• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 33

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா- 33

ரவீந்திரனின் வீடு ஒரே சத்தமாக இருந்தது. ரஞ்சனி ஒரு பக்கம் கத்திக் கொண்டிருக்க, சரஸ்வதி ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தார். அவர் கணவரோ மருமகனை முறைத்துக் கொண்டிருந்தார்.

“என் முடிவு இதுதான், உங்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லைன்னாலும் என் பொண்ணோட விருப்பம் தான் நடக்கும்.” என்று முடிவாக சொன்னவர், மகனைப் பார்க்க,

“அவங்க பேரன்ட்ஸ் கிளம்பிட்டதா ஆரி சொன்னான் ப்பா.. அப்புறம்..” என இழுத்து பெரியவர்களைப் பார்க்க,

“அப்புறம்..” சங்கர் எடுத்து கொடுக்க,

“அப்புறம் மஞ்சு அத்தையை கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.” என சின்ன குரலில் கூற,

“யாருக்கு யார் அத்த..? அந்த ஓடுகாளி உனக்கு அத்தைன்னா அப்போ மைதிலி யாருடா.?” என சரஸ்வதி பேரனை அதட்ட,

“மைதிலி அத்தை எனக்கு அத்தைன்னா, மஞ்சரி அத்தையும் எனக்கு அத்தைதான். அதோட மஞ்சரி அத்தைதான் எனக்கு உரிமையான அத்தையும் கூட, இப்போ அது பிரச்சினையில்ல பாட்டி..” என ஆகன் கண்டிப்புடன் கூற,

“ஓ உனக்கு அது பிரச்சினையில்லையா? மைதிலி வந்து கேட்டா என்ன பதில் சொல்றது. இதெல்லாம் தெரிஞ்சா அவளூக்கு கஷ்டமா இருக்காது..” என மேலும் பேச,

“எனக்கு என் பொண்ணு வாழ்க்கைதான் முக்கியம். அதனால யார் மனசு கஷ்டப்பட்டாலும் நான் ஒன்னும் பண்ண முடியாது..” என பட்டென சங்கர், மாமனாரை பார்த்தார்.

“இது சரியா வரும்னு எனக்கு தோணல மாப்பிள்ளை. இன்னும் யாருக்கும் விசயம் தெரியல. நாம மகிக்கிட்ட பேசி புரிய வைக்கலாம். அவ சின்ன பொண்ணு. சொன்னா புரிஞ்சிப்பா..” என்றதும்,

“ப்பா என்ன பேசிட்டு இருக்கீங்க..” என வினோத் தகப்பனை அதட்ட,

“நாம எப்படிடா மைதிலியை விட்டுட்டு பண்ண முடியும்..” என்றார் மீண்டும்.

“இங்க பாருங்க மாமா. எனக்கு யாரைப்பத்தியும் கவலை இல்லை. யாரையும் யோசிக்கிற நிலமைலயும் நான் இல்ல, என் பொண்ணு வாழனும். அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழனும். அதை ஒரு அப்பாவா நான் அமைச்சிக் கொடுக்கனும். அதுதான் என்னோட மரியாதை. என் பொண்ணு என் மேல வச்சிருக்கிற நம்பிக்கையை நான் கெடுத்துக்கமாட்டேன். நாளைக்கு அவங்க வீட்டுக்கு வருவாங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்க. இல்லைன்னா விடுங்க..” என முடிவாக பேசிவிட்டு, மனைவியைப் பார்த்து “கிளம்பு போகலாம்… வீட்டுல வேலை இருக்கு..” என அதட்ட, பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக கணவரின் பின் சென்றார் ரஞ்சனி.

“அப்பா.. மாமா நமக்காக நிறையவே பொறுத்து, நம்மளை சகிச்சிட்டு போறார். அதை நாம புரிஞ்சிக்கனும். இது அவர் பொண்ணோட வாழ்க்கை. அவர்தான் முடிவு எடுக்கனும்..” என்றதும்,

“அப்போ நாம ஒன்னும் சொல்லக்கூடாதுனு சொல்றியா?” என சரஸ்வதி கோபமாக கேட்க,

“அம்மா.. சொல்லக்கூடாதுனு எதுவும் இல்ல. நல்லது கெட்டது எடுத்து சொல்லலாம். ஆனா அதை அவங்க கேட்கனும்னு பிடிவாதம் பிடிக்கக்கூடாது. என்ன நடந்தாலும் அவங்க சமாளிப்பாங்க..” என்று நிறுத்தியவன் “மஞ்சு அண்ணி தவிர்த்து நீங்க அந்த பையனை பார்த்தா, ரொம்ப நல்ல பையன் ப்பா. டாக்டருக்கு படிச்சிருக்கான், வெளிநாட்டு வேலை. குடும்பமும் வசதியான இடம். நாமலே தேடினாலும் இப்படி ஒரு இடம் கிடைக்காது. எதையும் யோசிக்காதீங்க. நம்ம மகியை மட்டும் யோசிங்க..” என வினோத் கூற,

“இது மகியோட மட்டும் நிக்காது போலையே வினோ..” என்ற சரஸ்வதியின் குரல் பேரனைப் பார்த்து கோபத்தில் வந்தது.

“ம்மா.. நீங்க கண்ணாவை என்ன நினைச்சிட்டு பேசுறீங்க..?” என வினோத் ஆரம்பிக்கும் போதே,

“மாமா.. இதை நான் பேசுறேன்..” என்றவன் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவத்தை கூறி, “முதல் தடவை பார்க்கும் போது இவளை எங்கேயோ பார்த்திருக்கோம்னு நினச்சுதான் பார்த்தேன். ஆனா உண்மை தெரியுற வரை அதைப்பத்தி நான் யோசிக்கவே இல்லை. உண்மை தெரிஞ்சபிறகுதான் கண்டுபிடிச்சேன் அம்மு அப்படியே என் அம்மா மாதிரி இருக்கான்னு.. எப்படி இவ்ளோ நாள் அதை கண்டுபிடிக்காம இருந்தேன்னு எனக்கேத் தெரியல. அன்னைக்கு நான் அவளை ரொம்ப பேசிட்டேன். அந்த வார்த்தைகள் தான் அவளை இங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு..” என்றாஅன் ஒரு வருத்த பெரு மூச்சுடன்.

“கண்ணா.. அது எல்லாம் முடிஞ்ச கதை. அதைப்பத்தி பேசினா நம்ம குடும்பத்துல நிறைய பிரச்சினைகள் வரும். நீ யோசிச்சு பார்.. மைதிலி இருக்கும் போது அவ இந்த வீட்டுக்கு எப்படி? அதெல்லாம் சரியா வரவே வராது..” என சரஸ்வதி ஒரே பிடியாக நின்றார்.

“ம்மா.. நீங்களே போய் நின்னு என் பேரனைக் கட்டிக்கோன்னு கேட்டாலும் அம்மு ஒத்துக்கமாட்டா. நீங்க என்ன நினைச்சீங்க. அவளுக்கு இங்க வந்து வாழ ஆசைன்னா..” என நிறுத்திய வினோத் “கண்டிப்பா இல்ல.. அவளுக்கு நம்ம முகத்தைப் பார்க்கக்கூட பிடிக்காது. இதுல நீங்க இப்படியெல்லாம் வேற யோசிக்கிறீங்களா” என்று நக்கலாக கூற,

“போதும் வினோ.. இனி அவ பேச்சே இங்க வரக்கூடாது..” என்ற சரஸ்வதியிடம்,

“நீங்க உங்க பேரனை மட்டும் தான் அடக்கனும். அம்முக்கிட்ட போய் எதையும் பேசி வைக்காதீங்க. அப்படி செஞ்சா அவ போஸ்டிங் தெரியும்ல.. பார்த்து நடந்துகோங்க..” என்று வினோத் எச்சரிக்கை செய்து கிளம்ப,

“கண்ணா நீயும் கிளம்பு.. நாளைக்கு நிறைய வேலை இருக்கு..” என ஆகனையும் கிளப்பிக்கொண்டு சென்றார்.

“என்னங்க இது..?” என்ற மனைவியிடம், “இது நம்ம காலம் இல்ல. பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க. அவங்க வாழ்க்கையை அவங்கதான் முடிவு பண்ணுவாங்க. நீ பேசி உன் மரியாதையை குறைச்சிக்காத. மைதிலியை சமாளிக்க ரவி இருக்கான். அவன் பார்த்துப்பான்..” என்றார் அழகர்.

“ஆனா அவளை எப்படி? அந்த பையனை கூட ஏத்துக்கலாம்.. ஆனா அவ..” என இப்போதும் ஒரு ஒவ்வாமையோடே சரஸ்வதி கூற,

“வினோ சொன்னதை கவனிக்கலயா நீ? அந்த பொண்ணு கண்டிப்பா இந்த வாழ்க்கைக்கு ஒத்துக்கமாட்டான்னு சொன்னானே.. கவனிக்கலயா? அப்புறம் ஏன் பயப்படுற..” என மனைவியை சமாதானம் செய்தார்.

அன்றிரவு பிள்ளைகளோடு அகானாவின் குவார்டஸ்க்கு வந்த நித்யா வெகுநேரம் காத்திருந்தார். அப்போதுதான் வினோத் அழைத்து விவரம் சொல்ல, நித்யாவால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை.

இப்போது அகானாவின் மனம் எந்தளவிற்கு கஷ்டப்படும் என அவருக்கு புரிந்தது.

வருத்தத்துடன் அமர்ந்திருந்த நேரம், மிகவும் ஓய்ந்து போய் வந்தாள் அகானா. அவள் முகத்தில் இருந்த சோர்வும், களைப்பும் நித்யாவிற்கு புரிய, சிறு புன்னகையுடன் தலையசைத்தாள்.

‘இப்போது இவருமா?’ என மனதில் தோன்றினாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரைப்போல சிறு புன்னகையுடன் “எப்போ வந்தீங்க.?” என்றாள்.

“நாங்க வந்து கொஞ்ச நேரம் ஆச்சு. நீ ஃப்ரஷ் ஆகிட்டு வா.. முதல்ல சாப்பிடு. அப்புறம் பேசலாம்.” என அவளை அனுப்பிவிட,

உண்மையில் அகானாவிற்கு இருந்த எரிச்சலில், சில நிமிடமாவது நீருக்கடியில் நின்றால்தான் நன்றாக இருக்கும் தோன்ற மறுத்துப் பேசாமல் தன் அறைக்குள் சென்றாள்.

அதற்குள் உணவுகளை எடுத்து வைத்த நித்யா அகானாவிற்காக காத்திருந்தார்.

“நீங்க இங்க வந்தது அங்க ஒன்னும் பிரச்சினை இல்லையே?” என்றபடியே வந்து அமர,

“அவர்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்துருக்கேன். பசங்கதான் உன்னை பார்த்தே ஆகனும்னு அடம். ஆனா பாரு நீ வர முன்னாடி தூங்கிட்டாங்க. நல்ல வேளை நாங்க வரும்போது கண்ணன் சார் இருந்தார். இல்லைன்னா நீ வர வரைக்கும், நாங்க வெளியில்தான் உக்காந்திருக்கனும்..” என சிரிக்க,

“ஹான்.. நீங்க எனக்கு கால் பண்ணிருந்தா போதும்..” என சாப்பிட்டபடியே, “நாளைக்கு மேகமலை போற வேலை இருக்கு.. ஒன் அவர்தான் வொர்க். நான் கண்ணன் அங்கிளுக்கு சொல்லிடுறேன். நீங்க மூனு பேரும் வந்துடுங்க.. அங்க டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாம்.” என்று சாப்பிட்டு எழுந்து கொள்ள,

“நாளைக்கு நீ இருக்க வேண்டாமா? ஆரியோட பேரண்ட்ஸ் வருவாங்களே..” என நித்யா கேட்டதும்,

“நான் வந்து பார்த்துப்பேன். விஜி ம்மா அதெல்லாம் யோசிக்கமாட்டாங்க. பாவம் ஆரியை நினைச்சாத்தான் கஷ்டமா இருக்கு. விஜிமா அவன் கூட பேசவே இல்ல..” என்று பெருமூச்சு விட்டவள், “எனக்காக அவன் வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணிக்கிட்டானோன்னு ஒரு மாதிரி கில்டியா இருக்கு. அம்மாவும் அதேதான் சொன்னாங்க.. ம்ச்..” என வருந்த,

“அம்மு.. நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சிக்கனும்..” என நிறுத்த,, அகானாவின் உடல் நொடியில் விரைத்தது.

“இல்ல இல்ல.. நான் மகியை பத்தி மட்டும் தான் பேச போறேன். நீ வேற எதையும் யோசிக்காத..” என அகானாவை சமாதானம் செய்தார் நித்யா.

“ம்ம்.. நீ நினைக்கிற அளவுக்கு மகி ஒன்னும் மோசமான பொண்ணு இல்ல அம்மு. அவளும் சரி, ஆகனும் சரி அப்படியே சங்கர் அண்ணா மாதிரிதான். குணத்துல தங்கமேதான்.

ஆகனுக்கு ஆரம்பத்துல இருந்தே ரவி மாமா மேல ஒரு பிரமிப்பு.. பாசம். அவனுக்கு எல்லாம் அவர்தான். அந்த கிறுக்குல ஏதாவது கிறுக்குத்தனம் செய்வானோ ஒழிய, தப்பா எதையும் செய்யமாட்டான்.

“ம்ம்.. இதெல்லாம் தெரிஞ்சு நான் என்ன செய்ய போறேன். ஆரி கண்டிப்பா இங்க இருக்கமாட்டான். அவனுக்கு சிங்கப்பூர்தான் வேனும். வேற ஆஃபர் வந்தாலும் போய்டுவான். சோ உங்க மகியும் அவன்கூட அங்க போகப்போறது உறுதி. அவங்க லைஃப் கண்டிப்பா ஸ்மூத்தா போகும். எனக்கு ஆரி மேல நம்பிக்கை இருக்கு..” என்று நிறுத்தியவள், “மகி மேல இல்ல.. அவ மேல மட்டும் இல்ல. அவங்க குடும்பத்து ஆளுங்க யார் மேலயும் எனக்கு நம்பிக்கை இல்ல..” என இறுக்கமாக கூற, அப்படியே அமைதியாகி விட்டார் நித்யா.

‘அப்படியெல்லாம் இல்லை’ என நித்யாவால் மறுத்து பேச முடியவில்லை. முடியவும் முடியாது.

பாதிக்கப்பட்டவள் கூறும் போது எப்படி இல்லை என்று மறுக்க முடியும். அவள் வேதனை படிந்த முகத்தை பார்த்தபடியே “ஸாரி மா..” என்றார்.

“ம்ச்.. இதுக்கு நீங்க ஏன் சாரி சொல்றீங்க.. நான் கடந்து வந்துவிட்டேன். இது அவங்க எனக்கு கொடுத்த வலிக்கான தண்டனை. என்னோட வலி அவங்களுக்கு புரியனும்ல..” என்றவள், “மகியை கடத்தினது எனக்கு தப்பாவே தோணல.. இன்னுமே மோசமான ஒரு தண்டனையை அவங்களுக்கு மகியை வச்சு கொடுத்திருக்க முடியும். ஆனா என் அம்மாவோட வளர்ப்பு அப்படி இல்ல. அதனால மட்டும்தான் அப்படியே வச்சிருந்தேன்..” என்ற அகானவின் குரலில் இருந்த வெறியில் நித்யாவே ஒரு நொடி அரண்டு தான் போனார்.