- Joined
- Aug 2, 2021
- Messages
- 145
அத்தியாயம் -23
மோதலின் அடுத்த கட்டம் கூடலில் தான் தொடங்கும்.....ரோஜாவின் அருகாமை தேவாவின் ஆசைகளை தூண்டிவிட அவளின் வரவுக்காக காத்து கொண்டு இருந்தான்.அவளிடம் சொல்லவேண்டிய வார்த்தைகள் எல்லாம் பேசி சரிபார்த்து கொண்டு எதிர்பார்த்து இருந்தான்.....
ரோஜாவிற்கு தேவாவின் நேசமும் நெருக்கமும் பிடித்து இருந்தாலும் மனதிற்குள் ஏதோ ஒன்று குழப்பமாக இருக்க தலையில் கைவைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.
ரோஜாவை அழைத்தும் பதில் இல்லாமல் போக பாலை எடுத்து கொண்டு வெளியே வந்த பார்வதி ரோஜா அமர்ந்திருந்த நிலை பார்த்து வேகமாக அவள் அருகில் சென்றவர்...”ரோஜா என்னம்மா பண்ணுது....தலை வலிக்குதா......அச்சோ நான் அப்பாவும் சொன்னேன்...அவளுக்கு பொங்கல் வைக்க தெரியாதுனு ..உங்க பாட்டி கேட்டாங்களா ...இப்போ பாரு” என அவரே ஒரு காரணத்தை சொல்லி கொண்டு புலம்ப
“அம்மா” என அழுத்தமாக சொன்னவள் “அப்படி எல்லாம் இல்லை” என்றாள்.
மெதுவாக அவள் தலையை வருடி கொடுத்தபடியே “ரோஜா நீ இப்போ என்ன மனசுக்குள்ளே நினச்சுட்டு இருக்கேனு எனக்கு தெரியாது.......ஆனா நீயும் மாப்பிள்ளையும் உள்ள சந்தோசமா வந்தத பார்த்திட்டு உன் அப்பாவும் பாட்டியும் மனநிறைவோட தூங்க போனாங்க .........அதுல மண் அள்ளி போற்றாதடி.......ஏற்கனவே ரொம்ப கஷ்டபட்டுடோம்......ஏதோ இப்பதான் கடவுள் கண்ணை திறந்து இருக்கிறார்......நான் கூட மாப்பிள்ளை எப்படி இருப்பாறோன்னு பயந்திட்டே இருந்தான்......ரொம்ப தங்கமான மனுசனா தெரியறார்.....நீ படிச்ச பொண்ணு இதுக்கு மேல நான் சொல்லி உனக்கு தெரியனம்னு கிடையாது.......நீயே புரிஞ்சு நடந்துக்கோ” என ஒரு தாயின் பரிதவிப்பை அவர் அவளுக்கு புரிய வைக்க
அவளோ வாடிய முகத்தோடு தாயை நிமிர்ந்து பார்க்க ...”ரோஜா என் தங்கமே என தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவர் உன்னை வருத்துவதற்காக இதை சொல்லவில்லை ரோஜா.......எங்கள் அனைவர்க்கும் நீ ஒருத்தி தான் உயிர்.......நீ நன்றாக சந்தோசமாக இருந்தாள் தான் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும்.......உனது தாத்தா திதி அடுத்த வாரம் வருகிறது.......அவரோட ஆசை என்ன தெரியுமா? நீ எப்போதும் சந்தோசமா இருக்கனும் அப்படிங்கிறது தான்......அதை நீ நிறைவேத்த மாட்டியா” என சூழ்நிலை தெரியாமல் அவர் உணர்ச்சி வேகத்தில் அவளது தாத்தாவை நியாபக படுத்த
அவளோ அதிர்வோடு தாயை பார்த்தவள் தேதி காலண்டரை பார்க்க ...அப்போது தான் பார்வதிக்கு தான் சொன்னது உரைக்க .....ரோஜா ..”ரோஜா இங்க பாரு தாத்த எப்போதும் உன் கூட இருந்து உன்னை பார்த்துகிட்டே இருப்பார்...நீ கண்டதை நினைச்சு குழப்பிக்காத “ என அவளை பார்வதி சமாதனபடுத்த தாயின் மடியில் படுத்தவள் குலுங்கி அழுவ பார்வதியோ தான் ஒன்று நினைத்து சொல்ல இப்படி ஆகிவிட்டதே என மனதிற்குள் புலம்பியவாறு அவளை எப்படி சமாதனபடுத்துவது என் தெரியாமல் விழித்த படி அமர்ந்திருந்தார்.
வெகுநேரமாக பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த மரகதம் அங்கு ரோஜா பார்வதியின் மடியில் படுத்து அழுது கொண்டு இருப்பதை பார்த்தவர் தனது மருமகளை பார்க்க ..மருமகளோ மாமனாரின் போட்டவை பார்க்க மரகதத்திற்கு புரிந்து விட .....உடனே “என்ன பார்வதி எப்போ இருந்து பால் கொண்டுவானு சொல்லிட்டு இருக்கேன்... எனக்கு கொஞ்சம் தலை சுத்தர மாதிரி இருக்கு...இன்னும் என்ன பண்ற.......அந்த மாத்திரையை எடு” என அவர் அப்போது தான் வந்தவர் போல் அருகில் வர
பாட்டியின் சத்தத்தை கேட்டு எழுந்தவள் அவர் சொன்னதை கேட்டதும் தனது அழுகையை நிறுத்திவிட்டு வேகமாக பாட்டியின் அருகில் சென்றவள் ...”என்ன பாட்டி ...என்ன பண்ணுது” பதறியபடியே அவர் அருகில் சென்றாள் ரோஜா.....”ஒண்ணுமில்லை ரோஜா ...லேசான வலிதான்..... ஆமா நீ இன்னும் தூங்கபோகலையா” என கேட்க
“அவளோ இப்போ போறேன் பாட்டி” என தடுமாறி சொன்னவள் தாயின் முகத்தை பார்க்க
அவரோ தனது மாமியாருக்கு மாத்திரை எடுத்து கொண்டு இருக்க
அங்க மாப்பிளை காத்திருப்பார் கிளம்பு என பாட்டி அதட்ட பாலை எடுத்து கொண்டு வேகமாக அறைக்குள் நுழைந்தாள் ரோஜா.....
வெகுநேரம் காத்திருந்த தேவா அவள் உள்ளே நுழைந்ததும் பேசவேண்டிய வார்த்தைகளை மறந்து கோபம் முன்னாடி வந்துவிட...”மகராணி உள்ளே வர இவ்ளோ நேரமா” என உரிமையுடன் கேட்டான்.
ஏற்கனவே யோசனையில் இருந்த ரோஜாவோ அவனது முகத்தை கவனிக்காமல் அவனது கோபமான பேச்சு மட்டுமே அவளுக்கு கேட்க வேகமாக திரும்பி “நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைகாரி கிடையாது ...நேரத்திற்கு வருவதற்கு என சொல்லிவிட்டு இனி இப்படி அதிகாரம் பண்ற வேலை எல்லாம் வேண்டாம்” என சொல்லிவிட்டு வேகமாக தலையணை எடுத்து கீழே போட
“ஏய் இப்போ நான் என்ன சொல்லிட்டேனு நீ இப்படி பேசற......என்னை பத்தி உனக்கு தெரியும் தான” என அவன் ஆரம்பிக்க
“எனக்கு எப்படி தெரியும்...தெரிஞ்சிருந்தா இந்த திருமணமே நடந்து இருக்காதே....என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு மிரட்டல் வேற” என அவனை திட்டியபடி அவள் படுத்தாள்.
நல்ல மூடில் இருந்த தேவா அவள் மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்ததும் அவனுக்கும் கோபம் வர “இப்போ என்னடி நடந்து போச்சு...நான் என்ன உன்னை ரேப்பா பண்ணிட்டேன் ..கல்யாணம் தான பண்ணிகிட்டேன்......எதோ நான் தப்பு பண்ணின மாதிரி பேசாற ....இப்போ உனக்கு என்னடி குறைச்சல் ...உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் உன்னை கல்யாணம் பண்ணது தான் தப்பா” என கோபத்தில் அவன் வார்த்தையை விட
படுத்து இருந்தவள் வேகமாக எழுந்து அவன் முன்னே கண்களில் கோபம் கொப்பளிக்க நரம்புகள் புடைக்க “இதான்...இதான்.....இதுக்குதான் சொன்னேன்......இப்படி சொல்லியே என்னை குத்தி காயபடுத்துவிங்க.......காசுக்காக எதையும் செய்யற ஆள் ஆச்சே நீங்க......உங்களுக்கு மனச பத்தி என்ன தெரியும்.....நான் கேட்டனா உங்களை என்னை திருமணம் செஞ்சுக்க சொல்லி......வாழ்நாள் முழுவதும் இப்டிதான் பேசுவிங்க...இதுக்குதான் சொன்னேன் எனக்கு கல்யானமே வேண்டாம்னு யாரும் கேட்கலை... எங்க தாத்தாவும் என்னை விட்டு போய் ....அவரோட எல்லாமே போய்டுச்சு...இனி எனக்கு ஏதும் இல்லை” என அவள் கதறி அழுக
காலையில் இருந்து பார்த்த ரோஜாவா என தேவா அதிர்ந்து போய் நின்றான்.....அந்த அளவிற்கு அவள் முகம் கோபத்தில் சிவந்திருக்க ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட்டுக்கொண்டு அவள் முகத்தில் தெரிய சீரும் பாம்பினை போல் நின்று கொண்டு இருந்தாள் ரோஜா.
அவளது நிலையை பார்த்தவன் அவளது ஆத்திரம் தீரும் வரை பேசட்டும் என நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தான்.....அவன் பேசியதும் சற்று அதிகப்படிதான் என்றாலும் அவனது மனநிலையில் அந்த வார்த்தை வந்துவிட அதை இவளோ பெரியதாக எடுத்து கொள்வாள் என அவன் நினைக்கவில்லை . அவள் என்ன நேரத்தில் என்ன மூடில் இருப்பாள் என்று தெரியாததால் வேறு எப்படி பேசுவது என்றும் அவனுக்கும் புரியவில்லை......அவள் பேசுவதை அவன் பார்த்து கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க அவனது அமைதி அவளது ஆத்திரத்தை சிறிது மட்டு படுத்த மூச்சு வாங்கி கொண்டு அவள் சற்று நிதானப்பட ...அவன் வேகமாக எழுந்து வெளியே சென்றான். ...
ரோஜாவோ அவன் சென்ற பின்பு கோபம் குறைந்து தான் பேசியதை நினைத்து பார்த்தவள் அவனை எந்த அளவிற்கு மட்டமாக பேசமுடியுமோ அந்த அளவிற்கு பேசி இருக்கோம் என அவளுக்கு புரிந்தது. அதனால் தான் கோபமாக வெளியே செல்கிறான்...இனி என்ன நடக்குமோ என பயத்துடன் அவள் அந்த இடத்திலே நின்றாள்.
மீண்டும் உள்ளே வந்த தேவா தண்ணீர் பாட்டிலை அவளுக்கு குடிக்க குடித்தான்.அவள் அதை வாங்காமல் அவனையே பார்க்க.....”அப்புறம் உன் அத்தனை சைட் அடிக்கலாம் ...இப்போ முதல்ல இந்த தண்ணீரை குடி” என்றவன் அருகில் இருக்கும் பாலை எடுத்து அவளுக்கு கொடுக்க ..அவன் சொன்னதும் மறுபேச்சு இல்லாமல் தண்ணீரை குடித்தவள் பால் கொடுத்தும் அதையும் குடித்துவிட்டாள்.....அவள் முடிக்கும் தருவாயில் “எல்லாமே குடிச்சிட்டியா.....எனக்கு கொஞ்சம் தருவேன்னு நினைச்சேன்” என அவன் ஏக்கத்தோடு கேட்க
அவள் இருந்த நிலை மறந்து அவனது ஏக்கம் அவளை ஏதோ செய்தது....”அச்சோ நான் எல்லாமே குடிச்சுட்டேன்...இருங்க எடுத்திட்டு வரேன்” என அவள் திரும்ப
“வேண்டாம்..வேண்டாம்...என் அம்லு குடிச்சா நான் குடிச்ச மாதிரி” என்றவன் அதை வாங்கி அருகில் வைத்துவிட்டு “இங்கே வா” என்றவன் ...அவள் வராமல் அப்படியே நிற்க அவள் கைபிடித்து இழுத்துவந்தவன் ..அவன் ஏதோ சொல்லபோகிறான் என அவனது முகம் பார்க்க ... அவனோ அவளுக்கு தலையணை எடுத்து வைத்தவன் “கொஞ்ச நேரம் கண்ணை மூடி தூங்கு...எல்லாம் சரியாகிடும்” என சொன்னான்.
“இல்லை அது வந்து என அவள் ஆரம்பிக்க ..ஸ்ஸ்ஸ் பேசக்கூடாது தூங்கு” என அவன் மெதுவாக அதே நேரத்தில் சற்று அழுத்தமாக சொல்ல பதில் ஏதும் சொல்லமுடியாமல் கண்களை மூடினாள் ரோஜா.காலையில் இருந்து சுற்றிய களைப்பு மேலும் மனதில் உள்ள ஆத்திரத்தை தேவாவிடம் கொட்டிய நிம்மதியில் அவளுக்கு படுத்த உடன் உறக்கம் வந்து விட்டது.
மோதலின் அடுத்த கட்டம் கூடலில் தான் தொடங்கும்.....ரோஜாவின் அருகாமை தேவாவின் ஆசைகளை தூண்டிவிட அவளின் வரவுக்காக காத்து கொண்டு இருந்தான்.அவளிடம் சொல்லவேண்டிய வார்த்தைகள் எல்லாம் பேசி சரிபார்த்து கொண்டு எதிர்பார்த்து இருந்தான்.....
ரோஜாவிற்கு தேவாவின் நேசமும் நெருக்கமும் பிடித்து இருந்தாலும் மனதிற்குள் ஏதோ ஒன்று குழப்பமாக இருக்க தலையில் கைவைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.
ரோஜாவை அழைத்தும் பதில் இல்லாமல் போக பாலை எடுத்து கொண்டு வெளியே வந்த பார்வதி ரோஜா அமர்ந்திருந்த நிலை பார்த்து வேகமாக அவள் அருகில் சென்றவர்...”ரோஜா என்னம்மா பண்ணுது....தலை வலிக்குதா......அச்சோ நான் அப்பாவும் சொன்னேன்...அவளுக்கு பொங்கல் வைக்க தெரியாதுனு ..உங்க பாட்டி கேட்டாங்களா ...இப்போ பாரு” என அவரே ஒரு காரணத்தை சொல்லி கொண்டு புலம்ப
“அம்மா” என அழுத்தமாக சொன்னவள் “அப்படி எல்லாம் இல்லை” என்றாள்.
மெதுவாக அவள் தலையை வருடி கொடுத்தபடியே “ரோஜா நீ இப்போ என்ன மனசுக்குள்ளே நினச்சுட்டு இருக்கேனு எனக்கு தெரியாது.......ஆனா நீயும் மாப்பிள்ளையும் உள்ள சந்தோசமா வந்தத பார்த்திட்டு உன் அப்பாவும் பாட்டியும் மனநிறைவோட தூங்க போனாங்க .........அதுல மண் அள்ளி போற்றாதடி.......ஏற்கனவே ரொம்ப கஷ்டபட்டுடோம்......ஏதோ இப்பதான் கடவுள் கண்ணை திறந்து இருக்கிறார்......நான் கூட மாப்பிள்ளை எப்படி இருப்பாறோன்னு பயந்திட்டே இருந்தான்......ரொம்ப தங்கமான மனுசனா தெரியறார்.....நீ படிச்ச பொண்ணு இதுக்கு மேல நான் சொல்லி உனக்கு தெரியனம்னு கிடையாது.......நீயே புரிஞ்சு நடந்துக்கோ” என ஒரு தாயின் பரிதவிப்பை அவர் அவளுக்கு புரிய வைக்க
அவளோ வாடிய முகத்தோடு தாயை நிமிர்ந்து பார்க்க ...”ரோஜா என் தங்கமே என தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவர் உன்னை வருத்துவதற்காக இதை சொல்லவில்லை ரோஜா.......எங்கள் அனைவர்க்கும் நீ ஒருத்தி தான் உயிர்.......நீ நன்றாக சந்தோசமாக இருந்தாள் தான் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும்.......உனது தாத்தா திதி அடுத்த வாரம் வருகிறது.......அவரோட ஆசை என்ன தெரியுமா? நீ எப்போதும் சந்தோசமா இருக்கனும் அப்படிங்கிறது தான்......அதை நீ நிறைவேத்த மாட்டியா” என சூழ்நிலை தெரியாமல் அவர் உணர்ச்சி வேகத்தில் அவளது தாத்தாவை நியாபக படுத்த
அவளோ அதிர்வோடு தாயை பார்த்தவள் தேதி காலண்டரை பார்க்க ...அப்போது தான் பார்வதிக்கு தான் சொன்னது உரைக்க .....ரோஜா ..”ரோஜா இங்க பாரு தாத்த எப்போதும் உன் கூட இருந்து உன்னை பார்த்துகிட்டே இருப்பார்...நீ கண்டதை நினைச்சு குழப்பிக்காத “ என அவளை பார்வதி சமாதனபடுத்த தாயின் மடியில் படுத்தவள் குலுங்கி அழுவ பார்வதியோ தான் ஒன்று நினைத்து சொல்ல இப்படி ஆகிவிட்டதே என மனதிற்குள் புலம்பியவாறு அவளை எப்படி சமாதனபடுத்துவது என் தெரியாமல் விழித்த படி அமர்ந்திருந்தார்.
வெகுநேரமாக பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த மரகதம் அங்கு ரோஜா பார்வதியின் மடியில் படுத்து அழுது கொண்டு இருப்பதை பார்த்தவர் தனது மருமகளை பார்க்க ..மருமகளோ மாமனாரின் போட்டவை பார்க்க மரகதத்திற்கு புரிந்து விட .....உடனே “என்ன பார்வதி எப்போ இருந்து பால் கொண்டுவானு சொல்லிட்டு இருக்கேன்... எனக்கு கொஞ்சம் தலை சுத்தர மாதிரி இருக்கு...இன்னும் என்ன பண்ற.......அந்த மாத்திரையை எடு” என அவர் அப்போது தான் வந்தவர் போல் அருகில் வர
பாட்டியின் சத்தத்தை கேட்டு எழுந்தவள் அவர் சொன்னதை கேட்டதும் தனது அழுகையை நிறுத்திவிட்டு வேகமாக பாட்டியின் அருகில் சென்றவள் ...”என்ன பாட்டி ...என்ன பண்ணுது” பதறியபடியே அவர் அருகில் சென்றாள் ரோஜா.....”ஒண்ணுமில்லை ரோஜா ...லேசான வலிதான்..... ஆமா நீ இன்னும் தூங்கபோகலையா” என கேட்க
“அவளோ இப்போ போறேன் பாட்டி” என தடுமாறி சொன்னவள் தாயின் முகத்தை பார்க்க
அவரோ தனது மாமியாருக்கு மாத்திரை எடுத்து கொண்டு இருக்க
அங்க மாப்பிளை காத்திருப்பார் கிளம்பு என பாட்டி அதட்ட பாலை எடுத்து கொண்டு வேகமாக அறைக்குள் நுழைந்தாள் ரோஜா.....
வெகுநேரம் காத்திருந்த தேவா அவள் உள்ளே நுழைந்ததும் பேசவேண்டிய வார்த்தைகளை மறந்து கோபம் முன்னாடி வந்துவிட...”மகராணி உள்ளே வர இவ்ளோ நேரமா” என உரிமையுடன் கேட்டான்.
ஏற்கனவே யோசனையில் இருந்த ரோஜாவோ அவனது முகத்தை கவனிக்காமல் அவனது கோபமான பேச்சு மட்டுமே அவளுக்கு கேட்க வேகமாக திரும்பி “நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைகாரி கிடையாது ...நேரத்திற்கு வருவதற்கு என சொல்லிவிட்டு இனி இப்படி அதிகாரம் பண்ற வேலை எல்லாம் வேண்டாம்” என சொல்லிவிட்டு வேகமாக தலையணை எடுத்து கீழே போட
“ஏய் இப்போ நான் என்ன சொல்லிட்டேனு நீ இப்படி பேசற......என்னை பத்தி உனக்கு தெரியும் தான” என அவன் ஆரம்பிக்க
“எனக்கு எப்படி தெரியும்...தெரிஞ்சிருந்தா இந்த திருமணமே நடந்து இருக்காதே....என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு மிரட்டல் வேற” என அவனை திட்டியபடி அவள் படுத்தாள்.
நல்ல மூடில் இருந்த தேவா அவள் மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்ததும் அவனுக்கும் கோபம் வர “இப்போ என்னடி நடந்து போச்சு...நான் என்ன உன்னை ரேப்பா பண்ணிட்டேன் ..கல்யாணம் தான பண்ணிகிட்டேன்......எதோ நான் தப்பு பண்ணின மாதிரி பேசாற ....இப்போ உனக்கு என்னடி குறைச்சல் ...உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் உன்னை கல்யாணம் பண்ணது தான் தப்பா” என கோபத்தில் அவன் வார்த்தையை விட
படுத்து இருந்தவள் வேகமாக எழுந்து அவன் முன்னே கண்களில் கோபம் கொப்பளிக்க நரம்புகள் புடைக்க “இதான்...இதான்.....இதுக்குதான் சொன்னேன்......இப்படி சொல்லியே என்னை குத்தி காயபடுத்துவிங்க.......காசுக்காக எதையும் செய்யற ஆள் ஆச்சே நீங்க......உங்களுக்கு மனச பத்தி என்ன தெரியும்.....நான் கேட்டனா உங்களை என்னை திருமணம் செஞ்சுக்க சொல்லி......வாழ்நாள் முழுவதும் இப்டிதான் பேசுவிங்க...இதுக்குதான் சொன்னேன் எனக்கு கல்யானமே வேண்டாம்னு யாரும் கேட்கலை... எங்க தாத்தாவும் என்னை விட்டு போய் ....அவரோட எல்லாமே போய்டுச்சு...இனி எனக்கு ஏதும் இல்லை” என அவள் கதறி அழுக
காலையில் இருந்து பார்த்த ரோஜாவா என தேவா அதிர்ந்து போய் நின்றான்.....அந்த அளவிற்கு அவள் முகம் கோபத்தில் சிவந்திருக்க ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட்டுக்கொண்டு அவள் முகத்தில் தெரிய சீரும் பாம்பினை போல் நின்று கொண்டு இருந்தாள் ரோஜா.
அவளது நிலையை பார்த்தவன் அவளது ஆத்திரம் தீரும் வரை பேசட்டும் என நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தான்.....அவன் பேசியதும் சற்று அதிகப்படிதான் என்றாலும் அவனது மனநிலையில் அந்த வார்த்தை வந்துவிட அதை இவளோ பெரியதாக எடுத்து கொள்வாள் என அவன் நினைக்கவில்லை . அவள் என்ன நேரத்தில் என்ன மூடில் இருப்பாள் என்று தெரியாததால் வேறு எப்படி பேசுவது என்றும் அவனுக்கும் புரியவில்லை......அவள் பேசுவதை அவன் பார்த்து கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க அவனது அமைதி அவளது ஆத்திரத்தை சிறிது மட்டு படுத்த மூச்சு வாங்கி கொண்டு அவள் சற்று நிதானப்பட ...அவன் வேகமாக எழுந்து வெளியே சென்றான். ...
ரோஜாவோ அவன் சென்ற பின்பு கோபம் குறைந்து தான் பேசியதை நினைத்து பார்த்தவள் அவனை எந்த அளவிற்கு மட்டமாக பேசமுடியுமோ அந்த அளவிற்கு பேசி இருக்கோம் என அவளுக்கு புரிந்தது. அதனால் தான் கோபமாக வெளியே செல்கிறான்...இனி என்ன நடக்குமோ என பயத்துடன் அவள் அந்த இடத்திலே நின்றாள்.
மீண்டும் உள்ளே வந்த தேவா தண்ணீர் பாட்டிலை அவளுக்கு குடிக்க குடித்தான்.அவள் அதை வாங்காமல் அவனையே பார்க்க.....”அப்புறம் உன் அத்தனை சைட் அடிக்கலாம் ...இப்போ முதல்ல இந்த தண்ணீரை குடி” என்றவன் அருகில் இருக்கும் பாலை எடுத்து அவளுக்கு கொடுக்க ..அவன் சொன்னதும் மறுபேச்சு இல்லாமல் தண்ணீரை குடித்தவள் பால் கொடுத்தும் அதையும் குடித்துவிட்டாள்.....அவள் முடிக்கும் தருவாயில் “எல்லாமே குடிச்சிட்டியா.....எனக்கு கொஞ்சம் தருவேன்னு நினைச்சேன்” என அவன் ஏக்கத்தோடு கேட்க
அவள் இருந்த நிலை மறந்து அவனது ஏக்கம் அவளை ஏதோ செய்தது....”அச்சோ நான் எல்லாமே குடிச்சுட்டேன்...இருங்க எடுத்திட்டு வரேன்” என அவள் திரும்ப
“வேண்டாம்..வேண்டாம்...என் அம்லு குடிச்சா நான் குடிச்ச மாதிரி” என்றவன் அதை வாங்கி அருகில் வைத்துவிட்டு “இங்கே வா” என்றவன் ...அவள் வராமல் அப்படியே நிற்க அவள் கைபிடித்து இழுத்துவந்தவன் ..அவன் ஏதோ சொல்லபோகிறான் என அவனது முகம் பார்க்க ... அவனோ அவளுக்கு தலையணை எடுத்து வைத்தவன் “கொஞ்ச நேரம் கண்ணை மூடி தூங்கு...எல்லாம் சரியாகிடும்” என சொன்னான்.
“இல்லை அது வந்து என அவள் ஆரம்பிக்க ..ஸ்ஸ்ஸ் பேசக்கூடாது தூங்கு” என அவன் மெதுவாக அதே நேரத்தில் சற்று அழுத்தமாக சொல்ல பதில் ஏதும் சொல்லமுடியாமல் கண்களை மூடினாள் ரோஜா.காலையில் இருந்து சுற்றிய களைப்பு மேலும் மனதில் உள்ள ஆத்திரத்தை தேவாவிடம் கொட்டிய நிம்மதியில் அவளுக்கு படுத்த உடன் உறக்கம் வந்து விட்டது.