அத்தியாயம் 22
நடக்க போகும் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அதை தனக்கு ஏற்றவாறு மாற்றி கொள்பவன் புத்திசாலி.....இங்கு இருந்து செல்வதற்குள் ரோஜாவின் மனதில் தான் முழுவதுமாக நிறைந்திடவேண்டும் என நினைத்தான் தேவா .சூழ்நிலைகளும் அதற்கு ஏற்றார் போல் அமைய அவனின் மனம் சந்தோஷ கடலில் சதிராட்டம் போட்டது.
பாட்டியிடம் பேசிவிட்டு வந்த தேவா சிறிது நேரம் அமர்ந்தபடியே உறங்கியவன் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க வேகமாக எழுந்து திறக்க அங்கு பார்வதி நின்று கொண்டு இருந்தார்.
தேவாவை பார்த்ததும் சங்கடத்துடன் ...”.மாப்பிள்ளை நான் ரோஜா..நேரமாகிடுச்சு ...அதான் என தடுமாறியவர் மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை......அவ இன்னும் எழுந்திரிகலையா ...எத்தன முறை சொன்னாலும் புரிய மாட்டேங்குது அவளுக்கு...பாருங்க உங்களை எழுப்பி விட்டுட்டேன்” என ரோஜா எழுந்து வராமல் தேவா வந்ததால் அவர் தடுமாறி சங்கடத்துடன் சொல்ல
தேவாவோ ...”இப்போ எதுக்கு அத்தை தடுமாறிங்க....நானும் இந்த வீட்டு பையன் தான்.....நீங்க உங்க பொண்ணுகிட்ட எப்படி பேசுவிங்களோ...அதே மாதிரி என்கிட்டையும் சரளமா பேசுங்க ....எனக்கு அம்மா கிடையாது...உங்களை நான் அந்த இடத்துலதான் வச்சிருக்கேன்....உங்க மகனா என்னை நினைசுக்குங்க “என அவன் அவரது சங்கடத்தை போக்குவதற்காக உரிமையுடன் பேச பார்வதியோ “கண்டிப்பா மாப்பிள்ளை....நீங்க எங்க வீட்டு பையன்தான்....ஆனா நான் ஒன்னு பெத்து வச்சிருக்கனே” என அவர் ரோஜாவை பார்க்க
“ஹஹஹஹா ....இல்லை அத்தை .......ரொம்ப நேரம் கார்ல வந்ததால ரொம்ப களைப்பா இருக்கும்...அவ தூங்கட்டும்.....உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க நான் செய்யறேன்” என்றான்.
“எனக்கு ஒன்னும் வேண்டாம்...உங்களுக்குதான் காபி போட்ரதானு கேட்க வந்தேன்” என்றார் பார்வதி.
“சரி அத்தை போடுங்க...நான் கொஞ்சம் குளிக்க வேண்டும் ” என்றான்.
“குளியல் அறை பின்னாடி இருக்கு ....துண்டும் அங்க இருக்கு எடுத்துக்குங்க” என சொல்லிவிட்டு அவர் செல்ல அவனும் குளியல் அறை நோக்கி நடந்தான். .
அதுவரை அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்ட கொண்டிருந்த ரோஜா அவன் தன் தாயிடம் தன்மையாக பேசியது பிடித்து போக இவன் நிஜமாகதான் என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணி இருப்பானோ என ஒரு சந்தேகம் மனதில் தோன்ற உடனே அவளது மூளை அப்படி அவசரப்பட்டு முடிவு பண்ணிவிடாதே ரோஜா ....இவன் காரணம் இல்லாமல் ஏதும் செய்யமாட்டான் .... என அவளை குழப்பிவிட அய்யோ என மீண்டும் குப்புறபடுத்து தலயனையில் முகம் புதைத்து தனது உறக்கத்தை தொடர்ந்தாள்.
தேவா குளித்து கிளம்பி உள்ளே வர ரோஜா அப்பவும் உறங்கி கொண்டு இருக்க ....அவளை பார்த்தவன் “சாப்பிட்றது தூங்கறது இத மட்டுமே வாழ்க்கையிலே ஒரே குறிக்கோளா வச்சுட்டு இருக்கா...அடேய் தேவா ஜான்சி ராணி மாதிரி தைரியமான பொண்ண கல்யாணம் பண்ணும்னு நினைச்சுட்டு இருந்தியே ......இப்படி கும்பகர்ணியா உனக்கு மனைவியா வரணும்” என அவன் மேல் அக்கறை கொண்ட மனம் அவனை பார்த்து கேலி செய்ய
அவனுக்கு சிரிப்பு வர உறங்கி கொண்டிருந்த தனது மனம் கவர்ந்தவளின் முகத்தை பார்த்தவன் அதன் மென்மையும் குழந்தைதனமும் அவனது மனதை வசபடுத்த அவளின் அருகில் வந்தவன் அவளது தலையை மெதுவாக தடவிகொண்டே “கும்பகர்ணியா இருந்தாலும் என் மனதை குளிர்விக்கு குல்பி ஐஸ் இவள்தான் என சொன்னவன் அட சே என்ன இப்படி மொக்க கவிதை எல்லாம் வருது என தனக்குள் சொல்லி சிரித்து கொண்டவன் எப்படி இருந்த என்னை இப்படி மாத்திட்டியே அம்லு” என அவளை மனதிற்குள் செல்லம் கொஞ்சியபடி அங்கிருந்து நகர்ந்தான்.
மாலை நேரத்தில் சேகருடன் அவரின் கடைக்கு தேவா சென்றவிட அதற்கு பிறகு பார்வதியின் மிரட்டலில் அலறி அடித்து கொண்டு எழுந்தவள் பின்னர் அங்க இருப்பவர்களோடு சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தாள் ரோஜா.
இரவு தேவா, சேகர் இருவரும் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் சேர்ந்து உணவு உண்ண ...தேவா செல்லும் வழியில் தான் பார்த்தவற்றை அவர்களிடம் சொல்லி அதற்கு விளக்கம் கேட்க கிராமத்து நடைமுறை தெரியாததால் சேகரும் மரகதமும் அவற்றை விளக்க இடையில் ரோஜா அதை கிண்டல் பண்ண அங்கு உணவோடு சந்தோசமும் நிறைந்து இருந்தது.
பின்னர் அனைவரும் அவர்கள் அறைக்கு செல்ல பார்வதி ரோஜாவை அழைத்து “ரோஜா இந்தா மாப்பிள்ளைக்கு பால் கொண்டு போ” என அவள் கையில் கொடுத்தார்....அவளோ “ஏம்மா அதை சாப்பிட்டு முடிச்ச உடனே இங்கே கொடுத்து இருந்திருக்கலாம் ...இதைவேற நான் கொண்டு போகனுமா” என சலித்தவாரே அவள் அதை வாங்க பார்வதியோ ஒரு நிமிடம் அதிர்ந்தவர் சட்டென்று தனது மகளின் தோளில் கைவைத்து அவளை முகம் பார்த்து “ரோஜா நீ சந்தோசமா இருக்க தான” என கேட்டார்.
ரோஜாவோ அவர் என்ன கேட்க வருகிறார் என புரிந்து கொள்ளாமல் .....”எப்படிம்மா சந்தோசமா இருக்க முடியும்... கவலையாதான் இருக்கேன்” என சொல்ல ....”என்னடி சொல்ற நீ “ என பதறி அவர் கேட்க “நீ தான் நான் வந்ததில இருந்து அந்த ரவாஉருண்டைய கண்ணுல காட்ட மாட்டேன்கிற” என அதுதான் அவளது பெரிய கவலையாக சொல்ல...பார்வதியோ நறநறவென பற்களை கடித்தவர் “உன்னை எல்லாம்” என முறைக்க
“பாருங்க இதுக்குதான் சொன்னேன்....நீ எப்பவும் சொர்ணக்கா மாதிரி திட்டிகிட்டே இரு...இப்படி திடிர்னு அன்னை தெரசாவ மாறி அன்பா பேசினா எனக்கு பயமா இருக்குல்ல” என அந்த நேரத்திலும் அவள் கவுண்டர் கொடுக்க
“மெதுவா பேசுடி.......மாப்பிளைக்கு கேக்க போகுது என பதறியவர் அய்யோ இவளை வச்சு மாப்பிள்ளை எப்படித்தான் சமாளிக்க போறாரோ” என தலையில் கை வைத்து அமர்ந்தார் பார்வதி .
ரோஜாவோ பாலை எடுத்து கொண்டு அறைக்குள் செல்வதற்குள் அவள் தேவாவை திட்டிய திட்டில் பால் தயிராக மாறாமல் இருந்தால்தான் அதிசியம்.வேகமாக உள்ளே சென்று மேஜையில் பாலை வைத்தவள் அவனிடம் திரும்பி “ஏன் சார் பால் வேணும்னா அங்கே குடிச்சுட்டு வந்து இருக்லாமல......இப்போ பாருங்க அங்க எங்க அம்மா அட்வைசே அள்ளி கொட்றாங்க ” என படபடவென பொரிய
தேவாவோ நடந்ததை எல்லாம் கேட்டு கொண்டு இருந்ததால் ஏதும் சொல்லாமல் அவளை பார்த்து சிரித்தான்.
“இப்போ எதுக்கு சிரிக்கிரிங்க என கேட்டுகொண்டே கட்டிலை சுற்றி வந்தவள் ..ஆமா நான் எங்க படுக்கிறது இப்போ” என அவனை பார்த்து கண்களை விரித்து கேட்க
அவனோ இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்தவன் போல் “என்னை கேட்டால் என்றவன் இது உன் வீடு நீ தான் சொல்லணும்” என சொல்லிவிட்டு மெத்தையில் சாய்ந்து கொண்டான்.
“இல்ல இரண்டு பேர் எப்படி ஒரே மெத்தையில்” என சொல்லிகொண்டே அவன் முகத்தை பார்க்க
அவனது ரசனையான பார்வை அவளை ஏதோ செய்ய
“இவன் என்ன இப்படி பார்கிறான்...ஆஹா ரோஜா இப்படி வந்து சிக்கிட்டியே” என மனதிற்குள் சற்று தடுமாறியவள் ...
“இங்க பாருங்க ...நான் படுக்கணும் “என சொல்லிகொண்டே நிற்க
“படு” என சொல்லிவிட்டு அவன் அவளை மேலும் கீழுமாக பார்க்க
“இங்க பாருங்க சார்......எனக்கு...எனக்கு தனியா படுத்தா தான் தூக்கம் வரும்....அதுனால” என அவள் நிறுத்த
“சரி அப்போ நீ படு ...நான் வெளியே போய் படுத்துகிறேன்...யாராவது கேட்டா என் பொண்டாட்டி என்னை வெளியே படுக்க சொல்லிட்டா அப்டின்னு சொல்றேன் என அவன் சொல்லி விட்டு வேகமாக எழுந்தான்.
உடனே அவள் “என்ன நீங்க எதுக்கு இப்போ இப்படி எல்லாம் பேசறிங்க” என அவள் அழுவது போல் கேட்க
“எப்படி பேசறேன்...நீ தான சொன்ன” என அவன் திரும்ப சொல்ல
“இல்லை நீங்க அங்க உங்க வீட்ல இப்படி எல்லாம் பேசமாட்டீங்க ...இப்போ பொண்டாட்டி ...ஒரே கட்டில தான் படுக்கணும் அப்டின்னு எல்லாம் சொல்றிங்க” என அவள் அவனை குற்றம் சொன்னாள்..
“நான் ஒரே கட்டில படுக்கணும்னு சொல்லல ...நீ தான் சொல்ற ......நான் இதுலதான் படுப்பேன்.....உனக்கு படுக்கணும்னா கூட படுன்னு சொல்றேன்” என அவன் சொல்லிவிட்டு மீண்டும் மெத்தையில் சாய்ந்தான்.
“இங்க பாருங்க....இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்” என அவள் அவனை பார்த்து கையை நீட்டி பேச
அதுவரை சிரித்துகொன்டே அவளை பார்த்து கொண்டு இருந்தவன் சட்டென்று முகம் மாற ...கண்கள் சிவக்க அவளை முறைத்து பார்த்தான்.
அவனது முகமாற்றம் அவளுக்கு பிதாமகனை நினைவு படுத்த அப்படியே அமைதியானவள்
“இல்லை எனக்கு கீழே படுத்தா தூக்கம் வராது அதான்” என சொல்லும்போதே வார்த்தை தடுமாற கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது.
“அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது ......என்னிடம் கை நீட்டி பேசுவது இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும்......இனி இப்படி பேசாதே “என அவன் அழுத்தமான குரலில் சொல்ல அப்போது தான் ரோஜாவிற்கு அவனது கோபத்தின் காரணம் புரிந்தது.
சரி என அவள் தலையாட்டியவள் மறுபடியும் அப்படியே நிற்க ...”என்ன அப்படியே நின்று கொண்டு இருக்க...இது உன் வீடு......இங்க இருக்கிறத வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் என்ன புரிஞ்சுதா வா வந்து படு” என அதட்டலாக சொல்லிவிட்டு அவன் திரும்பி படுக்க அவளோ வேகமாக வந்து கட்டிலின் மறுபுறத்தில் அமர்ந்தாள்.
சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் “என் வீட்டில் வந்து என்னையே அதிகாரம் பண்றான்.....எல்லாம் இந்த பாட்டியினால வந்தது.பொய் பேசி என்ன வரவழைச்சு இப்படி பண்ணுது என மனதிற்குள் எல்லாரையும் திட்டியவள் ...பாரு இங்க நான் புலம்பிட்டு இருக்கேன் இவன் தூங்கிட்டு இருக்கான்” என கோபமாக அவனை திரும்பி பார்த்தவள்
இரவு உடை இல்லாமல் பனியனும் லுங்கியுடன் அவன் படுத்திருக்க ...அவனது தோள்பட்டை முகத்தின் ஒரு பகுதி எல்லாம் வேர்வை வலிந்து ஓட ...அப்போது அவனது கையில் ஒரு கொசு அமர அதை தட்டிவிட்டு அவன் மறுபடியும் புரண்டு படுக்க பார்த்த ரோஜா ஒரு நிமிடம் அவர்கள் வீட்டில் ஏசி அறையில் அவள் படுத்து உறங்கியதை நினைத்து பார்த்தவள் எப்படி இருக்க வேண்டியவன் இன்று இங்கு வந்து இப்படி படுத்து உறங்குகிறான். அதும் அவனது அறை மிகவும் பெரியது...அந்த அறையின் கால் பகுதி கூட இது இல்லை...இருந்தும் அவன் முகம் சுளிக்காமல் இருப்பதை பார்த்த அவள் மனம் மெல்ல அவனின் பால் சாய அவனை பார்த்து கொண்டே அப்படியே அமர்ந்திருந்தாள்.
வியர்வையினால் ஒரே இடத்தில் படுக்க முடியாமல் புரண்டு படுத்தவன் அவள் அவனையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவன் ....”என்ன வேணும் ரோஜா ...இன்னும் நீ தூங்கலையா” என கேட்டான்.
அவன் சாதரணமாக கேட்டது அவளுக்கு மிரட்டுவது போல் தோன்ற ..”இதோ படுத்தறேன்” என்றவள் சுற்றிலும் பார்த்தவள் வேகமாக தனது தலையனைய எடுத்து நடுவில் வைக்க அவன் அவளை முறைக்க
அவளோ கெஞ்சுவது போல் அவனை பார்க்க
“சரி...சரி......நான் ஏதும் சொல்லல ....நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ” என சொல்லிவிட்டு கண்களை மூடி கொண்டான்.
“ஹப்பா” என பெருமூச்சு விட்டவள் பெட்ஷீட் தலையணை எல்லாம் நடுவில் தடுப்பானயாக வைத்து அதற்க்கு பிறகே படுத்தாள்.
அவன் திரும்பி அவளை பார்க்க
“இல்லை அது வந்து” என அவள் இழுக்க அவன் சிரித்து கொண்டே குட் நைட் என சொல்லிவிட்டு மறுபடியும் திரும்பி படுத்து கொண்டான்.
அதற்கு பிறகும் அவனுக்கும் அவளுக்கும் இடையில் தலையணை பெட்சீட் எல்லாம் தடுப்பானையாக வைத்து அவள் உறங்க...விடியும் நேரத்தில் திரும்பி படுக்க நினைத்தவன் முடியாமல் எதோ அழுத்த கண்விழித்தவன் கழுத்தின் ஓரம் ஏதோ குறுகுறுக்க குனிந்து பார்த்தவன் தடுப்பானை தரையில் கிடக்க ரோஜாவின் முகம் அவன் கழுத்தின் கீழ் இருக்க அவள் கால்கள் அவன் கால் மேல் கிடக்க கைகள் அவன் நெஞ்சின் மேல் இருக்க அவனை அணைத்தபடி அவள் உறங்கி கொண்டு இருந்தாள்.
பார்த்த உடன் அவனது இதயம் சற்று நின்று பின் துடித்தது......சிறுகுழந்தை போல் அவள் தன்னை அணைத்தவாறு படுத்திருக்க அவளது மூச்சுகாற்று அவனது மார்பில் பட மெல்ல அவளின் கை அருகில் இருந்து தனது கையை எடுக்க முற்பட அவளோ ம்ம்ம் என அனத்திகொண்டே எதோ தலையணையை இறுக்குவது போல் அவனிடம் ஒண்ட அந்த நொடி தேவா தன்னை மறந்து அவளின் நெற்றியில் மென்மையான தனது முதல் அச்சாரத்தை பதித்தான். அந்த உணர்வு அவனது உயிர் அடிவரை செல்லஆசையோடு அவளை இறுக்கி அணைக்க தனது கைகளை தூக்கியவன் அப்போது என்று அவனது அலைபேசி அழைக்க அதை வெறியோடு முறைத்தவன் ச்சே என சலித்தபடி அவள் மேல் இருந்த கையை எடுத்தான்.
நடக்க போகும் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அதை தனக்கு ஏற்றவாறு மாற்றி கொள்பவன் புத்திசாலி.....இங்கு இருந்து செல்வதற்குள் ரோஜாவின் மனதில் தான் முழுவதுமாக நிறைந்திடவேண்டும் என நினைத்தான் தேவா .சூழ்நிலைகளும் அதற்கு ஏற்றார் போல் அமைய அவனின் மனம் சந்தோஷ கடலில் சதிராட்டம் போட்டது.
பாட்டியிடம் பேசிவிட்டு வந்த தேவா சிறிது நேரம் அமர்ந்தபடியே உறங்கியவன் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க வேகமாக எழுந்து திறக்க அங்கு பார்வதி நின்று கொண்டு இருந்தார்.
தேவாவை பார்த்ததும் சங்கடத்துடன் ...”.மாப்பிள்ளை நான் ரோஜா..நேரமாகிடுச்சு ...அதான் என தடுமாறியவர் மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை......அவ இன்னும் எழுந்திரிகலையா ...எத்தன முறை சொன்னாலும் புரிய மாட்டேங்குது அவளுக்கு...பாருங்க உங்களை எழுப்பி விட்டுட்டேன்” என ரோஜா எழுந்து வராமல் தேவா வந்ததால் அவர் தடுமாறி சங்கடத்துடன் சொல்ல
தேவாவோ ...”இப்போ எதுக்கு அத்தை தடுமாறிங்க....நானும் இந்த வீட்டு பையன் தான்.....நீங்க உங்க பொண்ணுகிட்ட எப்படி பேசுவிங்களோ...அதே மாதிரி என்கிட்டையும் சரளமா பேசுங்க ....எனக்கு அம்மா கிடையாது...உங்களை நான் அந்த இடத்துலதான் வச்சிருக்கேன்....உங்க மகனா என்னை நினைசுக்குங்க “என அவன் அவரது சங்கடத்தை போக்குவதற்காக உரிமையுடன் பேச பார்வதியோ “கண்டிப்பா மாப்பிள்ளை....நீங்க எங்க வீட்டு பையன்தான்....ஆனா நான் ஒன்னு பெத்து வச்சிருக்கனே” என அவர் ரோஜாவை பார்க்க
“ஹஹஹஹா ....இல்லை அத்தை .......ரொம்ப நேரம் கார்ல வந்ததால ரொம்ப களைப்பா இருக்கும்...அவ தூங்கட்டும்.....உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க நான் செய்யறேன்” என்றான்.
“எனக்கு ஒன்னும் வேண்டாம்...உங்களுக்குதான் காபி போட்ரதானு கேட்க வந்தேன்” என்றார் பார்வதி.
“சரி அத்தை போடுங்க...நான் கொஞ்சம் குளிக்க வேண்டும் ” என்றான்.
“குளியல் அறை பின்னாடி இருக்கு ....துண்டும் அங்க இருக்கு எடுத்துக்குங்க” என சொல்லிவிட்டு அவர் செல்ல அவனும் குளியல் அறை நோக்கி நடந்தான். .
அதுவரை அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்ட கொண்டிருந்த ரோஜா அவன் தன் தாயிடம் தன்மையாக பேசியது பிடித்து போக இவன் நிஜமாகதான் என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணி இருப்பானோ என ஒரு சந்தேகம் மனதில் தோன்ற உடனே அவளது மூளை அப்படி அவசரப்பட்டு முடிவு பண்ணிவிடாதே ரோஜா ....இவன் காரணம் இல்லாமல் ஏதும் செய்யமாட்டான் .... என அவளை குழப்பிவிட அய்யோ என மீண்டும் குப்புறபடுத்து தலயனையில் முகம் புதைத்து தனது உறக்கத்தை தொடர்ந்தாள்.
தேவா குளித்து கிளம்பி உள்ளே வர ரோஜா அப்பவும் உறங்கி கொண்டு இருக்க ....அவளை பார்த்தவன் “சாப்பிட்றது தூங்கறது இத மட்டுமே வாழ்க்கையிலே ஒரே குறிக்கோளா வச்சுட்டு இருக்கா...அடேய் தேவா ஜான்சி ராணி மாதிரி தைரியமான பொண்ண கல்யாணம் பண்ணும்னு நினைச்சுட்டு இருந்தியே ......இப்படி கும்பகர்ணியா உனக்கு மனைவியா வரணும்” என அவன் மேல் அக்கறை கொண்ட மனம் அவனை பார்த்து கேலி செய்ய
அவனுக்கு சிரிப்பு வர உறங்கி கொண்டிருந்த தனது மனம் கவர்ந்தவளின் முகத்தை பார்த்தவன் அதன் மென்மையும் குழந்தைதனமும் அவனது மனதை வசபடுத்த அவளின் அருகில் வந்தவன் அவளது தலையை மெதுவாக தடவிகொண்டே “கும்பகர்ணியா இருந்தாலும் என் மனதை குளிர்விக்கு குல்பி ஐஸ் இவள்தான் என சொன்னவன் அட சே என்ன இப்படி மொக்க கவிதை எல்லாம் வருது என தனக்குள் சொல்லி சிரித்து கொண்டவன் எப்படி இருந்த என்னை இப்படி மாத்திட்டியே அம்லு” என அவளை மனதிற்குள் செல்லம் கொஞ்சியபடி அங்கிருந்து நகர்ந்தான்.
மாலை நேரத்தில் சேகருடன் அவரின் கடைக்கு தேவா சென்றவிட அதற்கு பிறகு பார்வதியின் மிரட்டலில் அலறி அடித்து கொண்டு எழுந்தவள் பின்னர் அங்க இருப்பவர்களோடு சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தாள் ரோஜா.
இரவு தேவா, சேகர் இருவரும் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் சேர்ந்து உணவு உண்ண ...தேவா செல்லும் வழியில் தான் பார்த்தவற்றை அவர்களிடம் சொல்லி அதற்கு விளக்கம் கேட்க கிராமத்து நடைமுறை தெரியாததால் சேகரும் மரகதமும் அவற்றை விளக்க இடையில் ரோஜா அதை கிண்டல் பண்ண அங்கு உணவோடு சந்தோசமும் நிறைந்து இருந்தது.
பின்னர் அனைவரும் அவர்கள் அறைக்கு செல்ல பார்வதி ரோஜாவை அழைத்து “ரோஜா இந்தா மாப்பிள்ளைக்கு பால் கொண்டு போ” என அவள் கையில் கொடுத்தார்....அவளோ “ஏம்மா அதை சாப்பிட்டு முடிச்ச உடனே இங்கே கொடுத்து இருந்திருக்கலாம் ...இதைவேற நான் கொண்டு போகனுமா” என சலித்தவாரே அவள் அதை வாங்க பார்வதியோ ஒரு நிமிடம் அதிர்ந்தவர் சட்டென்று தனது மகளின் தோளில் கைவைத்து அவளை முகம் பார்த்து “ரோஜா நீ சந்தோசமா இருக்க தான” என கேட்டார்.
ரோஜாவோ அவர் என்ன கேட்க வருகிறார் என புரிந்து கொள்ளாமல் .....”எப்படிம்மா சந்தோசமா இருக்க முடியும்... கவலையாதான் இருக்கேன்” என சொல்ல ....”என்னடி சொல்ற நீ “ என பதறி அவர் கேட்க “நீ தான் நான் வந்ததில இருந்து அந்த ரவாஉருண்டைய கண்ணுல காட்ட மாட்டேன்கிற” என அதுதான் அவளது பெரிய கவலையாக சொல்ல...பார்வதியோ நறநறவென பற்களை கடித்தவர் “உன்னை எல்லாம்” என முறைக்க
“பாருங்க இதுக்குதான் சொன்னேன்....நீ எப்பவும் சொர்ணக்கா மாதிரி திட்டிகிட்டே இரு...இப்படி திடிர்னு அன்னை தெரசாவ மாறி அன்பா பேசினா எனக்கு பயமா இருக்குல்ல” என அந்த நேரத்திலும் அவள் கவுண்டர் கொடுக்க
“மெதுவா பேசுடி.......மாப்பிளைக்கு கேக்க போகுது என பதறியவர் அய்யோ இவளை வச்சு மாப்பிள்ளை எப்படித்தான் சமாளிக்க போறாரோ” என தலையில் கை வைத்து அமர்ந்தார் பார்வதி .
ரோஜாவோ பாலை எடுத்து கொண்டு அறைக்குள் செல்வதற்குள் அவள் தேவாவை திட்டிய திட்டில் பால் தயிராக மாறாமல் இருந்தால்தான் அதிசியம்.வேகமாக உள்ளே சென்று மேஜையில் பாலை வைத்தவள் அவனிடம் திரும்பி “ஏன் சார் பால் வேணும்னா அங்கே குடிச்சுட்டு வந்து இருக்லாமல......இப்போ பாருங்க அங்க எங்க அம்மா அட்வைசே அள்ளி கொட்றாங்க ” என படபடவென பொரிய
தேவாவோ நடந்ததை எல்லாம் கேட்டு கொண்டு இருந்ததால் ஏதும் சொல்லாமல் அவளை பார்த்து சிரித்தான்.
“இப்போ எதுக்கு சிரிக்கிரிங்க என கேட்டுகொண்டே கட்டிலை சுற்றி வந்தவள் ..ஆமா நான் எங்க படுக்கிறது இப்போ” என அவனை பார்த்து கண்களை விரித்து கேட்க
அவனோ இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்தவன் போல் “என்னை கேட்டால் என்றவன் இது உன் வீடு நீ தான் சொல்லணும்” என சொல்லிவிட்டு மெத்தையில் சாய்ந்து கொண்டான்.
“இல்ல இரண்டு பேர் எப்படி ஒரே மெத்தையில்” என சொல்லிகொண்டே அவன் முகத்தை பார்க்க
அவனது ரசனையான பார்வை அவளை ஏதோ செய்ய
“இவன் என்ன இப்படி பார்கிறான்...ஆஹா ரோஜா இப்படி வந்து சிக்கிட்டியே” என மனதிற்குள் சற்று தடுமாறியவள் ...
“இங்க பாருங்க ...நான் படுக்கணும் “என சொல்லிகொண்டே நிற்க
“படு” என சொல்லிவிட்டு அவன் அவளை மேலும் கீழுமாக பார்க்க
“இங்க பாருங்க சார்......எனக்கு...எனக்கு தனியா படுத்தா தான் தூக்கம் வரும்....அதுனால” என அவள் நிறுத்த
“சரி அப்போ நீ படு ...நான் வெளியே போய் படுத்துகிறேன்...யாராவது கேட்டா என் பொண்டாட்டி என்னை வெளியே படுக்க சொல்லிட்டா அப்டின்னு சொல்றேன் என அவன் சொல்லி விட்டு வேகமாக எழுந்தான்.
உடனே அவள் “என்ன நீங்க எதுக்கு இப்போ இப்படி எல்லாம் பேசறிங்க” என அவள் அழுவது போல் கேட்க
“எப்படி பேசறேன்...நீ தான சொன்ன” என அவன் திரும்ப சொல்ல
“இல்லை நீங்க அங்க உங்க வீட்ல இப்படி எல்லாம் பேசமாட்டீங்க ...இப்போ பொண்டாட்டி ...ஒரே கட்டில தான் படுக்கணும் அப்டின்னு எல்லாம் சொல்றிங்க” என அவள் அவனை குற்றம் சொன்னாள்..
“நான் ஒரே கட்டில படுக்கணும்னு சொல்லல ...நீ தான் சொல்ற ......நான் இதுலதான் படுப்பேன்.....உனக்கு படுக்கணும்னா கூட படுன்னு சொல்றேன்” என அவன் சொல்லிவிட்டு மீண்டும் மெத்தையில் சாய்ந்தான்.
“இங்க பாருங்க....இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்” என அவள் அவனை பார்த்து கையை நீட்டி பேச
அதுவரை சிரித்துகொன்டே அவளை பார்த்து கொண்டு இருந்தவன் சட்டென்று முகம் மாற ...கண்கள் சிவக்க அவளை முறைத்து பார்த்தான்.
அவனது முகமாற்றம் அவளுக்கு பிதாமகனை நினைவு படுத்த அப்படியே அமைதியானவள்
“இல்லை எனக்கு கீழே படுத்தா தூக்கம் வராது அதான்” என சொல்லும்போதே வார்த்தை தடுமாற கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது.
“அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது ......என்னிடம் கை நீட்டி பேசுவது இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும்......இனி இப்படி பேசாதே “என அவன் அழுத்தமான குரலில் சொல்ல அப்போது தான் ரோஜாவிற்கு அவனது கோபத்தின் காரணம் புரிந்தது.
சரி என அவள் தலையாட்டியவள் மறுபடியும் அப்படியே நிற்க ...”என்ன அப்படியே நின்று கொண்டு இருக்க...இது உன் வீடு......இங்க இருக்கிறத வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் என்ன புரிஞ்சுதா வா வந்து படு” என அதட்டலாக சொல்லிவிட்டு அவன் திரும்பி படுக்க அவளோ வேகமாக வந்து கட்டிலின் மறுபுறத்தில் அமர்ந்தாள்.
சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் “என் வீட்டில் வந்து என்னையே அதிகாரம் பண்றான்.....எல்லாம் இந்த பாட்டியினால வந்தது.பொய் பேசி என்ன வரவழைச்சு இப்படி பண்ணுது என மனதிற்குள் எல்லாரையும் திட்டியவள் ...பாரு இங்க நான் புலம்பிட்டு இருக்கேன் இவன் தூங்கிட்டு இருக்கான்” என கோபமாக அவனை திரும்பி பார்த்தவள்
இரவு உடை இல்லாமல் பனியனும் லுங்கியுடன் அவன் படுத்திருக்க ...அவனது தோள்பட்டை முகத்தின் ஒரு பகுதி எல்லாம் வேர்வை வலிந்து ஓட ...அப்போது அவனது கையில் ஒரு கொசு அமர அதை தட்டிவிட்டு அவன் மறுபடியும் புரண்டு படுக்க பார்த்த ரோஜா ஒரு நிமிடம் அவர்கள் வீட்டில் ஏசி அறையில் அவள் படுத்து உறங்கியதை நினைத்து பார்த்தவள் எப்படி இருக்க வேண்டியவன் இன்று இங்கு வந்து இப்படி படுத்து உறங்குகிறான். அதும் அவனது அறை மிகவும் பெரியது...அந்த அறையின் கால் பகுதி கூட இது இல்லை...இருந்தும் அவன் முகம் சுளிக்காமல் இருப்பதை பார்த்த அவள் மனம் மெல்ல அவனின் பால் சாய அவனை பார்த்து கொண்டே அப்படியே அமர்ந்திருந்தாள்.
வியர்வையினால் ஒரே இடத்தில் படுக்க முடியாமல் புரண்டு படுத்தவன் அவள் அவனையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவன் ....”என்ன வேணும் ரோஜா ...இன்னும் நீ தூங்கலையா” என கேட்டான்.
அவன் சாதரணமாக கேட்டது அவளுக்கு மிரட்டுவது போல் தோன்ற ..”இதோ படுத்தறேன்” என்றவள் சுற்றிலும் பார்த்தவள் வேகமாக தனது தலையனைய எடுத்து நடுவில் வைக்க அவன் அவளை முறைக்க
அவளோ கெஞ்சுவது போல் அவனை பார்க்க
“சரி...சரி......நான் ஏதும் சொல்லல ....நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ” என சொல்லிவிட்டு கண்களை மூடி கொண்டான்.
“ஹப்பா” என பெருமூச்சு விட்டவள் பெட்ஷீட் தலையணை எல்லாம் நடுவில் தடுப்பானயாக வைத்து அதற்க்கு பிறகே படுத்தாள்.
அவன் திரும்பி அவளை பார்க்க
“இல்லை அது வந்து” என அவள் இழுக்க அவன் சிரித்து கொண்டே குட் நைட் என சொல்லிவிட்டு மறுபடியும் திரும்பி படுத்து கொண்டான்.
அதற்கு பிறகும் அவனுக்கும் அவளுக்கும் இடையில் தலையணை பெட்சீட் எல்லாம் தடுப்பானையாக வைத்து அவள் உறங்க...விடியும் நேரத்தில் திரும்பி படுக்க நினைத்தவன் முடியாமல் எதோ அழுத்த கண்விழித்தவன் கழுத்தின் ஓரம் ஏதோ குறுகுறுக்க குனிந்து பார்த்தவன் தடுப்பானை தரையில் கிடக்க ரோஜாவின் முகம் அவன் கழுத்தின் கீழ் இருக்க அவள் கால்கள் அவன் கால் மேல் கிடக்க கைகள் அவன் நெஞ்சின் மேல் இருக்க அவனை அணைத்தபடி அவள் உறங்கி கொண்டு இருந்தாள்.
பார்த்த உடன் அவனது இதயம் சற்று நின்று பின் துடித்தது......சிறுகுழந்தை போல் அவள் தன்னை அணைத்தவாறு படுத்திருக்க அவளது மூச்சுகாற்று அவனது மார்பில் பட மெல்ல அவளின் கை அருகில் இருந்து தனது கையை எடுக்க முற்பட அவளோ ம்ம்ம் என அனத்திகொண்டே எதோ தலையணையை இறுக்குவது போல் அவனிடம் ஒண்ட அந்த நொடி தேவா தன்னை மறந்து அவளின் நெற்றியில் மென்மையான தனது முதல் அச்சாரத்தை பதித்தான். அந்த உணர்வு அவனது உயிர் அடிவரை செல்லஆசையோடு அவளை இறுக்கி அணைக்க தனது கைகளை தூக்கியவன் அப்போது என்று அவனது அலைபேசி அழைக்க அதை வெறியோடு முறைத்தவன் ச்சே என சலித்தபடி அவள் மேல் இருந்த கையை எடுத்தான்.