அகானா- 27
“மேம்..” என்ற ஒரு பத்திரிக்கையாளரின் பேச்சில் அவரைப் பார்த்த அகானா “ஸோ… உங்களுக்கு இந்த கேள்விகளும், அதுக்கு நான் கொடுக்குற பதில்களும் தான் முக்கியம்.. ரைட்..” என நிறுத்த,
மீடியா கூட்டத்தின் முகத்தில் பெரும் குழப்பம்.. “மேம் அதுக்காக தான் வந்திருக்கோம். அவங்க சொன்னது உண்மையா இல்லையான்னு கண்டுபிடிச்சு சொல்றதுதான பத்திரிக்கை தர்மம்..” என ஒருவர் வர,
“ரியல்லி… இதுதான் உங்க பத்திரிக்கை தர்மம்னு எனக்குத் தெரியாம போச்சே..” என நிறுத்தியவள், “நான் இங்க வந்து டூ மன்த்ஸ் ஆச்சு.. இதுவரை தர்டி சிக்ஸ் கேஸ் முடிச்சிருக்கேன். அதுல முக்கிய தலைகளோட தலையீடுகள் அதிகம். அந்த கேஸ்னால எனக்கு வந்த கொலை மிரட்டல்கள் அதிகம்.. அப்போ எல்லாம் உங்க பத்திரிக்கை தர்மம் எங்க போச்சுன்னு தெரியலையே..” என கிண்டலாக கேட்க,
“மேம்.. நீங்க பேசுறதை கேட்கும் போது எங்களை திசை திருப்புற மாதிரி இருக்கு. அப்படின்னா மிசஸ் மைதிலி சொல்றது உண்மையா இருக்கும்னு எங்களுக்கு டவுட் வருது..” என ஒரு பெண் சொல்ல,
அவளையே ஒரு நொடி கூர்மையாக பார்த்தவள், “ஓக்கே உங்க கொஸ்டீன் என்ன.?” என அந்தப் பெண்ணை பார்த்தே கேட்க,
“அது.. அது மேம்..” என அகானாவின் பார்வையில் திணறிய பெண் பத்திரிக்கையாளர் “மைதிலி மேம் உங்க மேல வச்ச குற்றச்சாட்டு..” என நிறுத்த, அகானாவோ திரும்பி கண்ணனைப் பார்த்தாள்.
அவர் வேகமாக தன் கையிலிருந்த ஃபைலை நீட்ட, அதை வாங்கிய அகானா “என்னோட ஹையர்ல இருந்து ரெய்டு பண்ண சொல்லி எனக்கு வந்த அப்ரூவல் லெட்டர்.. அன்ட் இது ஒரு பேசன்ட் RM ஹாஸ்பிடல் மேல, SP ஆஃபிஸ்ல கொடுத்த கம்ப்லைன்ட் காபி.. என்னோட ஹையர் எனக்கு கொடுத்த வேலையை நான் செஞ்சிருக்கேன். இதுல எங்க என்னோட பழிவாங்கல் செய்கை இருக்கு..” என புருவத்தை உயர்த்தி நிதானமாக கேட்க,
“அப்போ மைதிலி மேம் ஏன் சொல்லனும்.?” என மற்றொருவர் கேட்க,
“லுக் கைஸ்.. இதை நீங்க அவங்ககிட்ட தான் கேட்கனும். நான் இங்க வந்தது என்னோட வேலையைப் பார்க்க.. அடை செய்ய விடுங்க போதும். நாங்க மறக்க நினைக்கிற ஃபாஸ்டை, நீங்க நினைக்க வைக்கிறீங்க. என்னையும், என் அம்மாவையும் பார்த்து மறுபடியும் அவங்க வாழ்க்கையிலே வந்துடுவோம்னு பயப்படுறாங்களோ என்னமோ..? சோ நீங்க இந்த கேள்விகளுக்கான பதிலை அவங்ககிட்டத்தான் கேட்கனும்.” என சிரித்தபடியே கூறியவளின் முகம் நொடியில் கோபத்தில் சிவக்க,
“அது எப்போதும் நடக்காது. எந்த சூழ்நிலையிலும் அவங்க முன்னாடி போய் என் அம்மாவோ நானோ நிற்கமாட்டோம்..” என்றவள், “ப்ளீஸ் என் பெர்சனல் லைஃபை பேசுறதுக்காக, இனி யாரும் உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க. நான் அதை சொல்ற மூட்ல இல்லை. இப்போ மட்டும் இல்ல.. எப்போவுமே..” என்றதும், வந்திருந்தவர்களுக்கு, அடுத்து என்ன கேட்பது என்றே தெரியவில்லை.
அனைவரும் அமைதியாகவே இருக்க, “உங்களுக்கு கொடுக்க எங்கிட்ட ரெண்டு நியூஸ் இருக்கு. உங்களுக்கு டைம் இருந்தா, அதைபத்தி இன்வெஸ்டிகேட் செஞ்சி, உங்க நியூஸ் பேப்பர்ல போட்டுக்கோங்க..” என்றதும், அனைவரின் முகமும் தெளிந்தது.
“குழந்தை திருமணம் இன்னும் சில ஊர்கள்ல நடக்குது. நேத்து நானே அதைப்பத்தி பேசிட்டு வந்துருக்கேன். அப்புறம் டாஸ்மார்க்ல குறைஞ்ச விலையில் வாங்கி, ஊருக்குள்ள அதிக விலைக்கு விக்கிறாங்க. அதோட ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்க்கு இதை பழக்கி விடுறாங்க. இதையெல்லாம் ஏன் நீங்க எழுதுறது இல்ல. மணற்கொள்ளை மிக முக்கியமான ஒன்னு. அதையும் நீங்க பேசுறது இல்ல. ஆனா யார் வீட்டுல என்ன பிரச்சினை நடக்குது. யார் பெட்ரூம்ல யார் இருக்காங்கன்னு டீடைலா எழுதுறீங்க.. இதெல்லாம் தான் உங்க பத்திரிக்கை தர்மம்னு எனக்கு தெரியாம போயிடுச்சு..” என்றவளின் குரலில் இருந்த கோபத்தை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு சேனலும் ப்ரேக்கிங்க் நியூஸ், ஃப்ளாஷ் நியூஸ் என தங்களின் TRPக்காக எந்தளவிற்கு தரம் இறங்கிப் போகிறார்கள் என அவர்களுக்குமே புரியத்தானே செய்கிறது.
“ஓக்கே உங்க கொஸ்டீன் முடிஞ்சதுன்னா, நான் கிளம்புறேன்..” எனவும், “மேம்..” என்ற ஒரு பெண் “அப்போ மைதிலி மேம் சொன்னது பொய்ன்னு சொல்றீங்களா.?” என மேலும் கேட்க,
“இந்த கேள்விக்கு நான் ஆல்ரெடி பதில் சொல்லிட்டேன்.. இதை நீங்க அவங்ககிட்டத்தான் கேட்கனும், அன்ட் இது பொய்யான செய்தின்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும். அதுக்கான எவிடென்ஸ் எங்கிட்ட இருக்கு. பட் அவங்க சொல்றது உண்மையா இருக்கும் பச்சத்தில், என் கையர் என் மேல என்கொய்ரி வச்சு, அதுக்கான நியூஸை அஃபிசியலா உங்களுக்கு கொடுப்பாங்க. அப்போ தெரிஞ்சிக்கலாம். அன்ட்..” என நிறுத்தியவள் மிக நிதானமாக கேமாரவைப் பார்த்து “அவங்க கொடுத்த நியூஸ் பொய்யா இருந்தா, என் பக்கம் இருந்து மிசஸ் மைதிலி ரவீந்திரன் மேல மானநஷ்ட வழக்கு போடப்படும்.. தேங்க்யூ ப்ரண்ட்ஸ்..” என்றவள் கிளம்பி சென்றுவிட்டாள்.
வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த நியூஸை எப்படி எக்ஸ்கியூட் செய்வது என நொந்து போயினர்.
“சின்ன பொண்ணா இருக்கே, எப்படியும் எதையாவது உளறி மாட்டிக்கும்னு நினைச்சா, அவங்க நம்மளையே திகைக்க வச்சிட்டு போயிட்டாங்க..” என ஒருவர் பேச,
“ம்ம்ம்.. ஆக்சுவல்லா இந்த RM ஹாஸ்பிடல் பத்தி முன்னாடி இருந்தே நியூஸ் வந்துட்டுதான் இருந்தது. பணத்தைக் கொடுத்து சரி பண்ணிருப்பாங்க. இப்போ இந்த மேடம்கிட்டயும் ட்ரை பண்ணிருக்கலாம். அவங்க ஒத்துப்போகாம ரெயிட்க்கு ஆர்டர் கொடுத்துருக்கலாம். அந்த கோபத்துல கூட மைதிலி மேடம் நியூஸ் கொடுத்துருக்கலாம்..” என ஆளாளுக்கு ஒன்று பேச, அகானாவும் இதைத்தானே எதிர்பார்த்தாள். சிரிப்புடன் அவர்களைக் கடந்து சென்றுவிட்டாள்.
காரில் ஏறியதுமே ஆரயனிடமிருந்து போன் வந்தது அகானாவிற்கு. உடனே ஆர்யனிடம் இன்று வருவதாக கூறியிருந்தது நியாபகம் வர, கண்ணனிடம் அங்கு செல்ல கூறிவிட்டு “ஆரி நான் வந்துட்டு தான் இருக்கேன்..” என்றதும்,
“ம்ம் ஓக்கே..” என்ற ஆரியனின் குரலில் இருந்த அமைதி அகானாவை யோசிக்க வைத்தது.
அவள் அந்த வீட்டிற்குள் நுழைந்ததுமே “அகி அந்த பொண்ணு ஒன்னுமே சாப்பிடல.. நான் எவ்வளவோ சொல்லிட்டேன் கேட்கல, அழுதுட்டே இருக்கா. அவ எடுத்துக்குற ட்ரக்ஸ்க்கு இப்படி சாப்பிடாம இருக்குறது சரியில்ல..” என வருத்தமாகச் சொன்ன ஆர்யனை புரியாமல் பார்த்தாள் அகானா.
“டூ டேஸா எதுவும் எடுத்துக்கல.. நாம வேற ட்ரக்ஸ் கொடுத்துட்டே இருக்கோம்..” என இழுத்தவனிடம், “தென்..” எனக் கோபமாகக் கேட்க,
“நத்திங்க்..” என்றவன் அந்த அறையிலிருந்து வெளியேற போக,
“ஆரி உன்னோட ப்ளான்ல எதுவும் சேஞ்சஸ் இருக்கா.. ஐ மீன் உன் மேரேஜ் ப்ளான்ல..” என்றவளிடம்,
“லூசு மாதிரி உளறக்கூடாது. உனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துடக்கூடாதுன்னு நினைக்கிறேன். இங்க வந்ததுல இருந்து ஏகப்பட்ட பிரச்சினை. இந்த பொண்ணை வச்சும் ஒரு பிரச்சினை வந்துடக்கூடாதுனு நினைக்கிறேன். ஒரு அண்ணனா அந்தக் கவலைக் கூட எனக்கு இருக்கக்கூடாதா.?” என எரிச்சலில் கத்தியவன் பட்டென்று வெளியேறிவிட, அகானாவின் கண்களில் நீர் திரண்டது.
ஆர்யனின் கோபம் உண்மைதானே.. அதனால் தன் திட்டத்தை மாற்றி, ஒரு பெருமூச்சோடு மகிழினி இருந்த அறைக்குள் நுழைந்தாள் அகானா.
அதுவரை அழுது கொண்டிருந்த மகிழினி அகானாவைப் பார்த்ததும், முதலில் புரியாமல் பார்த்து பின் தெரிந்து, அதிர்ந்து வேகமாக எழுந்து நின்றாள்.
அவள் உதடுகளோ ‘அகானா.. அம்மு’ என உச்சரிக்க, அவளுக்கு முன் நிதானமான நடையுடன் வந்து நின்றாள் அகானா.
“நீ.. நீங்க அகானா இல்ல அம்முதான..” என மகிழினி திக்க,
“ம்ம்.. நீ.. நீங்க என்ன நினைக்கிறீங்க.?” என கேட்டபடியே எதிரில் இருந்த சேரில் அமர,
“ஹான்.. ஆமாதான்.. நீங்க அகானாதான்.. ஆனா இங்க எப்படி? நான் எப்படி..?” என குழம்பியபடியே நெற்றியைத் தேய்க்க,
அப்போது மூவருக்கும் காபியுடன் வந்தான் ஆர்யன்.
“இப்போ உங்களால அதிகம் யோசிக்க முடியாது. முதல்ல இந்த காபியை குடிங்க. நான் பொறுமையா எல்லாம் சொல்றேன்..” என்ற அகானாவின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் காபியை எடுத்துக்கொள்ள, ஆரியனின் முகத்தில் கோபம் வந்தது.
எத்தனை முறை இவளிடம் கெஞ்சியிருப்பான். இப்போது அகானா சொன்னதும் மறுத்துப் பேசாமல் குடிப்பதைப் பார்த்து கோபமும், எரிச்சலும் வந்தது.
ஆனால் அதை வெளிக்காட்டாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
மகி காபியை குடித்து முடித்ததும், “என்ன நீங்க நான் சொன்ன ஒரு வார்த்தையை நம்பி காபியைக் குடிச்சிட்டீங்க.. அதுல நான் விசம் கலந்துருக்கேன். இப்போ என்ன செய்வீங்க..” என குரலை மாற்றாமல் நிதானமாக கேட்க,
‘என்ன விசமா?’ என்ற கேள்வியோடு அதிர்ந்து நின்றிருந்தாள் மகிழினி.
இங்கு அனைத்து பத்திரிக்கைகளும் மைதிலியை நோக்கி படையெடுத்தனர். இதை முன்னமே உணர்ந்திருந்த ஆகன், போகமாட்டேன் என பிடிவாதம் பிடித்த மைதிலியையும், ரவீந்திரனையும் சென்னை அனுப்பி வைத்திருந்தான்.
‘யாரைக் கேட்டு இப்படியெல்லாம் நியூஸ் கொடுத்தீங்க, அடுத்து நேரா ஹாஸ்பிடல் மேலத்தான் எல்லார் பார்வையும் விழும். பேசன்ட்ஸ் க்கு நம்பிக்கை போயிடும். தேனிக்குள்ள நம்பர் ஒன் ஹாஸ்பிடல்னு பேர் வாங்குறதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டிருப்போம். இப்போ அதெல்லாம் ஒன்னுமே இல்லாம பண்ணிட்டீங்க. எதுக்கு இந்த மாதிரி யோசிக்காம செஞ்சீங்க..” என ஆகன் கத்த, சற்று முன் தான் ரவியும் இதே கேள்வியை கேட்டிருந்தார்.
அதனால் அமைதியாகவே இருந்தார் மைதிலி. ‘உண்மைதானே இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க ரவி எந்தளவிற்கு கஷ்டப்பட்டார் என்று மைதிலிக்கு தெரியுமே. தன் ஒரு செய்தியால் இப்போது அதெல்லாம் கேள்வி குறியாகிவிட்டதே.’ என அவருக்கே வருத்தம் தான். ஆனால் அதற்காக ஊரைவிட்டு போகச் சொல்வது எந்தளவிற்கு நியாயம். அவளுக்கு பயந்து நான் போவதா.? என்ற கோபமும் வந்தது.
அதனால் போகமாட்டேன் என நிற்க, ‘அகானா உங்க மேல கேஸ் போடுறது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த நியூஸ் சேனல் ஆட்கள் எல்லாம் அடுத்து நேரா இங்கதான் வருவாங்க. அவங்க கேட்குற கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா?’ என ஆகன் கேட்க, மைதிலியால் பதில் சொல்ல முடியவில்லை.
வேறுவழியில்லாமல் இருவரும் சென்னை கிளம்பிவிட்டனர். மைதிலியைத் தேடி வந்த பத்திரிக்கையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தனர்..
‘அப்பாடா..’ என ஆகன் ஓய்ந்து உட்கார, அப்படி உன்னை விட்டுவிடுவேனா என்பது போல, அடுத்த நாள் காலையிலேயே ரவி மற்றும் மஞ்சரியின் வாழ்க்கையை ஒளிபரப்பு செய்திருந்தது ஒரு யூ டியுப் சேனல். மற்றொரு சேனலோ ரவி மற்றும் மைதிலியின் வாழ்க்கையை படமாக ஓட்டிக் கொண்டிருந்தது.
“மேம்..” என்ற ஒரு பத்திரிக்கையாளரின் பேச்சில் அவரைப் பார்த்த அகானா “ஸோ… உங்களுக்கு இந்த கேள்விகளும், அதுக்கு நான் கொடுக்குற பதில்களும் தான் முக்கியம்.. ரைட்..” என நிறுத்த,
மீடியா கூட்டத்தின் முகத்தில் பெரும் குழப்பம்.. “மேம் அதுக்காக தான் வந்திருக்கோம். அவங்க சொன்னது உண்மையா இல்லையான்னு கண்டுபிடிச்சு சொல்றதுதான பத்திரிக்கை தர்மம்..” என ஒருவர் வர,
“ரியல்லி… இதுதான் உங்க பத்திரிக்கை தர்மம்னு எனக்குத் தெரியாம போச்சே..” என நிறுத்தியவள், “நான் இங்க வந்து டூ மன்த்ஸ் ஆச்சு.. இதுவரை தர்டி சிக்ஸ் கேஸ் முடிச்சிருக்கேன். அதுல முக்கிய தலைகளோட தலையீடுகள் அதிகம். அந்த கேஸ்னால எனக்கு வந்த கொலை மிரட்டல்கள் அதிகம்.. அப்போ எல்லாம் உங்க பத்திரிக்கை தர்மம் எங்க போச்சுன்னு தெரியலையே..” என கிண்டலாக கேட்க,
“மேம்.. நீங்க பேசுறதை கேட்கும் போது எங்களை திசை திருப்புற மாதிரி இருக்கு. அப்படின்னா மிசஸ் மைதிலி சொல்றது உண்மையா இருக்கும்னு எங்களுக்கு டவுட் வருது..” என ஒரு பெண் சொல்ல,
அவளையே ஒரு நொடி கூர்மையாக பார்த்தவள், “ஓக்கே உங்க கொஸ்டீன் என்ன.?” என அந்தப் பெண்ணை பார்த்தே கேட்க,
“அது.. அது மேம்..” என அகானாவின் பார்வையில் திணறிய பெண் பத்திரிக்கையாளர் “மைதிலி மேம் உங்க மேல வச்ச குற்றச்சாட்டு..” என நிறுத்த, அகானாவோ திரும்பி கண்ணனைப் பார்த்தாள்.
அவர் வேகமாக தன் கையிலிருந்த ஃபைலை நீட்ட, அதை வாங்கிய அகானா “என்னோட ஹையர்ல இருந்து ரெய்டு பண்ண சொல்லி எனக்கு வந்த அப்ரூவல் லெட்டர்.. அன்ட் இது ஒரு பேசன்ட் RM ஹாஸ்பிடல் மேல, SP ஆஃபிஸ்ல கொடுத்த கம்ப்லைன்ட் காபி.. என்னோட ஹையர் எனக்கு கொடுத்த வேலையை நான் செஞ்சிருக்கேன். இதுல எங்க என்னோட பழிவாங்கல் செய்கை இருக்கு..” என புருவத்தை உயர்த்தி நிதானமாக கேட்க,
“அப்போ மைதிலி மேம் ஏன் சொல்லனும்.?” என மற்றொருவர் கேட்க,
“லுக் கைஸ்.. இதை நீங்க அவங்ககிட்ட தான் கேட்கனும். நான் இங்க வந்தது என்னோட வேலையைப் பார்க்க.. அடை செய்ய விடுங்க போதும். நாங்க மறக்க நினைக்கிற ஃபாஸ்டை, நீங்க நினைக்க வைக்கிறீங்க. என்னையும், என் அம்மாவையும் பார்த்து மறுபடியும் அவங்க வாழ்க்கையிலே வந்துடுவோம்னு பயப்படுறாங்களோ என்னமோ..? சோ நீங்க இந்த கேள்விகளுக்கான பதிலை அவங்ககிட்டத்தான் கேட்கனும்.” என சிரித்தபடியே கூறியவளின் முகம் நொடியில் கோபத்தில் சிவக்க,
“அது எப்போதும் நடக்காது. எந்த சூழ்நிலையிலும் அவங்க முன்னாடி போய் என் அம்மாவோ நானோ நிற்கமாட்டோம்..” என்றவள், “ப்ளீஸ் என் பெர்சனல் லைஃபை பேசுறதுக்காக, இனி யாரும் உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க. நான் அதை சொல்ற மூட்ல இல்லை. இப்போ மட்டும் இல்ல.. எப்போவுமே..” என்றதும், வந்திருந்தவர்களுக்கு, அடுத்து என்ன கேட்பது என்றே தெரியவில்லை.
அனைவரும் அமைதியாகவே இருக்க, “உங்களுக்கு கொடுக்க எங்கிட்ட ரெண்டு நியூஸ் இருக்கு. உங்களுக்கு டைம் இருந்தா, அதைபத்தி இன்வெஸ்டிகேட் செஞ்சி, உங்க நியூஸ் பேப்பர்ல போட்டுக்கோங்க..” என்றதும், அனைவரின் முகமும் தெளிந்தது.
“குழந்தை திருமணம் இன்னும் சில ஊர்கள்ல நடக்குது. நேத்து நானே அதைப்பத்தி பேசிட்டு வந்துருக்கேன். அப்புறம் டாஸ்மார்க்ல குறைஞ்ச விலையில் வாங்கி, ஊருக்குள்ள அதிக விலைக்கு விக்கிறாங்க. அதோட ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்க்கு இதை பழக்கி விடுறாங்க. இதையெல்லாம் ஏன் நீங்க எழுதுறது இல்ல. மணற்கொள்ளை மிக முக்கியமான ஒன்னு. அதையும் நீங்க பேசுறது இல்ல. ஆனா யார் வீட்டுல என்ன பிரச்சினை நடக்குது. யார் பெட்ரூம்ல யார் இருக்காங்கன்னு டீடைலா எழுதுறீங்க.. இதெல்லாம் தான் உங்க பத்திரிக்கை தர்மம்னு எனக்கு தெரியாம போயிடுச்சு..” என்றவளின் குரலில் இருந்த கோபத்தை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு சேனலும் ப்ரேக்கிங்க் நியூஸ், ஃப்ளாஷ் நியூஸ் என தங்களின் TRPக்காக எந்தளவிற்கு தரம் இறங்கிப் போகிறார்கள் என அவர்களுக்குமே புரியத்தானே செய்கிறது.
“ஓக்கே உங்க கொஸ்டீன் முடிஞ்சதுன்னா, நான் கிளம்புறேன்..” எனவும், “மேம்..” என்ற ஒரு பெண் “அப்போ மைதிலி மேம் சொன்னது பொய்ன்னு சொல்றீங்களா.?” என மேலும் கேட்க,
“இந்த கேள்விக்கு நான் ஆல்ரெடி பதில் சொல்லிட்டேன்.. இதை நீங்க அவங்ககிட்டத்தான் கேட்கனும், அன்ட் இது பொய்யான செய்தின்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும். அதுக்கான எவிடென்ஸ் எங்கிட்ட இருக்கு. பட் அவங்க சொல்றது உண்மையா இருக்கும் பச்சத்தில், என் கையர் என் மேல என்கொய்ரி வச்சு, அதுக்கான நியூஸை அஃபிசியலா உங்களுக்கு கொடுப்பாங்க. அப்போ தெரிஞ்சிக்கலாம். அன்ட்..” என நிறுத்தியவள் மிக நிதானமாக கேமாரவைப் பார்த்து “அவங்க கொடுத்த நியூஸ் பொய்யா இருந்தா, என் பக்கம் இருந்து மிசஸ் மைதிலி ரவீந்திரன் மேல மானநஷ்ட வழக்கு போடப்படும்.. தேங்க்யூ ப்ரண்ட்ஸ்..” என்றவள் கிளம்பி சென்றுவிட்டாள்.
வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த நியூஸை எப்படி எக்ஸ்கியூட் செய்வது என நொந்து போயினர்.
“சின்ன பொண்ணா இருக்கே, எப்படியும் எதையாவது உளறி மாட்டிக்கும்னு நினைச்சா, அவங்க நம்மளையே திகைக்க வச்சிட்டு போயிட்டாங்க..” என ஒருவர் பேச,
“ம்ம்ம்.. ஆக்சுவல்லா இந்த RM ஹாஸ்பிடல் பத்தி முன்னாடி இருந்தே நியூஸ் வந்துட்டுதான் இருந்தது. பணத்தைக் கொடுத்து சரி பண்ணிருப்பாங்க. இப்போ இந்த மேடம்கிட்டயும் ட்ரை பண்ணிருக்கலாம். அவங்க ஒத்துப்போகாம ரெயிட்க்கு ஆர்டர் கொடுத்துருக்கலாம். அந்த கோபத்துல கூட மைதிலி மேடம் நியூஸ் கொடுத்துருக்கலாம்..” என ஆளாளுக்கு ஒன்று பேச, அகானாவும் இதைத்தானே எதிர்பார்த்தாள். சிரிப்புடன் அவர்களைக் கடந்து சென்றுவிட்டாள்.
காரில் ஏறியதுமே ஆரயனிடமிருந்து போன் வந்தது அகானாவிற்கு. உடனே ஆர்யனிடம் இன்று வருவதாக கூறியிருந்தது நியாபகம் வர, கண்ணனிடம் அங்கு செல்ல கூறிவிட்டு “ஆரி நான் வந்துட்டு தான் இருக்கேன்..” என்றதும்,
“ம்ம் ஓக்கே..” என்ற ஆரியனின் குரலில் இருந்த அமைதி அகானாவை யோசிக்க வைத்தது.
அவள் அந்த வீட்டிற்குள் நுழைந்ததுமே “அகி அந்த பொண்ணு ஒன்னுமே சாப்பிடல.. நான் எவ்வளவோ சொல்லிட்டேன் கேட்கல, அழுதுட்டே இருக்கா. அவ எடுத்துக்குற ட்ரக்ஸ்க்கு இப்படி சாப்பிடாம இருக்குறது சரியில்ல..” என வருத்தமாகச் சொன்ன ஆர்யனை புரியாமல் பார்த்தாள் அகானா.
“டூ டேஸா எதுவும் எடுத்துக்கல.. நாம வேற ட்ரக்ஸ் கொடுத்துட்டே இருக்கோம்..” என இழுத்தவனிடம், “தென்..” எனக் கோபமாகக் கேட்க,
“நத்திங்க்..” என்றவன் அந்த அறையிலிருந்து வெளியேற போக,
“ஆரி உன்னோட ப்ளான்ல எதுவும் சேஞ்சஸ் இருக்கா.. ஐ மீன் உன் மேரேஜ் ப்ளான்ல..” என்றவளிடம்,
“லூசு மாதிரி உளறக்கூடாது. உனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துடக்கூடாதுன்னு நினைக்கிறேன். இங்க வந்ததுல இருந்து ஏகப்பட்ட பிரச்சினை. இந்த பொண்ணை வச்சும் ஒரு பிரச்சினை வந்துடக்கூடாதுனு நினைக்கிறேன். ஒரு அண்ணனா அந்தக் கவலைக் கூட எனக்கு இருக்கக்கூடாதா.?” என எரிச்சலில் கத்தியவன் பட்டென்று வெளியேறிவிட, அகானாவின் கண்களில் நீர் திரண்டது.
ஆர்யனின் கோபம் உண்மைதானே.. அதனால் தன் திட்டத்தை மாற்றி, ஒரு பெருமூச்சோடு மகிழினி இருந்த அறைக்குள் நுழைந்தாள் அகானா.
அதுவரை அழுது கொண்டிருந்த மகிழினி அகானாவைப் பார்த்ததும், முதலில் புரியாமல் பார்த்து பின் தெரிந்து, அதிர்ந்து வேகமாக எழுந்து நின்றாள்.
அவள் உதடுகளோ ‘அகானா.. அம்மு’ என உச்சரிக்க, அவளுக்கு முன் நிதானமான நடையுடன் வந்து நின்றாள் அகானா.
“நீ.. நீங்க அகானா இல்ல அம்முதான..” என மகிழினி திக்க,
“ம்ம்.. நீ.. நீங்க என்ன நினைக்கிறீங்க.?” என கேட்டபடியே எதிரில் இருந்த சேரில் அமர,
“ஹான்.. ஆமாதான்.. நீங்க அகானாதான்.. ஆனா இங்க எப்படி? நான் எப்படி..?” என குழம்பியபடியே நெற்றியைத் தேய்க்க,
அப்போது மூவருக்கும் காபியுடன் வந்தான் ஆர்யன்.
“இப்போ உங்களால அதிகம் யோசிக்க முடியாது. முதல்ல இந்த காபியை குடிங்க. நான் பொறுமையா எல்லாம் சொல்றேன்..” என்ற அகானாவின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் காபியை எடுத்துக்கொள்ள, ஆரியனின் முகத்தில் கோபம் வந்தது.
எத்தனை முறை இவளிடம் கெஞ்சியிருப்பான். இப்போது அகானா சொன்னதும் மறுத்துப் பேசாமல் குடிப்பதைப் பார்த்து கோபமும், எரிச்சலும் வந்தது.
ஆனால் அதை வெளிக்காட்டாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
மகி காபியை குடித்து முடித்ததும், “என்ன நீங்க நான் சொன்ன ஒரு வார்த்தையை நம்பி காபியைக் குடிச்சிட்டீங்க.. அதுல நான் விசம் கலந்துருக்கேன். இப்போ என்ன செய்வீங்க..” என குரலை மாற்றாமல் நிதானமாக கேட்க,
‘என்ன விசமா?’ என்ற கேள்வியோடு அதிர்ந்து நின்றிருந்தாள் மகிழினி.
இங்கு அனைத்து பத்திரிக்கைகளும் மைதிலியை நோக்கி படையெடுத்தனர். இதை முன்னமே உணர்ந்திருந்த ஆகன், போகமாட்டேன் என பிடிவாதம் பிடித்த மைதிலியையும், ரவீந்திரனையும் சென்னை அனுப்பி வைத்திருந்தான்.
‘யாரைக் கேட்டு இப்படியெல்லாம் நியூஸ் கொடுத்தீங்க, அடுத்து நேரா ஹாஸ்பிடல் மேலத்தான் எல்லார் பார்வையும் விழும். பேசன்ட்ஸ் க்கு நம்பிக்கை போயிடும். தேனிக்குள்ள நம்பர் ஒன் ஹாஸ்பிடல்னு பேர் வாங்குறதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டிருப்போம். இப்போ அதெல்லாம் ஒன்னுமே இல்லாம பண்ணிட்டீங்க. எதுக்கு இந்த மாதிரி யோசிக்காம செஞ்சீங்க..” என ஆகன் கத்த, சற்று முன் தான் ரவியும் இதே கேள்வியை கேட்டிருந்தார்.
அதனால் அமைதியாகவே இருந்தார் மைதிலி. ‘உண்மைதானே இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க ரவி எந்தளவிற்கு கஷ்டப்பட்டார் என்று மைதிலிக்கு தெரியுமே. தன் ஒரு செய்தியால் இப்போது அதெல்லாம் கேள்வி குறியாகிவிட்டதே.’ என அவருக்கே வருத்தம் தான். ஆனால் அதற்காக ஊரைவிட்டு போகச் சொல்வது எந்தளவிற்கு நியாயம். அவளுக்கு பயந்து நான் போவதா.? என்ற கோபமும் வந்தது.
அதனால் போகமாட்டேன் என நிற்க, ‘அகானா உங்க மேல கேஸ் போடுறது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த நியூஸ் சேனல் ஆட்கள் எல்லாம் அடுத்து நேரா இங்கதான் வருவாங்க. அவங்க கேட்குற கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா?’ என ஆகன் கேட்க, மைதிலியால் பதில் சொல்ல முடியவில்லை.
வேறுவழியில்லாமல் இருவரும் சென்னை கிளம்பிவிட்டனர். மைதிலியைத் தேடி வந்த பத்திரிக்கையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தனர்..
‘அப்பாடா..’ என ஆகன் ஓய்ந்து உட்கார, அப்படி உன்னை விட்டுவிடுவேனா என்பது போல, அடுத்த நாள் காலையிலேயே ரவி மற்றும் மஞ்சரியின் வாழ்க்கையை ஒளிபரப்பு செய்திருந்தது ஒரு யூ டியுப் சேனல். மற்றொரு சேனலோ ரவி மற்றும் மைதிலியின் வாழ்க்கையை படமாக ஓட்டிக் கொண்டிருந்தது.