• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 19

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 19

அகானா அந்த ஊரிலிருந்து கிளம்பியதுமே, குமரன் கூறியது போலவே தாரணி நவீனின் வீட்டிற்கு வந்துவிட்டாள் வந்தவளை பார்த்ததும் மஞ்சரி யோசனையாக, காயத்ரி தான் “இன்னைக்குமா அண்ணி..?” என சிரிக்க, குமரனும் சிரித்து விட்டான்.

நவீன் அவளைப் பார்த்து அமைதியாக நிற்க, “உங்களுக்கு என்னை பார்த்தா சிரிப்பா தான் இருக்கும்..” என எரிச்சலானவள் “என்ன சொன்னீங்க மாமா உங்க கலெக்டர் தங்கச்சிகிட்ட.?” என குமரனிடம் எகிற,

“நான் ஒன்னும் பொய் சொல்லல ராங்கி.. என்ன உண்மையோ அதை மட்டும் தான் சொன்னேன்.” மேலும் சிரிக்க,

“என் கஷ்டம் எனக்கு..” என்றவள் நேராக கிச்சனுக்கு சென்று, கவிதா சுட்டுக் கொண்டிருந்த பூரியை தட்டில் வைத்து சாப்பிட அமர்ந்தாள்

“தாரு மா மதியத்துக்கு நானே கட்டவா? இல்ல உன் ஆத்தா செஞ்சி இருக்காளா..” என கவிதா கேட்க

“தெரியல அத்தை.. நீங்களே கட்டிடுங்க, நான் இப்படியே கிளம்புறேன். வீட்டுக்கு போன அம்மா புலம்பிகிட்டே இருக்கும். இப்பவே லேட்டாயிடுச்சு..” என அவசரமாக சாப்பிட தொடங்க,

“மெதுவா தான் சாப்பிடேண்டி..” என்ற நவீன், மேலும் ஒரு பூரியை கொண்டு வந்து அவள் தட்டில் வைத்தான்.

‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..’ என எரிச்சலான தாரணி, “அத்தை நான் யார்கிட்டயும் பேசுற ஐடியாள இல்ல.. சண்டை சண்டைதான்.. சமாதானத்திற்கு வாய்ப்பே இல்லை..” என கவிதாவிடம் கத்தி சொன்னவள், நவீனை ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை. அதில் குமரனும், காயத்ரியும் சிரிக்க, மஞ்சரிக்கும் கூட புன்னகை எட்டிப் பார்த்தது.

“எம்மா இந்த வீட்டு மூத்த மருமகளே, வீட்டுக்கு விருந்தாள் வந்திருக்காங்க. அவங்களை என்னனு கூட கேட்காம ஃபுல்லா மொக்கிகிட்டு இருக்க.. இப்படி கொஞ்சம் கூட மரியாதை தெரியல.. நாங்க எப்படி மூத்த மருமக பட்டம் கொடுக்க..” என குமரன் மேலும் சீண்ட,

“இங்க பாருங்க மாமா நானே உங்க மாமியா மேல கோவத்துல இருக்கேன். என்னை சீண்டிக்கிட்டு இருக்காதீங்க சொல்லிட்டேன்..” என்றவள், மஞ்சரியைப் பார்த்து “சாரி அத்தை நான் கொஞ்சம் இப்படித்தான்.. அதனால ‘இது ஒரு பைத்தியம்னு’ நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. கோபம் வந்தா சண்டை போடுங்க.. தப்பு செஞ்சா திட்டுங்க.. ஆல்ரைட்ஸ் உங்களுக்கு இருக்கு..” என்று கூறியவள், உடனே குமரனை பார்த்து “இப்படி மதிக்கல எடுக்கலைன்னு எல்லாம் உங்க மாமியா தான் பேசணும்.. என் மாமியாருங்க ரெண்டு பேரும் அப்படி கிடையாது..” என கழுத்தை நொடித்து மீண்டும் சாப்பிட, அதற்குள் தாரணியின் தங்கை ராகினி அவளுக்கு லஞ்ச் பேக்கோடு வந்துவிட்டாள்.

“வேலைக்கு போறேன்னு சொல்லி சொல்லியே வீட்ல வேலை செய்யாம இப்படி ஏமாத்து.. அங்க அம்மாவை.. இங்க எங்களை.. நல்லா வருவ நீ..” என கடுப்பாக சொல்லிவிட்டு உள்ளே செல்ல,

‘என் ரகசியத்தை வெளிய சொல்லாதாடி லூசு’ என வாய்க்குள் முனங்கிவிட்டு, “பின்ன மூத்த மருமகன்னா சும்மாவா? உங்களையெல்லாம் மேய்க்கிறதே பெரிய வேலைதான் எனக்கு. அதுக்கே நீங்க எல்லாரும் நன்றி சொல்லி பாராட்டணும்..” என தாரணி பேசிக் கொண்டிருக்கும் போதே நவீன் பைக்கில் ஹாரனை அலற விட்டான்.

“ஓகே.. ஓகே.. நான் கிளம்புறேன்.. லேட்டா போன டிரைவர் கோவிச்சுக்குவார்..” என்றவள் “அத்தை போயிட்டு வரேன்..” என ஓடிவிட்டாள்.

அவள் வந்து சென்ற பத்து நிமிடம் வீடே அதகளப்பட்டது. மஞ்சரி ஆவென பார்க்க, “சித்தி என்ன இது.?” என காயத்ரி சிரித்தாள்.

“சரியான அறுந்தவாலு தாரணி அண்ணி. அவங்க அம்மா தான் முடியாதுன்னு ஒத்த கால்ல நிக்குது. அண்ணியும் நவீனைத் தான் கட்டுவேன்னு உறுதியா இருக்குது. நவீன் அண்ணா தான் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியா இருக்கான்..” என பெருமூச்சு விட,

“அவன் எனக்காக தான் யோசிக்கிறான் மஞ்சு. குமரன் பிரச்சினையிலேயே அவங்க வீட்டுல ரொம்ப பேசிட்டாங்க. உங்க மாமாவை வச்சு தான் பிரச்சனையே. அதுல என்னையும் பேசவும் நவீனுக்கு பிடிக்கல. தாரணியை கேட்டா இன்னும் பேசுவாங்க. அதனால இத பத்தி பேசவே மாட்டேங்குறான். அவ தான் வாரத்துல ஒரு நாளாச்சும் அவங்க ஆத்தா கூட சண்டை போட்டுட்டு இங்கு வந்துடுவாள். ஆரம்பத்தில் எனக்கும் கோபம் தான். ஆனா அவ நம்ம நவீக்காக இவ்வளவு போராடும்போது, நாம ஏன் ஒதுங்கணும்னு தோணுச்சு. அதனால நானும் ஒன்னும் சொல்றதில்ல. வழியில எங்க பாத்தாலும் ஜாடையா பேசுவா அவ ஆத்தா.. நானும் இப்போ எல்லாம் பதிலுக்கு நல்லா பேசிட்டு வந்துடுவேன்..” என்றார் கவிதா.

“நவீனுக்கும் வயசு போகுது இல்லக்கா.. பேசித்தான் பாரேன். எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பாங்க ரெண்டு பேரும்.. மனசுல கஷ்டம் இருந்தாலும் வெளியே காட்டிக்காம சிரிச்சுக்கிட்டே இருக்கா அந்த பொண்ணு. அது நல்லதில்லக்கா. ஒரு நாளைக்கு எல்லாம் சேர்ந்து வெடிக்கும் போது ரொம்ப மோசமா பாதிக்கப்படுவா. அந்த வலி எனக்கும் புரியும். அதனால ரெண்டு வீட்டுக்கும் பொதுவான ஆள வச்சு பேசி பாரு. ரெண்டு பேருக்கும் வயசு போகுது. அதையும் நாம பாக்கணும் இல்ல..” என மஞ்சரியும் சொல்ல,

“ஆமா சித்தி என் பொண்டாட்டியை விட்ட மாதிரி தாரணியை அவங்க விட மாட்டாங்க. ரெண்டு பேரையும் விட்டுட்டு அவங்க என்ன செய்வாங்க. அதனால கண்டிப்பா யோசிப்பாங்கன்னு தான் எனக்கும் தோணுது..” என்ற குமரன், “சித்தி நான் வந்து கூப்பிட்டு போறேன்.. மதியம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க..” என குமரனும் வேலைக்கு கிளம்பி விட்டான்.

“இதெல்லாம் யோசிக்காத மஞ்சு.. நவீன் என்ன முடிவு எடுக்குறானோ அதுதான் எங்க முடிவு. எப்படியும் அவன் தாரிணியை விட்டுட மாட்டான். அப்புறம் ஏன் கவலைப்படனும்..” என்றதும், ராகினி நால்வருக்கும் காபியோடு வந்தாள்.

“மாமா எங்க க்கா? இன்னுமா தூங்குறார்..” என மஞ்சு கேட்க,

“அவர் எங்க வீட்டுல இருக்காரு? போதை தெளிஞ்சதுமே ஓடிருப்பார். சரியா பன்னெண்டு மணிக்கு வந்து சாப்பிட்டு மறுபடியும் நகர்வலம் தான். அடுத்து பசங்க போய் நேத்து மாதிரி தூக்கிட்டு வரனும்..” என பெருமூச்சு விட,

“சித்தி மாமாவுங்க ரெண்டு பேருக்கிட்டயும் நவீன் பேசிட்டான். இன்னைக்கு மதியமா கிளம்பி வரேன்னு சொல்லிருக்காங்க. இங்கேயே இருக்கீங்களா? இல்ல அங்க போறீங்களா?” என கேட்க,

“அம்மு தனியா இருப்பாளே காயு.. ஆரியும் வந்துருக்கான். நான் அக்காவை கூப்பிட்டு கிளம்பறேன்.. அவங்க வந்ததும் அங்க கூட்டிட்டு வந்துடுங்க..” என்றார் மஞ்சரி.

அப்படியே அவர்கள் ஊர் கதையை பேசிக்கொண்டிருக்க, ஸ்கூலுக்கு அருகில் வந்ததுமே வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான் நவீன்.

எதுவும் சொல்லாமல் இறங்கி நின்றாள் தாரிணி. அதுவரை முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த போலியான சிரிப்பு மறைந்து, அவள் முகம் வேதனையைக் காட்ட, அவள் விரல்களைப் பிடித்துக் கொண்டவன் “ம்ச் தாரு..” என்றான் நவீனும் வருத்தமாக.

“என் மூளைக்கு எல்லாம் புரியுது மாமா? ஆனா மனசுக்கு புரியல.. இன்னும் எவ்ளோ நாள் இந்த போராட்டம். எதுவுமே பிடிக்கல, வாழ்க்கை மேல பிடிப்பே இல்லாம போயிடுச்சு..” என்றாள் விரக்தி குரலில்..

“தாரு ப்ளீஸ்… தயவுசெய்து அழுதுடாதடி.. உன் கண்ணுல தண்ணி வந்தா நான் ஆம்பளையே இல்லன்னு அர்த்தம்.. நீ இப்படியெல்லாம் யோசிக்காத. இன்னும் கொஞ்சநாள்தான், உன் அம்மாவே உன்னை எனக்கு கொடுப்பாங்க. கண்டிப்பா நடக்கும். என்னை நம்பு ப்ளீஸ்..” என்றான் வேதனையாக குரலில்..

“உங்களை நம்பலன்னா நான் என்னையே நம்பல மாமா..? என்னமோ ஒரு மாதிரி இருந்தது அவ்ளோதான். விடுங்க நீங்க ஃபீல் பண்ணாதீங்க. கிள்மபலாம் டைம் ஆகிடுச்சு..” என்றாள் முகத்தை அழுந்த துடைத்து..

பிடித்திருந்த கைகளில் அழுத்தம் கொடுத்து, “இந்த ஊர்க்காரங்க முன்னாடி, உன் அம்மா முன்னாடி நாம சீக்கிரம் நல்லா வாழ்வோம் தாரு..” என்றான்.

“கண்டிப்பா மாமா.. என் ஆத்தாக்காரி அப்படியே வயிறு எரிஞ்சு சாகனும்..” என நொடிக்க, அவள் பாவனையில் சிரித்தபடியே நவீன் வண்டியை எடுக்க, தாரிணியும் சிரித்தபடி அவனுக்கு பின் ஏறினாள்.

இங்கு ரஞ்சனியை வீட்டில் விட்ட சங்கர் “நீ ரெஸ்ட் எடு… கண்ணா வர லேட்டாகும். நானும் ஈவ்னிங்க் தான் வருவேன். சும்மா உங்க அம்மாவுக்கு போன் பண்ணி, இருக்குற டென்சனை அதிகம் பண்ணிக்காத..” என நகர,

“ஏங்க.. அது அதுவந்து என்னை நித்யா அம்மா வீட்டுக்கு கூப்பிட்டு போறீங்களா? நான் நித்யாவை பார்க்கணும்..” என தவிப்பாக கேட்க,

“அப்பவே போயிருக்கனும் ரஞ்சி. அந்த பொண்ணு கூட துணையா இருந்துருக்கனும். அந்த குழந்தைங்களை இங்க கொண்டு வந்து விடு நான் பார்த்துக்குறென்னு சொல்லியிருக்கனும்.. அதையெல்லாம் செய்யாம இப்போ போறது சரியா வராதுமா..” என்றார் வார்த்தைகளில் கோபத்தைக் காட்டி..

“இல்லங்க… அம்மா இதுக்காகத்தான் வர சொல்றாங்கன்னு போனேன். அங்க போன பிறகுதான் தெரியும், மைதிலி அண்ணி பிரச்சினை பண்ணிட்டு இருக்காங்கன்னு..” என்று வருத்தமாக கூற,

“முடிஞ்சதை பேசி பிரயோஜனம் இல்ல ரஞ்சி.. விடு..” என்றார் சங்கர்.

“ம்ம்.. மகியைப்பத்தி எதுவும் தெரிஞ்சதா? கண்ணா என்ன சொன்னான்..”

“வெளியே தெரியாமதான் விசாரிக்க சொல்லிருக்கு ரஞ்சி. அதனால பொறுமையாதான் இருக்கனும். ஆகன் அப்படி விட்டுடமாட்டான். நீ அவளையே யோசிக்காம, மாத்திரை போட்டுட்டு படு.. நான் கடைக்கு கிளம்பறேன்..” என சென்றுவிட, ரஞ்சனியும் அப்படியே சோபாவில் விழுந்தார்.

சற்று நேரத்தில் கொரியர் வந்திருப்பதாக போன் வர, செகியூரிட்டியிடம் கூறி வாங்கி வர சொன்னாள்.

யார் அனுப்பியது? ஆகனுக்கு வந்ததா? மகிக்கு வந்ததா? மகிக்காகத்தான் இருக்கும். சும்மா இருக்காம எதையாவது ஆர்டர் போட்டு வச்சிருப்பா? என மகளைப் பற்றி நினைத்ததும் சட்டென அவர் விழிகள் நனைந்தது.

செகியூரிட்டி கொண்டு வந்து கொடுத்ததை, வாங்கி யோசனையுடன் பிரித்தவர் அதில் இருந்ததைப் பார்த்ததுமே “அய்யோ மகி..” என கத்தி கதற ஆரம்பித்தார்.

ரஞ்சனியின் சத்ததில் வேலை செய்பவரும், செகியூரிட்டியும் ஓடிவர், கையிலிருந்த பார்சலை நெஞ்சோடு கட்டிக்கொண்டஓவென கதறியழ ஆரம்பித்தார்.

“கந்தன்னே சீக்கிரம் சாருக்கு போன் பண்ணு.. இப்போதான் சார் போனார்.. ரொம்ப தூரம் போயிருக்க மாட்டார்..” என ரஞ்சனியைப் பிடித்துக்கொண்டே செகியூரிட்டிக்கு சொல்ல, அவரும் உடனே அழைத்து விடயத்தைக் கூற, சங்கரும் அடித்துப் பிடித்து ஓடிவந்தார்.

“அய்யோ என் பொண்ணுக்கு என்னாச்சுன்னு தெரியலையே..? இது எப்படி? எதுக்கு இதை அனுப்பிருக்காங்க.. என் பொண்ணு வேனும்.. என் பொண்ண எனக்கு கொடுங்க..” என சங்கரைக் கட்டிக் கொண்டு கதற, சங்கருக்குமே விழிகள் நனையத் தொடங்கியது.

தன் வேதனையை மறைத்து “ரஞ்சி இது நம்மளை பயமுறுத்துறதுக்காக அனுப்பிருக்காங்க. இதையெல்லாம் நினைச்சு பயப்படாத.. எல்லா பக்கமும் நம்ம ஆளுங்க தேடிட்டுதான் இருக்காங்க. நீ இப்படி அழாத..” என சமாதானம் செய்து கொண்டிருக்க, அதற்குள் செய்தி கேள்விப்பட்டு ஆகனும் வந்திருந்தான்.

பெற்றோரின் வேதனையைப் பார்த்தபடியே உள்ளே வந்தவன் அங்கு பிரிக்கப்பட்டிருந்த பார்சலை கண்டு கொதிநிலைக்கே சென்றுவிட்டான்.
காணாமல் போன அன்று மகி அணிந்திருந்த உடை.. அது முழுவதும் குருதியால் நனைந்திருந்தது. அகானாதான் இதையெல்லாம் செய்கிறாள் என்று தெரிந்ததினால் பெரிதாக பயப்படவில்லை அவன். ஆனால் அவள்தான் என்று அவனுக்கு தெரியாமல் போயிருந்தால் அவனும் இப்படித்தானே பதறி, தவித்திருப்பான்.

அம்மாவின் மீதான அவள் கோபம் சரிதான். அதற்கா இந்தளவிற்கு இறங்குவாளா? என பல்லைக் கடித்தவனுக்கு அவள் மேள் கொலைவெறியே வந்தது.

“ப்பா.. நீங்க பயப்படாதீங்க.. அவ அம்மாவை மிரட்டத்தான் இதெல்லாம் பண்ணிருக்கா.. அவங்களை சமாதானம் செய்ங்க.. நான் இதை பார்த்துக்குறேன்..” என வேகமாக கிளம்பி, நேராக வினோவிடம் வந்து நின்றான்.