அத்தியாயம் -25
சிறுபிள்ளை போல் அவனிடம் சண்டைபோட்டு வந்தவள் பட்டாபி சொன்னதை கேட்டதும் சற்று கலவரம் அடைந்தாள்.அவளுக்கு தேவாவின் குணத்தை பற்றி நன்றாக தெரியும்.......எதை வேண்டுமானாலும் பொறுத்து கொள்வான்....ஆனால் தோல்வி எனபது அவனால் ஏற்றுகொள்ள முடியாது...கோழைகள்தான் தோல்வியடைவார்கள் என எப்போதும் சொல்வான்......இன்றோ அவளால் அவனுக்கு அந்த நிலைமை வந்து விடுமோ என பயந்து போனாள்.அப்படி நடந்தால் அவன் தாங்கி கொள்வானா என நினைத்தவள் அதை நினைக்கும்போதே அவளது உடலில் ஒரு அதிர்வு வந்து சென்றது.
பட்டாபியோ மிகுந்த வருத்தத்துடன் “தெரியலை ரோஜா.......இன்னும் ஒரு வாய்தா மட்டுமே இருக்கிறது....அதிலும் சாட்சி எதிர்தரப்பிடம் இருக்கிறான்.......அவன் தான் முக்கியமான சாட்சி இப்போது என்ன செய்யறதுனு ஒன்னும் புரியலை.....நான் அவசரம் அப்டினுதான் சார்க்கு தகவல் அனுப்புனேன்......அவர்தான் வந்து பார்க்கிரேனு சொன்னார்....இப்போ என்னை பிடிச்சு திட்றார்” என்றவன் “எப்போதும் இப்படி இருக்க மாட்டோம் .......இந்த முறைதான் கொஞ்சம் கவனம் பிசகிடுச்சு , என்னை செய்யறதுனே புரியலை” என புலம்பிகொண்டே நகர்ந்தான்.
ரோஜாவோ அவளால் தான் அவனுக்கு இந்த நிலை என புரிய என்ன செய்வது என அவளும் தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.பின்னர் பட்டாபி பலமுறை தேவாவின் அறைக்கு சென்று வர சென்று வர அவனிடம் தேவாவின் மனநிலையை கேட்டவள் அவன் மிகவும் கோபத்தில் இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டாள்.
என்ன செய்வது என தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தவள் பின்னர் பட்டாபியிடம் “எனக்கு ஒரு உதவி செய்வியா பட்டாபி என கேட்டாள்.
“என்ன ரோஜா என்ன வேணும் என்றவன் பப்ஸ் ஏதாவது வாங்கிவரட்டுமா” என்றான்.
அவனை முறைத்தவள் “எனக்கு அந்த கேஸ் பத்தின விபரங்கள் வேணும்” என்றாள்.
உடனே பாட்டபி “என்னோட மேஜைல இருக்க அந்த பெரிய பைல் தான் அது......எல்லா விபரமும் அதில் இருக்கும்....நான் சார் கொஞ்சம் போன் பண்ண சொன்னார்...பேசிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு அவன் செல்ல ரோஜா அந்த வழக்கு விபரங்கள் சம்பந்தபட்ட பைலை பார்த்து சில குறிப்புகளை எடுத்து கொண்டாள்.
தேவாவும் அது சம்பந்தமாக பலபேரை தொடர்பு கொண்டும் பல ஆவணங்களை பார்த்து கொண்டு இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.....பட்டாபியும் அது சம்பந்தமாக அலைந்து கொண்டு இருக்க ......ரோஜாவும் அந்த வழக்கின் விபரங்களை தொடக்கத்தில் இருந்து படித்து கொண்டு இருந்ததால் இரவு ஏழு மணிவரை யாரும் சாப்பிடவும் இல்லை.....ஓய்வும் எடுக்கவில்லை.
மாலை ஏழுமணி ஆனவுடன் ரோஜாவின் முகம் பசி மற்றும் வேலையில் கலைத்து விட அசதியில் அவள் மேஜை மீது தலை சாய வெளியே சென்ற பட்டாபி அப்போது தான் உள்ளே நுழைந்தவன் அவளை பார்த்ததும் பாவமாக இருக்க அவளை எழுப்பியவன் “நீ வீட்டிற்கு கிளம்பு ரோஜா ...நாங்கள் பார்த்து கொள்கிறோம்” என்றான்.
“எல்லாரும் புறப்படுகிறமா” என அவள் வேகமாக கேட்க
“இல்லை ரோஜா ...சார் இதற்கு தீர்வு தெரியாமல் இடத்தைவிட்டு நகரமாட்டார்.....நான் இருக்கிறேன் ...நீ கிளம்பு” என்றான்.
“அவரும் வரட்டும் பட்டாபி எல்லாரும் சேர்ந்தே போலாம் என்றவள் ...என்ன வேறு ஏதாவது வழிகள் கிடைத்ததா” என ஆர்வமுடன் கேட்டாள் ..
இல்லை என தலை ஆட்டியவன்...”இது ரொம்ப முக்கியாமான சாட்சி ரோஜா...அதான் சார் ரொம்ப டென்ஷன் ஆகிறார் என்றவன் கொஞ்சம் கஷ்டம்தான்” என்றான்.
இதுவரை தோல்வி என்பதே அறியாதவன் முதன் முதலாக தன்னால் அது அவனுக்கு ஏற்படுவதா என நினைக்கும்போதே அவளின் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. .
அப்போது தேவா பட்டாபியை அழைக்க உள்ளே சென்றவன் தான் கொண்டு வந்த கோப்புகளை அவனிடம் கொடுத்தான்.
அதை பார்த்த தேவா “நாம் எதிர்பார்க்கும் தகவல் இதில் இல்லை பட்டாபி....திட்டம் போட்டு காய் நகர்த்தி இருக்காங்க......இந்த சாட்சியை நான் நம்பினேன்...அதுதான் பெரிய தவறு என அவனிடம் புலம்பியவன் சரி நீ நம்ம அமிர்தலிங்கம் ஆபீஸ்க்கு போ...அங்கு சுப்ரீம் கோர்ட்டில் 1996 ல் இதுபோன்ற ஒரு வழக்கின் தீர்ப்பு நகல் இருக்கும்...அதை வாங்கிட்டு வா” என்றான்.
“சார்” என பட்டாபி ஏதோ சொல்ல
வேகமாக நிமிர்ந்த தேவா அவன் பார்வையில் அனல் கக்க...ஏன் இன்னும் இங்கே நிற்கிறாய் ..... எனக்கு நம்பிக்கை இருக்கிறது...... பார்க்கலாம் நானா இல்லை அவனா என்று” என சொல்லும்போதே கோபத்தில் அவனது நரம்புகள் துடிக்க முகத்தில் கோபத்தின் ஜூவாலை கொழுந்துவிட்டு எரிய ஒரு நிமிடம் பட்டாபியே நடுங்கி போனான்.
எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் பட்டாபி அங்கே நின்று கொண்டு இருந்தான் .
நிமிர்ந்து பார்த்த தேவா “இன்னும் செல்லாமல் இங்கு என்ன பண்ணற” என எரிச்சலுடன் கேட்டான்.
ஒரு நிமிடம் சொல்லலமா வேண்டாமா என்று யோசித்த பட்டாபி பின்னர் மெதுவாக “இல்லை சார் அது வந்து நம்ம ரோஜா இங்கே இருக்காங்க...மதியமும் ஏதும் சாப்பிடலை ...இப்பவும் நேரமாகிடுச்சு...பாவம் ரொம்ப கலைச்சு போய்ட்டாங்க அதான் அவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டிங்கனா “ என ஒருவழியாக சொல்லி முடித்தான்.
“என்னது ரோஜாவா” என்றவன் அப்போதுதான் அவளை அழைத்து வந்தது நியாபகம் வர “அவள் இன்னும் வீட்டிற்கு போகலையா என சொல்லிகொண்டே வேகமாக எழுந்தவன்அவளை யாரு இங்கு இருக்க சொன்னா” என கத்திகொண்டே அறையை விட்டு வெளியே வந்தான் . அப்போது ரோஜா சோர்வில் மேஜையில் படுத்து இருந்தாள். அதை பார்த்ததும் தேவாவிற்கு ஆத்திரம் அதிகமாக வர
வேகமாக அருகில் வந்தவன் அவள் கைகளை பிடித்து எழுப்பி நிறுத்தியவன் “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா......நேரமாச்சுனா கிளம்பி வீட்டுக்கு போகவேண்டியது தான....இது என்ன ஆபிசா இல்லை நீ தூங்கிற இடமா .......அவனவன் இங்கே எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிகிட்டு முழிச்சுட்டு இருக்கான்.......நீ தூங்கிட்டு இருக்க......வேலை செய்யத்தான் நீ உன்னால் முடியாது...உபத்திரவம் செய்யாம இருக்கலாம்ல .......நீ சாப்பிடாம இருக்கிறதால இங்க ஏதும் நடந்திடபோறதில்லை ...இந்த மாதிரி சிம்பத்தி கிரீயேட் பண்றத விட்டு வேற வேலைய பாரு என கோபத்தில் பேசிகொண்டே சென்றவன் பட்டாபி இவளை கொண்டு வீட்ல விட்டுட்டு வேண்டாம் இவள் ஆட்டோவில் போகட்டும்...நீ போய் அந்த நகலை வாங்கிட்டு வா என சொல்லிவிட்டு நீ இடத்தை காலி பண்ணு முதல்ல...இருக்கிற பிரச்னை பத்தாதுன்னு நீ வேற” என சலித்தபடியே ரோஜாவை பார்த்து சொன்னவன் திரும்பி பார்க்காமல் அறைக்குள் நுழைந்தான்.
சோர்வில் சற்று கண் அசந்தவள் அவன் வேகமாக எழுப்பியதில் முதலில் அவன் சொல்வது புரியாமல் முழித்தவள் சிறிது நேரத்திற்கு பின்தான் அவன் தன்னை திட்டுகிறான் என தெரிய அவள் என்ன சொல்கிறான் என உணரும் முன்பே அவன் பேசிமுடித்து விட்டு உள்ளே சென்றுவிட்டான்.
சிறிது நேரத்தில் அவனது அறைகதவை யாரோ தட்ட இந்த நேரத்தில் யாரு என சலித்தவாரே ...”உள்ளே வாங்க” என சொல்லிவிட்டு தனது வேலையை தொடர்ந்தான்.
சிலமணித்துளிகள் சத்தம் ஏதும் இல்லாமல் இருக்க நிமிர்ந்து பார்த்தவன் அங்கு ரோஜா நின்று கொண்டு இருந்தாள்.
“ஹே நீ இன்னும் போகலையா......ஏன் இப்படி பண்ற...என்னை நிம்மதியா வேலை செய்ய விடமாட்டியா” என சலித்துகொண்டவன் பட்டாபிஈஈஈ” என கத்த
‘நான் உங்களோடதான் வந்தேன்...நீங்க கிளம்பும் போது தான் நானும் கிளம்புவேன் ” என அழுத்தமாக அவன் முகத்தை பார்த்து சொன்னாள் ரோஜா.
கத்திக்கொண்டு இருந்தவன் சட்டென்று அமைதியாகி அவள் முகத்தை பார்க்க அதில் இருந்த உறுதி மற்றும் அவள் கண்களில் தெரிந்த கெஞ்சல் அவனை ஏதோ பண்ண...”இங்க பாரு ரோஜா உனக்கே தெரியும் வேலைனு வந்திட்டா நான் நானாவே இருக்க மாட்டேன்...........அதும் இப்போ என நிறுத்தியவன் அதற்கே ஏற்ற மாதிரி நீயும் இப்படி பண்ற ரோஜா .......நீ மேஜைல அப்படி படுத்து இருந்ததை பார்த்ததும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு....அதான் கோபத்துல பேசிட்டேன். சரி உட்கார் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வந்திட்றேன்” என சற்று பொறுமையாக சொன்னவன் அந்த அரைமணி நேரத்திற்குள் அவனுக்கு ஐம்பது அலைபேசியழைப்பு வர பேசிகொண்டே கணினியில் தேவையான விபரங்களை பார்த்து கொண்டு இருந்தான்.
காலையில் சாபிட்டதுதான்...நடுவில் டீ கூட அருந்தவில்லை......ஆனால் முகத்தில் சற்றும் களைப்பு தெரியாமல் எப்படி இவனால் இப்படி வேலை செய்யமுடிகிறது என அவள் ஆச்சிரியத்தோடு அவனை பார்த்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவன் பார்வை அவள் புறம் திருப்ப அவளோ அவனை பார்த்து சிரிக்க அந்த நேரத்தில் தேவாவிற்கு அது தேவையாக இருக்க அவனும் லேசான புன்னகையுடன் தனது இழுவை நாற்காலி மூலம் அவளின் அருகில் வந்தவன் “ஏண்டா ரொம்ப பசிக்குதா...நீ கிளம்பி வீட்டிற்கு போலாம் தானே” என கரிசனத்துடன் கேட்டான் தேவா .
இந்த நேரத்திலும் அவன் தன்னை அக்கறையாக விசாரிப்பது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க இல்லை ஆமா என்று இரண்டு புறமும் தலை ஆட்டியவள் “சாரி அத்தான் “என்றாள்.
“எதுக்கு சாரி” என அவன் கேட்க
“இல்லை என்னாலதான இவ்ளோ கஷ்டம் உங்களுக்கு ... நான் மட்டும் ஊருக்கு போகாம இருந்திருந்தா நீங்க இங்கேயே இருந்திருப்பிங்க......இவ்ளோ டென்ஷன் இருந்திருக்காது என சொன்னவள் மீண்டும் சாரி அத்தான்” என சொல்ல
அவளது இந்த பேச்சு அவனது கோபத்தை குறைக்க “ஆஹா என்னது இது என் அம்லு இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டிங்க “என்றவன் சட்டென்று முகம் கடினமுற .....”எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்தே தீரும் ரோஜா ......அதை நாம் தடுக்க முடியாது....இதுவும் நல்லதுக்குதான் .......எப்பவும் எதிராளிய நம்ம குறைவா எடை போட கூடாது.......அதே நேரத்தில சாதரண சாட்சினு நம்ம அசால்ட்டா இருக்கவும் கூடாது...இதெல்லாம் இது மூலமா நான் கத்துகிட்ட பாடம்” என அழுத்தமாக சொன்னான்.
சிறுபிள்ளை போல் அவனிடம் சண்டைபோட்டு வந்தவள் பட்டாபி சொன்னதை கேட்டதும் சற்று கலவரம் அடைந்தாள்.அவளுக்கு தேவாவின் குணத்தை பற்றி நன்றாக தெரியும்.......எதை வேண்டுமானாலும் பொறுத்து கொள்வான்....ஆனால் தோல்வி எனபது அவனால் ஏற்றுகொள்ள முடியாது...கோழைகள்தான் தோல்வியடைவார்கள் என எப்போதும் சொல்வான்......இன்றோ அவளால் அவனுக்கு அந்த நிலைமை வந்து விடுமோ என பயந்து போனாள்.அப்படி நடந்தால் அவன் தாங்கி கொள்வானா என நினைத்தவள் அதை நினைக்கும்போதே அவளது உடலில் ஒரு அதிர்வு வந்து சென்றது.
பட்டாபியோ மிகுந்த வருத்தத்துடன் “தெரியலை ரோஜா.......இன்னும் ஒரு வாய்தா மட்டுமே இருக்கிறது....அதிலும் சாட்சி எதிர்தரப்பிடம் இருக்கிறான்.......அவன் தான் முக்கியமான சாட்சி இப்போது என்ன செய்யறதுனு ஒன்னும் புரியலை.....நான் அவசரம் அப்டினுதான் சார்க்கு தகவல் அனுப்புனேன்......அவர்தான் வந்து பார்க்கிரேனு சொன்னார்....இப்போ என்னை பிடிச்சு திட்றார்” என்றவன் “எப்போதும் இப்படி இருக்க மாட்டோம் .......இந்த முறைதான் கொஞ்சம் கவனம் பிசகிடுச்சு , என்னை செய்யறதுனே புரியலை” என புலம்பிகொண்டே நகர்ந்தான்.
ரோஜாவோ அவளால் தான் அவனுக்கு இந்த நிலை என புரிய என்ன செய்வது என அவளும் தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.பின்னர் பட்டாபி பலமுறை தேவாவின் அறைக்கு சென்று வர சென்று வர அவனிடம் தேவாவின் மனநிலையை கேட்டவள் அவன் மிகவும் கோபத்தில் இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டாள்.
என்ன செய்வது என தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தவள் பின்னர் பட்டாபியிடம் “எனக்கு ஒரு உதவி செய்வியா பட்டாபி என கேட்டாள்.
“என்ன ரோஜா என்ன வேணும் என்றவன் பப்ஸ் ஏதாவது வாங்கிவரட்டுமா” என்றான்.
அவனை முறைத்தவள் “எனக்கு அந்த கேஸ் பத்தின விபரங்கள் வேணும்” என்றாள்.
உடனே பாட்டபி “என்னோட மேஜைல இருக்க அந்த பெரிய பைல் தான் அது......எல்லா விபரமும் அதில் இருக்கும்....நான் சார் கொஞ்சம் போன் பண்ண சொன்னார்...பேசிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு அவன் செல்ல ரோஜா அந்த வழக்கு விபரங்கள் சம்பந்தபட்ட பைலை பார்த்து சில குறிப்புகளை எடுத்து கொண்டாள்.
தேவாவும் அது சம்பந்தமாக பலபேரை தொடர்பு கொண்டும் பல ஆவணங்களை பார்த்து கொண்டு இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.....பட்டாபியும் அது சம்பந்தமாக அலைந்து கொண்டு இருக்க ......ரோஜாவும் அந்த வழக்கின் விபரங்களை தொடக்கத்தில் இருந்து படித்து கொண்டு இருந்ததால் இரவு ஏழு மணிவரை யாரும் சாப்பிடவும் இல்லை.....ஓய்வும் எடுக்கவில்லை.
மாலை ஏழுமணி ஆனவுடன் ரோஜாவின் முகம் பசி மற்றும் வேலையில் கலைத்து விட அசதியில் அவள் மேஜை மீது தலை சாய வெளியே சென்ற பட்டாபி அப்போது தான் உள்ளே நுழைந்தவன் அவளை பார்த்ததும் பாவமாக இருக்க அவளை எழுப்பியவன் “நீ வீட்டிற்கு கிளம்பு ரோஜா ...நாங்கள் பார்த்து கொள்கிறோம்” என்றான்.
“எல்லாரும் புறப்படுகிறமா” என அவள் வேகமாக கேட்க
“இல்லை ரோஜா ...சார் இதற்கு தீர்வு தெரியாமல் இடத்தைவிட்டு நகரமாட்டார்.....நான் இருக்கிறேன் ...நீ கிளம்பு” என்றான்.
“அவரும் வரட்டும் பட்டாபி எல்லாரும் சேர்ந்தே போலாம் என்றவள் ...என்ன வேறு ஏதாவது வழிகள் கிடைத்ததா” என ஆர்வமுடன் கேட்டாள் ..
இல்லை என தலை ஆட்டியவன்...”இது ரொம்ப முக்கியாமான சாட்சி ரோஜா...அதான் சார் ரொம்ப டென்ஷன் ஆகிறார் என்றவன் கொஞ்சம் கஷ்டம்தான்” என்றான்.
இதுவரை தோல்வி என்பதே அறியாதவன் முதன் முதலாக தன்னால் அது அவனுக்கு ஏற்படுவதா என நினைக்கும்போதே அவளின் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. .
அப்போது தேவா பட்டாபியை அழைக்க உள்ளே சென்றவன் தான் கொண்டு வந்த கோப்புகளை அவனிடம் கொடுத்தான்.
அதை பார்த்த தேவா “நாம் எதிர்பார்க்கும் தகவல் இதில் இல்லை பட்டாபி....திட்டம் போட்டு காய் நகர்த்தி இருக்காங்க......இந்த சாட்சியை நான் நம்பினேன்...அதுதான் பெரிய தவறு என அவனிடம் புலம்பியவன் சரி நீ நம்ம அமிர்தலிங்கம் ஆபீஸ்க்கு போ...அங்கு சுப்ரீம் கோர்ட்டில் 1996 ல் இதுபோன்ற ஒரு வழக்கின் தீர்ப்பு நகல் இருக்கும்...அதை வாங்கிட்டு வா” என்றான்.
“சார்” என பட்டாபி ஏதோ சொல்ல
வேகமாக நிமிர்ந்த தேவா அவன் பார்வையில் அனல் கக்க...ஏன் இன்னும் இங்கே நிற்கிறாய் ..... எனக்கு நம்பிக்கை இருக்கிறது...... பார்க்கலாம் நானா இல்லை அவனா என்று” என சொல்லும்போதே கோபத்தில் அவனது நரம்புகள் துடிக்க முகத்தில் கோபத்தின் ஜூவாலை கொழுந்துவிட்டு எரிய ஒரு நிமிடம் பட்டாபியே நடுங்கி போனான்.
எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் பட்டாபி அங்கே நின்று கொண்டு இருந்தான் .
நிமிர்ந்து பார்த்த தேவா “இன்னும் செல்லாமல் இங்கு என்ன பண்ணற” என எரிச்சலுடன் கேட்டான்.
ஒரு நிமிடம் சொல்லலமா வேண்டாமா என்று யோசித்த பட்டாபி பின்னர் மெதுவாக “இல்லை சார் அது வந்து நம்ம ரோஜா இங்கே இருக்காங்க...மதியமும் ஏதும் சாப்பிடலை ...இப்பவும் நேரமாகிடுச்சு...பாவம் ரொம்ப கலைச்சு போய்ட்டாங்க அதான் அவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டிங்கனா “ என ஒருவழியாக சொல்லி முடித்தான்.
“என்னது ரோஜாவா” என்றவன் அப்போதுதான் அவளை அழைத்து வந்தது நியாபகம் வர “அவள் இன்னும் வீட்டிற்கு போகலையா என சொல்லிகொண்டே வேகமாக எழுந்தவன்அவளை யாரு இங்கு இருக்க சொன்னா” என கத்திகொண்டே அறையை விட்டு வெளியே வந்தான் . அப்போது ரோஜா சோர்வில் மேஜையில் படுத்து இருந்தாள். அதை பார்த்ததும் தேவாவிற்கு ஆத்திரம் அதிகமாக வர
வேகமாக அருகில் வந்தவன் அவள் கைகளை பிடித்து எழுப்பி நிறுத்தியவன் “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா......நேரமாச்சுனா கிளம்பி வீட்டுக்கு போகவேண்டியது தான....இது என்ன ஆபிசா இல்லை நீ தூங்கிற இடமா .......அவனவன் இங்கே எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிகிட்டு முழிச்சுட்டு இருக்கான்.......நீ தூங்கிட்டு இருக்க......வேலை செய்யத்தான் நீ உன்னால் முடியாது...உபத்திரவம் செய்யாம இருக்கலாம்ல .......நீ சாப்பிடாம இருக்கிறதால இங்க ஏதும் நடந்திடபோறதில்லை ...இந்த மாதிரி சிம்பத்தி கிரீயேட் பண்றத விட்டு வேற வேலைய பாரு என கோபத்தில் பேசிகொண்டே சென்றவன் பட்டாபி இவளை கொண்டு வீட்ல விட்டுட்டு வேண்டாம் இவள் ஆட்டோவில் போகட்டும்...நீ போய் அந்த நகலை வாங்கிட்டு வா என சொல்லிவிட்டு நீ இடத்தை காலி பண்ணு முதல்ல...இருக்கிற பிரச்னை பத்தாதுன்னு நீ வேற” என சலித்தபடியே ரோஜாவை பார்த்து சொன்னவன் திரும்பி பார்க்காமல் அறைக்குள் நுழைந்தான்.
சோர்வில் சற்று கண் அசந்தவள் அவன் வேகமாக எழுப்பியதில் முதலில் அவன் சொல்வது புரியாமல் முழித்தவள் சிறிது நேரத்திற்கு பின்தான் அவன் தன்னை திட்டுகிறான் என தெரிய அவள் என்ன சொல்கிறான் என உணரும் முன்பே அவன் பேசிமுடித்து விட்டு உள்ளே சென்றுவிட்டான்.
சிறிது நேரத்தில் அவனது அறைகதவை யாரோ தட்ட இந்த நேரத்தில் யாரு என சலித்தவாரே ...”உள்ளே வாங்க” என சொல்லிவிட்டு தனது வேலையை தொடர்ந்தான்.
சிலமணித்துளிகள் சத்தம் ஏதும் இல்லாமல் இருக்க நிமிர்ந்து பார்த்தவன் அங்கு ரோஜா நின்று கொண்டு இருந்தாள்.
“ஹே நீ இன்னும் போகலையா......ஏன் இப்படி பண்ற...என்னை நிம்மதியா வேலை செய்ய விடமாட்டியா” என சலித்துகொண்டவன் பட்டாபிஈஈஈ” என கத்த
‘நான் உங்களோடதான் வந்தேன்...நீங்க கிளம்பும் போது தான் நானும் கிளம்புவேன் ” என அழுத்தமாக அவன் முகத்தை பார்த்து சொன்னாள் ரோஜா.
கத்திக்கொண்டு இருந்தவன் சட்டென்று அமைதியாகி அவள் முகத்தை பார்க்க அதில் இருந்த உறுதி மற்றும் அவள் கண்களில் தெரிந்த கெஞ்சல் அவனை ஏதோ பண்ண...”இங்க பாரு ரோஜா உனக்கே தெரியும் வேலைனு வந்திட்டா நான் நானாவே இருக்க மாட்டேன்...........அதும் இப்போ என நிறுத்தியவன் அதற்கே ஏற்ற மாதிரி நீயும் இப்படி பண்ற ரோஜா .......நீ மேஜைல அப்படி படுத்து இருந்ததை பார்த்ததும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு....அதான் கோபத்துல பேசிட்டேன். சரி உட்கார் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வந்திட்றேன்” என சற்று பொறுமையாக சொன்னவன் அந்த அரைமணி நேரத்திற்குள் அவனுக்கு ஐம்பது அலைபேசியழைப்பு வர பேசிகொண்டே கணினியில் தேவையான விபரங்களை பார்த்து கொண்டு இருந்தான்.
காலையில் சாபிட்டதுதான்...நடுவில் டீ கூட அருந்தவில்லை......ஆனால் முகத்தில் சற்றும் களைப்பு தெரியாமல் எப்படி இவனால் இப்படி வேலை செய்யமுடிகிறது என அவள் ஆச்சிரியத்தோடு அவனை பார்த்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவன் பார்வை அவள் புறம் திருப்ப அவளோ அவனை பார்த்து சிரிக்க அந்த நேரத்தில் தேவாவிற்கு அது தேவையாக இருக்க அவனும் லேசான புன்னகையுடன் தனது இழுவை நாற்காலி மூலம் அவளின் அருகில் வந்தவன் “ஏண்டா ரொம்ப பசிக்குதா...நீ கிளம்பி வீட்டிற்கு போலாம் தானே” என கரிசனத்துடன் கேட்டான் தேவா .
இந்த நேரத்திலும் அவன் தன்னை அக்கறையாக விசாரிப்பது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க இல்லை ஆமா என்று இரண்டு புறமும் தலை ஆட்டியவள் “சாரி அத்தான் “என்றாள்.
“எதுக்கு சாரி” என அவன் கேட்க
“இல்லை என்னாலதான இவ்ளோ கஷ்டம் உங்களுக்கு ... நான் மட்டும் ஊருக்கு போகாம இருந்திருந்தா நீங்க இங்கேயே இருந்திருப்பிங்க......இவ்ளோ டென்ஷன் இருந்திருக்காது என சொன்னவள் மீண்டும் சாரி அத்தான்” என சொல்ல
அவளது இந்த பேச்சு அவனது கோபத்தை குறைக்க “ஆஹா என்னது இது என் அம்லு இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டிங்க “என்றவன் சட்டென்று முகம் கடினமுற .....”எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்தே தீரும் ரோஜா ......அதை நாம் தடுக்க முடியாது....இதுவும் நல்லதுக்குதான் .......எப்பவும் எதிராளிய நம்ம குறைவா எடை போட கூடாது.......அதே நேரத்தில சாதரண சாட்சினு நம்ம அசால்ட்டா இருக்கவும் கூடாது...இதெல்லாம் இது மூலமா நான் கத்துகிட்ட பாடம்” என அழுத்தமாக சொன்னான்.