• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
893
453
93
Tirupur
உடன் பிறந்த தங்கையும், ஈன்றெடுத்த தாயையும் உயிராகக் கருதுபவன் நம் நாயகன். விதியின் சதியால் இருவரையும் ஒரே நேரத்தில் இழந்து விட்டவன் பாறையாய் இறுகிப் போகிறான்.

தன் உயிரானவர்களை கொன்றது யாரென்பதை அறிந்து அவர்களை கொல்ல வேண்டும் என்ற வெறி, நாட்களாக நாட்களாக அவனின் இரத்தத்தோடு கலந்து அவனை சுயமிழக்க செய்கிறது.

உயிர் காவத் துடிக்கும் நேத்திரங்களோடு சீறிப் பாயக் காத்திருக்கும் அவ்வேங்கைக்கும், தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தன்னை சூழ்ந்திருக்கும் சூழ்ச்சிகாரர்களையும் இனம்கண்டு கொள்ளாமல் குறும்புத் தனம் மாறாமல் அவனையே வலம் வரும் நாயகியும்.

அவனுக்குள்ளும் அவள் மீதான காதல் ரோஜா மொட்டவிழ்ந்து மலருமா? மலர முன்பே வாடிப் போகுமா என்பதே இந்தக் கதை. பழி வாங்கும் படலதோடு காதலும் இரண்டரக் கலந்து மிகவுக் விறுவிறுப்பாய் நகரும்.