று பொருத்திருந்து பார்ப்போம்.