அத்தியாயம் 5.,
ருத்ரன் மதிய நேரம் தூங்க ஆரம்பித்தவன் இரவு ஆகியும் எழவில்லை. தூக்க மாத்திரையின் உதவியால் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான்.
கீழே அனைவரும் இரவு உணவிற்கு தயாராகிக் கொண்டிருக்க, அவன் மட்டும் மதியத்திற்கு பின் கவியின் கண்களில் படவே இல்லை. "சரியான தூங்கு மூஞ்சி, முசுடு" என அந்த லிஸ்டில் சேர்த்துக் கொண்டாள்.
எப்போதும் போல திவ்யா குழந்தைகளுக்கு உணவு பதம் பார்த்து தர, ஆதவன் ஊட்ட ஆரம்பித்தான்.
"டேய் அப்பா ஆன மாமா" என்றபடி அவனருகில் அமர்ந்தாள் கவி.
"கிறுக்கு மாதிரியே பேசற கிறுக்கி, ஒன்னும் விளங்கல" என்றான் ஆதவன் கையில் இருக்கும் இட்லி துண்டை குழந்தைக்கு கொடுக்கும் வண்ணம் பிசைந்து கொண்டு
"என்ன உன் அண்ணனை காணோம். சார் கீழ வருவாங்களா" என்றபடி மேலே பார்க்க.
"ஏன் என் அண்ணனை சைட் அடிக்க முடியலனு ஃபீலிங்கா" என கேட்டான் ஆதவன்.
"அடடா அந்த பன் மண்டையை நான் சைட் அடிக்கிறேனா, நான் சைட் அடிக்க நிறைய குவாலிட்டி இருக்கணும். உன் அண்ணன் எல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை" என்றபடி இட்லியை விழுங்கினாள்.
"நீ மட்டும் என்ன ரதியா" என்றான் இவன்.
"ரதி இல்ல கவி, எனக்கு நான் நானா இருக்கேன்" என்றவளை முறைத்த ஆதவன், "என் அண்ணனை இன்னும் நீ ஃபார்ம் ல பாத்தது இல்ல, பாத்த அப்புறம் தெரியும் அவனோட வொர்த் என்னன்னு" என சொல்லியபடி உணவு ஊட்டிக் கொண்டு இருந்தான்.
"என்ன பெரிய வொர்த்" கேட்டுக் கொண்டு முகத்தை பழிப்பு காட்டி சட்டென திருப்பிக் கொண்டாள் கவி.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இறங்கி வந்தான் ருத்ரன். தலைக்கு
குளித்து இருந்தான் போல, தலையை கையால் உதறிக் கொண்டு இறங்கி வந்தான்.
பிளாக் கலர் ஜீன் ஒயிட் கலர் டீ சர்ட்டில் அம்சமாக வந்தவனை ஆவென பார்த்திருந்தாள் கவி.
மீண்டும் கேசத்தை சலசலக்க உதறினான் ருத்ரன். ஈரம் காயாத நிலையில் அவனின் முடியில் இருந்த நீர்த்துளி சட்டென அவள் கண்ணில் தெறித்தது. கண்கள் படபடக்க நீரை மீறி அவனை பார்த்தாள் அவள்.
அழகன் தான் ஒப்புக் கொண்டாள், பேரழகன் தான் ஒப்புக் கொண்டாள். காற்றில் ஆடும் வசீகர கேசம் தான் என தான் கேலி செய்த அனைத்தும் ஒரே நொடியில் மாறிப் போனதை அறியாமல் அவனுக்கு நூற்றுக்கு ஆயிரம் மதிப்பெண் கொடுத்து ரசிப்பில் இறங்கி இருந்தாள் கவி.
அவளுக்குள் எதோ செய்ய, புரியாத உணர்வில் இருந்தாள். சற்று தெளிந்தவள், "அழகா இருந்தான்.. ஆனா" என யோசனையில் திரும்ப, அவளை குறுகுறுவென பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதவன்.
"ஒரு முக்கியமான இடத்துக்கு போறேன், நைட் டின்னர் அங்கதான். போயிட்டு வரென் ம்மா" என சொல்லிக் கொண்டு கவியின் மனதையும் அள்ளிக் கொண்டு அங்கு இருந்து சென்றான் அவன்.
அவன் சென்ற புறமே சென்றது அவள் பார்வை, சூரியனை தொடரும் சூரியகாந்தி போல.
"போதும் போதும்" என ஆதவன் கவியின் காதில் மெதுவாக சொல்லவும் தான், தன்னை மறந்து அவன் பின்னே சென்ற கண்களையும் மனதையும் உணர்ந்தாள்.
' ச்சை அசிங்கமா போச்சே... ஓவரா பேசுவானே ' என்று நினைத்துக் கொண்டே ஆதவனைப் பார்க்க,
"ரொம்ப ஹேன்சமா இருக்கானா, கண்ணெடுக்காம பாக்குற" என்றான் முகத்தை சாதாரனமாக வைத்துக் கொண்டு.
"ஆமா ஆமா ரொம்பத்தான்" என்றவள் எழுந்து சென்று விட்டாள். நின்றால் அவன் கேலி செய்தே ஒரு வழியாக்கி விடுவான். அவள் ஜொள்ளு விட்ட கதை தான் அங்கிருந்த அனைவரும் பார்த்தனரே...
திவ்யா அதை கவனித்தாலும், ருத்ரன் பார்த்த பார்வையும் பார்த்தாள். கவியின் மீது அவன் பார்வை நிமிடப் பொழுதில் பட்டு மாறியது. அந்த பார்வையில் வித்தியாசம் கண்டாள் திவ்யா.
அவருக்கு நல்லது நடந்தால் முதலில் மகிழ்ச்சியடைபவள் அவள் தான் குரு என்ற அக்கறை நிறையவே இருக்கிறது அவளிடம்.
யாரடி நீ மோகினி படத்தில் வரும் சரண்யா போல, அறை முழுவதும் சுற்றி சுற்றி பெருமாளை தொடர்ந்து ஒவ்வொரு கடவுளையும் அழைத்து தனக்குள் வந்த உணர்வை வார்த்தையால் வடிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் கவித்ரா.
இவள் இப்படி இருக்க, காரில் ஏறியவன்,
மிரர் பார்த்து தன் சிகையை கலைத்து வாரிக் கொண்டு அழகாய் சிரித்தான். அவள் மீது தெறித்த தண்ணீரை நினைத்து அவனுக்கும் வெட்கம் வந்தது.
இதை மட்டும் கவி பார்த்திருந்தால், அவனின் மெருக்கூட்டப்பட்ட அழகில் குப்புற கவிழ்ந்து இருப்பாள். அத்தனை அழகாய் சிரித்தவனின் எண்ணம் எல்லாம் தன்னை கண்டது முதல் கண்ணெடுக்காமல் திண்பது போல பார்த்த கவியின் மீது தான்.
தன் அன்னையிடம் விவரம் சொல்லிவிட்டு செல்வதற்குள் அவனுக்கு உடலெங்கும் சில்லென்று ஆகிவிட்டது.
முதன் முறை ஒரு பெண்ணின் பார்வை அவனை இம்சிக்கிறது. கூடவே ரசனையைக் கூட்டுகிறது.
பதின்ம வயதில் நுழைந்தது போல, "இறகை போல பறக்கிறேனே" என்ற வரிகள் அவனை துள்ளலான மனநிலைக்கு மாற்றியது. சிறிது மாற்றமாகினான், மாற்றத்தை ரசித்தான் கூடவே அவளையும்...
ருத்ரன் மதிய நேரம் தூங்க ஆரம்பித்தவன் இரவு ஆகியும் எழவில்லை. தூக்க மாத்திரையின் உதவியால் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான்.
கீழே அனைவரும் இரவு உணவிற்கு தயாராகிக் கொண்டிருக்க, அவன் மட்டும் மதியத்திற்கு பின் கவியின் கண்களில் படவே இல்லை. "சரியான தூங்கு மூஞ்சி, முசுடு" என அந்த லிஸ்டில் சேர்த்துக் கொண்டாள்.
எப்போதும் போல திவ்யா குழந்தைகளுக்கு உணவு பதம் பார்த்து தர, ஆதவன் ஊட்ட ஆரம்பித்தான்.
"டேய் அப்பா ஆன மாமா" என்றபடி அவனருகில் அமர்ந்தாள் கவி.
"கிறுக்கு மாதிரியே பேசற கிறுக்கி, ஒன்னும் விளங்கல" என்றான் ஆதவன் கையில் இருக்கும் இட்லி துண்டை குழந்தைக்கு கொடுக்கும் வண்ணம் பிசைந்து கொண்டு
"என்ன உன் அண்ணனை காணோம். சார் கீழ வருவாங்களா" என்றபடி மேலே பார்க்க.
"ஏன் என் அண்ணனை சைட் அடிக்க முடியலனு ஃபீலிங்கா" என கேட்டான் ஆதவன்.
"அடடா அந்த பன் மண்டையை நான் சைட் அடிக்கிறேனா, நான் சைட் அடிக்க நிறைய குவாலிட்டி இருக்கணும். உன் அண்ணன் எல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை" என்றபடி இட்லியை விழுங்கினாள்.
"நீ மட்டும் என்ன ரதியா" என்றான் இவன்.
"ரதி இல்ல கவி, எனக்கு நான் நானா இருக்கேன்" என்றவளை முறைத்த ஆதவன், "என் அண்ணனை இன்னும் நீ ஃபார்ம் ல பாத்தது இல்ல, பாத்த அப்புறம் தெரியும் அவனோட வொர்த் என்னன்னு" என சொல்லியபடி உணவு ஊட்டிக் கொண்டு இருந்தான்.
"என்ன பெரிய வொர்த்" கேட்டுக் கொண்டு முகத்தை பழிப்பு காட்டி சட்டென திருப்பிக் கொண்டாள் கவி.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இறங்கி வந்தான் ருத்ரன். தலைக்கு
குளித்து இருந்தான் போல, தலையை கையால் உதறிக் கொண்டு இறங்கி வந்தான்.
பிளாக் கலர் ஜீன் ஒயிட் கலர் டீ சர்ட்டில் அம்சமாக வந்தவனை ஆவென பார்த்திருந்தாள் கவி.
மீண்டும் கேசத்தை சலசலக்க உதறினான் ருத்ரன். ஈரம் காயாத நிலையில் அவனின் முடியில் இருந்த நீர்த்துளி சட்டென அவள் கண்ணில் தெறித்தது. கண்கள் படபடக்க நீரை மீறி அவனை பார்த்தாள் அவள்.
அழகன் தான் ஒப்புக் கொண்டாள், பேரழகன் தான் ஒப்புக் கொண்டாள். காற்றில் ஆடும் வசீகர கேசம் தான் என தான் கேலி செய்த அனைத்தும் ஒரே நொடியில் மாறிப் போனதை அறியாமல் அவனுக்கு நூற்றுக்கு ஆயிரம் மதிப்பெண் கொடுத்து ரசிப்பில் இறங்கி இருந்தாள் கவி.
அவளுக்குள் எதோ செய்ய, புரியாத உணர்வில் இருந்தாள். சற்று தெளிந்தவள், "அழகா இருந்தான்.. ஆனா" என யோசனையில் திரும்ப, அவளை குறுகுறுவென பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதவன்.
"ஒரு முக்கியமான இடத்துக்கு போறேன், நைட் டின்னர் அங்கதான். போயிட்டு வரென் ம்மா" என சொல்லிக் கொண்டு கவியின் மனதையும் அள்ளிக் கொண்டு அங்கு இருந்து சென்றான் அவன்.
அவன் சென்ற புறமே சென்றது அவள் பார்வை, சூரியனை தொடரும் சூரியகாந்தி போல.
"போதும் போதும்" என ஆதவன் கவியின் காதில் மெதுவாக சொல்லவும் தான், தன்னை மறந்து அவன் பின்னே சென்ற கண்களையும் மனதையும் உணர்ந்தாள்.
' ச்சை அசிங்கமா போச்சே... ஓவரா பேசுவானே ' என்று நினைத்துக் கொண்டே ஆதவனைப் பார்க்க,
"ரொம்ப ஹேன்சமா இருக்கானா, கண்ணெடுக்காம பாக்குற" என்றான் முகத்தை சாதாரனமாக வைத்துக் கொண்டு.
"ஆமா ஆமா ரொம்பத்தான்" என்றவள் எழுந்து சென்று விட்டாள். நின்றால் அவன் கேலி செய்தே ஒரு வழியாக்கி விடுவான். அவள் ஜொள்ளு விட்ட கதை தான் அங்கிருந்த அனைவரும் பார்த்தனரே...
திவ்யா அதை கவனித்தாலும், ருத்ரன் பார்த்த பார்வையும் பார்த்தாள். கவியின் மீது அவன் பார்வை நிமிடப் பொழுதில் பட்டு மாறியது. அந்த பார்வையில் வித்தியாசம் கண்டாள் திவ்யா.
அவருக்கு நல்லது நடந்தால் முதலில் மகிழ்ச்சியடைபவள் அவள் தான் குரு என்ற அக்கறை நிறையவே இருக்கிறது அவளிடம்.
யாரடி நீ மோகினி படத்தில் வரும் சரண்யா போல, அறை முழுவதும் சுற்றி சுற்றி பெருமாளை தொடர்ந்து ஒவ்வொரு கடவுளையும் அழைத்து தனக்குள் வந்த உணர்வை வார்த்தையால் வடிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் கவித்ரா.
இவள் இப்படி இருக்க, காரில் ஏறியவன்,
மிரர் பார்த்து தன் சிகையை கலைத்து வாரிக் கொண்டு அழகாய் சிரித்தான். அவள் மீது தெறித்த தண்ணீரை நினைத்து அவனுக்கும் வெட்கம் வந்தது.
இதை மட்டும் கவி பார்த்திருந்தால், அவனின் மெருக்கூட்டப்பட்ட அழகில் குப்புற கவிழ்ந்து இருப்பாள். அத்தனை அழகாய் சிரித்தவனின் எண்ணம் எல்லாம் தன்னை கண்டது முதல் கண்ணெடுக்காமல் திண்பது போல பார்த்த கவியின் மீது தான்.
தன் அன்னையிடம் விவரம் சொல்லிவிட்டு செல்வதற்குள் அவனுக்கு உடலெங்கும் சில்லென்று ஆகிவிட்டது.
முதன் முறை ஒரு பெண்ணின் பார்வை அவனை இம்சிக்கிறது. கூடவே ரசனையைக் கூட்டுகிறது.
பதின்ம வயதில் நுழைந்தது போல, "இறகை போல பறக்கிறேனே" என்ற வரிகள் அவனை துள்ளலான மனநிலைக்கு மாற்றியது. சிறிது மாற்றமாகினான், மாற்றத்தை ரசித்தான் கூடவே அவளையும்...