அ.. ஆ. - 13
அடுத்த நாள் விடியலில் தான் சரஸ்வதிக்கும், மைதிலிக்கும் மஞ்சரி வந்த செய்தியே தெரிந்தது. அதுவும் ‘அம்மா நான் போய் அக்காவை பார்த்துட்டு வரேன்’ என ஹரிணி அடம்பிடிக்கதான் என்ன? ஏது? என விசாரிக்கும் போதுதான் அகானா வந்திருப்பது, தெரிந்தது.
உடனே கோபம் வர “எவ்வளவு தைரியம் இருந்தா, இந்த ஊருக்கு திரும்பி வந்திருப்பா, அன்னைக்கு எழுதி கொடுத்துட்டு போனாள்ல, அப்புறம் எப்படி வந்தா? யார் கொடுத்த தைரியம் அவளுக்கு? அவளை என்ன செய்கிறேன் என்று பார்..?” என கத்திக் கொண்டே வெளியில் வர,
மைதிலியும் அவருக்கு பின்னால் செல்ல, மற்ற யாரும் அவர்களை தடுக்கவில்லை. ரவீந்திரன் அமைதியாகவே நின்றிருந்தார்.
பிள்ளைகள் இருவரும் சரஸ்வதிக்கு பின்னே வந்திருந்தாலும், காயதிரியிடம் சென்று அவளுக்கு ஆளுக்கொரு பக்கம் நின்றுக் கொண்டனர்.
விடிந்ததும் செய்தி தெரிந்து எப்படியும் வருவார்கள் என தெரிந்து, அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.
அதிலும் குமரனும், நவீனும் கொலை வெறியில் இருந்தனர்.
சரியாக அதே நேரம் அகானாவின் பாதுகாப்பிற்கு என இரண்டு காவலர்கள் வேறு வந்து காத்திருந்தனர்.
வந்த வேகத்தில் சரஸ்வதி அதையெல்லாம் கவனிக்கவில்லை. நேராக கவிதாவின் வீட்டின் முன் நின்று “ஏன்டி.. உனக்கெல்லாம் வெட்கமா இல்ல.. பணத்தை வாங்கிட்டு, புருஷனை வித்துட்டு போனியே.. திரும்பி எந்த முகத்தை வச்சுட்டு இங்க வந்து நிற்கிற.. அன்னைக்கு பத்திரத்தில் எழுதி கொடுத்துட்டு போனது மறந்துடுச்சா? அப்படி மறந்தா சொல்லு, என்கிட்ட அந்த பத்திரம் பத்திரமா இருக்கு.. கொண்டு வந்து உன் மூஞ்சில எரியுறேன்.. படிச்சு தெரிஞ்சுக்கோ.. மறுபடியும் இந்த தெசப்பக்கம் எட்டிப் பார்க்கக்கூடாது..” என கத்திக் கொண்டிருக்க,
நவீனும், குமரனும் பல்லைக் கடித்து, தன் கோபத்தை அடக்கி கொண்டிருந்தனர்.
‘ஏன் நவீ அண்ணாவும், குமரன் அண்னாவும் எங்க பாட்டியை பேசாம வேடிக்க பார்க்குறாங்க..” என ஹரினி காயத்ரியிடம் முனங்க,
‘ம்ம் உங்க பாட்டி இன்னைக்கு அம்முக்கிட்ட நல்லா வாங்கிட்டு போகப் போகுது..’ என காயத்ரி இரு பிள்ளைகளிடம் முனங்கிக் கொண்டிருந்தாள்.
ஆம்! அகானா யாரையும் பேசக்கூடாது என்று முன்னமே எச்சரித்து இருந்தாள்.
“ஓ.. அப்போ நமக்கு என்டர்டெயின்மென்டா..?” என இருவரும் கோரசாக சொன்னாலும், சத்தம் வராமல்தான் சொல்லிக் கொண்டார்கள்.
‘அந்த வீட்டு ஆளுங்க யார் வந்து பேசினாலும், நான் மட்டும்தான் பேசுவேன்.. வேற யாரும் பேசக்கூடாது… புரியுதா.?’ என்றதும், மகளின் கோபம் புரிந்த மஞ்சரி “அம்மு..” என அழைக்க,
“ம்ம்மா எனக்கு எப்படி பேசணும்னு தெரியும்..” என முடித்து விட்டாள்.
அதனால் சரஸ்வதியின் பேச்சுக்கு மற்ற அனைவரும் அமைதியாக இருக்க, வீதியில் கூட்டமும் கூடியது. அந்த இரண்டு காவலர்களும் முன்னே வர, அகானாவின் பார்வையைப் பார்த்து அப்படியே நின்றனர்.
அவர்களின் அமைதியும், வீதி மக்களின் கூட்டமும் சரஸ்வதியின் கோபத்தை கூட்டியது.
அவர் இப்போதும் அகானாவை கவனிக்கவில்லை. ஆனால் மைதிலி கவனித்துவிட்டார். ஒரு ஜாடையில் ரஞ்சனியை போலவே தான் இருந்தாள் அகானா. தினமும் ரஞ்சனியை பார்த்து பழகியதால், உடனே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது மைதிலியால்.
வந்ததிலிருந்து அகானாவின் பார்வை சரஸ்வதியிடம் மட்டும் தான். அவளும் மைதிலியை கவனிக்கவில்லை.
“என்ன ஒரு திமிர்? நான் பேசிக்கிட்டே இருக்கேன்… பதில் சொல்லாமல் நின்னுட்டு இருக்க.. அவ்வளவு திமிர் ஆயிடுச்சா உனக்கு..? இங்க இருந்து எப்படி போனேன்றதை மறந்துடாத.. என்ன என் மகன்கிட்ட பேசி, அவனை மயக்கிடலாம்னு பார்க்குறியா? அது இந்த ஜென்மத்துல நடக்காது. ஒரு தடவைதான் தப்பு செய்வான். மறுபடியும் அதே தப்பை செய்ய அவன் என்ன முட்டாளா.?” என எகத்தாளாமாக சொல்லி முடிக்கும் முன்னே, அவளுக்கு முன் வந்து நின்றாள் அகானா.
“என்ன பிரச்சனை உங்களுக்கு.?” என நிறுத்தி நிதானமாக, அதே நேரம் அழுத்தமான குரலில் கேட்க, அந்த குரலில் ஒரு நொடி ஸ்தம்பித்துதான் போனார் சரஸ்வதி.
“என்ன நான் கேட்டுட்டே இருக்கேன்? பதில் சொல்லாமல் மரம் மாதிரி நின்னுட்டு இருக்கீங்க.. என்ன பிரச்சனை உங்களுக்கு.? எதுக்கு இங்க வந்து நியூசன்ஸ் பண்றீங்க.?” என அதே அழுத்தமான குரலில் கேட்க,
“அதைக் கேட்க நீ யாரு.? உனக்கு ஏன் நான் பதில் சொல்லணும்? எங்க அந்த ஓடிப் போனவ..?” என்று அப்போதும் திமிராக கேட்டார் சரஸ்வதி.
“ஓ இன்னும் நான் யாருன்னு தெரியலையா? தெரியாது தான்.. கூட இருந்து வளர்ந்திருந்தா? ஒருவேளை நீங்க வளர்த்து இருந்தா தெரிஞ்சிருக்கலாம்..” என இழுத்தவள் “இதுல என்னோட தப்பு இல்ல.. கட்டின பொண்டாட்டியையும், பெத்த பிள்ளையையும் பணத்துக்காக நடுத்தெருல விட்டுட்டு போன, உங்க மகன் சொல்லி இருக்கனும்.. சொல்லலையா? நேத்து கூட கோவில்ல என்னையும், என் அம்மாவையும் பார்த்து அழுதாரே! உங்க கிட்ட சொல்லல..” என கிண்டலும் கேலியுமாக கேட்க, சர்வமும் அடங்கிப் போனது இரண்டு பெண்களுக்கும்.
“ஏய்.. என்ன? என்ன சொல்ற நீ? ரவி.. ரவி அப்படி எல்லாம் இல்லை.?” என முதன்முறையாக மைதிலி வாய் திறந்தாள்.
‘இது யாரு புதுசா’ என்ற பார்வையைக் கொடுத்தவாறே “ஆமாம் நீங்க யாரு? என் ஃபிரேம்ல உங்களை நான் கொண்டு வரவே இல்லையே.. வாலன்டியரா வந்து ஏன் வண்டியில ஏறுறீங்க..” என மீண்டும் அதே கிண்டலில் கேட்டாள் அகானா.
“ஏய் யாரைப் பார்த்து என்ன சொல்ற? ஏன் ஓடிப்போன உங்க அம்மா சொல்லலையா உனக்கு..?” என மைதிலி கேட்டு முடிக்கும் முன்னே, வேகமாக அவளிடம் வந்தாள் அகானா.
அவள் வந்த வேகத்தைப் பார்த்த இரு பெண்களும் ஓரடி பின்னே எடுத்து வைத்தனர்.
“என்ன சொன்ன? இப்போ என்ன சொன்ன? என் அம்மா ஓடிப்போனவங்களா? சரி எங்க அம்மா ஓடிப்போனவங்களாவே இருக்கட்டும்.. நீங்க யாரு? ஹ்ம்ம் நீங்க யாரு ஓடி வந்து ஒட்டிக்கிட்டவங்களா.?” என ஆத்திரமும், கேலியும் கலந்த சிரிப்புடன் கேட்டவள்,
நொடியில் தன் முக பாவத்தை மாற்றி “என் அம்மா எனக்கு ஆயிரம் சொல்லி இருக்காங்க. உங்கள பத்தியும் சொல்லி இருக்கலாம்.. என் அம்மாவே சொல்லியிருந்தாலும், தேவையில்லாததை எல்லாம் நான் மூளையில் ஏற்றிக்கொள்வது கூட கிடையாது. உங்கள பத்தி சொன்னதையும் அப்படி நினைச்சு நான் ஏத்திக்கல போல.. சரி அதனால என்ன? நீங்க சொல்லுங்க நான் தெரிஞ்சுக்கிறேன்..” என மிகவும் நிதானமாக பேசினாள் இப்போது.
சுற்றி நின்ற அத்தனை பேரும், அகானாவில் இந்த பேச்சில் அதிசயித்து தான் போயினர்.
ஏன் தன் வீட்டு வாசலில் நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நித்யாவுக்கு கூட, கைதட்ட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. பக்கத்தில் நின்ற ரவிக்காக அமைதியாக இருந்தாள்.
அகானாவின் இந்த பேச்சில் கவிதா ஓடி வந்து கட்டிக்கொண்டு “இப்போ.. இப்பதான் கண்ணு எனக்கு நிம்மதியா இருக்கு..” என அழுதபடியே கூற, காயத்ரி வந்து தாயை அழைத்து சென்றாள்.
“ஏய்.. என்ன? என்ன வச்சு விளையாடிட்டு இருக்கியா? உருத் தெரியாம அழிச்சுடுவேன் பார்த்துக்கோ.. ஏற்கனவே உயிருக்கு பயந்து ஓடினது எல்லாம் மறந்திருச்சு போல..” என நிர்மலமான முகத்துடன், மகளையே பார்த்துக் கொண்டிருந்த மஞ்சரியை பார்த்து சரஸ்வதி ஆத்திரமாக கூறவும்,
“ஓ… அப்படியா? உருத் தெரியாம அழிக்க போறீங்களா? அழிக்கலாமே! அழிக்கலாம்.. அழிக்கலாம்.. அழிரப்பர் வேணும்னா நான் வாங்கித் தரவா?” என கிண்டலாக பேசியவள், மீண்டும் நொடியில் தன் முகபாவத்தை மாற்றி “என்னை வச்சு விளையாடிட்டு இருக்கியான்னு கேட்டீங்களே, அதுக்கு பதில் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும்.. தெரிஞ்ச பிறகும் இப்படியே சவுண்டா பேசுறீங்களான்னு பார்ப்போம்..” எனப் புருவத்தை ஏற்றியவள், அங்கு மொபைல் கேமராவில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த காவலரிடம் “எல்லாம் பக்கா தானே..” என்றவள், அவர் ‘ஆம்’ என தலை அசைத்ததும்,
“ஒரு கலெக்டரையே மிரட்டுறீங்களே குட் ஜாப்..” என மீண்டும் நக்கல் அடித்துவிட்டு, மைதிலியை ஒரு பார்வை பார்த்தவள், பின் அந்த காவலர்களிடம் “கிளியர் இட்..” என்று உள்ளே சென்றுவிட, கூட்டமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
கூட்டத்தினருக்கே அப்படியென்றால் சரஸ்வதியின் நிலையை சொல்லவும் வேண்டுமா? காவலர்கள் வந்து “ஏன்மா கலெக்டரையே அழிச்சிடுவேன்னு சொல்ற, உன்னை ஸ்டேஷன் கொண்டுபோய் என்னன்னு பார்க்கட்டுமா? எவ்வளவு தைரியம்மா உனக்கு.. ஏற்கனவே கலெக்டருக்கு ஏகப்பட்ட கொலை மிரட்டல் வந்துட்டு இருக்கு. இப்போ உன்னையும் அந்த லிஸ்ட்ல சேர்க்க வேண்டியதுதான்..” என, அதற்குள் வினோத் வந்து தாயை இழுத்துக் கொண்டு போக, மைதிலி பயத்துடன் அவர்களுக்கு பின்னால் நடந்தாள்.
“அம்மா இதெல்லாம் மண்டையில் ஏத்தாமா போய் கிளம்புங்க.. எனக்கு டைம் ஆச்சு..” என்ற அகானாவிடம்,
“நீ கிளம்பு அம்மு.. நான் அப்புறமா நவீ கூட வரேன்..” என்ற மஞ்சரியை, ஒரு நொடி பார்த்தவள், பின் தோளைக் குலுக்கிவிட்டு சென்று விட்டாள்.
ஹரினியும், ஹரிஸும் வாயைப் பிளந்துதான் அகானாவை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஹேய் ஓடுங்க ஓடுங்க.. ஸ்கூல் டைம் ஆகிடுச்சு. உங்க அம்மா திட்ட போறாங்க..” என இருவரையும் அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள் காயத்ரி.
‘வளர்த்தா பிள்ளையை இப்படி வளர்க்கணும்.. எப்படி நின்னு மூஞ்சில ஆசிட் ஊத்தி மாதிரி பேசினா பாத்தியா? இந்த சரஸ்வதியோட ஆட்டம் சீக்கிரம் முடியும். கொஞ்ச நஞ்சமா ஆட்டம் போட்டாளுங்க.. இவளுக்கு எல்லாம் நல்ல சாவே அந்த கடவுள் கொடுக்கக்கூடாது’ என அங்கு இருந்தவர்கள் பேச, அனைத்தும் காதில் விழுந்தாலும், ஒன்றும் பேசவில்லை அகானா.
அவள் கிளம்பி சாப்பிட அமரும் நேரம், சரியாக ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது.
“பாப்பா கமிஷனர் வந்திருக்காரு..” என்ற கண்ணனிடம்,
“இதோ வரேன்..” என்றவள் வெளியே வந்து, முறையாக அவரிடம் பேசினாள்.
“மேடம் நீங்க சொன்ன மாதிரி அரெஸ்ட் வாரண்ட் கொண்டு வந்திருக்கோம்..” என்றவரிடம்,
“ஓகே சார்.. நீங்க ப்ரொசீட் பண்ணுங்க.. ஆப்டர்நூன் விட்டுடுங்க. ஜாமீன் கிடைக்கலன்னா என் அண்ணன் வந்து கொடுப்பான். விட்டுடுங்க!” என அவருக்கு மட்டும் கேட்கும் படி கூறினாள்.
“எஸ் மேம்..” என்றவர், அவளிடம் விடைபெற்று ரவியின் வீட்டுக்குள் சென்றார். ஊரே இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
‘வந்து மிரட்டிட்டு போனாள்ல, அதுதான் போலீஸ் பிடிச்சிட்டு போகுது.. நல்லா உள்ள போய் களியா திங்கட்டும்.. அப்பதான் கொழுப்பு குறையும்.. கூடவே ஒருத்தி இருக்கா பாரு, அவளையும் அள்ளிட்டு போகணும்..’ என அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருக்க,
உள்ளே சென்ற கமிஷனர் வெளியே வரும்போது, நித்தியாவை அரெஸ்ட் செய்து வந்தார்.
அதற்குள் மீடியா ஆட்களும் வந்துவிட, அவர்களும் ‘காலாவதியான மருந்துகளை தன் மருந்தகத்தில் பயன்படுத்தியதாக, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது தெரியவர, மருந்தகத்தின் உரிமையாளரான மிசஸ் நித்யா வினோத் அவர்களை, கைது செய்தது காவல்துறை’ என ஒவ்வொருத்தரும் மைக்கை பிடித்து பேசிக் கொண்டிருக்க, அந்த இடமே மக்களின் பேசு பொருளாகிவிட, நித்யாவோ ஜீப்பில் ஏறும் முன், புன்னகையோடு திரும்பி நின்று அகானாவையே பார்த்திருந்தாள்.
பிள்ளைகள் இருவரும் பயத்தில் வினோத்தோடு ஒட்டிக்கொண்டு அகானாவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கர்மா தன் வேலையைக் காட்டிக் கொண்டிருந்தது!
இது வினோத்திற்கான கர்மா!
அடுத்த நாள் விடியலில் தான் சரஸ்வதிக்கும், மைதிலிக்கும் மஞ்சரி வந்த செய்தியே தெரிந்தது. அதுவும் ‘அம்மா நான் போய் அக்காவை பார்த்துட்டு வரேன்’ என ஹரிணி அடம்பிடிக்கதான் என்ன? ஏது? என விசாரிக்கும் போதுதான் அகானா வந்திருப்பது, தெரிந்தது.
உடனே கோபம் வர “எவ்வளவு தைரியம் இருந்தா, இந்த ஊருக்கு திரும்பி வந்திருப்பா, அன்னைக்கு எழுதி கொடுத்துட்டு போனாள்ல, அப்புறம் எப்படி வந்தா? யார் கொடுத்த தைரியம் அவளுக்கு? அவளை என்ன செய்கிறேன் என்று பார்..?” என கத்திக் கொண்டே வெளியில் வர,
மைதிலியும் அவருக்கு பின்னால் செல்ல, மற்ற யாரும் அவர்களை தடுக்கவில்லை. ரவீந்திரன் அமைதியாகவே நின்றிருந்தார்.
பிள்ளைகள் இருவரும் சரஸ்வதிக்கு பின்னே வந்திருந்தாலும், காயதிரியிடம் சென்று அவளுக்கு ஆளுக்கொரு பக்கம் நின்றுக் கொண்டனர்.
விடிந்ததும் செய்தி தெரிந்து எப்படியும் வருவார்கள் என தெரிந்து, அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.
அதிலும் குமரனும், நவீனும் கொலை வெறியில் இருந்தனர்.
சரியாக அதே நேரம் அகானாவின் பாதுகாப்பிற்கு என இரண்டு காவலர்கள் வேறு வந்து காத்திருந்தனர்.
வந்த வேகத்தில் சரஸ்வதி அதையெல்லாம் கவனிக்கவில்லை. நேராக கவிதாவின் வீட்டின் முன் நின்று “ஏன்டி.. உனக்கெல்லாம் வெட்கமா இல்ல.. பணத்தை வாங்கிட்டு, புருஷனை வித்துட்டு போனியே.. திரும்பி எந்த முகத்தை வச்சுட்டு இங்க வந்து நிற்கிற.. அன்னைக்கு பத்திரத்தில் எழுதி கொடுத்துட்டு போனது மறந்துடுச்சா? அப்படி மறந்தா சொல்லு, என்கிட்ட அந்த பத்திரம் பத்திரமா இருக்கு.. கொண்டு வந்து உன் மூஞ்சில எரியுறேன்.. படிச்சு தெரிஞ்சுக்கோ.. மறுபடியும் இந்த தெசப்பக்கம் எட்டிப் பார்க்கக்கூடாது..” என கத்திக் கொண்டிருக்க,
நவீனும், குமரனும் பல்லைக் கடித்து, தன் கோபத்தை அடக்கி கொண்டிருந்தனர்.
‘ஏன் நவீ அண்ணாவும், குமரன் அண்னாவும் எங்க பாட்டியை பேசாம வேடிக்க பார்க்குறாங்க..” என ஹரினி காயத்ரியிடம் முனங்க,
‘ம்ம் உங்க பாட்டி இன்னைக்கு அம்முக்கிட்ட நல்லா வாங்கிட்டு போகப் போகுது..’ என காயத்ரி இரு பிள்ளைகளிடம் முனங்கிக் கொண்டிருந்தாள்.
ஆம்! அகானா யாரையும் பேசக்கூடாது என்று முன்னமே எச்சரித்து இருந்தாள்.
“ஓ.. அப்போ நமக்கு என்டர்டெயின்மென்டா..?” என இருவரும் கோரசாக சொன்னாலும், சத்தம் வராமல்தான் சொல்லிக் கொண்டார்கள்.
‘அந்த வீட்டு ஆளுங்க யார் வந்து பேசினாலும், நான் மட்டும்தான் பேசுவேன்.. வேற யாரும் பேசக்கூடாது… புரியுதா.?’ என்றதும், மகளின் கோபம் புரிந்த மஞ்சரி “அம்மு..” என அழைக்க,
“ம்ம்மா எனக்கு எப்படி பேசணும்னு தெரியும்..” என முடித்து விட்டாள்.
அதனால் சரஸ்வதியின் பேச்சுக்கு மற்ற அனைவரும் அமைதியாக இருக்க, வீதியில் கூட்டமும் கூடியது. அந்த இரண்டு காவலர்களும் முன்னே வர, அகானாவின் பார்வையைப் பார்த்து அப்படியே நின்றனர்.
அவர்களின் அமைதியும், வீதி மக்களின் கூட்டமும் சரஸ்வதியின் கோபத்தை கூட்டியது.
அவர் இப்போதும் அகானாவை கவனிக்கவில்லை. ஆனால் மைதிலி கவனித்துவிட்டார். ஒரு ஜாடையில் ரஞ்சனியை போலவே தான் இருந்தாள் அகானா. தினமும் ரஞ்சனியை பார்த்து பழகியதால், உடனே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது மைதிலியால்.
வந்ததிலிருந்து அகானாவின் பார்வை சரஸ்வதியிடம் மட்டும் தான். அவளும் மைதிலியை கவனிக்கவில்லை.
“என்ன ஒரு திமிர்? நான் பேசிக்கிட்டே இருக்கேன்… பதில் சொல்லாமல் நின்னுட்டு இருக்க.. அவ்வளவு திமிர் ஆயிடுச்சா உனக்கு..? இங்க இருந்து எப்படி போனேன்றதை மறந்துடாத.. என்ன என் மகன்கிட்ட பேசி, அவனை மயக்கிடலாம்னு பார்க்குறியா? அது இந்த ஜென்மத்துல நடக்காது. ஒரு தடவைதான் தப்பு செய்வான். மறுபடியும் அதே தப்பை செய்ய அவன் என்ன முட்டாளா.?” என எகத்தாளாமாக சொல்லி முடிக்கும் முன்னே, அவளுக்கு முன் வந்து நின்றாள் அகானா.
“என்ன பிரச்சனை உங்களுக்கு.?” என நிறுத்தி நிதானமாக, அதே நேரம் அழுத்தமான குரலில் கேட்க, அந்த குரலில் ஒரு நொடி ஸ்தம்பித்துதான் போனார் சரஸ்வதி.
“என்ன நான் கேட்டுட்டே இருக்கேன்? பதில் சொல்லாமல் மரம் மாதிரி நின்னுட்டு இருக்கீங்க.. என்ன பிரச்சனை உங்களுக்கு.? எதுக்கு இங்க வந்து நியூசன்ஸ் பண்றீங்க.?” என அதே அழுத்தமான குரலில் கேட்க,
“அதைக் கேட்க நீ யாரு.? உனக்கு ஏன் நான் பதில் சொல்லணும்? எங்க அந்த ஓடிப் போனவ..?” என்று அப்போதும் திமிராக கேட்டார் சரஸ்வதி.
“ஓ இன்னும் நான் யாருன்னு தெரியலையா? தெரியாது தான்.. கூட இருந்து வளர்ந்திருந்தா? ஒருவேளை நீங்க வளர்த்து இருந்தா தெரிஞ்சிருக்கலாம்..” என இழுத்தவள் “இதுல என்னோட தப்பு இல்ல.. கட்டின பொண்டாட்டியையும், பெத்த பிள்ளையையும் பணத்துக்காக நடுத்தெருல விட்டுட்டு போன, உங்க மகன் சொல்லி இருக்கனும்.. சொல்லலையா? நேத்து கூட கோவில்ல என்னையும், என் அம்மாவையும் பார்த்து அழுதாரே! உங்க கிட்ட சொல்லல..” என கிண்டலும் கேலியுமாக கேட்க, சர்வமும் அடங்கிப் போனது இரண்டு பெண்களுக்கும்.
“ஏய்.. என்ன? என்ன சொல்ற நீ? ரவி.. ரவி அப்படி எல்லாம் இல்லை.?” என முதன்முறையாக மைதிலி வாய் திறந்தாள்.
‘இது யாரு புதுசா’ என்ற பார்வையைக் கொடுத்தவாறே “ஆமாம் நீங்க யாரு? என் ஃபிரேம்ல உங்களை நான் கொண்டு வரவே இல்லையே.. வாலன்டியரா வந்து ஏன் வண்டியில ஏறுறீங்க..” என மீண்டும் அதே கிண்டலில் கேட்டாள் அகானா.
“ஏய் யாரைப் பார்த்து என்ன சொல்ற? ஏன் ஓடிப்போன உங்க அம்மா சொல்லலையா உனக்கு..?” என மைதிலி கேட்டு முடிக்கும் முன்னே, வேகமாக அவளிடம் வந்தாள் அகானா.
அவள் வந்த வேகத்தைப் பார்த்த இரு பெண்களும் ஓரடி பின்னே எடுத்து வைத்தனர்.
“என்ன சொன்ன? இப்போ என்ன சொன்ன? என் அம்மா ஓடிப்போனவங்களா? சரி எங்க அம்மா ஓடிப்போனவங்களாவே இருக்கட்டும்.. நீங்க யாரு? ஹ்ம்ம் நீங்க யாரு ஓடி வந்து ஒட்டிக்கிட்டவங்களா.?” என ஆத்திரமும், கேலியும் கலந்த சிரிப்புடன் கேட்டவள்,
நொடியில் தன் முக பாவத்தை மாற்றி “என் அம்மா எனக்கு ஆயிரம் சொல்லி இருக்காங்க. உங்கள பத்தியும் சொல்லி இருக்கலாம்.. என் அம்மாவே சொல்லியிருந்தாலும், தேவையில்லாததை எல்லாம் நான் மூளையில் ஏற்றிக்கொள்வது கூட கிடையாது. உங்கள பத்தி சொன்னதையும் அப்படி நினைச்சு நான் ஏத்திக்கல போல.. சரி அதனால என்ன? நீங்க சொல்லுங்க நான் தெரிஞ்சுக்கிறேன்..” என மிகவும் நிதானமாக பேசினாள் இப்போது.
சுற்றி நின்ற அத்தனை பேரும், அகானாவில் இந்த பேச்சில் அதிசயித்து தான் போயினர்.
ஏன் தன் வீட்டு வாசலில் நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நித்யாவுக்கு கூட, கைதட்ட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. பக்கத்தில் நின்ற ரவிக்காக அமைதியாக இருந்தாள்.
அகானாவின் இந்த பேச்சில் கவிதா ஓடி வந்து கட்டிக்கொண்டு “இப்போ.. இப்பதான் கண்ணு எனக்கு நிம்மதியா இருக்கு..” என அழுதபடியே கூற, காயத்ரி வந்து தாயை அழைத்து சென்றாள்.
“ஏய்.. என்ன? என்ன வச்சு விளையாடிட்டு இருக்கியா? உருத் தெரியாம அழிச்சுடுவேன் பார்த்துக்கோ.. ஏற்கனவே உயிருக்கு பயந்து ஓடினது எல்லாம் மறந்திருச்சு போல..” என நிர்மலமான முகத்துடன், மகளையே பார்த்துக் கொண்டிருந்த மஞ்சரியை பார்த்து சரஸ்வதி ஆத்திரமாக கூறவும்,
“ஓ… அப்படியா? உருத் தெரியாம அழிக்க போறீங்களா? அழிக்கலாமே! அழிக்கலாம்.. அழிக்கலாம்.. அழிரப்பர் வேணும்னா நான் வாங்கித் தரவா?” என கிண்டலாக பேசியவள், மீண்டும் நொடியில் தன் முகபாவத்தை மாற்றி “என்னை வச்சு விளையாடிட்டு இருக்கியான்னு கேட்டீங்களே, அதுக்கு பதில் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும்.. தெரிஞ்ச பிறகும் இப்படியே சவுண்டா பேசுறீங்களான்னு பார்ப்போம்..” எனப் புருவத்தை ஏற்றியவள், அங்கு மொபைல் கேமராவில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த காவலரிடம் “எல்லாம் பக்கா தானே..” என்றவள், அவர் ‘ஆம்’ என தலை அசைத்ததும்,
“ஒரு கலெக்டரையே மிரட்டுறீங்களே குட் ஜாப்..” என மீண்டும் நக்கல் அடித்துவிட்டு, மைதிலியை ஒரு பார்வை பார்த்தவள், பின் அந்த காவலர்களிடம் “கிளியர் இட்..” என்று உள்ளே சென்றுவிட, கூட்டமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
கூட்டத்தினருக்கே அப்படியென்றால் சரஸ்வதியின் நிலையை சொல்லவும் வேண்டுமா? காவலர்கள் வந்து “ஏன்மா கலெக்டரையே அழிச்சிடுவேன்னு சொல்ற, உன்னை ஸ்டேஷன் கொண்டுபோய் என்னன்னு பார்க்கட்டுமா? எவ்வளவு தைரியம்மா உனக்கு.. ஏற்கனவே கலெக்டருக்கு ஏகப்பட்ட கொலை மிரட்டல் வந்துட்டு இருக்கு. இப்போ உன்னையும் அந்த லிஸ்ட்ல சேர்க்க வேண்டியதுதான்..” என, அதற்குள் வினோத் வந்து தாயை இழுத்துக் கொண்டு போக, மைதிலி பயத்துடன் அவர்களுக்கு பின்னால் நடந்தாள்.
“அம்மா இதெல்லாம் மண்டையில் ஏத்தாமா போய் கிளம்புங்க.. எனக்கு டைம் ஆச்சு..” என்ற அகானாவிடம்,
“நீ கிளம்பு அம்மு.. நான் அப்புறமா நவீ கூட வரேன்..” என்ற மஞ்சரியை, ஒரு நொடி பார்த்தவள், பின் தோளைக் குலுக்கிவிட்டு சென்று விட்டாள்.
ஹரினியும், ஹரிஸும் வாயைப் பிளந்துதான் அகானாவை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஹேய் ஓடுங்க ஓடுங்க.. ஸ்கூல் டைம் ஆகிடுச்சு. உங்க அம்மா திட்ட போறாங்க..” என இருவரையும் அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள் காயத்ரி.
‘வளர்த்தா பிள்ளையை இப்படி வளர்க்கணும்.. எப்படி நின்னு மூஞ்சில ஆசிட் ஊத்தி மாதிரி பேசினா பாத்தியா? இந்த சரஸ்வதியோட ஆட்டம் சீக்கிரம் முடியும். கொஞ்ச நஞ்சமா ஆட்டம் போட்டாளுங்க.. இவளுக்கு எல்லாம் நல்ல சாவே அந்த கடவுள் கொடுக்கக்கூடாது’ என அங்கு இருந்தவர்கள் பேச, அனைத்தும் காதில் விழுந்தாலும், ஒன்றும் பேசவில்லை அகானா.
அவள் கிளம்பி சாப்பிட அமரும் நேரம், சரியாக ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது.
“பாப்பா கமிஷனர் வந்திருக்காரு..” என்ற கண்ணனிடம்,
“இதோ வரேன்..” என்றவள் வெளியே வந்து, முறையாக அவரிடம் பேசினாள்.
“மேடம் நீங்க சொன்ன மாதிரி அரெஸ்ட் வாரண்ட் கொண்டு வந்திருக்கோம்..” என்றவரிடம்,
“ஓகே சார்.. நீங்க ப்ரொசீட் பண்ணுங்க.. ஆப்டர்நூன் விட்டுடுங்க. ஜாமீன் கிடைக்கலன்னா என் அண்ணன் வந்து கொடுப்பான். விட்டுடுங்க!” என அவருக்கு மட்டும் கேட்கும் படி கூறினாள்.
“எஸ் மேம்..” என்றவர், அவளிடம் விடைபெற்று ரவியின் வீட்டுக்குள் சென்றார். ஊரே இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
‘வந்து மிரட்டிட்டு போனாள்ல, அதுதான் போலீஸ் பிடிச்சிட்டு போகுது.. நல்லா உள்ள போய் களியா திங்கட்டும்.. அப்பதான் கொழுப்பு குறையும்.. கூடவே ஒருத்தி இருக்கா பாரு, அவளையும் அள்ளிட்டு போகணும்..’ என அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருக்க,
உள்ளே சென்ற கமிஷனர் வெளியே வரும்போது, நித்தியாவை அரெஸ்ட் செய்து வந்தார்.
அதற்குள் மீடியா ஆட்களும் வந்துவிட, அவர்களும் ‘காலாவதியான மருந்துகளை தன் மருந்தகத்தில் பயன்படுத்தியதாக, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது தெரியவர, மருந்தகத்தின் உரிமையாளரான மிசஸ் நித்யா வினோத் அவர்களை, கைது செய்தது காவல்துறை’ என ஒவ்வொருத்தரும் மைக்கை பிடித்து பேசிக் கொண்டிருக்க, அந்த இடமே மக்களின் பேசு பொருளாகிவிட, நித்யாவோ ஜீப்பில் ஏறும் முன், புன்னகையோடு திரும்பி நின்று அகானாவையே பார்த்திருந்தாள்.
பிள்ளைகள் இருவரும் பயத்தில் வினோத்தோடு ஒட்டிக்கொண்டு அகானாவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கர்மா தன் வேலையைக் காட்டிக் கொண்டிருந்தது!
இது வினோத்திற்கான கர்மா!