அத்தியாயம் -19
எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும்போது அந்த நொடியில் மூளை செயல் இழந்து போவது இயற்கையே .......ராம் தன் காதலை சொன்னதும் அப்படியே உறைந்து போனவள் பின்னர் சுதாரித்து அவனது வார்த்தை மூளைக்கு செல்ல சுறு சுறுவென கோபம் வர........முகம் வெடிக்க...கண்கள் துடிக்க ஒற்றை விரலை நீட்டி ....”ஏய் மிஸ்டர் என்ன உளறிங்க.....யார் கிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க ..........இனி இந்த மாதிரி பினாத்திகிட்டு இருந்தீங்க...... இனி என் வாய் பேசாது சொல்லிட்டேன்” என அவனிடம் கோபமாக சொல்லிவிட்டு நெருங்கி இருந்தவனை தள்ளி விட்டு தனது அறையை நோக்கி ஓடினாள் ரதி தேவி .
அவளை பார்த்ததும் தன் நிலை மறந்து ராம் காதலை சொல்லிவிட அவள் அதிர்ந்து நின்ற போதுதான் தான் சொன்னது அவனுக்கு புரிந்தது.அவளிடம் அவன் விளக்க முற்பட அதற்குள் அவள் கோபத்துடன் பேசிவிட்டு அவனை தள்ளி விட்டு சென்றுவிட்டாள்.ராமிற்கோ மிகவும் கஷ்டமாக போக என்ன செய்வது என தெரியாமல் அப்படியே அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.
நடந்தவைகளை நினைத்து பார்த்தவன் தான் எவளோ பெரிய முட்டாள் தனமான வேலையை செய்து இருக்கோம் என அவனுக்கு புரிந்தது......முதலில் அவளுக்கு முத்தம் கொடுத்ததே தவறு......நல்லவேளை அவள் அதை தேவாவிடம் சொல்லவில்லை....ஆனால் இப்போது செய்து இருப்பது ...அய்யோ தகுதியை விட்டு இப்படி கீழே இறங்கி கல்லூரி பையன் போல் சிறுபிள்ளை தனமாக நடந்து கொண்டமே என அவன் புலம்பி தவிக்க
அவன் காதல் மனமோ அதெல்லாம் தவறு இல்லை ராம்......நீயும் எவ்ளோ நாள் தான் மனதிற்குள்ளே காதலை புதைத்து வைப்பாய் ......அளவு மீறினால் இப்படிதான்....அதும் மட்டுமில்லாமல் காதல் என்று வந்துவிட்டால் ஐபிஸ் ஆக இருந்தாலும் அன்னகாவடியாக இருந்தாலும் எல்லாருக்கும் ஒரே உணர்வுதான்..........நீயும் திருமணத்தில் இருந்து அவளிடம் பலவழிகளில் உன் மனதை சொல்லி முயற்சி செய்தாய்..........சூழ்நிலை அமையவில்லை ............இனியும் நீ அமைதியாக இருந்தால் அவளும் அப்படியே இருப்பாள்.நீ செய்தது சரிதான்.....கண்டிப்பாக அவள் இப்போது யோசிப்பாள்.....குளம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும்......நீ கவலைபடாதே ...எல்லாம் சரி ஆகிவிடும் என அவனுக்கு சார்பாக பேச
அப்போ நாம் செய்தது சரிதான என அவன் மீண்டும் சமாதானம் அடைய அதற்குள் அவனது இன்னொரு மனம் இல்லை தவறு....என்ன இருந்தாலும் நீ அவளிடம் அவசரப்பட்டு சொல்லி இருக்க கூடாது என அவனை குழப்ப அய்யோ என தலையை கைகளில் பிடித்த படி சாய்ந்தான்.
“ராம் என்ன ஆச்சு......ஏன் இப்படி இருக்க......என் மீது ஏதாவது கோபமா” என ரோஜாவின் குரல் கேட்க
அவன் சட்டென்று “இல்லை...இல்லை ரதி....நான் செய்தது தான் தவறு ....”என சொல்லிகொண்டே வேகமாக எழுந்தவன் எதிரில் ரோஜாவும் காவேரி அம்மாவும் நின்று கொண்டு இருந்தனர் .
ராமோ திரு திருவென முழிக்க
ஆனால் காவேரி அம்மா ராம் சொன்னதை சரியாக கவனிக்கவில்லை...... அதனால் “ஏண்டா எங்களை சொல்லிவிட்டு நீ இப்படி உட்கார்ந்து இருக்க......எங்க தேவா கோயிலுக்கு போகவேண்டாமா” என கேட்டார்.
ராமோ என்ன சொல்வது என தெரியாமல் “அம்மா அது வந்து...போய்..வந்து” என உளற
அவனது தடுமாற்றம் ரோஜாவிற்கு சிரிப்பு வர ....ராமின் அருகில் வந்தவள் “மாம்ஸ் அத்தை நீங்க சொன்னத கவனிக்கலை......நீங்களே உளறி காட்டி கொடுத்திடாதிங்க என அவனிடம் முனகியவள் ....பின்னர் சிரித்து கொண்டே எப்பவும் என்னை பத்தி மட்டுமே ராம் நினைச்சுட்டு இருக்கான் அத்தை.......பாசக்கார மாம்ஸ்” என பல்லை கடித்துக்கொண்டு சிரித்து கொண்டே சொன்னாள்.
உடனே காவேரி அம்மாவும் “ஆமாண்டா.....நானும் ரோஜாவிற்கு புத்தி மதி சொல்லி இருக்கேன்......சரி தேவா எங்கே” என கேட்க
ராமோ “இல்லம்மா அவன் வந்து என்றவன் இல்ல அவசரமா ஒரு போன் வந்தது ....கிளம்பி போனான்....சீக்கிரம் வந்திடறேன் சொல்லிட்டு போனான்” என சமாளிக்க
காவேரிஅம்மாவோ “இல்லை ராம்......நல்ல நேரம் முடிந்து விட்டது ...இனி நாளை பார்த்து கொள்ளலாம்.....சரி நானும் மாத்திரை எடுத்து வரலை....அதனால் வீட்டிற்கு கிளம்பலாம் “என்றார். .
ராமோ இந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்தால் போதும் என நினைத்தவன் “சரிம்மா...இதோ கிளம்பலாம் “என வேகமாக நடந்தான் .
ரோஜாவோ சிரித்து கொண்டே “மாம்ஸ் அது மேல மாடிக்கு போகும் வழி......வெளியே போறதுக்கு வழி இந்த பக்கம்” என சொல்ல
“இல்ல இப்படி “என முழித்தவன் ரதி அவனை தள்ளி விட்டு வேகமாக தன் அறையை நோக்கி ஓடிய வழியிலே தானும் சென்றதை அப்போது தான் உணர்ந்தவன் நக்கை கடித்து நெற்றியை சுளித்தவன்....”ஹிஹிஹி அது வந்து ரோஜா” என வழிய
ரோஜாவோ “அத்தை நீங்கள் காரில் இருங்கள்...நான் ராமிடம் சில பொருட்களை கொடுக்கவேண்டும்......எடுத்து வருகிறேன்” என சொல்ல ...அவர் வெளியே சென்ற உடன் ...”ஹப்பா ரோஜா நல்ல வேலை தப்பிச்சேன்” என்றவன்........”மாம்ஸ் நீங்க ரதினு சொன்னதை நானும் கவனிக்கலை” என இரண்டு கைகளையும் விரித்து கண்களை உருட்டி அவள் சொன்னாள்.
“அச்சோ ரோஜா என்றவன்......இல்ல ரோஜா நான் உன்னை பற்றி தான் “என அவன் ஆரம்பிக்க
யாரு ....நீ என்னை பத்தி......சரி ராம் நான் நம்பிட்டேன் என சொன்னவள் ....அவனிடம் வந்து நீ முல்லை மலரிடம் பேசுனியா” என ரகசிய குரலில் கேட்டாள்.
அவளது செய்கையும் பேசும் விதமும் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க ....”ஆனாலும் ரோஜா இந்த ரணகலத்தலையும் எப்படி உன்னால் இப்படி குதூகலமாக பேச முடியுது” என அவன் ஆச்சிரியமாக கேட்டான்.
“எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டதுதான் என கண்ணடித்தபடி சொன்னவள் .... இப்போ நீ செஞ்ச மாதிரிதான் என்றவள் சரி ராம் பினாத்தாம அத்தையை பார்த்து கூட்டிட்டு போ” என பெரிய மனுசி போல் சொன்னாள்.
“சரிங்க மகராணி.....நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடறேன்” என அவனும் குனிந்து வளைந்து சொல்ல ...அதை பார்த்ததும் ரோஜா மனம் விட்டு சிரிக்க ...வெகுநாட்களுக்கு பிறகு அவளது முகத்தில் புன்னகையை பார்த்தவன் அவளது கைகளை பிடித்து தனது கைகளுக்குள் வைத்து கொண்டவன் “ரோஜா குட்டி உன்னை இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.......நீ எப்பவும் இதே மாதிரி சிரிச்சுட்டு சந்தோசமா இருக்கணும்டா” என தனது அன்பை அவன் வார்த்தையில் கொட்ட
ரோஜாவோ அவன் தோளில் சாய்ந்தவள்.....”மாம்ஸ் நீங்க எல்லாம் வருத்தபட்றமாதிரி நான் எப்பவும் நடந்துக்க மாட்டேன்....போதும் ஒருமுறை உங்களை மீறி நான் நடந்து கொண்டதுக்கு எனக்கு கிடைத்த சன்மானம்”....என அவள் சொல்லும்போதே குரல் கரகரக்க
ராமோ அவளது வாயை மூடியவன் “போதும் ரோஜா....இனி இதை பற்றி பேசாதே.....அது போல் ஒன்று நடக்கவே இல்லை என்று நினைத்து கொள்......புரிகிறதா” என கண்டிபோடும் அன்போடும் சொல்ல...அவளோ தலையை மட்டும் ஆட்ட...”.சரிடா நான் கிளம்பறேன்.......அம்மா வெளியே இருக்காங்க......உனக்கு ஏதாவது தேவை என்றால் எனக்கு போன் பண்ணு” என சொல்லிவிட்டு நடந்தவன்
பின்னர் தயங்கி ரோஜா என மெல்ல அழைக்க ...அவள் பார்த்ததும் “தேவா ரொம்ப நல்லவன் ரோஜா...அவனிடம் மனசு விட்டு பேசு”....என சொல்ல ...அவளோ அவனை ஆழ்ந்து பார்த்தவள் பின்னர் ஏதும் சொல்லாமல் தலை ஆட்ட ராமும் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டான்.
நாதனிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த தேவா வீடு அமைதியாக இருப்பதை கண்டவன் .....ம்ம்ம் திருமண வீடு போலவா இருக்கிறது என ஒரு ஆயாச எண்ணம் தோன்ற அப்படியே சோபாவில் சரிந்தான்.
வீட்டில் ரதியோ ராமின் அதிரடி தாக்குதலில் நிலை குலைந்து போனவள் தனது அறைக்குள் சென்று அழுது புலம்பி கொண்டு இருந்தாள்...... ஒரு நாளில் அடுத்து அடுத்து தாக்குதல்.........அவன் தன்னை தொட்ட பொழுதே தடுத்து இருக்க வேண்டும்....ஏன் நான் செய்யாமல் விட்டேன்....அய்யோ என்ன இது...... நானா இப்படி இருந்தேன்.........ஏன்????? ஏன்????? இல்லை இல்லை நல்ல பதவியில் இருக்கிறார்....ரோஜாவின் உறவினர் அப்டின்னு நினைத்து தான் பேசினேன்......என்னிடம் தவறு இல்லை........ ரோஜாவிர்காக தான் நான் அண்ணாவிடம் சொல்லாமல் விட்டேன் என தான் செய்த தவறை ராமின் மேலே சொல்லி தன்னை அவள் நியாயபடுத்தி தன் மனதோடு போராடி கொண்டு இருந்தாள்....
ராமின் எட்டு வருட காதல்......அவளுடன் மனதிலே அவன் வாழ்வது ....அதனால்தான் அவளை அவனால் எளிதில் தொடமுடிந்தது...... இவை எல்லாம் ரதிக்கு தெரியாது......ஆனால் பார்வையாலே மற்றவர்களை பத்தடி தள்ளி நிற்க வைக்கும் தான் எதனால் இவனிடம் மட்டும் அமைதியாக இருக்கிறோம் என அவள் யோசித்து இருந்தாள் அவளின் மனதிலும் ஏதோ ஒரு இடத்தில் ராம் இருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்து இருக்கும்.......ஆனால் இவை எல்லாம் உணரும் மனநிலையில் அவள் இல்லை.
ரோஜாவோ ராம் சென்ற பிறகு ரதியும் இல்லாமல் வெறுமையாக இருக்க சிறிது நேரம் டிவி பார்த்தவள்..... பின்னர் தனது அறைக்குள் சென்றவள் ...உள்ளே நுழைந்து தனிமை அவளை சூழ ஆத்திரமும் அழுகையும் வர அப்படியே படுக்கையில் விழுந்தவள் பழையது யாவும் நினைவு வர அழுது கரைந்து கொண்டிருந்தாள்.
அப்போது அவளது அலைபேசி ஒழிக்க அவள் எடுத்து பார்க்க அதில் மரகதத்தின் பெயர் வர எடுத்து காதில் வைத்தவள் “சொல்லுங்க பாட்டி” என்றாள்.
அவளது குரலை வைத்தே அவளது நிலையை உணர்ந்து கொண்டவர்......ஆனால் அதை வெளிபடுத்தாமல் “எப்படி இருகிறாய் ரோஜா...புது இடம் உனக்கு பிடித்து இருக்கிறதா......காலையில் மாப்பிள்ளை எங்களிடம் பேசினார்............காவேரியும் நீயும் பேசிக்கொண்டு இருப்பதாக சொன்னார்.....அதான் நான் தொந்தரவு செய்யலை என்றவர் நீ நன்றாக இருக்கிறாய் தானே” என கேட்க
ரோஜா ஏதும் பதில் சொல்லாமல் இருக்க
“ரோஜா ...ரோஜா என்றவர்........ரோஜா இதுவரை உன் பாட்டி உன்னிடம் ஏதும் கேட்டதில்லை....இப்போது கேட்கிறேன்.......நமது குடும்பம் சந்தோசமாக இருக்கவேண்டும்....உன்னை நினைத்து நினைத்து உன் பெற்றவர்கள் இரவில் அழுது கொண்டு இருந்தது எனக்கு தான் தெரியும்......மேலும் உனது தாத்தாவின் ஆசை உன்னை படிக்கவைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று சொல்லுவார்......அதை தான் நான் இப்போது செய்தேன்......இப்போது தான் சேகரின் முகத்தில் சற்று நிம்மதியே வந்து இருக்கிறது......ரோஜா இதெல்லாம் நான் சொல்வதால் எங்கள் கவலையை உன் மீது திணிப்பதாக நினைக்கவேண்டாம்......தேவாவும் ரொம்ப நல்ல பையன் .....உன்னை நன்றாக பார்த்து கொள்வான் ......எனக்கு நம்பிக்கை இருக்கு.....உனக்கு உன் பாட்டி மீது நம்பிக்கை இருந்தால் தேவாவை நம்பு.....வேறு எதையும் போட்டு குழப்பி கொள்ளாதே” என அவளிடம் பொறுமையாக எடுத்து சொன்னார்.
அவரது வார்த்தைகள் அவளது மனதிற்கு ஏதோ செய்ய.....”பாட்டி நான்...நான்...இல்ல எனக்கு இங்க பிடிச்சு இருக்கு.......நீங்க கவலைபடாதிங்க.......நீங்க வருதப்படறமாதிரி நான் நடந்துக்க மாட்டேன்” என சொல்ல
அதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த உணர்சிகள் வெளிபட....”ரோஜா.....என் தங்கமே” என மரகதம் விம்மி வெடித்து அழுக
அதை கேட்டதும் ரோஜாவும் அழுக.....சிறிது நேரம் அழுதவள் பின்னர்...”என்ன பாட்டி என்னை சொல்லிட்டு நீங்க அழறிங்க......என் எம்ரால்ட் எப்போது சிரிச்சுகிட்டு கம்பீரமாதான் இருக்கணும்...புரிஞ்சுதா......அப்புறம் பாட்டி கல்யாணத்திற்கு அம்மா ராவா உருண்டை செஞ்சாங்களா ....அதை கொடுத்து அனுப்பவே இல்லை.........நைட் தான் பார்த்தேன்.......அதை முதல்ல அனுப்புங்க ....நீங்களே சாப்ட்ராதிங்க” என அவள் பேச்சை மாற்ற
மரகதமோ சிரித்து கொண்டே .....”நீ கவலை படாத ரோஜா ...நான் எடுத்து வச்சிருக்கேன்.......உனக்கு அனுப்பி வைக்கிறேன்” என சொல்ல......”சரி பாட்டி” என்றவள் பின்னர் சிறிது நேரம் அமைதியாக இருக்க “என்ன ரோஜா” என மரகதம் கேட்க...”பாட்டி நான் அம்மாகிட்ட பேசணும் போல இருக்கு” என்றாள்.
அது தானே பெண் குழந்தை........எந்த ஒரு பெண்ணும் திருமணம் முடிந்து தான் மாமியார் வீட்டிற்கு சென்றபிறகு அவள் மனம் முதலில் தேடுவது அவள் தாயை தான்......அவளது உணர்வுகளை சொல்லமால் அம்மா என்ற அழைப்பிலே புரிந்து கொள்ள தாயை தவிர வேறு யாரால் முடியும்.
“அம்மா கோவிலுக்கு போயிருக்கா ரோஜா...வந்ததும் பேசசொல்றேன்.....காலையில அவளும் மாப்பிளைகிட்ட கிட்ட பேசினாள் .....என்றவர் ரோஜா உடம்பை பார்த்துகொள்......நாங்க இரண்டு நாட்களில் வந்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் “மரகதம் .
பாட்டியிடம் பேசியது மனதிற்கு சற்று இதமாக இருக்க.......மேலும் தேவா பாட்டியிடம் பேசியது கேட்டதும் அவளுக்கு ஒரு நிம்மதி வந்தது. ஆனால் அதே நேரத்தில் ....இதெல்லாம் இவருக்கு சொல்லிய கொடுக்கணும்......ஆளுக்கு ஏத்த மாதிரி வேஷம் போடறதிலே கில்லாடியாச்சே........ஆனா என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிகிட்டார்.....காரணம் இல்லாமல் சோழியன் குடுமி சும்மா ஆடாதே .......ம்ம்ம் என்னவாக இருக்கு என அவளது மூளையின் கிளைகள் பலவாறு பிரிய அதில பல எண்ணங்கள் பயணம் செய்தன......
சிறிது நேரம் தனியாக அமர்ந்திருந்த தேவா.......நாதன் சொன்னது நினைவு வர ரோஜாவிடம் பேசுவதற்காக அவள் அறைக்கு வந்தான். அவளோ தனக்கு தானே பேசிக்கொண்டு கைகளை அசைத்து கொண்டிருக்க....அவளது நிலையை பார்த்ததும்...நல்லா தானே இருந்தா......ரொம்ப முத்திடுச்சோ என அவன் பயந்து அருகில் வர.......ஆள்வரும் அரவ கேட்டதும் திரும்பியவள் தேவாவை பார்த்ததும் சட்டன்று எழுந்து நின்றாள்..
பரவாயில்லே நம்மளை பார்த்த உடனே மரியாதையா எழுந்து நிற்கிறா என அவன் நினைக்கும் முன்பே அருகில் இருக்கும் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த ரோஜா..... அவனை மேலும் கீழும் பார்க்க
அவனுக்கோ சட்டென்று கோபம் வந்தாலும் அடக்கி கொண்டு......என்ன என்பதை போல் புருவம் உயர்த்த
“மற்றவர் அறைக்குள் வரும்போது கதவை தட்டி விட்டு உள்ளே வரவேண்டும் என்றும் .... ....... மரியாதைனா என்னனே தெரியாதவங்க தான் இப்படி வருவாங்கனு எனக்கு மரியாதையை கரைத்து குடித்த ஒரு மாமனிதர் சொன்னார்......உங்களுக்கு தெரியுமா சார்” என ஏற்ற இறக்கத்துடன் அவள் சொல்ல
ஆஹா அன்னைக்கு ஆபிஸ்ல நடந்ததை மனசில வச்சுட்டு இன்னைக்கு பழிவாங்கறா என மனதில் நினைத்தவன்....”சரி...சரி வா சாப்பிடலாம்” என்றான்.
அவள் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க
“ரோஜா” என அவன் அவள் அருகில் வர
“அவளோ இங்க பாருங்க சார்.......எனக்கு இப்போ ஏகப்பட்ட குழப்பம்.....அது எல்லாம் முதல்ல சரிஆகனும்.......அப்புறம் தான் சாப்பாடு” என அவள் வேகமாக சொல்ல
“இங்க பாரு ரோஜா நீ இங்க தான் இருக்க போறா.....என் கூடத்தான் இருக்க போற ....நமக்கு இன்னும் நிறிய நேரம் இருக்க...அப்போ பேசிக்கலாம்.....இப்போ வா” என அவன் பொறுமையாக சொல்ல
அவளோ “அதெல்லாம் முடியாது சார்” என மீண்டும் ஆரம்பிக்க
தேவாவோ “ஹே நிறுத்து...நிறுத்து...அது என்ன சார்...சார்னு கூபிட்ற .......அது எல்லாம் ஆபீசோட நிறுத்திக்கோ........இங்க” என அவன் முடிக்கும் முன்பு
“அப்போ வாடா ...போடான்னு” கூப்பிட்லமா சார் என அவள் வேகமாக கேட்டவள் ....பின்னர் எப்போதும் போல் நாக்கை கடித்து கொண்டு அவனை ஒரு கண்ணில் பார்க்க
“ஓ சார் தவிர உனக்கு அந்த வார்த்தை தான் தெரியுமா....வேற ஏதும் தெரியாதா.......யாரோ இதுக்கு முன்னாடி மரியதை பத்தி எனக்கு சொன்னதாக நியாபகம்” என அவன் நக்கலாக அவளை பார்த்து கேட்க
“மரியாதை ஒருவரின் நடத்தையை பார்த்து மத்தவங்க கொடுக்கணும்.......இப்படி எல்லாம் கேட்டு வாங்க கூடாது” என அவள் சற்று கோபமாக சொல்ல
அதுவரை பொறுமையாக இருந்த தேவா சட்டென்று.....”என்னோட நடத்தையில் நீ என்ன குறை கண்டாய் ரோஜா......வார்த்தையில் கவனம் வைத்து பேசு....யாரிடம் பேசிக்கொண்டு இருக்கேன்னு உனக்கு தெரியுதா” என அவன் சீற
“என்ன சார் மிரட்ரிங்க......இந்த வேலை எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்.......உங்களுக்கு தெரியும்தானே ....எனக்கும் உங்களுக்கும் எப்போதும் ஆகாதுனு ........நம்ம இரண்டு பேரும் பெரியாரும் ,பின்லேடனும் மாதிரி ...புரிஞ்சுக்குங்க........என்னை எதுக்கு நீங்க கல்யாணம் பண்ணிங்க........எனக்கு இதுக்கு காரணம் தெரியாமே மண்டையே வெடிசிட்ற மாத்ரி இருக்கு என அவள் கோபமும் ஆத்திரமும் கலந்து சொல்ல
அவளது நிலை அவனுக்கு புரிய ....மெதுவாக அவளின் அருகில் சென்றவன்....ரோஜா ...ரோஜா இங்க பாரு.........உன்னை என் மனசுக்கு பிடிச்சு தான் நான் திருமணம் பண்ணிகிட்டேன்........அதுக்கு காரணம் கேட்டா எப்படி சொல்றது” என தடுமாறியவன் .... ஏனனில் அவனே இன்னும் தெளிவாகத நிலையில் எப்படி சொல்வான்........மருத்துவரும் இதை பற்றி பேச்சை இப்போது தவிர்த்திடுங்கள் என்று சொல்லி இருந்தார்.......... அதனால் சட்டென்று “அது என்ன பெரியாரும் பின்லேடனும் மாதிர்னு நம்ம இரண்டு பேரும் சொல்ற” என அவன் பேச்சை மாற்ற
உடனே அவள் “அதுவா......இரண்டு பேரும் தாடி வச்சு இருகிறதால இரண்டு ஒன்றாகிடுவான்களா....அது மாதிரி நீங்களும் நானும் வக்கிலா இருகிறதால ஒன்றாகிட முடியுமா........நீங்க பணத்தை வச்சு எல்லாரயும் கணக்கு போடுவிங்க...நான் மனசை வச்சு எல்லாரயும் கணிப்பேன்” என அவள் அதற்கு விளக்கம் கொடுக்க
அவனோ அவளது விளக்கத்தில் தன்னை மறந்து சிரித்தவன் “அடபாவி.......பெரியார் எங்கே ...பின்லேடன் எங்க....எங்க கொண்டு போய் நீ இவங்க இரண்டு பேரையும் சேர்கிறா....ஆனாலும் ரோஜா இந்த மாதிரி விளக்கம் எல்லாம் உன்னால மட்டும்தான் கொடுக்க முடியும்”......என அவன் சூழ்நிலை மறந்து அவன் சிரிக்க
ரோஜாவோ “பேச்சை மாத்தாதிங்க சார்...இல்லை...தேவா...இல்லை mr.இராகதேவன்” என அவள் பேரை சொல்ல அவள் தடுமாற
“சரி...சரி....இப்போ இது போதும் நீ சாப்பிட வா “ என அவன் அழைக்க
அவள் முகம் மாற....குரல் கம்ம “இல்லை...வேண்டாம் எனக்கு மனசு சரியில்லை......நீங்க சாப்பிடுங்க....இப்பதான் அத்தை கொஞ்சம் பழங்கள் கொடுத்தாங்க ....போதும் எனக்கு”......என சொல்லிவிட்டு சோபாவில் கண்மூடி சாய
அவள் அருகில் அமர்ந்தவன் .....”ரோஜா உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பதுன்னு எனக்கு தெரியலை....ஆனால் ஒன்றை புரிந்து கொள்.......உன்னை ராணி மாதிரி வச்சு பார்த்துக்கணும்னு ஆசைபட்டுதான் திருமணம் செய்துகிட்டேன்.......... ....இதில் எந்த வித மாற்றமும் இல்லை....அதே சமயத்தில் இந்த கல்யாணம் இவ்ளோ அவசரமாக நடந்ததற்கு ஒரே காரணம் நீ தான்” என அவன் சொல்லி நிறுத்த
அவள் வேகமாக” நானா...நான் என்ன செய்தேன்” என அவள் வேகமாக கேட்க
“இதே தான்...இந்த வேகம் தான்.......நான் பயந்தேன்.......நான் தான் மாப்பிள்ளை என்றால் நீ கண்டிப்பாக ஒத்து கொள்ள மாட்டாய்......அதனால்தான் இப்படி செய்ய வேண்டியாதா போய்டுச்சு” என அவன் நடந்தவைக்கு விளக்கம் சொல்ல
“அதான் எனக்கும் புரியலை.....அப்படி எதற்கு நீங்க என்னை கல்யாணம் பண்ணனும் .......என்ன காரணம் .........உங்க திறமைக்கும் புகழுக்கும் ஏகபட்ட பேர் பெண் கொடுப்பாங்க ....நீங்க ஏன் வந்து என்னை” என அவள் வார்த்தை தடுமாற
அவளது முகத்தை பார்த்தவன் அவள் அதிகமாக சிந்திப்பதை கண்டு மருத்துவர் சொன்ன அறிவுரை நினவு வர .....உடனே “அப்படியா ரோஜா....யாரோ எனக்கு சைனால தான் பெண்கிடைக்கும்....இங்க எல்லாம் கிடைக்காதுன்னு சொன்ன மாதிரி நியாபகம் ......அதான் நான் அதே மாதிரி இங்க இருக்கிற பெண்ணை பிடிச்சுட்டேன்” என சிரித்து கொண்டே சொல்ல
உடனே அவள் “பேச்சை மாத்ததிங்க......உண்மைய சொல்லுங்க” என அவள் அதிலே நிற்க
காலையில் இருந்து அதிகம் சிந்தித்து கொண்டு இருந்ததாலும்....அவனிடம் எப்படி கேட்பது என அவள் யோசனை பண்ண பண்ண அவள் முகம் வேர்த்து கைகள் சற்று நடுங்க ...உடனே தேவா வேகமாக எழுந்தவன்.....அவளுக்கு சில மாத்திரைகளை எடுத்து கொடுத்து ...”ரோஜா இங்க பார்....நீ எதுவும் பேசவேண்டாம்....முதலில் இதை சாப்பிடு” என கொடுக்க
அவள் அவனை முறைத்து பார்க்க
“முதலில் சாப்பிடு...பிறகு விளக்கம் சொல்கிறேன் என்றவன் அவள் சாப்பிட்டதும் இங்க பாரு ரோஜா....நமக்குள் திருமணம் முடிந்து விட்டது.......இனி நீ தான் என் மனைவி......என்னில் பாதி நீ........உனக்கு எல்லாமும் தெரியனும்..........ஆனால் இப்போதே அதற்கான எல்லா விளக்கமும் சொல்ல முடியாது.......நாம் இரண்டுபேரும் சேர்ந்து ரொம்ப நாள் சந்தோசமாக வாழ போறோம்.......அப்போது கண்டிப்பா சொல்றேன்......இப்போ போட்டு குழப்பிக்காத ...நீ தூங்கு” என அவன் பேசி முடிக்கவும் அவள் மருந்தின் உதவியால் கண் மூடவும் சரியாக இருந்தது..........
அவள் நன்றாக உறங்கிய பின் அவளை இமை மூடாமல் பார்த்து கொண்டு இருந்தவன் ........அம்லு ஏன்.?ஏன்? கேட்கிரியடா ....எப்படி சொல்வேன் நான்.......உன்னோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு வகையில் காரணம்........நான் அதை சொன்னால் அதற்கு பின்பு நீ என்னை மன்னிப்பாயா ..... அதை சொல்ற தைரியம் கூட எனக்கு இல்லை அம்லு.......நீ மறக்கணும்...எல்லாத்தியும் மறக்கணும்.......அதுக்காக தான் இந்த கல்யாணமே......நான் திருமணத்திற்கு சம்மதம் சொல்லும்போது கூட நீ என்னை இந்த ளவு பாதிப்பை என்று நினைக்கவில்லை..........ஆனால் இப்போது என் மனதில் உன்னை அன்றி வேறு எந்த நினைவும் இல்லை.......இந்த இரண்டு நாட்களில் உன்னோட ஒவொவொரு அசைவும் எனக்குள் பெரிய மாற்றத்தை எற்படுத்திடுச்சு....... எப்படி இருந்த என்னை இப்படி மாற்றி விட்டாய் அம்லு என் மனதிற்குள் புலம்பியவன் சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு எழுந்து தனது அறைக்கு சென்றான்..
வெகுநேரமாகி எழுந்தவள் மாலை பொழுது ஆகிவிட முகம் கழுவி கிளம்பி சோபாவில் அமர்ந்தவள் நடந்தது எல்லாம் நினைத்து பார்க்க இவன் ஏன் தன்னை திருமணம் செய்துகொண்டான் என்ற எண்ணம் அவளது அனைத்து சிந்தனைகளையும் முடக்க .... காரணம் இல்லாமல் இவன் எதையும் செய்ய மாட்டான்........பாட்டி சொல்வதை பார்த்தால் அனைவரும் இவனை நல்லவனாக நம்பறாங்க......ஆனால் இவனை பற்றி எனக்கு தானே தெரியும்.......... கடைசி வரை காரணம் என்னனு சொல்லாமலே பேசி சமாளிச்சுட்டான் .......இது தான் இவனிடம் பிடிக்காத ஒன்று........சரியான பெவிகால்......அவனாக சொன்னால் தான் உண்டு........எப்படி இவனை நம்பறது....... என மறுபடியும் எண்ண குதிரையை வேகமாக தட்டி விட்டாள்.
அவளிடம் பேசிவிட்டு வந்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு கீழே வர ரதி இரவு உணவிற்கு தயார் செய்து கொண்டு இருந்தாள்.
ரதி “ரோஜா எங்கே “எனக்கேட்க
அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை என அவள் சொல்ல மீண்டும் அவள் அறைக்கு சென்றான்....இப்போது தேவா கொஞ்சம் தெளிவாக இருந்ததால் கதவை தட்டிவிட்டு திறந்து கொண்டு உள்ளே செல்ல ரோஜாவோ கைகளை முழங்காலில் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த தோற்றம் ஏதோ சின்ன குழந்தை கோபித்து கொண்டு அமர்ந்து இருப்பது போல் இருக்க........இதழில் சிறு புன்னகை தோன்ற......”என் அம்லு எப்பவும் குழந்தைதான் என மனதிற்குள்ளே செல்லம் கொஞ்சியவன் .....ரோஜா வா சாப்பிடலாம்” என்றான்.
அவளோ ஏதும் பதில் பேசாமல் அமர்ந்திருக்க
“ரோஜா உன்னை தான் வா சாப்பிடலாம்” என்றான்.....
நிமிர்ந்து அவனை முறைத்தவள் மீண்டும் வேறு புறம் திரும்பி அமர
அவளது செயல் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க .....”சிரித்தபடியே என்ன ரோஜா இது சிறுபிள்ளை போல் ....சீக்கிரம் வா....எனக்கும் பசிக்கிறது.....உன்னோடு சண்டை போட்டு நானும் மதியம் சாப்பிடவில்லை ” என்றான்.