• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. 22

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 22

இன்று காலை சரஸ்வதியும் ரஞ்சனியும் எதிர்த்துப் பேசியதை மைதிலியால் சாதாரணமாக கடந்து விட முடியவில்லை. வினோத்தும் சங்கரும் எப்போதுமே மைதிலிக்கு எதிராகத்தான் பேசுவார்கள், செய்வார்கள். அது அவளுக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.

ஆனால் தன் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசாத சரஸ்வதியும், ரஞ்சனியும் இன்று பேசியதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

தன் பிடி மெல்ல மெல்ல விலகுவது போல் அவளுக்கு தோன்றியது. இதை விட்டுப் பிடிப்போம் என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை.

விட்டால் பிடிக்க முடியாது என்று ஏற்கனவே ஒரு முறை அறிந்ததால், இந்த முறை அதற்கு வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்தவள் நேராக துரைப்பாண்டியன் முன் சென்றமர்ந்தாள்.

ரவீந்திரனை வைத்து தான் மைதிலி நல்ல பழக்கம் துரைப்பாண்டிக்கு. அனைத்து விசேஷத்திற்கும் மைதிலி உடன்தான் ரவி செல்வார். அப்படித்தான் அவர் பார்த்திருக்கிறார் ஆனால் உண்மையோ வேறு.

என்னதான் ரவியுடன் மைதிலி சென்றாலும், ரவீந்திரனின் மனைவி என்று யாரும் அவளை அடையாளப்படுத்த மாட்டார்கள். ரவீந்திரனின் இரண்டாவது மனைவி என்றுதான் அடையாளம் காட்டப்படுவார்.

ஏனென்றால் ரவீந்திரனின் குடும்பத்தில் மஞ்சரியைப் பற்றியும், அகானாவைப் பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருந்தது.

சரஸ்வதிக்கு பயந்து யாரும் பேசவில்லை என்றாலும் அவர்களின் மனதில் ரவீந்திரனின் மனைவி மகள் என்றால் அது மஞ்சரியும் அகானாவும் தான். அதை இப்போது வரையுமே மைதிலியால் மாற்ற முடியவில்லை.

ஆரம்பத்தில் மைதிலியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. போகப்போக அனைவரும் மறந்து விடுவார்கள் என்று தான் நினைத்திருந்தார்.

ஆனால் நித்யாவின் திருமணத்திற்கு பிறகும் கூட வந்தவர்கள் அனைவரும் மைதிலியை கவனிக்காமல், நித்தியாவிடம் மட்டுமே பேசி சென்றதை கவனித்து அதன் பிறகு தான், ரவீந்திரனோடு எங்கு சென்றாலும் ஒட்டிக்கொண்டு சென்றார்.

நான்தான் அவர் மனைவி! நான் மட்டும்தான் அவர் மனைவி என்று எல்லோரிடமும் சொல்லிக் கொள்ளும் ஒரு வேகம்.

அது ரவிக்கும் புரியத்தான் செய்தது. அதனால் மைதிலியை மறுக்காமல் அவர் செல்லும் இடத்திற்கு எல்லாம் அழைத்து சென்றார்.

குடும்ப விழாவிலிருந்து, பொது விழாவரை அனைத்திற்கும் ரவியுடன் ஒட்டிக்கொண்டே வருவார். அதனால் துரைப்பாண்டிக்கு மைதிலியைத் தெரியும்.

ஆனால் அவர்தான் இவர்களுக்கு பஞ்சாயத்து செய்தார் என்பதெல்லாம் ஞாபகம் இல்லை. அதை நினைவூட்டித்தான் பிரச்சினையை கூற ஆரம்பித்தார்.

“அன்னைக்கு அத்தனை தூரம் பேசி, கையெழுத்து போட்டு பணத்தையும் வங்கிட்டு, இன்னைக்கு எங்க முன்னாடி தைரியமா வந்து நிக்கிறா? அதை எப்படி என்னால பார்த்துட்டு சுமமா இருக்க முடியும்.. ‘என் அம்மா ஓடிப்போனவங்கன்னா, நீங்க யாரு ஒட்டிக்கிட்டவங்களான்னு’ கேட்குறா ண்ணா.. முளச்சு மூனு இலை விடல என்ன பேச்சு பேசுறா பாருங்கண்ணா.. இவளை எல்லாம் சும்மாவே விடக்கூடாது. இந்த தடவை சாதாரணமா அவளை இங்க இருந்து துரத்தக்கூடாது. எங்கிட்ட மோதினதுக்கு சரியான பாடம் கொடுத்துதான் அனுப்பனும்..” என எதிரில் இருந்தவரை பேச விடாமல் பேசிக்கொண்டே இருந்தார் மைதிலி.

“சரிம்மா.. இப்போ டாக்டரோட மனநிலை எப்படி? அவர் என்ன சொல்றார்.?”

“அவரோட முடிவுன்னு தனியா எதுவும் இல்லண்ணா, என் முடிவுதான் அவரோடதும். இல்லை பொண்ணு பாசம்னு போனா அவரையும் நான் சும்மா விடமாட்டேன்..”

“இத்தனை வருசம் உங்ககிட்ட சொன்ன மாதிரி அந்த பொண்ணு வரலியேமா? இப்போவும் கூட வேலை கிடைச்சுதானே வந்துருக்கு.. அதை எப்படி தப்புன்னு சொல்ல முடியும். கவர்ன்மென்ட் வேலை.. அவங்க சொல்ற மாதிரிதானே நடந்துக்க முடியும். இங்க ஏன் போஸ்டிங்க் போட்டீங்கன்னு கேட்க முடியுமா? அப்படி கேட்டா அந்த பொண்ணோட லைஃபே முடிஞ்சிடும்மா.. அப்போ அந்த பொண்ணு போட்ட உழைப்பு, கஷ்டம் எல்லாம் வீணாகிடுமே..”

“எனக்கு அதைப்பத்தி கொஞ்சமும் கவலை இல்லண்ணா.. என் வாழ்க்கை எனக்கு முக்கியம். அவளை இங்க இருந்து அனுப்பனும்.. அவ்ளோதான்..”

மைதிலியின் பேச்சைக் கேட்ட துரைப்பாண்டிக்கு கோபம் வந்துவிட்டது.

பல வருடங்களுக்கு முன் அவர்கள் பிரச்சினையை பஞ்சாயத்து செய்து முடித்த பிறகு, மஞ்சரியின் அக்கா கணவன் தாமோதரன் வந்து அவரிடம் பேசி மிகவும் வருந்தி சென்றது இப்போதும் ஞாபகத்தில் இருந்தது.

அப்போது துரைப்பாண்டியிடம் சில தரகு வேலைகளை செய்து கொண்டு தாமோதரன் அவருடன்தான் இருந்தார். தாமோதரனின் அரசு வேலை கூட துரைப்பாண்டி வாங்கிக் கொடுத்ததுதான்.

“எத்தனை நாளைக்கு இப்படியே எல்லாருக்கும் நீ பணத்தை வாங்கிக் கொடுத்து, வேலை வாங்கி கொடுக்குற ஏஜென்ட் வேலையை பார்ப்ப.. நீயும் கொஞ்சம் பணம் ரெடி பண்ணு, நான் வேலை வாங்கி கொடுக்குறேன்.. உனக்கும் நிரந்தரமான ஒரு வருமானம்.. கவர்ன்மென்ட் சம்பளம் வரும். ரெண்டு வருசத்துல கடனை கட்டிட்டா, அடுத்து உன் பொழப்பும் ஓடிரும்..” என கூறி தாமோதரனை மிரட்டித்தான் அந்த வேலையை வாங்கி கொடுத்திருந்தார்.

மஞ்சரியின் பஞ்சாயத்தின் போது தாமோதரன் வெளியூர் சென்றிருந்தார். அவர் இருந்திருந்தால் நிச்சயமாக துரைப்பாண்டி மஞ்சரிக்குத்தான் உதவி செய்திருப்பார்.

மஞ்சரி தாமோதரனின் உறவு என்றே அவருக்குத் தெரியாது.

இரண்டு நாட்கள் கழித்து தாமோதரன் வந்து இதற்காக பேசி வருந்தி கோபமாக சென்று, பல மாதங்கள் பேசாமலே இருந்தார்.

அதன்பிறகு துரைப்பாண்டி தாமோதரனை பார்த்தது, ஆக்சிடென்ட் ஆகி மதுரையில் இருந்த போதுதான்.

அதன்பிறகு தாமோதரன் வாழ்க்கையில் நடந்தது அனைத்தும் கொடுமையின் உச்சம். பலமுறை இவரே காவல்நிலையம் சென்று பேசி அழைத்து வந்திருக்கிறார்.

அகானாவின் மேல் அவருக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் அவருக்கு கலெக்டர் என்ற அகானாவின் மீது கோபம் கொழுந்து விட்டெரிந்தது.

‘பெண் பாவம் பொல்லாதது, வீட்டுப் பெண்களை அழ வைத்தால் அந்த குடும்பம், பாவத்தை சம்பாதிக்கும்’ என்ற கருத்தை அப்படியே நம்புபவர்..

அதனாலே தன் தொழிலில் பெண்களை எங்கேயும் இழுத்து விடமாட்டார். இப்போதும் அவருக்கு மஞ்சரிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான், அது தாமோதரனுக்காக.

துரைப்பாண்டி இப்படி யோசித்துக் கொண்டிருக்க, அந்த யோசனையின் நாயகனே அவர் முன் வந்தார்.

அவரைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே நெருங்கிய தாமோதரன், பக்கத்தில் மைதிலியைப் பார்த்ததும் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

“தாமு என்ன வந்துட்டு போற? இங்க வா.?” என துரைப்பாண்டி அதட்ட,

“ம்ச் போங்க ண்ணா.. அந்த சண்டாளியை வச்சிக்கிட்டு என்னை கூப்பிடுறீங்க.. இப்போ எதுக்கு இங்க வந்துருக்கா இந்த சூனியக்காரி.. எங்க மஞ்சுவை மறுபடியும் விரட்ட வந்துருக்காளா..?” என கோபமாக கேட்க,

“ஏய் குடிகார நாயே.. யாரைப் பார்த்து என்ன பேசுற? நீதாண்டா திருட்டு நாய்.. உன் குடும்பத்தை பார்த்து ஊரே சிரிக்குது.. நீ என்னை சண்டாளின்னு சொல்லுவியா? பணத்துக்காக புருசன வித்துட்டு போனவ ஒழுக்கமானவளா?” என மைதிலியும் பதிலுக்கு ஆங்காரமாக கத்த, சட்டென மைதிலியைப் பிடித்து கீழேத் தள்ளிவிட்டார் தாமோதரன்.

“யாரைப் பத்தி என்ன பேசுற? என் பொண்ணு என் மஞ்சரி.. அன்னைக்கு நான் இருந்திருக்கனும். உன்னையும் உன் மாமியாளையும் வகுந்துட்டு போயிருப்பேன்.. என் புள்ளைய ஊரவிட்டு ஓடவிட்டுட்டு நீ மட்டும் ஒழுங்கா அந்த பொட்டை கூட வாழ்ந்துட்டியோ.. ஒரு புள்ளய சுமக்க துப்பில்லாத நீயெல்லாம் என் பொண்ணை பேசக்கூடாது. இனி மஞ்சுக்கிட்டயோ, எங்க அம்முக்கிட்டயோ நெருங்கனும்னு நினைச்சா உன்னை உசுரோட கொழுத்திடுவேன். எனக்கு பயமே இல்லை. என்னை போலிஸ் அரெஸ்ட் பண்ணாலும், ஒன்னும் பண்ண முடியாது. மனநிலை சரியில்லன்னு செர்டிஃபிகேட் வச்சிருக்கேன். எடுத்து கோர்ட்ல கொடுத்தா, அப்படியே கொண்டு போய் ஒரு காப்பகத்துல விடுவாங்களே தவிர, தூக்குல போடமாட்டாங்க.. பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ, செய்யமாட்டேன்னு மட்டும் நினைக்காத.. என்னைப் பத்தி அண்ணன்கிட்ட கேளு..” என விழிகள் சிவந்து, கோபமாக பேச, கீழே விழுந்ததில் நெற்றியில் வழிந்த ரத்தத்தை துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் பயத்தில் அரண்டு போய் நின்றிருந்தாள் மைதிலி.

இத்தனையும் பார்த்துக் கொண்டு அமைதியாகத்தான் இருந்தார் துரைப்பாண்டி. இப்படியாவது தாமுவின் கோபம் குறையட்டும் என்று நினைத்தார். அதனாலே தடுக்க வந்த தன் ஆட்களுக்கும் வேண்டாம் என்று கண்ணசைத்தார்.

“விடு.. விடு தாமு.. அவங்க வேற ஒரு வேலையாத்தான் இங்க வந்துருக்காங்க.. நீ உள்ள போய் உட்கார். நான் வரேன்..” என தாமுவை அனுப்பிவிட்டு,

மைதிலியிடம் திரும்பி “இங்க பாருங்கம்மா.. உங்க பிரச்சினைக்கு நான் சீக்கிரம் ஒரு முடிவு எடுக்குறேன். அது வரை நீங்க இதைப்பத்தி பேச வேண்டாம். அப்புறம் தாமுவைப் பத்தி இப்படியெல்லாம் பேசாத. நான் இருக்கப் போய்தான் கீழத் தள்ளி விட்டதோட நிறுத்திட்டான். இல்லைன்னா அவன் சொன்னதை செஞ்சிருப்பான். பார்த்து கொஞ்சம் கவனமா இருங்க..” எனவும்,

“அண்ணா அந்த குடிகாரனுக்காக நீங்க பேசுறதை என்னால தாங்க முடியலண்ணா. அவன் எவ்ளோ திமிரா பேசுறான் பார்த்தீங்களா..” என மீண்டும் கொந்தளிக்க,

“போதும் ம்மா… நீங்க கிளம்புங்க.. நான் அப்புறம் பேசுறேன்..” என துரைப்பாண்டி உள்ளே சென்றுவிட, மைதிலிக்கு எரிச்சலாக வந்தது.

ஆனாலும் மைதிலியால் துரைப்பாண்டியை பகைத்துக் கொள்ள முடியாது. அவரால் மட்டும் தான் இப்போது மைதிலிக்கு உதவ முடியும் என்பதால் அமைதியாக கிளம்பிவிட்டார்.

இங்கு உள்ளே வந்த துரைப்பாண்டி தாமுவைப் பார்த்து “எத்தன நாளாச்சு நீ குளிச்சு..” என்றார் கோபமாக.

“தெரிலண்ணா..” என சிரிக்க,

“ஏன்டா இப்படி இருக்க? உன் சம்சாரம் பாவம்டா.. இன்னும் எத்தன நாளைக்கு அந்த புள்ள கஷ்டப்படும் சொல்லு, உன் மகனும் உன்னை நினச்சு கல்யாணமே வேண்டாம்னு சுத்துறான். என்ன தாண்டா பிரச்சினை..” என ஆதங்கமாக கேட்க,

“ம்ச் அண்ணா அதெல்லாம் விடுங்க.. இந்த வேசத்துல இருக்கும் போதுதான் உண்மையான உறவுகளை பார்க்க முடிஞ்சது.. என் பொண்டாட்டிக்கு என்னண்ணா? என் பசங்க தலையெடுத்துட்டாங்க. அவளை ராணி மாதிரி பார்த்துப்பாங்க..” என்றார் தாமோதரனும்.

“டேய் தாமு.. நீ மறுபடியும் எங்கிட்டயே இருடா.. இப்படி தோட்டம் தோட்டமா போய் மோட்டாரையும் பம்பு செட்டையும் திருடி, அது ஒரு பிரச்சினை ஆகுறது நல்லாவா இருக்கு..” என்றார் வருத்தமாக.

“இப்போ எல்லாம் அதிகமா போறது இல்லண்ணா.. வயசாகிடுச்சு பாருங்க. அப்புறம் அம்மு இருக்கால்ல அவளும் என்னை அடிக்சன் சென்டர்ல விடுறதுக்கு அவங்க அண்ணங்கிட்ட சொல்லிருக்கா போல. அப்படி கொண்டு போய் விட்டா போலாம்னு இருக்கேன் ண்ணா… அப்படியே இனி நான் நல்லாகிட்டேன்னு சொல்லிக்கலாம். என் மகன் வேலைக்கும் பிரச்சினை இருக்காதுல்ல..” என சிரிக்க,

கொஞ்சமும் யோசிக்காமல் தாமோதரனைக் கட்டிக் கொண்டார் துரைப்பாண்டி. அவரின் இந்த வேசம் தன் மகனுக்காக என்று அவருக்கு மட்டும்தானே தெரியும்.

சில வருடங்களுக்கு முன்பு தாமோதரன் மாத்திரைகளின் உதவியால் சற்று சரியாகிவந்தார். அப்போது தாமுவின் பங்காளி ஒருவன், அவர் வளர்ச்சியில் பொறாமை கொண்டு மதுப்பழக்கத்தை பழக்கி விட்டுவிட்டார்.

மாத்திரைகளும் எடுத்து, மதுவும் எடுத்து என தாமோதரன் உயிருக்கு போராடிய நாட்களும் உண்டு. குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிறகு மாத்திரைகள் எடுப்பதை விட்டுவிட, அது அவரின் மனநிலையை பெரிதும் பாதித்து, இனி இவர் சரியாக மாட்டார் என டாக்டர்களும் கைவிரித்து விட்டனர்.

அதன் பிறகான நாட்கள் தாமோதரனின் குடும்பத்திற்கு மிகவும் மோசமான காலம். வேலைக்கு என வாங்கிய கடன் ஒருபக்கம், மருத்துவ செலவிற்கு என வாங்கிய கடன் ஒருபக்கம், மூன்று பிள்ளைகளின் படிப்பு ஒரு பக்கம் என கவிதா மிகவும் ஒடுங்கிப் போனார்.

பின் துரைப்பாண்டியும், கவிதாவின் உடன் பிறந்தவர்களும் உதவவும்தான் கொஞ்சமே தெளிந்து வாழ்க்கையின் ஓட்டத்தில் தன்னை புகுத்திக் கொண்டார் கவிதா.

இப்போது மூன்று வருடங்களுக்கு முன்புதான் தாமுவின் வேலையை நவீனுக்கு மாற்றிக் கொடுக்க சிபாரிசு செய்து, அந்த வேலையையும் முடித்திக் கொடுத்திருந்தார் துரைப் பாண்டி.

நவீனுக்கு வேலை கிடைத்த சில மாதங்களிலேயே தாமோதரனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் புரிந்து, நரம்பு மண்டலம் செயல்படத் தொடங்கியது.

அது தெரிந்து உடனே வீட்டில் தெரியப்படுத்தவில்லை தாமு. வீட்டில் உள்ளவர்களை ஆராய்ந்தார். மனைவி, பிள்ளைகளின் அன்றாட செயல்களை, அவர்களின் கஷ்டங்களை கவனித்தார். அப்படித்தான் மகனுக்கு தன் வேலை கிடைத்தது தெரியவர, இந்த நேரம் தான் சரியாகிவிட்டோம் என தெரிந்தால் நவீனின் வேலைக்கு பிரச்சினை ஆகும், என அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் துரைப்பண்டியிடம் மட்டும் சொல்லியிருந்தார். அவர் எப்படி கேட்டும் ஒத்துக்கொள்ளவே இல்லை தாமு. வீட்டில் சொன்னால் யாருக்கும் தெரியாமல், எங்கேயாவது போய்விடுவேன் என மிரட்டிவிட, அதன்பிறகு துரைப்பாண்டியும் எதுவும் பேசவில்லை.

ஆனால் முடிந்தளவு தன்னோடே வைத்துக் கொள்வார்.

“என்னண்ணா.. அந்த பொம்பள எதுக்கு வந்தா? மறுபடியும் மஞ்சுவை விரட்ட சொல்லி கேட்க வந்தாளா?” என்றார் தாமோதரன் கோபமாக.

“எதுக்கு வந்தாங்கன்னு சொல்றதுக்குள்ளத்தான் நீ விரட்டி விட்டுட்டியே.. இன்னொரு நாள் வந்து சொல்லும். அப்போ சொல்றேன்.. இப்போ நீ சொல்லு.. உங்க கலெக்டர் மேடம் நம்மளை ரொம்ப சீண்டுறாங்களே. என்ன பண்ணலாம்..?” என கேட்க, தாமோதரனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து போனது.