அத்தியாயம் -32
ரதியின் திருமண பேச்சில் இருந்தே தேவா கொஞ்சம் குழம்பி போய் இருந்தான். யாரும் இல்லாமல் தனியாக தவித்து கொண்டு இருந்தவனுக்கு அணைத்து உறவுமாக வந்தவள் ரதி. அவளை தன் சொந்த தங்கை போல் தான் அவன் நினைத்து இருந்தான்.இந்த விதத்தில் ஒரு பிரச்சனை வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.இனி அடுத்தது என்ன செய்வது என அவன் யோசித்து கொண்டிருந்த வேளையில் ரோஜா அவளது வழக்கு சமபந்தமாக சில சந்தேகங்களை கேட்க அவன் அறைக்கு வந்தாள்.
“அத்தான் இது எனக்கு புரியலை” என சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தவள் அவன் சிந்தனையில் இருந்ததை பார்த்து “என்ன அத்தான் ...என்ன யோசனை” என கேட்டாள்.
அவனோ சிரித்து கொண்டே “ஒன்றும் இல்லை அம்லு என சொல்லி சமாளித்தவன் பின்னர் என்ன சந்தேகம் உனக்கு என்றான்..
வாணியின் கணவரிடம் இருந்து விவாகரத்திற்கு பிறகு நாம் ஜீவனாம்சம் வாங்க முடியுமா ? ஏன்னா இது வாணிதான் விவாகரத்து வேணும்னு கேட்டு இருக்கா ...அவனுக்கு இஷ்டம் இல்லை.....நம்ம வற்புறுத்தி வாங்கும்போது ஜீவனாம்சம் கிடைக்குமா என அவள் கேட்டதும்
“ஏன் ரோஜா ...அந்த பொண்ணுதான் நல்ல வேலையில இருக்குள்ள ...அப்புறம் எதற்கு ஜீவனாம்சம்..மேலும் குழந்தைகளும் இல்லை.இதற்கு தான் சொன்னேன் விவாகரத்து என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லைனு....இந்த காலத்து பசங்க எங்க சொன்னா கேட்கிறாங்க” என அவன் சலித்து கொள்ள
உடனே அவள் ஹஹஹாஹ் என சிரிக்க
“இப்போ எதுக்கு சிரிக்கிற நீ” என அவன் கேட்டதும்
“இல்லை நீங்க என்னமோ அந்த காலத்து ஆளு மாதிரியும் இப்போ இருக்க பசங்களை சொல்லிட்டு இருக்கீங்க” என்றாள்.
அவனும் சிரித்து கொண்டே “அப்படி இல்லை ....முடிந்த அளவு போராடவேண்டும்.....அதற்கு பின்பு தான் இது போன்ற முடிவு எடுக்க வேண்டும்” என்றான் தேவா.
உடனே அவள் “வேகமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை அத்தான். எதற்கு போராட வேண்டும்.....அந்த போராட்டத்தை ஆண்கள் செய்வார்களா?......பெண்கள் என்றாலே போராடத்தான் பிறந்தார்களா?.....இந்த சூழ்நிலை அவர்களுக்கு வந்தால் அவர்கள் போராடிக்கொண்டு இருப்பார்களா ? இவர்கள் எல்லா தவறுகளையும் செய்து விட்டு கடைசியில் சாரி என்ற ஒரு வார்த்தையில் அணைத்து தவறையும் மறந்து விட சொல்வார்கள்.பாதிக்க பட்ட பெண்ணும் எல்லாம் மறந்து என் கணவன் நல்லவன் என சொல்லி அவனுடன் வாழனும்....திருமணம் என்பததே ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் நம்பிக்கைதான் ராகன்.
என்னை பொறுத்தவரை நான் கொலை செய்தவனை கூட ஏற்றுகொள்ளலாம்....ஆனால் நம்பிக்கை மோசம் செய்தவனை மன்னிக்கவே முடியாது.வாணியின் கணவர் செய்தது நம்பிக்கை மோசம்.அதற்கான தண்டனை கண்டிப்பாக அவன் அனுபவித்தே ஆகவேணும்.உடலாலும் ,மனதாலும் ஏன் பணத்தாலும் அனுபவிக்கனும்.அதற்காகத்தான் கேட்கிறேன் ஜீவனாம்சம் வாங்கலாமா என்று “ என ஆக்ரோஷமாக கோபத்தில் முகம் சிவக்க தொண்டை நரம்புகள் புடைக்க அவள் பேச முதன் முறையாக இந்த ரோஜாவே அவன் இப்போது தான் பார்க்கிறான்..
இது வரை ரோஜா இதழின் மென்மையை மட்டுமே அவளிடம் பார்த்து கொண்டு இருந்தவன் முதன் முதலாக அதன் முட்களை பார்க்கிறான்.
அவளது கோபத்தில் ஒரு நியாயம் இருக்க அது அவனுக்கு புரிந்தாலும் அவனும் வக்கீல் அல்லவா...அதனால் “அப்படி இல்லை ரோஜா ...குடும்பம் எனபது இருவர் சமந்தபட்டது அல்ல......இதில இரண்டு பக்கத்தின் பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உறவினர்கள் மற்றும் நம் கலாச்சாரம் எல்லாம் அடங்கி இருகின்றது..இவர்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் அனைவரும் பாதிக்கபடுவர்...அதனால் தான் சொல்கிறேன்” என சொல்ல
“இது தான் ராகன் பெண்களுக்கு பிடித்த சாபகேடு.அவர்கள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு தேடினால் அதில் குடும்பம்,பாண்பாடு,கலாச்சாரம் எல்லாம் இணைந்து விடுகின்றது.இதே ஒரு ஆண் தேடினால் அதில் அவன் மட்டுமே இருக்கிறான்.அவனால் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடிகிறது.அதனால் தான் இன்று பல ஆண்கள் தவறு மேல் தவறு செய்கின்றனர்” என அவள் பொரிந்து தள்ள
பேச்சு வேறுபக்கம் திசை திரும்பவது உணர்ந்த தேவா “சரி சரி அம்லு...நீ எதுக்கு இவளோ ஆவேசபட்ற.......உனக்கு இது முதல் வழக்கு அப்டிங்கிறதால இப்படி எல்லாம் தோணுது.....இதைவிட பெரிய பிரச்சனைகள் எல்லாம் வரும்.அப்போது உனக்கு இதெல்லாம் சாதரணமாக தெரியும்” என அவளை சமாதனபடுத்தினான்.
“இல்லை அத்தான் என்னை பொறுத்தவரை கணவன் மனைவிக்குள் ரகசியங்கள் இருக்க கூடாது.முடிந்த வரை திருமணத்தின் போதே சொல்லிவிட வேண்டும்.இல்லை அவளுடன் வாழ தொடங்கியவுடன் அதை சொல்லிவிடவேண்டும்...அதை விட்டு மறைத்து சில காலம் குடும்பம் நடத்திவிட்டு பின்னர் சொல்வது அந்த பெண்ணை மிகவும் கேவலபடுத்தியது போல் ஆகும்.அதாவது நீ என்னுடன் வாழ்ந்துவிட்டாய்.இனி உனக்கு வேறு கதி இல்ல என்ற ஆணவத்தில் அது சொல்வது போல் இருக்கும்”....என அவள் அவளது கருத்துகளை சொல்ல தேவாவின் மனமோ ஒருநிமிடம் நின்று துடித்தது.
அவள் பேசிகொண்டிருக்க தேவாவோ விகிர்த்து போய் நின்று இருந்தான். சிறிது நேரம் பேசியவள் பின்னர் “என்ன அத்தான் அப்படியே நிற்கிரிங்க......என்னடா உங்க அம்லு இப்படி பேசாரானு ஆச்சரியமா இருக்கா...எல்லாம் உங்களை பார்த்து தான் அத்தான்....நீங்கதானே சொல்வீங்க உனக்கு சரி என்று படுவதை நீ சொல்லிவிடு....சில நேரங்களில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்னு...அதனாலதான் இப்போது எல்லாம் என் மனதிற்கு சரி என்று பட்டால் உடனே சொல்லிவிடுகிறேன்” என அவன் சொன்னதை அவள் அவனுக்கே திருப்பி சொல்ல
இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று தெரிந்து இருந்தால் நான் அதை சொல்லியே இருக்க மாட்டேன் ரோஜா என மனதில் நினைத்தவன் .....”சரி சரி...இப்போது எதற்கு இந்த பேச்சு...இதற்குதான் சொன்னேன்...இந்த விவாகரத்து கேஸ் எல்லாம் எடுக்க வேண்டாம்னு....என சலித்து கொண்டவன் எனக்கு தலை வலிக்கிறது...ஒரு காபி அம்லு” என கேட்க
“அச்சோ சாரி அத்தான்....ஏற்கனவே நீங்க ஏதோ குழப்பத்தில் இருந்தீங்க...நானும் குழப்பி விட்டுட்டேன்.....சரி...சாரி...இதோ இப்போ கொண்டுவரேன்” என சொல்லிவிட்டு கீழே சென்றாள். 1
தேவாவின் மனமோ இப்போது நிலை இல்லாமல் தவித்து கொண்டு இருந்தது.வெகுநாட்களுக்கு பிறகு ஏதோ ஒரு பயம் மனதில் சூழ அந்த விஷயம் தன்னை,ராம் , பாட்டியை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றாலும் ஏனோ ஒரு அச்சம் மனதில் எழுந்தது. ரோஜா காபியோடு உள்ளே வந்ததும் “அம்லு இன்னைக்கு அன்னை குடில் போயிட்டு வரலாமா” என கேட்டான் தேவா.
“என்ன அத்தான் திடீர்னு” என்றவள் பின்னர் அவன் முகத்தை பார்த்ததும் “சரி அத்தான் இதோ கிளம்பறேன்” என்றாள்.
காரில் செல்லும் வழயில் தேவா ஏதும் பேசாமல் வர ரோஜாதான் பேசிகொண்டே வந்தாள். சிறிது நேரம் கழித்து “அத்தான் ஏன் அமைதியா வரீங்க” என அவள் கேட்க
அவன் சிரித்து “கொண்டே அப்டி எல்லாம் இல்லை...அதான் எனக்கு பதிலாக நீ பேசுகிறாயே” என்று சொன்னான்.
அவளோ “அத்தான் உங்களிடம் ஒரு முக்கியாமான விஷயம் சொல்லணும் என்றவள் நம்ம பட்டாபி இருக்கான் இல்லயா ...அவனை பற்றி என்ன நினைக்கிறீங்க” என கேட்டாள்.
அவனோ “என்ன ரோஜா அவனை உனக்கு அறிமுகபடுத்தியதே நான்தான் என்னிடமே அவனை பற்றி கேட்கிறாய்” என கிண்டலாக சொல்ல
“இல்லை அத்தான் நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்...இனியும் பட்டாபியை இப்படியே விடக்கூடாது ...அதான் என்றவள் அவளுடைய திட்டத்தை சொல்ல தேவாவோ என்ன ரோஜா இது ஒத்து வருமா” என கேட்டான்.
“எல்லாம் வரும் அத்தான்.தரணியிடம் சொன்னேன்.அவள்தான் இதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறாள்.நீ கவலை படாதே ...நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள்” என்றாள்.
“எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான் ரோஜா...இது எந்த அளவுக்கு சரியாகும்னு தோணலை.....அப்படியே விட்றேன் அவனை” என அவன் சொல்ல
“அப்படி எல்லாம் விடமுடியாது அத்தான்.தரணியிடம் கேட்டுவிட்டு தான் இந்த முடிவு எடுத்தேன்....அவனிடம் சொல்லவேண்டாம்.....அவனுக்கு சர்பரைசாக இருக்கட்டும்” என அவள் கண்கள் விரித்து சந்தோசமாக சொல்ல
அவளது சந்தோசத்தில் தன்னை தொலைத்தவன் மற்றவர்களுக்கு நல்லது மட்டுமே நினைக்கும் இவளை எந்த நிலையிலும் நான் இழக்க மாட்டேன் என மனதில் சூளுரைத்து கொண்டான்.
மறுநாள் காலையில் எப்போது போல் பட்டாபியும் தரணியும் வேலை பார்த்து கொண்டு இருக்க தேவா ஒரு வழக்கு சமபந்தமாக வெளியூர் சென்று இருந்தான்.
ரோஜாவின் குறும்பில் தரணியை பார்த்து மிரண்டு இருந்த பட்டாபி பின்னர் தரணியே தன்னை பற்றி சொன்ன பிறகு அவளுடன் நட்பாக பழக ஆரம்பித்தான் பட்டாபி.
ஒரு வழக்கு சமபந்தமாக சில விபரங்களை நாதனிடம் கொடுக்க சொல்லி இருந்தான் தேவா.பட்டாபி ஒரு அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டும் என்பதால் தரணியிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து இருந்தான்.அன்று அது போல் பேசியபிறகு நாதன் பலமுறை இங்கு வந்து சென்று இருக்கிறான். அவளிடம் பேசமாட்டானே தவிர கண்கள் அவளையே தொடரும்.
அன்று எப்போதும் போல் வேலை முடித்து விட்டு அவள் கிளம்பும் நேரத்தில் அலைபேசி ஒலிக்க எடுத்தவள் நாதன் தான் பேசினான்.
சிறிது நேரத்தில் தான் அங்கு வருவதாகவும் அந்த டாக்குமெண்டஸ்கலை எடுத்து வைக்க சொன்னான். தரணியும் காத்திருக்க சில நிமிடங்களில் வந்தவன் சில விபரங்களை அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டவன் “ரொம்ப தேங்க்ஸ் தரணி........எல்லா பேப்பர்சும் சரியா இருக்கு என்றவன்...நான் எதிர்பார்த்த மாதிரியே நீ இருக்க “என அவன் சமபந்தம் இல்லாமல் பேச
அவளோ என்ன சொல்கிறான் என புரியாமல் முழிக்க
அவள் முகத்தின் அருகில் வந்தவன் “இப்படி முழிக்காத தரணி...உன் முட்டைகண்ணுல நான் அப்படியே முழுகி போய்டறேன்.....இந்த கண்ணுதான் என்னை தூங்க விடாம தொந்தரவு பண்ணுது...அப்டியே அதை புடுங்கி என அவன் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டு இருக்க
“ஹே மிஸ்டர்...என்ன இது...ஆள் தெரியாம பேசிட்டு இருக்கீங்க” என அவள் கோபமாக சீர
அவனோ அவளிடம் நெருங்கி “இதுவரைக்கும் ஆள் யாருன்னு தெரியாம இருந்தது......ஆனா இப்போ என்னோட ஆள் நீ தானு முடிவு பண்ணிட்டேன்.......... உண்மையா சொன்னா உன்னை முதலில் பார்த்த உடனே என் மனம் என்னிடம் இல்லை தரணி......முதல் பார்வையிலே என்னை முழுவதுமாக வசியம் செய்து விட்டாய்” என அவன் தனது காதலை பற்றி சொல்லி கொண்டு இருக்க
“மிஸ்டர் எங்க பாஸோட நண்பர் என்கிற முறையில நான் மரியாதையா பேசறேன் இல்லை இந்நேரம்” என அவள் குனிந்து காலை பார்க்க
“முகம் பார்த்து பேசியவள்
ஏனோ வெட்கப்பட்டு
நிலம் பார்க்கிறாய் பெண்ணே”
என அவள் செருப்பை காட்டியதை மாற்றி அவன் சட்டென்று ஒரு கவிதை சொல்ல
தரணியோ கோபத்தில் அக்னி பார்வை வீச
“கவிதை...கவிதை டார்லிங்” என அவன் சொன்னது
“உன்னஈஈஈ” என அவள் கைகளை மடக்கி டென்ஷன் ஆக
அதற்குள் மீண்டும் பட்டாபி வந்து விட பேச்சுவார்த்தை தடைபட்டது.மனதிற்குள் அவனுக்கு நன்றி சொன்ன நாதன் அவனிடம் பேசிகொண்டு இருந்தான்.
கிளம்புபோது வேண்டுமென்றே அலைபேசியை எடுத்தவன் அப்போது அதில்
“எனகென பிறந்தவ இறக்கை கட்டி வளர்ந்தவ இவதான்” என்ற பாட்டு வர
அவளோ அவனை முறைக்க
நமட்டு சிரிப்புடன் கிளம்பினான் நாதன்.
ஒரு வாரமாக அம்மா மகன் இருவருக்கும் கண்ணுக்கு தெரியாத போராட்டம் நடந்து கொண்டு இருந்தது.
ரதியும் அதற்கு பின்பு அவனிடம் பேசமறுத்துவிட்டாள்.ரோஜாவும் தேவாவை மீறி எதுவும் செய்யமுடியாமல் தடுமாறி நின்றாள்.
அன்று வேலை சீக்கிரம் முடிந்துவிட வீட்டிற்கு வந்த ராம் அங்கு காவேரி கண்களில் கண்ணீருடன் சாமி அறையின் முன் அமர்ந்திருந்தார்.
உள்ளே நுழைந்தவன் அதை பார்த்ததும் மனம் வேதனைப்பட என்னம்மா நீங்க...... தேவையில்லாத எண்ணங்களையும் ,வீண் சம்பரதாயங்களை மனதில் வைத்து கொண்டு உங்களையும் வருத்திகிறீங்க என மனதிற்குள் புலம்பியவன் மெதுவாக அவரின் அருகில் சென்று அமர்ந்தான்.
கண்களில் வழிந்த நீரை துடைத்து விட அதுகூட தெரியாமல் தன்னை மறந்து அமர்ந்திருந்தார் காவேரி.
தாயை தன் தோளோடு சாய்த்து அவன் தட்டி கொடுக்க அந்த இடத்தில தாய் சேயாக மாறினார்.
சில மணித்துளிகள் கழித்த பின்பே கண் விழித்த காவேரி அருகில் ராம் அவளை பார்த்த படி அமர்ந்திருக்க அவனது தோளில் அவர் சாய்ந்திருக்க எதுவும் பேசாமல் அவன் கண்களியே பார்த்தவர் அதில் கண்ணீர் வந்து கொண்டு இருக்க இருவருமே மௌனத்தால் தங்கள் மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
“நான் சொல்வதை நீங்கள் நம்ப வில்லையா அம்மா” என அவன் மெதுவாக கேட்டதும்
அவரோ “உன்னை நம்பாமல் நான் யாரை நம்பபோகிறேன் ராம்.எனக்கு எல்லாமே நீதானே......ஆனால் நீயும் இப்போது” என அவர் வார்த்தை தடைபட மீண்டும் அழுகை தொடர்ந்தது.
அவனோ மிகவும் நிதனமாக “அம்மா ஆசைப்பட்ட பட்ட பொருள் கிடைக்கவில்லை என்றாலே நம்மால் தாங்கி கொள்ள முடியாது .அதிலும் விரும்பிய பெண் உறுதி வார்த்தை வரை வந்து சில தேவையில்லாத காரணங்களை கூறி திருமணத்தை நிறுத்தியது தான் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை அம்மா” என அவன் வேதனையுடன் சொல்ல
“அப்போ நான் சொல்வது உனக்கு தேவையில்லாத விஷியமாக தெரிகிறது அப்டிதானே ராம்” என அவர் கோபமாக கேட்டார்.
“அம்மா என்னம்மா இப்படி பேசறிங்க...இதுவரை நீங்கள் சொல்லி நான் மீறி பேசி இருக்கிறேனா....ஆனால் இந்த விஷியத்தில் “என அவன் இழுக்க
“ம்ம்ம் சொல்லு ராம் ....என்னை மீறி நீ முடிவு எடுக்க போகிறாய்...அதை தானே சொல்ல வருகிறாய் “ என அவரும் வாக்குவாதத்தில் இறங்க
“ஐயோ அம்மா நீங்கள் ஏன் இப்படி அவசரபடரிங்க......என்னால முடியலம்மா..... உங்க பேச்சை மீறவும் முடியாம,ரதியை மறக்கவும் முடியாம ரொம்ப வலிக்குதும்மா “ என அவன் மனம் நொந்து வேதனயுடன் சொன்னான்.
“இப்போது தெரிகிறதா ராம்.....ஆசைப்பட்ட பொருள் நமக்கு கிடைக்கலைனா அதோட வலி எப்படி இருக்கும்னு” என அவர் அழுத்தமான குரலில் சொல்ல
அம்மாஆஆ என அதிர்ந்து அவர் முகத்தை பார்த்தவன் “நீங்க என்ன சொல்ல வரீங்க” என புரியாமல் கேட்டான்.
அவரோ “இனி அதை சொல்லி பிரயோஜனம் இல்லை ...எந்த வலியும் அவரவருக்கு வந்தால் தான் அதன் வேதனை தெரிகிறது.”என சொல்லிவிட்டு அவர் எழுந்து உள்ளே சென்றார்.
“நீங்க என்ன சொல்றீங்க அம்மா” என கேட்டபடி அவர் பின்னாடியே சென்றவன்
அவர் நின்று திரும்பி முறைக்க
அவர் கையை பிடித்து “அம்மா இங்கே வாங்க” என அவரை சோபாவில் அமரவைத்தவன் அவர் அருகில் அமர்ந்து ..”இப்போ சொல்லுங்க அம்மா.....ஏதோ ஒன்றை நீங்க என்கிட்டே இருந்து மறைக்கிரிங்க......அதை நீங்க சொன்னாதானே தெரியும்.....
உங்கள் மனம் புண்படும்படி நான் எதவாது செய்து விட்டேனா ? எனக்கு எதுவும் தெரியவில்லை...இருந்தால் சொல்லுங்கள்...இந்த திருமணத்திற்காக கேட்கவில்லை......இந்த உலகத்திலே எல்லாரயும் விட நீங்க எனக்கு முக்கியம் அம்மா.....உங்கள் சந்தோசம் தான் என் சந்தோசம்.அதனால் சொல்லுங்க” என அவன் அவரை வற்புறுத்த
அவரோ “அதான் இப்போ சொல்கிறனே இந்த திருமணம் வேண்டாம் என்று ......நீதான் கேட்க மாட்டேன்கிறாய்” என அவர் பழையபடி ஆரம்பிக்க
“அம்மா இந்த திருமண பேச்சை விட்டு விடுங்கள்.....உங்களை மீறி எதுவும் நடக்காது. உங்கள் அனுமதி இல்லாமல் எதுவும் செய்யமாட்டேன்” என அவன் உறுதியுடன் கூறினான்..
“அப்படிதான் நானும் நினைத்து இருந்தேன் .ஆனால் ரோஜாவின் திருமணத்தின் போது தான் அது தவறு என எனக்கு புரிந்தது” என அவர் மெதுவாக தன அஸ்த்திரைத்தை எய்தார்.
“ரோஜாவின் திருமணமா.......அதில் என்ன நடந்தது.....எனக்கு ஒன்று புரியவில்லையே “ என அவன் குழம்பி போய் கேட்டவன் “புரியும்படி சொல்லுங்கம்மா” என கெஞ்சினான்.
அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்தவர் “என்னடா சொல்ல சொல்ற ....பிறந்ததில் இருந்து இவள் என் மருமகள் என மனதில் நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் நீங்க என்கிட்டே எதுவுமே சொல்லாம அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடிங்க...திருமணம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்கிட்டே சொல்றிங்க “..என அவர் ஆவேசமாக கேட்க
“ஐயோ அம்மா நீங்கள் நிஜமாதான் சொல்றிங்களா...நீங்க அன்னைக்கு சொல்லும்போதே நான் சும்மா விளையாட்டுக்கு சொல்றீங்கனு நினச்சேன்.....உங்க மனசில இப்படி ஒரு ஆசை இருந்ததா....ஆனா அம்மா என் மனசில் அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றவன் ரோஜா திருமணத்தை பற்றி உங்களிடம் முன்பே சொல்லாதது தவறுதான்...அப்போ இருந்த சூழ்நிலை அது போல் .....என்னால் சொல்ல முடியவில்லை...மேலும் நீங்கள் தேவா மாப்பிள்ளை என்றால் சந்தோசம் தான் படுவீர்கள் என்று நினைத்து கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டேன்....ஆனால் நீங்களோ இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.நான் உங்களிடம் திருமணத்தை பற்றி சொல்லாதது தவறுதான்...என்னை மன்னிச்சுடுங்க”....என்றான்.
ரதியின் திருமண பேச்சில் இருந்தே தேவா கொஞ்சம் குழம்பி போய் இருந்தான். யாரும் இல்லாமல் தனியாக தவித்து கொண்டு இருந்தவனுக்கு அணைத்து உறவுமாக வந்தவள் ரதி. அவளை தன் சொந்த தங்கை போல் தான் அவன் நினைத்து இருந்தான்.இந்த விதத்தில் ஒரு பிரச்சனை வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.இனி அடுத்தது என்ன செய்வது என அவன் யோசித்து கொண்டிருந்த வேளையில் ரோஜா அவளது வழக்கு சமபந்தமாக சில சந்தேகங்களை கேட்க அவன் அறைக்கு வந்தாள்.
“அத்தான் இது எனக்கு புரியலை” என சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தவள் அவன் சிந்தனையில் இருந்ததை பார்த்து “என்ன அத்தான் ...என்ன யோசனை” என கேட்டாள்.
அவனோ சிரித்து கொண்டே “ஒன்றும் இல்லை அம்லு என சொல்லி சமாளித்தவன் பின்னர் என்ன சந்தேகம் உனக்கு என்றான்..
வாணியின் கணவரிடம் இருந்து விவாகரத்திற்கு பிறகு நாம் ஜீவனாம்சம் வாங்க முடியுமா ? ஏன்னா இது வாணிதான் விவாகரத்து வேணும்னு கேட்டு இருக்கா ...அவனுக்கு இஷ்டம் இல்லை.....நம்ம வற்புறுத்தி வாங்கும்போது ஜீவனாம்சம் கிடைக்குமா என அவள் கேட்டதும்
“ஏன் ரோஜா ...அந்த பொண்ணுதான் நல்ல வேலையில இருக்குள்ள ...அப்புறம் எதற்கு ஜீவனாம்சம்..மேலும் குழந்தைகளும் இல்லை.இதற்கு தான் சொன்னேன் விவாகரத்து என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லைனு....இந்த காலத்து பசங்க எங்க சொன்னா கேட்கிறாங்க” என அவன் சலித்து கொள்ள
உடனே அவள் ஹஹஹாஹ் என சிரிக்க
“இப்போ எதுக்கு சிரிக்கிற நீ” என அவன் கேட்டதும்
“இல்லை நீங்க என்னமோ அந்த காலத்து ஆளு மாதிரியும் இப்போ இருக்க பசங்களை சொல்லிட்டு இருக்கீங்க” என்றாள்.
அவனும் சிரித்து கொண்டே “அப்படி இல்லை ....முடிந்த அளவு போராடவேண்டும்.....அதற்கு பின்பு தான் இது போன்ற முடிவு எடுக்க வேண்டும்” என்றான் தேவா.
உடனே அவள் “வேகமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை அத்தான். எதற்கு போராட வேண்டும்.....அந்த போராட்டத்தை ஆண்கள் செய்வார்களா?......பெண்கள் என்றாலே போராடத்தான் பிறந்தார்களா?.....இந்த சூழ்நிலை அவர்களுக்கு வந்தால் அவர்கள் போராடிக்கொண்டு இருப்பார்களா ? இவர்கள் எல்லா தவறுகளையும் செய்து விட்டு கடைசியில் சாரி என்ற ஒரு வார்த்தையில் அணைத்து தவறையும் மறந்து விட சொல்வார்கள்.பாதிக்க பட்ட பெண்ணும் எல்லாம் மறந்து என் கணவன் நல்லவன் என சொல்லி அவனுடன் வாழனும்....திருமணம் என்பததே ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் நம்பிக்கைதான் ராகன்.
என்னை பொறுத்தவரை நான் கொலை செய்தவனை கூட ஏற்றுகொள்ளலாம்....ஆனால் நம்பிக்கை மோசம் செய்தவனை மன்னிக்கவே முடியாது.வாணியின் கணவர் செய்தது நம்பிக்கை மோசம்.அதற்கான தண்டனை கண்டிப்பாக அவன் அனுபவித்தே ஆகவேணும்.உடலாலும் ,மனதாலும் ஏன் பணத்தாலும் அனுபவிக்கனும்.அதற்காகத்தான் கேட்கிறேன் ஜீவனாம்சம் வாங்கலாமா என்று “ என ஆக்ரோஷமாக கோபத்தில் முகம் சிவக்க தொண்டை நரம்புகள் புடைக்க அவள் பேச முதன் முறையாக இந்த ரோஜாவே அவன் இப்போது தான் பார்க்கிறான்..
இது வரை ரோஜா இதழின் மென்மையை மட்டுமே அவளிடம் பார்த்து கொண்டு இருந்தவன் முதன் முதலாக அதன் முட்களை பார்க்கிறான்.
அவளது கோபத்தில் ஒரு நியாயம் இருக்க அது அவனுக்கு புரிந்தாலும் அவனும் வக்கீல் அல்லவா...அதனால் “அப்படி இல்லை ரோஜா ...குடும்பம் எனபது இருவர் சமந்தபட்டது அல்ல......இதில இரண்டு பக்கத்தின் பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உறவினர்கள் மற்றும் நம் கலாச்சாரம் எல்லாம் அடங்கி இருகின்றது..இவர்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் அனைவரும் பாதிக்கபடுவர்...அதனால் தான் சொல்கிறேன்” என சொல்ல
“இது தான் ராகன் பெண்களுக்கு பிடித்த சாபகேடு.அவர்கள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு தேடினால் அதில் குடும்பம்,பாண்பாடு,கலாச்சாரம் எல்லாம் இணைந்து விடுகின்றது.இதே ஒரு ஆண் தேடினால் அதில் அவன் மட்டுமே இருக்கிறான்.அவனால் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடிகிறது.அதனால் தான் இன்று பல ஆண்கள் தவறு மேல் தவறு செய்கின்றனர்” என அவள் பொரிந்து தள்ள
பேச்சு வேறுபக்கம் திசை திரும்பவது உணர்ந்த தேவா “சரி சரி அம்லு...நீ எதுக்கு இவளோ ஆவேசபட்ற.......உனக்கு இது முதல் வழக்கு அப்டிங்கிறதால இப்படி எல்லாம் தோணுது.....இதைவிட பெரிய பிரச்சனைகள் எல்லாம் வரும்.அப்போது உனக்கு இதெல்லாம் சாதரணமாக தெரியும்” என அவளை சமாதனபடுத்தினான்.
“இல்லை அத்தான் என்னை பொறுத்தவரை கணவன் மனைவிக்குள் ரகசியங்கள் இருக்க கூடாது.முடிந்த வரை திருமணத்தின் போதே சொல்லிவிட வேண்டும்.இல்லை அவளுடன் வாழ தொடங்கியவுடன் அதை சொல்லிவிடவேண்டும்...அதை விட்டு மறைத்து சில காலம் குடும்பம் நடத்திவிட்டு பின்னர் சொல்வது அந்த பெண்ணை மிகவும் கேவலபடுத்தியது போல் ஆகும்.அதாவது நீ என்னுடன் வாழ்ந்துவிட்டாய்.இனி உனக்கு வேறு கதி இல்ல என்ற ஆணவத்தில் அது சொல்வது போல் இருக்கும்”....என அவள் அவளது கருத்துகளை சொல்ல தேவாவின் மனமோ ஒருநிமிடம் நின்று துடித்தது.
அவள் பேசிகொண்டிருக்க தேவாவோ விகிர்த்து போய் நின்று இருந்தான். சிறிது நேரம் பேசியவள் பின்னர் “என்ன அத்தான் அப்படியே நிற்கிரிங்க......என்னடா உங்க அம்லு இப்படி பேசாரானு ஆச்சரியமா இருக்கா...எல்லாம் உங்களை பார்த்து தான் அத்தான்....நீங்கதானே சொல்வீங்க உனக்கு சரி என்று படுவதை நீ சொல்லிவிடு....சில நேரங்களில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்னு...அதனாலதான் இப்போது எல்லாம் என் மனதிற்கு சரி என்று பட்டால் உடனே சொல்லிவிடுகிறேன்” என அவன் சொன்னதை அவள் அவனுக்கே திருப்பி சொல்ல
இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று தெரிந்து இருந்தால் நான் அதை சொல்லியே இருக்க மாட்டேன் ரோஜா என மனதில் நினைத்தவன் .....”சரி சரி...இப்போது எதற்கு இந்த பேச்சு...இதற்குதான் சொன்னேன்...இந்த விவாகரத்து கேஸ் எல்லாம் எடுக்க வேண்டாம்னு....என சலித்து கொண்டவன் எனக்கு தலை வலிக்கிறது...ஒரு காபி அம்லு” என கேட்க
“அச்சோ சாரி அத்தான்....ஏற்கனவே நீங்க ஏதோ குழப்பத்தில் இருந்தீங்க...நானும் குழப்பி விட்டுட்டேன்.....சரி...சாரி...இதோ இப்போ கொண்டுவரேன்” என சொல்லிவிட்டு கீழே சென்றாள். 1
தேவாவின் மனமோ இப்போது நிலை இல்லாமல் தவித்து கொண்டு இருந்தது.வெகுநாட்களுக்கு பிறகு ஏதோ ஒரு பயம் மனதில் சூழ அந்த விஷயம் தன்னை,ராம் , பாட்டியை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றாலும் ஏனோ ஒரு அச்சம் மனதில் எழுந்தது. ரோஜா காபியோடு உள்ளே வந்ததும் “அம்லு இன்னைக்கு அன்னை குடில் போயிட்டு வரலாமா” என கேட்டான் தேவா.
“என்ன அத்தான் திடீர்னு” என்றவள் பின்னர் அவன் முகத்தை பார்த்ததும் “சரி அத்தான் இதோ கிளம்பறேன்” என்றாள்.
காரில் செல்லும் வழயில் தேவா ஏதும் பேசாமல் வர ரோஜாதான் பேசிகொண்டே வந்தாள். சிறிது நேரம் கழித்து “அத்தான் ஏன் அமைதியா வரீங்க” என அவள் கேட்க
அவன் சிரித்து “கொண்டே அப்டி எல்லாம் இல்லை...அதான் எனக்கு பதிலாக நீ பேசுகிறாயே” என்று சொன்னான்.
அவளோ “அத்தான் உங்களிடம் ஒரு முக்கியாமான விஷயம் சொல்லணும் என்றவள் நம்ம பட்டாபி இருக்கான் இல்லயா ...அவனை பற்றி என்ன நினைக்கிறீங்க” என கேட்டாள்.
அவனோ “என்ன ரோஜா அவனை உனக்கு அறிமுகபடுத்தியதே நான்தான் என்னிடமே அவனை பற்றி கேட்கிறாய்” என கிண்டலாக சொல்ல
“இல்லை அத்தான் நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்...இனியும் பட்டாபியை இப்படியே விடக்கூடாது ...அதான் என்றவள் அவளுடைய திட்டத்தை சொல்ல தேவாவோ என்ன ரோஜா இது ஒத்து வருமா” என கேட்டான்.
“எல்லாம் வரும் அத்தான்.தரணியிடம் சொன்னேன்.அவள்தான் இதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறாள்.நீ கவலை படாதே ...நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள்” என்றாள்.
“எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான் ரோஜா...இது எந்த அளவுக்கு சரியாகும்னு தோணலை.....அப்படியே விட்றேன் அவனை” என அவன் சொல்ல
“அப்படி எல்லாம் விடமுடியாது அத்தான்.தரணியிடம் கேட்டுவிட்டு தான் இந்த முடிவு எடுத்தேன்....அவனிடம் சொல்லவேண்டாம்.....அவனுக்கு சர்பரைசாக இருக்கட்டும்” என அவள் கண்கள் விரித்து சந்தோசமாக சொல்ல
அவளது சந்தோசத்தில் தன்னை தொலைத்தவன் மற்றவர்களுக்கு நல்லது மட்டுமே நினைக்கும் இவளை எந்த நிலையிலும் நான் இழக்க மாட்டேன் என மனதில் சூளுரைத்து கொண்டான்.
மறுநாள் காலையில் எப்போது போல் பட்டாபியும் தரணியும் வேலை பார்த்து கொண்டு இருக்க தேவா ஒரு வழக்கு சமபந்தமாக வெளியூர் சென்று இருந்தான்.
ரோஜாவின் குறும்பில் தரணியை பார்த்து மிரண்டு இருந்த பட்டாபி பின்னர் தரணியே தன்னை பற்றி சொன்ன பிறகு அவளுடன் நட்பாக பழக ஆரம்பித்தான் பட்டாபி.
ஒரு வழக்கு சமபந்தமாக சில விபரங்களை நாதனிடம் கொடுக்க சொல்லி இருந்தான் தேவா.பட்டாபி ஒரு அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டும் என்பதால் தரணியிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து இருந்தான்.அன்று அது போல் பேசியபிறகு நாதன் பலமுறை இங்கு வந்து சென்று இருக்கிறான். அவளிடம் பேசமாட்டானே தவிர கண்கள் அவளையே தொடரும்.
அன்று எப்போதும் போல் வேலை முடித்து விட்டு அவள் கிளம்பும் நேரத்தில் அலைபேசி ஒலிக்க எடுத்தவள் நாதன் தான் பேசினான்.
சிறிது நேரத்தில் தான் அங்கு வருவதாகவும் அந்த டாக்குமெண்டஸ்கலை எடுத்து வைக்க சொன்னான். தரணியும் காத்திருக்க சில நிமிடங்களில் வந்தவன் சில விபரங்களை அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டவன் “ரொம்ப தேங்க்ஸ் தரணி........எல்லா பேப்பர்சும் சரியா இருக்கு என்றவன்...நான் எதிர்பார்த்த மாதிரியே நீ இருக்க “என அவன் சமபந்தம் இல்லாமல் பேச
அவளோ என்ன சொல்கிறான் என புரியாமல் முழிக்க
அவள் முகத்தின் அருகில் வந்தவன் “இப்படி முழிக்காத தரணி...உன் முட்டைகண்ணுல நான் அப்படியே முழுகி போய்டறேன்.....இந்த கண்ணுதான் என்னை தூங்க விடாம தொந்தரவு பண்ணுது...அப்டியே அதை புடுங்கி என அவன் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டு இருக்க
“ஹே மிஸ்டர்...என்ன இது...ஆள் தெரியாம பேசிட்டு இருக்கீங்க” என அவள் கோபமாக சீர
அவனோ அவளிடம் நெருங்கி “இதுவரைக்கும் ஆள் யாருன்னு தெரியாம இருந்தது......ஆனா இப்போ என்னோட ஆள் நீ தானு முடிவு பண்ணிட்டேன்.......... உண்மையா சொன்னா உன்னை முதலில் பார்த்த உடனே என் மனம் என்னிடம் இல்லை தரணி......முதல் பார்வையிலே என்னை முழுவதுமாக வசியம் செய்து விட்டாய்” என அவன் தனது காதலை பற்றி சொல்லி கொண்டு இருக்க
“மிஸ்டர் எங்க பாஸோட நண்பர் என்கிற முறையில நான் மரியாதையா பேசறேன் இல்லை இந்நேரம்” என அவள் குனிந்து காலை பார்க்க
“முகம் பார்த்து பேசியவள்
ஏனோ வெட்கப்பட்டு
நிலம் பார்க்கிறாய் பெண்ணே”
என அவள் செருப்பை காட்டியதை மாற்றி அவன் சட்டென்று ஒரு கவிதை சொல்ல
தரணியோ கோபத்தில் அக்னி பார்வை வீச
“கவிதை...கவிதை டார்லிங்” என அவன் சொன்னது
“உன்னஈஈஈ” என அவள் கைகளை மடக்கி டென்ஷன் ஆக
அதற்குள் மீண்டும் பட்டாபி வந்து விட பேச்சுவார்த்தை தடைபட்டது.மனதிற்குள் அவனுக்கு நன்றி சொன்ன நாதன் அவனிடம் பேசிகொண்டு இருந்தான்.
கிளம்புபோது வேண்டுமென்றே அலைபேசியை எடுத்தவன் அப்போது அதில்
“எனகென பிறந்தவ இறக்கை கட்டி வளர்ந்தவ இவதான்” என்ற பாட்டு வர
அவளோ அவனை முறைக்க
நமட்டு சிரிப்புடன் கிளம்பினான் நாதன்.
ஒரு வாரமாக அம்மா மகன் இருவருக்கும் கண்ணுக்கு தெரியாத போராட்டம் நடந்து கொண்டு இருந்தது.
ரதியும் அதற்கு பின்பு அவனிடம் பேசமறுத்துவிட்டாள்.ரோஜாவும் தேவாவை மீறி எதுவும் செய்யமுடியாமல் தடுமாறி நின்றாள்.
அன்று வேலை சீக்கிரம் முடிந்துவிட வீட்டிற்கு வந்த ராம் அங்கு காவேரி கண்களில் கண்ணீருடன் சாமி அறையின் முன் அமர்ந்திருந்தார்.
உள்ளே நுழைந்தவன் அதை பார்த்ததும் மனம் வேதனைப்பட என்னம்மா நீங்க...... தேவையில்லாத எண்ணங்களையும் ,வீண் சம்பரதாயங்களை மனதில் வைத்து கொண்டு உங்களையும் வருத்திகிறீங்க என மனதிற்குள் புலம்பியவன் மெதுவாக அவரின் அருகில் சென்று அமர்ந்தான்.
கண்களில் வழிந்த நீரை துடைத்து விட அதுகூட தெரியாமல் தன்னை மறந்து அமர்ந்திருந்தார் காவேரி.
தாயை தன் தோளோடு சாய்த்து அவன் தட்டி கொடுக்க அந்த இடத்தில தாய் சேயாக மாறினார்.
சில மணித்துளிகள் கழித்த பின்பே கண் விழித்த காவேரி அருகில் ராம் அவளை பார்த்த படி அமர்ந்திருக்க அவனது தோளில் அவர் சாய்ந்திருக்க எதுவும் பேசாமல் அவன் கண்களியே பார்த்தவர் அதில் கண்ணீர் வந்து கொண்டு இருக்க இருவருமே மௌனத்தால் தங்கள் மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
“நான் சொல்வதை நீங்கள் நம்ப வில்லையா அம்மா” என அவன் மெதுவாக கேட்டதும்
அவரோ “உன்னை நம்பாமல் நான் யாரை நம்பபோகிறேன் ராம்.எனக்கு எல்லாமே நீதானே......ஆனால் நீயும் இப்போது” என அவர் வார்த்தை தடைபட மீண்டும் அழுகை தொடர்ந்தது.
அவனோ மிகவும் நிதனமாக “அம்மா ஆசைப்பட்ட பட்ட பொருள் கிடைக்கவில்லை என்றாலே நம்மால் தாங்கி கொள்ள முடியாது .அதிலும் விரும்பிய பெண் உறுதி வார்த்தை வரை வந்து சில தேவையில்லாத காரணங்களை கூறி திருமணத்தை நிறுத்தியது தான் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை அம்மா” என அவன் வேதனையுடன் சொல்ல
“அப்போ நான் சொல்வது உனக்கு தேவையில்லாத விஷியமாக தெரிகிறது அப்டிதானே ராம்” என அவர் கோபமாக கேட்டார்.
“அம்மா என்னம்மா இப்படி பேசறிங்க...இதுவரை நீங்கள் சொல்லி நான் மீறி பேசி இருக்கிறேனா....ஆனால் இந்த விஷியத்தில் “என அவன் இழுக்க
“ம்ம்ம் சொல்லு ராம் ....என்னை மீறி நீ முடிவு எடுக்க போகிறாய்...அதை தானே சொல்ல வருகிறாய் “ என அவரும் வாக்குவாதத்தில் இறங்க
“ஐயோ அம்மா நீங்கள் ஏன் இப்படி அவசரபடரிங்க......என்னால முடியலம்மா..... உங்க பேச்சை மீறவும் முடியாம,ரதியை மறக்கவும் முடியாம ரொம்ப வலிக்குதும்மா “ என அவன் மனம் நொந்து வேதனயுடன் சொன்னான்.
“இப்போது தெரிகிறதா ராம்.....ஆசைப்பட்ட பொருள் நமக்கு கிடைக்கலைனா அதோட வலி எப்படி இருக்கும்னு” என அவர் அழுத்தமான குரலில் சொல்ல
அம்மாஆஆ என அதிர்ந்து அவர் முகத்தை பார்த்தவன் “நீங்க என்ன சொல்ல வரீங்க” என புரியாமல் கேட்டான்.
அவரோ “இனி அதை சொல்லி பிரயோஜனம் இல்லை ...எந்த வலியும் அவரவருக்கு வந்தால் தான் அதன் வேதனை தெரிகிறது.”என சொல்லிவிட்டு அவர் எழுந்து உள்ளே சென்றார்.
“நீங்க என்ன சொல்றீங்க அம்மா” என கேட்டபடி அவர் பின்னாடியே சென்றவன்
அவர் நின்று திரும்பி முறைக்க
அவர் கையை பிடித்து “அம்மா இங்கே வாங்க” என அவரை சோபாவில் அமரவைத்தவன் அவர் அருகில் அமர்ந்து ..”இப்போ சொல்லுங்க அம்மா.....ஏதோ ஒன்றை நீங்க என்கிட்டே இருந்து மறைக்கிரிங்க......அதை நீங்க சொன்னாதானே தெரியும்.....
உங்கள் மனம் புண்படும்படி நான் எதவாது செய்து விட்டேனா ? எனக்கு எதுவும் தெரியவில்லை...இருந்தால் சொல்லுங்கள்...இந்த திருமணத்திற்காக கேட்கவில்லை......இந்த உலகத்திலே எல்லாரயும் விட நீங்க எனக்கு முக்கியம் அம்மா.....உங்கள் சந்தோசம் தான் என் சந்தோசம்.அதனால் சொல்லுங்க” என அவன் அவரை வற்புறுத்த
அவரோ “அதான் இப்போ சொல்கிறனே இந்த திருமணம் வேண்டாம் என்று ......நீதான் கேட்க மாட்டேன்கிறாய்” என அவர் பழையபடி ஆரம்பிக்க
“அம்மா இந்த திருமண பேச்சை விட்டு விடுங்கள்.....உங்களை மீறி எதுவும் நடக்காது. உங்கள் அனுமதி இல்லாமல் எதுவும் செய்யமாட்டேன்” என அவன் உறுதியுடன் கூறினான்..
“அப்படிதான் நானும் நினைத்து இருந்தேன் .ஆனால் ரோஜாவின் திருமணத்தின் போது தான் அது தவறு என எனக்கு புரிந்தது” என அவர் மெதுவாக தன அஸ்த்திரைத்தை எய்தார்.
“ரோஜாவின் திருமணமா.......அதில் என்ன நடந்தது.....எனக்கு ஒன்று புரியவில்லையே “ என அவன் குழம்பி போய் கேட்டவன் “புரியும்படி சொல்லுங்கம்மா” என கெஞ்சினான்.
அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்தவர் “என்னடா சொல்ல சொல்ற ....பிறந்ததில் இருந்து இவள் என் மருமகள் என மனதில் நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் நீங்க என்கிட்டே எதுவுமே சொல்லாம அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடிங்க...திருமணம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்கிட்டே சொல்றிங்க “..என அவர் ஆவேசமாக கேட்க
“ஐயோ அம்மா நீங்கள் நிஜமாதான் சொல்றிங்களா...நீங்க அன்னைக்கு சொல்லும்போதே நான் சும்மா விளையாட்டுக்கு சொல்றீங்கனு நினச்சேன்.....உங்க மனசில இப்படி ஒரு ஆசை இருந்ததா....ஆனா அம்மா என் மனசில் அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றவன் ரோஜா திருமணத்தை பற்றி உங்களிடம் முன்பே சொல்லாதது தவறுதான்...அப்போ இருந்த சூழ்நிலை அது போல் .....என்னால் சொல்ல முடியவில்லை...மேலும் நீங்கள் தேவா மாப்பிள்ளை என்றால் சந்தோசம் தான் படுவீர்கள் என்று நினைத்து கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டேன்....ஆனால் நீங்களோ இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.நான் உங்களிடம் திருமணத்தை பற்றி சொல்லாதது தவறுதான்...என்னை மன்னிச்சுடுங்க”....என்றான்.