அத்தியாயம் … 2
டைரி….
“ஒரு காதலுக்கு
இறுதிச் சொல்
இருக்குமென நம்பினேன்…
ஆனால் நம்ம அன்பினில்
கடைசிச் சொல்
சத்தமில்லாத மரணத்தை
தேடியது!”…..
“கிருத்தி … ஏய் கிருத்திகா உன் போன் உசிரே போகது உசிரே போகது பாடித் தொலைக்கது ….
எங்கே இருக்கே நீ?” எனக் கத்தினாள் மணிமேகலை.
“வரேன்டி … ஏன் இப்படி ஸ்பீக்கரை முழங்கியவளாக ஊருக்கே சேர்ந்து கூப்பாடு போடுகிற” என்று குளியலறையிலிருந்து அப்போது தான் குளித்து எளிமையான சுரிதார் அணிந்து வந்தவளை முறைத்தாள் மணிமேகலை.
“உன் போன் உசிர விட்டு ரொம்ப நேரமாச்சு. ஏன்டி உனக்கு வேறு ரிங் டோன் கிடைக்கலயா… உசிரே போகது…. இங்கே தான் பசியிலே உசிரு போகது… வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கரண்ட் சார்ஜ் கட்ட முடியாமல் உசிரு போய்கிட்டு தான் இருக்கே. இதிலே இது வேற… இப்ப உள்ள டிரெண்டிங் சாங் வைத்து வைப் பண்ணினால் தானே பசி கூட ஓடி விடும்’’ என்றவளுக்குப் பதில் சொல்லாமல் தன்னை அழைத்தவர்களுக்கு ரிங் விட்டாள் கிருத்திகா….
‘’சார்… வணக்கம் சார்… கூப்பிட்டு இருந்தீங்க …..
ஓ… நிஜமா சொல்லிறீங்களா….
ஏம்மா சும்மா நான் போன் பண்ணப் போறனா… நிஜமா தான் சொல்லுகிறேன்’’ என்ற குரல்….
‘’ஓகே ஒகே சார்… ரொம்ப நன்றிங்க…..
…..
எத்தனை மணிக்கு அங்கே இருக்கணும்’’ எனக் கேட்டவளுக்கு….
‘’பன்னிரண்டு மணிக்கே வந்திரு ….வந்ததும் ஒத்திகை பார்க்கணுமலே’’…
அங்கே வந்தப் பதிலில் ‘’ஓ கண்டிப்பாக வந்துருவேன் சார்… எப்பவும் இந்தக் கிருத்திகா சொன்ன நேரத்திற்கு முன் அங்கே இருப்பாள். நீங்கப் பயப்படாதீங்க… இனி என் நடிப்பை பார்த்து நீங்களே அசந்து போய் இனி வரும் நாடகத்தில் கிருத்திகா இல்லாமல் உங்க நாடகத்தில் கதாநாயகி இல்லைனு பெயர் வரும் சார்’’….
‘’வளவள கொழ கொழ பேசாமல் சொன்னதை செய் மா… இப்பவே பஞ்ச் டைலாக்’’… என நக்கலாகப் போனின் குரலில்….
‘டேய் எனக்குனு ஒரு காலம் வரும். அன்னிக்கு இந்தக் கிருத்திகா வீட்டு வாசலிலே தேவடுகணக்காகக் காத்திருக்கணும்’… என மனதிற்குள் சொல்லியவள்…. புறத்தில் ‘’ஓகே சார் வந்து விடுகிறேன்’’ எனச் சொல்லி வைத்தவளோ….
‘’ஊ… ஊ’’… எனக் கத்தி ஆர்ப்பாட்டமாக மணிமேகலை பிடித்துச் சுற்றியவளின் சந்தோஷத்தில்….
‘’ஏய் விடுடி … தலை சுத்தது… விடுடி’’ எனக் கத்தியவளை விட்டதும் தலையைப் பிடித்துக் கொண்டு தள்ளாடியவள்….
‘’ஏய் லூசு… உனக்குச் சந்தோஷம் வந்தால் இப்படியா கரகாட்டமாடுவே’’ என்ற மணிமேகலையிடம்….
‘’ஏய் அந்தப் போன் யார் பண்ணினாங்க தெரிஞ்சா நீயும் இப்படி தான் குதிப்பே…. ஆடுவே’’ என்ற குதூக்கலமாகப் பேசியவள்….
‘’இன்னிக்கு நான் நாடகத்தில் கதாநாயகி பாத்திரத்தில் நடிக்கப் போறனே…. எத்தனை நாட்கள் ஓரத்தில் நிற்க வைத்து என்னைப் பாடப் படுத்தினானுங்க…. நடிக்கிறவளை ஏய் ஓவரா பர்ப்பாம்ஸ் பண்ணாதே… நீ அந்த இடத்தில் நிற்பது மட்டும் தானென நக்கலாகப் பேசினாங்க தானே. அங்கே இன்று நான் தான் முக்கியமான கதாநாயகி கேரக்டர் பண்ணப் போறோனே…
ஐ… ஜாலி ஜாலி’’ எனக் குதித்தவளோ… ‘’எப்படியோ நாடகம் முடிய இரவு பத்து மணி ஆனதும் நீயும் நானும் நைட் கடை பிரியாணி வாங்கிச் சாப்பிட போறோம்’’… என்றவள்….
‘’நாளைக்கு ஹவுஸ்ஓனர்க்கு வாடகை பாக்கி கொடுத்து விடலாம். அவர் வந்துக் கேட்டால் கிருத்திகா இருக்க பயமேன் என்று சொல்லு’’ என அவளின் பேச்சும் செயலையும் கண்ட மணிமேகலை… தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.
‘’ஏய் போதுமடி … போன்ல சொல்லற வச்சு ரொம்ப கனவு காணாதே…. அங்கே இப்படி சொல்லிக் கூட்டிட்டு போய் ஊமை கேரக்டராக வசனம் இல்லாமல் நிற்க வைப்பானுக’’ என்றவளிடம்…
‘’அது தான் இல்லையே…. எப்பவும் நான் தான் ஹீரோயின் தகரடப்பா குரலில் பேசிய சீவக சிந்தாமணி சிந்தலவாடி போய்விட்டாளாம்… அதனாலே… இன்னிக்கு நான் தான்’’ என்றதும்…
‘’ம்ம்…. நடத்தும்மா நீ நடத்து’’ எனக் கேலிக் குரலில் சொல்லிய மணிமேகலை ….
‘’நான் சாயங்காலம் வர முடியுமா தெரியல… என்ற மணிமேகலை … பணக்கார வீட்டிலிருக்கும் வயதான அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் ஹவுஸ் நர்ஸாக போய்க்கொண்டிருந்தாள்.
இப்போது வேலை இல்லை. சாயங்காலம் ஒருவர் வேலைக்காக வந்து பார்க்கச் சொல்லி இருந்தார்கள். அங்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கிருத்திகாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் மணிமேகலை.
இவளும் கிருத்திகாவும் இணைந்தே பெரிய கதை தான்…
இரவு வேலை முடிந்து பேருந்துக்காக நின்றிருந்த மணிமேகலை … ‘’அச்சோ சீக்கிரம் போகணுமே…. இல்லனா ஹவுஸ் ஓனர் மெயின் கேட் பூட்டி விடுவாரே’’ என்ற பதற்றத்துடன் பேருந்து வருகிற திசையைப் பார்த்தவளுக்கு அந்த நேரத்தில் தனியாக நிற்கவும் மனதிற்குள் அச்சம் எழுந்தது.
இரவின் இருண்மையில் கரண்ட் மரத்தில் எரியும் ஒளிவிளக்கு ஒசையில்லாத கண்ணாடி பந்தாக ஒளி வெள்ளத்தை அள்ளி வீசியது. காற்றில் மரங்களின் கிளைகள் அசைந்து ஆடுவதின் சலசலப்பில் மனதிற்குள் பயமேகம் சூழ்ந்து இருந்தது.
காற்றில் அசையும் மரக் கிளைகள் சலசலவென்ற ஒலி எழுப்ப, அது கூட மணிமேகலையின் மனதுக்குள் பரவிய பயத்தை ஊட்டியது. தனிமையின் நடுவே அவள் மனது சற்று நடுங்கியது.
அதுதான்… திடீரென்று படீர் என்ற சத்தம்… ‘’அச்சோ’’ என்றவள் முழு இருட்டில் நின்று விட்டாள் அச்சத்தில்.
வெடித்தது இத்தனை நேரம் அங்கே ஒளி பரப்பிக் கொண்டிருந்த கண்ணாடி பந்து வெளிச்சத்தில் மரக்கிளை ஒன்று உடைந்து பேருந்து நிலையத்தின் இருக்கும் பயணியர்களின் நிழல் குடை மேலே விழந்தது அதீதமான சத்தத்தில்….
அந்தச் சத்தத்தில் சிறது சத்தமிட்டு அலறியவளை…
"ஹய்யோ! யாருடா சுடிதார் ரெப்பா இப்படி சாலையில சத்தம் போட்டு ஏங்க அலறீங்க:. உங்க சத்தத்தில் தூங்க போக நினைச்சு கிளம்பிய பேய் பிசாசு ரத்தக்காட்டேரி திரும்ப வந்து விடப் போகது"
என்ற ஓர் அழகான நெடிய குரல்…
மணிமேகலை பதறியபடி திரும்பினாள். பால்போல வெண்மை கலந்த ஒரு மெகா சல்வார்… அணிந்த பெண். கண்களில் ஊசி போடும் நகைச்சுவை!
"நீங்கச் சாயின் படம் பார்றீங்களா? அந்த ஹீரோயின் எப்போவும் சுடிதார் நழுவி நழுவி விழற மாதிரி தான் நீங்க இருக்கீங்க!"
என்று சொன்னவளே,
"இவ்வளவு நேரமா நீங்கதான் இங்க தனியாகத் தானே நிக்கறீங்க? நா வந்துட்டேன்னா பயந்து வீழ்ந்துருவீங்க போல!" கலாய்த்துச் சிரித்தாள்.
மணிமேகலை சற்று நெளிந்து, "நீ யாரு?"
"நா? நான் வந்து... பேருந்து நிறுத்த ராணி! இங்க தினமும் பஸ் இல்லாத இடத்துல சினிமாவில் ஜீப்பூம்பா என்றுதும் சட்னு வரும் பூதம் அல்ல… ஏஞ்சல்… சின்ரெல்லா உன் சத்தத்தில் யாருடா இது என்று ஓடி
வந்தேன் !" என்று நாடகப் பாணியில் சொல்லியதும்
‘’ஹாஹா’’ எனச் சிரித்த மணிமேகலை…
‘’இந்த இடத்தில் தனியே நிற்கிறேன் பயந்து போனேன். எனக்குத் துணையாகத் தேவதை சின்ரெல்லா வருது பாரேன்’’ எனக் கன்னத்தில் கை வைத்துப் பேசியவளைப் பார்த்தவளோ முறைக்க …
‘’ஏதோ பாவமே விரைந்து ஓடி வந்தால் நக்கலாக’’ என இடையில் கை வைத்துக் கேட்டவளிடம்….
‘’அட நீ வேற ஏன்ம்மா… நானே பீதியிலே நின்னுகிட்டு இருக்கேன். வேலை முடிய ரொம்ப நேரமானாலும் ரேஸ் குதிரையாக ஓடி வந்தால். பஸ்ஸை காணாம். வீட்டுக்குப் போவதற்குள் நேரமாயிரும்… ஹவுஸ் ஓனர் கதவைப் பூட்டிட்டா நாளைக் காலை ஆறு மணிக்கு முன் திறக்கமாட்டார்… அதைக் கேட்டேன் வீடே காலி பண்ணு சொல்லிக் கம்பராமாயணம் வாசிப்பார்’’ எனப் புலம்பிய மணிமேகலையை பார்த்துச் சிரித்தவளோ….
‘’இது தானா…. எனக்குமே இதே பிரச்சினை தான்’’ என்றவளை மணிமேகலை ஆராய்ச்சி பார்வை பார்க்க….
"இதே தான்னா என் ஹவுஸ் ஓனர் வீட்டுல என்ன செஞ்சாங்க தெரியுமா?"
"என்ன?"
"ஓர் நாள் லேட்டா வந்ததுக்காக, வீட்டுக்கு வெளியே ஒரு கட்டில் போட்டு, 'இது தாமதமாக வருபவர்களுக்கான தங்கும் பகுதினு (Late-Comers Rest Area) எழுதிப் பலகை வெச்சு வைச்சாங்க!"
அதைக் கேட்ட மணிமேகலைக்கோ முகம் சிரிப்போடு கலகலவென்று விரிந்து போனது.
"நீ சிரிக்கறே… நல்லா இருக்கு. இந்த நேரத்துல சிரிக்குறதுக்கு கூட ஒரு சாகசம் தான்!" என்று கிருத்திகா புன்னகையுடன் சொன்னாள்.
லேசான பெய்ய தொடங்கிய மழையின் மண் வாசனையும், அந்த ஒளியும், அந்த அசையும் மரக்கிளைகளும், ஒரு நொடி அந்தப் பயத்தைக் கழற்றி இருவரின் மனதுக்குள் ஒரு நெருக்கத்தை விதைத்தது.
இப்படி தான் பஸ் ஸ்டாப்பில் பார்த்துத் தோழியானவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போல வீடு எடுத்துத் தங்கினர்.
ஒருவர் வரத் தாமதமானால் இன்னொரு ஒருவரிடம் சொல்லி மாற்றி மாற்றி யாராவது ஒருவர் முன்னால் வந்து விடுவார்கள். அதனால் இரவு தாமதத்திற்கான பிரச்சினைகள் ஓய்ந்தது என நினைத்துப் பார்த்த மணிமேகலை… இன்று வரை கிருத்திகாவின் கலாட்டா பேச்சுகள், கலகலத்த சிரிப்பு என வலம் வருபவளை ஆச்சரியமாகப் பார்ப்பாள்.
அதுவும் அவள் பார்த்த வேலையில் வயதானவர் மரணத்தைத் தழுவி விட்டதால் அங்கு அவளுக்கு வேலை இல்லாமல் போய்யிருச்சு.
கிருத்திகா வருமானம் மட்டுமே.
மணிமேகலை வேறு வேலைக்கு முயற்சி பண்ணிக் கொண்டு தான் இருக்கிறாள். அவரசத்திற்கு எனப் போன இடத்தில் மனைவியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்லிச் செல்ல… அங்கே நடந்த கூத்தில் தெறித்து ஓடி வந்தவள் கிருத்திகாவிடம் புலம்பித் தீர்த்தாள் மணிமேகலை.
‘’பொண்டாட்டிக்கு உடம்பு முடியல…. பார்த்துக்க ஆள் கேட்டாங்கனு போனால்….
அந்தம்மா என்னடானா அவங்க புருஷனை நான் இழுத்து போய்யிருவேன் பேசது. அந்தம்மா புருசன் பொண்டாட்டியே என் தெய்வம் குலசாமி சொல்லி என்னை மேலே இருந்து கீழே வரை பார்ப்பது தெரியாமல் பார்க்கும் துச்சாதனன் வேலை பார்க்கிறான்… போதும்டா சாமி ஓடி வந்துட்டேன்’’ எனக் கிருத்திகாவிடம் பேசித் தீர்த்தவளிடம்….
‘’நாமிருக்க பயமேன். இந்தக் கிருத்திகா இருக்கே அஞ்சேல்’’ என்றவள் …
‘’விடுடி… அந்த ஆளை ஒரு மனுசனா நினைச்சு மனசை போட்டு வருத்திக்காதே… நல்ல இடமாகக் கிடைக்கும் வரை பொறுத்து போ’’… எனச் சொன்னாலும் இன்னும் மணிமேகலைக்கு சரியான இடமாக வேலை அமையவில்லை.
கிருத்திகா தான் வீட்டை அவளையெனப் பார்த்துக் கொண்டாலும் அவளுக்கும் நிரந்தரமான வேலை கிடையாது எனப் பல சிந்தனையோட்டங்களோடு நின்றவளை….
‘’ஏய் மேகலை…. என்ன அதிர்ச்சியா… எங்கடா கிருத்தி கதாநாயகி ஆகிவிட்டால் இந்த வீட்டை விட்டுப் போய் விடுவாளோ… என நினைப்பே’’ எனச் சொன்னதும்….
‘’நான் ஏன்டி அப்படி நினைக்கப் போறேன். இம்சை ஒழிஞ்சு இருக்க மாட்டேன்’ எனக் கேலியுடன் சொன்வளை….
‘’அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடி தங்கம்…. ஏனா…. இந்த மணிமேகலை இல்லனா கிருத்திகா இல்லை… அந்தளவுக்கு உன் மேலே லவ்ஸ்’’ என அவளின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டவளை என்றவளை….
‘’ஏய் லூசு… அறிவிருக்காடி’’… எனத் தன் கன்னத்தைத் துடைக்க….
அப்போது கதவின் அருகே வந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தவர்களோ…. வாய் மேலே கை வைத்து நின்ற ஹவுஸ் ஓனர் அம்மா….
‘’என்ன கூத்து இது …. கருமம்’’ எனக் கேட்டவரிடம்….
‘’அச்சோ… அது சும்மா ஆண்டி’’…. என மணிமேகலை வேகமாகச் சொல்லியவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவர்….
‘’ஆம்பிளை ஆம்பிளை கல்யாணம் பண்ணுக்கிறாங்கனு சொல்லறாங்க. அதுபோலப் பொம்பளை பொம்பளை கல்யாணம் பண்ணிக்கிறாங்க பேசாறாங்க… அப்படியா நீங்க இரண்டு பேரும்’' சிறு கோபமும் திகைப்புமாக… கேட்டவரை….
‘’அய்யோ அப்படி இல்லைங்க ஆண்டி… அவ விளையாட்டுக்குச் செய்தாள். லூசு அவள்…. ஏய் கிருத்தி.... இங்கே பாரு ஆண்டி நம்மளை தப்பா நினைக்கிறாங்க’’ என்றதும்….
‘’அதைப் பற்றி எனக்குத் தெரியாதுப்பா… ஆனால் உன் மேலே லவ்ஸ் இல்லைனு நீ சொல்லு பார்க்கலாம்’’ குறும்பாகச் சொன்னவள்….’’எனக்கு வேலை இருக்கு. நீயே அவங்க கிட்டே பேசிக்கோ’’ எனக் கண் சிமிட்டியவள் தான் கொண்டு போகும் பையில் எடுத்து வைத்துக் கொண்டிருவளை கொலைவெறியாகப் பார்த்துவிட்டு….
‘அவளுக்கு இன்னிக்கு ஒரு நாடகத்தில் நடிக்கப் போறா ஆண்டி. அதை என்கிட்டே நடிச்சு காமிச்சுகிட்டு இருந்தாள்’’ எனத் திணறிச் சொல்லுகிறவளை முறைத்தவர்…
‘’ம்க்கூம்’’ என்றவர் ‘’என்னமோ சொல்லறே… சரி அதை விடு தேதி பத்து ஆச்சு எப்ப வாடகை தரப் போறீங்க’’..... என்றவரை….
‘’தந்துவிடுகிறோம்’’ எனச் சமாளித்து அனுப்பி வைத்தாள் மணிமேகலை… அதைப் பார்த்தபடி இருக்கையில் நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருருந்தவளை கழுத்தை நெறிக்க…. கையைக் கொண்டு போன மணிமேகலை ….
‘’எதுல விளையாட்டு இல்லையாடி. அந்தம்மா என்ன நினைச்சு இருக்கும்’’ எனக் கன்னத்தில் கை வைத்து அமர்ந்தவளை…. கண்டு வாய் விட்டுச் சிரித்தாள் கிருத்திகா.
கிருத்திகா நாடகங்களில் நடிக்கும் நாடக மேடை நடிகை தான். சின்ன சின்ன வேடங்களில் நடிப்பவள். இன்று தான் அவளுக்கு முக்கியமான வேடம் வந்துவிடு எனச் சொல்லவும் ஆர்ப்பாட்டமாகக் கிளம்பும்போது நடந்த கூத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உருண்டு புரண்டு சிரித்தவளோ…. ‘’மணி இன்னிக்கே பணம் கிடைச்சிரும். பார்த்துக்கலாம்’’ எனப் புன்னகையுடனே சொல்லிச் சென்றாள் கிருத்திகா.
நாடக சபா சென்றவளை …. ‘’வாம்மா…. எங்கே நீயும் காலை வாரி விட்டுருவீயோ நினைச்சேன்’’ என்ற சபாபதியிடம்….
‘’சார் நான் ஏன் காலை வாரி விடப் போறேன்?. இப்ப இருக்கிற நிலைமைக்கு உங்க வேலையைப் பார்க்கச் சொன்னாலும் நான் பார்ப்பேன்’’ லேசான புன்னகையை அதரங்களை பூசிக் கொண்டிருந்தவளை….
‘’எப்படா சபாபதி ஒழிவான்’’ காத்திருக்க….
‘’அச்சோ சாரே…. நீங்கத் தப்பா புரிஞ்சு பேசறீங்க’’… என நமுட்டு சிரிப்பை உதிர்த்தவளை….
லேசான முறைப்புடன்… ‘’உங்களை எல்லாரையும் இழுத்து வச்சு தேரை நகர்த்தி நிலைக்குக் கொண்டு வருவதற்குள் நான் படுகிற பாடு இருக்கே’’ எனத் தொடங்கியவர்….
‘’பேசிகிட்டே இருந்தால் நேரம் போய்யிரும் …. வசனப் பேப்பரை வாங்கிப் படித்து மனப்பாடம் பண்ணிட்டு இரண்டு மூன்று முறை ஒத்திகை பார்க்கலாம் கிருத்திகா… இன்னும் யார் பேசக் கிடைப்பாங்க வெட்டியாகப் பேசிகிட்டு இருக்காதே’’ எனச் சொல்லிச் செல்கிறவரிடம்….
‘’சார்… சார்’’ என அழைத்தவளிடம் ‘’இனி நாடகம் முடிகிற வரை பேச்சு இருக்க கூடாது சொல்லிட்டேன்’’ என அங்கிருந்து சென்று விட்டார் சபாபதி.
வசனப் பேப்பரை வாங்கியவள் அதன் தலைப்பைப் பார்த்தும் அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
‘’மரணத்தை ஏற்காத நவீன மனைவி’ என்ற நாடக தலைப்பில் சிரித்தவள் அவளுக்குரிய வசனங்களை மனப்பாடம் பண்ணிவிட்டு… மாலை
ஒப்பனை அறையில் இருக்கும் ஆளுயுர கண்ணாடி முன் தன் புடவை திருத்தி, முகத்தில் பூசிக் கொண்ட பவுடர் லிப்ஸ்டிக் சரி செய்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா….
‘’இன்று நாடகம் முடிந்தது பேசிய முழு பணத்தை வாங்கி விடணும் கிருத்தி. இல்லனா நம்மல ரோடு தேய்ய நடையாக நடக்க விட்டுருவார் இந்தச் சபாபதி’’…. எனக் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்திடம் பேசினாள் கிருத்திகா.
***************************************************
‘’பங்கஜம் கிளம்பிட்டீயா… போகலாமா… நாடகம் தொடங்குவதற்குள் போகணும்’’ என்ற ரமணியம்மாளின் குரலில் ….
‘’அக்கா இருங்க வரேன்…. வேலை முடிஞ்சு இந்த மனுஷன் வரக்கிறப்ப…. காபி சாயங்காலம் கொறிக்க மேசையில் எடுத்து வைச்சு வரேன்…. மருமகன் பேத்தி பேரன் எடுத்தாலும் இந்த வீட்டு வேலை ஓயாது. பொண்டாட்டி வெளியே எப்பாவது தானே போறானு அட்ஜஸ்ட் பண்ணுவோம் இல்ல…. எல்லாவற்றிற்கும் கொடுப்பினை வேணும்…. எனக்கு எங்க எனக்கு அது கிடைக்கது'’ எனப் புலம்பியபடி காபியை பிளாஸ்க் ஊற்றி வைத்து மிக்ஸர், பிஸ்கெட், தண்ணீர் முதல் எடுத்து வைத்தவரைப் பார்த்த ரமணிம்மாளுக்கு கொஞ்சம் பாவமாகத் தான் இருந்தது.
ஐம்பது வயதிலும் இன்னும் ஒவ்வொன்றும் எடுத்து வைத்துக் கவனித்தாலும் குற்றம் குறை கண்டிப்பிடிப்பார் பங்கஜம் வீட்டுக்கார்.
அருண் அப்பா இப்படி இருந்தில்லையே. ‘’எப்பவும் ரொம்ப வேலையை இழுத்துக்காதே. என்னை நான் பார்த்துக்க மாட்டேனா… நீ உடம்ப வருத்திக்காதே ரமணி’’ எனச் சொல்லிக் கொண்டே இருப்பாரென நினைத்தவருக்கு… அவர் இருக்கும்வரை நிறைவான வாழ்க்கை தான். குற்றம் குறை சொல்ல எதுவுமில்லை. ஆனால் அதன்பின் நினைத்துப் பெருமூச்சு விட்டவர்…. பழைய நினைவுகளில் முழ்கியவரை ‘’வாங்கக்கா போகலாம்’’….. எனப் பங்கஜம் அழைக்கவும்….
‘’ம்ம்’’ என்றவர் ‘’கார் புக் பண்ணிப் போகலாம் பங்கஜம். இன்னும் பஸ் போய் நின்னுகிட்டு இருக்கணுமே’’ எனச் சொல்லி இருவரும் காரில் நாடக நடக்கும் சபாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.
உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்த ரமணியம்மாள் மேடையைப் பார்க்க அங்கே உருக்கமாக ….
‘’என் கணவர் இறக்கவில்லை. நான் நம்ப மாட்டேன்….ஏற்கமாட்டேன் இதையை...... பொய் சொல்லாதீங்க …. எமனிடமிருந்து கணவனை மீட்டது அந்தக் காலத்து சாவித்திரி … நான் என் கணவனை எமனிடமருந்து மீட்க போற நவீன உலகத்து நயன்தாரா’’ எனப் பேசிய பெண்ணை
ப் பார்த்தவர்….
‘’பங்கஜம்…. இ… இது… தீபிகா’’ தானேயென நடுக்கத்துடன் சொல்ல….
‘’அக்கா… என்னாச்சு’’ என்றவரும் பதட்டமாகக் கேட்பதற்குள் ரமணியம்மாள் விழிகள் நிலைகுத்தி மேடையை வெறித்துப் பார்த்தது.
தொடரும் ...
கதை படிப்பவர்கள் உங்க கருத்துக்களை கூறுங்கள் பிரியங்களே....



டைரி….
“ஒரு காதலுக்கு
இறுதிச் சொல்
இருக்குமென நம்பினேன்…
ஆனால் நம்ம அன்பினில்
கடைசிச் சொல்
சத்தமில்லாத மரணத்தை
தேடியது!”…..
“கிருத்தி … ஏய் கிருத்திகா உன் போன் உசிரே போகது உசிரே போகது பாடித் தொலைக்கது ….
எங்கே இருக்கே நீ?” எனக் கத்தினாள் மணிமேகலை.
“வரேன்டி … ஏன் இப்படி ஸ்பீக்கரை முழங்கியவளாக ஊருக்கே சேர்ந்து கூப்பாடு போடுகிற” என்று குளியலறையிலிருந்து அப்போது தான் குளித்து எளிமையான சுரிதார் அணிந்து வந்தவளை முறைத்தாள் மணிமேகலை.
“உன் போன் உசிர விட்டு ரொம்ப நேரமாச்சு. ஏன்டி உனக்கு வேறு ரிங் டோன் கிடைக்கலயா… உசிரே போகது…. இங்கே தான் பசியிலே உசிரு போகது… வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கரண்ட் சார்ஜ் கட்ட முடியாமல் உசிரு போய்கிட்டு தான் இருக்கே. இதிலே இது வேற… இப்ப உள்ள டிரெண்டிங் சாங் வைத்து வைப் பண்ணினால் தானே பசி கூட ஓடி விடும்’’ என்றவளுக்குப் பதில் சொல்லாமல் தன்னை அழைத்தவர்களுக்கு ரிங் விட்டாள் கிருத்திகா….
‘’சார்… வணக்கம் சார்… கூப்பிட்டு இருந்தீங்க …..
ஓ… நிஜமா சொல்லிறீங்களா….
ஏம்மா சும்மா நான் போன் பண்ணப் போறனா… நிஜமா தான் சொல்லுகிறேன்’’ என்ற குரல்….
‘’ஓகே ஒகே சார்… ரொம்ப நன்றிங்க…..
…..
எத்தனை மணிக்கு அங்கே இருக்கணும்’’ எனக் கேட்டவளுக்கு….
‘’பன்னிரண்டு மணிக்கே வந்திரு ….வந்ததும் ஒத்திகை பார்க்கணுமலே’’…
அங்கே வந்தப் பதிலில் ‘’ஓ கண்டிப்பாக வந்துருவேன் சார்… எப்பவும் இந்தக் கிருத்திகா சொன்ன நேரத்திற்கு முன் அங்கே இருப்பாள். நீங்கப் பயப்படாதீங்க… இனி என் நடிப்பை பார்த்து நீங்களே அசந்து போய் இனி வரும் நாடகத்தில் கிருத்திகா இல்லாமல் உங்க நாடகத்தில் கதாநாயகி இல்லைனு பெயர் வரும் சார்’’….
‘’வளவள கொழ கொழ பேசாமல் சொன்னதை செய் மா… இப்பவே பஞ்ச் டைலாக்’’… என நக்கலாகப் போனின் குரலில்….
‘டேய் எனக்குனு ஒரு காலம் வரும். அன்னிக்கு இந்தக் கிருத்திகா வீட்டு வாசலிலே தேவடுகணக்காகக் காத்திருக்கணும்’… என மனதிற்குள் சொல்லியவள்…. புறத்தில் ‘’ஓகே சார் வந்து விடுகிறேன்’’ எனச் சொல்லி வைத்தவளோ….
‘’ஊ… ஊ’’… எனக் கத்தி ஆர்ப்பாட்டமாக மணிமேகலை பிடித்துச் சுற்றியவளின் சந்தோஷத்தில்….
‘’ஏய் விடுடி … தலை சுத்தது… விடுடி’’ எனக் கத்தியவளை விட்டதும் தலையைப் பிடித்துக் கொண்டு தள்ளாடியவள்….
‘’ஏய் லூசு… உனக்குச் சந்தோஷம் வந்தால் இப்படியா கரகாட்டமாடுவே’’ என்ற மணிமேகலையிடம்….
‘’ஏய் அந்தப் போன் யார் பண்ணினாங்க தெரிஞ்சா நீயும் இப்படி தான் குதிப்பே…. ஆடுவே’’ என்ற குதூக்கலமாகப் பேசியவள்….
‘’இன்னிக்கு நான் நாடகத்தில் கதாநாயகி பாத்திரத்தில் நடிக்கப் போறனே…. எத்தனை நாட்கள் ஓரத்தில் நிற்க வைத்து என்னைப் பாடப் படுத்தினானுங்க…. நடிக்கிறவளை ஏய் ஓவரா பர்ப்பாம்ஸ் பண்ணாதே… நீ அந்த இடத்தில் நிற்பது மட்டும் தானென நக்கலாகப் பேசினாங்க தானே. அங்கே இன்று நான் தான் முக்கியமான கதாநாயகி கேரக்டர் பண்ணப் போறோனே…
ஐ… ஜாலி ஜாலி’’ எனக் குதித்தவளோ… ‘’எப்படியோ நாடகம் முடிய இரவு பத்து மணி ஆனதும் நீயும் நானும் நைட் கடை பிரியாணி வாங்கிச் சாப்பிட போறோம்’’… என்றவள்….
‘’நாளைக்கு ஹவுஸ்ஓனர்க்கு வாடகை பாக்கி கொடுத்து விடலாம். அவர் வந்துக் கேட்டால் கிருத்திகா இருக்க பயமேன் என்று சொல்லு’’ என அவளின் பேச்சும் செயலையும் கண்ட மணிமேகலை… தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.
‘’ஏய் போதுமடி … போன்ல சொல்லற வச்சு ரொம்ப கனவு காணாதே…. அங்கே இப்படி சொல்லிக் கூட்டிட்டு போய் ஊமை கேரக்டராக வசனம் இல்லாமல் நிற்க வைப்பானுக’’ என்றவளிடம்…
‘’அது தான் இல்லையே…. எப்பவும் நான் தான் ஹீரோயின் தகரடப்பா குரலில் பேசிய சீவக சிந்தாமணி சிந்தலவாடி போய்விட்டாளாம்… அதனாலே… இன்னிக்கு நான் தான்’’ என்றதும்…
‘’ம்ம்…. நடத்தும்மா நீ நடத்து’’ எனக் கேலிக் குரலில் சொல்லிய மணிமேகலை ….
‘’நான் சாயங்காலம் வர முடியுமா தெரியல… என்ற மணிமேகலை … பணக்கார வீட்டிலிருக்கும் வயதான அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் ஹவுஸ் நர்ஸாக போய்க்கொண்டிருந்தாள்.
இப்போது வேலை இல்லை. சாயங்காலம் ஒருவர் வேலைக்காக வந்து பார்க்கச் சொல்லி இருந்தார்கள். அங்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கிருத்திகாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் மணிமேகலை.
இவளும் கிருத்திகாவும் இணைந்தே பெரிய கதை தான்…
இரவு வேலை முடிந்து பேருந்துக்காக நின்றிருந்த மணிமேகலை … ‘’அச்சோ சீக்கிரம் போகணுமே…. இல்லனா ஹவுஸ் ஓனர் மெயின் கேட் பூட்டி விடுவாரே’’ என்ற பதற்றத்துடன் பேருந்து வருகிற திசையைப் பார்த்தவளுக்கு அந்த நேரத்தில் தனியாக நிற்கவும் மனதிற்குள் அச்சம் எழுந்தது.
இரவின் இருண்மையில் கரண்ட் மரத்தில் எரியும் ஒளிவிளக்கு ஒசையில்லாத கண்ணாடி பந்தாக ஒளி வெள்ளத்தை அள்ளி வீசியது. காற்றில் மரங்களின் கிளைகள் அசைந்து ஆடுவதின் சலசலப்பில் மனதிற்குள் பயமேகம் சூழ்ந்து இருந்தது.
காற்றில் அசையும் மரக் கிளைகள் சலசலவென்ற ஒலி எழுப்ப, அது கூட மணிமேகலையின் மனதுக்குள் பரவிய பயத்தை ஊட்டியது. தனிமையின் நடுவே அவள் மனது சற்று நடுங்கியது.
அதுதான்… திடீரென்று படீர் என்ற சத்தம்… ‘’அச்சோ’’ என்றவள் முழு இருட்டில் நின்று விட்டாள் அச்சத்தில்.
வெடித்தது இத்தனை நேரம் அங்கே ஒளி பரப்பிக் கொண்டிருந்த கண்ணாடி பந்து வெளிச்சத்தில் மரக்கிளை ஒன்று உடைந்து பேருந்து நிலையத்தின் இருக்கும் பயணியர்களின் நிழல் குடை மேலே விழந்தது அதீதமான சத்தத்தில்….
அந்தச் சத்தத்தில் சிறது சத்தமிட்டு அலறியவளை…
"ஹய்யோ! யாருடா சுடிதார் ரெப்பா இப்படி சாலையில சத்தம் போட்டு ஏங்க அலறீங்க:. உங்க சத்தத்தில் தூங்க போக நினைச்சு கிளம்பிய பேய் பிசாசு ரத்தக்காட்டேரி திரும்ப வந்து விடப் போகது"
என்ற ஓர் அழகான நெடிய குரல்…
மணிமேகலை பதறியபடி திரும்பினாள். பால்போல வெண்மை கலந்த ஒரு மெகா சல்வார்… அணிந்த பெண். கண்களில் ஊசி போடும் நகைச்சுவை!
"நீங்கச் சாயின் படம் பார்றீங்களா? அந்த ஹீரோயின் எப்போவும் சுடிதார் நழுவி நழுவி விழற மாதிரி தான் நீங்க இருக்கீங்க!"
என்று சொன்னவளே,
"இவ்வளவு நேரமா நீங்கதான் இங்க தனியாகத் தானே நிக்கறீங்க? நா வந்துட்டேன்னா பயந்து வீழ்ந்துருவீங்க போல!" கலாய்த்துச் சிரித்தாள்.
மணிமேகலை சற்று நெளிந்து, "நீ யாரு?"
"நா? நான் வந்து... பேருந்து நிறுத்த ராணி! இங்க தினமும் பஸ் இல்லாத இடத்துல சினிமாவில் ஜீப்பூம்பா என்றுதும் சட்னு வரும் பூதம் அல்ல… ஏஞ்சல்… சின்ரெல்லா உன் சத்தத்தில் யாருடா இது என்று ஓடி
வந்தேன் !" என்று நாடகப் பாணியில் சொல்லியதும்
‘’ஹாஹா’’ எனச் சிரித்த மணிமேகலை…
‘’இந்த இடத்தில் தனியே நிற்கிறேன் பயந்து போனேன். எனக்குத் துணையாகத் தேவதை சின்ரெல்லா வருது பாரேன்’’ எனக் கன்னத்தில் கை வைத்துப் பேசியவளைப் பார்த்தவளோ முறைக்க …
‘’ஏதோ பாவமே விரைந்து ஓடி வந்தால் நக்கலாக’’ என இடையில் கை வைத்துக் கேட்டவளிடம்….
‘’அட நீ வேற ஏன்ம்மா… நானே பீதியிலே நின்னுகிட்டு இருக்கேன். வேலை முடிய ரொம்ப நேரமானாலும் ரேஸ் குதிரையாக ஓடி வந்தால். பஸ்ஸை காணாம். வீட்டுக்குப் போவதற்குள் நேரமாயிரும்… ஹவுஸ் ஓனர் கதவைப் பூட்டிட்டா நாளைக் காலை ஆறு மணிக்கு முன் திறக்கமாட்டார்… அதைக் கேட்டேன் வீடே காலி பண்ணு சொல்லிக் கம்பராமாயணம் வாசிப்பார்’’ எனப் புலம்பிய மணிமேகலையை பார்த்துச் சிரித்தவளோ….
‘’இது தானா…. எனக்குமே இதே பிரச்சினை தான்’’ என்றவளை மணிமேகலை ஆராய்ச்சி பார்வை பார்க்க….
"இதே தான்னா என் ஹவுஸ் ஓனர் வீட்டுல என்ன செஞ்சாங்க தெரியுமா?"
"என்ன?"
"ஓர் நாள் லேட்டா வந்ததுக்காக, வீட்டுக்கு வெளியே ஒரு கட்டில் போட்டு, 'இது தாமதமாக வருபவர்களுக்கான தங்கும் பகுதினு (Late-Comers Rest Area) எழுதிப் பலகை வெச்சு வைச்சாங்க!"
அதைக் கேட்ட மணிமேகலைக்கோ முகம் சிரிப்போடு கலகலவென்று விரிந்து போனது.
"நீ சிரிக்கறே… நல்லா இருக்கு. இந்த நேரத்துல சிரிக்குறதுக்கு கூட ஒரு சாகசம் தான்!" என்று கிருத்திகா புன்னகையுடன் சொன்னாள்.
லேசான பெய்ய தொடங்கிய மழையின் மண் வாசனையும், அந்த ஒளியும், அந்த அசையும் மரக்கிளைகளும், ஒரு நொடி அந்தப் பயத்தைக் கழற்றி இருவரின் மனதுக்குள் ஒரு நெருக்கத்தை விதைத்தது.
இப்படி தான் பஸ் ஸ்டாப்பில் பார்த்துத் தோழியானவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போல வீடு எடுத்துத் தங்கினர்.
ஒருவர் வரத் தாமதமானால் இன்னொரு ஒருவரிடம் சொல்லி மாற்றி மாற்றி யாராவது ஒருவர் முன்னால் வந்து விடுவார்கள். அதனால் இரவு தாமதத்திற்கான பிரச்சினைகள் ஓய்ந்தது என நினைத்துப் பார்த்த மணிமேகலை… இன்று வரை கிருத்திகாவின் கலாட்டா பேச்சுகள், கலகலத்த சிரிப்பு என வலம் வருபவளை ஆச்சரியமாகப் பார்ப்பாள்.
அதுவும் அவள் பார்த்த வேலையில் வயதானவர் மரணத்தைத் தழுவி விட்டதால் அங்கு அவளுக்கு வேலை இல்லாமல் போய்யிருச்சு.
கிருத்திகா வருமானம் மட்டுமே.
மணிமேகலை வேறு வேலைக்கு முயற்சி பண்ணிக் கொண்டு தான் இருக்கிறாள். அவரசத்திற்கு எனப் போன இடத்தில் மனைவியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்லிச் செல்ல… அங்கே நடந்த கூத்தில் தெறித்து ஓடி வந்தவள் கிருத்திகாவிடம் புலம்பித் தீர்த்தாள் மணிமேகலை.
‘’பொண்டாட்டிக்கு உடம்பு முடியல…. பார்த்துக்க ஆள் கேட்டாங்கனு போனால்….
அந்தம்மா என்னடானா அவங்க புருஷனை நான் இழுத்து போய்யிருவேன் பேசது. அந்தம்மா புருசன் பொண்டாட்டியே என் தெய்வம் குலசாமி சொல்லி என்னை மேலே இருந்து கீழே வரை பார்ப்பது தெரியாமல் பார்க்கும் துச்சாதனன் வேலை பார்க்கிறான்… போதும்டா சாமி ஓடி வந்துட்டேன்’’ எனக் கிருத்திகாவிடம் பேசித் தீர்த்தவளிடம்….
‘’நாமிருக்க பயமேன். இந்தக் கிருத்திகா இருக்கே அஞ்சேல்’’ என்றவள் …
‘’விடுடி… அந்த ஆளை ஒரு மனுசனா நினைச்சு மனசை போட்டு வருத்திக்காதே… நல்ல இடமாகக் கிடைக்கும் வரை பொறுத்து போ’’… எனச் சொன்னாலும் இன்னும் மணிமேகலைக்கு சரியான இடமாக வேலை அமையவில்லை.
கிருத்திகா தான் வீட்டை அவளையெனப் பார்த்துக் கொண்டாலும் அவளுக்கும் நிரந்தரமான வேலை கிடையாது எனப் பல சிந்தனையோட்டங்களோடு நின்றவளை….
‘’ஏய் மேகலை…. என்ன அதிர்ச்சியா… எங்கடா கிருத்தி கதாநாயகி ஆகிவிட்டால் இந்த வீட்டை விட்டுப் போய் விடுவாளோ… என நினைப்பே’’ எனச் சொன்னதும்….
‘’நான் ஏன்டி அப்படி நினைக்கப் போறேன். இம்சை ஒழிஞ்சு இருக்க மாட்டேன்’ எனக் கேலியுடன் சொன்வளை….
‘’அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடி தங்கம்…. ஏனா…. இந்த மணிமேகலை இல்லனா கிருத்திகா இல்லை… அந்தளவுக்கு உன் மேலே லவ்ஸ்’’ என அவளின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டவளை என்றவளை….
‘’ஏய் லூசு… அறிவிருக்காடி’’… எனத் தன் கன்னத்தைத் துடைக்க….
அப்போது கதவின் அருகே வந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தவர்களோ…. வாய் மேலே கை வைத்து நின்ற ஹவுஸ் ஓனர் அம்மா….
‘’என்ன கூத்து இது …. கருமம்’’ எனக் கேட்டவரிடம்….
‘’அச்சோ… அது சும்மா ஆண்டி’’…. என மணிமேகலை வேகமாகச் சொல்லியவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவர்….
‘’ஆம்பிளை ஆம்பிளை கல்யாணம் பண்ணுக்கிறாங்கனு சொல்லறாங்க. அதுபோலப் பொம்பளை பொம்பளை கல்யாணம் பண்ணிக்கிறாங்க பேசாறாங்க… அப்படியா நீங்க இரண்டு பேரும்’' சிறு கோபமும் திகைப்புமாக… கேட்டவரை….
‘’அய்யோ அப்படி இல்லைங்க ஆண்டி… அவ விளையாட்டுக்குச் செய்தாள். லூசு அவள்…. ஏய் கிருத்தி.... இங்கே பாரு ஆண்டி நம்மளை தப்பா நினைக்கிறாங்க’’ என்றதும்….
‘’அதைப் பற்றி எனக்குத் தெரியாதுப்பா… ஆனால் உன் மேலே லவ்ஸ் இல்லைனு நீ சொல்லு பார்க்கலாம்’’ குறும்பாகச் சொன்னவள்….’’எனக்கு வேலை இருக்கு. நீயே அவங்க கிட்டே பேசிக்கோ’’ எனக் கண் சிமிட்டியவள் தான் கொண்டு போகும் பையில் எடுத்து வைத்துக் கொண்டிருவளை கொலைவெறியாகப் பார்த்துவிட்டு….
‘அவளுக்கு இன்னிக்கு ஒரு நாடகத்தில் நடிக்கப் போறா ஆண்டி. அதை என்கிட்டே நடிச்சு காமிச்சுகிட்டு இருந்தாள்’’ எனத் திணறிச் சொல்லுகிறவளை முறைத்தவர்…
‘’ம்க்கூம்’’ என்றவர் ‘’என்னமோ சொல்லறே… சரி அதை விடு தேதி பத்து ஆச்சு எப்ப வாடகை தரப் போறீங்க’’..... என்றவரை….
‘’தந்துவிடுகிறோம்’’ எனச் சமாளித்து அனுப்பி வைத்தாள் மணிமேகலை… அதைப் பார்த்தபடி இருக்கையில் நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருருந்தவளை கழுத்தை நெறிக்க…. கையைக் கொண்டு போன மணிமேகலை ….
‘’எதுல விளையாட்டு இல்லையாடி. அந்தம்மா என்ன நினைச்சு இருக்கும்’’ எனக் கன்னத்தில் கை வைத்து அமர்ந்தவளை…. கண்டு வாய் விட்டுச் சிரித்தாள் கிருத்திகா.
கிருத்திகா நாடகங்களில் நடிக்கும் நாடக மேடை நடிகை தான். சின்ன சின்ன வேடங்களில் நடிப்பவள். இன்று தான் அவளுக்கு முக்கியமான வேடம் வந்துவிடு எனச் சொல்லவும் ஆர்ப்பாட்டமாகக் கிளம்பும்போது நடந்த கூத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உருண்டு புரண்டு சிரித்தவளோ…. ‘’மணி இன்னிக்கே பணம் கிடைச்சிரும். பார்த்துக்கலாம்’’ எனப் புன்னகையுடனே சொல்லிச் சென்றாள் கிருத்திகா.
நாடக சபா சென்றவளை …. ‘’வாம்மா…. எங்கே நீயும் காலை வாரி விட்டுருவீயோ நினைச்சேன்’’ என்ற சபாபதியிடம்….
‘’சார் நான் ஏன் காலை வாரி விடப் போறேன்?. இப்ப இருக்கிற நிலைமைக்கு உங்க வேலையைப் பார்க்கச் சொன்னாலும் நான் பார்ப்பேன்’’ லேசான புன்னகையை அதரங்களை பூசிக் கொண்டிருந்தவளை….
‘’எப்படா சபாபதி ஒழிவான்’’ காத்திருக்க….
‘’அச்சோ சாரே…. நீங்கத் தப்பா புரிஞ்சு பேசறீங்க’’… என நமுட்டு சிரிப்பை உதிர்த்தவளை….
லேசான முறைப்புடன்… ‘’உங்களை எல்லாரையும் இழுத்து வச்சு தேரை நகர்த்தி நிலைக்குக் கொண்டு வருவதற்குள் நான் படுகிற பாடு இருக்கே’’ எனத் தொடங்கியவர்….
‘’பேசிகிட்டே இருந்தால் நேரம் போய்யிரும் …. வசனப் பேப்பரை வாங்கிப் படித்து மனப்பாடம் பண்ணிட்டு இரண்டு மூன்று முறை ஒத்திகை பார்க்கலாம் கிருத்திகா… இன்னும் யார் பேசக் கிடைப்பாங்க வெட்டியாகப் பேசிகிட்டு இருக்காதே’’ எனச் சொல்லிச் செல்கிறவரிடம்….
‘’சார்… சார்’’ என அழைத்தவளிடம் ‘’இனி நாடகம் முடிகிற வரை பேச்சு இருக்க கூடாது சொல்லிட்டேன்’’ என அங்கிருந்து சென்று விட்டார் சபாபதி.
வசனப் பேப்பரை வாங்கியவள் அதன் தலைப்பைப் பார்த்தும் அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
‘’மரணத்தை ஏற்காத நவீன மனைவி’ என்ற நாடக தலைப்பில் சிரித்தவள் அவளுக்குரிய வசனங்களை மனப்பாடம் பண்ணிவிட்டு… மாலை
ஒப்பனை அறையில் இருக்கும் ஆளுயுர கண்ணாடி முன் தன் புடவை திருத்தி, முகத்தில் பூசிக் கொண்ட பவுடர் லிப்ஸ்டிக் சரி செய்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா….
‘’இன்று நாடகம் முடிந்தது பேசிய முழு பணத்தை வாங்கி விடணும் கிருத்தி. இல்லனா நம்மல ரோடு தேய்ய நடையாக நடக்க விட்டுருவார் இந்தச் சபாபதி’’…. எனக் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்திடம் பேசினாள் கிருத்திகா.
***************************************************
‘’பங்கஜம் கிளம்பிட்டீயா… போகலாமா… நாடகம் தொடங்குவதற்குள் போகணும்’’ என்ற ரமணியம்மாளின் குரலில் ….
‘’அக்கா இருங்க வரேன்…. வேலை முடிஞ்சு இந்த மனுஷன் வரக்கிறப்ப…. காபி சாயங்காலம் கொறிக்க மேசையில் எடுத்து வைச்சு வரேன்…. மருமகன் பேத்தி பேரன் எடுத்தாலும் இந்த வீட்டு வேலை ஓயாது. பொண்டாட்டி வெளியே எப்பாவது தானே போறானு அட்ஜஸ்ட் பண்ணுவோம் இல்ல…. எல்லாவற்றிற்கும் கொடுப்பினை வேணும்…. எனக்கு எங்க எனக்கு அது கிடைக்கது'’ எனப் புலம்பியபடி காபியை பிளாஸ்க் ஊற்றி வைத்து மிக்ஸர், பிஸ்கெட், தண்ணீர் முதல் எடுத்து வைத்தவரைப் பார்த்த ரமணிம்மாளுக்கு கொஞ்சம் பாவமாகத் தான் இருந்தது.
ஐம்பது வயதிலும் இன்னும் ஒவ்வொன்றும் எடுத்து வைத்துக் கவனித்தாலும் குற்றம் குறை கண்டிப்பிடிப்பார் பங்கஜம் வீட்டுக்கார்.
அருண் அப்பா இப்படி இருந்தில்லையே. ‘’எப்பவும் ரொம்ப வேலையை இழுத்துக்காதே. என்னை நான் பார்த்துக்க மாட்டேனா… நீ உடம்ப வருத்திக்காதே ரமணி’’ எனச் சொல்லிக் கொண்டே இருப்பாரென நினைத்தவருக்கு… அவர் இருக்கும்வரை நிறைவான வாழ்க்கை தான். குற்றம் குறை சொல்ல எதுவுமில்லை. ஆனால் அதன்பின் நினைத்துப் பெருமூச்சு விட்டவர்…. பழைய நினைவுகளில் முழ்கியவரை ‘’வாங்கக்கா போகலாம்’’….. எனப் பங்கஜம் அழைக்கவும்….
‘’ம்ம்’’ என்றவர் ‘’கார் புக் பண்ணிப் போகலாம் பங்கஜம். இன்னும் பஸ் போய் நின்னுகிட்டு இருக்கணுமே’’ எனச் சொல்லி இருவரும் காரில் நாடக நடக்கும் சபாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.
உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்த ரமணியம்மாள் மேடையைப் பார்க்க அங்கே உருக்கமாக ….
‘’என் கணவர் இறக்கவில்லை. நான் நம்ப மாட்டேன்….ஏற்கமாட்டேன் இதையை...... பொய் சொல்லாதீங்க …. எமனிடமிருந்து கணவனை மீட்டது அந்தக் காலத்து சாவித்திரி … நான் என் கணவனை எமனிடமருந்து மீட்க போற நவீன உலகத்து நயன்தாரா’’ எனப் பேசிய பெண்ணை
ப் பார்த்தவர்….
‘’பங்கஜம்…. இ… இது… தீபிகா’’ தானேயென நடுக்கத்துடன் சொல்ல….
‘’அக்கா… என்னாச்சு’’ என்றவரும் பதட்டமாகக் கேட்பதற்குள் ரமணியம்மாள் விழிகள் நிலைகுத்தி மேடையை வெறித்துப் பார்த்தது.
தொடரும் ...
கதை படிப்பவர்கள் உங்க கருத்துக்களை கூறுங்கள் பிரியங்களே....



