அத்தியாயம்-24
தனது காதல் தேவதையை பார்த்தவுடன் மனம் மகிழ்ச்சி கொள்ள தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்ல இதை விட நல்ல தருணம் கிடைக்காது என நினைத்தவன் ...தனது காதலின் ஆழத்தை வார்த்தையால் வரைபடுத்தி அவளிடம் சொல்ல அவளோ அதற்கு மாறாக இது ஒத்துவராது என ஒரே சொல்லில் முடித்து சென்றதும் ராம் அசைவற்று நின்றான். நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டனோ என யோசித்து பார்த்தவன் அப்படி ஏதும் இல்லையே ...திருமணம் செய்து கொள்கிறேன் என்று தானே சொன்னேன் அதற்கு ஏன் இவள் இப்படி பதில் சொல்லிவிட்டு போகிறாள் என அவன் குழம்பி கொண்டிருந்தான்.
அறைக்குள் வந்த ரோஜா அவன் சுவற்றை வெறித்து கொண்டு இருப்பதை பார்த்து ....”மாம்ஸ் என்னது இது ...நீயுட்டன் ஆப்பில் மரத்தில இருந்து புவிஈர்ப்பு விசையை கண்டு பிடிச்ச மாதிரி மாதிரி நீ சுவற்றை பார்த்து எதாவது கண்டு பிடிக்கிரிங்களா.......அதேவே பார்த்திட்டு இருக்கீங்க ” என கிண்டலாக சொல்லிகொண்டே அருகில் வந்தாள்.
ரோஜாவின் பேச்சில் சுயநினைவிற்கு வந்தவன் ...”ம்ம்ம் என்ன ரோஜா “என அவன் அவளிடம் திரும்ப
அவனது முகசுருக்கம் அவளுக்கு ஏதோ உணர்த்த கிண்டலை கைவிட்டு “என்ன ராம்...என்ன பிரச்சனை...ரதிகிட்ட பேசினிங்களா” என்றாள்.
“ஆம்” என்று அவன் தலை ஆட்ட
“ அவள் என்ன சொன்னாள்” என்றாள்.
அவள் சொன்னதை அவன் சொல்ல ..”ஏன் மாம்ஸ் உங்களுக்கு அறிவு இருக்கா....அவளை இப்போது தான் பார்த்து இருக்கீங்க...உடனே உன்னை திருமணம் பண்ணிக்கிறேனு சொன்னா எந்த பொண்ணா இருந்தாலும் கண்டிப்பா அதிர்ச்சி அடைவா.......படிச்சு இருந்தும் ஏன் இப்படி நடந்துகிரிங்க....அப்போ உங்களுக்கும் தேவாவுக்கும் என்ன வித்தியாசம் .....அவரும் இதே தான் செஞ்சாரு......நீங்க நினைக்கிறத உடனே நடத்திடனும்னு ஆசபட்ரிங்க...அதே அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குதுன்னு கொஞ்சமாவது நினச்சு பார்க்கிறீங்களா” என வேகமாக சொன்னவள் அவன் முகம் சுருங்கியதை கண்ட உடன் “அவசரபடாதிங்க மாம்ஸ்...கொஞ்சம் பொறுத்து இருங்க......நீங்க வேணா மனசுக்குள்ள எட்டு வருசமா அவளை நேசிச்சு இருந்திருக்கலாம்...ஆனா அவளுக்கு அது இப்பதானே தெரியும்.......கொஞ்சம் பொறுமையா இருங்க....அவளுக்கும் யோசிக்க டைம் கொடுங்க “என அவனுக்கு பொறுமையாக எடுத்து கூறினாள்.
அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் “நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது ரோஜா......ஆனா இந்த மனசுக்குள்ள அவ மட்டுமே முழுசா நிரம்பி இருக்கா என சொல்லும்போதே அவனது காதலின் ஆழம் வார்த்தையில் வெளிவர அது அவளை நேரில் பார்த்திட்டா எனது கட்டுபாட்டிலே இருக்க மாட்டேன்குது......நான் என்ன பண்ணட்டும்.......அவளை காணாமல் நினைவுகளில் வாழ்ந்த நான் இப்போ அவளை கண்ணெதிரில் வைத்து கொண்டு என்னால் தள்ளி செல்ல முடியவில்லை ரோஜா என்னை அறியாமல் அவள் மீது அதிக உரிமை எடுத்து கொள்கிறேன்......அவளை பார்த்து விட்டாலே எனக்கு சொந்தமானவள் அப்படிங்கிற எண்ணம் தான் எனக்கு வருது...அதை மீறி என்னால ஏதும் யோசிக்க முடியலை” என மனதில் இருப்பதை மறைக்காமல் வெளியே சொன்னவன் நான் சொல்றது உனக்கு புரியுதா ரோஜா என மனதின் உணர்வுகளை தனது தோழி போல் இருக்கும் ரோஜாவிடம் கொட்டி தீர்த்தான் ராம்.
ரோஜாவோ அவனை வியப்போடு பார்த்து கொண்டு இருந்தவள் “ராம் என்னது இது...நான் புத்தகம், திரைபடத்தில் தான் பார்த்து இருக்கிறேன்...காதல் என்பது உயிர் கொல்லி நோய் அப்டின்னு சொல்வாங்க ....அதை இப்போ தான் நேர்ல பார்க்கிறேன் ........எனக்கு தெரிந்த ராம் வீரத்தில் அர்ஜுனன் ,கோபத்தில் ருத்ரன்,பாசத்தில் லட்சுமணன் ,அன்பில் தருமன் இப்படி பல அவதாரமா பார்த்து இருக்கேன்...ஆனால் காதலில் இது எந்த மாதிரி எனக்கு தெரியலை ராம் என்றவள் ஆனால் உன்னை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு சொல்லும்போதே அவளது முகம் பெருமிதத்தில் மின்ன எங்கள் வீட்டு பெண் மிகவும் கொடுத்து வைத்தவள் மாம்ஸ் என மனநிறைவோடு சொன்னவள்....கண்டிப்பா என்னால் முடிந்த உதவி உங்களுக்கு செய்யறேன் மாம்ஸ்” என சொல்லிவிட்டு ஆனால் என நிறுத்தியவள் அவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்ததும் உங்க கல்யாணத்துல எனக்கு பிடிச்ச ரவா உருண்டை இருக்கனும் சரியா” என சொல்லி சிரிக்க அதுவரை அவள் ஏதோ சொல்கிறாள் என ஆர்வமுடன் கேட்டவன் இதை கேட்டது பக்கென்று அவனும் சிரித்து விட்டான்.
அவளது தலையை மெதுவாக வருடி விட்டவன் “ரோஜா குட்டி தினமும் மகாபாரதம் டிவில பார்க்கிறியா..அர்ஜுன் தர்மனு டயலாக் சும்மா அள்ளிவிடற என சிரித்து கொண்டே சொன்னவன் பின்னர் உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சேன்....ஆனா நீ இப்போ பேசறத பார்த்தா எனக்கே ஆச்சரியாமா இருக்கு” என அவளது பேச்சில் வியந்து அவன் சொல்ல
“நானும் முதல்ல அப்படிதான் இருந்தேன்....அதான் நீங்க எல்லாம் சேர்ந்து என்னை மாத்திட்டிங்கலே....அதுனால எனக்கும் ஓரளவுக்கு புரியும் ராம்” என சொல்லிகொண்டே அவள் அவன் தோளில் சாய
சிறிது நேரம் அந்த இடத்தில் அமைதி நிலவ ...பின்னர் ராம் மெதுவாக “ரோஜா நான் இதுவரை இதை பற்றி ஏதும் பேசியது இல்லை....ஏன்னா பாட்டி எடுக்கும் எந்த முடிவும் தப்பாகாது என்பது எனக்கும் தெரியும்...உனக்கும் தெரியும்......ஆனால்” என அவன் நிறுத்த
“நடந்ததை நான் குறை சொல்லவில்லை ராம்......ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் ....அதும் தேவா தான் மாப்பிள்ளை என்று என்னிடம் நீங்கள் சொல்லாதது எனக்கு வருத்தம் தான்” என்றாள்.
“தேவா ரொம்ப நல்லவன் ரோஜா ....என்ன சற்று கோபம் வரும் அவ்ளோதான்....இன்றும் நீதிமன்றத்தில் கேட்டு பார்.......அவன் பெயரை சொன்னாலே போதும் எவளவ்வு மரியாதை இருக்கும் தெரியுமா” என அவனை பற்றி புகழாரம் சூட்ட
“எனக்கும் அது தெரியும் ராம்....அது தான் எனக்கு பயமே.......அப்படிபட்டவருக்கு நான் ஒத்து வருவேனா.....நாளைக்கு எனது கடந்த கால நிகழ்ச்சியால் அவருக்கு ஏதாவது பிரச்சனை இல்லை அவமானம் வந்தால்” என சொல்லிகொண்டே சாய்ந்து இருந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன் அந்த முகத்தில் பயமா...இல்லை ரணத்தின் வலியா என அறியமுடியாதபடி அவள் முகம் வேதனையில் நிறைந்து இருக்க
“வேண்டாம் ரோஜா....நீ அதை மறந்து விடு....அது போன்ற நிகழ்வுகள் தினமும் நான் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறேன்......நீ தான் இதை பெரிது படுத்தி குழப்பிகொள்கிறாய்” என அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
“எது ராம்...என்னால் எனது தாத்தவின் உயிர் போனதே அதுவா......தலை நிமிர்ந்து வாழ்ந்த என் அப்பா சில காலம் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தாரே அதுவா...... எதை மறக்க சொல்கிறாய்........இப்போது தேவா அவருடைய பெயருக்கும் திறமைக்கும் முன்னாள் நான் எப்படி அவருக்கு பொருத்தமாக இருப்பேன் என்றவள்....... என் வம்சத்தின் முதல் பெண் வாரிசு ...இவளை சீரும் சிறப்புமாக வளர்த்தி ஊர் போற்றும் அளவிற்கு நல்ல நிலைக்கு கொண்டு வருவேன் என சொல்லிகொண்டிருந்த தாத்தா என்னால் தானே” என முடிக்கும் முன்பே அவள் கண்களில் கண்ணீரும் தேம்பலும் வர
“என்ன ரோஜா இது ......மறுபடியும் மறுபடியும் அதை நினைத்து வேதனையை அதிகபடுத்துவதால் என்ன பயன்......பிறந்த எல்லாரும் ஒரு நாள் இறப்பவர்கள் தான்......தாத்தாவின் இறப்பும் அது போல் தான் நீ போட்டு குழப்பிக்காத என அவளை சமாதனபடுத்தியவன் ......ரோஜா இங்கு பார்...என்னை பார் என்றவன் ...நீ தேவாவிடம் இதை பற்றி பேசினாயா” என கேட்டான்.
அவள் இல்லை என்று தலை ஆட்டியதும்
“நீ பேசு ரோஜா ...அவனிடம் நீ மனம் விட்டு பேசு...அவன் கண்டிப்பாக உன்னை புரிந்து கொள்ளுவான்” என சொல்ல
“இப்பவும் அவர் என் மேல் உயிராகத்தான் இருக்கார் ராம்....ஆனால் என்னால் தான்” என சொல்லி நிறுத்தியவள் ...”அச்சோ உங்கதையை கேட்க வந்து என் கதையை சொல்லிட்டு இருக்கேன்” என்றவள் .
“சரி மாம்ஸ் நீ இப்போ என்ன பண்ற..... இன்னைக்கு நீ ரதிகிட்ட பேசினதை நம்ம கொண்டாடுகிறோம் சரியா.......எங்க போலாம் பானிபூரி வாங்கிறதுக்கு ....இந்த தேவா இது எல்லாம் வாங்கி தர மாட்டேன்கிறான் .....அவன் வாங்கி தர நியூட்ரிசன் தீனி எனக்கு அது பிடிக்களை ராம்........நீ நம்ம அங்கண்ணன் பிரியாணி செண்டருக்கு என்னை கூட்டிட்டு போ...அங்க பிரியாணி சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு “ என சந்தடி சாக்கில் அவனது பர்ஸ்க்கு வேட்டு வைத்தாள் ரோஜா
“ஹஹஹா என சிரித்த ராம் அதான பார்த்தேன் என்னடா கருத்து கண்ணாயிரம் மாதிரி பேசறாளே...இது நாம் ரோஜாவானு கொஞ்சம் சந்தேகம் வந்திச்சு.......ஆனா இப்போ அது கிளியர் ஆகிடுச்சு ஆரம்பிச்சுட்டியா என சிரித்து கொண்டே சொன்னவன் அது எப்படி ரோஜா எந்த விஷயம் பேசினாலும் கடைசில உன்னக்கு தேவையானதை கொண்டு வந்து அதுக்கு முற்றுப்புள்ளி வச்சிட்ற என்றவன் இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம் அம்மா உனக்காக எல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க சீக்கிரம் கீழே வா சாப்பிட போலாம்” என சொல்லியபடியே அவன் அங்கிருந்து கிளம்ப
உடனே “ஆமா ராம்...உன்னை சாப்பிடதான் கூட்டிட்டு போக வந்தேன்......நீ தான் மொக்க போட்டே நேரத்தை வீணாக்கிட்ட...அப்புறம் இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும்...தேவாகிட்ட போட்டு கொடுத்திடாத ...அப்புறம் என்னை எங்கயும் கூட்டிட்டு போகமாட்டாரு” என அவனிடம் சிணுங்கி கொண்டே சொல்ல
“அடிபாவி இவ்ளோ நேரம் என்னோட லவ் ஸ்டோரிய தலையை ஆட்டி ஆட்டி கேட்டுட்டு இப்போ மொக்கைனு சொல்றியா...... இரு தேவாகிட்ட சொல்றேன்...... உனக்கு பிரியாணியும் கிடையது “என சொல்லிவிட்டு அவன் முகத்தை திருப்பி கொண்டு செல்ல .....
“மாம்ஸ் என்ன இப்படி சொல்லிடிங்க ......... தெய்வீக காதல் மாம்ஸ் உன்னோடது...ஏன் அதையும் தாண்டி புனிதமானது நான் ஒத்துகிறேன்.......ஆனால் அதுக்காக பிரியாணில கை வச்சுடாதிங்க” என கத்திகொண்டே அவன் பின்னால் ஓடி வந்தாள் ரோஜா.
பின்னர் இருவரும் சிரித்தபடி இரங்கி வர ரதியோ தேவாவை ஒட்டி அமர்ந்தவள் வேறு யாரு முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.சாப்பிடும்போதும் ராம் எப்போதும் போல் சகஜமாக பேச ஆனால் ரதி பதில் சொல்லாமல் அமைதியாக சாப்பிட தேவா தான் அவளுக்கு சேர்த்து பேசினான்.பின்னர் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு மூவரும் கிளம்பினர்.
காரில் வரும்போது ரோஜா ரதியிடம் பேச்சு கொடுக்க அவளோ சரியாக பதில் சொல்லாமல் யோசனை உடனே வர ... தேவா “ஏன் ரதி அவர்கள் வீட்டிற்கு சென்றது உனக்கு பிடிக்கவில்லையா” என கேட்டான்.
“அய்யோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா என வேகமாக மறுத்தவள் நாளைக்கு ஒரு பரீட்சை இருக்கிறது ...அதை பற்றி நினைத்து கொண்டு வந்தேன்” என சமாளித்தாள்.
“அப்படியா சரி...சரி ...நாங்கள் தான் உன்னை வெளியே அழைத்து வந்து தொந்தரவு பண்ணிவிட்டோம் சாரிடா” என தேவா சொன்னவுடன் அதெல்லாம் இல்லை அண்ணா.....நான் படித்துவிட்டேன்”....என அவள் சிரித்து கொண்டே சமாளிக்க அதை பார்த்த ரோஜா மனதிற்குள் சிரித்துகொண்டாள்.
தனது காதல் தேவதையை பார்த்தவுடன் மனம் மகிழ்ச்சி கொள்ள தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்ல இதை விட நல்ல தருணம் கிடைக்காது என நினைத்தவன் ...தனது காதலின் ஆழத்தை வார்த்தையால் வரைபடுத்தி அவளிடம் சொல்ல அவளோ அதற்கு மாறாக இது ஒத்துவராது என ஒரே சொல்லில் முடித்து சென்றதும் ராம் அசைவற்று நின்றான். நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டனோ என யோசித்து பார்த்தவன் அப்படி ஏதும் இல்லையே ...திருமணம் செய்து கொள்கிறேன் என்று தானே சொன்னேன் அதற்கு ஏன் இவள் இப்படி பதில் சொல்லிவிட்டு போகிறாள் என அவன் குழம்பி கொண்டிருந்தான்.
அறைக்குள் வந்த ரோஜா அவன் சுவற்றை வெறித்து கொண்டு இருப்பதை பார்த்து ....”மாம்ஸ் என்னது இது ...நீயுட்டன் ஆப்பில் மரத்தில இருந்து புவிஈர்ப்பு விசையை கண்டு பிடிச்ச மாதிரி மாதிரி நீ சுவற்றை பார்த்து எதாவது கண்டு பிடிக்கிரிங்களா.......அதேவே பார்த்திட்டு இருக்கீங்க ” என கிண்டலாக சொல்லிகொண்டே அருகில் வந்தாள்.
ரோஜாவின் பேச்சில் சுயநினைவிற்கு வந்தவன் ...”ம்ம்ம் என்ன ரோஜா “என அவன் அவளிடம் திரும்ப
அவனது முகசுருக்கம் அவளுக்கு ஏதோ உணர்த்த கிண்டலை கைவிட்டு “என்ன ராம்...என்ன பிரச்சனை...ரதிகிட்ட பேசினிங்களா” என்றாள்.
“ஆம்” என்று அவன் தலை ஆட்ட
“ அவள் என்ன சொன்னாள்” என்றாள்.
அவள் சொன்னதை அவன் சொல்ல ..”ஏன் மாம்ஸ் உங்களுக்கு அறிவு இருக்கா....அவளை இப்போது தான் பார்த்து இருக்கீங்க...உடனே உன்னை திருமணம் பண்ணிக்கிறேனு சொன்னா எந்த பொண்ணா இருந்தாலும் கண்டிப்பா அதிர்ச்சி அடைவா.......படிச்சு இருந்தும் ஏன் இப்படி நடந்துகிரிங்க....அப்போ உங்களுக்கும் தேவாவுக்கும் என்ன வித்தியாசம் .....அவரும் இதே தான் செஞ்சாரு......நீங்க நினைக்கிறத உடனே நடத்திடனும்னு ஆசபட்ரிங்க...அதே அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குதுன்னு கொஞ்சமாவது நினச்சு பார்க்கிறீங்களா” என வேகமாக சொன்னவள் அவன் முகம் சுருங்கியதை கண்ட உடன் “அவசரபடாதிங்க மாம்ஸ்...கொஞ்சம் பொறுத்து இருங்க......நீங்க வேணா மனசுக்குள்ள எட்டு வருசமா அவளை நேசிச்சு இருந்திருக்கலாம்...ஆனா அவளுக்கு அது இப்பதானே தெரியும்.......கொஞ்சம் பொறுமையா இருங்க....அவளுக்கும் யோசிக்க டைம் கொடுங்க “என அவனுக்கு பொறுமையாக எடுத்து கூறினாள்.
அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் “நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது ரோஜா......ஆனா இந்த மனசுக்குள்ள அவ மட்டுமே முழுசா நிரம்பி இருக்கா என சொல்லும்போதே அவனது காதலின் ஆழம் வார்த்தையில் வெளிவர அது அவளை நேரில் பார்த்திட்டா எனது கட்டுபாட்டிலே இருக்க மாட்டேன்குது......நான் என்ன பண்ணட்டும்.......அவளை காணாமல் நினைவுகளில் வாழ்ந்த நான் இப்போ அவளை கண்ணெதிரில் வைத்து கொண்டு என்னால் தள்ளி செல்ல முடியவில்லை ரோஜா என்னை அறியாமல் அவள் மீது அதிக உரிமை எடுத்து கொள்கிறேன்......அவளை பார்த்து விட்டாலே எனக்கு சொந்தமானவள் அப்படிங்கிற எண்ணம் தான் எனக்கு வருது...அதை மீறி என்னால ஏதும் யோசிக்க முடியலை” என மனதில் இருப்பதை மறைக்காமல் வெளியே சொன்னவன் நான் சொல்றது உனக்கு புரியுதா ரோஜா என மனதின் உணர்வுகளை தனது தோழி போல் இருக்கும் ரோஜாவிடம் கொட்டி தீர்த்தான் ராம்.
ரோஜாவோ அவனை வியப்போடு பார்த்து கொண்டு இருந்தவள் “ராம் என்னது இது...நான் புத்தகம், திரைபடத்தில் தான் பார்த்து இருக்கிறேன்...காதல் என்பது உயிர் கொல்லி நோய் அப்டின்னு சொல்வாங்க ....அதை இப்போ தான் நேர்ல பார்க்கிறேன் ........எனக்கு தெரிந்த ராம் வீரத்தில் அர்ஜுனன் ,கோபத்தில் ருத்ரன்,பாசத்தில் லட்சுமணன் ,அன்பில் தருமன் இப்படி பல அவதாரமா பார்த்து இருக்கேன்...ஆனால் காதலில் இது எந்த மாதிரி எனக்கு தெரியலை ராம் என்றவள் ஆனால் உன்னை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு சொல்லும்போதே அவளது முகம் பெருமிதத்தில் மின்ன எங்கள் வீட்டு பெண் மிகவும் கொடுத்து வைத்தவள் மாம்ஸ் என மனநிறைவோடு சொன்னவள்....கண்டிப்பா என்னால் முடிந்த உதவி உங்களுக்கு செய்யறேன் மாம்ஸ்” என சொல்லிவிட்டு ஆனால் என நிறுத்தியவள் அவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்ததும் உங்க கல்யாணத்துல எனக்கு பிடிச்ச ரவா உருண்டை இருக்கனும் சரியா” என சொல்லி சிரிக்க அதுவரை அவள் ஏதோ சொல்கிறாள் என ஆர்வமுடன் கேட்டவன் இதை கேட்டது பக்கென்று அவனும் சிரித்து விட்டான்.
அவளது தலையை மெதுவாக வருடி விட்டவன் “ரோஜா குட்டி தினமும் மகாபாரதம் டிவில பார்க்கிறியா..அர்ஜுன் தர்மனு டயலாக் சும்மா அள்ளிவிடற என சிரித்து கொண்டே சொன்னவன் பின்னர் உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சேன்....ஆனா நீ இப்போ பேசறத பார்த்தா எனக்கே ஆச்சரியாமா இருக்கு” என அவளது பேச்சில் வியந்து அவன் சொல்ல
“நானும் முதல்ல அப்படிதான் இருந்தேன்....அதான் நீங்க எல்லாம் சேர்ந்து என்னை மாத்திட்டிங்கலே....அதுனால எனக்கும் ஓரளவுக்கு புரியும் ராம்” என சொல்லிகொண்டே அவள் அவன் தோளில் சாய
சிறிது நேரம் அந்த இடத்தில் அமைதி நிலவ ...பின்னர் ராம் மெதுவாக “ரோஜா நான் இதுவரை இதை பற்றி ஏதும் பேசியது இல்லை....ஏன்னா பாட்டி எடுக்கும் எந்த முடிவும் தப்பாகாது என்பது எனக்கும் தெரியும்...உனக்கும் தெரியும்......ஆனால்” என அவன் நிறுத்த
“நடந்ததை நான் குறை சொல்லவில்லை ராம்......ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் ....அதும் தேவா தான் மாப்பிள்ளை என்று என்னிடம் நீங்கள் சொல்லாதது எனக்கு வருத்தம் தான்” என்றாள்.
“தேவா ரொம்ப நல்லவன் ரோஜா ....என்ன சற்று கோபம் வரும் அவ்ளோதான்....இன்றும் நீதிமன்றத்தில் கேட்டு பார்.......அவன் பெயரை சொன்னாலே போதும் எவளவ்வு மரியாதை இருக்கும் தெரியுமா” என அவனை பற்றி புகழாரம் சூட்ட
“எனக்கும் அது தெரியும் ராம்....அது தான் எனக்கு பயமே.......அப்படிபட்டவருக்கு நான் ஒத்து வருவேனா.....நாளைக்கு எனது கடந்த கால நிகழ்ச்சியால் அவருக்கு ஏதாவது பிரச்சனை இல்லை அவமானம் வந்தால்” என சொல்லிகொண்டே சாய்ந்து இருந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன் அந்த முகத்தில் பயமா...இல்லை ரணத்தின் வலியா என அறியமுடியாதபடி அவள் முகம் வேதனையில் நிறைந்து இருக்க
“வேண்டாம் ரோஜா....நீ அதை மறந்து விடு....அது போன்ற நிகழ்வுகள் தினமும் நான் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறேன்......நீ தான் இதை பெரிது படுத்தி குழப்பிகொள்கிறாய்” என அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
“எது ராம்...என்னால் எனது தாத்தவின் உயிர் போனதே அதுவா......தலை நிமிர்ந்து வாழ்ந்த என் அப்பா சில காலம் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தாரே அதுவா...... எதை மறக்க சொல்கிறாய்........இப்போது தேவா அவருடைய பெயருக்கும் திறமைக்கும் முன்னாள் நான் எப்படி அவருக்கு பொருத்தமாக இருப்பேன் என்றவள்....... என் வம்சத்தின் முதல் பெண் வாரிசு ...இவளை சீரும் சிறப்புமாக வளர்த்தி ஊர் போற்றும் அளவிற்கு நல்ல நிலைக்கு கொண்டு வருவேன் என சொல்லிகொண்டிருந்த தாத்தா என்னால் தானே” என முடிக்கும் முன்பே அவள் கண்களில் கண்ணீரும் தேம்பலும் வர
“என்ன ரோஜா இது ......மறுபடியும் மறுபடியும் அதை நினைத்து வேதனையை அதிகபடுத்துவதால் என்ன பயன்......பிறந்த எல்லாரும் ஒரு நாள் இறப்பவர்கள் தான்......தாத்தாவின் இறப்பும் அது போல் தான் நீ போட்டு குழப்பிக்காத என அவளை சமாதனபடுத்தியவன் ......ரோஜா இங்கு பார்...என்னை பார் என்றவன் ...நீ தேவாவிடம் இதை பற்றி பேசினாயா” என கேட்டான்.
அவள் இல்லை என்று தலை ஆட்டியதும்
“நீ பேசு ரோஜா ...அவனிடம் நீ மனம் விட்டு பேசு...அவன் கண்டிப்பாக உன்னை புரிந்து கொள்ளுவான்” என சொல்ல
“இப்பவும் அவர் என் மேல் உயிராகத்தான் இருக்கார் ராம்....ஆனால் என்னால் தான்” என சொல்லி நிறுத்தியவள் ...”அச்சோ உங்கதையை கேட்க வந்து என் கதையை சொல்லிட்டு இருக்கேன்” என்றவள் .
“சரி மாம்ஸ் நீ இப்போ என்ன பண்ற..... இன்னைக்கு நீ ரதிகிட்ட பேசினதை நம்ம கொண்டாடுகிறோம் சரியா.......எங்க போலாம் பானிபூரி வாங்கிறதுக்கு ....இந்த தேவா இது எல்லாம் வாங்கி தர மாட்டேன்கிறான் .....அவன் வாங்கி தர நியூட்ரிசன் தீனி எனக்கு அது பிடிக்களை ராம்........நீ நம்ம அங்கண்ணன் பிரியாணி செண்டருக்கு என்னை கூட்டிட்டு போ...அங்க பிரியாணி சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு “ என சந்தடி சாக்கில் அவனது பர்ஸ்க்கு வேட்டு வைத்தாள் ரோஜா
“ஹஹஹா என சிரித்த ராம் அதான பார்த்தேன் என்னடா கருத்து கண்ணாயிரம் மாதிரி பேசறாளே...இது நாம் ரோஜாவானு கொஞ்சம் சந்தேகம் வந்திச்சு.......ஆனா இப்போ அது கிளியர் ஆகிடுச்சு ஆரம்பிச்சுட்டியா என சிரித்து கொண்டே சொன்னவன் அது எப்படி ரோஜா எந்த விஷயம் பேசினாலும் கடைசில உன்னக்கு தேவையானதை கொண்டு வந்து அதுக்கு முற்றுப்புள்ளி வச்சிட்ற என்றவன் இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம் அம்மா உனக்காக எல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க சீக்கிரம் கீழே வா சாப்பிட போலாம்” என சொல்லியபடியே அவன் அங்கிருந்து கிளம்ப
உடனே “ஆமா ராம்...உன்னை சாப்பிடதான் கூட்டிட்டு போக வந்தேன்......நீ தான் மொக்க போட்டே நேரத்தை வீணாக்கிட்ட...அப்புறம் இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும்...தேவாகிட்ட போட்டு கொடுத்திடாத ...அப்புறம் என்னை எங்கயும் கூட்டிட்டு போகமாட்டாரு” என அவனிடம் சிணுங்கி கொண்டே சொல்ல
“அடிபாவி இவ்ளோ நேரம் என்னோட லவ் ஸ்டோரிய தலையை ஆட்டி ஆட்டி கேட்டுட்டு இப்போ மொக்கைனு சொல்றியா...... இரு தேவாகிட்ட சொல்றேன்...... உனக்கு பிரியாணியும் கிடையது “என சொல்லிவிட்டு அவன் முகத்தை திருப்பி கொண்டு செல்ல .....
“மாம்ஸ் என்ன இப்படி சொல்லிடிங்க ......... தெய்வீக காதல் மாம்ஸ் உன்னோடது...ஏன் அதையும் தாண்டி புனிதமானது நான் ஒத்துகிறேன்.......ஆனால் அதுக்காக பிரியாணில கை வச்சுடாதிங்க” என கத்திகொண்டே அவன் பின்னால் ஓடி வந்தாள் ரோஜா.
பின்னர் இருவரும் சிரித்தபடி இரங்கி வர ரதியோ தேவாவை ஒட்டி அமர்ந்தவள் வேறு யாரு முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.சாப்பிடும்போதும் ராம் எப்போதும் போல் சகஜமாக பேச ஆனால் ரதி பதில் சொல்லாமல் அமைதியாக சாப்பிட தேவா தான் அவளுக்கு சேர்த்து பேசினான்.பின்னர் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு மூவரும் கிளம்பினர்.
காரில் வரும்போது ரோஜா ரதியிடம் பேச்சு கொடுக்க அவளோ சரியாக பதில் சொல்லாமல் யோசனை உடனே வர ... தேவா “ஏன் ரதி அவர்கள் வீட்டிற்கு சென்றது உனக்கு பிடிக்கவில்லையா” என கேட்டான்.
“அய்யோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா என வேகமாக மறுத்தவள் நாளைக்கு ஒரு பரீட்சை இருக்கிறது ...அதை பற்றி நினைத்து கொண்டு வந்தேன்” என சமாளித்தாள்.
“அப்படியா சரி...சரி ...நாங்கள் தான் உன்னை வெளியே அழைத்து வந்து தொந்தரவு பண்ணிவிட்டோம் சாரிடா” என தேவா சொன்னவுடன் அதெல்லாம் இல்லை அண்ணா.....நான் படித்துவிட்டேன்”....என அவள் சிரித்து கொண்டே சமாளிக்க அதை பார்த்த ரோஜா மனதிற்குள் சிரித்துகொண்டாள்.