அத்தியாயம் -30
பெற்றோர்களிடம் சிறு பெண் போல் அவள் கொஞ்சி கொண்டு இருக்க அதை ரசித்தபடியே நீதி மன்றத்திற்கு கிளம்பினான் தேவா.வெகுநாட்களுக்கு பிறகு அந்த வீட்டில கலகலப்பான பேச்சு சத்தம் கேட்க தேவாவின் மனம் நிறைவாக இருந்தது.
“ரோஜா நீ அப்பா அம்மாவை வெளியே அழைத்து செல்ல டிரைவரை அனுப்பி வைக்கிறேன் ......முதலில் அவர்களுக்கு ஓய்வு கொடு” என சொல்ல
சேகரோ “இல்லை மாப்பிள்ளை நாங்க இன்றே கிளம்புகிறோம்” என்றார்.
“என்னது இன்றே வா என கேட்ட ரோஜா என்னப்பா நீங்க” என கோபித்து கொள்ள
“இல்லம்மா அங்க கடையை யார் பார்த்து கொள்வது.....அப்புறம் தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு...ராம் அவசரமாக வர சொன்னான் அதனால் உடனே கிளம்பி வந்திட்டோம் “ என்றார் சேகர்.
“என்ன மாமா நீங்க...எங்களுக்கு திருமணம் முடிந்து இப்பதான் வரீங்க ...அதுவும் வந்த உடனே கிளம்புனா எப்படி...இருந்து இரண்டு நாள் தங்கி ஓய்வு எடுத்திட்டு போங்க” என உரிமையுடன் சொன்னான்.
உடனே மரகதம் “இல்ல தம்பி ...நாங்க போகணும்...எனக்கு வெளியல அதிகம் தங்கி பழக்கம் இல்லை என சொன்னவர் இரவுதான் கிளம்புவோம் நீங்கள் உங்கள் வேலையை முடித்து விட்டு வாருங்கள்” என்றார்.
அதற்குள் தேவாவிற்கு அழைப்பு வர அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவனை வெளியில் சென்று வழியனுப்பிவிட்டு வந்தாள் ரோஜா.
ரோஜாவோ “என்ன பாட்டி நீங்க ......என் கூட இருக்கிறதுக்கு உங்களுக்கு பிடிக்கலையா” என முகத்தை தூக்கி வைத்து கொண்டவள்
“அம்மா நீங்களும் உடனே கிளம்பனுமா....கொஞ்ச நாள் என் கூட இருங்களேன்” என்றாள்.
பார்வதியோ சேகரின் முகம் பார்க்க
அவரோ மாரகதத்தை பார்க்க அவர் வேண்டாம் என்று கண் அசைத்ததும் மனைவியிடம் திரும்பியவர் பார்வதியின் பார்வையில் பஸ்பம் ஆகமால் தலை குனிந்து கொண்டார்.
பின்னர் “இல்லை ரோஜா திடிரென்று கிளம்பி வந்ததால் எல்லாம் அப்படியே போட்டுவிட்டு வந்துவிட்டோம்.அதனால் என்ன திருமண ஏற்பாடுகள் நடைபெறும்போது இங்கே வந்து தங்கி சேர்ந்து செய்யலாம்” என கணவரை முறைத்து கொண்டே பதில் சொன்னார் பார்வதி.
“என்னமா நீங்க....போங்க என்னோட பேசாதிங்க “ என சலித்தபடி சொல்ல
“சரி சரி இப்போதுதான் நான் முதல் முறை உன் வீட்டிற்கு வருகிறேன்...வீட்டை நான் சுற்றி பார்க்க வேண்டும்” என பார்வதி கேட்க
அதற்குள் அங்கு வந்த ரதி “நீங்க வாங்க அம்மா நான் காட்டுகிறேன்” என அழைத்து சென்றாள்.
பாட்டி கால் வலிக்குது என சொல்ல சேகரும் பார்வதியும் சென்றனர்.
அவர்கள் சென்றது பாட்டியின் அருகில் வந்து அமர்ந்த ரோஜா “ஹே எம்ரால்டு என்னது இது திடீர்னு தட்டோடு பொண்ணு கேட்டு வந்திட்டிங்க ...என்கிட்டே சொல்லவே இல்ல” என கேட்டவள் இந்த மாம்சும் எனக்கு சொல்லலை....இருக்கட்டும் அதை கவனிச்சுகிறேன்” என அவள் சொல்ல
அவளது பேச்சில் சிரித்த மரகதம் “இல்லடா செல்லம் என்கிட்டே நேத்து தான் அவன் சொன்னான்......இன்னைக்கு பெண் பார்க்க போகணும்...நீங்கதான் இரண்டு பக்கமும் பேசி முடிக்கணும்னு என சொன்னான் ...பொண்ணை பற்றி விபரம் சொன்ன பிறகு எனக்கே முதலில் அதிர்ச்சி தான். ...ஏன் ரோஜா அந்த பொண்ணுக்கும் ராம் மேல விருப்பம் தானே” என கேட்டார் பாட்டி.
ரோஜாவோ “ஆமாம் பாட்டி ...அவளுக்கு விருப்பம் தான் என்றவள் ஊருக்கு மட்டும் தான் உபதேசம் இல்லை பாட்டி “என அவள் மரகதத்தை ஆழ்ந்து பார்க்க
“அவரோ அப்படி எல்லாம் இல்லை ரோஜா......எனக்கு உன் மேல் நம்பிக்கை இருந்தது.மேலும் நீ வீட்டிற்கு வரும்போது எல்லாம் தேவா தம்பியை பத்தி தான் சொல்லிட்டு இருப்ப......நீ எப்பவும் உனக்கு ஒரு விஷயம் பிடிச்சுடுசுனா அதை பத்தி பேசிட்டே இருப்ப......உன் பேக்கில் இருந்தே உனக்கு தேவாவை பிடிக்கும் அப்டின்னு தெரிஞ்சுகிட்டேன்......மேலும் அப்ப நீ இருந்த மனநிலையில் உன்னால எந்த முடிவும் சரியாக எடுத்திருக்க முடியாது.அதான் நானே முடிவு எடுத்திட்டேன்...... எப்படியும் நீ சந்தோசமா வாழ்வேன்னு எனக்கு தெரியும் என்று சொன்னவர் மேலும் தேவா சொன்ன காரணம்” என சொல்லி நிறுத்தி அவள் முகம் பார்க்க
“என்ன சொன்னார் பாட்டி” என அவள் வேகமாக கேட்டதும்
தேவா உண்மையை சொல்லி இருப்பானா மாட்டான என தெரியாமல் உலறகூடது என நினைத்தவர் “ஒன்றும் இல்லை ரோஜா....அவர் உன்னை ரொம்ப பிடித்து இருக்கு என்று சொன்னார்...அதான்” என பேச்சை மாற்றினார்.
“எப்படி பாட்டி நேத்து ராம் சொல்லி இன்னிக்கு காலையில இங்க இருக்கீங்க.....நீங்க எல்லாம் அத்தை வீட்டுக்கு எப்ப வந்தீங்க” என கேட்டாள் ரோஜா.
“நேற்று மதியம் மதுரை வந்து இரவுக்குள் ப்ளைட்டில் எங்களை இங்கு அழைத்து வந்திட்டான்” ராம் என்றார் மரகதம்.
“ம்ம்ம் மாம்ஸ் ஒரு முடிவோட களத்துள இறங்கிட்டாப்ள இருக்கு “ என அவள் சொல்ல
ஆமா ரோஜா நான் கூட இவன் இப்படி பண்ணவான்னு நினைக்கவே இல்லை......ரொம்ப அமைதியான பையன் நினைச்சா என்ன காரியம் பண்ணிற்க்கான் பாரு என்றவர் ஆனால் உங்க அத்தைக்கு இதில் விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது...என்ன நடக்குமோ பார்க்கலாம்” என அவர் நிறுத்த
“ஏன் பாட்டி ...அத்தை ஏதாவது சொன்னாங்களா “என ரோஜா கேட்டதும்
“நான் வந்து விஷயம் சொன்னபிறகே உன் அத்தைக்கு எல்லாம் தெரியும்.அதுவே முதல் அதிர்ச்சி ...யாரிடமும் சரியாக பேசவில்லை.எங்களை தவிர்க்கவும் முடியாமல் இப்போது வந்து சென்று இருக்கிறாள்” என்றார் மரகதம்.
“அது ஒன்றும் பிரச்சனை இல்லை பாட்டி... நம்ம அத்தை தானே சமாளித்து கொள்ளாலாம் “ என அவள் சாதரணமாக சொல்ல மரகதம் எதுவும் சொல்லவில்லை.
அன்று முழுவதும் பெற்றோர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தவள் அவர்கள் கிளம்பவும் அவள் முகம் சுருங்க
அவளின் அருகில் வந்த பார்வதி ....ரோஜா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு....மாப்பிள்ளை உன்னை பத்தி எப்படி புகழ்ந்து சொல்றார் தெரியுமா ?நீயும் அதற்கு ஏற்றார் போல பொறுப்பா நடந்துகோ “என புத்திமதி சொல்ல
ரோஜாவும் சரி சரி என தலை அசைக்க
“விடு பார்வதி...அவளுக்கு எல்லாம் தெரியும்...நேரமாச்சு கிளம்பலாம்” என சொல்லி அங்கிருந்து பார்வதியை நகர்த்தியவர் “வரேன் ரோஜா..உடம்பை பார்த்துக்கோ “என்று சொல்ல .மரகதமோ எதுவும் சொல்லாமல் பேத்தியை அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினர்.
மறுநாள் காலை வீட்டில் எப்போதும் போல் வேலை நடந்து கொண்டு இருக்க ரோஜா தான் அவ்வப்போது வந்து ரதியை கிண்டல் செய்து கொண்டு இருந்தாள்.
அவள் ஏதோ சொல்ல ,ரதி வெட்கபட்டு வெளியே ஓடிவர தேவாவை பார்த்ததும் “இங்க பாருங்க அண்ணா...இவள் என்னை ரொம்ப கிண்டல் பண்றா” என சிணுங்கலுடன் சொல்லிவாறு அவன் தோள்களை பிடித்து கொண்டு தொங்கி கொண்டு நிற்க
தேவாவோ வெகு நாட்களுக்கு முன் ரதி இது போல் சந்தோசமாக தன்னுடன் சிரித்து விளையாண்டது ...மீண்டும் இப்போது தான் என நினைத்தவன் அதற்கு காரணமான தன்னவளை பார்த்ததும் மனதில் பெருமிதம் பொங்க சிரித்தபடியே நின்று கொண்டு இருந்தான்.
“அத்தான் நீங்க கொஞ்சம் நகருங்க...மேடம் கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு என்ன பாட்டு தெரியுமா பாடறா”....... என்றவள்
“அச்சோ ரோஜா வேண்டாம் சொல்லாத” என ரதி கெஞ்ச
உன்னை காணாத நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேறு இல்லேயே
அதிலும்
அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
“அப்டின்னு அபிநயத்தோட மேடம் பாடறத பார்க்கணுமே” என சொல்லி சிரித்தவள் அவள் போல் அபிநயம் பிடிக்க
“அச்சோ இங்க பாருங்க அண்ணா என ரதி வெட்கத்தால் முகம் சிவந்தவள்..போடி” என சினுங்கியவாரே தனது அறைக்குள் செல்ல தேவாவோ விருட்டென்று வெளியே கிளம்பினான்.
அவனது வேகத்தை பார்த்து அவன் பின்னே ஓடி வந்தவள் “என்ன அத்தான் கிளம்பிட்டிங்க...நானும் உங்களுடன் வரேன்” என சொல்ல
நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் ஏதும் சொல்லாமல் தலையை அசைக்க அவனை யோசனையுடன் பார்த்தவாறே காரில் சென்று அமர்ந்தாள் ரோஜா.
அலுவலகம் வந்ததும் தேவா எப்போதும் போல் தன் அறைக்குள் செல்ல ரோஜா பட்டாபியோடு அரட்டை அடித்து கொண்டு இருந்தாள். அப்போது அவசரமாக வெளியே வந்த தேவா” நான் அன்னை ஆலோசனை மையம் வரை சென்று வருகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினான்.ரோஜாவும்” நானும் வருகிறேன் அத்தான்” என்று அவனுடன் கிளம்பினாள்.
உள்ளே சென்றதும் அவனை எதிர்பார்த்து ஒருவர் அமர்ந்திருக்க அவருடன் பேசிகொண்டே அறைக்கு சென்றான் தேவா. ரோஜாவும் அங்கு இருக்கும் வரவேற்பு அறையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.சிறிது நேரம் கழித்து ஒரு வழக்கறிஞரின் அறையில் இருந்து இரண்டு பெண்கள் வெளியே வர அவர்களை பார்த்ததும் ரோஜாவின் முகம் சந்தோசத்தில் விரிய “ஹே தரணிஈஈஈஈ “என வேகமாக அழைத்தவாறே அவளை நோக்கி ஓடிவர
அந்த இடத்தில் ரோஜாவை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் தரணியும் சற்று தடுமாறி பின்னர் “ஹே பஞ்சுமிட்டாய் என சொல்லிகொண்டே அவளும் வர இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தங்களது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் அவளை விடுவித்து ......”இங்கு எல்லாரும் நம்மையே பார்க்கிறாங்க ...வா அங்கே அமர்ந்து பேசலாம் “என அவளை அழைத்து சென்றாள் ரோஜா.வெகுநாட்களுக்கு பின் சந்திக்கும் தோழிகள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு என்ன தரணி கல்லூரியில் படிக்கும்போது உளுந்த வடை சைசில் இருந்த ...இப்போ முட்டை போண்டா சைசில் வந்திட்ட என சொல்ல
அடிபாவி உதரணத்திற்கு கூட சாப்பிடற பொருளைத்தான் வச்சு சொல்லனுமா.....வாங்கி சாப்பிட்றது நீ...கூட என்னையும் சேர்த்து சாப்பிட வச்சு இப்போ என்னையே கிண்டல் பண்ற என செல்லமாக அவள் காதை பிடித்து திருகியவள் ...பாவம் அண்ணாச்சி நமக்கு முட்டை போண்டா செஞ்சு கொடுத்தே மனுஷன் போண்டி ஆகிட்டார்” என தரணி வருத்தமாக சொல்ல
“ஏன் தரணி என்னாச்சு ....நம்ம அண்ணாச்சி கடை இல்லயா “என ரோஜா வேகமாக கேட்க
தெரியலை ரோஜா...ஆனா கல்லூரி பக்கத்துல இப்போ கடை இல்லை வேற பக்கம் மாத்தியாச்சுனு சொன்னங்க என்றவள் ம்ம்ம்ம் அதெல்லாம் எவ்ளோ சந்தோசமான நினைவுகள்” என சொன்னாள்.
“உண்மைதான் தரணி என தலை ஆட்டிய ரோஜா
“ஆமா நீ எங்கே இங்க “என இருவருமே ஒரே நேரத்தில் கேட்க
“ஆஹா மறுபடியுமா...கல்லூரி குறும்பு அப்படியே என கிண்டலாக சொன்ன தரணி ஹே பஞ்சுமிட்டாய் இவ்ளோ நாள் எங்க போன.......இரண்டு முறை மெயில் பார்த்தேன்.......இந்த ஆறு மாதமாக அதுவும் இல்லை.......வீட்டை விட்டு வெளியே வரமாட்டாய் .....இங்க சுத்திட்டு இருக்க” என சிரித்து கொண்டே கேட்டாள்.
“அத நீ சொல்லாதே தரணி...நீ தான் படிப்பு முடிந்ததும் அக்கா வீட்டிற்கு செல்கிறேன் என்று பாரின் போய்விட்டாய்.கொஞ்ச நாள் உன்னிடம் இருந்து எந்த தகவலும் இல்லை......ஆமாம் இப்போதும் நீ சேலத்தில் தானே இருகிறாய்...நம்ம ப்ரிண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க.......நம்ம கல்லூரி வாலு சுகந்தி, யாரயும் முழுசா பேர்சொல்லாம அடைமொழி சொல்லியே கலவறபடுத்தும் நம்ம மதுமதி,சனா,சரோஜினி,அனிதா,ராதா ஸ்ரீதர் , ஆர்வகோளாறு பாரதிகென்னடி,உமா ஸ்டாலின்,இன்னும் என அவள் யோசிக்க
“ஹஹஹஹா ஹே ரோஜா போதும் போதும் நீ இன்னும் மாறவே இல்லை “என சொல்லி சிரித்த தரணி “ம்ம்ம்ம் நானும் இப்பதான் ஆறுமாதம் முன்பு வந்தேன் .........இனிதான் எல்லாரயும் பார்க்கணும்.......தல, தளபதி இரண்டு பேரும் நேற்று கூட பேசுனாங்க என சொன்னவள் நீ தான் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்ட்ட” என செல்லமாக அவளிடம் கோபித்து கொள்ள
சட்டென்று முகம் மாற “அப்படி எல்லாம் இல்லை தரணி.....ம்ம்ம் இந்த இரண்டு வருடத்திற்குள் என்னனேன்மோ நடந்திடுச்சு என்றவள் சரி அந்த கதை எல்லாம் பிறகு விளக்கமாக சொல்கிறேன் ...ஆமாம் நீ எங்கே இந்த பக்கம்” என சொல்லிகொண்டே அப்போது தான் அருகில் இருக்கும் பெண்ணை கவனித்தாள் ரோஜா.
பெற்றோர்களிடம் சிறு பெண் போல் அவள் கொஞ்சி கொண்டு இருக்க அதை ரசித்தபடியே நீதி மன்றத்திற்கு கிளம்பினான் தேவா.வெகுநாட்களுக்கு பிறகு அந்த வீட்டில கலகலப்பான பேச்சு சத்தம் கேட்க தேவாவின் மனம் நிறைவாக இருந்தது.
“ரோஜா நீ அப்பா அம்மாவை வெளியே அழைத்து செல்ல டிரைவரை அனுப்பி வைக்கிறேன் ......முதலில் அவர்களுக்கு ஓய்வு கொடு” என சொல்ல
சேகரோ “இல்லை மாப்பிள்ளை நாங்க இன்றே கிளம்புகிறோம்” என்றார்.
“என்னது இன்றே வா என கேட்ட ரோஜா என்னப்பா நீங்க” என கோபித்து கொள்ள
“இல்லம்மா அங்க கடையை யார் பார்த்து கொள்வது.....அப்புறம் தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு...ராம் அவசரமாக வர சொன்னான் அதனால் உடனே கிளம்பி வந்திட்டோம் “ என்றார் சேகர்.
“என்ன மாமா நீங்க...எங்களுக்கு திருமணம் முடிந்து இப்பதான் வரீங்க ...அதுவும் வந்த உடனே கிளம்புனா எப்படி...இருந்து இரண்டு நாள் தங்கி ஓய்வு எடுத்திட்டு போங்க” என உரிமையுடன் சொன்னான்.
உடனே மரகதம் “இல்ல தம்பி ...நாங்க போகணும்...எனக்கு வெளியல அதிகம் தங்கி பழக்கம் இல்லை என சொன்னவர் இரவுதான் கிளம்புவோம் நீங்கள் உங்கள் வேலையை முடித்து விட்டு வாருங்கள்” என்றார்.
அதற்குள் தேவாவிற்கு அழைப்பு வர அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவனை வெளியில் சென்று வழியனுப்பிவிட்டு வந்தாள் ரோஜா.
ரோஜாவோ “என்ன பாட்டி நீங்க ......என் கூட இருக்கிறதுக்கு உங்களுக்கு பிடிக்கலையா” என முகத்தை தூக்கி வைத்து கொண்டவள்
“அம்மா நீங்களும் உடனே கிளம்பனுமா....கொஞ்ச நாள் என் கூட இருங்களேன்” என்றாள்.
பார்வதியோ சேகரின் முகம் பார்க்க
அவரோ மாரகதத்தை பார்க்க அவர் வேண்டாம் என்று கண் அசைத்ததும் மனைவியிடம் திரும்பியவர் பார்வதியின் பார்வையில் பஸ்பம் ஆகமால் தலை குனிந்து கொண்டார்.
பின்னர் “இல்லை ரோஜா திடிரென்று கிளம்பி வந்ததால் எல்லாம் அப்படியே போட்டுவிட்டு வந்துவிட்டோம்.அதனால் என்ன திருமண ஏற்பாடுகள் நடைபெறும்போது இங்கே வந்து தங்கி சேர்ந்து செய்யலாம்” என கணவரை முறைத்து கொண்டே பதில் சொன்னார் பார்வதி.
“என்னமா நீங்க....போங்க என்னோட பேசாதிங்க “ என சலித்தபடி சொல்ல
“சரி சரி இப்போதுதான் நான் முதல் முறை உன் வீட்டிற்கு வருகிறேன்...வீட்டை நான் சுற்றி பார்க்க வேண்டும்” என பார்வதி கேட்க
அதற்குள் அங்கு வந்த ரதி “நீங்க வாங்க அம்மா நான் காட்டுகிறேன்” என அழைத்து சென்றாள்.
பாட்டி கால் வலிக்குது என சொல்ல சேகரும் பார்வதியும் சென்றனர்.
அவர்கள் சென்றது பாட்டியின் அருகில் வந்து அமர்ந்த ரோஜா “ஹே எம்ரால்டு என்னது இது திடீர்னு தட்டோடு பொண்ணு கேட்டு வந்திட்டிங்க ...என்கிட்டே சொல்லவே இல்ல” என கேட்டவள் இந்த மாம்சும் எனக்கு சொல்லலை....இருக்கட்டும் அதை கவனிச்சுகிறேன்” என அவள் சொல்ல
அவளது பேச்சில் சிரித்த மரகதம் “இல்லடா செல்லம் என்கிட்டே நேத்து தான் அவன் சொன்னான்......இன்னைக்கு பெண் பார்க்க போகணும்...நீங்கதான் இரண்டு பக்கமும் பேசி முடிக்கணும்னு என சொன்னான் ...பொண்ணை பற்றி விபரம் சொன்ன பிறகு எனக்கே முதலில் அதிர்ச்சி தான். ...ஏன் ரோஜா அந்த பொண்ணுக்கும் ராம் மேல விருப்பம் தானே” என கேட்டார் பாட்டி.
ரோஜாவோ “ஆமாம் பாட்டி ...அவளுக்கு விருப்பம் தான் என்றவள் ஊருக்கு மட்டும் தான் உபதேசம் இல்லை பாட்டி “என அவள் மரகதத்தை ஆழ்ந்து பார்க்க
“அவரோ அப்படி எல்லாம் இல்லை ரோஜா......எனக்கு உன் மேல் நம்பிக்கை இருந்தது.மேலும் நீ வீட்டிற்கு வரும்போது எல்லாம் தேவா தம்பியை பத்தி தான் சொல்லிட்டு இருப்ப......நீ எப்பவும் உனக்கு ஒரு விஷயம் பிடிச்சுடுசுனா அதை பத்தி பேசிட்டே இருப்ப......உன் பேக்கில் இருந்தே உனக்கு தேவாவை பிடிக்கும் அப்டின்னு தெரிஞ்சுகிட்டேன்......மேலும் அப்ப நீ இருந்த மனநிலையில் உன்னால எந்த முடிவும் சரியாக எடுத்திருக்க முடியாது.அதான் நானே முடிவு எடுத்திட்டேன்...... எப்படியும் நீ சந்தோசமா வாழ்வேன்னு எனக்கு தெரியும் என்று சொன்னவர் மேலும் தேவா சொன்ன காரணம்” என சொல்லி நிறுத்தி அவள் முகம் பார்க்க
“என்ன சொன்னார் பாட்டி” என அவள் வேகமாக கேட்டதும்
தேவா உண்மையை சொல்லி இருப்பானா மாட்டான என தெரியாமல் உலறகூடது என நினைத்தவர் “ஒன்றும் இல்லை ரோஜா....அவர் உன்னை ரொம்ப பிடித்து இருக்கு என்று சொன்னார்...அதான்” என பேச்சை மாற்றினார்.
“எப்படி பாட்டி நேத்து ராம் சொல்லி இன்னிக்கு காலையில இங்க இருக்கீங்க.....நீங்க எல்லாம் அத்தை வீட்டுக்கு எப்ப வந்தீங்க” என கேட்டாள் ரோஜா.
“நேற்று மதியம் மதுரை வந்து இரவுக்குள் ப்ளைட்டில் எங்களை இங்கு அழைத்து வந்திட்டான்” ராம் என்றார் மரகதம்.
“ம்ம்ம் மாம்ஸ் ஒரு முடிவோட களத்துள இறங்கிட்டாப்ள இருக்கு “ என அவள் சொல்ல
ஆமா ரோஜா நான் கூட இவன் இப்படி பண்ணவான்னு நினைக்கவே இல்லை......ரொம்ப அமைதியான பையன் நினைச்சா என்ன காரியம் பண்ணிற்க்கான் பாரு என்றவர் ஆனால் உங்க அத்தைக்கு இதில் விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது...என்ன நடக்குமோ பார்க்கலாம்” என அவர் நிறுத்த
“ஏன் பாட்டி ...அத்தை ஏதாவது சொன்னாங்களா “என ரோஜா கேட்டதும்
“நான் வந்து விஷயம் சொன்னபிறகே உன் அத்தைக்கு எல்லாம் தெரியும்.அதுவே முதல் அதிர்ச்சி ...யாரிடமும் சரியாக பேசவில்லை.எங்களை தவிர்க்கவும் முடியாமல் இப்போது வந்து சென்று இருக்கிறாள்” என்றார் மரகதம்.
“அது ஒன்றும் பிரச்சனை இல்லை பாட்டி... நம்ம அத்தை தானே சமாளித்து கொள்ளாலாம் “ என அவள் சாதரணமாக சொல்ல மரகதம் எதுவும் சொல்லவில்லை.
அன்று முழுவதும் பெற்றோர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தவள் அவர்கள் கிளம்பவும் அவள் முகம் சுருங்க
அவளின் அருகில் வந்த பார்வதி ....ரோஜா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு....மாப்பிள்ளை உன்னை பத்தி எப்படி புகழ்ந்து சொல்றார் தெரியுமா ?நீயும் அதற்கு ஏற்றார் போல பொறுப்பா நடந்துகோ “என புத்திமதி சொல்ல
ரோஜாவும் சரி சரி என தலை அசைக்க
“விடு பார்வதி...அவளுக்கு எல்லாம் தெரியும்...நேரமாச்சு கிளம்பலாம்” என சொல்லி அங்கிருந்து பார்வதியை நகர்த்தியவர் “வரேன் ரோஜா..உடம்பை பார்த்துக்கோ “என்று சொல்ல .மரகதமோ எதுவும் சொல்லாமல் பேத்தியை அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினர்.
மறுநாள் காலை வீட்டில் எப்போதும் போல் வேலை நடந்து கொண்டு இருக்க ரோஜா தான் அவ்வப்போது வந்து ரதியை கிண்டல் செய்து கொண்டு இருந்தாள்.
அவள் ஏதோ சொல்ல ,ரதி வெட்கபட்டு வெளியே ஓடிவர தேவாவை பார்த்ததும் “இங்க பாருங்க அண்ணா...இவள் என்னை ரொம்ப கிண்டல் பண்றா” என சிணுங்கலுடன் சொல்லிவாறு அவன் தோள்களை பிடித்து கொண்டு தொங்கி கொண்டு நிற்க
தேவாவோ வெகு நாட்களுக்கு முன் ரதி இது போல் சந்தோசமாக தன்னுடன் சிரித்து விளையாண்டது ...மீண்டும் இப்போது தான் என நினைத்தவன் அதற்கு காரணமான தன்னவளை பார்த்ததும் மனதில் பெருமிதம் பொங்க சிரித்தபடியே நின்று கொண்டு இருந்தான்.
“அத்தான் நீங்க கொஞ்சம் நகருங்க...மேடம் கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு என்ன பாட்டு தெரியுமா பாடறா”....... என்றவள்
“அச்சோ ரோஜா வேண்டாம் சொல்லாத” என ரதி கெஞ்ச
உன்னை காணாத நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேறு இல்லேயே
அதிலும்
அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
“அப்டின்னு அபிநயத்தோட மேடம் பாடறத பார்க்கணுமே” என சொல்லி சிரித்தவள் அவள் போல் அபிநயம் பிடிக்க
“அச்சோ இங்க பாருங்க அண்ணா என ரதி வெட்கத்தால் முகம் சிவந்தவள்..போடி” என சினுங்கியவாரே தனது அறைக்குள் செல்ல தேவாவோ விருட்டென்று வெளியே கிளம்பினான்.
அவனது வேகத்தை பார்த்து அவன் பின்னே ஓடி வந்தவள் “என்ன அத்தான் கிளம்பிட்டிங்க...நானும் உங்களுடன் வரேன்” என சொல்ல
நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் ஏதும் சொல்லாமல் தலையை அசைக்க அவனை யோசனையுடன் பார்த்தவாறே காரில் சென்று அமர்ந்தாள் ரோஜா.
அலுவலகம் வந்ததும் தேவா எப்போதும் போல் தன் அறைக்குள் செல்ல ரோஜா பட்டாபியோடு அரட்டை அடித்து கொண்டு இருந்தாள். அப்போது அவசரமாக வெளியே வந்த தேவா” நான் அன்னை ஆலோசனை மையம் வரை சென்று வருகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினான்.ரோஜாவும்” நானும் வருகிறேன் அத்தான்” என்று அவனுடன் கிளம்பினாள்.
உள்ளே சென்றதும் அவனை எதிர்பார்த்து ஒருவர் அமர்ந்திருக்க அவருடன் பேசிகொண்டே அறைக்கு சென்றான் தேவா. ரோஜாவும் அங்கு இருக்கும் வரவேற்பு அறையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.சிறிது நேரம் கழித்து ஒரு வழக்கறிஞரின் அறையில் இருந்து இரண்டு பெண்கள் வெளியே வர அவர்களை பார்த்ததும் ரோஜாவின் முகம் சந்தோசத்தில் விரிய “ஹே தரணிஈஈஈஈ “என வேகமாக அழைத்தவாறே அவளை நோக்கி ஓடிவர
அந்த இடத்தில் ரோஜாவை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் தரணியும் சற்று தடுமாறி பின்னர் “ஹே பஞ்சுமிட்டாய் என சொல்லிகொண்டே அவளும் வர இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தங்களது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் அவளை விடுவித்து ......”இங்கு எல்லாரும் நம்மையே பார்க்கிறாங்க ...வா அங்கே அமர்ந்து பேசலாம் “என அவளை அழைத்து சென்றாள் ரோஜா.வெகுநாட்களுக்கு பின் சந்திக்கும் தோழிகள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு என்ன தரணி கல்லூரியில் படிக்கும்போது உளுந்த வடை சைசில் இருந்த ...இப்போ முட்டை போண்டா சைசில் வந்திட்ட என சொல்ல
அடிபாவி உதரணத்திற்கு கூட சாப்பிடற பொருளைத்தான் வச்சு சொல்லனுமா.....வாங்கி சாப்பிட்றது நீ...கூட என்னையும் சேர்த்து சாப்பிட வச்சு இப்போ என்னையே கிண்டல் பண்ற என செல்லமாக அவள் காதை பிடித்து திருகியவள் ...பாவம் அண்ணாச்சி நமக்கு முட்டை போண்டா செஞ்சு கொடுத்தே மனுஷன் போண்டி ஆகிட்டார்” என தரணி வருத்தமாக சொல்ல
“ஏன் தரணி என்னாச்சு ....நம்ம அண்ணாச்சி கடை இல்லயா “என ரோஜா வேகமாக கேட்க
தெரியலை ரோஜா...ஆனா கல்லூரி பக்கத்துல இப்போ கடை இல்லை வேற பக்கம் மாத்தியாச்சுனு சொன்னங்க என்றவள் ம்ம்ம்ம் அதெல்லாம் எவ்ளோ சந்தோசமான நினைவுகள்” என சொன்னாள்.
“உண்மைதான் தரணி என தலை ஆட்டிய ரோஜா
“ஆமா நீ எங்கே இங்க “என இருவருமே ஒரே நேரத்தில் கேட்க
“ஆஹா மறுபடியுமா...கல்லூரி குறும்பு அப்படியே என கிண்டலாக சொன்ன தரணி ஹே பஞ்சுமிட்டாய் இவ்ளோ நாள் எங்க போன.......இரண்டு முறை மெயில் பார்த்தேன்.......இந்த ஆறு மாதமாக அதுவும் இல்லை.......வீட்டை விட்டு வெளியே வரமாட்டாய் .....இங்க சுத்திட்டு இருக்க” என சிரித்து கொண்டே கேட்டாள்.
“அத நீ சொல்லாதே தரணி...நீ தான் படிப்பு முடிந்ததும் அக்கா வீட்டிற்கு செல்கிறேன் என்று பாரின் போய்விட்டாய்.கொஞ்ச நாள் உன்னிடம் இருந்து எந்த தகவலும் இல்லை......ஆமாம் இப்போதும் நீ சேலத்தில் தானே இருகிறாய்...நம்ம ப்ரிண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க.......நம்ம கல்லூரி வாலு சுகந்தி, யாரயும் முழுசா பேர்சொல்லாம அடைமொழி சொல்லியே கலவறபடுத்தும் நம்ம மதுமதி,சனா,சரோஜினி,அனிதா,ராதா ஸ்ரீதர் , ஆர்வகோளாறு பாரதிகென்னடி,உமா ஸ்டாலின்,இன்னும் என அவள் யோசிக்க
“ஹஹஹஹா ஹே ரோஜா போதும் போதும் நீ இன்னும் மாறவே இல்லை “என சொல்லி சிரித்த தரணி “ம்ம்ம்ம் நானும் இப்பதான் ஆறுமாதம் முன்பு வந்தேன் .........இனிதான் எல்லாரயும் பார்க்கணும்.......தல, தளபதி இரண்டு பேரும் நேற்று கூட பேசுனாங்க என சொன்னவள் நீ தான் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்ட்ட” என செல்லமாக அவளிடம் கோபித்து கொள்ள
சட்டென்று முகம் மாற “அப்படி எல்லாம் இல்லை தரணி.....ம்ம்ம் இந்த இரண்டு வருடத்திற்குள் என்னனேன்மோ நடந்திடுச்சு என்றவள் சரி அந்த கதை எல்லாம் பிறகு விளக்கமாக சொல்கிறேன் ...ஆமாம் நீ எங்கே இந்த பக்கம்” என சொல்லிகொண்டே அப்போது தான் அருகில் இருக்கும் பெண்ணை கவனித்தாள் ரோஜா.