அத்தியாயம் -2
வீட்டிற்குள் நுழையும் முன்பே வெளியில் நிற்கும் காரை வைத்து யார் வந்திருப்பார் என ஊகித்தவள் முகத்தில் சிந்தனையும் சந்தோசமும் கலந்த கலவையாக உள்ளே நுழைந்தவள் அங்கு அவளது மாமாவை பார்த்ததும் ஓடி சென்று அவன் அருகில் அமர்ந்தவள் “ஹே ராம் மாம்ஸ் எப்ப வந்திங்க என மகிழ்ச்சியுடன் கேட்டவள் சட்டென்று முகம் திருப்பி கொண்டு போங்க மாம்ஸ் நான் உங்க கூட பேச மாட்டேன்.....நீங்க போன முறை வந்தப்ப என்னை ஐஸ்க்ரீம் கடைக்கு கூட்டிட்டு போகிறேனு சொல்லிட்டு ஏமாத்திட்டு போய்ட்டிங்க” என சிறுபிள்ளை போல் முகத்தை தூக்கி வைத்து கொள்ள
“என்னது இது ......என் ரோஸ் இப்படி கோபபடறாங்க....எனக்கு பயமா இருக்கே என பயந்தவன் போல் சொன்னவன் பின்னர் அவள் அருகில் அமர்ந்து அவளது தலையை தடவிகொன்டே மாம்ஸ்க்கு கொஞ்சம் வேலை இருந்ததுடா ...அதான் உடனே போக வேண்டியதா போச்சு......என தகுமானம் சொல்லிகொண்டிருந்தான். பின்னர் சரி இன்னைக்கு அவசியம் கூட்டிட்டு போறேன்” என்றான்.
“உன்னாலதான் ராம் அவ கெட்டு போகிறாள் .......சொல்ற பேச்சை கேட்கிறது இல்லை.....எதிர்த்து பேசறா” என பார்வதி புகார் கடிதம் வாசிக்க
“என் பேத்தி வக்கீலுக்கு படிச்சிருக்கா ....அதுனால அப்படிதான் பேசுவா...அவன் தான படிக்க சொன்னான் அதான்” என மரகதம் பேத்திக்கு உதவி கரம் நீட்டினார். .
“அவன் படிக்கதான் சொன்னான் ...இப்படி பேசவுமா சொன்னான்” என தன் அண்ணன் மகனுக்கு சார்பாக பார்வதி பேச
இருவரும் வாதாடி கொண்டிருக்க இதில் சம்பந்தபட்டவளோ அதை கண்டு கொள்ளாமல் அவன் என்ன தீனி வாங்கிகொண்டு வந்திருக்கிறான் என அருகில் இருந்த பையில் துளவிகொண்டிருந்தாள்.
“சரி விடுங்க அத்தை.......ஆமாம் பாட்டி வக்கீல்னா கண்டிப்பா பேசணும்....அதும் உங்களை மாதிரி தெளிவா,சரியா யார்கிட்ட எப்படி பேசறதுன்னு பேசி கத்துகிறது நல்லது தான” என அவன் மரகதத்தை தூக்கி வைத்து பேச அவரின் முகத்திலோ பெருமை தாங்கவில்லை.
இது தான் ராம் ....எந்த இடத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும் என தெரிந்து பேசுபவன்.அதனால்தான் சேகர்க்கு இவனை ரொம்ப பிடிக்கும்.
மாலை ரோஜா கிளம்பி இருக்க சரியான நேரத்திற்கு வந்தான் ராம் .இருவரும் கிளம்பி செல்ல சிறிது தூரம் சென்றதும் “சொல்லுங்க மாமஸ் என்ன பேசணும்” என மிகவும் அமைதியாக அழுத்தமாக கேட்டாள்.
சட்டென்று வண்டியை நிறுத்தியவன் அவளை கூர்ந்து பார்க்க
“சொல்லுங்க மாமா .........அப்பாதான உங்களை இங்க வர சொன்னார்” என்றாள்.
அவன் சிரித்து கொண்டே “ஆனாலும் நீ இவ்வளவு புத்திசாலியா இருக்க கூடாது ரோஜா என்றவன் அப்பா சொல்லலைனாலும் நான் உன்னை பார்க்க வரகூடாதா” என கேட்டான்.
“அதற்க்கு சொல்லவில்லை....ஆனால் இப்போது எலக்சன் நேரத்துல நீங்க சென்னைல இருந்து இங்க வந்து என்கூட இவ்ளோ நேரம் இருக்கிங்கனா அதான் சந்தேகமா இருக்கு “ என்றாள்.
சிறிது நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் பின்னர் “நேரிடையாகவே விஷயத்திற்கு வருகிறேன்.படிப்பு முடிஞ்சுடுச்சு ...அடுத்தது என்ன செய்யறதா இருக்க” என்றான்.
அவள் ஏதும் பேசாமல் காரின் கண்ணாடியை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “நீ உன் முடிவை சொல்லு....இல்ல நாங்க எடுக்கிற முடிவை நீ ஒத்துக்கோ......இப்படி எதுவுமே சொல்லாம இருந்தா எப்படி ரோஜா “என அக்கரையாக கேட்டான்.
“எல்லாம் தெரிஞ்ச நீங்களுமா” என அவள் ஆரம்பிக்க
“ரோஜா என கோபமாக கத்தியவன்.......அதை பத்தி பேசாதேன்னு உன்கிட்ட பலமுறை சொல்லி இருக்கேன்” என்றான்.
அவனது கோபத்தில் தடுமாறியவள் “எனக்கே அடுத்தது என்ன செய்யறதுனு தெரியலை” என கூறினாள்..
“அப்போ நாங்க எடுக்கிற முடிவுக்கு நீ ஒத்துகொள்” என்றான் அவன்.
“நீங்க என்ன முடிவு எடுத்திருக்கிங்க” என கேட்டாள் ரோஜா .
“வீட்ல உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு சொல்றாங்க......அதுக்குதான் என்னை வர சொல்லிருக்காங்க” என்றான் ராம்.
“என்னது கல்யாணமா மாமாமமமா என அதிர்ந்தவள் இதற்கு நீங்க என்னை கொன்னிருக்கலாம் என வேகமாக சொன்னவள் .....ஏன் ராம் நான் இருக்கிறது அவங்களுக்கு அவ்ளோ பாரமாவா இருக்குது........அப்டினா சொல்லுங்க நான் எங்காவது ஆசிரமத்துக்கு போய்டறேன்......யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை....இப்பதான் படிப்பே முடிச்சிருகேன்” என பேசிகொண்டே போக
“சும்மா உளறாதே ரோஜா........பெண்ணை பெற்றவர்கள் பண்ணுகிறதை தான் உன் அப்பாவும் அம்மாவும் பண்ணுகிறார்கள் .....அதும் உன் அனுமதி கேட்டு” என கேள்வியோடு அவன் பார்க்க
“ஏன் ராம் மற்ற பெண்கள் மாதிரியா நான் என சொன்னவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட எனக்கு எல்லாமே வெறுத்திடுச்சு” என அவள் வேதனையுடன் சொல்ல கேட்டவன் மனதிலோ ரத்தம் கசிந்தது.
மலரை போன்ற மென்மையான பெண்ணை இப்படி முள்ளாக மாற்றியது யார் குற்றம் ....அறியாமையா...இல்லை விதியா.......இல்லை படித்திருந்தும் கோழையாக இருக்கும் இப் பாவையின் குற்றமா என அவன் மனம் வருந்தியவன் அதற்க்கான தீர்வை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
இது தான் ராம்........எந்த சூழ்நிலையிலும் மற்றவர்கள் இடத்தில் தன்னை பொருத்தி தீர்வு சொல்வான்.ராமின் முழு பெயர் ராம் சரண் ....ராம்சரண் IPS....காவல் துறை அதிகாரியின் மிடுக்குடன் சராசரி உயரத்திற்கும் சற்று அதிகமான உயரம் கொண்டவன்.பார்வதியின் அண்ணன் மகன்.தந்தை இல்லை.தாய் மட்டுமே ....சென்னை இருப்பிடம்......ரோஜாவிற்கு மாமா பையன் என்றாலும் சிறு வயதில் இருந்தே அவளுடனே வளர்ந்ததால் இருவருமே வீட்டிற்கு ஒரே பிள்ளைகள் என்பதால் அவளிடம் அதிக பாசம் கொண்டவன்.ரோஜாவும் ராமிடம் தான் அதிக உரிமை எடுத்து பழகுவாள்.மரகத்திர்க்கு பார்வதி குடும்பத்தாரை கண்டால் பிடிக்காது...... கொஞ்சம் வேகமாக பேசுவார்.அதும் ரோஜா வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்று ராம் சொன்னதும் முதலில் மறுத்தவர் மரகதம்தான். அவருக்கு அதில் விருப்பம் இல்லை....ஆனால் நடந்த சூழ்நிலைகளை விளக்கி ராம் தான் அதற்கு ஒத்து கொள்ள வைத்தான்.மேலும் ராம் எது சொன்னாலும் ரோஜா கேட்பாள்.அதே சமயத்தில் ரோஜாவிற்கு பிடிக்காததை ராம் சொல்லமாட்டன். வீட்டில் மட்டுமே மாம்ஸ் என்பாள்... பெயர் சொல்லி அழைப்பது மரகத்திற்கு பிடிக்காது.......வயது ,முறை இரண்டிற்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பார்.வெளியில் வந்து விட்டால் ராம் அவளுக்கு செல்லம்.பெயர் சொல்லி தான் அழைப்பாள்.
சிறிது நேரம் யோசனையில் இருந்தவன் “முடிவா நீ என்ன சொல்ற ரோஜா” என்றான்.
“எனக்கு தெரியலை ராம் .....நான் ஆசைப்பட்டது முடிவு பண்ணியது எல்லாம் நான்கு வருடத்திற்கு முன்பே முடிந்து விட்டது.இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை.......ஆனால் நான் இங்கிருந்து வெளியே வரமாட்டேன்.....எனக்கு பயமா இருக்கு” என சொல்லும் போதே உடல் நடுங்க முகம் வெளிர காரின் சீட்டிலே ஒண்ட
உடனே அருகில் சென்று தன் தோளோடு அவளை அணைத்தவன் “சரிடா...சரிடா....நான் பார்த்துகிறேன்........இனி உன்னை யாரும் ஏதும் கேட்கமாட்டோம்” என சொல்லியபடியே வண்டியை கிளப்பினான்.
சீட்டில் சாய்ந்து அமர்ந்து அவள் கணைகளை மூடி இருக்க அதை பார்த்தவன் ஆனாலும் கடவுள் இவ்ளோ பெரிய தண்டனயை இப் பெண்ணிற்கு கொடுத்திருக்க வேண்டாம் என நினைத்தான்.
கார் நின்றது கூட தெரியாமல் அவள் தன்னை மறந்து இருக்க அவளை தட்டி எழுப்பியவன் “ஒரு சின்ன வேலை ரோஜா..... என் நண்பன் இங்க எனக்காக வெயிட் பண்றான் பத்து நிமிடம் தான் முடிச்சுட்டு வந்திடலாம்” என்றவன் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.
சரி என்று கீழே இறங்கியவள் நிமிர்ந்து பார்க்க ஹோட்டல் பார்க் அவன்யூ என பெயர் இருக்க பார்த்ததும் கால்கள் நகர மறுக்க ,கைகள் சில்லிட ராமின் கைகளை அழுத்தி பிடித்தவள் “வேண்டாம் ராம்......நான் வரலை எனக்கு பயமா இருக்கு போய்டலாம்” என நடுங்கும் குரலில் சொல்ல
“என்ன ரோஜா இது...... நீ இன்னும் மாறலையா என கேட்டவன் அதெல்லாம் முடியாது வா” என அவளை இழுக்க
“வேண்டாம் ராம் ...நான் வரலை ...வா வீட்டுக்குபோய்டலாம்” என சொல்லிகொண்டே இருந்தவள் அங்கிருந்து ஒரு அடிகூட நகரவில்லை அவன் சொல்வது எதையும் காதில் வைத்து கொள்ளவில்லை. அவள் சொன்னதையே சொல்லிகொண்டிருந்தாள். கைகால்கள் நடுங்கின .......சிறிது நேரம் அவளிடம் போராடியவன் எல்லாரும் அவர்களை பார்ப்பதை கண்டு சரி நாம் போகவேண்டாம் காரில் ஏறு என சொல்லிவிட்டு வேகமாக காரை எடுத்தான்.
காரில் ஏறி அமர்ந்தவள் அவன் முகத்தையே பார்த்து கொண்டிருக்க அதில் இருந்த கோபம் அவளுக்கு புரிய “சாரி ராம்” என மெதுவாக சொல்ல
திரும்பி அவளை முறைத்தவன் ஏதோ சொல்ல வருமுன் அலைபேசி அழைக்க எடுத்து காதில் வைத்தவன் “சாரிடா .....அதுக்குள்ள கொஞ்ச வேலை அதான் திரும்பிட்டேன்” என சொல்லிகொண்டிருக்க அதற்கு எதிர்பக்கம் ஏதோ சொல்ல “மச்சான் புரிஞ்சுகோடா....நான் தான் சொல்றேன்ல...ஹோட்டல் வரை வந்தேன்....அதுக்குள்ள சின்ன பிரச்சனை என சொன்னவன் அதற்க்கு எதிர்புறம் இருந்து மீண்டும் ஏதோ பதில் அதை கேட்டதும் ராமின் முகம் சுருங்க சாரிடா” என அவன் வருந்தும் குரலில் மீண்டும் சொன்னான்.
வீட்டிற்குள் நுழையும் முன்பே வெளியில் நிற்கும் காரை வைத்து யார் வந்திருப்பார் என ஊகித்தவள் முகத்தில் சிந்தனையும் சந்தோசமும் கலந்த கலவையாக உள்ளே நுழைந்தவள் அங்கு அவளது மாமாவை பார்த்ததும் ஓடி சென்று அவன் அருகில் அமர்ந்தவள் “ஹே ராம் மாம்ஸ் எப்ப வந்திங்க என மகிழ்ச்சியுடன் கேட்டவள் சட்டென்று முகம் திருப்பி கொண்டு போங்க மாம்ஸ் நான் உங்க கூட பேச மாட்டேன்.....நீங்க போன முறை வந்தப்ப என்னை ஐஸ்க்ரீம் கடைக்கு கூட்டிட்டு போகிறேனு சொல்லிட்டு ஏமாத்திட்டு போய்ட்டிங்க” என சிறுபிள்ளை போல் முகத்தை தூக்கி வைத்து கொள்ள
“என்னது இது ......என் ரோஸ் இப்படி கோபபடறாங்க....எனக்கு பயமா இருக்கே என பயந்தவன் போல் சொன்னவன் பின்னர் அவள் அருகில் அமர்ந்து அவளது தலையை தடவிகொன்டே மாம்ஸ்க்கு கொஞ்சம் வேலை இருந்ததுடா ...அதான் உடனே போக வேண்டியதா போச்சு......என தகுமானம் சொல்லிகொண்டிருந்தான். பின்னர் சரி இன்னைக்கு அவசியம் கூட்டிட்டு போறேன்” என்றான்.
“உன்னாலதான் ராம் அவ கெட்டு போகிறாள் .......சொல்ற பேச்சை கேட்கிறது இல்லை.....எதிர்த்து பேசறா” என பார்வதி புகார் கடிதம் வாசிக்க
“என் பேத்தி வக்கீலுக்கு படிச்சிருக்கா ....அதுனால அப்படிதான் பேசுவா...அவன் தான படிக்க சொன்னான் அதான்” என மரகதம் பேத்திக்கு உதவி கரம் நீட்டினார். .
“அவன் படிக்கதான் சொன்னான் ...இப்படி பேசவுமா சொன்னான்” என தன் அண்ணன் மகனுக்கு சார்பாக பார்வதி பேச
இருவரும் வாதாடி கொண்டிருக்க இதில் சம்பந்தபட்டவளோ அதை கண்டு கொள்ளாமல் அவன் என்ன தீனி வாங்கிகொண்டு வந்திருக்கிறான் என அருகில் இருந்த பையில் துளவிகொண்டிருந்தாள்.
“சரி விடுங்க அத்தை.......ஆமாம் பாட்டி வக்கீல்னா கண்டிப்பா பேசணும்....அதும் உங்களை மாதிரி தெளிவா,சரியா யார்கிட்ட எப்படி பேசறதுன்னு பேசி கத்துகிறது நல்லது தான” என அவன் மரகதத்தை தூக்கி வைத்து பேச அவரின் முகத்திலோ பெருமை தாங்கவில்லை.
இது தான் ராம் ....எந்த இடத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும் என தெரிந்து பேசுபவன்.அதனால்தான் சேகர்க்கு இவனை ரொம்ப பிடிக்கும்.
மாலை ரோஜா கிளம்பி இருக்க சரியான நேரத்திற்கு வந்தான் ராம் .இருவரும் கிளம்பி செல்ல சிறிது தூரம் சென்றதும் “சொல்லுங்க மாமஸ் என்ன பேசணும்” என மிகவும் அமைதியாக அழுத்தமாக கேட்டாள்.
சட்டென்று வண்டியை நிறுத்தியவன் அவளை கூர்ந்து பார்க்க
“சொல்லுங்க மாமா .........அப்பாதான உங்களை இங்க வர சொன்னார்” என்றாள்.
அவன் சிரித்து கொண்டே “ஆனாலும் நீ இவ்வளவு புத்திசாலியா இருக்க கூடாது ரோஜா என்றவன் அப்பா சொல்லலைனாலும் நான் உன்னை பார்க்க வரகூடாதா” என கேட்டான்.
“அதற்க்கு சொல்லவில்லை....ஆனால் இப்போது எலக்சன் நேரத்துல நீங்க சென்னைல இருந்து இங்க வந்து என்கூட இவ்ளோ நேரம் இருக்கிங்கனா அதான் சந்தேகமா இருக்கு “ என்றாள்.
சிறிது நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் பின்னர் “நேரிடையாகவே விஷயத்திற்கு வருகிறேன்.படிப்பு முடிஞ்சுடுச்சு ...அடுத்தது என்ன செய்யறதா இருக்க” என்றான்.
அவள் ஏதும் பேசாமல் காரின் கண்ணாடியை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “நீ உன் முடிவை சொல்லு....இல்ல நாங்க எடுக்கிற முடிவை நீ ஒத்துக்கோ......இப்படி எதுவுமே சொல்லாம இருந்தா எப்படி ரோஜா “என அக்கரையாக கேட்டான்.
“எல்லாம் தெரிஞ்ச நீங்களுமா” என அவள் ஆரம்பிக்க
“ரோஜா என கோபமாக கத்தியவன்.......அதை பத்தி பேசாதேன்னு உன்கிட்ட பலமுறை சொல்லி இருக்கேன்” என்றான்.
அவனது கோபத்தில் தடுமாறியவள் “எனக்கே அடுத்தது என்ன செய்யறதுனு தெரியலை” என கூறினாள்..
“அப்போ நாங்க எடுக்கிற முடிவுக்கு நீ ஒத்துகொள்” என்றான் அவன்.
“நீங்க என்ன முடிவு எடுத்திருக்கிங்க” என கேட்டாள் ரோஜா .
“வீட்ல உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு சொல்றாங்க......அதுக்குதான் என்னை வர சொல்லிருக்காங்க” என்றான் ராம்.
“என்னது கல்யாணமா மாமாமமமா என அதிர்ந்தவள் இதற்கு நீங்க என்னை கொன்னிருக்கலாம் என வேகமாக சொன்னவள் .....ஏன் ராம் நான் இருக்கிறது அவங்களுக்கு அவ்ளோ பாரமாவா இருக்குது........அப்டினா சொல்லுங்க நான் எங்காவது ஆசிரமத்துக்கு போய்டறேன்......யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை....இப்பதான் படிப்பே முடிச்சிருகேன்” என பேசிகொண்டே போக
“சும்மா உளறாதே ரோஜா........பெண்ணை பெற்றவர்கள் பண்ணுகிறதை தான் உன் அப்பாவும் அம்மாவும் பண்ணுகிறார்கள் .....அதும் உன் அனுமதி கேட்டு” என கேள்வியோடு அவன் பார்க்க
“ஏன் ராம் மற்ற பெண்கள் மாதிரியா நான் என சொன்னவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட எனக்கு எல்லாமே வெறுத்திடுச்சு” என அவள் வேதனையுடன் சொல்ல கேட்டவன் மனதிலோ ரத்தம் கசிந்தது.
மலரை போன்ற மென்மையான பெண்ணை இப்படி முள்ளாக மாற்றியது யார் குற்றம் ....அறியாமையா...இல்லை விதியா.......இல்லை படித்திருந்தும் கோழையாக இருக்கும் இப் பாவையின் குற்றமா என அவன் மனம் வருந்தியவன் அதற்க்கான தீர்வை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
இது தான் ராம்........எந்த சூழ்நிலையிலும் மற்றவர்கள் இடத்தில் தன்னை பொருத்தி தீர்வு சொல்வான்.ராமின் முழு பெயர் ராம் சரண் ....ராம்சரண் IPS....காவல் துறை அதிகாரியின் மிடுக்குடன் சராசரி உயரத்திற்கும் சற்று அதிகமான உயரம் கொண்டவன்.பார்வதியின் அண்ணன் மகன்.தந்தை இல்லை.தாய் மட்டுமே ....சென்னை இருப்பிடம்......ரோஜாவிற்கு மாமா பையன் என்றாலும் சிறு வயதில் இருந்தே அவளுடனே வளர்ந்ததால் இருவருமே வீட்டிற்கு ஒரே பிள்ளைகள் என்பதால் அவளிடம் அதிக பாசம் கொண்டவன்.ரோஜாவும் ராமிடம் தான் அதிக உரிமை எடுத்து பழகுவாள்.மரகத்திர்க்கு பார்வதி குடும்பத்தாரை கண்டால் பிடிக்காது...... கொஞ்சம் வேகமாக பேசுவார்.அதும் ரோஜா வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்று ராம் சொன்னதும் முதலில் மறுத்தவர் மரகதம்தான். அவருக்கு அதில் விருப்பம் இல்லை....ஆனால் நடந்த சூழ்நிலைகளை விளக்கி ராம் தான் அதற்கு ஒத்து கொள்ள வைத்தான்.மேலும் ராம் எது சொன்னாலும் ரோஜா கேட்பாள்.அதே சமயத்தில் ரோஜாவிற்கு பிடிக்காததை ராம் சொல்லமாட்டன். வீட்டில் மட்டுமே மாம்ஸ் என்பாள்... பெயர் சொல்லி அழைப்பது மரகத்திற்கு பிடிக்காது.......வயது ,முறை இரண்டிற்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பார்.வெளியில் வந்து விட்டால் ராம் அவளுக்கு செல்லம்.பெயர் சொல்லி தான் அழைப்பாள்.
சிறிது நேரம் யோசனையில் இருந்தவன் “முடிவா நீ என்ன சொல்ற ரோஜா” என்றான்.
“எனக்கு தெரியலை ராம் .....நான் ஆசைப்பட்டது முடிவு பண்ணியது எல்லாம் நான்கு வருடத்திற்கு முன்பே முடிந்து விட்டது.இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை.......ஆனால் நான் இங்கிருந்து வெளியே வரமாட்டேன்.....எனக்கு பயமா இருக்கு” என சொல்லும் போதே உடல் நடுங்க முகம் வெளிர காரின் சீட்டிலே ஒண்ட
உடனே அருகில் சென்று தன் தோளோடு அவளை அணைத்தவன் “சரிடா...சரிடா....நான் பார்த்துகிறேன்........இனி உன்னை யாரும் ஏதும் கேட்கமாட்டோம்” என சொல்லியபடியே வண்டியை கிளப்பினான்.
சீட்டில் சாய்ந்து அமர்ந்து அவள் கணைகளை மூடி இருக்க அதை பார்த்தவன் ஆனாலும் கடவுள் இவ்ளோ பெரிய தண்டனயை இப் பெண்ணிற்கு கொடுத்திருக்க வேண்டாம் என நினைத்தான்.
கார் நின்றது கூட தெரியாமல் அவள் தன்னை மறந்து இருக்க அவளை தட்டி எழுப்பியவன் “ஒரு சின்ன வேலை ரோஜா..... என் நண்பன் இங்க எனக்காக வெயிட் பண்றான் பத்து நிமிடம் தான் முடிச்சுட்டு வந்திடலாம்” என்றவன் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.
சரி என்று கீழே இறங்கியவள் நிமிர்ந்து பார்க்க ஹோட்டல் பார்க் அவன்யூ என பெயர் இருக்க பார்த்ததும் கால்கள் நகர மறுக்க ,கைகள் சில்லிட ராமின் கைகளை அழுத்தி பிடித்தவள் “வேண்டாம் ராம்......நான் வரலை எனக்கு பயமா இருக்கு போய்டலாம்” என நடுங்கும் குரலில் சொல்ல
“என்ன ரோஜா இது...... நீ இன்னும் மாறலையா என கேட்டவன் அதெல்லாம் முடியாது வா” என அவளை இழுக்க
“வேண்டாம் ராம் ...நான் வரலை ...வா வீட்டுக்குபோய்டலாம்” என சொல்லிகொண்டே இருந்தவள் அங்கிருந்து ஒரு அடிகூட நகரவில்லை அவன் சொல்வது எதையும் காதில் வைத்து கொள்ளவில்லை. அவள் சொன்னதையே சொல்லிகொண்டிருந்தாள். கைகால்கள் நடுங்கின .......சிறிது நேரம் அவளிடம் போராடியவன் எல்லாரும் அவர்களை பார்ப்பதை கண்டு சரி நாம் போகவேண்டாம் காரில் ஏறு என சொல்லிவிட்டு வேகமாக காரை எடுத்தான்.
காரில் ஏறி அமர்ந்தவள் அவன் முகத்தையே பார்த்து கொண்டிருக்க அதில் இருந்த கோபம் அவளுக்கு புரிய “சாரி ராம்” என மெதுவாக சொல்ல
திரும்பி அவளை முறைத்தவன் ஏதோ சொல்ல வருமுன் அலைபேசி அழைக்க எடுத்து காதில் வைத்தவன் “சாரிடா .....அதுக்குள்ள கொஞ்ச வேலை அதான் திரும்பிட்டேன்” என சொல்லிகொண்டிருக்க அதற்கு எதிர்பக்கம் ஏதோ சொல்ல “மச்சான் புரிஞ்சுகோடா....நான் தான் சொல்றேன்ல...ஹோட்டல் வரை வந்தேன்....அதுக்குள்ள சின்ன பிரச்சனை என சொன்னவன் அதற்க்கு எதிர்புறம் இருந்து மீண்டும் ஏதோ பதில் அதை கேட்டதும் ராமின் முகம் சுருங்க சாரிடா” என அவன் வருந்தும் குரலில் மீண்டும் சொன்னான்.