• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 21

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
492
113
Tirupur

அ.. ஆ.. - 21

அகானாவின் கோபத்தில் ஸ்தம்பித்து போன ரவீந்திரன் “என்னை.. என்னை மன்னிச்சிடுடா அம்மு..” என்றதும், மீண்ட்ம் தன் இருக்கையில் அம்ர்ந்து “உட்காருங்க..” என்றாள் அகானா..

கண்ணனை நோக்கி “டென் மினிட்ஸ் அங்கிள்.. யாரையும் அலோவ் பண்ணாதீங்க.” என்றுவிட்டு எதிரில் இருந்தவரை கூர்மையாக பார்த்தவாறே “இப்போ சொல்லுங்க..” என்றாள் நிதானமாக.

மகளின் இந்த செயலில் அசந்து போய்தான் நின்றார் ரவீந்திரன். அவர் எதிர்பார்த்து வந்தது என்ன? இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன?

விழிகளை சிமிட்டாமல் அவளையேப் பார்க்க, “நான் இங்க சும்மா உட்கார்ந்துட்டு இருக்கல, அதுக்கும் எனக்கு சம்பளம் கொடுக்கல, டைம் வேஸ்ட் பண்ணாம.. கிளம்புங்க..” என்றாள் தயவுதாட்சன்யமின்றி.

உடனே அமர்ந்தவர் “என்னை மன்னிச்சிடுடா அம்மு..?” என்றார் குரலில் வருத்தத்தை தேக்கி..

“நான் மன்னிச்சிட்டா?” என்று கிண்டலாக கேட்டவள் “நான் மன்னிச்சிட்டா நீங்க செஞ்ச தப்பெல்லாம் இல்லைன்னு ஆகிடுமா? என் அம்மாவுக்கு செஞ்ச துரோகம்தான் இல்லன்னு ஆகிடுமா.?” என்றாள் ஆத்திரமாக..

அதில் ரவீந்திரனின் முகம் கருக்க, “எத்தனை வருசம் தெரியுமா? நீங்க வருவீங்க வருவீங்கன்னு என் அம்மா ஏங்கி போய் இருந்தாங்க தெரியுமா? நீங்க இல்லன்னு நான் ஏங்கினேனோ இல்லையோ என் அம்மா ஏங்கினாங்க. அவங்க வாழ்க்கையில வழுக்கட்டாயமா நுழைஞ்சது நீங்க.. வழுக்கட்டாயம வெளியே போனதும் நீங்க.. இப்போ மட்டும் என்ன புதுசா பாசம்..” என அதே ஆத்திரத்துடன் கேட்க,

“என் சூழல் அப்போ ரொம்பவே மோசம்.. மஞ்சு எப்படியும் பொழச்சுப்பான்னுதான்..” எனும் போதே,

“ஸ்டாப்பிட்..” என ஆங்காரமாக கத்தியவள் “என்ன உங்க சூழ்நிலை.. என்ன உங்க சூழ்நிலை சொல்லுங்க.. நானும் தெரிஞ்சிக்கிறேன். என் அம்மா எப்படி பொழச்சிருப்பாங்க, உங்க அம்மாவும் உங்க தங்கச்சியும் சொன்ன மாதிரியா.?” என கண்களில் அனலைத் தேக்கி கேட்க, ரவீந்திரனால் பதிலே சொல்ல முடியவில்லை.

“இதுதான் நீங்க என் அம்மாவைப் பத்தி பேசுறது கடைசியா இருக்கனும்.. ஒரு காலத்துல நீங்க எங்க வாழ்க்கைல இருந்தீங்க.. இப்போ இல்லை.. இனி எப்பவும் இல்லை.” என்றாள் கோபமாக.

“அப்படியெல்லாம் இல்ல.. நான் வருவேன் உங்களை விடமாட்டேன்னு எதுவும் பிரச்சினை செய்தா, இந்த அகானாவோட இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க.. புரியுதா? என்றாள் கட்டளையாக.

“நான்.. நான் மன்னிப்பு கேட்கத்தான்..” என வார்த்தைகள் தடுக்க,

“ஹான் மன்னிப்பு…” என எகத்தாளமாக கேட்டவள் “நீங்க என்னை பார்க்க வந்தது உங்க அம்மாவுக்கு, உங்க தங்கச்சிக்கு, உங்க பணக்கார மனைவிக்கு எல்லாம் தெரியுமா?” என்றாள் நக்கல் குரலில்.

“உங்களால என் அம்மா பட்ட அவமானத்தையும், கஷ்டத்தையும் என்னால எப்பவும் மறக்கவும் முடியாது. உங்களை மன்னிக்கவும் முடியாது. எப்பவும் பிரச்சினைக்கு பயந்து யார் பின்னாடியும் ஒழிஞ்சிக்க கூடாது. தைரியாமா ஃபேஸ் பண்ணனும். இல்லைன்னா பிரச்சினையே இருக்கக்கூடாது. எந்த பிரச்சினை என்றாலும், அதை ஃபேஸ் பன்ற கட்ஸ் எனக்கு இருக்கு.. உங்களை மாதிரி நான் இல்ல..” என்றாள் கோபாமாகவே.

“இப்போ கூட செஞ்ச பாவத்தை இறக்கி வைக்க ஒரு வடிகால் தேடுறீங்களே தவிர, மனசார மன்னிப்பு கேட்க வரல. என்னை என்ன என் அம்மா மாதிரி நினைச்சீங்களா? நீங்க ரெண்டு வார்த்தை பேசினதும் மனசு மாறி உங்க பின்னாடி வரதுக்கு.. நான் அகானா.. இந்த அகானவுக்கு பின்னாடி இருக்குற வலியும், வேதனையும் உங்களுக்கு எப்பவும் புரியாது. உங்களுக்கு புரியவும் வேண்டாம். உங்களை இனி நான் எப்பவும் பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. கிளம்புங்க..” என்றாள்..

“நான்… நான் செஞ்சது தப்புதான் அம்மு.. என்னை கொஞ்சம்..” என முடிக்கும் முன்னே,

“அந்த பேர் சொல்லி கூப்பிடக்கூடாது. அது என் அம்மா கூப்பிடுற பேர். அந்த பேர் உங்க வாயில இருந்து வரக்கூடாது. வரவே கூடாது.” என்றாள் ஆங்காரமாக.

பின் “நீங்க கிளம்புங்க ப்ளீஸ்.. எனக்கு வொர்க் இருக்கு..” என்றாள் ஆயாசமாக.

ஆனால் ரவீந்திரனோ அகானாவின் அந்த கோபத்தில் மிரண்டுதான் போனார். தான் நினைத்ததை போல மகள் இல்லை. அவள் மனதில் ஒரு கோப தீ கொழுந்துவிட்டு எரிகிறது என அவருக்கு மிகவும் தாமதமாக புரிந்தது.

அதன்பிறகு அங்கு இருக்கவே முடியவில்லை. மெதுவாக எழுந்தவர், ஒன்றும் சொல்லாமல் கிளம்ப, “ஒரு நிமிசம்..” என நிறுத்திய அகானா “நீங்க என்னை பார்க்க வந்ததை மறந்துடுங்க.. நானும் மறந்துடுறேன். எனக்கு இதெல்லாம் பிடிக்காது. இந்த டென்சனோட என்னால் என் வேலையை பார்க்க முடியாது.. அன்ட்..” என நிறுத்தியவள் “நீங்க இதை என்னோட நிறுத்திக்கனும், என் அம்மாவை பார்க்கிறதோ அவங்ககிட்ட பேச முயற்சி பண்றதோ இருக்கக்கூடாது. இந்த வார்த்தையை மீறினா.?” என்றுவிட்டு “கிளம்புங்க..” என்றாள் கட்டளையாக.

“இன்னொரு முறை உங்க வீட்டுக்கு தெரியாம இப்படி எங்களை பார்க்க முயற்சி செய்யாதீங்க. அது தெரிஞ்சு அவங்க வந்து என் அம்மாக்கிட்ட பிரச்சினை செய்ய நான் விடமாட்டேன். அப்போ மாதிரி என் அம்மா அமைதியா இருக்க மாட்டாங்க. அப்புறம் நான்.. நானும் சும்மா இருக்கமாட்டேன்.” என அவரைப் பார்க்காமல் ஃபைலிலேயே கவனம் வைத்து கூற, மிக மிக அசிங்கமாக உணர்ந்தார் ரவீந்திரன்.

தளர்ந்த நடையுடன் அவர் வெளியில் செல்ல, அவரையே வெறித்துப் பார்த்தவளின் விழிகளில் மெல்ல மெல்ல ஒரு தீவிரம் குடிகொண்டது.

என்ன தைரியம்? எப்படி என் முன் வந்து சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் பேச முடிந்தது.?

அதிலும் அந்த பெயரைச் சொல்லி எப்படி? அகானாவால் இன்றும் அந்த நிகழ்வில் இருந்து வெளியில் வர முடியவில்லை.

என் அம்மாவின் வலி இவருக்கும் ஒன்றுமே இல்லையா? அவரின் கஷ்டம் இவருக்கு ஒன்றுமே இல்லையா?

வருவார் வருவார் என்று ஏங்கி காய்ச்சலில் விழுந்த அந்த நாட்கள் கண்முன்னே வந்து போயின.

அன்றைய நாட்களில் தாயின் வேதனையும், அழுகையும் அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலையும் அகானாவை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது.

அன்று விஜிம்மா மட்டும் அவருக்கு துணையாக இல்லாமல் போயிருந்தால், இன்று தாயும் மகளும் எங்கு எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்களோ?
ஒருவேளை தெருவில் பிச்சை கூட எடுத்திருக்கலாம்.. அதை நினைக்கும் போதே அகானாவின் ரத்தம் கொதித்தது.

இவர்களை எப்படி இப்படியே விடுவது? மனைவி மகள் என்ற எண்ணம் துளியும் இல்லாமல், பணத்திற்காக சென்றவரை எப்படி விடுவது?

முடியாது.. கண்டிப்பாக முடியாது.. ஏதாவது செய்தே ஆக வேண்டும். என்ன செய்ய? என்ன செய்ய? என அறைக்குள்ளே குறுக்கும் எடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

மனம் அமைதி அடைய மறுத்தது. அவர்களின் நிம்மதியை அடியோடு அழித்தே ஆக வேண்டும் என்ற வெறி அவளை உட்கார விடவில்லை.

பாவி.. பாவி… எங்களுக்கு துரோகம் பண்ணிட்டு என் முன்னாடியே வந்து பேசுறாங்கன்னா இது யார் கொடுத்த தைரியம்.

இவர்களை எல்லாம் கொன்னுட்டா கூட என் ஆத்திரம் அடங்காது. என் மனதுக்குள் குமுறி கொண்டிருந்தவளுக்கு இந்த ரவீந்திரனை என்ன செய்வது என்ற யோசனை பிடிபட்டது.

உடனே தன் போனை வேகமாக எடுத்தவள், போனில் பதிவு செய்திருந்த அந்த எண்ணிற்கு முதல் முறையாக அழைத்தாள்.

தன் மீது கோபமாக இருப்பாரா என்று ஒரு எண்ணம் இருந்தாலும், அதை வெளி காட்டிக் கொள்ளாமல் அந்த அழைப்பு எடுக்கும் வரை காத்திருந்தாள்.

“நித்தி உன் போன் அடிக்குது, யாருன்னு பாரு.?” என நித்யாவின் அம்மா கூற

“ம்ச் ம்மா யாராவது இதப்பத்தி கேட்கத்தான் கூப்பிடுவாங்க.. அடிச்சா அடிச்சிட்டு போகட்டும்..” என நித்தியாவும் கூற, அவரும் காலையிலிருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார். அதனால் ‘சரிதான்’ என்று விட்டுவிட்டார்.

அடுத்து இவர்கள் வீட்டு லேண்ட்லைன் அழைக்க, வேறு வழியில்லாமல் நித்தியாவின் அம்மா எடுத்தார்

நாங்க கலெக்டர் ஆபீஸ்ல இருந்து பேசுறோம். நித்யா மேடம் இருந்தா பேச சொல்லுங்க..” என்றதும் அவர் பயந்து போய் “நித்தி சீக்கிரம் வாடி, கலெக்டர் பேசணுமாம்..” என பதட்டமாக அழைத்தார் நித்தியாவின் அம்மா.

“ம்மா எதுக்கு இவ்வளவு பயம்.. இந்த கேஸ் பத்தி விசாரிக்கவா இருக்கும்.. இங்க குடு..” என வாங்கியவர் “ஹலோ..” என்றதும்,

“நான் அகானா பேசுறேன்.. உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. நாளைக்கு நீங்க இங்க வரும்போது எனக்கு இன்பார்ம் பண்ணுங்க..” என விரைப்பாக கூற,

“ஹான் சரி.. ஆனா தனியா எப்படி பேச முடியும். என் ஹஸ்பண்ட் வருவார்..” என்ற நித்தியாவிற்கு சிறு புன்னகை.

காலையில் நடந்த பிரச்சனையிலிருந்து வெளிவந்து விட்டாளா? நார்மல் ஆகிவிட்டாளா? என்று தெரிந்து கொள்ளத்தான் அகானா அழைக்கிறாள் என்று நித்தியாவிற்கு புரிந்தது.

“உங்க கேஸ் பத்தின இன்வெஸ்டிகேஷன் தான்.. அவர் வந்தாலும் வெளியே தான் வெயிட் பண்ற மாதிரி இருக்கும்.. உங்க கிட்ட தான் இன்வெஸ்டிகேஷன் நடக்கும்..” என ஆஃபிசர் மோடில் பேச,

“சரி.. சரி மேடம் நான் அவர்கிட்ட சொல்லிடுறேன்.. காலையில கிளம்பும்போது உங்களுக்கு நான் கூப்பிடுறேன்.” என்றார் நித்யாவும்.

“ஓகே.. நான் இப்போ உங்களுக்கு ஒரு நம்பர்ல இருந்து கால் பண்ணி இருப்பேன். அந்த நம்பர் தான் என்னோட நம்பர்.. அந்த நம்பருக்கு நீங்க இன்பார்ம் பண்ணுங்க..”

“ஓ.. ஓகே மேடம்.. நான் அந்த நம்பருக்கு உங்களுக்கு கால் பண்றேன்..”

அடுத்து என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. இருவரிடமும் ஒரு சிறு நொடி அமைதி பின் அகானாதன் “நீங்க ஓகேவா..” என்றாள் மெதுவாக.

அந்த வார்த்தை அந்த குரல் அது நித்தியாவை நிலை இழக்கச் செய்தது..

இந்தப் பெண் என்னை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறாள் என்று நித்யாவிற்கு புரிந்தது.

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. இது ஃபர்ஸ்ட் டைம் தானே.. அதுதான் கொஞ்சம் பயமா இருந்தது.. பட் இப்போ ஓகே ஆயிட்டேன். இனி இதெல்லாம் பழகித்தானே ஆகனும்..

“ம்ம் அவங்க.. பசங்க ஓகேவா பயந்துட்டாங்களா..” என்றாள் தவிப்புடன்.

“ம்ம்.. எல்லாம் சரியா போகும். சின்ன பிள்ளைங்கதானே பயந்தாங்க. இப்போ ஓகே..” என்றார் ஒரு பெருமூச்சுடன்.

“சரி நாளைக்கு பார்க்கலாம்.. டேக் கேர்” என அடுத்து எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டாள் அகானா.

நாளை நித்யாவிடம் என்ன என்ன பேச வேண்டும் என முடிவு செய்துவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தாள் அகானா.

இங்கு யோசனையாக அமர்ந்திருந்த மகளிடம் “என்ன நித்தி? யாரு போன்ல? மஞ்சரி பொண்ணா? என்றார் கேள்வியாக.

“ஹ்ம்ம் ஆமா ம்மா அவ தான்..” என்றவர் தான் நினைத்ததை கூறி “ரொம்ப நல்ல பொண்ணு ம்மா. எப்படி அருமையா வளர்த்திருக்காங்க பாருங்க மஞ்சரி அக்கா. அந்த இடத்துல நான் இருந்திருந்தால் கண்டிப்பா இந்த குடும்பத்தை உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பேன். மஞ்சரி அக்கா அப்படி எதுவும் செய்யல.. அதனாலதான் அகானாவுக்கு கோபம்.. அந்த கோபம் உள்ளுக்குள்ள தீ மாதிரி எரிஞ்சுகிட்டே இருக்கு. அந்த தீயை அனைக்க யாராலயும் முடியாது. கண்டிப்பா இந்த குடும்பத்தை அது ஒரு வழியாக்கும்..

“ம்ம் நீ என்னமோ சொல்ற? ஆனா அங்க நீயும்தான் இருக்க. பார்த்துக்கோ..”

“கண்டிப்பா எங்களையும் சும்மா விடமாட்டாதான்.. ஆனா மத்தவங்களை விட எங்களுக்கு கொஞ்சம் கருனை காட்டுவான்னு நினைக்கிறேன்..” என நித்யா சிரித்தாலும், அந்த சிரிப்பில் உயிர்ப்பே இல்லை.

அதே நேரம் துரைப்பாண்டியின் எதிரில் அமர்ந்திருந்தாள் மைதிலி. “எனக்கு இந்த வேலையை நீங்கதான் முடிச்சு கொடுக்கனும் அண்ணா. இதுக்கு என்ன செலவானாலும் பரவாயில்லை.. நீங்க காப்பாத்திக் கொடுத்த வாழ்க்கை. அதை நீங்கதான் சரி செஞ்சி கொடுக்கனும்..” என கேட்க, துரைப்பாண்டியின் முகமும் கோபமாகத்தான் இருந்தது.
 

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
74
18
8
Karur
வாவ்.. வாவ்.. மாஸ் எபி அகானா...
அகானாவோட ஒவ்வொரு வார்த்தையும் ஸ்லிப்பர்ஷார்தான்..
 
  • Like
Reactions: Vathani

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
165
111
43
Dindigul
Ravi unakku innum venumdaa.. Akaanaa pesinthula kettathula enna thappu irukku. ippo kooda nee manjariyai paththi oru vaarththai ketkalaiye. ava kaathalukku nee worth illadaa..
mythili unakku aen intha vendatha velai summa iruntha sinkaththa sorinju vidura. avale unnai oru vazi pannanumnu thaan kaaththuttu irukkaa. idhula aen koushik maadhiri kurukka maruka pora.. nallaa maattikkittu muli.
 
  • Like
Reactions: Vathani