• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளம் 1

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
15
14
3
Coimbatore
அத்தியாயம் 1.,


"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க... இந்த நாவல், சீரியல் ல எல்லாம் வரது மாதிரி மணமேடைல மாப்பிள்ளைக்கு கல்யாணம் நின்ன உடனேயே இன்னொரு அப்பாவி பொண்ணை பிடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறது, படத்துல பார்க்கவும் புக்குல படிக்கவும் வேணா நல்லாருக்கும். நிஜ வாழ்க்கைல எரிச்சலா தான் இருக்கும்", என அவன் தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசினான்.


"இப்போ என்ன தான் சொல்ற, இப்ப கல்யாணம் பண்ணாம வயசாகி நரை விழுந்த பின்ன அறுபதாம் கல்யாணம் பண்ணப் போறியா.. மாப்பிள்ளை நீயும் ரெடி, உன்னை கட்டிக்க அந்த பொண்ணுக்கும் சம்மதம். அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு. இப்பவே வயது முப்பத்து ஆறு ஆகுது", என அவனின் அன்னை பொறுமையை பறக்க விட்டுக் கொண்டு பேசினார்.


"அய்யோ அம்மா... இதுவே எரிச்சலா இருக்கு. நான் என்ன சந்தை ல விக்கிற மாடா, ஆடா ஒருத்தி வேண்டானு சொல்லி இன்னொருத்தி பேரம் பேச", அவனுக்கே அவன் நிலை ஏன் இப்படி என்று தோன்றியது.


"ருத்ரா எனக்கும் வயசாகிட்டே போகுது. உன் தம்பிக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. நீ என்னடான்னா கல்யாணம் பண்றதுக்கு என் உயிரையே வாங்குற. தயவு செஞ்சு என் பேச்சைக் கேளு", என அவர் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார்.


"எனக்கு இஷ்டம் இல்ல. கல்யாணம் கன்றாவினு இனி யாரும் வந்தீங்க அவ்ளோதான்", என ருத்ர தாண்டவம் ஆடினார் ருத்ரவன்.

"அண்ணா... நாங்க சொல்றதை கேளு", என அவன் பின்னே ஓடினான் ஆதவன் ருத்ரவனின் தம்பி.


"அமைதியா போயிடு ஆது, செம்ம டென்ஷன் ல இருக்கேன்", என அவன் கத்தி விட்டு வெளியில் செல்ல முயல, அவன் முன்னே வந்து நின்றாள் அவள்.


"அட பாப்பா ஓரமா போய் விளையாடு, பெரியவங்க சத்தம் போட்டுட்டு இருக்கிற பக்கம் என்ன விளையாட்டு", என அவளைப் பார்த்து சொல்லியவன் கோவமாக மண்டபம் விட்டு வெளியேறினான்.


அவன் சொன்ன பாப்பாவில் மனம் உடைந்து நின்று இருந்தாள் கவித்ரா.

"என்னாச்சு கவி", என ஆதவன் அவளருகில் வர..

"அவருக்கு என்னை அடையாளம் கூட தெரியல ஆது", என முகம் வாடினாள் கவித்ரா.

"அவனுக்கு இருக்கிற பிஸி வொர்க் ல அம்மாவையும் என்னையும் மறக்காம இருக்கிறதே அதிசயம் தான்", என்றான் ஆது..

"உன் அண்ணனுக்கு கொடி தூக்குறது தானே உன் வேலை", என கடுப்பாக சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.


அவள் சென்ற பின், "ஆது ஹர்ஷு அழறா", என அவனின் மனைவி திவ்யா சத்தமிட..

"வரேன் திவி", என அவளிடம் சென்றான் ஆதவன்.


ஆதவனுக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள்... ஹர்ஷவி, ஹர்ஷத்.



வெளியில் சென்ற ருத்ரவனிற்கு கோவம் கோவமாக வந்தது. அவன் வெளியில் வந்த வேகத்தில் சுற்றம் கவனிக்காமல் வந்தவனுக்கு பின்னர் தான் உரைத்தது. மீடியா விடம் மாட்டிக் கொண்டது.

வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதை தான். அவனுக்கு வயது அதிகம் என்று மீடியா தலைப்பு செய்தியாக போட்டதில் தான் மணப்பெண் மண்டப்பத்தை விட்டு ஓடி இருந்தாள்.

ஆனாலும் இயக்குனரான ருத்ரவனுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும் அவனின் வயது அவனால் சொல்லப்பட்டால் மட்டுமே வெளியில் தெரியும். என்றும் இளமை என்பது போல தோற்றம் அவனுக்கு.

கட்டுக்கோப்பான உடலை உடற்பயிற்சியில் செதுக்கி, அடர்ந்த கேசம் ஆர்பரிக்க கோதுமை நிறத்தில் இருந்தவனை ரசிக்காத கண்கள் இல்லை.

அதிலும் அவனின் வெற்றிப் படங்கள் எல்லாம் மேலும் அவனை மெருகேற்றி இருந்தது.


"சார்... சார்... ", என தேனீ கூட்டம் போல் மீடியா குழுவினர் அவனை சூழ்ந்து கேள்விக் கணைகளை தொடுக்க அனைத்திற்கும் அமைதியாக பதில் சொன்னவனின் மனம் பேரலையாக துள்ளியது கோவத்தில்.



"சார்.. உங்களுக்கு அன்கில் ஏஜ்ன்னு உங்க ஃபியான்ஸி ஒடிட்டாங்களாம்",

"குறை எதுவும் இருக்கா உங்களுக்கு",

"அவங்களுக்கு வேற எதும் தொடர்பு இருக்கா", என வரிசையாக கேள்விகள் வர..


அவனோ, "என்னை பாத்தா அங்கிள் மாதிரியா இருக்கு.. அப்படியே இருந்தாலும் என்ன பிரச்சனை உங்களுக்கு",

"தென் குறை எதும் இல்லனு தான் நினைக்கிறேன். எதுக்கும் டாக்டர் ரிப்போர்ட் ஒன்னு உங்க மீடியா சேன்னல் க்கு அனுப்பி வைக்கிறேன்",

"என்னை பத்தி மட்டும் தான் கேள்வி கேட்கணும். அதுவும் என் பெர்மிஷன் இருந்தால் மட்டும். மத்தவங்க லைஃப் ல மூக்க நுழைக்க நீங்க யாரு", என ஒவ்வொரு கேள்விக்கும் இடியாக பதிலை சொல்லியவன் காரில் ஏறி சீறிக் கொண்டு செல்ல, நசநசவென மீடியா கூட்டம் கலைந்து போனது.



அவனின் குணம் பற்றி தெரியாமல் மீடியா அவனை வாயைக் கிளறி வாங்கிக் கட்டிக் கொண்டு அவரவர் அலுவலகம் நோக்கி புறப்பட்டது.

இங்கோ ஜிவு ஜிவு என கோவம் மின்னும் முகத்துடன் அறைக்குள் சென்று கதவை கோவமாக அடித்தான். அவன் வேகத்தில் தேக்கு மர கதவு லேசாக நடுங்கியது.

###

"கவி", என்ற அழைப்புடன் அவளின் அருகில் சென்றான் ஆது.

"மரியாதையா போயிரு. மாமானு பாக்காம நல்லா திட்டிருவேன், என்றாள் அவள் கோவமாக.

"நீ திட்டு டி செல்லம். உனக்கு இல்லாத உரிமையா?", என ஆது சிரிக்க.

"அட அறிவு கெட்ட மாமாவே உன் அண்ணா கல்யாணம் நின்னு போயிருக்கு, நீ பல்லை காட்டிட்டு இருக்க", என்று கவி சத்தமில்லாமல் சொன்னவுடன்.

"அவனுக்கு அந்த பொண்ணை பிடிக்கலடி. எப்டியாச்சும் கல்யாணம் நிக்கணும்னு எதிர் பாத்துட்டு இருந்தான். அதுக்கு தோதா அந்த பொண்ணு ஒடிருச்சு", என்றவனைப் பார்த்து,

"எல்லாம் உன் அம்மாவ சொல்லணும். எப்படித்தான் உங்க ரெண்டு பேரையும் மேக்கிறாங்களோ?", என சலிப்பாக சொல்ல..

"சரி அதை விடு, நீ ஏன் இப்படி மூஞ்சிய வச்சுட்டு இருக்க", என அவளின் முகத்தை இரு பக்கமும் திருப்பி பார்த்து கேட்க.

"உன் அண்ணனுக்கு என்னை பார்த்தா பாப்பா மாதிரியா இருக்கு", என்றாள் குறையாத கோபத்துடன்.



"பாப்பா வா? நீயா?", என அவன் அதிர.

"ஆமா... என்னைப் பாப்பானு சொல்லிட்டு போறாரு. நான் ஒரு சீஃப் ரிப்போர்ட்டர் தெரியும்ல", என்றாள் அவள் முறைத்துக் கொண்டு.

"ஹோ தெரியுமே. சீஃப் ரிப்போர்ட்டர் கவித்ரா.. போன மாசம் நீதான ரொம்ப பேமஸ்", என்றான் சிரிப்புடன்.


"ஆமா ஆமா, எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா அவரு. அவரை இன்டர்வியூ எடுக்கிறது அவ்ளோ ஈஸி இல்ல.. அதை நான் பண்ணிட்டேன்", என்றாள் பெருமையாக.



"ஆமா டி ரொம்ப பெரிய ஆள் தான். இன்னும் ஒரு மாசத்துல தூக்குல போட்டு இருப்பாங்க", என்றான் அவன்.

"தெரியும்.. ஆனா அவர் அவ்ளோ மோசம் இல்ல.. சாப்ட் ஹார்ட்டெட் பெர்சன்", என கவி ஜெயிலில் இருக்கும் கைதி ஒருவருக்கு இரக்கப்பட்டாள்.


"சரி விடு... நீ முடிஞ்சா ருத்ரனை இன்டர்வியூ எடுத்துக் காட்டு பாப்போம்.. நீதா பெரிய ஆளாச்சே", என உசுப்பி விட..


"உன் நொண்ணன் பெரிய அப்பாடக்கரு. அவருக்காக எல்லாம் என் டைமை வேஸ்ட் பண்ண முடியாது. என்னை பாப்பாணு சொன்னதே அணையாத நெருப்பா இருக்கு", என அவள் சொல்ல.

அவளின் சொல்லும் அதற்கு அவள் காட்டிய பாவனைகளும் அவனை சத்தமாகவே சிரிக்க வைத்து விட, "போடா", என சொல்லி
விட்டு அவள் எழுந்து விட,

"ஒன்னும் சொல்லாம போற. சேலெஞ் அக்ஸப்ட் பண்ணு", என்றான் ஆதவன்.

"பண்றேன் பண்றேன்", என சொல்லிவிட்டு அவள் நகர்ந்து விட.

"ஏய் மென்டல்...அவனோட பெர்சனல் லைஃப் கேள்விகளும் கேக்கணும்" என்றான், அண்ணனின் மனதில் என்ன உள்ளது என தெரிந்து கொள்ள ஆர்வம் அவனுக்கு.

ஆதவனின் ஆர்வம் மற்றும் ஆசைக்கு, அழகாய் ருத்ரனிடம் சிக்கிக் கொள்ளப் போகிறாள் கவித்ரா.


"ஹுக்கூம்...பெரிய ராஜ ரகசியம். நீ கேட்டதை விட என்னால பெஸ்ட்டா இன்டர்வியூ பண்
ண முடியும்", என அவள் சென்று விட, ஆதவன் சிரித்துக் கொண்டான்.

அவனிடம் மாட்டி இவள் முழிக்கப் போகும் முழி இப்போதே அவன் மனக்கண்ணில்.
 
Last edited:

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
15
14
3
Coimbatore
அண்ணனை பத்தி தம்பிக்கு தெரியாதா, இருந்தும் கவித்ராவை கோர்த்து விடுறான் 🙄🙄🙄🙄🙄🙄
யானை காதுல எறும்பு நுழைவது இல்லையா sis 😀