• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 35

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
492
113
Tirupur
அகானா - 35

“அகி..” என்ற ஆர்யனின் அதட்டல் அந்த அறையையே ஒரு நொடி அதிர வைத்தது.

“நீ என்ன பண்ணி வச்சிருக்க..?” என மீண்டும் அதட்ட,

“ம்ச் என்ன வேணும் உனக்கு?” என சலிப்பாக வந்தது அகானாவின் குரல்.

“அதே கொஸ்டீன் தான் எங்கிட்டயும் இருக்கு அகி.” என்ற ஆரியின் குரலில் அத்தனை கோபமும், வேதனையும்.

அந்த அறையின் ஒரு ஓரத்தில் தளர்ந்து போய் அமர்ந்திருந்தான் ஆகன். அவனுக்கு உடலும் மனமும் ஓய்ந்து போயிருந்தது.

“ம்ச் விடு ஆரி.. நான் கிளம்பறேன். நீ பார்த்துக்கோ.. நீங்க ஈவ்னிங்க் வரீங்கன்னு வீட்டுல சொல்லிடுறேன்..” என்றான் ஆகன்.

“இல்ல.. இல்ல சீனியர். நாளைக்கு பார்த்துக்கலாம். இன்னைக்கு எப்படி? இன்னும் மஞ்சு ம்மா வேற வரல. இவளை எப்படி தனியா விட்டுட்டு வர..” என ஆரியன் தயங்க.

“பைத்தியம் போல பேசாத ஆரி. நீ மகிக்கு ஹோப் கொடுத்துருக்க. அவ நம்பிக்கையை கெடுத்துடாத. காதலிக்கிற பொண்ணுக்கு ஒரு ஹோப் கொடுத்தா, கடைசி வரை அதை காப்பாத்தனும். முதல்ல அங்க போய்ட்டு வாங்க. நான் இங்க பார்த்துக்கிறேன். கண்ணன் அங்கிள் வைஃப் இப்போ வருவாங்க. அண்ட் மாலினி அண்ணி வந்துட்டு இருக்காங்க..” என்றாள் கோபமாக.

“நீ வாயை மூடு.. உன்கிட்ட நான் என்ன செய்யனும்னு கேட்கல..” என்றான் ஆரியன் அவளுக்கு மேல் கோபமாக.

“டோன்ட் சவுட் ஆரி.. நீ கிளம்பு.. அவங்களையும் கிளம்ப சொல்லு.” என்றாள் ஆத்திரத்தின் உச்சத்தில்.

“எனக்குத் தெரியும் அகி.. நீ உன்னோட வேலையை மட்டும் பாரு..” என்று ஆரியன் சொல்லி முடிக்கும் முன்னே,

“எனக்கு ஒன் அவர்ல என்ன முடிவு பண்ணிருக்கீங்கன்னு சொல்லிடு ஆரி. ஆன்டிக்கிட்ட பேசு. அதுக்கு தகுந்த மாதிரி நான் வீட்டுல பேசுறேன்..” என்று அகானாவிடம் வந்தவன், அவளுக்கு மட்டும் கேட்கும்படி குனிந்து “நீ நினைச்சது தானே நடக்குது. அப்புறம் ஏன் இவ்ளோ சீன் போடுற.. இந்த ஃபங்க்சன் நடக்கக்கூடாதுனு நினைச்ச, அது நடக்க போகுதுல்ல.” என்று ஆத்திரமாக கேட்டு வெளியில் சென்றுவிட, அகானாவின் இதழ்களில் வன்ம புன்னகை.

“சீனியர் இப்போ என்ன சொன்னார்? நீ ஏன் இப்படி சிரிக்கிற?” என்ற ஆரியனிடம்,

“ம்ச் அதெல்லாம் சொல்ல முடியாது. நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு. அங்க எல்லாரும் பயந்துட்டு இருப்பாங்க.. மகியைப் பாரு ஆரி. நான் இப்போ நல்லாதான் இருக்கேன்..” என்றவளைப் பார்த்து ஆரியனுக்கு கோபம் தான் அதிகமானது.

‘என்ன பண்ணி வச்சிருக்கா இவ? தன்னையே வருத்திக்கிற இந்த கோபம் சரியா? யாருக்காகவோ ஏன் தன் உயிரை பனையம் வச்சிட்டா.?’ நினைக்க நினைக்க ஆத்திரம் அளவு கடந்தது ஆரியனுக்கு.

“ஏன் அகி இப்படி பண்ணிட்ட? அவங்களுக்காக ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுத்த?” என்றவனின் குரலில் இப்போது அளவு கடந்த வேதனை.

“ம்ச் ஆரி ப்ளீஸ். அதையே கேட்காத.. நான் என் உயிரை வச்சு எல்லாம் ரிஸ்க் எடுக்கல. ஜஸ்ட் சின்ன ஸ்லிப் அவ்ளோதான். ரொம்ப கவனமாதான் செஞ்சேன்.” என்றாள் அகானாவும் சலிப்பாக.

“அதுதான் கேட்குறேன்.. ஏன் அப்படி செஞ்ச?” என்றான் ஆரி.

“ஏன் அப்படி செஞ்ச? ஏன் அப்படி செஞ்சன்னு எத்தனை தடவை கேட்ப..? நான் பக்காவா ப்ளான் பண்ணி அந்த மைதிலிக்கு ஸ்கெட்ச் போட்டா, உன் சீனியர் அந்த பொம்பளயை ஊரவிட்டு அனுப்பி வைப்பான்.” என ஆக்ரோசமாக கேட்டவள், “அந்தாளுக்கு இப்போதன் பொண்ணு மேல பாசம் வந்துருக்கு. அந்த பாசம் எவ்ளோ தூரம் வழுக்கிக்கிட்டு போகுதுனு தெரிஞ்சிக்க வேண்டாம். அதான் ஜஸ்ட் சின்ன ஆக்சிடென்ட். பரவால்ல போன வேகத்துல திரும்பி வந்துட்டு இருக்கார்.. நான் இதை எதிர்பார்க்கவே இல்ல. நல்ல இம்ப்ரூவ்மென்ட்..” என நக்கலாக கூறி சிரிக்க,

“ஸ்டுபிட் மாதிரி பண்ணாத அகி.. இதெல்லாம் உன்னோட கேரியரை ஸ்பாயில் பண்ணும்..” என்ற ஆரியனுக்கு உண்மையிலேயே அகானாவை நினைத்து வேதனையும், பயமும்.

அதே நேரம் மாலினியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான் நவீன். அவர்கள் இருவரையும் பார்த்து சோம்பலாக புன்னகைத்தாள் அகானா.

மாலினி பதிலுக்கு புன்னகைக்க, நவீன் யோசனையாகத்தான் பார்த்தான்.

“ஆரி ப்ளீஸ்.. அதுதான் இவங்க வந்துட்டாங்களே.. இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவும் வந்துடுவாங்க. இந்த சலைன் முடிஞ்சதும், நானும் வீட்டுக்கு கிளம்பிடுவேன். நீ போய் அதை பாரு, இப்போ நீங்க போகலன்னா மகியோட அம்மா ஃபேமிலி உன்னை தப்பா நினைப்பாங்க..” என்றாள் வேண்டும் குரலில்.

என்ன பிரச்சினை என்று தெரியாவிட்டாலும், “நாங்க அம்முவை பார்த்துக்கிறோம் ப்ரோ.. நீங்க போய்ட்டு வாங்க. அம்மு சொல்ற மாதிரி அந்த ரஞ்சனிம்மா உங்களை அவாய்ட் பண்ண ரீசன் தேடிட்டு இருப்பாங்க. இதை அப்படியே பிடிச்சிப்பாங்க..” என்றான் நவீனும்.

ஆரிக்கும் இதெல்லாம் புரியத்தான் செய்தது. ஆனாலும் என தயங்க,

“மாமா நீங்க அங்க போய்ட்டு வாங்க. நீங்க பயப்படுற அளவுக்கு மகி ஒன்னும் மோசமில்ல. அந்த ரஞ்சனி பெரிம்மா மட்டும்தான் வில்லி மாதிரி சீன். மத்த மூனு பேரும் கொஞ்சம் நல்லவங்கதான். நீங்க தைரியமா போய்ட்டு வாங்க. அம்முவை நாங்க பார்த்துக்கிறோம்..” என மாலினி சட்டென முறை வைத்து பேசி, ஆரியை சமாதானம் செய்ய, இதற்கு மேல் கிளம்பாமல் இருந்தால் சரியாக இருக்காது, அதோடு மகியிடமும் நேத்து இருந்து அவனும் பேசவில்லை, அவளும் தனக்காக பார்த்துக் கொண்டிருப்பாள் என புரிந்து ஆரியனும் அகானாவிடம் பல பத்திரங்களை கூறி கிளம்பிவிட்டான்.

“என்ன அம்மு இதெல்லாம்?” என நவீன் வருத்தமாக கேட்க, அதே வருத்தம் தான் மாலினியின் முகத்திலும்.

அப்படி என்னதான் செய்தாள் அகானா?

முதல் நாள் இரவு நித்யாவிடம் கூறியதை போலவே, காலையில் அகானா மேகமலைக்கு முன்னே செல்ல, நித்யாவும் குழந்தைகளும் பின்னாடி வந்தனர்.

இன்ஸ்பெக்ஷன் முடிந்து நித்யாவின் குழந்தைகளோடு நேரம் செலவிட்டு அவர்களை முன்னே அனுப்பி விட்டு, இவள் பின்னே வர, அதே நேரம் சரியாக இவர்களுக்கு எதிரில் வந்த மினி லாரி இவர்களை உரசிவிட்டு செல்ல, சீட் பெல்ட் அணிந்திருந்த கண்ணனுக்கு அடியில்லை. ஆனால் சீட் பெல்ட் அணியாத அகானாவிற்கு தலையிலும், வலது கையிலும் அடி.

தலையில் சிறிய அளவில்தான் அடி என்றாலும், கையில் கட்டு போடும் அளவிற்கு எலும்பு முறிவு. அவள் நினைத்திருந்தால் நிச்சயம் இந்த அடி படாமல் தன்னைக் காத்த்திருக்க முடியும்.

அவர்களின் பயிற்சியில் முதல் பயிற்சியே தற்காத்துக் கொள்ளுதல் தான். அதோடு கண்ணனும் மலைப்பாதை என்பதால், இரண்டு முறை ‘சீட் பெல்ட் போடுங்க மேடம்’ என்று எச்சரிக்கவும் செய்தார்.
ஆனால் அகானாதான் அதை தனக்கு சாதகாமாக மாற்றிக் கொண்டாள்.

அவளை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்னமே பல மீடியாக்கள் ‘தேனி மாவட்ட் கலெக்டருக்கு கொலை முயற்சி’ என்ற செய்திகளை பரப்பி விட்டனர்.

அதைப் பார்த்த ரவீந்திரன் சென்ற வேகத்திலேயே மீண்டும் தேனிக்கு வந்து கொண்டிருந்தார். இதைத்தானே அகானாவும் எதிர்பார்த்தாள்.

கிளம்பும் போது மைதிலியிடம் “நீ அங்க வரணும்னு அவசியம் இல்ல மைதிலி. நீ அங்க வந்தாலும் பிரச்சினைதான். எப்போ வேனும்னாலும் அரெஸ்ட் பண்ண வாய்ப்பிருக்கு..” என்றார் ரவீந்திரன்.

“நான் இங்க தனியா இருந்து என்ன செய்ய? அதெல்லாம் ஆகன் பார்த்துப்பான். இப்போ முன்ஜாமீன் கூட வாங்கிருப்பான்..” என்ற மைதிலியும் ரவியுடன் கிளம்பி விட்டார்.

மைதிலிக்கு பிடிக்கவில்லைதான். கோபம்தான். ஆத்திரம்தான். அவளுக்காக.. அந்த அகானாவிற்காக ரவீந்திரன் பேசுகிறார் என்று நினைக்கும் போதே கொலை வெறி வரும் அளவிற்கு கோபம்தான்.

ஆனால் அதை இங்கு வைத்து காட்ட முடியாதே.. முதலில் ஊருக்கு போக வேண்டும். பின்தான் தன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, ரவியோடு கிளம்பிவிட்டார்.

இங்கு வீட்டில் மிகவும் பயத்தில் இருந்தாள் மகிழினி. இது ஒரு வேளை மைதிலி அத்தையின் திட்டமாக இருக்குமோ என்று நினைத்து பயந்தாள்.

அதற்கு தகுந்ததை போலவே முருகானந்தமும் “வந்த கொஞ்ச நாள்ல எத்தனை பேரை பகைச்சு வச்சிருக்கா பாரு. ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு ஆளை ‘இவரா இருக்குமோன்னு.?’ காட்டுறாங்க. எதுக்கு இவ்ளோ அவசரம்..” என மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

விஜிக்கும் அதே பயம்தான். ஆனால் அதை வெளிக்காட்டாமல் “எதுக்கு இப்படி பயப்படுறீங்க? இந்த வேலையில ரிஸ்க் அதிகம்னு நமக்கு தெரியும்ல. நாம பயந்து அவளையும் பயப்பட வைக்காதீங்க. மஞ்சுக்காக அவ கவனமாத்தான் இருப்பா..” என்றார்.

அதோடு “அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு நாம வர லேட்டாகும்னு சொல்லிடுங்க. நாம சொல்றதுதான் முறையும்..” என்றார் விஜி.

முருகானந்தமும் மனைவி சொன்னதை செய்துவிட்டு, மீண்டும் நியூஸ் சேனல்களில் தன் பார்வையை பதித்துவிட்டார்.

அப்போதுதான் பயந்தபடி சுவரோடு சுவராக நின்றிருந்த மகியைப் பார்த்தார் விஜி.

அவள் நின்ற நிலை அவருக்கே ஒரு மாதிரி வருத்தத்தைக் கொடுக்க, “இங்க வாம்மா” என அழைத்து அருகில் அமர வைத்துக் கொண்டார்.

“உன் பயம் எனக்கு புரியுது. ஆனா நாம பயந்தா அகி டல்லாகிடுவா. அவளை நாம மோட்டிவேட் பண்ணனுமே தவிர, பயமுறுத்தக்கூடாது. என்ன கொஞ்சம் கவனமா இருன்னு மட்டும் சொல்லிக்கலாம்..” என்றார் தன் எண்ணத்தை.

“ம்ம் சரி ஆன்டி..” என்று மட்டும் சொல்லிக் கொண்டாள் மகிழினி.

போன் பேசிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்த கணவனையே யோசனையாக பார்த்தார் ரஞ்சனி.

“என்ன மாமா.?” என்று கேட்ட ரஞ்சனியிடம் “எனக்குத் தெரியாம உன் அண்ணி கூட சேர்ந்து புதுசா எதுவும் திட்டம் போடுறியா.?” என்றார் ஆத்திரமாக.

“என்ன சொல்றீங்கன்னு தெளிவா சொல்லுங்க மாமா.?” என ரஞ்சனியும் கோபமாக கேட்க,

“ஹான் இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் போன இடத்துல அம்முவுக்கு ஆக்சிடென்ட் ஆகிருக்கு. அதுதான் உங்க மேல சந்தேகமா இருக்க்கு..” என்றார் மனைவியை முறைத்தபடி.

“ஹான் அப்படியா? என்ன மாமா நீங்க? எவ்ளோ சந்தோசமான விசயத்தை இப்படி சொல்றீங்க. நல்லா இருக்காளா? இல்ல?” என முடிக்கும் முன்னே

“ம்மா..” என கர்ஜித்தான் ஆகன். அப்போதுதான் வீட்டிற்குள் வந்தான்.

“இவ எல்லாம் திருந்தவே மாட்டா கண்ணா.. இவளுக்காக நீ உன் வாழ்க்கையை பணையம் வைக்காத.” என மனைவியை கேவலமாக பார்த்துவிட்டு போய்விட,

“ம்மா.. இனி எப்பவும் நீங்க அம்முவைப்பத்தி பேசக்கூடாது. அப்படி பேசினா நீங்க உங்க மகனை மறந்துடுங்க. அம்மு இல்லன்னா உங்க பையன் உங்களுக்கு இல்ல. அம்மு மேல நீங்க இந்தளவுக்கு கோபத்தையும் வன்மத்தையும் காட்டுறது இதுதான் கடைசியா இருக்கனும். இன்னொரு முறை உங்களை நான் இப்படி பார்த்தா, நான்.. நான் இங்க இல்ல எங்கேயும் இருக்க மாட்டேன்..” என்றான் வேதனையான குரலில்.

“கண்ணா நீ என்ன பேசிட்டு இருக்க? அந்த ஓடுகாளி பெத்தவளுக்காக..” என முடிக்கும் முன்னே, கையிலிருந்த செல்போனை தூக்கி எதிரில் இருந்த 52 இஞ்ச் டிவியை நோக்கி எரிந்தான்.

அவன் எரிந்ததில் செல்போனும், டிவியும் சுக்கல் சுக்கலாக நொறுங்கி விழ, சங்கரும் மற்ற வேலைக்காரர்களும் அந்த சத்தத்தில் ஓடி வர, மகனின் செய்கையில் அதிர்ச்சியில் வாயில் கைவைத்து நடுங்கிப் போய் நின்றிருந்த ரஞ்சனியைப் பார்த்து “ச்சீ..” என்று வெளியில் சென்றுவிட்டான் ஆகன்.

“என்னடி பண்ண? இல்ல என்ன பேசின? உன் வாய் குறையவே குறையாதா? அப்படி என்ன வன்மம் உனக்கு அந்த சின்ன பொண்ணு மேல.. நம்ம புள்ளைங்க வாழ்க்கையை விட, உனக்கு உன் அண்ணி வாழ்க்கைதான் முக்கியமா போச்சா.. இனி நீ இங்க இருந்து ஒரு மண்ணும் புடுங்க வேண்டாம். இப்படியே உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பு. நான் உனக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பறேன்..” என்று கத்திய சங்கர், அதோடு நிற்காமல் வினோத்திற்கு அழைத்து “உன் அக்கா கூட வாழ எனக்கு விருப்பம் இல்ல வினோ.. அவளை வந்து கூப்பிட்டு போங்க.. இனி கோர்ட்ல பார்க்கலாம்..” என இறுகிய குரலில் கூறி போனை வைத்துவிட்டார்.

மகனின் செய்கையிலேயே அதிர்ந்து நின்ற ரஞ்சனி, கணவரின் பேச்சில் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார்.