• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் பார்வையில் கரைந்தேனடி-2

kkp16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
7
6
3
Tamilnadu
முகிலன்... அவள் கல்லூரி பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும் போது எதிரே தெரியாமல் ஒரு நாள் பைக்கை அவள் மீது இடிக்க, அப்படி உண்டான காதல்.

அழகான வார்த்தைகள், உற்சாகமான உறவுகள், எதிர்காலம் பற்றி கனவுகள். முதலில் அவன் மீராவை புரிந்து கொண்டது போல தான் இருந்தது. அவசர அவசரமாக காதல் மயக்கத்தில் இருந்த இரண்டு பேரும் ஒரு வருடத்திற்குள்ளேயே கல்யாணத்தை பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்கள்..

அவர்களின் திருமணம் குடும்ப ஒப்புதல் பெற்ற காதல் திருமணமாக நடந்தது.

அவன் மென்மையாகப் பேசும் ஆண். தனியாக வாழும் தாயுடன் வளர்ந்தவன். முதல் சில மாதங்கள் அவள் கனவுகள் போலவே இருந்தது அவளது வாழ்க்கை


“நீயில்லாம என் நாள் ஆரம்பிக்கவே முடியல…நீ என்னோட உலகம்…” என்று நன்றாக தான் போனது

அவள் முழுமையாக அவனை நேசித்தாள். உற்சாகமாக தன் வாழ்வின் அடுத்தது என்ன, என்பதை நினைத்து தன் மனதில் ஒரு கோட்டை கட்டினாள். பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தாலும் பெற்றோர்கள் கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள் அவளை விட்டு..

ஆனால் திருமணத்துக்குப் பிறகு

அவன் மெதுவாக மாற ஆரம்பித்தான்.
முன்பிருந்த பாசம் எதுவும் இல்லாமல் ஒரு கட்டாயத்தில் அவளுடன் பேச ஆரம்பித்தான்..

முதல் வாரங்களில் அவன் வேலைக்கு சென்று இரவு தாமதமாக வருவதைப் பற்றிக் கவலைப்பட்டாள் மீரா..

அடுத்த வாரங்களில் அவனின் வருகை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று இருக்க

அவளோ “என்ன முகில் இதெல்லாம் வீட்டுக்கே ஒழுங்கா வர மாட்டீங்க” என கேட்கவும்

“ஒர்க் பிரஷர்” என்று ஒற்றை வார்த்தையை பதிலாக அழித்துவிட்டு அவன் அறைகள் செல்ல


அவள் ஆசையாக அவனுக்கு சமைத்து வைத்த உணவை கூட ருசி பார்க்காமல் தூங்கி விட்டான்..

மீரா தனிமையில் குடும்பத்தை எதிர்த்து தான் ஏதும் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் அவள் மனதில் வந்து போக..

ஆனால் அதையெல்லாம் அவள் முகிலனிடம் காட்டிக்கொள்ளவில்லை, தன் குடும்பத்திலும் காட்ட வில்லை. எப்படி காட்டுவாள் இவள் விரும்பி தேர்வு செய்த வாழ்க்கை தானே!

அவள் நேரமோ என்னமோ அவனுக்காக இருந்தது அவன் அம்மா மட்டும் தான்.. ஆனால் அவன் அம்மாவும் திடீரென இறந்து விட

அம்மாவின் இறுதிச் சடங்கை முடித்தவன் அதன் பிறகு இரவு வீடு திரும்பவே மாட்டான்.பேசும் நேரங்கள் குறைந்தன. அவள் தன் வீட்டில் தனக்காக சமைத்து சாப்பிட்டு அவனைப் பற்றியே யோசித்தவள் பைத்தியமாகாதது ஒன்றுதான் குறை

எல்லாம் இந்த காதலில் கிடைக்கும் என்று நினைத்து வந்தவளுக்கு ஏனோ ஏமாற்றம்.

திருமணத்திற்கு பிறகு அவள் நினைத்த மாதிரி அந்த வாழ்க்கை இல்லை என்பதை அவள் ஒரு மாதத்திலேயே புரிந்து கொண்டாள்..

முகிலன் அன்று இரவு வீட்டிற்கு வர,

“முகில் உன் கிட்ட நான் கண்டிப்பா பேசியே ஆகணும் ஒரு நிமிஷம் நில்லு” என அவன் அருகே போய் நிற்கவும்

“டோன்ட் டிஸ்டர்ப் மீ மீரா” என சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று மொபைலையும் லேப்டாப்பையும் எடுத்தவன்

அவள் அருகே வந்து நின்றதும், அவன் பாத்ரூமுக்குள் நுழைய

மொபைலில் மெசேஜ் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க

அவன் பாத்ரூமுக்குள் இருப்பதை பார்த்து அவள் முகில் மொபைலை எடுத்து பார்த்தவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..

அவளது கண்களில் விழுந்தது, அந்த “மீட் யு அகைன் டு நைட் பேபி” என மெசேஜை பார்த்தவள் கொதித்தாள்..

மீரா அவன் பாத்ரூமுக்குள் இருந்து வருவதை பார்த்ததும் நேரடியாக அவனிடமே கையில் இருந்தால் மொபைலின் மெசேஜை நீட்டி “இது என்ன”என்று கேட்க

அவன் கோபமடைந்து “இப்ப மொபைல கொடுக்க போறியா இல்லையா” என்று அவள் கையில் இருக்கும் மொபைலை பிடுங்க முயற்சிக்க

“எனக்கு எல்லாம் தெரியும் முகில் “என அவள் கண்ணீருடன் அவனிடம் சொல்ல

“உனக்கு என்ன தெரியும்னு நினைக்கிற? என அவன் கோபமாக கேட்கவும்

“என்னோட காதல் உனக்கு புரியலையா, எதுக்கு இப்படி எல்லாம் பண்ற..இது யாரு?” என மீரா கேட்ட கேள்விக்கு

அவன் என்னது உன் மேல இருக்கிற காதலா, இங்க பாரு மீரா எனக்கு எல்லா பொண்ணுங்களையும் பிடிக்கும் ஏன் எல்லார் கூடையும் நெருக்கமா இருக்கணும்னு நினைச்சு தான் சுத்தவே செய்வ பொண்ணுங்க பின்னாடி ஆனா நீ தான் கல்யாணத்துக்கு அப்புறம் தான் எல்லாம் அப்படின்னு சொன்னேன் அவ்வளவுதான் கல்யாணம் முடிஞ்சது நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது அதுக்கப்புறம் உன்னைய தொடவும் தோணல உன் கூட வாழனும் தோணல..

எங்க அம்மாவுக்காக ஒரு ரெண்டு வாரம் வந்துட்டு போயிட்டு இருந்தேன் அம்மாவே இல்ல இனிமேல் என்று அவன் சொல்ல ஆரம்பிப்பதற்கு

தன் கை விரல்கள் அவன் கன்னத்தில் தடமாய் பதியும் அளவுக்கு அவள் அடிக்க

ஏய் உனக்கு எங்க இருக்கணும்னா இரு அண்ணா அப்பப்ப வந்துட்டு போறேன் உன்னை தாலி கட்டுனதுக்காக உனக்கு ஏதாவது செய்யணும் நினைக்கிறேன் என்று அவன் கோபமாக அவள் அடித்த இடத்தில் கையை வைத்துக் கொண்டே சொல்ல

என்னை பாக்க உனக்கு எப்படிடா தெரியுது என மீரா அழுததன் கண்களை துடைத்துக்கொண்டு கோபத்தில் கேட்க

எனக்கு உன்னோட காதல் எதுவும் வேண்டாம் என்னால இங்க சுதந்திரமா இருக்க முடியல மீரா புரிஞ்சுக்கோ ஏதோ உன் கூட நான் இருக்கும்போது எனக்கு மூச்சு விடவே கஷ்டமா இருக்கு அந்த வாழ்க்கையை நான் நடிச்சு காலம் முழுவதும் உன் கூட வாழ முடியாது என வெளிப்படையாக முகில் சொல்லியதும்


இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவனாய் இப்போது இப்படி எல்லாம் பேசுகிறான் என நினைத்தவள்

முகில் என்று அவள் ஏதோ சொல்ல வர

இதுக்கு தான் வீட்டுக்கு வர்றதே கிடையாது என்று திரும்பவும் ஒரு டி-ஷர்டை போட்டுக்கொண்டு வெளியே அவன் கிளம்ப

அப்போது கிளம்பியவன் அதற்குப் பிறகு வார வாரமாக அவன் காணாமல் போனான்.

காதல் கேள்விக்கு பதிலாக கடுமையான மௌனம்.மீரா அழுதாள், தனிமையில் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள், “இப்படி இருப்பவன் உனக்கு தேவை தானா” என்று

ஆனால் எதையும் தன் வீட்டில் அப்போதும் சொல்லாமல் மௌனம் காத்தாள்..

ஒரு நாள் மீரா தனியாக கோவிலுக்கு நின்று கொண்டு வரும்போது கீழே மயங்கி விழ

அப்போது அந்த வழியில் போன மீராவின் அக்கா தான் அவளைப் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்..

மயக்கத்தில் இருந்து கண்விழித்து பார்த்த மீரா மருத்துவமனையில் இருக்க அருகே அர்ஜுன் யாழினி உடன் நின்று கொண்டு இருந்தான்..

அண்ணி நீங்க உங்க தங்கச்சி கிட்ட பேசிட்டு வாங்க நான் வெளியே நிற்கிறேன் என்று அர்ஜுன் சொல்லிவிட்டு செல்ல

என்னடி ஆச்சு கல்யாணம் முடிஞ்சு ஒரு போன் கூட எங்ககிட்ட பண்ணி பேசல என்ன அக்கா கேட்டதும் மீரா தன் கையை வைத்து வாயை பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தால்

ஏய் என்னாச்சுடி மீரா உன் ஆசைப்படி தானே கல்யாணம் முடிச்சோம் அப்புறம் என்ன அவள் கேட்பதற்குள் அக்கா என்று அவளை அணைத்து அழ

என்னடி ஆச்சு சொன்னா தானே தெரியும் என யாழினி கேட்கவும்

நடந்தது அனைத்தையும் மீரா சொல்ல

மீராவின் கன்னத்தில் தான் யாழினி ஓங்கி ஒரு அறை வைத்தாள்.. இவ்வளவு நடந்து இருக்கு இது எதையுமே நீ சொல்லாம இருக்க, ஒழுங்கா நம்ம வீட்டுக்கு வா என அவளை அவள் அம்மா வீட்டிற்கு அழைத்து வர

நடந்தது அனைத்தையும் யாழினி அம்மா அப்பாவிடம் சொல்ல அவர்கள் அப்படியே இடிந்து போய் உட்காரவும்

யாழினி தான் தைரியம் சொன்னால் “என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் நம்ம தங்கச்சி அப்படியே விடக்கூடாது” என சொல்ல

அதன் பிறகு மீரா வாரம் தோறும் மருத்துவர் ஆலோசனை பார்க்கத் தொடங்கினாள்.தனிமை, மன அழுத்தம், தூக்கமின்மை, இதெல்லாம் அவளுக்கு நிரந்தரமாக இருக்க..

“இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா” என கண்ணாடி முன் நின்று அவள் தன்னை பார்த்து கேட்டுக் கொள்ள


அதன் முடிவு டைவர்ஸ்

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கோர்ட் அறையில் அவளும் அவனும் மௌனமாக இருந்தார்கள்.
அவள் கையெழுத்திட்டபோது, அந்த பேப்பரில் கண்ணீர் துளி விழுந்தது.

முகிலன் மனம் கசக்காமல் வெளியே நடந்து போனான்.

அந்த நாளிலிருந்து மீரா திரும்பவும் சிரிக்கவில்லை.மனதில் ஒரு பதற்றம்
"நான் ஏன் நேசித்தேன்?"
"நான் ஏன் ஒழுக்கமாக இருந்தும் ஒதுக்கப்பட்டேன்?"என்ன தன் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்..

இரண்டு வருடங்கள்…
அவள் அமைதியாகவே வாழ்ந்தாள். இப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என நினைத்து ஆசிரியப் பணியை தொடர்ந்தாள்..

அவளின் உலகம் பள்ளி, புத்தகங்கள், மாணவர்கள், மற்றும் இரவு நேரங்களின் தனிமை.

அந்த தனிமைக்கு துணையாய் வந்தவன் தான் இந்த அர்ஜுன்.

அவள் வீட்டில் அவள் படும் கஷ்டங்கள் அம்மாவால் பார்க்க முடியாமல் அக்கா வீட்டிற்கு அனுப்பி வைக்க

அவளின் மௌனம் அர்ஜுனை அவளிடத்தில் சரணடைய செய்தது..

அர்ஜுன் வாயை திறந்தால் மூடவே மாட்டான். அப்படி கலகலப்பான பேச்சு அவனை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

ஆனால் மீராவோ அமைதி அதிலும் அவள் வாழ்க்கையை இழந்ததும் இன்னும் அமைதியாக இருந்தாள்.. அக்காவை தவிர வேறு யாரிடத்திலும் பேசக்கூட மாட்டாள்

தன் அக்கா, மாமாவுக்காக தான் இந்த திருமணத்திற்கே சம்மதித்தால் மீரா

ஆனால் அர்ஜுனா மீராவிற்காக தான் சம்மதித்தான்..

அவள் அவனை துளி கூட விரும்பவில்லை ஏனென்றால் அவளுக்கு இப்போது காதல் மீதி எல்லாம் நம்பிக்கை இல்லை.அவள் மனதில் காதல் என்ற வார்த்தையை அழித்தே விட்டாள்..

அப்படி அழித்தவளிடம் காதலை தேடி அலைகிறான் அர்ஜுன்..

அவள் எவ்வளவு பெரிய அழுத்தக்காரி என்று அர்ஜுனுக்கு தெரியும்.ஆனால் அர்ஜுனின் அளவு கடந்த காதலுக்கு சொந்தக்காரிஅவள்தான் என்று மீராவுக்கு இப்போது தெரியாது..

“ஹே மீரா நேத்து தானே மேரேஜ் ஆச்சு எதுக்கு இப்படி ரூம்லயா இருக்க,வா எங்கயாவது வெளியே போகலாம்” என அவள் பக்கத்தில் ஒரு குரல் கேட்க

கடந்த வாழ்க்கையின் புண்பாடுகள் இன்னும் ஆறவில்லை, ஆனால் சுகமாய் அரவணைக்கும் காற்று பக்கத்தில் வந்து நிற்கிறதே…

ஆம் அர்ஜுன் தான் அது..

“ஹான் இல்ல நான் வரல” என யோசித்து சொன்னவள்

“உன்ன கடத்திட்டு எல்லாம் போயிர மாட்டேன் வா” என்று சொல்லவும்

“இப்போ வரலன்னா நிஜமாவே அண்ணிய கூப்பிடுவேன்” என அவன் சொல்லவும்


“இப்ப என்ன வெளிய தான போனோம், வாங்க போலாம் “என கோபமாக அவனுடன் கிளம்ப

காரில் இரண்டு பேரும் போகும்போது

“நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா
நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா

மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா..
அய்யோ பஞ்சுமிட்டாயா..
மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா..
அய்யோ பஞ்சுமிட்டாயா”.

என்ற பாடல் காரில் ஒழிக்க,


அதனுடன் சேர்ந்து அவனும் ஒரு கையில் ஸ்டேரிங்கை பிடித்தபடி கையை ஆட்டிக் கொண்டு பாடலை சத்தமாக பாட

“ஸ்டாப் இட் அர்ஜுன் ,இதெல்லாம் ஒரு பாட்டா” என அவள் கோபமாக கேட்கவும்

“ஹேய் இந்த பாட்டுக்கு என்னமா குறை” என சொல்லிக்கொண்டு அப்போதும் பாடலை பாடிக்கொண்டே அவன் வரவும்

“ஐயோ கடவுளே எனக்கு கோபமா வருது” என்று சொல்லி இரண்டு காதுகளையும் தன் விரலை வைத்து அடைத்தவள்,


ஆள பாரு பெரிய கம்பெனில டாப் பொசிஷன்ல இருக்கான். ஆனா பாட்டு கேக்குறது பாரு எப்படி கேட்டு வராங்க என்னை திட்டிக் கொண்டே வரவும்

மீரா இப்ப ஹோட்டல்ல போய் அப்படியே சிக்கன் பிரியாணி, ஃபிஷ் ஃப்ரை எல்லாம் சாப்பிடலாமா? என அவன் சொல்லவும்

அவளுக்கு குமட்டிக் கொண்டு வர

காதில் இருந்த கையை வாயில் வைத்து “நான் எல்லாம் வரல”எனஅவள் சொல்லவும்

“நான் சாப்பிடுறேன் நீ சும்மா பாரு”என அவன் சொல்லு

“நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?” என அவன் முன் கோபத்தில் ஒரு விரலை நீட்டி முட்டை கண்ணால் அவனை உருட்டி கேட்க

“உன்ன சாப்பிட சொல்லலையே பாக்கத்தானே சொன்னேன் “என சாதாரணமாக பதில் சொல்லவும்

“பாக்க கூட மாட்டேன், எனக்கு முட்டை கூட பிடிக்காது” என அவள் கோபமாக கத்த

அப்புறம் ஸ்கூல் பசங்களுக்கு முட்டை முட்டையா போடுற பேப்பர்ல புடிக்காதுன்னு “என சொல்லிக்கொண்டு சிரிக்க

“அர்ஜுன் வாய மூடிட்டு பேசாம வா, எனக்கு பேசுறதே பிடிக்காது. கொஞ்சம் அமைதியா இருக்கியா முதல்ல இந்த பாட்ட ஆஃப் பண்ணு “என கோபமாக கத்தினாள்..

அவளின் கோபம் எல்லாம் அவனுக்கு சிரிப்பாகத்தான் இருந்தது..


’ஐயோ கடவுளே என்னைப்போய் இப்படி ஒருத்தன் கூட சேர்த்து வச்சுட்டியே ’என மனதிற்குள் புலம்பிக்கொண்டே வந்தாள் மீரா..
 

Attachments

  • Picsart_25-06-19_14-14-37-984.jpg
    Picsart_25-06-19_14-14-37-984.jpg
    195.3 KB · Views: 1
Last edited:
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
99
43
Tirupur
அர்ஜுன் ரொம்ப கூலா இருக்கான். மீரா காதலால் ரொம்ப அடிபட்டு நொந்துபோய் இருக்கா 😢 அவளை சரி பண்ண அர்ஜுன் ரொம்ப மெனக்கெடணும் ❤️

கதை நல்லா இருக்கு 😍

முகிலன் தானே? கோர்ட் சீன்ல கபிலன் அப்படின்னு போட்டிருக்கீங்க... 🤔
எபி போடுறதுக்கு முன்னாடி ஒருமுறை செக் பண்ணிட்டு போடுங்க சிஸ் 👍
 
  • Love
Reactions: kkp16

kkp16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
7
6
3
Tamilnadu
அர்ஜுன் ரொம்ப கூலா இருக்கான். மீரா காதலால் ரொம்ப அடிபட்டு நொந்துபோய் இருக்கா 😢 அவளை சரி பண்ண அர்ஜுன் ரொம்ப மெனக்கெடணும் ❤️

கதை நல்லா இருக்கு 😍

முகிலன் தானே? கோர்ட் சீன்ல கபிலன் அப்படின்னு போட்டிருக்கீங்க... 🤔
எபி போடுறதுக்கு முன்னாடி ஒருமுறை செக் பண்ணிட்டு போடுங்க சிஸ் 👍
மிக்க மகிழ்ச்சி நன்றி தொடர்ந்து படித்துப் பாருங்கள்..

மன்னிக்கவும் சிறிய தவறு செய்து விட்டேன். நீங்கள் சொன்னதும் அதை திருத்தி விட்டேன் சொன்னதற்கு நன்றி🙏🙏🙏
 
  • Like
Reactions: Kameswari