• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ. ஆ - 24

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 24

“என்னால அவங்களை எல்லாம் பார்த்து சாதாரணமா பேச முடியும்னு தோணல ஆரி..” என்ற அகானாவின் குரலில் இருந்த வலி ஆரியனுக்கு புரியாமல் இல்லை.

ஆனால் இதெல்லாம் அவள் பார்க்கத்தானே வேண்டும். அவர்களிடம் பேசத்தானே வேண்டும். எத்தனை நாட்களுக்கு தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வது.

“என்ன அகிம்மா.. ஏன் இவ்ளோ டவுனா ஃபீலாகுற.. சீனியரை பார்த்தே நீ ஃபீல் ஆகல. இவங்க எல்லாம் உனக்கு ஜஸ்ட் உன் ரிலேடிவ்ஸ்.. நார்மலா பேசிட்டு விடு.. அப்போ இருந்த மாதிரியே இப்பவும் இருப்பாங்கன்னு இல்லையேடா.. அவங்களும் மாறி இருக்கலாம். கண்டிப்பா மஞ்சும்மா வருத்தப்படுற மாதிரி எதுவும் நடக்காது. அம்மா ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. அவங்களே எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணுவாங்க. அதை நினைக்காத. அவங்களை ஃப்ரீயா விடு..”

“இதுவரைக்கு நான் அப்படி இல்லையே. என்னமோ இங்க வந்த பிறகு ரொம்ப பயமா இருக்கு. அம்மா எல்லாமே சமாளிப்பாங்கன்னு எனக்கும் தெரியும் ஆரி. ஆனா ஃபேமிலி, ரிலேடிவ்ஸ்ன்னு வரும் போது கண்டிப்பா விட்டுக்கொடுத்து போகனும்னு தான் நினைப்பாங்க. அப்படி அவங்க பேசி, அம்மா கேட்டுட்டு நின்னா என்னால அமைதியா இருக்க முடியும்னூ தோணல..”

“அகி… அவங்க அம்மாவோட பேரண்ட்ஸ் அன்ட் ப்ரதர்ஸ், அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. பேசவோ, சண்டை போடவோ அவங்களுக்கு உரிமை இருக்கு. அதை தடுக்குற உரிமை உனக்கும் இல்ல, எனக்கும் இல்ல. நீ இதுல ஃப்ரீ மைன்டேடா இருடா.. அவங்களே பேசி, அவங்களே ஒரு முடிவுக்கு வரட்டும். அது மட்டும் தான் இதுக்கு தீர்வு. நீ நார்மலா அவங்களோட இரு..”

“ம்ம் எனக்கும் எல்லாம் புரியுது ஆரி.. ஆனா மூளை சொல்றதை மனசு ஏத்துக்க மாட்டேங்குது.. வாட் டு டூ? ஹ்ம்ம்.. பட் முயற்சி செய்றேன்..”

“ம்ம் இஸ் தட் மை கேர்ள்… ஓக்கே.. அந்த பொண்ணை பார்க்க நீ எப்போ வர அகி.. நாளைக்கு ஈவ்னிங்க் வரை ஒன்னும் பிரச்சினை இல்லை. அதுக்குள்ள நீ அந்த நித்யா மேடம்கிட்ட பேசிடு..”

“யெஸ் ஆரி.. நான் நாளைக்கு ஈவ்னிங்க் ஆஃபிஸ்ல இருந்து அப்படியே வந்துடுறேன்.. அதுக்குள்ள உங்க சீனியர் எந்த பிரச்சினையும் பண்ணாம இருக்கனும். அன்ட் அந்த மணல் திருட்டு கேஸ்ல இன்வால்வ் ஆன துரைப்பாண்டியன் இவங்க ஃபேமிலிக்கு ரொம்ப க்ளோஸ் போல.. அநேகமா அவர வச்சு மூவ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்..”

“ம்ம் சீனியர் யோசிச்சாலும், அவரோட அப்பா அந்தளவுக்கு போகமாட்டார்னு எனக்குத் தோணுது. கண்டிப்பா மகிழினி உங்கிட்டத்தான் இருக்கான்னு அவருக்கும் தெரிஞ்சிருக்கும். சோ துரைப்பாண்டியன்கிட்ட போக வாய்ப்பில்ல..”

“உங்க சீனியர் போன வேகத்துக்கு, இன்னேரம் துரைப்பாண்டியன் முன்னாடிதான் உட்காந்திருப்பார்..” என்ற நேரம் அகானாவின் குவார்ட்டஸ் வந்துவிட, “ஓக்கே அகி.. நிதானாம பேசு.. டென்சன் இருக்கக்கூடாது. நான் இப்படியே கிளம்பறேன். அந்த பொண்ணு தனியா இருக்கும்..” என ஆரியன் அப்படியே கிளம்பிவிட, ஒரு பெருமூச்சு விட்டு மனதை சமன் செய்து உள்ளே நுழைந்தாள் அகானா.

ஹாலில் பாட்டி தாத்தா மற்றும் இரண்டு மாமன்மாரும் அமர்ந்திருக்க, மற்றவர்கள் உள்ளே இருப்பார்கள் போல, அவள் உள்ளே நுழைந்த நேரம், கண்ணன் அவளுடைய கோப்புகள் அடங்கிய பெட்டியை கொண்டு வந்து கொடுக்க, “தேங்க்ஸ் அங்கிள்.. இனி மார்னிங்க் வந்தா போதும். வெளிய போற வேலை இல்லை. அப்படியே இருந்தாலும் என்னோட கார் யூஸ் பண்ணிக்கிறேன். செக்கியூரிடி இருக்காங்கள்ல நான் மேனேஜ் பண்ணிப்பேன்..” என புன்னகை முகமாக விடை கொடுக்க, அவரும் ஒரு சல்யூட்டுடன் விடைபெற்று கிளம்பிவிட்டார்.

ஹாலில் இருந்தவர்கள் அந்த நிகழ்வைத்தான் கண்ணெடுக்காமால் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அகானாவின் நிமிர்வு, கூர்மையான பார்வை, முக்கியமாக அந்த முகவெட்டு, அதிலும் அந்த நீள் கூந்தல் அது அப்படியே ரஞ்சனியை நினைவு படுத்தியது.

பாட்டி கண்களில் நீர் வழிய பார்த்துக் கொண்டிருக்க, அகானாவின் சிறிய மாமா சரவணன்தான் எழுந்து வந்து “வா பாப்பா..” என அனைத்துக் கொண்டார்.

தாத்தாவும், பெரிய மாமா கனேசனும் சிரிப்புடன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதற்குள் உள்ளிருந்து பெண்கள் அனைவருமே வந்துவிட்டனர்.

கனேசனின் மனைவி சித்ரா, சரவணனின் மனைவி பிரியா, கவிதா, மஞ்சரி, காயத்ரி என அனைவருமே அகானாவை சுற்றிக்கொள்ள நெளிய ஆரம்பித்துவிட்டாள்.

“ஹேய் விடுங்க புள்ளைங்களா.. பாப்பா போய் குளிச்சிட்டு வரட்டும். முதல்ல சாப்பிட கொடுங்க. பாரு எவ்ளோ களைப்பா வந்துருக்குன்னு..” என அவளின் பாட்டி சத்தம் போட,

காயத்ரிதான் “வா பாப்பா.. இன்னைக்கு உங்க பெரியம்மா சமையல்தான். நல்லா ஒரு பிடி பிடிக்கலாம்..” என அழைக்க,

எல்லாரையும் பார்த்து சிரித்தபடியே “நிஜமாவே ரொம்ப டயர்ட்.. நான் ஃப்ரெஸ் ஆகிட்டு வந்துடுறேன்..” என அறைக்கு சென்றாள்.

அவளுக்கு பின்னே வந்த மஞ்சரியிடம், “ம்மா ஐம் ஓக்கே.. நீங்க அவங்களை பாருங்க.. நான் டென் மினிட்ஸ்ல வந்துடுவேன்..” எனவும்,

“ஹான் சரி அம்மு.. ஆனா நீ எதுவும் அவங்க்ளை பேசிட மாட்டியே.. ஏற்கனவே காயு வேற ரொம்ப பேசிட்டா. நீயும் பேசினா வருத்தப்படுவாங்க.. அதான்..” என்றார் மகளின் கோபம் உணர்ந்து..

“ம்மா.. எனக்கு கோபமெல்லாம் இல்லன்னு சொல்லமாட்டேன். ஆனா அதை நம்ம வீட்டுக்கு வந்தவங்ககிட்ட காட்டுற அளவுக்கு நான் மேனர்ஸ் தெரியாதவ இல்லை.. நீங்க இதையே யோசிக்காதீங்க. நான் நார்மலா இருக்கேன்.. அவங்களை எதுவும் பேசல.. ஓக்கே..” என வெகுவாக சமாதானம் செய்துதான் அனுப்பி வைத்தாள் அகானா.

அறைக்குள் வந்தவள் அப்படியே பெட்டில் விழுந்தாள். இந்த உணர்வை ஜீரணிக்க சற்று அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு.

“கூல் கூல் அகி.. நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.. உன்னால இதையெல்லா ஈசியா டேகில் பண்ணிக்க முடியும். நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. அவங்க ஒன்னும் உன்னோட எதிரிங்க இல்ல. நார்மலா இரு.. நார்மலா பேசு. ரெண்டு நாள் இருந்துட்டு போயிடுவாங்க. அதுக்கு ஏன் நீ உன்னையே இவ்ளோ வருத்திக்கிற, உன்னையும் உன் அம்மாவையும் ஓட ஓட விரட்டின அந்த குடும்பத்தையே நேருக்கு நேர் பார்த்து டீல் பண்றவ நீ.. இவங்க பாசத்துக்கு அடிமையானவங்க.. இவங்களை சமாளிக்கிறது உனக்கு பெரிய வேலையா? அகனாவுக்கு ஒரு வேலை கஷ்டமா இருக்குமா? அதை இந்த உலகம் நம்புமா? சியர் அப் கேர்ள்.. நீ இப்படி இருக்கிறதை பார்த்தாலே அம்மா டவுன் ஆகிடுவாங்க. கமான்.. ப்ரிஸ்கா எழுந்து ரெஃப்ரெஸ் ஆகிட்டு அவங்ககிட்ட போ..” என அவளின் மனசாட்சி உசுப்ப, அகானாவும் எழுந்து தலையை சிலுப்பி, அனைத்து சோர்வையும் விரட்டி குளியலறைக்குள் நுழைந்தாள்.

இங்கு தாமோதரன் அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான். பின் “ண்ணா..” என சிரிக்க..

“டேய் என்ன சிரிக்கிற.. என்னைப் பத்தி உனக்கே தெரியும். என்னை எதிர்க்கிறவங்களை சும்மா விடமாட்டேன்.. இதுல உன் பொண்ணு என் கண்ணுல விரலை விட்டு ஆட்டுறா.. பார்த்துட்டு சும்மா இருப்பேனா?” என துரைப்பாண்டியன் கேட்க,

“ண்ணா.. உங்களைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியும். பொண்ணுங்க மேல கை வைக்க மாட்டீங்க. அதுலயும் நேர்மையான அதிகாரிகள் கிட்ட நீங்க வம்பே வச்சிக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியாதா? அதுலயும் சாதிக்க துடிக்கிற சின்ன வயசு அதிகாரிகளை கூப்பிட்டு வச்சு பாராட்டவும் செய்வீங்க..” என சிரிக்க,

“அதெல்லாம் முன்னால தாமு. இப்போ நாம பினாமி மட்டும்தான். அவன் என்ன சொல்றானோ அதை செஞ்சிட்டு போயிடனும். நியாயம் தர்மம் பேசிட்டு இருந்தா, ஆளை மாத்திட்டு போயிடுவாங்க.. அப்புறம் இத்தனை வருசம் மீசையை முறுக்கிட்டு திரிஞ்சதுல அர்த்தமே இல்லாம போயிடும்..” என்றார் துரைப்பாண்டி.

“இப்போ என்ன ண்ணா பண்றது? நீங்க எதுவும் செய்ய முடியாதா?” என்ற தாமோதரன் கவலையாக கேட்க,

“என்னால என்ன முடியுமோ அதை செய்வேன்டா.. அதுவும் உனக்காக.. ஆனா என்னை மீறி போனா, என்னால எதுவும் செய்ய முடியாது. நம்மகிட்டயே அவனுங்க ஆள் செட் பண்ணி வச்சிருக்காங்க. யாருன்னு கூட கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருக்கும் போது வெளிய தெரியாமதான் எல்லாம் செய்யனும்..” என்றவர், “என்னோட இந்த தொழில் முடிஞ்சிடனும்னுதான் என் புள்ளைங்களை நல்லா படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினேன். கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு. அது எனக்கும் பொருந்தும் தாமு.. என் சாவு எப்படி வேணும்னாலும் நடக்கும். என்னோட பிரச்சினை என் பிள்ளைங்களை தொடரக்கூடாது. அதனாலத்தான் அவங்க எல்லாரையும் அமெரிக்கா அனுப்பிட்டேன்..” என்றார் துரைப்பாண்டி.

“சரி ண்ணா.. நானும் அம்முக்கிட்ட பேசி பார்க்குறேன். ஆனா கண்டிப்பா கோபம் வரும்.. நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு டென்சன் ஆவா..” என சிரிக்க,

“நான் இன்னும் பார்க்கல தாமு.. ஆனா கேள்விப்பட்ட வரை ரொம்ப நேர்மையும், கண்டிப்புமான அதிகாரின்னுதான் சொன்னாங்க. அந்த ரோட்டோரமெல்லாம் ஆக்கிரமிப்பு பண்ணிருந்த கடைகளை எல்லாம் ஒரே நாள்ல இடிச்சி தள்ளிடுச்சாமில்ல. அதுவும் அவங்க ஸ்டே வாங்கக்கூட டைம் கொடுக்கலனு நம்ம வேலன் ஹோட்டல் ஓனர் சொன்னார். இந்த துடிப்பு, ஒரு பெண் அதிகாரிகிட்ட எதிர்பார்க்கல..” என சிரிக்க,

“ம்ம் அண்ணா.. அவ கடந்து வந்த பாதை சாதாரணமானது இல்லண்ணா. மஞ்சு எங்க எப்படி கஷ்டப்படுறாளோன்னு நானும் என் சம்சாரமும் புலம்பாத நாளே இல்ல. இன்னைக்கு தனி ஒரு மனுஷியா இந்தளவுக்கு பொண்ணை படிக்க வச்சு, அரசு அதிகாரியாக்கிருக்கான்னா, சாதாரணம் இல்லையே ண்ணா.. அப்புறம் அம்மு டாக்டராம். டாக்டருக்கு படிச்சிட்டு தான் கலெக்டர்க்கு படிச்சாளாம்..” என தாமோதரன் பெருமையாக கூற, துரைப்பாண்டிக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.

“ம்ம் என்ன தாமு சொல்ற?” என்றவரிடம்,

“ம்ம் ஆமா ண்ணா.. அவங்க அப்பனை போல அம்முவும் டாக்டருக்குதான் படிச்சிருக்கா. ஆனா மஞ்சுதான் கலெக்டருக்கு படிக்கனும் சொல்லவும், உடனே சரின்னு படிச்சாளாம்..” என்றார் தாமோதரன்.

“எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு தாமு. இன்னைக்கு காலகட்டத்துல பொம்பளங்க தனியா இருந்து, வாழ்ந்து புள்ளைங்களையும் படிக்க வச்சு ஒரு நிலைமைக்கு வரது சாதாரணம் இல்ல தாமு. உன் கொழுந்தியா இரும்பு மனுஷிப்பா.. அந்த பொண்ணு கஷ்டதுக்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன். எப்பவாவது பார்த்தா மன்னிப்பு கேட்கனும்..” என்று தான் பெரிய மனிதர் என நிரூபித்தார் துரைப்பாண்டி.

அடுத்தநாள் காலை செய்தித்தாளில் “சொந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுகிறாரா மாவட்ட ஆட்சியர்..” என தலைப்புச் செய்தி வந்திருக்க, கொதித்துப் போனாள் அகானா.