- Joined
- Aug 2, 2021
- Messages
- 145
படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை ...... என்னதான் தரணி, பட்டாபி என அவளுக்கு தைரியம் சொன்னாலும் அவள் மனம் அவனின் வார்த்தைக்காக ஏங்கியது....அவள் ஆரம்பத்தில் இந்த வழக்கில் சோர்ந்து நின்ற போது எல்லாம் அவன் வழக்கு சம்பந்தமாக பேசவில்லை என்றாலும் அவன் அருகில் வந்து நின்றாலே அவளுக்கு தைரியம் தானாக வந்துவிடும்......அவனும் எதுவும் பேசாமல் அவளது தோளில் கைபோட்டு கண்ணாடி முன் சென்று நிற்ப்பான்..என்னில் பாதி நீ.....எப்போதும் உனக்கு நான் இருக்கிறேன் என வார்த்தை சொல்லாமலே அந்த உணர்வை அவளுக்குள் ஏற்படுத்தி கொடுப்பான்.ஏனோ அவள் மனம் அதிகமாக இன்று அவனை தேடியது.
பழைய நினைவுகள் மனதில் வர அழுது கொண்டே படுத்து இருந்தாள் ரோஜா.....விடிகாலை பொழுது அவளுக்கு அலைபேசி வர எடுத்து காதில் வைத்தவள் எதிர்புறத்தில் வந்த தகவலை கேட்டு “எந்த மருத்துவமனை” என விசாரித்தவள் எழுந்து வேகமாக கிளம்பினாள்..
கீழே வந்தவள் காவேரியை பார்த்தது “அத்தை ராம் எங்கே என கேட்க அவன் ஜிம்க்கு போயிருக்கான் என்றதும் ...சரி அத்தை ஒரு அவசர வேலை...மருத்துவமனை வரைக்கும் போயிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு வேகமாக சென்றாள்.
உள்ளே நுழைந்ததும் மனம் படபடவென அடித்து கொள்ள வேகமாக நடந்தவள் அக்கா என அழைப்பு கேட்க திரும்பியவள் அங்கு சிறு பெண் அழுது கொண்டு நின்று இருந்தாள்.
“என்னாச்சு சுமதி...இப்போ எப்படி இருக்காங்க” என கேட்டபடி உள்ளே சென்றவள் அங்கு கை கால்கள் எல்லாம் கட்டு போட்டு படுத்து இருந்தாள் வாணி.
“ அய்யோ என்ன வாணி இது......யார் உன்னை இப்படி பண்ணது”...என அவள் பதறி கேட்க
அதற்குள் அவளது தங்கை “அந்த ஆள்தான் அக்கா இப்படி பண்ணான்.நேத்து இரவு வீட்டிற்கு வந்து பயங்கிற சண்டை...டைவேர்ஸ் பண்ணா என் மானமே போய்டும்.......நான் இப்படி இனி பண்ணமாட்டேனு கால்ல விழுந்து அழுதான்...அக்கா அதற்கு ஒத்துக்க மாட்டேனு சொல்லிட்டாங்க.....ஜீவனாம்சம் தரமுடியாது......அதை வேண்டாம்னு சொல்லு அப்டின்னு கெஞ்சினான்....அதற்கும் அக்கா முடியாதுன்னு சொல்லிட்டாங்க.....உடனே கோபம் வந்து அருகில் இருந்த பூ ஜாடியை எடுத்து அடிச்சுட்டான்.... நாங்க யாருமே இதை எதிர்பார்க்கலை...... அக்கா கத்தின சத்தம் கேட்டு பக்கத்துல இருக்கிறவங்க வரதுக்குள்ள அவன் ஓடிட்டான்.இப்போ காலையில் இருந்து அம்மாவுக்கு போன் பண்ணி வழக்கு வாபஸ் வாங்க சொல்லு......இல்ல மத்த பொண்ணுங்களுக்கும் இதே நிலை தான் அப்டின்னு மிரட்டிட்டு இருக்கான்.....எங்களுக்கு ரொம்ப பயமா இருக்குக்கா” என சொல்லி அழுக
அதை கேட்ட ரோஜாவின் நரம்புகள் துடிக்க கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தாள்.“என்ன துணிச்சல் அவனுக்கு.......தப்பு செஞ்சதும் இல்லாம இப்படி அடிச்சு போட்டு மிரட்டவும் செய்யறனா என சொன்னவள் நீங்க கவலை படாதீங்க ....அவனா நானான்னு பார்க்கிறேன் ” என சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினாள்.
மனம் கோபத்தில் கொந்தளிக்க ...”ஆம்பிளை என்ற திமிர் அவனுக்கு ...முதலில் தீர்ப்பு வரட்டும் ...அதற்கு பின் அவன் மீது ராமிடம் சொல்லி ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ள வேண்டும்” என புலம்பிகொண்டே ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தவள் எதிரில் இவளை நோக்கி இரு சக்கர வாகனத்தில் இருவர் வேகமாக வர, அவளோ அவர்களுக்கு வழி விட்டு ஓரமாக வர ஆனால் அவர்கள் நகராமல் அவளையே நோக்கி வந்தனர்.
அவள் சுதாரித்து நகர்வதர்குள் இடிப்பது போல் அருகில் வந்ததவர்கள் அவளை நோக்கி ஏதோ வீச அவளோ “ஹே என்ன பண்ற” என கத்தி ஒதுங்கும் முன் இருவருக்கும் நடுவில் மூன்றாவதாக ஒரு வண்டி நுழைந்து அவளை தள்ள நூலிலையில் இவள் தப்பிக்க தடுமாறி விழுந்ததவள் அதிர்ச்சியில் அப்படியே மயக்கம் அடைந்தாள்.
அதன் பின் அவள் கண்விழித்து பார்க்க மருத்துவமனையில் இருந்தாள்.அவளை சுற்றி ரதி ராம் அனைவரும் நின்று இருக்க அவளோ என்னாச்சு ராம் எனக்கு என கேட்டவள் வேகமாக எழ முயற்சி பண்ண .”..பொறு...பொறு ...மருந்தோட வேகம் ஒரு அரைமணி நேரம் அப்டிதான் இருக்கும்...ஒன்னும் ஆகலை ...ரோட்ல ஒரு சின்ன ஆக்சிடென்ட்...நல்லவேளை யாருக்கும் ஏதும் பிரச்சினைஇல்லை” என சொன்னவன் உன்னை என்னிடம் சொல்லாமல் வெளியே போகாதேனு சொன்னேன்ல......இப்போ பாரு என எரிச்சலுடன் ராம் திட்ட
இல்லை ராம்...காலையில நீ ஜிம்க்கு போய்ட்ட...மேலும் நீதிமன்றத்திற்கு போகும்போது தானே சொன்ன.....இப்போ என்ன ஆகபோகுதுன்னு போனேன் ...ஆனால் ராம் அதை இப்போ நினச்சாலும் பயமா இருக்கு என்றாள்.
அதற்குதான் நான் படிச்சு படிச்சு சொன்னேன்....இப்போ பார் என அவன் மீண்டும் சொல்ல
“ இல்ல ராம்...... நான் வாணிய பார்த்திட்டு வண்டில வந்திட்டு இருந்தேன் .......எதிர்ல வண்டியில ஒருத்தன் இல்ல இரண்டு பேர் வேகமா என்னை நோக்கியே வந்தாங்க...நான் நகர்ந்து தான் போனேன் ...ஆனா என்னை பார்த்தே வந்தாங்க ......... அவங்க கிட்ட வந்து என்னமோ எடுத்த மாதிரி இருந்தது.......... அப்போ எதோ ஒருத்தன் என்னை தள்ளிவிட்டானா...இல்லை என் மேல விழுந்தானணு தெரியலை...கீழே சாஞ்சுட்டேன்.....அதிர்ச்சியில அப்படியே மயக்கம் வந்திடுச்சு....என்ன நடந்தது அங்கனு தெரியலை .. ....அவன் மட்டும் என்னை தள்ளி விடலைனா இந்நேரம் நான் எப்டின்னு எனக்கே தெரியலை” என அவள் சொல்ல
“அப்படி எல்லாம் சொல்லாதே” ரோஜா என வேகமாக அவள் வாயை பொத்திய காவேரி” இனி அதை பற்றி பேசாதே” என்றார்.
“சரிம்மா நீங்க பார்த்துக்குங்க .....இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டிற்கு போய்டலாம்......எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ......நான் கிளம்பறேன்” என ராம் சொல்ல
என்னது கிளம்பறியா என்றவள் “ராம் உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்......அதுக்கு முன்னாடி நான் இப்போ நீதி மன்றத்திற்கு போய் ஆகணும்” என்றாள் ரோஜா.
காவேரியோ “இந்த நிலைமையில் நீதி மன்றமா ...அதெல்லாம் வேண்டாம்...நீ முதல்ல வீட்ல வந்து ஓய்வு எடு” என அவர் அதட்டினார்.
“இல்லை அத்தை...இன்னைக்குதான் வாணி கேஸ் தீர்ப்பு.... நான் போகணும்” என பிடிவாதம் பிடித்து கைகளில் சிறு கட்டோடு கிளம்பினாள் ரோஜா.
நடந்த விஷயம் தெரியாமல் அவளது வரவை தரணியும் பட்டாபியும் எதிர்பார்த்து இருந்தனர்...அவள் வந்த உடன் அவள் நிலையை பார்த்ததும் என்ன ஆச்சு என்று பதறி விசாரிக்க நடந்தை சொன்னவள் “அந்த ஆள் மட்டும் நடுவில் வரலைனா நான் இப்போது இங்கு இல்லை என்றவள் இந்த கேஸ் முடிஞ்சா உடனே முதல்ல அந்த ஆளை பார்த்து நன்றி சொல்லணும்” என்று சொன்னாள்.
“உனக்கு அவனை அடையாளம் தெரியுமா” என தரணி கேட்க ...”இல்லை அவன் ஹெல்மட் போட்டு இருந்தான்.ராமிடம் சொன்னால் கண்டு பிடித்து சொல்லிடுவான்” என்றாள்.
பின்னர் வாணியை பற்றி சொன்னவள் அதற்கும் அவன் மேல் கேஸ் போட வேண்டும் என்றாள்.
அதற்குள் வாணியின் வழக்கு விசாரணைக்கு வர அனைவரும் உள்ளே சென்றனர்.
அங்கு நீதிபதி இன்று வாணியின் வழக்கு விபரங்கள் எல்லாம் முடிந்து தீர்ப்பு சொல்லபடுகிறது.குற்றம் சாட்டப்பட்ட வாணியின் கணவருக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை.வழக்கு தொடுத்தவர்க்கு மட்டுமே இதில் விருப்பம்.ஆனால் விவாகரத்து என்பது இருவரும் ஒரு மனதுடன் பிரிந்து வாழ ஒத்துழைக்க வேண்டும்......இல்லயெனில் ஒருவரின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிருபிக்கவேண்டும். பெரும்பாலும் விவாகரத்தை இந்த நீதி மன்றம் ஊக்குவிப்பது இல்லை....பேச்சுவார்த்தையின் மூலம் கணவன் மனைவி இருவரையும் சரி செய்யவே முயல்கிறது........அதையும் மீறி இருநபர்களில் ஒருவரின் உணர்வுகள் உரிமைகள் பாதிக்கப்டும்போது அப்போது பாதிக்கப்பட்ட நபருக்கு கண்டிப்பாக இந்த நீதி மன்றம் நீதி வழங்கும். அந்த வகையில் இந்த வழக்கு இரண்டாவதாக சொன்ன கருத்தின் அடிபடையில் வழக்கு தொடுத்த வாணி அவரது கணவரால் பல தொல்லைகளுக்கு ஆளாகி இருப்பது வக்கீலின் வாதத்தில் இருந்து தெரியவருகிறது.
கழுத்தில் தாலி ஏறிவிட்டால் அதை கட்டியவன் எது செய்தாலும் அமைதியாக இருக்கவேணும் என்ற பெண்களின் மனப்பாங்கை பலர் தவறாக புரிந்து கொண்டு தவறு செய்கின்றார்,அது போன்ற ஆண்களை வாணியை போன்று ஒரு சிலர்தான் துணிந்து அவர்களுக்கு தண்டனை பெற்று தருகின்றனர்.. எனவே பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டும் .அந்த பெண்ணின் மன உணர்வுகளை நீதிமன்றத்தில் மிக திறமையாக எடுத்து சொல்லிய வக்கீல் வாதத்தாலும் இந்த வழக்கில் வழக்கு தொடுத்த வாணிக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி அவர் கேட்கும் ஜீவனாமசத்தையும் தருமாறு இந்த நீதி மன்றம் ஆணையிடுகிறது.தவறும் பட்சத்தில் அவருக்கு சிறை தண்டனை விதிக்க இந்த நீதி மன்றம் உத்தரவிடுகிறது என சொல்லி முடித்தார்.
ரோஜாவிற்க்கோ முதன் முதலில் தான் படித்த படிப்பிற்கு தான் பெற்று தந்த மரியாதை என்ற மனநிறைவுடன் நின்றவள் அவள் மனகண்ணில் என் பேத்தின்னு நிருபிச்சுட்ட ரோஜா என்று தாத்தாவின் வார்த்தை ஒலித்தது..வேகமாக அவள் அருகில் வந்த தரணி பட்டாபி என அனைவரும் அவளை வாழ்த்த அனைவர்க்கும் நன்றி சொல்லியபடி வேகமாக வெளியே வந்தவள் நேராக அன்னை இல்லத்திற்கு தன்னை அழைத்து செல்லும்படி பட்டாபியிடம் கூறினாள் ரோஜா.
அவள் அன்னை இல்லம் சென்றதும் அங்கு உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் பணிபுரியும் அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல உடன் வந்த ரோஜாவிற்க்கே ஆச்சரியமாக இருந்தது.இப்போது தானே தீர்ப்பு வந்தது...அதற்குள் எப்படி என யோசித்தவள்
“மேடம் இங்க வாங்க” என ஒருவர் அழைக்க
அங்கு சென்றவள் அங்கு ஒரு புதிய அறை திறப்பு விழாவிர்க்கான அலங்காரத்துடன் இருக்க ...”இதை இப்போ நீங்க தான் திறக்கனும்” என்றனர் அவர்கள்.என்னது இது என கேட்பதற்குள் கையில் கத்தரிகோலை கொடுத்துவிட ரிப்பனை கட் பண்ணி அந்த அறையை திறந்தவள் அதில் அவளின் தாத்தா படம் பெரிய அளவில் வைக்க பட்டு பெண்களுக்கான இலவச சட்டஉதவி அலுவலகம்...நிர்வாகி mrs ரோஜா BL என்று இருந்தது.
இதை எதிர்பார்க்காத ரோஜா யார் இதெல்லாம் செஞ்சது என்றதும் “நாம் சார் தான் மேடம்........ஒரு வாரத்திற்கு முன்பே ரெடி பண்ணிட்டோம்.உங்கள் முதல் வெற்றிக்கு சாரின் சின்ன பரிசு அப்டின்னு சொல்லிட்டு இருந்தார்” என்றார் ஒருவர்.
அவளோ என்ன சொல்வது என தெரியாமல் அப்படியே நிற்க அப்போதுதான் தான் இங்கு வந்த காரியம் நினைவிற்கு வர வேகமாக தேவாவின் அறையை நோக்கி சென்றவள் கதவின் அருகே சென்று பின்னர் திரும்பி “அச்சோ பூ வாங்காம வந்திட்டேன்” என்றவள் பட்டாபி என அழைக்கும் முன் ரோஜா இதழ்கள் அவள் கைகளில் இருந்தன.....
அவள் அதை வியப்போடு பார்க்க....... “சார் நேற்றே சொல்லி இருந்தார் மேடம் ,,,,ஜெயிச்ச உடனே மேடம் இங்க தான் வருவாங்க அப்போ இதை அவங்களிடம் கொடுங்க” என்று சொன்னார் என்றனர்.
அவளோ எதுவும் பேசாமல் அதை வாங்கியவள் நேராக தேவாவின் தாய் தந்தையரின் படத்தின் முன் வைத்து விழுந்து வணங்கினாள்.அவள் முன்பே நினைத்து இருந்தாள் ...அவள் மனம் தளரும்போது எல்லாம் இங்கு வந்து இந்த படத்தின் முன் சில மணித்துளிகள் அமர்ந்து விட்டு செல்வாள்.ஏனோ வெற்றி பெற்ற உடன் இங்கே வரணும் என்று தோன உடனே புறப்பட்டு வந்தாள்.ஆனால் தேவாவோ அவளது எண்ணத்தை முன்பே கணித்து அதற்க்கு ஏற்றாய் போல் ஏற்பாடு செய்து இருந்தான்.
ரோஜாவிற்க்கோ என்ன சொல்வது என்றே புரியவில்லை......தன்னை இந்த அளவு அவன் கவனித்து இருக்கிறானா.......என் மனதில் இருப்பதை எப்படி அப்படியே செயல்படுத்தி இருக்கிறான் என் ராகன் என பல நாட்களுக்கு பிறகு அந்த வார்த்தையை உச்சரித்தவள் அப்போது அலைபேசி மணி ஒலிக்க எடுத்தவள் பாட்டி அழைத்து இருந்தார்.
காதில் வைத்ததும் “வாழ்த்துக்கள் ரோஜா என்றவர் என் மனம் ரொம்ப சந்தோசமா இருக்கு...என் பேத்தியினால் ஒரு பெண்ணின் வாழக்கை சீரழிவில் இருந்து காப்பாற்ற பட்டிருக்கு..... நினைக்கும்போதே பெருமையா இருக்கு ரோசா என்றவர் ............நான் கூட விவாகரத்து கேஸ் அப்டின உடனே கொஞ்சம் கஷ்டமா இருந்தது.ஆனா தேவா தம்பிதான் விளக்கமா எடுத்து சொல்லுச்சு....;உன் தாத்தாகண்டிப்பா மேல இருந்து இத பார்த்து சந்தோசபட்டிருப்பார்” என்றார்.
அதற்குள் பார்வதி சேகர் என அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல அவளோ சந்தோசத்தில்” யாருப்பா உங்களுக்கு நான் ஜெயிச்சது சொன்னது ....... ராம் மாம்ஸ் சொன்னாறா “ என கேட்டாள்.
“இல்லம்மா அவன் சொல்லலை...மாப்பிள்ளை நேற்றே போன் பண்ணி சொல்லிட்டார்.நாளை தீர்ப்பு......எப்படியும் உங்க பொண்ணு ஜெய்ச்சுடுவா......நீங்க பதினோரு மணிக்கு போன் பண்ணுங்க அப்டின்னு சொன்னார்” என சொல்ல தன் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையை கண்டு வாயடைத்து நின்றாள் ரோஜா.
இங்கு பலரும் அவனை பற்றி சொல்ல ஆனால் இந்த நிகழ்வுக்கு காரணமானவன் அங்கு இல்லை.பார்வைகளை சுழல விட்டவள் “எங்க உங்க சாரை காணோம்” என கேட்டாள்
“தெரியலை மேடம்....நாங்களும் காலையில் இருந்து போன்ல பிடிக்க முயற்சி பண்றோம்.....அலைபேசி அனைக்கபட்டுள்ளது அப்டினே வருது” என்றனர்.
அதற்குள் அவளுக்கு அலைபேசி அழைப்பு வர பேசிகொண்டே நேரம் போனதே தெரியவில்லை.
அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பியவள் வீட்டிற்கு வர அங்கு ரதி ராம் காவேரி ஜெயந்தி என அனைவரும் காத்திருந்தனர்.உள்ளே நுழைந்ததும் அனைவரும் வாழ்த்து சொல்ல ஆனால் கண்களோ ஒருவனை தேடி தேடி சலித்தது.
ஏனோ வெற்றியின் சந்தோசம் அவளிடம் குறைந்து ஏமாற்றம் முகத்தில் தெரிந்தது.இதை உணராத மற்றவர்கள் பேசிகொண்டே இருக்க அவளோ “எனக்கு களைப்பாக இருக்கு நான் படுக்க போகிறேன்” என சொல்லிவிட்டு எழுந்தவள்
திரும்பி ராமிடம் “ராம் எனக்கு அந்த வண்டில வந்து என்னை கீழே தள்ளுன ஆள் யாருன்னு தெரியனும்.......கொஞ்சம் கேட்டு சொல்றியா” என கேட்க
ராமோ சற்று அதிர்ந்தவன் பின்னர் “சரி சரி ரோஜா...நீ ரெஸ்ட் எடு நான் கேட்டு சொல்றேன்” என்றான்.
பின்னர் அன்று முழுவதும் அவளுக்கு அனைவரும் வாழ்த்து சொல்ல அவள் எதிர்பார்த்த ஒருவனிடம் இருந்து மட்டும் வாழ்த்து வரவே இல்லை.
மனம் அதையே நினைத்து கொண்டு இருக்க பெரிய இவன் ....ஜெயிக்கிறதுக்கு முன்னாடி கூப்பிட்டு பேசினான்.....ஆனா இப்போ ஆளே காணோம்” என திட்டியவள் ஏனோ அவள் மனம் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது. மாலை வரை பார்த்தவள் பின்னர் தரணி பட்டாபியிடம் போன் செய்து சாதரணமாக பேசுவது போல் பேசி “உங்க பாஸ் என்ன செய்கிறார் என கிண்டலாக கேட்க அவர் காலையில் இருந்து வரவே இல்லை.போன் செய்தாலும் எடுக்கவில்லை” என்று சொன்னார்கள்.
ரோஜாவிற்கு நன்கு தெரியும்...தேவா எப்போது அலைபேசியை அனைத்து வைத்திருக்க மாட்டன்.இரவு நேரமாக இருந்தாலும் தன் அருகில்தான் அலைபேசி வைத்திருப்பான்.மேலும் அவள் ஜெயித்து விடுவாள் என முன்பே எல்லாம் திட்டமிட்டு செய்து இருந்தவன் இப்போது எங்கு சென்றான் என குழம்பி போனாள்.
இரவு முழுவதும் அவன் நினைவிலே இருந்தவள் காலை எழுந்தது கிளம்பி கீழே வர அங்கு காவேரி திட்டி கொண்டு இருந்தார்.
“இது எனக்கு சரியாய் படலை ராம்...அவ்ளோதான் சொல்லிட்டேன்...நான் ஒருத்தியாகவே எத்தன வேலை பார்க்கிறது”......என சொல்லி கொண்டு இருக்க
“என்ன அத்தை...காலையிலே மாம்சிடம் சண்டை போட்டு இருக்கீங்க” என கேட்டாள்.
“நீயே கேள் ரோஜா .,..இரவு முழுவதும் இவன் வரவே இல்லை...கேட்டா கொஞ்சம் வேலை இருந்ததுன்னு சொல்றான்.கலயாணத்திற்கு இன்னும் நான்கு நாள் தான் இருக்கு .....இவன் இப்படி இருந்தா எப்படி” என கேட்டார்.
“ஏன் மாம்ஸ் இப்படி பண்றிங்க....இன்னைக்கு உங்களுக்கு தீபாவளிதான் என சிரித்து கொண்டே சொன்னவள் ...நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு கிளம்ப
“எங்க ரோஜா” என ராம் கேட்டதும் அவள் திரும்பி பார்த்தவள் “அது வந்து வந்து” என தடுமாற
ஏனெனில் அவள் கிளம்பியது தேவா வீட்டிற்கு...ஏனோ அவள் மனம் இருப்புகொள்ளாமல் தவிக்க நேரிலே சென்று திட்டி விட்டு வந்துவிடலாம்” என எண்ணி கிளம்பினாள்.
பழைய நினைவுகள் மனதில் வர அழுது கொண்டே படுத்து இருந்தாள் ரோஜா.....விடிகாலை பொழுது அவளுக்கு அலைபேசி வர எடுத்து காதில் வைத்தவள் எதிர்புறத்தில் வந்த தகவலை கேட்டு “எந்த மருத்துவமனை” என விசாரித்தவள் எழுந்து வேகமாக கிளம்பினாள்..
கீழே வந்தவள் காவேரியை பார்த்தது “அத்தை ராம் எங்கே என கேட்க அவன் ஜிம்க்கு போயிருக்கான் என்றதும் ...சரி அத்தை ஒரு அவசர வேலை...மருத்துவமனை வரைக்கும் போயிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு வேகமாக சென்றாள்.
உள்ளே நுழைந்ததும் மனம் படபடவென அடித்து கொள்ள வேகமாக நடந்தவள் அக்கா என அழைப்பு கேட்க திரும்பியவள் அங்கு சிறு பெண் அழுது கொண்டு நின்று இருந்தாள்.
“என்னாச்சு சுமதி...இப்போ எப்படி இருக்காங்க” என கேட்டபடி உள்ளே சென்றவள் அங்கு கை கால்கள் எல்லாம் கட்டு போட்டு படுத்து இருந்தாள் வாணி.
“ அய்யோ என்ன வாணி இது......யார் உன்னை இப்படி பண்ணது”...என அவள் பதறி கேட்க
அதற்குள் அவளது தங்கை “அந்த ஆள்தான் அக்கா இப்படி பண்ணான்.நேத்து இரவு வீட்டிற்கு வந்து பயங்கிற சண்டை...டைவேர்ஸ் பண்ணா என் மானமே போய்டும்.......நான் இப்படி இனி பண்ணமாட்டேனு கால்ல விழுந்து அழுதான்...அக்கா அதற்கு ஒத்துக்க மாட்டேனு சொல்லிட்டாங்க.....ஜீவனாம்சம் தரமுடியாது......அதை வேண்டாம்னு சொல்லு அப்டின்னு கெஞ்சினான்....அதற்கும் அக்கா முடியாதுன்னு சொல்லிட்டாங்க.....உடனே கோபம் வந்து அருகில் இருந்த பூ ஜாடியை எடுத்து அடிச்சுட்டான்.... நாங்க யாருமே இதை எதிர்பார்க்கலை...... அக்கா கத்தின சத்தம் கேட்டு பக்கத்துல இருக்கிறவங்க வரதுக்குள்ள அவன் ஓடிட்டான்.இப்போ காலையில் இருந்து அம்மாவுக்கு போன் பண்ணி வழக்கு வாபஸ் வாங்க சொல்லு......இல்ல மத்த பொண்ணுங்களுக்கும் இதே நிலை தான் அப்டின்னு மிரட்டிட்டு இருக்கான்.....எங்களுக்கு ரொம்ப பயமா இருக்குக்கா” என சொல்லி அழுக
அதை கேட்ட ரோஜாவின் நரம்புகள் துடிக்க கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தாள்.“என்ன துணிச்சல் அவனுக்கு.......தப்பு செஞ்சதும் இல்லாம இப்படி அடிச்சு போட்டு மிரட்டவும் செய்யறனா என சொன்னவள் நீங்க கவலை படாதீங்க ....அவனா நானான்னு பார்க்கிறேன் ” என சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினாள்.
மனம் கோபத்தில் கொந்தளிக்க ...”ஆம்பிளை என்ற திமிர் அவனுக்கு ...முதலில் தீர்ப்பு வரட்டும் ...அதற்கு பின் அவன் மீது ராமிடம் சொல்லி ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ள வேண்டும்” என புலம்பிகொண்டே ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தவள் எதிரில் இவளை நோக்கி இரு சக்கர வாகனத்தில் இருவர் வேகமாக வர, அவளோ அவர்களுக்கு வழி விட்டு ஓரமாக வர ஆனால் அவர்கள் நகராமல் அவளையே நோக்கி வந்தனர்.
அவள் சுதாரித்து நகர்வதர்குள் இடிப்பது போல் அருகில் வந்ததவர்கள் அவளை நோக்கி ஏதோ வீச அவளோ “ஹே என்ன பண்ற” என கத்தி ஒதுங்கும் முன் இருவருக்கும் நடுவில் மூன்றாவதாக ஒரு வண்டி நுழைந்து அவளை தள்ள நூலிலையில் இவள் தப்பிக்க தடுமாறி விழுந்ததவள் அதிர்ச்சியில் அப்படியே மயக்கம் அடைந்தாள்.
அதன் பின் அவள் கண்விழித்து பார்க்க மருத்துவமனையில் இருந்தாள்.அவளை சுற்றி ரதி ராம் அனைவரும் நின்று இருக்க அவளோ என்னாச்சு ராம் எனக்கு என கேட்டவள் வேகமாக எழ முயற்சி பண்ண .”..பொறு...பொறு ...மருந்தோட வேகம் ஒரு அரைமணி நேரம் அப்டிதான் இருக்கும்...ஒன்னும் ஆகலை ...ரோட்ல ஒரு சின்ன ஆக்சிடென்ட்...நல்லவேளை யாருக்கும் ஏதும் பிரச்சினைஇல்லை” என சொன்னவன் உன்னை என்னிடம் சொல்லாமல் வெளியே போகாதேனு சொன்னேன்ல......இப்போ பாரு என எரிச்சலுடன் ராம் திட்ட
இல்லை ராம்...காலையில நீ ஜிம்க்கு போய்ட்ட...மேலும் நீதிமன்றத்திற்கு போகும்போது தானே சொன்ன.....இப்போ என்ன ஆகபோகுதுன்னு போனேன் ...ஆனால் ராம் அதை இப்போ நினச்சாலும் பயமா இருக்கு என்றாள்.
அதற்குதான் நான் படிச்சு படிச்சு சொன்னேன்....இப்போ பார் என அவன் மீண்டும் சொல்ல
“ இல்ல ராம்...... நான் வாணிய பார்த்திட்டு வண்டில வந்திட்டு இருந்தேன் .......எதிர்ல வண்டியில ஒருத்தன் இல்ல இரண்டு பேர் வேகமா என்னை நோக்கியே வந்தாங்க...நான் நகர்ந்து தான் போனேன் ...ஆனா என்னை பார்த்தே வந்தாங்க ......... அவங்க கிட்ட வந்து என்னமோ எடுத்த மாதிரி இருந்தது.......... அப்போ எதோ ஒருத்தன் என்னை தள்ளிவிட்டானா...இல்லை என் மேல விழுந்தானணு தெரியலை...கீழே சாஞ்சுட்டேன்.....அதிர்ச்சியில அப்படியே மயக்கம் வந்திடுச்சு....என்ன நடந்தது அங்கனு தெரியலை .. ....அவன் மட்டும் என்னை தள்ளி விடலைனா இந்நேரம் நான் எப்டின்னு எனக்கே தெரியலை” என அவள் சொல்ல
“அப்படி எல்லாம் சொல்லாதே” ரோஜா என வேகமாக அவள் வாயை பொத்திய காவேரி” இனி அதை பற்றி பேசாதே” என்றார்.
“சரிம்மா நீங்க பார்த்துக்குங்க .....இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டிற்கு போய்டலாம்......எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ......நான் கிளம்பறேன்” என ராம் சொல்ல
என்னது கிளம்பறியா என்றவள் “ராம் உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்......அதுக்கு முன்னாடி நான் இப்போ நீதி மன்றத்திற்கு போய் ஆகணும்” என்றாள் ரோஜா.
காவேரியோ “இந்த நிலைமையில் நீதி மன்றமா ...அதெல்லாம் வேண்டாம்...நீ முதல்ல வீட்ல வந்து ஓய்வு எடு” என அவர் அதட்டினார்.
“இல்லை அத்தை...இன்னைக்குதான் வாணி கேஸ் தீர்ப்பு.... நான் போகணும்” என பிடிவாதம் பிடித்து கைகளில் சிறு கட்டோடு கிளம்பினாள் ரோஜா.
நடந்த விஷயம் தெரியாமல் அவளது வரவை தரணியும் பட்டாபியும் எதிர்பார்த்து இருந்தனர்...அவள் வந்த உடன் அவள் நிலையை பார்த்ததும் என்ன ஆச்சு என்று பதறி விசாரிக்க நடந்தை சொன்னவள் “அந்த ஆள் மட்டும் நடுவில் வரலைனா நான் இப்போது இங்கு இல்லை என்றவள் இந்த கேஸ் முடிஞ்சா உடனே முதல்ல அந்த ஆளை பார்த்து நன்றி சொல்லணும்” என்று சொன்னாள்.
“உனக்கு அவனை அடையாளம் தெரியுமா” என தரணி கேட்க ...”இல்லை அவன் ஹெல்மட் போட்டு இருந்தான்.ராமிடம் சொன்னால் கண்டு பிடித்து சொல்லிடுவான்” என்றாள்.
பின்னர் வாணியை பற்றி சொன்னவள் அதற்கும் அவன் மேல் கேஸ் போட வேண்டும் என்றாள்.
அதற்குள் வாணியின் வழக்கு விசாரணைக்கு வர அனைவரும் உள்ளே சென்றனர்.
அங்கு நீதிபதி இன்று வாணியின் வழக்கு விபரங்கள் எல்லாம் முடிந்து தீர்ப்பு சொல்லபடுகிறது.குற்றம் சாட்டப்பட்ட வாணியின் கணவருக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை.வழக்கு தொடுத்தவர்க்கு மட்டுமே இதில் விருப்பம்.ஆனால் விவாகரத்து என்பது இருவரும் ஒரு மனதுடன் பிரிந்து வாழ ஒத்துழைக்க வேண்டும்......இல்லயெனில் ஒருவரின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிருபிக்கவேண்டும். பெரும்பாலும் விவாகரத்தை இந்த நீதி மன்றம் ஊக்குவிப்பது இல்லை....பேச்சுவார்த்தையின் மூலம் கணவன் மனைவி இருவரையும் சரி செய்யவே முயல்கிறது........அதையும் மீறி இருநபர்களில் ஒருவரின் உணர்வுகள் உரிமைகள் பாதிக்கப்டும்போது அப்போது பாதிக்கப்பட்ட நபருக்கு கண்டிப்பாக இந்த நீதி மன்றம் நீதி வழங்கும். அந்த வகையில் இந்த வழக்கு இரண்டாவதாக சொன்ன கருத்தின் அடிபடையில் வழக்கு தொடுத்த வாணி அவரது கணவரால் பல தொல்லைகளுக்கு ஆளாகி இருப்பது வக்கீலின் வாதத்தில் இருந்து தெரியவருகிறது.
கழுத்தில் தாலி ஏறிவிட்டால் அதை கட்டியவன் எது செய்தாலும் அமைதியாக இருக்கவேணும் என்ற பெண்களின் மனப்பாங்கை பலர் தவறாக புரிந்து கொண்டு தவறு செய்கின்றார்,அது போன்ற ஆண்களை வாணியை போன்று ஒரு சிலர்தான் துணிந்து அவர்களுக்கு தண்டனை பெற்று தருகின்றனர்.. எனவே பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டும் .அந்த பெண்ணின் மன உணர்வுகளை நீதிமன்றத்தில் மிக திறமையாக எடுத்து சொல்லிய வக்கீல் வாதத்தாலும் இந்த வழக்கில் வழக்கு தொடுத்த வாணிக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி அவர் கேட்கும் ஜீவனாமசத்தையும் தருமாறு இந்த நீதி மன்றம் ஆணையிடுகிறது.தவறும் பட்சத்தில் அவருக்கு சிறை தண்டனை விதிக்க இந்த நீதி மன்றம் உத்தரவிடுகிறது என சொல்லி முடித்தார்.
ரோஜாவிற்க்கோ முதன் முதலில் தான் படித்த படிப்பிற்கு தான் பெற்று தந்த மரியாதை என்ற மனநிறைவுடன் நின்றவள் அவள் மனகண்ணில் என் பேத்தின்னு நிருபிச்சுட்ட ரோஜா என்று தாத்தாவின் வார்த்தை ஒலித்தது..வேகமாக அவள் அருகில் வந்த தரணி பட்டாபி என அனைவரும் அவளை வாழ்த்த அனைவர்க்கும் நன்றி சொல்லியபடி வேகமாக வெளியே வந்தவள் நேராக அன்னை இல்லத்திற்கு தன்னை அழைத்து செல்லும்படி பட்டாபியிடம் கூறினாள் ரோஜா.
அவள் அன்னை இல்லம் சென்றதும் அங்கு உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் பணிபுரியும் அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல உடன் வந்த ரோஜாவிற்க்கே ஆச்சரியமாக இருந்தது.இப்போது தானே தீர்ப்பு வந்தது...அதற்குள் எப்படி என யோசித்தவள்
“மேடம் இங்க வாங்க” என ஒருவர் அழைக்க
அங்கு சென்றவள் அங்கு ஒரு புதிய அறை திறப்பு விழாவிர்க்கான அலங்காரத்துடன் இருக்க ...”இதை இப்போ நீங்க தான் திறக்கனும்” என்றனர் அவர்கள்.என்னது இது என கேட்பதற்குள் கையில் கத்தரிகோலை கொடுத்துவிட ரிப்பனை கட் பண்ணி அந்த அறையை திறந்தவள் அதில் அவளின் தாத்தா படம் பெரிய அளவில் வைக்க பட்டு பெண்களுக்கான இலவச சட்டஉதவி அலுவலகம்...நிர்வாகி mrs ரோஜா BL என்று இருந்தது.
இதை எதிர்பார்க்காத ரோஜா யார் இதெல்லாம் செஞ்சது என்றதும் “நாம் சார் தான் மேடம்........ஒரு வாரத்திற்கு முன்பே ரெடி பண்ணிட்டோம்.உங்கள் முதல் வெற்றிக்கு சாரின் சின்ன பரிசு அப்டின்னு சொல்லிட்டு இருந்தார்” என்றார் ஒருவர்.
அவளோ என்ன சொல்வது என தெரியாமல் அப்படியே நிற்க அப்போதுதான் தான் இங்கு வந்த காரியம் நினைவிற்கு வர வேகமாக தேவாவின் அறையை நோக்கி சென்றவள் கதவின் அருகே சென்று பின்னர் திரும்பி “அச்சோ பூ வாங்காம வந்திட்டேன்” என்றவள் பட்டாபி என அழைக்கும் முன் ரோஜா இதழ்கள் அவள் கைகளில் இருந்தன.....
அவள் அதை வியப்போடு பார்க்க....... “சார் நேற்றே சொல்லி இருந்தார் மேடம் ,,,,ஜெயிச்ச உடனே மேடம் இங்க தான் வருவாங்க அப்போ இதை அவங்களிடம் கொடுங்க” என்று சொன்னார் என்றனர்.
அவளோ எதுவும் பேசாமல் அதை வாங்கியவள் நேராக தேவாவின் தாய் தந்தையரின் படத்தின் முன் வைத்து விழுந்து வணங்கினாள்.அவள் முன்பே நினைத்து இருந்தாள் ...அவள் மனம் தளரும்போது எல்லாம் இங்கு வந்து இந்த படத்தின் முன் சில மணித்துளிகள் அமர்ந்து விட்டு செல்வாள்.ஏனோ வெற்றி பெற்ற உடன் இங்கே வரணும் என்று தோன உடனே புறப்பட்டு வந்தாள்.ஆனால் தேவாவோ அவளது எண்ணத்தை முன்பே கணித்து அதற்க்கு ஏற்றாய் போல் ஏற்பாடு செய்து இருந்தான்.
ரோஜாவிற்க்கோ என்ன சொல்வது என்றே புரியவில்லை......தன்னை இந்த அளவு அவன் கவனித்து இருக்கிறானா.......என் மனதில் இருப்பதை எப்படி அப்படியே செயல்படுத்தி இருக்கிறான் என் ராகன் என பல நாட்களுக்கு பிறகு அந்த வார்த்தையை உச்சரித்தவள் அப்போது அலைபேசி மணி ஒலிக்க எடுத்தவள் பாட்டி அழைத்து இருந்தார்.
காதில் வைத்ததும் “வாழ்த்துக்கள் ரோஜா என்றவர் என் மனம் ரொம்ப சந்தோசமா இருக்கு...என் பேத்தியினால் ஒரு பெண்ணின் வாழக்கை சீரழிவில் இருந்து காப்பாற்ற பட்டிருக்கு..... நினைக்கும்போதே பெருமையா இருக்கு ரோசா என்றவர் ............நான் கூட விவாகரத்து கேஸ் அப்டின உடனே கொஞ்சம் கஷ்டமா இருந்தது.ஆனா தேவா தம்பிதான் விளக்கமா எடுத்து சொல்லுச்சு....;உன் தாத்தாகண்டிப்பா மேல இருந்து இத பார்த்து சந்தோசபட்டிருப்பார்” என்றார்.
அதற்குள் பார்வதி சேகர் என அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல அவளோ சந்தோசத்தில்” யாருப்பா உங்களுக்கு நான் ஜெயிச்சது சொன்னது ....... ராம் மாம்ஸ் சொன்னாறா “ என கேட்டாள்.
“இல்லம்மா அவன் சொல்லலை...மாப்பிள்ளை நேற்றே போன் பண்ணி சொல்லிட்டார்.நாளை தீர்ப்பு......எப்படியும் உங்க பொண்ணு ஜெய்ச்சுடுவா......நீங்க பதினோரு மணிக்கு போன் பண்ணுங்க அப்டின்னு சொன்னார்” என சொல்ல தன் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையை கண்டு வாயடைத்து நின்றாள் ரோஜா.
இங்கு பலரும் அவனை பற்றி சொல்ல ஆனால் இந்த நிகழ்வுக்கு காரணமானவன் அங்கு இல்லை.பார்வைகளை சுழல விட்டவள் “எங்க உங்க சாரை காணோம்” என கேட்டாள்
“தெரியலை மேடம்....நாங்களும் காலையில் இருந்து போன்ல பிடிக்க முயற்சி பண்றோம்.....அலைபேசி அனைக்கபட்டுள்ளது அப்டினே வருது” என்றனர்.
அதற்குள் அவளுக்கு அலைபேசி அழைப்பு வர பேசிகொண்டே நேரம் போனதே தெரியவில்லை.
அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பியவள் வீட்டிற்கு வர அங்கு ரதி ராம் காவேரி ஜெயந்தி என அனைவரும் காத்திருந்தனர்.உள்ளே நுழைந்ததும் அனைவரும் வாழ்த்து சொல்ல ஆனால் கண்களோ ஒருவனை தேடி தேடி சலித்தது.
ஏனோ வெற்றியின் சந்தோசம் அவளிடம் குறைந்து ஏமாற்றம் முகத்தில் தெரிந்தது.இதை உணராத மற்றவர்கள் பேசிகொண்டே இருக்க அவளோ “எனக்கு களைப்பாக இருக்கு நான் படுக்க போகிறேன்” என சொல்லிவிட்டு எழுந்தவள்
திரும்பி ராமிடம் “ராம் எனக்கு அந்த வண்டில வந்து என்னை கீழே தள்ளுன ஆள் யாருன்னு தெரியனும்.......கொஞ்சம் கேட்டு சொல்றியா” என கேட்க
ராமோ சற்று அதிர்ந்தவன் பின்னர் “சரி சரி ரோஜா...நீ ரெஸ்ட் எடு நான் கேட்டு சொல்றேன்” என்றான்.
பின்னர் அன்று முழுவதும் அவளுக்கு அனைவரும் வாழ்த்து சொல்ல அவள் எதிர்பார்த்த ஒருவனிடம் இருந்து மட்டும் வாழ்த்து வரவே இல்லை.
மனம் அதையே நினைத்து கொண்டு இருக்க பெரிய இவன் ....ஜெயிக்கிறதுக்கு முன்னாடி கூப்பிட்டு பேசினான்.....ஆனா இப்போ ஆளே காணோம்” என திட்டியவள் ஏனோ அவள் மனம் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது. மாலை வரை பார்த்தவள் பின்னர் தரணி பட்டாபியிடம் போன் செய்து சாதரணமாக பேசுவது போல் பேசி “உங்க பாஸ் என்ன செய்கிறார் என கிண்டலாக கேட்க அவர் காலையில் இருந்து வரவே இல்லை.போன் செய்தாலும் எடுக்கவில்லை” என்று சொன்னார்கள்.
ரோஜாவிற்கு நன்கு தெரியும்...தேவா எப்போது அலைபேசியை அனைத்து வைத்திருக்க மாட்டன்.இரவு நேரமாக இருந்தாலும் தன் அருகில்தான் அலைபேசி வைத்திருப்பான்.மேலும் அவள் ஜெயித்து விடுவாள் என முன்பே எல்லாம் திட்டமிட்டு செய்து இருந்தவன் இப்போது எங்கு சென்றான் என குழம்பி போனாள்.
இரவு முழுவதும் அவன் நினைவிலே இருந்தவள் காலை எழுந்தது கிளம்பி கீழே வர அங்கு காவேரி திட்டி கொண்டு இருந்தார்.
“இது எனக்கு சரியாய் படலை ராம்...அவ்ளோதான் சொல்லிட்டேன்...நான் ஒருத்தியாகவே எத்தன வேலை பார்க்கிறது”......என சொல்லி கொண்டு இருக்க
“என்ன அத்தை...காலையிலே மாம்சிடம் சண்டை போட்டு இருக்கீங்க” என கேட்டாள்.
“நீயே கேள் ரோஜா .,..இரவு முழுவதும் இவன் வரவே இல்லை...கேட்டா கொஞ்சம் வேலை இருந்ததுன்னு சொல்றான்.கலயாணத்திற்கு இன்னும் நான்கு நாள் தான் இருக்கு .....இவன் இப்படி இருந்தா எப்படி” என கேட்டார்.
“ஏன் மாம்ஸ் இப்படி பண்றிங்க....இன்னைக்கு உங்களுக்கு தீபாவளிதான் என சிரித்து கொண்டே சொன்னவள் ...நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு கிளம்ப
“எங்க ரோஜா” என ராம் கேட்டதும் அவள் திரும்பி பார்த்தவள் “அது வந்து வந்து” என தடுமாற
ஏனெனில் அவள் கிளம்பியது தேவா வீட்டிற்கு...ஏனோ அவள் மனம் இருப்புகொள்ளாமல் தவிக்க நேரிலே சென்று திட்டி விட்டு வந்துவிடலாம்” என எண்ணி கிளம்பினாள்.