அகானா - 34
‘உனக்கு எப்படி அந்த குடும்பத்து பொண்ணை பிடிச்சது’ விஜி வந்ததில் இருந்து இந்த ஒரு கேள்வியை மட்டும் தான் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அவருக்கு மனதே ஆறவில்லை. அவர்கள் கண் முன் தான் மஞ்சரி அகானாவை வைத்துக்கொண்டு அத்தனை கஷ்டப்பட்டார். அன்று தங்களிடம் வந்ததால் மட்டுமே மஞ்சரி ஓரளவுக்கு தேறி, வாழ்க்கையின் ஓட்டத்தில் கலந்து, மகளுக்காக என ஓட ஆரம்பித்தார்.
இதே அவர்களிடம் வராமல் போயிருந்தால் இன்று அந்த இரண்டு பெண்களின் நிலையும் என்னவாகி இருக்குமோ?
அந்த பயம் இப்போது வரைக்கும் விஜியிடம் இருக்க, மகன் செய்த செயலை அவரால் ஏற்கவே முடியவில்லை.
“ம்மா.. நான் என்ன செஞ்சாலும் அது அகிக்காகன்னு கொஞ்சம் யோசிங்க..” என ஒரு கட்டத்தில் கத்திவிட்டான்.
ஆர்யனின் அப்பா முருகானந்தனும் “விடு விஜி.. அடுத்து என்ன செய்றதுன்னு மட்டும் பாரு..” என மனைவியை சமாளித்திருந்தார்.
“இன்னும் படிப்பு கூட முடியல..” என புலம்பினாலும், மகியின் முகத்தில் தெரிந்த பயத்தில் அமைதியாகிவிட்டார்.
மஞ்சரியும், அகானாவும் பெருமளவு விஜியை சமாதானம் செய்திருந்தனர்.
“விஜிமா.. ஆரி கண்டிப்பா இங்க இருக்கமாட்டான். இங்க இருந்தாதான் நாம பயப்படனும். அதோட அந்த பொண்ணும் கொஞ்சம் நல்லவதான் போல. அவனுக்காக நிக்கிறா இல்ல. அதோட அவனுக்கு மகியை பிடிச்சிருக்கு. ரொம்ப எல்லாம் பயந்து யோசிக்காதீங்க..” என்றிருந்தாள் அகானா.
யார் என்ன சொல்லி சமாதானம் செய்திருந்தாலும் விஜிக்கு இந்த சம்மந்தம் ஒப்பவே இல்லை.
அவருக்கு இப்போதும் ‘வாழ்க்கையை வெறுத்து, வாழவே பிடிக்காமல், உடல்நலமில்லாத குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, பரிதவிப்போடு தன் முன் நின்ற மஞ்சரி’ தான் நினைவுக்கு வந்தார்.
என்ன முயன்றும் இதை ஏற்கவே முடியவில்லை. மனதை மகனுக்காக என சமாதானம் செய்ய முயற்சித்தார்.
“விஜி.. உன் வருத்தம், கோபம் எல்லாம் எனக்கு புரியாம இல்லை. சொல்லப்போனா எனக்குமே இதுல துளி விருப்பம் இல்ல. ஆனா ஆரி அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிருக்கான். நம்ம வளர்ப்பு சரியா இருக்கனும். அந்த பொண்ணை நாம நியாயப்படுத்தனும். நம்ம பையனோட மரியாதையை நாம காப்பாத்தனும். அகி சொன்ன மாதிரி அவங்க இங்க இருக்க போறது இல்ல. அப்புறம் ஏன் இவ்ளோ பயப்படுற..” என்று கணவர் கூற, இதெல்லாம் கணவர் சொல்லாமலே விஜிக்கு புரியத்தான் செய்தது.
ஆனால் அவரின் பையம் அதுவல்ல… ரவியைப் போல மகிழினியும் மகனை பாதியில் விட்டு விடுவாளோ என்பதுதான்.
அதை தப்பென்று சொல்ல முடியாதே.. காரணம் அங்கிருக்கும் நபர்கள். ரஞ்சனியும், மைதியும் எதையும் செய்யக் கூடியவர்கள் தானே.
“என்னோட பயமே வேறப்பா..” என கணவருக்கு தன் பயத்தை விஜி கூற,
“இதை தப்புனு சொல்ல முடியாது. அதுக்காக அப்படி யோசிக்கவும் கூடாது. ஆரி அதுக்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கமாட்டான். அன்ட் மகிழினியோட அண்ணனும் அப்பாவும் கண்டிப்பா இப்படியொரு பிரச்சினை வர விட மாட்டாங்க.. நீ பயப்படாம அந்த பொண்ணுக்கிட்ட பேசு. வந்து இவ்ளோ நேரம் ஆச்சு. இன்னும் ரூம் விட்டு வெளியவே வரல. ரொம்ப பயந்துருக்கும் போல. போய் பார்த்துட்டு வா..” என சமாதானம் செய்தார்.
கணவரின் பேச்சுக்கு பிறகு விஜியிடம் பெரியளவில் மறுப்பு இல்லை. அவரே மகியை போய் பார்த்தார். அறைக்குள் வந்தவரிடம் முதல் வார்த்தையாக “சாரி ஆன்டி..” என மகியே ஆரம்பித்தாள்.
இதுவரை அவளை ‘ஏன்?’ என்று யோசித்த மனம் இந்த நொடி அவள்தான் என முடிவு செய்தது.
“நீங்க.. நான்.. நான்.. சாரி ஆன்டி..” என ஏதோ சொல்ல வந்து திணறிக்கொண்டே இருந்தாள்.
ஆனாலும் விஜி பதில் பேசாமல் அவளையே கூர்மையாக பார்க்க, முகம் வெளுத்துப் போனது மகிக்கு.
“ஸாரி ஆன்டி.. அது ஆரி சாரை எங்க வீட்டுல தப்பா நினைப்பாங்க, அப்புறம் கோபத்துல ஏதாச்சும் செஞ்சிட்டான்ற பயத்துல, நான் நானே தாலியைக் கட்டிக்கிட்டேன்..” என விழிகள் கலங்க குற்றவுணர்ச்சியுடன் சொல்லி முடிக்க,
“என் பையனை எனக்குத் தெரியும்?” என ஒற்றை வார்த்தையில் அவர் முடிக்க, மிரண்டு விழித்தாள் மகி..
“அவன் தப்பு செஞ்சிருக்கான். அதற்கான தண்டனையை உன் வீட்டு ஆளுங்க செய்றதுல என்ன தப்பு இருக்கு.. அவனை நீ ஏன் காப்பாத்த நினைக்கிற..”
“இல்ல.. அது வந்து.. அது ஆரி சார் என்னை லவ் பண்றார்..” என நிறுத்தி விஜியை பார்க்க,
அவரோ ‘மேலே சொல்லு’ என்பது போல் பார்க்க,
“இல்ல.. அவர் என்னை லவ் பண்றார்.. நான் நானும்தான். எனக்க்கும் அவரைப் பிடிச்சிருக்கு. இப்போ நான் இதை செய்யாம விட்டிருந்தா, நாங்க மறுபடியும் சேர வாய்ப்பிருக்குமான்னு தெரியல.. அதான்.. சாரி ஆன்டி..” என்றவளுக்கு விழிகள் கலங்கி வழியத் தொடங்கியது.
“ம்ம்..” என்று பெருமூச்சு விட்டாலும், மகியை சமாதானம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை.
“எனக்கும் மஞ்சரிக்கு உறவு முறை எல்லாம் கிடையாது. நானும் அவளும் படிக்கும் போது ப்ரண்ட்ஸ். என்னைவிட ஜூனியர்தான். என் மேல அவளுக்கு அன்பும் மரியாதையும் அதிகம். அவளை மாதிரி ஒரு அருமையான பொண்ணை தேடினாலும் கிடைக்காது.”
“ரவி மஞ்சரி பின்னாடி ஒரு வருசமா சுத்தினது. அவளுக்கும் பிடிச்சது எல்லாம் எனக்கு ஆரம்பத்துல இருந்தே தெரியும். அவங்க காதலைப் பார்த்து பிரமிச்சு போயிருக்கேன். காதலிக்கும் போது ரவி அவளை உள்ளங்கையில வச்சு தாங்குவார். ஒருநாள் லீவ் கிடைச்சாலும் இவளுக்காக திருநெல்வேலில இருந்து வந்துடுவார். அப்போ எல்லாம் அவ முகத்துல இருக்குற பெருமையும், சந்தோசமும் பார்த்து நாங்க எல்லாம் அவ்ளோ பொறாமை படுவோம்.
அதுக்குப் பிறகு ப்ரண்ட்ஸ் அவங்க அவங்க லைப் பார்த்துட்டு போய்ட்டோம். மஞ்சரி மட்டும் எப்போவும் என் கூட டச்ல இருப்பா.
அப்போதான் அவ வேலைக்கு போறதா சொன்னா? அப்பவே அவளோட வயசு இருபத்தி நாலு. வீட்டுல கல்யாணத்துக்கு பயங்கர ப்ரெஷர். அப்போ ரவி படிச்சிட்டு இருந்தார். அவங்க அம்மா அவளை அடிச்சி, பெரிய பிரச்சினை ஆகி ரெண்டு டைம் சூசைட் கூட அட்டென் பண்ணிருக்கா. எங்க யாருக்கும் இது தெரியாது. மஞ்சரி ஒர்க் போகவும் கொஞ்சம் அமைதியா இருந்தாங்க போல வீட்டுல.
அப்போ ரவி வீட்டுல ரொம்ப கஷ்டம். அவருக்கு ஃபீஸ் கூட கட்ட முடியாம இருந்தாங்க. மஞ்சரியோட சம்பளம் எல்லாம் ரவிக்குதான் போகும். மஞ்சரி வீட்டுலயும் விட்டுட்டாங்க. ரவி வீட்டுக்கு தெரிஞ்சாலும் பெருசா கண்டுக்கல.
ரவியோட படிப்பு முடியவும் மறுபடியும் மஞ்சு வீட்டுல ப்ரெஷர் கொடுக்க, மஞ்சு ரவிக்கு ப்ரெஷர் கொடுக்கன்னு ஆரம்பிச்சு, அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க முன்னாடியே கல்யாணம் நடந்துடுச்சு. அதுதான் அவங்க செஞ்ச பெரிய தப்பு.
பொறுத்தது எல்லாம் பொறுத்தாங்க. இன்னும் கொஞ்சம் லைஃஃபை ஸ்டேபிள் பண்ணிட்டு கல்யாணம் செஞ்சிருக்கலாம்.
அவசரப்பட்டு பண்ணிட்டாங்க. ஆனா மஞ்சு அவ்ளோ சப்போர்ட்டா இருந்தா. குழந்தை பிறக்கிற வரைக்குமே வேலைக்கு போனா. மார்னிங்க் வேலைக்கு போனா. வலி வந்து ஹாஸ்பிடல் கொண்டு போனாங்க. அகி பிறந்துட்டா.
அதுவரைக்கும் இவங்க கல்யாணம் ரவி வீட்டுல தெரியல. அகி பிறந்த பிறகு எல்லாமே மாறிடுச்சு. அவங்க எதிர்பார்த்த வாழ்க்கை வாழல. நாங்க எதிர்பார்த்த மாதிரியும் வாழல.
ரவியோட வீட்டுல மஞ்சுவை விட்டுட்டு வந்தாலே ஆகனும் சொன்னாங்க. ஆரம்பத்துல ரவி ஒத்துக்கல… ஆனா போக போக..” என அதுவரைக்கும் ஒரு ஃப்லோவில் சொல்லிக் கொண்டு வந்த விஜி அந்த இடத்தில் அப்படியே நிறுத்திவிட்டார்.
“எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லமாட்டேன். ஆனா அம்மாவும் பாட்டியும் என்ன செஞ்சாங்கன்னு தெரியும்..” என மகி நிறுத்த,
“ம்ம் அவங்க ஆசை எப்படியோ இருக்கட்டும். ஆனா ரவி செஞ்சதை தான் என்னால ஏத்துக்கவே முடியல.. அவரை நாங்க எந்தளவுக்கு நம்பியிருந்தா ‘மஞ்சரி எங்ககிட்ட சொல்லும் போது, ரவி அப்படியெல்லாம் இல்லன்னு’ சொல்லிருப்போம்.
ஆனா உண்மை அதுதானே.. அகியோட ஆபரேஷன் வரைக்குமே எங்களுக்கு எதுவும் தெரியாது, மஞ்சு சொல்லவும் இல்ல.
“நாங்க மதுரைக்கு ஒரு மேரேஜுக்கு வந்த போது கவிதா அக்காதான் எங்களுக்கு இதெல்லாம் சொன்னாங்க. அதுக்கு பிறகு நாங்க அகியை ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு, உனக்கு எந்த உதவின்னாலும், எப்போ வேணும்னாலும் எங்கிட்ட வரலாம்னு சொல்லிட்டு போனேன்.”
“அப்போவும் ஒரு நம்பிக்கை. ரவி கண்டிப்பா மஞ்சுவை விட மாட்டார்னு.. ஆனா..” என்று நிறுத்திய விஜி “மஞ்சு கூட இருந்த மூன்றாவது மனுஷியான எனக்கே இது எவ்வளவு ஏமாற்றமும், வலியும் கொடுக்குதுன்னா மஞ்சுவை யோசிச்சு பாரு. அதேநேரம் அகி பிறந்ததுல இருந்து கையை விட்டு கீழ இறக்கினதே இல்ல. அவளை விட்டுட்டு போனதுதான் தாங்க முடியாத வேதனை..” என்றவர்,
“அகியை இந்தளவுக்கு மீட்டு கொண்டு வந்தது ஆரிதான். அவன் இல்லைன்னா அகியை நாங்க தொலைச்சிருப்போம்.. அவனுக்கும் அகி அவ்ளோ முக்கியம். அகிக்காக எந்த எல்லைக்கும் போவான். அதுக்கு இந்த சம்பவமே சாட்சி.. அதே போலத்தான் அகியும்.. ஆரிக்கு ஒன்னுன்னா அவளும் சும்மா இருக்கமாட்டா..” என மகியை கூர்மையாக பார்த்தவர் “என் பயம் என்னனு உனக்கு புரியுதா?” என்றார்.
மகிக்கு புரியாமல் இருக்குமா? ரவியைப் போலவே தானும் இந்த வாழ்க்கையிலிருந்து பாதியில் சென்று விடுவேனோ என்று பயப்படுகிறார் என புரிந்தது.
“நான் ஆரி சார் கூட வாழ்ந்துதான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும். அவரே வேண்டாம்னு என்னை விட்டுட்டு போனாலும், நான் போகமாட்டேன்னு டைலாக் எல்லாம் பேசமாட்டேன். உங்க நம்பிக்கையை கெடுத்துக்காம, நீங்க விரும்பின, நாங்க ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையை கண்டிப்பா வாழுவோம். அதே நேரம் மஞ்சு அத்தைக்கோ, அம்முவுக்கோ நானோ என் வீட்டாளுங்களோ எந்த கஷ்டமும் கொடுக்கமாட்டோம்..” என முடிக்க, விஜியின் முகத்தில் சன்னமான புன்னகை ஒட்டிக்கொண்டது.
“சரி.. நாங்க உங்க வீட்டுக்கு போய்ட்டு வரோம். அங்க என்ன நடந்தாலும், நீங்க தைரியமா இருக்கனும்..”
“ஹான்.. நான் நானும் அங்க வரட்டா.. இதெல்லாம் முறைப்படி நடந்தா சரியா இருக்கும்னு தோணுது. அப்போதான் மஞ்சு அத்தைக்கும் ஒரு மரியாதை கிடைக்கும்னு நினைக்கிறேன்.”
“சரிதான்.. ஆனா உங்க வீட்டு ஆளுங்களை நம்ப முடியாதே. உன்னை ஏமாத்திட்டா?”
“இல்ல அப்பா இருக்கார். ஆகன் இருக்கான். கண்டிப்பா அப்படி நடக்க விடமாட்டாங்க. இது.. இது எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு. ஆரி சார் நான் இப்படி செய்வேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டார் போல. நேத்து இருந்து எங்கிட்ட பேசவே இல்ல..” என்ற நேரம் அவளுக்கு அழுகை பீறிக்கொண்டு வந்தது.
“ம்ச்.. அது உன்மேல உள்ள கோபம் கிடையாது. நாங்க.. எங்கலை எப்படி சமாளிக்கிறதுனு பயம்.. பதட்டம்.. இப்போ வந்து பேசுவான்..” என அவளைத் தட்டி கொடுத்து வெளியில் வர, ஆரியன் பதட்டமாக போன் பேசிக் கொண்டிருந்தான்.
“என்ன ஆரி..” என முருகானந்தம் பதட்டமாக கேட்க,
“மம்மி.. இன்னைக்கு அகி மேகமலைக்கு ஒரு இன்ஸ்பெக்ஷன்க்கு போயிருந்தா, ரிட்டர்ன் வரும்போது ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம்.. நான் போய்ட்டு வரேன்..” என பதட்டமாக கூறி கிளம்ப, விஜி திகைத்து போய் நின்றுவிட்டார்..
‘உனக்கு எப்படி அந்த குடும்பத்து பொண்ணை பிடிச்சது’ விஜி வந்ததில் இருந்து இந்த ஒரு கேள்வியை மட்டும் தான் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அவருக்கு மனதே ஆறவில்லை. அவர்கள் கண் முன் தான் மஞ்சரி அகானாவை வைத்துக்கொண்டு அத்தனை கஷ்டப்பட்டார். அன்று தங்களிடம் வந்ததால் மட்டுமே மஞ்சரி ஓரளவுக்கு தேறி, வாழ்க்கையின் ஓட்டத்தில் கலந்து, மகளுக்காக என ஓட ஆரம்பித்தார்.
இதே அவர்களிடம் வராமல் போயிருந்தால் இன்று அந்த இரண்டு பெண்களின் நிலையும் என்னவாகி இருக்குமோ?
அந்த பயம் இப்போது வரைக்கும் விஜியிடம் இருக்க, மகன் செய்த செயலை அவரால் ஏற்கவே முடியவில்லை.
“ம்மா.. நான் என்ன செஞ்சாலும் அது அகிக்காகன்னு கொஞ்சம் யோசிங்க..” என ஒரு கட்டத்தில் கத்திவிட்டான்.
ஆர்யனின் அப்பா முருகானந்தனும் “விடு விஜி.. அடுத்து என்ன செய்றதுன்னு மட்டும் பாரு..” என மனைவியை சமாளித்திருந்தார்.
“இன்னும் படிப்பு கூட முடியல..” என புலம்பினாலும், மகியின் முகத்தில் தெரிந்த பயத்தில் அமைதியாகிவிட்டார்.
மஞ்சரியும், அகானாவும் பெருமளவு விஜியை சமாதானம் செய்திருந்தனர்.
“விஜிமா.. ஆரி கண்டிப்பா இங்க இருக்கமாட்டான். இங்க இருந்தாதான் நாம பயப்படனும். அதோட அந்த பொண்ணும் கொஞ்சம் நல்லவதான் போல. அவனுக்காக நிக்கிறா இல்ல. அதோட அவனுக்கு மகியை பிடிச்சிருக்கு. ரொம்ப எல்லாம் பயந்து யோசிக்காதீங்க..” என்றிருந்தாள் அகானா.
யார் என்ன சொல்லி சமாதானம் செய்திருந்தாலும் விஜிக்கு இந்த சம்மந்தம் ஒப்பவே இல்லை.
அவருக்கு இப்போதும் ‘வாழ்க்கையை வெறுத்து, வாழவே பிடிக்காமல், உடல்நலமில்லாத குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, பரிதவிப்போடு தன் முன் நின்ற மஞ்சரி’ தான் நினைவுக்கு வந்தார்.
என்ன முயன்றும் இதை ஏற்கவே முடியவில்லை. மனதை மகனுக்காக என சமாதானம் செய்ய முயற்சித்தார்.
“விஜி.. உன் வருத்தம், கோபம் எல்லாம் எனக்கு புரியாம இல்லை. சொல்லப்போனா எனக்குமே இதுல துளி விருப்பம் இல்ல. ஆனா ஆரி அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிருக்கான். நம்ம வளர்ப்பு சரியா இருக்கனும். அந்த பொண்ணை நாம நியாயப்படுத்தனும். நம்ம பையனோட மரியாதையை நாம காப்பாத்தனும். அகி சொன்ன மாதிரி அவங்க இங்க இருக்க போறது இல்ல. அப்புறம் ஏன் இவ்ளோ பயப்படுற..” என்று கணவர் கூற, இதெல்லாம் கணவர் சொல்லாமலே விஜிக்கு புரியத்தான் செய்தது.
ஆனால் அவரின் பையம் அதுவல்ல… ரவியைப் போல மகிழினியும் மகனை பாதியில் விட்டு விடுவாளோ என்பதுதான்.
அதை தப்பென்று சொல்ல முடியாதே.. காரணம் அங்கிருக்கும் நபர்கள். ரஞ்சனியும், மைதியும் எதையும் செய்யக் கூடியவர்கள் தானே.
“என்னோட பயமே வேறப்பா..” என கணவருக்கு தன் பயத்தை விஜி கூற,
“இதை தப்புனு சொல்ல முடியாது. அதுக்காக அப்படி யோசிக்கவும் கூடாது. ஆரி அதுக்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கமாட்டான். அன்ட் மகிழினியோட அண்ணனும் அப்பாவும் கண்டிப்பா இப்படியொரு பிரச்சினை வர விட மாட்டாங்க.. நீ பயப்படாம அந்த பொண்ணுக்கிட்ட பேசு. வந்து இவ்ளோ நேரம் ஆச்சு. இன்னும் ரூம் விட்டு வெளியவே வரல. ரொம்ப பயந்துருக்கும் போல. போய் பார்த்துட்டு வா..” என சமாதானம் செய்தார்.
கணவரின் பேச்சுக்கு பிறகு விஜியிடம் பெரியளவில் மறுப்பு இல்லை. அவரே மகியை போய் பார்த்தார். அறைக்குள் வந்தவரிடம் முதல் வார்த்தையாக “சாரி ஆன்டி..” என மகியே ஆரம்பித்தாள்.
இதுவரை அவளை ‘ஏன்?’ என்று யோசித்த மனம் இந்த நொடி அவள்தான் என முடிவு செய்தது.
“நீங்க.. நான்.. நான்.. சாரி ஆன்டி..” என ஏதோ சொல்ல வந்து திணறிக்கொண்டே இருந்தாள்.
ஆனாலும் விஜி பதில் பேசாமல் அவளையே கூர்மையாக பார்க்க, முகம் வெளுத்துப் போனது மகிக்கு.
“ஸாரி ஆன்டி.. அது ஆரி சாரை எங்க வீட்டுல தப்பா நினைப்பாங்க, அப்புறம் கோபத்துல ஏதாச்சும் செஞ்சிட்டான்ற பயத்துல, நான் நானே தாலியைக் கட்டிக்கிட்டேன்..” என விழிகள் கலங்க குற்றவுணர்ச்சியுடன் சொல்லி முடிக்க,
“என் பையனை எனக்குத் தெரியும்?” என ஒற்றை வார்த்தையில் அவர் முடிக்க, மிரண்டு விழித்தாள் மகி..
“அவன் தப்பு செஞ்சிருக்கான். அதற்கான தண்டனையை உன் வீட்டு ஆளுங்க செய்றதுல என்ன தப்பு இருக்கு.. அவனை நீ ஏன் காப்பாத்த நினைக்கிற..”
“இல்ல.. அது வந்து.. அது ஆரி சார் என்னை லவ் பண்றார்..” என நிறுத்தி விஜியை பார்க்க,
அவரோ ‘மேலே சொல்லு’ என்பது போல் பார்க்க,
“இல்ல.. அவர் என்னை லவ் பண்றார்.. நான் நானும்தான். எனக்க்கும் அவரைப் பிடிச்சிருக்கு. இப்போ நான் இதை செய்யாம விட்டிருந்தா, நாங்க மறுபடியும் சேர வாய்ப்பிருக்குமான்னு தெரியல.. அதான்.. சாரி ஆன்டி..” என்றவளுக்கு விழிகள் கலங்கி வழியத் தொடங்கியது.
“ம்ம்..” என்று பெருமூச்சு விட்டாலும், மகியை சமாதானம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை.
“எனக்கும் மஞ்சரிக்கு உறவு முறை எல்லாம் கிடையாது. நானும் அவளும் படிக்கும் போது ப்ரண்ட்ஸ். என்னைவிட ஜூனியர்தான். என் மேல அவளுக்கு அன்பும் மரியாதையும் அதிகம். அவளை மாதிரி ஒரு அருமையான பொண்ணை தேடினாலும் கிடைக்காது.”
“ரவி மஞ்சரி பின்னாடி ஒரு வருசமா சுத்தினது. அவளுக்கும் பிடிச்சது எல்லாம் எனக்கு ஆரம்பத்துல இருந்தே தெரியும். அவங்க காதலைப் பார்த்து பிரமிச்சு போயிருக்கேன். காதலிக்கும் போது ரவி அவளை உள்ளங்கையில வச்சு தாங்குவார். ஒருநாள் லீவ் கிடைச்சாலும் இவளுக்காக திருநெல்வேலில இருந்து வந்துடுவார். அப்போ எல்லாம் அவ முகத்துல இருக்குற பெருமையும், சந்தோசமும் பார்த்து நாங்க எல்லாம் அவ்ளோ பொறாமை படுவோம்.
அதுக்குப் பிறகு ப்ரண்ட்ஸ் அவங்க அவங்க லைப் பார்த்துட்டு போய்ட்டோம். மஞ்சரி மட்டும் எப்போவும் என் கூட டச்ல இருப்பா.
அப்போதான் அவ வேலைக்கு போறதா சொன்னா? அப்பவே அவளோட வயசு இருபத்தி நாலு. வீட்டுல கல்யாணத்துக்கு பயங்கர ப்ரெஷர். அப்போ ரவி படிச்சிட்டு இருந்தார். அவங்க அம்மா அவளை அடிச்சி, பெரிய பிரச்சினை ஆகி ரெண்டு டைம் சூசைட் கூட அட்டென் பண்ணிருக்கா. எங்க யாருக்கும் இது தெரியாது. மஞ்சரி ஒர்க் போகவும் கொஞ்சம் அமைதியா இருந்தாங்க போல வீட்டுல.
அப்போ ரவி வீட்டுல ரொம்ப கஷ்டம். அவருக்கு ஃபீஸ் கூட கட்ட முடியாம இருந்தாங்க. மஞ்சரியோட சம்பளம் எல்லாம் ரவிக்குதான் போகும். மஞ்சரி வீட்டுலயும் விட்டுட்டாங்க. ரவி வீட்டுக்கு தெரிஞ்சாலும் பெருசா கண்டுக்கல.
ரவியோட படிப்பு முடியவும் மறுபடியும் மஞ்சு வீட்டுல ப்ரெஷர் கொடுக்க, மஞ்சு ரவிக்கு ப்ரெஷர் கொடுக்கன்னு ஆரம்பிச்சு, அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க முன்னாடியே கல்யாணம் நடந்துடுச்சு. அதுதான் அவங்க செஞ்ச பெரிய தப்பு.
பொறுத்தது எல்லாம் பொறுத்தாங்க. இன்னும் கொஞ்சம் லைஃஃபை ஸ்டேபிள் பண்ணிட்டு கல்யாணம் செஞ்சிருக்கலாம்.
அவசரப்பட்டு பண்ணிட்டாங்க. ஆனா மஞ்சு அவ்ளோ சப்போர்ட்டா இருந்தா. குழந்தை பிறக்கிற வரைக்குமே வேலைக்கு போனா. மார்னிங்க் வேலைக்கு போனா. வலி வந்து ஹாஸ்பிடல் கொண்டு போனாங்க. அகி பிறந்துட்டா.
அதுவரைக்கும் இவங்க கல்யாணம் ரவி வீட்டுல தெரியல. அகி பிறந்த பிறகு எல்லாமே மாறிடுச்சு. அவங்க எதிர்பார்த்த வாழ்க்கை வாழல. நாங்க எதிர்பார்த்த மாதிரியும் வாழல.
ரவியோட வீட்டுல மஞ்சுவை விட்டுட்டு வந்தாலே ஆகனும் சொன்னாங்க. ஆரம்பத்துல ரவி ஒத்துக்கல… ஆனா போக போக..” என அதுவரைக்கும் ஒரு ஃப்லோவில் சொல்லிக் கொண்டு வந்த விஜி அந்த இடத்தில் அப்படியே நிறுத்திவிட்டார்.
“எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லமாட்டேன். ஆனா அம்மாவும் பாட்டியும் என்ன செஞ்சாங்கன்னு தெரியும்..” என மகி நிறுத்த,
“ம்ம் அவங்க ஆசை எப்படியோ இருக்கட்டும். ஆனா ரவி செஞ்சதை தான் என்னால ஏத்துக்கவே முடியல.. அவரை நாங்க எந்தளவுக்கு நம்பியிருந்தா ‘மஞ்சரி எங்ககிட்ட சொல்லும் போது, ரவி அப்படியெல்லாம் இல்லன்னு’ சொல்லிருப்போம்.
ஆனா உண்மை அதுதானே.. அகியோட ஆபரேஷன் வரைக்குமே எங்களுக்கு எதுவும் தெரியாது, மஞ்சு சொல்லவும் இல்ல.
“நாங்க மதுரைக்கு ஒரு மேரேஜுக்கு வந்த போது கவிதா அக்காதான் எங்களுக்கு இதெல்லாம் சொன்னாங்க. அதுக்கு பிறகு நாங்க அகியை ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு, உனக்கு எந்த உதவின்னாலும், எப்போ வேணும்னாலும் எங்கிட்ட வரலாம்னு சொல்லிட்டு போனேன்.”
“அப்போவும் ஒரு நம்பிக்கை. ரவி கண்டிப்பா மஞ்சுவை விட மாட்டார்னு.. ஆனா..” என்று நிறுத்திய விஜி “மஞ்சு கூட இருந்த மூன்றாவது மனுஷியான எனக்கே இது எவ்வளவு ஏமாற்றமும், வலியும் கொடுக்குதுன்னா மஞ்சுவை யோசிச்சு பாரு. அதேநேரம் அகி பிறந்ததுல இருந்து கையை விட்டு கீழ இறக்கினதே இல்ல. அவளை விட்டுட்டு போனதுதான் தாங்க முடியாத வேதனை..” என்றவர்,
“அகியை இந்தளவுக்கு மீட்டு கொண்டு வந்தது ஆரிதான். அவன் இல்லைன்னா அகியை நாங்க தொலைச்சிருப்போம்.. அவனுக்கும் அகி அவ்ளோ முக்கியம். அகிக்காக எந்த எல்லைக்கும் போவான். அதுக்கு இந்த சம்பவமே சாட்சி.. அதே போலத்தான் அகியும்.. ஆரிக்கு ஒன்னுன்னா அவளும் சும்மா இருக்கமாட்டா..” என மகியை கூர்மையாக பார்த்தவர் “என் பயம் என்னனு உனக்கு புரியுதா?” என்றார்.
மகிக்கு புரியாமல் இருக்குமா? ரவியைப் போலவே தானும் இந்த வாழ்க்கையிலிருந்து பாதியில் சென்று விடுவேனோ என்று பயப்படுகிறார் என புரிந்தது.
“நான் ஆரி சார் கூட வாழ்ந்துதான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும். அவரே வேண்டாம்னு என்னை விட்டுட்டு போனாலும், நான் போகமாட்டேன்னு டைலாக் எல்லாம் பேசமாட்டேன். உங்க நம்பிக்கையை கெடுத்துக்காம, நீங்க விரும்பின, நாங்க ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையை கண்டிப்பா வாழுவோம். அதே நேரம் மஞ்சு அத்தைக்கோ, அம்முவுக்கோ நானோ என் வீட்டாளுங்களோ எந்த கஷ்டமும் கொடுக்கமாட்டோம்..” என முடிக்க, விஜியின் முகத்தில் சன்னமான புன்னகை ஒட்டிக்கொண்டது.
“சரி.. நாங்க உங்க வீட்டுக்கு போய்ட்டு வரோம். அங்க என்ன நடந்தாலும், நீங்க தைரியமா இருக்கனும்..”
“ஹான்.. நான் நானும் அங்க வரட்டா.. இதெல்லாம் முறைப்படி நடந்தா சரியா இருக்கும்னு தோணுது. அப்போதான் மஞ்சு அத்தைக்கும் ஒரு மரியாதை கிடைக்கும்னு நினைக்கிறேன்.”
“சரிதான்.. ஆனா உங்க வீட்டு ஆளுங்களை நம்ப முடியாதே. உன்னை ஏமாத்திட்டா?”
“இல்ல அப்பா இருக்கார். ஆகன் இருக்கான். கண்டிப்பா அப்படி நடக்க விடமாட்டாங்க. இது.. இது எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு. ஆரி சார் நான் இப்படி செய்வேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டார் போல. நேத்து இருந்து எங்கிட்ட பேசவே இல்ல..” என்ற நேரம் அவளுக்கு அழுகை பீறிக்கொண்டு வந்தது.
“ம்ச்.. அது உன்மேல உள்ள கோபம் கிடையாது. நாங்க.. எங்கலை எப்படி சமாளிக்கிறதுனு பயம்.. பதட்டம்.. இப்போ வந்து பேசுவான்..” என அவளைத் தட்டி கொடுத்து வெளியில் வர, ஆரியன் பதட்டமாக போன் பேசிக் கொண்டிருந்தான்.
“என்ன ஆரி..” என முருகானந்தம் பதட்டமாக கேட்க,
“மம்மி.. இன்னைக்கு அகி மேகமலைக்கு ஒரு இன்ஸ்பெக்ஷன்க்கு போயிருந்தா, ரிட்டர்ன் வரும்போது ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம்.. நான் போய்ட்டு வரேன்..” என பதட்டமாக கூறி கிளம்ப, விஜி திகைத்து போய் நின்றுவிட்டார்..